Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உதயநிதியின், சொத்து மதிப்பு குறித்து விபரம் வெளியானது..! சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டலின் வேட்பு மனுவில் அவரது சொத்துக்கள், வருமான விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். உதயநிதி பெயரில் 21 கோடியே 13 இலட்சத்து ஒன்பதாயிரத்து 650 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் உள்ளன. உதயநிதியின் மனைவி கிருத்திகா பெயரில் ஒரு கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 ரூபாய் மதிப்புக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் உதயநிதியின் மொத்த வருமானம் 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் என்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வருமானம் 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் என்றும் அ…

  2. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய மத குருமார்கள், தொற்று நோயைப் பரப்பியதாக தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படி இதுவரை 129 பேர் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்திருக்கிறது. வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேரும், அரசின் கண்காணிப்பில் 213 பேரும் இருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். மேலும், இதுவரை 7,267 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை அனுப்பப்பட்டதில் 485 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டி இருப்பத…

  3. இலங்கை அமைச்சகத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக கண்டன அறிக்கையும், இலங்கை அதிபருக்கு பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களின் நிலை குறித்தும், இலங்கை கடற்படையினர் செய்து வரும் அட்டூழியம் குறித்தும், உங்களுக்கு பல முறை வலியுறுத்தி கடிதங்களை எழுதியுள்ளேன். தமிழக அப்பாவி மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்கவும், தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லையில் இருக்கும் மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்…

  4. மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய யாருடனும் 'கை' குலுக்க தயார்: கருணாநிதி. சேலம்: நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய யார் கை கொடுத்தாலும் அவர்களோடு கை குலுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: கருணாநிதி தனியாக நிற்கிறார்; அவரை கைவிட்டு விட்டனர் என சிலர் கூறுகின்றனர். யாரும் என்னை கைவிடவில்லை. எதிர்காலத்தில் நாடு போகிற போக்கில், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதை தான் விரும்புகிறேன். மதச்சார்பற்ற அரசுக்கு யார் கை கொடுத்தாலும், அவர்களை கை குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறேன். ஜாதி மறுப்பு, மதவாத மறுப்பு போன்ற கொள்கைகளோடு சிறுபான்மையின மக்களுக்கு …

  5. ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. 70 ஆயிரம் ச.கிமீ இழப்பு 1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக…

    • 3 replies
    • 555 views
  6. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அறிவாலயம் வந்தார் கருணாநிதி! சென்னை: உடல் நலக்குறைவின் காரணமாக ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவின் காரணமாக தொடர் ஓய்வில் இருக்கிறார். நடுவில் முரசொலி பவழ விழா சமயத்தில் அவர் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதன்பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். …

  7. மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி| கோப்புப் படம். தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல் பேசும் சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை, அடுத்துள்ள ஜல்லிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற் காக வந்த உ.வாசுகி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது: பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக்கூடப் போராட்டம் மூலமாகத்தான் பெற வேண்டி யுள்ளது. அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகி…

  8. சன் நெட்வொர்க் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.-வாக பணியாற்றி வரும் பிரவீண் சதங்கதோடி இன்று சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சூர்யா தொலைக்காட்சி நிர்வாகத்தையும் கவனித்து வரும் பிரவீணுக்கு வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த பெண் ஊழியரை 5 மாதங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சம்பந்தப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரவீண் இன்று அவரது அண்ணா நகர் இல்லத்தில் கைது செய்யப்பட்டார். பெண் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொச்சிக்கு அவரை பணியிட மாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் தனது பணியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தர…

  9. வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து..! தேர்தல் ஆணையம் அதிரடி..! வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். நாளை மறுதினம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் நடவடிக்கையாக வேலூர் தொகுதி மக்களவை தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக, திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனும், வேட்…

    • 3 replies
    • 791 views
  10. தாத்தா ரீ.வி கொடுத்தாரு; அப்பா செற்றாப் பாக்ஸ் கொடுப்பாரு' - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பு.! தமிழகம் முழுவதும் திமுக கிராம சபை, ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இந்தக் கூட்டங்களில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேநேரம் கடுமையான கேள்விகளையும் ஸ்டாலின் எதிர்கொண்டு வருகிறார். மதுக்கடைகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். அதேபோல் இந்தக் கூட்டங்களில் சில சுவாரஸ்ய சம்பவங்களும…

