நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது. 1. உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்? மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம். 2. ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்? முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும். 3. எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்? நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும். 4. நாடித்துடிப்பின் இயல்பான அளவு என…
-
- 2 replies
- 886 views
-
-
இதயத்தை பாதுகாக்க தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள் மனித உடலில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கியமானதொரு உறுப்பு என்றால் அது இதயம் தான். இந்த இதயத்தை பாதுகாக்க தவறியதன் விளைவாக உலகம் முழுவதும் இதய நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். இதயத்தை காக்க மக்கள் அதிக அளவு மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதயத்துக்கு உகந்தது ஆப்பிள் என இப்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதய நோய்க்கு முக்கிய காரணமான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்புச்சத்தை அழிக்கும் திறன் ஆப்பிள் பழத்துக்கு உள்ளது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதய குழாய்களில் (தமனிகளில்) ஏற்படும் அடைப்பை தடுக்கும் திறனும், மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஆற்றலு…
-
- 0 replies
- 608 views
-
-
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள். குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ: இதயத்தை பாதுகாக்க யோசனைகள் *********** 1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம். 2. உண்ணாமல் டயட்…
-
- 1 reply
- 972 views
-
-
இதயத்தைக் காக்கும் காளான் காளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் 'டி' அதிகம் உள்ளது. காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக இரத்த அழுத்தத்தையும், இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பையும் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கிறது. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. வலிப்பு, மூளை நோய், வலிமைக் குறைவு, மஞ்சள்காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோர்த்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது. அவ்வப்போது காளான் சூப் பருகுவதன் மூலம் பெண்களுக்கு கருப்பைப்…
-
- 0 replies
- 442 views
-
-
மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பாகும். அதிலும், நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் இதயமானது சாதாரணமானவர்களின் இதயத்தைவிடவும் மும்மடங்கு பலவீனமானதாகக் காணப்படும். அதன் காரணத்தினால் இதயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியம். அதேநேரம், இதயப் பாதிப்புகளானது வயதானவர்களுக்கு மாத்திரமல்லாமல் பிறந்துள்ளவர்களுக்கும் வரலாம். சிறுவயதிலும் வரலாம். நடுத்தர வயதிலும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் ஏற்படும் இதய நோய்கள் குறித்து தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு இதயப் பாதிப்புக்கள் ஏற்பட உடல்பருமன், உடல் உழைப்பின்மை, நீரிழிவு நோய் கட்டுப்பாடின்மை, தொடர் மனச்சிதைவு நோய், தொடர் மருத்துவப் புறக்…
-
- 0 replies
- 571 views
-
-
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயானிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது. பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம். இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறி…
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=4]முட்டை சைவமா? அசைவமா? என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.[/size] [size=4]இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொழுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொழுப்பு அதிகரிக்கவில்லை.[/size] [size=4]அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற…
-
- 0 replies
- 493 views
-
-
உலக இதய நாள் செப்டம்பர் 29, 2016 உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்! நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின் மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இ…
-
- 1 reply
- 2.1k views
-
-
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர். இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும். இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது …
-
- 0 replies
- 1.4k views
-
-
