நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பிஸ்கட் பிடிக்கிறதா? சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தபோது ஒரு அறிவிப்பைத் தொடர்ந்து கேட்டேன்... 'ரயில் பயணத்தில் கவனமாக இருங்கள். மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து ஏமாற்றிவிடுவார்கள்’ என்றது அந்தக் காவல் துறை அறிவிப்பு. ஒரு பக்கம் பயணம் பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே என்ற அச்சம் எழுந்தபோதும் மறுபக்கம் முகம் தெரியாதவர் கொடுத்தால்கூட பிஸ்கட்டை ஏன் சாப்பிட விரும்புகிறோம் என்ற எண்ணமும் கூடவே வந்தது. இலக்கியக் கூட்டமோ, கருத்தரங்குகளோ, தொலைக்காட்சி நேர்காணலோ, அறிந்தவர் வீட்டுக்குப் போனாலோ... ஒரே மாதிரியான பிஸ்கட்தான் சாப்பிடத் தருகிறார்கள். காகிதத்தை தின்பது போல ஒரு ருசி. பிஸ்கட் நம்காலத்தின் சகல நேர நிவாரணி. அழுகிற குழந்தையாக இருந்தாலும் அழையாத விருந்தாளியாக இருந்தால…
-
- 0 replies
- 881 views
-
-
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி. ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது. அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின…
-
- 0 replies
- 363 views
-
-
ஞாபக மறதி டாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர். ஞாபக மறதி வெவ்வேறு அளவில் இருக்கலாம். சிலருக்கு சிறிய அளவிலும் வேறு சிலருக்கு பெரிய அளவிலும் இருக்கலாம். இது ஆபத்தான அளவை எட்டினால்தான் ஒருவேளை மூளையில் பாதிப்பு உள்ளதா என்பது சந்தேகிக்கப்படும். மூளையில் ” டீமென்ஷியா ” என்ற நோய் இருக்கலாம். இது உண்டானால் அவர்களால் தங்களது அன்றாட வேலைகளைச் செய்வதில்கூட சிரமத்தை எதிர்நோக்குவர். இதில் ” ஆல்ஸைமர் நோய் ” என்பது ஒரு வகை. இதில் தங்களையே யார் என்பதைக்கூட…
-
- 1 reply
- 726 views
-
-
பக்கவாதம் ஏன் வருகிறது கேள்வி- பக்கவாதம் ஏற்படக் காரணம் என்ன? எஸ்- மூர்த்தி தெல்லிப்பளை பக்கவாதம் ஏற்படுவது எமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு குருதி செல்லாமல் தடைப்படுவதால் ஆகும். குருதி செல்லாவிட்டால் முளையின் அந்தப் பகுதியில் உள்ள கலங்கள் இறக்க நேரிடும். கலங்கள் இறந்தால் முளையின் அந்தப் பகுதி எதைஎதையெல்லாம் இயங்க வைக்கிறதோ அவை செயலற்றுவிடும். உதாரணமாக உடலின் வலது பக்கத்தை இயங்க வைக்கும் கலங்கள் இறந்தால் பாதிக்கப்பட்டவரின் வலது பக்க கைகால்கள் இயங்காது. மாறாக பேச்சுத் திறனுக்கான பகுதிக்கான இரத்த ஓட்டம் தடைப்படால் பேச முடியாமல் போய்விடும். எங்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதுடன் முளையின் எவ்வளவு இடம் பாதிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். மிகச் …
-
- 1 reply
- 4.7k views
-
-
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு வலிமை அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனைய…
-
- 0 replies
- 758 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சார்லி ஜோன்ஸ், லாரா ஃபாஸ்டர் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுவது சாதாரணமானதுதான். ஆனால், சிலருக்கு இது மிகத் தீவிரமாக இருக்கும். அந்த நிலை, ஹைப்பர்மெசிஸ் கிராவிடாரம் (HG) என்ற நோயாகும். புதிதாக நடத்தப்பட்டுள்ள ஆய்வில், இந்த நோய்க்குக் காரணம், சிசுக்களில் உள்ள GDF15 என்ற ஹார்மோன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுடைய மூளையின் அடிப் பாகத்தில் உள்ள மிகச்சிறிய பகுதியில் செயல்படும் ஹார்மோன் ஆகும். இது குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்த…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள். குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப வேண்டியிருக்கும். தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவது என்பது யாருக்குமே குழப்பமான ஒரு தருணம்தான். குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இந்தத் தருணம் குழந்தைகளுக்கு நாளெல்லாம் மனதில் நிற்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களிடம் மிகவும் பாசத்தோடு, இரக்கத்தோடு, பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும். …
-
- 24 replies
- 6.7k views
-
-
பெண்களளுக்கு ஏற் படும் வயிற்று வலியானது பல காரணங்களுக்காக வர முடியும். ஆனால் பல பெண்கள் வயிற்று வலியால் அவதிப்படுவது ஒரு புறம் இருக்க அதனை எண்ணி அது எதனால் வருகிறது என நினைத்து பலதையும் யோசித்து பயப்படுவது இன்னொரு புறமாக உள்ளது. அதிலும் பெண்களது வயிற்று வலி அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தின் சமநிலையையும் குழப்பி விடக்கூடியதாக அமைந்து விடுகின்றது. அதாவது குடும்ப பெண் வயிற்று வலியால் துன்பப்படும் போது அவரை சார்ந்த மற்றைய குடும்ப அங்கத்தவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போகின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே பெண்களுக்கு வயிற்று வலி ஏன் ஏற்படுகின்றது? இதற்கான பின்னணி என்ன? இதற்கு தீர்வுகள் எவை என்பது குறித்…
-
- 0 replies
- 25.9k views
-
-
-
குழந்தைகளின்(18 மாதம்) தலை ஏன் வியர்கிறது? கூடுதலாக நித்திரை கொள்ளும் போதுதான் அவதானிக்க முடிகிறது. இப்போது இங்கு குளிர் காலம். இருந்தும் நாங்கள் வெப்பநிலையை அதிகம் கூட்டுவதில்லை. 22 - 23 பாகை செல்சியஸ் தான் இருக்கும் இருந்தும் அவனின் தலையில் மிகவும் வியர்வை கசிந்து உள்ளது. இது சில குழந்தைகளுக்கு பொதுவென கூகிள் தேடலில் அறிந்தேன். இதுபற்றி இங்கு யாருக்காவது தெரியுமோ? நன்றி.
