நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள, பேரீச்சம் பழங்கள் சிறந்த நிவாரணி [sunday, 2012-12-09 21:35:23] நிறைய பேர் டயட்டில் இருக்கும் போது பேரிச்சம் பழத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஏன் என்று தெரியுமா? ஏனெனில் அதில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்களே தினமும் பேரிச்சம் பழத்தையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அதிலும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தினமும் 1-2 பேரிச்சம் பழம் சாப்பிட்டால், நம்பமாட்டீர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். மேலும் பல கிழக்கிந்திய நாடுகளில் இந்த பேரிச்சம் பழம், அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்பட்டிருக்கும். அத்தகைய பேரிச்சம் பழத்தில் உட…
-
- 16 replies
- 9.9k views
-
-
எச்.ஐ.வி வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் தேனீக்கள் கொட்டும் விஷத்தில் கலந்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வோஷிங்டன் யூனிவர்சிட்டி ஸ்கூல் மருத்துவப் பிரிவு மாணவர் நடாத்திய ஆய்விலேயே எச்.ஐ.வி வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் தேனீக்கள் கொட்டும் கொடுக்கில் உள்ள நஞ்சில் இருப்பது கண்டறியப்பட்டது. குளவி கொட்டும் விஷத்தோடு கலந்துள்ள மெலிற்றின் என்ற நச்சுப் பதார்த்தம் எச்.ஐ.வி வைரஸ்களை அழித்து அதனால் பாதிக்கப்பட்ட செல் கலங்களை மறுபடியும் புத்தெழுச்சியடையச் செய்கிறது. எச்.ஐ.வி வைரஸ்சில் உள்ள நாநோ என்ற துகள்கள் மீது மெலிற்றினை செலுத்தி இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எச்.ஐ.வி வைரஸ்களைவிட செல்கள் அளவில் பெரியவையாகும் எனவேதான் செல்களில் கலந்துள்ள எச்…
-
- 0 replies
- 826 views
-
-
நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது. பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும். தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள். * தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. * நடைப்பயிற்சி இரத்த …
-
- 42 replies
- 4.8k views
- 2 followers
-
-
நோய்களை உணர்த்தும் நகங்கள்... ........................................................... நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். . ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நக…
-
- 0 replies
- 492 views
-
-
தொலைபேசி பாவனையினால்... 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின், மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு! கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதற்கமைய 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 02 மணி நேரம் மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் …
-
- 0 replies
- 196 views
-
-
பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது. பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது. பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் …
-
- 0 replies
- 443 views
-
-
ப்ராக்கோலி நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது. ப்ரக்கோலியில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க Sulfophane என்ற கலவை உள்ளது. இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு ப்ரக்கோலியில் அதிகம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) என்னும் நோய் வராமல் தடுக்க உதவும். ப்ராக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. ப்ராக்கோல…
-
- 0 replies
- 537 views
-
-
நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளது காலிபிளவரில் உள்ள சத்துக்கள். காலிபிளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24 கிராம், புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளது. மருத்துவ பயன்கள்: இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். மேலும் காலிபிளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிபிளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.பூ …
-
- 0 replies
- 987 views
-
-
பழங்களின் அரசனான மாம்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளனர். மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது. இந்நிலையில் லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு புற்று நோய் கட்டிகளை குறைக்கும் சக்தி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு புற்று நோய் மற்றும் மாம்பழம் ஆராய்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 296 views
-
-
உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்! வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் வழங்க வல்லது. இத்தகைய வெள்ளரிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிறந்த காயாகும். கோடைகாலத்தில் ஏற்படும் அதிகமான நா வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். வெள்ளரியில் வைட்டமின்களும், கலோரிகளும் குறைவாக உள்ளது. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருப்பதால் இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகமாக உருவாக்கும். மேலும் புகைப்பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிக்கோடின் நஞ்சை அழிக்கும் ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. வ…
-
- 1 reply
- 684 views
-
-
பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர். "மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும். பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன…
-
- 20 replies
- 11.3k views
-
-
நாளும் உடலுறவு கொண்டால் நல்ல வளமான ஆணணுக்கள் உருவாகுமாம். ஆண்கள் தினமும் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது உடலுறவு கொண்டால் அவர்களால் வளமான ஆணணுக்களை அதிகம் உருவாக்க முடியும் என்று அவுஸ்திரேலிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் அதிக நாள் இடைவெளியில் உடலுறுவு கொள்வதால் அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி என் ஏ (DNA) மூலக்கூறுகள் சிதைவடைய அல்லது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அதேவேளை தினமும் உடலுறவு கொள்வதன் மூலம் புதிய விந்தணுக்கள் உருவாக அதிக சந்தர்ப்பம் அமைவதோடு டி என் ஏ யில் ஏற்படும் பாதிப்பும் சுமார் 12% குறைவடைவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இளம் ஆண்களைப் போன்று வயதான ஆண்கள் அதிகம் உடலுறவில் நாட்டம் காட்டுவதில்லை என்றும் இதுவும் பெ…
-
- 32 replies
- 50.7k views
-
-
கோபம் ஏன் ஏற்படுகின்றது? உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். கோபம் ஏன் ஏற்படுகின்றது? கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது... நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... நாம் சொல்வது (தவறாக…