இதயம் பத்திரம் – 1 April 26, 2022 — யோ.அன்ரனி — வயது அதிகரித்து முதுமை நெருங்கும்போது பல மாற்றங்கள் எங்களைச் சுற்றியிருக்கும் குடும்ப, நண்பர் வட்டங்களில் நிகழ்வதை அவதானிக்கலாம். உடல் நோய்கள், அவற்றிற்காகத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டிய மருந்துகள் பற்றிய உரையாடல்கள் சந்திப்புகளில் அதிகம் பேசப்படுவது சாதாரணமாக நிகழும். ஒரு இருண்ட மாற்றமாக, எங்களையொத்த வயது மட்டத்தினரிடையே திடீர் மரணங்கள் முன்னரை விட அதிகளவில் நிகழ்ந்து எதிர்காலம் பற்றிய பயத்தை மூட்டும். தாயகத்தில் வாழ்ந்தாலும் சரி, புலம் பெயர்ந்து வசதிவாய்ப்புகள் கொண்ட மேற்கு நாடுகளில் வாழ்ந்தாலும் சரி, எங்களுடைய மக்கள் அடிப்படையான இதய ஆரோக்கியத்தைப் பேணுவதில் மேற்கத்தைய மக்களை விட சி…
-
- 2 replies
- 690 views
-
-
30 வயசுதான் ஆச்சு. அதுக்குள்ள ஹார்ட் அட்டாக்காம்', 'நல்லாத்தான் பேசிட்டிருந்தார். திடீர்னு மைலடு அட்டாக்' இப்போதெல்லாம் இப்படியான உரையாடல்களை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஹார்ட் அட்டாக் என்பது எங்கோ, எப்போதோ, யாருக்கோ என்று இருந்த நிலை மாறிவிட்டது. இதயம் காப்பது என்பது இன்று எல்லோருக்கும் மிக முக்கியம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதய தினமாகக் கொண்டாடப்படுகிறது. உலகின் நம்பர் 1 உயிர்க்கொல்லியாக இருக்கும் இதய நோய் பற்றிய போதிய விழிப்புஉணர்வு இல்லை.ஆண்டுதோறும் 1.73 கோடி பேர், உலகம் முழுவதும் இதய நோயால் உயிர் இழக்கின்றனர். 2030ம் ஆண்டில் இது 2.3 கோடியாக உயரும் என்று எச்சரிக்கின்றனர். இந்த உயிர் இழப்புகளைத் தவிர்க்க முடியும். இதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங…
-
- 0 replies
- 4.4k views
-
-
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் …
-
- 18 replies
- 23.5k views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி. மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில வ…
-
- 3 replies
- 3.8k views
-
-
இருப்பது தனித்தென்றால் இதயவியாதிகள் அதிகமா? ஏஜேஜி- 62 வயதை சராசரியாகக் கொண்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக 3267 பேரின் உடல் நிலை பற்றி ஆய்வொன்று நடாத்தியபோது, சில சுவாரஸ்ஸியமான, அதே சமயம் திடுக்கிட வைக்கும் தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், சமூகத்தோடு கலந்து பழக விரும்பாது, தனித்து வாழ்பவர்களுக்கு, இருதய வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கின்றார்கள். தனித்து இருப்பது அவ்வளவு சங்கடமான விடயமா? தனித்து வாழ்பவர்கள், உடல்ரீதியாகக் குறைவான அசைவுகளைக் கொண்டவர்களாகவும், அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருப்பதுண்டு. இது இருதய வியாதிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது என்கிறார்கள் மருத்துவர்கள். பலருடனும…
-
- 3 replies
- 1.7k views
-
-
பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு என்பதை புரிந்து கொண்டு கொஞ்சம் முக அழகில் அக்கறை காட்டலாம். இதோ உங்களுக்கான சில பேஷியல்கள் வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை …
-
- 0 replies
- 866 views
-
-
இது ஒரு பழைய வீடியோதான் இருந்தாலும் இப்போதான் கவனித்தேன். யாழில் யாரும் முன்பு இணைத்தார்களோ தெரியாது. நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டால் உண்மையாகவே இப்படி ஆகுமா? சிறுவனின் நிலையை பார்த்தபோது பகீர் என்றது, ஆனாலும் போலி காட்சியமைப்புக்கள் லட்சக்கணக்கில் உலவும் இணைய உலகில் இந்த காணொலி சோடிக்கப்பட்டதா என்றொரு சந்தேகமும் வந்தது, நிச்சயமாக ஒரு நோய் வாய்ப்பட்ட சிறுவனை கேலி செய்யும் கெட்ட நோக்கம் கிடையாது.
-
- 25 replies
- 4.3k views
-
-
இது உண்மையா? "மீன் உணவுகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்" சல்மான் இலகுவாக சமைக்கலாம். வெட்டிய வெங்காயம் & உள்ளி இவற்றை கலந்து எண்ணைவிடாமல் வறுக்க நல்ல சுவையாக இருக்கும் ====================================== மனித உடலின் தலைமைச் செயலகம் மூளை. இந்த மூளையின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு ஏற்ற உணவுகளை உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். டார்க் சாக்லேட் கோகோ அடங்கிய டார்க் சாக்லேட் மூளையை சுறுசுறுப்பாக்குகிறதாம். கோகோ பவுடரில் உள்ள ப்ளேவனாய்டுகள் மூளையின் சுறுசுறுப்பை தூண்டுகிறது எனவே கோகோ அடங்கிய டார்க் சாக்லேட் உட்கொள்வது மூளை வளர்ச்சிக்கு உதவும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை. மீன் உண…
-
- 0 replies
- 1.9k views
-
-