-
- 8 replies
- 6.3k views
-
-
உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி 7 சதவீதம் பேர் சக்கரை நோயால் அவதியுறுகின்றனர். மரபு வழி வரும் டைப் 1 அல்லாமல், மோசமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாததால் வரும் டைப் 2 சர்க்கரை நோய்க்கு மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் குழந்தைகளும் அடங்குவர். உலகளவில் 42 கோடியாக உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2045-ல் 62…
-
- 0 replies
- 370 views
-
-
பழைய சோறு : அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட காண முடியவில்லை. இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்படுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். பழைய . ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருக்கிறதாம். உணவுப்பாதை சீராக இருந்தால் அவுட்லெட்டும் சீராகிவிடும். காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறதாம். காய்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக…
-
- 3 replies
- 1.5k views
-
-
கருவுற்றிருக்கும் தாய்மார் அதிக உடற்பருமன் அல்லது உடல்நிறை அல்லது Obesity உள்ளவர்களாக இருப்பின் அவர்களின் கருப்பையில் நிகழும் இரசாயன மாற்றங்களுக்கு ஏற்ப குழந்தையும் அதிக உடற்பருமன் உள்ளதாக எதிர்காலத்தில் உருவாகக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அமெரிக்காவில் எலிகளிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. source: http://kuruvikal.blogspot.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
புற்றுநோய் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார் Prof. Dr. S. Subramanian MD., MRCP., (UK)
-
- 0 replies
- 454 views
-
-
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுக…
-
- 5 replies
- 4.6k views
-
-
நார் சத்து (fiber) என்றால் என்ன அதன் முக்கியத்துவம் பற்றிய முன்னைய பதிவுகள் : 1. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22811 2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22301 மேலே சொன்ன பதிவுகளில் சொன்னது போல் நார்ச்சத்து மல போக்கை, சீரக்குவதுடன், குடல், குதப்புற்று நோய் (colorectal cancer) ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், உணவில் நார் சத்தின் அளவை அதிகரித்தால், முதல் முறை பாரிசவாதம் (first-time stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. கனேடிய சுகாதார திணைக்களம் (Health Canada) 28 - 38 கிராம் நார் சத்தை நாளாந்தம் உண்ண வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஆனால் சராசரியாக கனேடிய மக்கள் 14 …
-
- 4 replies
- 13.2k views
-
-
டீரா காமத்: ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய் - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர் அம்ருதா துர்வே பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TEERA KAMAT SOCIAL MEDIA படக்குறிப்பு, டீரா காமத் ``நோய் கண்டறியும் பரிசோதனைகளை முடித்த டாக்டர்கள், எங்கள் மகள் ஆறு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது என்றார்கள். மகளுக்கான சிகிச்சை இந்தியாவில் கிடையாது என்றார்கள்'' என்று டீராவின் தந்தை மிஹிர் காமத் என்னுடன் தொலைபேசியில் பேசிய போது தெரிவித்தார். ஐந்து மாதக் குழந்தையான டீரா இப்போது மும்பை எஸ்.ஆர்.சி.சி. மருத்துவமனையில் …
-
- 1 reply
- 617 views
- 1 follower
-
-
உணவே மருந்து: கொழுப்பை சாப்பிடலாம்... ஆரோக்கியமாக வாழலாம்.. .எப்படி? 29 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 30 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் கொழுப்பு உள்ளது; கேரட்டிலும் கீரைகளிலும் கூட சிறிய அளவில் கொழுப்பு உள்ளது. ஆனால், சில கொழுப்புகள் மற்றவற்றை விட உங்கள் உடலுக்கு நன்மை அளிக்கும். கொழுப்பு ஒரு கிராமுக்கு நிறைய கலோரிகளை வழங்குகின்றன என்பது உண்மையே. ஆனால், அவை ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. உண்மையில், கொழுப்பில் சில வகை 'அத்தியாவசிய கொழுப்பு' என்று விவரிக்கப்படுகின்றன. மேலும் அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்து…
-
- 2 replies
- 439 views
- 1 follower
-
-
கற்பூரவள்ளி வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும். கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே இது தேரையர் குணபாடம் கூறுவது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறு…