-
- 5 replies
- 3.7k views
-
-
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS தேதி ஜனவரி 2 , நாள் வெள்ளிக்கிழமை. ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு கனே என்று பெயர் சூட்டப்பட்டது. இது நடந்தது 1903 ஆம் ஆண்டு. கனே தனாகா 119 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2022 ஏப்ரலில் காலமானார். அவர் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் வயதான நபர் ஆவார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை நர்ஸிங் ஹோமில் கழித்தார். காலை ஆறு மணிக்கு எழுவார். கணித கேள்விகளுக்கு விடை காண்பார். போர்ட் கேம்களை விளையாடுவார். சாக்லேட் சாப்பிடுவார். காபி மற்றும் சோடா குடிப்பார். ந…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
ஆற்று நீர், ஊற்று நீர், ஏரி நீர், குளத்து நீர், என உள்ளது. மறைநீர் என்று ஒன்று உள்ளது. இவை விளை பொருளை உருவாக்க மண்ணில் இருந்து உறிஞ்சப்பட்ட நீரே, மறைநீர் ஆகும். இதனை டோனி ஆலன் என்பவர் கண்டுபிடித்தார். மனித மூளையின் வளர்ச்சி பிறக்கும் போது 340 கிராம், 6வது மாதத்தில் 750 கிராம், 1 வயதில் 970 கிராம், 2 வயதில் 1150 கிராம், 3 வயதில் 1200 கிராம், 6 வயதில் 1250 கிராம், 9 வயதில் 1300 கிராம், 12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம், 12 ஆண்டுகளுக்கு பின்பு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது. அரளிச் செடிகள் விபத்தை குறைக்கிறது ஏனெனில் வாகனங்களில் இருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை உட்கிரகித்து குறைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அதனால் தான் பைபாஸ் சாலை மற்றும் நான்கு வழிச…
-
- 0 replies
- 417 views
-
-
உடற்பருமனால் கவலைகொள்பவர்களுக்கு நற்செய்தி உடற்பருமன் என்பது வயது வித்தியசமின்றி உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. உடற்பருமனைக் குறைக்க பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறன. இவை சிகிச்சையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் உடல் பருமனைக் குறைக்க வெகோவி” (Wegovy) என்ற வீரியம் மிக்க மாத்திரையொன்றை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்” எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், “ஸெமாக்ளூடைட்” எனும் மூலப்பொருள் கொண்டு குறித்த மாத்திரை தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 475 views
-
-
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன. நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம். தலைவலி : நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி த…
-
- 1 reply
- 1.7k views
-
-
கேட்டி சில்வர் பிபிசி நியூஸ் 14 நவம்பர் 2017 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREAS RENTZ உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்குப் பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள். மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் மு…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
வாய் துர்நாற்றம் – சரி செய்வது எப்படி? சிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர்நாற்றம் நம் முகத்தில் அடிக்கும், மூக்கைத் துளைக்கும். அவரவர் வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfu…
-
- 11 replies
- 14.2k views
-
-
வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள் 1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள் 2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள். 4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள். 5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். 6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். 8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிக…
-
- 13 replies
- 3.7k views
-
-
நம்மால் முடியும்! என்னால் முடியும்! பிப்ரவரி-4, உலக புற்றுநோய் தினம் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திவரும் நோய்களில் முக்கியமானது புற்றுநோய். புற்றுநோய் பற்றிய விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4-ம் தேதி ‘உலக புற்றுநோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ‘நம்மால் முடியும்’, ‘என்னால் முடியும்’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. புற்றுநோய் என்பது என்ன? நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு செல்லில் இருந்துதான் புற்றுநோய் செல் வளர ஆரம்பிக்கிறது. நாம் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல், அலட்சியப்படுத்தும்போதுதான் புற்றுசெல்கள் பல்கிப் பெருகி, உடலில் கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோயை…
-
- 0 replies
- 363 views
-
-
-
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து,…
-
- 0 replies
- 5.4k views
-
-
உணவு தயாரிப்பின் போது உடலுக்கு பல பாதகமான பதார்த்தங்கள் உருவாகுவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் French fry தயாரிக்கும் போது அக்கிரலமைட் எனும் பதார்த்தம் உருவாகிறது. அதைபற்றி சிறிது பார்ப்போம். Acrylamide அக்கிரலமைட் எனப்படுவது ஒரு மணமற்ற,வெண்மையான அறைவெப்பநிலையில் திண்மமாக காணப்படும் ஒரு பதார்த்தமாகும். இதன் மூலக்கூற்று சூத்திரம்- C3H5NO மூலக்கூற்று நிறை -71.08. இதன் பல்பகுதியமானது நீர் பரிகரிப்ப- Water treatment எண்ணெய் பிரித்தெடுப்பு- Enhanced oil recovery வீழ்படிவாக்கி- Flocullant கழிவுபொருட்களின் பரிகரிப்பு - Sewage and waste water treatment ;...... ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. அண்மைய காலங்களில் இது உணவிலும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (Swe…
-
- 0 replies
- 1.1k views
-
-
புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கும் உணவுகள்? புற்றுநோயைத்தடுக்க என்னென்ன சாப்பிடவேண்டும் என்று ஒருவர் கேட்டார்.புற்றுநோய்க்கு புகை,பரம்பரை,வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன.உணவின் மூலமாக முற்றிலுமாக புற்றுநோயின் ஆபத்திலிருந்து தப்புவது சாத்தியமல்ல! ஆனால் சில உணவுகள் மூலமாக ஆபத்தை குறைத்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.க்ரீன் டீ பற்றிபேசும்போதெல்லாம் புற்று நோய்,இதய நோய் வராமல் தடுக்கும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.க்ரீன் டீ பிரதேசமான ஜப்பானில் புற்றுநோய் மிகவும் குறைவாக இருக்கிறது.க்ரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள்தான் காரணம். நமது உடலின் வளர்சிதை மாற்றத்துக்…
-
- 1 reply
- 2.3k views
-