  11. ஆல்பர்ட் விக்டர் பாலம்... மதுரையின் கம்பீரமான அடையாளத்துக்கு வயது 131! செ.சல்மான் பாரிஸ்என்.ஜி.மணிகண்டன் மதுரை ஏவி பாலம் 131 ஆண்டுகளைக் கடந்து தினமும் 3 லட்சம் வாகனங்களைத் தாங்கி நிற்கும் ஆல்பர்ட் விக்டர் பாலம். ஆங்கிலேயரின் தொழில்நுட்ப அறிவும், தமிழர்களின் கட்டுமானகட்டுமானத் திறமையையும் பயன்படுத்தி தரமான பொருள்கள் சேர்த்து திடமானதாக 12 மீட்டர் அகலத்தில் 250 மீட்டர் நீளத்தில் இப்பாலம் கட்டப்பட்டது. 16 தூண்களில் ஆர்ச் வடிவில் வடிவமைக்கப்பட்ட இப்பாலம் இன்றும் கம்பீரமாக உறுதியோடு பயனளித்து வருகிறது. இதை கட்டிய பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் பெயரிலயே பாலத்தைக் குறிப்பிடுகிறார்கள். …

  12. "வருவான்டி, தருவான்டி மலையாண்டி" புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்! சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. பெசன்ட்நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் மிக பிரபலம். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய கந்த சஷ்டி கவசம் முருக பக்தர்களால் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.கந்த சஷ்டி கவசம் பக்திப் பாடலை இணைந்து பாடியவர்கள், சூலமங்கலம் சகோதரிகள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி. சினிமா படங்களில் பல பக்திப் பாடல்களை இணைந்து பாடியுள்ள அவர்கள், பிறகு தனித்தனியாகவும் பாடியிருக்கின்றனர். 'தெய்வம் படத்தில் ஜ…

    • 3 replies
    • 703 views
  13. கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்; நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி: கமல் கமல் | படம்: ஜி.வெங்கட்ராம் கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி என்று நடிகர் கமல் ட்வீட் செய்துள்ளார். சமீபகாலமாக அரசியக் கருத்துகளையும், ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தன் விமர்சனங்களையும் துணிச்சலோடு கூறி வருகிறார் கமல். அரசியலுக்கு வருவதாகவும், விரைவில் கட்சிப் பெயர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லி வரும் நிலையில் கமலின் அரசியல் வருகை குறித்தும் அமைச்சர்களால், பாஜக தலைவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''கோவிலைக் கொள்ள…

    • 3 replies
    • 684 views
  14. படக்குறிப்பு, நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது. எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள்…

  15. ஆம்பளையா இருந்தா என்னைச் சுடு பார்ப்போம்.. போலீஸாரிடம் கொந்தளித்த வைகோ. லிங்கப்பட்டி: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மதிமுகவினர் மீது போலீஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசித் தாக்கியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாலும் ஆவேசமடைந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தைரியம் இருந்தால், ஆம்பளையா இருந்தால் என்னைச் சுடு பார்ப்போம் என்று போலீஸாரிடம் கோபாவேசம் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும் பதற்றத்தில் இருந்து வருகிறது கலிங்கப்பட்டி. அங்கு தற்போது நெல்லை சரக டிஐஜி முருகன், மாவட்ட எஸ்.பி. விக்கிரமன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வைகோவிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். சசிபெருமாள் மரணத்தைத்…

  16. பறை இசைத்து மகிழ்ந்த பேரறிவாளன் மின்னம்பலம் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் கடந்த வாரம் வெளியே வந்தார். ஜோலார்பேட்டையில் தனது இல்லத்தில் தங்கியிருந்த பேரறிவாளன், தனது சகோதரி மகள் செவ்வை திருமணத்தை முன்னிட்டு நேற்று (நவம்பர் 23) மாலை கிருஷ்ணகிரி சென்றார். தனது சகோதரி மகள் திருமணத்தில் கலந்துகொண்டு உற்றார் உறவினர்களைப் பார்த்து மகிழ்ந்த பேரறிவாளன் திருமண மேடையில் பறை இசைக் கருவியை இசைத்து மகிழ்ந்த காட்சி இப்போது சமூக தளங்களில் பலரையும் கவர்ந்து வருகிறது. திருமண மண்டபத்திலும் பேரறிவாளனைச் சுற்றி போலீஸார் நிற்க, அவரது உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சியினர் பல்வேறு இயக்கத்தினர் பலபேர் வந்து பேரறி…