-
- 1 reply
- 1.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம்.. நீண்ட நாட்களுக்கு பிறகு யாழுக்கு-வருவதே குறைந்து போய்விட்டது.. சில நாட்களுக்கு முன்பு ஒரு விரிவுரையாளர்/ பேச்சாளர்- ஒரு வைத்தியர் (முதியோர் வருத்தங்களில் சிறப்பு பட்டம் பெற்றவர்) Hospice care பற்றி ஒரு விரிவுரை எடுத்தார். அப்போது அவர் கேட்ட கேள்வி.."நீங்கள் என்ன மாதிரியான இறப்பை விரும்புகிறீர்கள்", அதையே நான் சற்று மாறுதலாக என்ன வியாதி உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டுள்ளேன். கிட்டதட்ட 100 பேர் இருந்திருப்போம் ஒருவரும் பதில் சொல்லவில்லை. சொல்ல விரும்பவில்லையோ அல்லது அது பற்றி சிந்தித்து இருக்கவில்லையோ தெரியாது...இதனால் அந்த விரிவுரையாளர் திருப்ப கேட்டார், எத்தனை பேருக்கு, ஹார்ட் வருத்தம் (Heart Disease) வந்து சாக விருப்பம் என்று...…
-
- 10 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பக்கவாட்டில் உறங்குவது ஒருவருக்கு எளிதாக இருந்தால், அவருக்கு அருகில் உறங்க முயற்சிப்பவருக்கும் இது வசதியாக இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், கிளாடியா ஹம்மண்ட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 15 ஆகஸ்ட் 2023 சமீபத்திய வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலும் நீங்கள் வசிக்கின்றீர்கள் என்றால், உங்கள் இரவுகளை சுகமானதாக மாற்றும் நோக்கில், வெவ்வேறு உறக்க நிலைகளை நீங்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால், உண்மையில் மனிதர்களுக்கு எந்த தூக்க நிலைகள் சிறந்தவை என்பது குறித்து ஆய்வு முடிவுகள் என்ன கூறுகின்றன? சரக்கு கப்பல்களில் பயணிப…
-
- 0 replies
- 582 views
- 1 follower
-
-
கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல்நலன் மேம்படுமா? பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் இது குறித்து பேசும்போது," கிரீன் டீ என்பது நிச்சயம் பலனளிக்கக்கூடியது. ஆனால் யாருக்கு என கேட்டால் அதனை விற்பனை செய்பவர்களுக்கே," என்பேன் என்கிறார். கிரீன் டீ என்பது பலனளிக்கும். ஆனால் முறையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகம் குடிப்பது உங்களது உடல்நலனை பாதிக்கக்கூடும். கிரீன் டீயில் கஃபீன் இருக்கிறது. இதனால் தலைவலி, தூக்கம் வருவதில் சிக்கல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். …
-
- 2 replies
- 900 views
-
-
அறிவியல் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் எண்ணற்ற அறிவியல் பொருட்கள் மனிதர்களின் கைகளுக்கு விருந்தாக அமைகின்றன. அதில் ஒன்றாக செல்போன் வளர்ச்சியும் இருக்கிறது. இன்றைய காலங்களில் செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி விளையாட்டு, பாடல்கள், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அதனை உபயோகப்படுத்தப்படுகிறது. நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக செல்போன்கள் மாறி வருகின்றன. உள்ளங்கையில் செல்போனை வைத்தப்படி உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் பெறுகிறோம். கணினியின் பாதிச் சேவையையாற்றும் செல்போன்கள், மனிதர்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அதேநேரத்தில், இந்த செல்போன்களால்…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தச் செய்தியில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. நாய்க் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி முற்றிய நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த வட மாநிலத் தொழிலாளி ஒருவர், நோயின் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு, அவருடைய செயல்பாடுகள் குறித்த வீடியோ, வைரலாக பரவியுள்ள நிலையில், ரேபிஸ் முற்றிய நோயாளிகள் குறித்த அச்சமும் மக்களிடம் எழுந்துள்ளது. அதேவேளையில், ரேபிஸ் முற்றிய நிலையிலுள்ள நோயாளிகளைக் கையாள்வது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, கடந…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், இதை எதிர்த்து போராடவும், இதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட. சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள் சர்க்கரைவள்ளி கிழங்கு பழங்காலம் முதல் மனிதர்கள் சாப்பிட்டு வந்த இயற்கை உணவுப் பொருள் தான் சர்க்கரைவள்ளி கிழங்கு. கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸ…
-
- 1 reply
- 702 views
-