இது தாங்க எங்களுக்கு சோலியே! (நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - பகுதி 3) வேளாவேளைக்கு சாப்பிடுவது என்று சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை என்றால் தோணும் போது தோணுகிற மாதிரி சாப்பிடுவது இன்னொரு வாழ்க்கை முறை. ஊரில் என்னுடைய அண்டை வீட்டில் ஒரு வயதான தம்பதி. நான் அவர்களுடைய தினசரி நடைமுறையை என் ஜன்னலில் இருந்தே கவனிப்பேன். காலை ஆறுமணி என ஒன்று உண்டெனில் சரியாக அப்போது அவர்கள் இருவரும் சுடச்சுட காபி குடிப்பார்கள். இரண்டு மணிநேரம் கழித்து எட்டு மணிக்கு காலை உணவு, பத்து மணி சத்துமாவுக் கஞ்சி அல்லது ஏதாவது ஒரு சிற்றுண்டி. பன்னிரெண்டரைக்குள் மதிய உணவு சோறு, கூட்டு, பொரியல் சகிதம், மூன்று மணிக்கு தேநீரும் நொறுக்குத்தீனியும், ஐந்தரை ம…
-
- 0 replies
- 563 views
- 1 follower
-
-
அண்மையில் இலங்கை மக்களை குறிப்பாக இலங்கையின் வடபகுதி மக்களை பீதியில் ஆழ்த்திய விடயம்தான் யாழ் போதனா வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்ட்தால் ஒரு சிறுமியின் கை அகற்றப்படடமை, உண்மையில் தவறான மருந்துதான் வழங்கப்பட்ட்தா? கனுலா எனப்படும் மருந்தை உடலுக்குள் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியை பத்துவருடங்களுக்குமேல் அனுபவம் கொண்ட தாதி தவறாக ஏற்றினாரா? ஓரிரு நாட்களுக்குள் கை அழுகுமா? போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன் எத்தனை தனியார் வைத்தியசாலைகளுக்கு சிறுமி சென்றிருந்தார்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன, ஆனால் இங்கே நான் இந்த சம்பவம் தொடர்பான தர்ம நியாயங்களை விவாவதிக்கப்போவதில்லை, மாறாக எதாவது ஒரு நோய்க்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அவசியம…
-
-
- 5 replies
- 1.9k views
- 1 follower
-
-
http://img.vikatan.com/news/2016/08/20/images/பற்கள் 2.jpg டூத் பேஸ்ட் விளம்பரங்களில் ஒரு பிரஷ் முழுக்க பேஸ்ட்டைப் பிதுக்கிப் பல் துலக்குவதைப் பார்த்திருப்போம். உண்மையில் அவ்வளவு பேஸ்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? டூத் பேஸ்ட்டில் ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசயானப் பொருட்கள் உள்ளன. எனவே, ஒரு பட்டாணி அளவு எடுத்துத் பல் துலக்கினாலே போதும்; அதற்கு மேல் சேர்ப்பதால், அளவுக்கு அதிகமான ஃபுளோரைடு உடலில் சேரும். 'அப்ப, ஃபுளோரைடு பல்லுக்கு நல்லது இல்லையா ?' என்று கேட்கலாம். எதுவும் அளவுக்கு மிஞ்சினால்தான் ஆபத்துதான்! ஃபுளோரைடு கலந்த பற்பசைகளைப் பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள். நாம…
-
- 2 replies
- 451 views
-
-
இது மருத்துவ முறை அல்ல... வாழ்க்கைமுறை! 'வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும்' என்று ஆரோக்கியமான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மருத்துவ முறை ஆயுர்வேதம். வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உடல்நலம், ஆரோக்கியம். இவை இரண்டுக்கும் அடிப்படை வாழ்க்கைமுறை. எனவே, ஆயுர்வேதம் என்பது மருத்துவம், சிகிச்சையோடு நின்றுவிடாமல், வாழ்க்கைமுறையும் கற்றுத் தந்தது. ஓர் ஆயுர்வேத வைத்தியர், இன்னொரு வைத்தியருக்கு கற்றுத்தரும் விஷயமாக அல்லாமல், மக்கள் மருத்துவமாக இருந்தது ஆயுர்வேதம். `பாட்டி வைத்தியம்’ என்ற பெயரில் நம்முடைய மூதாட்டிகள் சர்வசாதாரணமாகச் சொல்லும் மருத்துவக் குறிப்புகள்கூட ஆயுர்வேதத்தின் ஓர் அங்கமே. இயற்கைய…
-
- 0 replies
- 528 views
-
-
-
இந்த 32 விளம்பரங்களையும் அதிர்ச்சி தகவல்களையும் பார்த்தால் ஒரு வேளை புகைப்பதை விட்டு விடுவீர்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. புகைத்தல் பாவனையை கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனமானது, வருடாந்தம் ஒரு தொனிப் பொருளை முன் வைத்து மக்களை விழிப்புணர்வூட்டுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இம்முறை தொனிப்பொருளாக உருவமற்ற சிகரட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது. (எந்த வித விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரட் பெட்டி), அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே …
-
- 0 replies
- 941 views
-
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்| exercise to reduce knee pain Dr Karthikeyan
-
-
- 7 replies
- 936 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீர்நாத் பதவி, பிபிசி செய்தி பிரேசில் 21 ஜூலை 2024, 11:06 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் புற்றுநோய்க்கான முக்கிய அறிவியல் மாநாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் சந்தைப்படுத்தப்பட்ட, நன்கு அறியப்பட்ட மருந்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர். பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் இந்த மருந்துகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்கன் சொசைட்டி அமெரிக்கப் புற்றுநோய் மருத்துவக் கழகம் (ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி - American Society of Clinical Oncology - ASCO), 2024-ஆம் ஆண்டு ஆண…
-
- 0 replies
- 447 views
- 1 follower
-