  17. கீழடி பற்றிய ஸ்டாலின் ட்விட்டால் சர்ச்சை.. எப்படி இவ்வாறு சொல்லலாம்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம். கீழடியில் நடைபெற்ற தொல்லியல் துறை ஆய்வு முடிவுகளை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டார். ஆய்வுகளின் முடிவில், கீழடியில் வாழ்ந்தவர்கள் கி.மு 6ம் நூற்றாண்டிலேயே கல்வியறிவு கொண்டவர்களாக விளங்கினார்கள் என்ற தகவல் வெளியானது. கங்கைக் கரையில் இரண்டாம் நகர நாகரீகம் நிலவிய அதே காலகட்டத்தில் கீழடியிலும் தமிழர்களின் நகர நாகரீகம் இருந்துள்ளது இதன் மூலம் உறுதியானது. பிராமி எழுத்துக்களும் கண்டெடுக்கப்பட்டன.தமிழினத்தின் பொற்காலம் என அறியப்படும், சங்க காலம் என்பது மேலும் 3 நூற்றாண்டுகள் பழமையானது என்பதை கீழடி அறுதியிட்டு கூறியது. சிந்து சமவெளி நாகரீகத்த…

  18. சசிகலாவை மிரட்டி அரசியலில் இருந்து விலகவைத்த டெல்லி - அம்பலமான அமலாக்கத்துறை ரகசியம்! மின்னம்பலம் பெங்களூரு சிறையில் இருந்தும், கொரோனாவில் இருந்தும் விடுதலையாகி சென்னைக்கு வரும் வழியில், “நான் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன்” என்று அறிவித்தார் சசிகலா. ஆனால் கடந்த மார்ச் 3ஆம் தேதி இரவு, திடீரென, ஒரு வெள்ளை பேப்பரில் வெளியிட்ட அறிக்கையில், “அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று தெரிவித்தார். இது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போதே மார்ச் 4ஆம் தேதி மின்னம்பலம் இணைய இதழில், பினாமி சட்டம்: மிரட்டலுக்குப் பணிந்தாரா சசிகலா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் ஒரு வாரமே இருக்கும் …

    • 3 replies
    • 693 views
  19. 23ஆண்டுகளாக சிறையில் வாடும்,நம் தமிழ் உறவுகள் - 7தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவும்,தமிழக முதல்வரை கொச்சைப்படுத்தியும்,தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து இழிவுபடுத்தும் மத்திய அரசின் அலுவலகங்களை 24.02.14 முதல் முற்றுகையிட்டு மாணவர்கள்,இளைஞர்கள் போராட்டம் நடத்த உள்ளோம்.7 தமிழரின் விடுதலைக்காக தமிழகம் முழுக்க வீரியமிக்க போராட்டம் வெடிக்கும். எங்களோடு கைகோருங்கள்: 8678962611,9884890103. # விடுதலை வேண்டும்,அது முதல் வேலை-வேறெந்த வேலையும் செய்யலாம் நாளை Joe Britto (facebook)

  20. சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகர், சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என்று பன்முகம் கொண்ட அனிதா குப்புசாமி, அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். தற்போது ஜெயா டிவியில் சமையல் தொடர்பான நிகழ்ச்சியி்ல அனிதா குப்புசாமி பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அனிதா குப்புசாமி அடிப்படையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். பீகார் மாநிலம்தான் இவரது பூர்வீகம். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமி மீது காதல் கொண்டு இருவரும் காதல் மணம் புரிந்தனர்.நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசையிலும் புலமை பெற்றவர் அனிதா குப்புசாமி. அதில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். நாட்ட…

  21. நாளை முதல் 45ஆவது சென்னை புத்தகக் காட்சி! மின்னம்பலம்2022-02-15 சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து விதமான கண்காட்சி மற்றும் பொருட்காட்சிக்குத் தமிழக அரசு தடை விதித்தது. இதனால் புத்தகக் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், தற்போது கொரோனா ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்தச் சூழலில் சென்னை புத்தகக் காட்சியை நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி நாளை (பிப்ரவரி 16) முதல் மார்ச் 6ஆம் தேதி வரை 45ஆவது புத்…

  22. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; உத்தரவிட்டது யார்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வழங்கபட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான அரசாணையை நீதிபதிகள் ஏற்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி கந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் “துப்பாக்கிச் சூடு நடத்தபட வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிகள் உள்ளன…

  23. 12 JUL, 2023 | 10:21 AM தாம் முதலமைச்சரானால் இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சீமான், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடினார். திமுகவை வீழ்த்த முடியாது என கூறுவதாக பேசிய அவர், நிரந்தர முதல்வர் என எழுதி வைத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும் என்றார். மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இலங்கை கடற்படையால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் …

  24. உங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்! வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலை தமிழில் பேசும்படி நீதிபதி அறிவுறுத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் விஷாலுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்…

  25. சென்னை : உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக 2வது முறையாக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வந்துள்ளார். கவர்னர் வந்தார் : செப்டம்பர் 22 ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அக்டோபர் 1ம் தேதி வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் பூரண நலம் பெறும் வரை அவர் கவனித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.