Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வணக்கம், எனது மனச்சாட்சியைப் பார்த்து சில கேள்விகள் கேட்டேன். இந்தக் கருத்தாடலின் நோக்கம் எனது மனச்சாட்சிய உங்களுடன் பகிர்ந்துகொள்வதே ஒழிய உங்கள் மனதைப் புண்படுத்துவதோ அல்லது கவலைப்படுத்துவதோ அல்ல. நேற்று அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான வெற்றிகரமான தாக்குதலின்போது 21 கரும்புலிகள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள். எங்களில் பலருக்கு இந்தத் தாக்குதலை பற்றிக் கேள்விப்பட்டதும் நல்ல சந்தோசம். புளுகம். நேற்று, இன்று எல்லாம் யாழில் எத்தனை விருந்தினர்கள் வந்தார்கள், குறிப்பிட்ட செய்தித் தலைப்பில் எத்தனை பதில் கருத்துக்கள் வந்தன என்பன இவற்றுக்கு சாட்சி. ஆனால், நாங்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களின் தனிப்பட்ட வாழ்வை நினைத்துப் பார்க்கின…

    • 27 replies
    • 6.3k views
  2. தமிழ்ச்செல்வன்: காலங்களை கடந்த பயணி! -ஒரு புலத்து செயற்பாட்டாளனின் அனுபவப் பதிவு- பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்! சர்வதேச உறவாடல்களை நிகழ்த்தும் இராஐதந்திரி! விடுதலையின் அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பாளர்! மனிதநேயமும்- சகோதரத்துவமும் நிறைந்த போராளி! 02 நவம்பரில் பிரகேடியர் தமிழ்ச்செல்வனை வரலாறு தன்னுடன் கூட்டிச்சென்று விட்டது. பிரிகேடியர் தமிழ்செல்வனை கடந்து நாட்கள் ஓடத்தொடங்கிவிட்டன. இந்த நாட்கள் வாரங்களாகி- மாதங்களாகி- வருடங்களாகி- தாசப்தங்களாகி- நூற்றாண்டுகளாகி இடையுறாது நகர்ந்துகொண்டே இருக்கப் போகின்றது. இந்தப் பயணத்தில் எங்கள் தேசம் இழந்த மற்றுமொரு கிட்டண்ணராக தமிழ்ச்செல்வன் எங்கள் மனதுக்குள் வந்து பதிகின்றார். இதனால்தான் …

  3. கனடா, ரொரண்டோவில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மைந்தர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின் ஒளித்தொகுப்பு.

  4. நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 7.35 மணியளவில் "Channel4" தொலைக்காட்சியானது "Unreported World", இலங்கையில் சிங்கள இனவெறி அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைக்கும்பல்கள், காணாமல் போவோர், கடத்தப்படுவோர், ஒட்டுக்கும்பல்களின் படுகொலைகள் என பல பக்கங்களை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக் காட்டியது. குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாழ்வியல், சிங்களப் படைகளினால் எவ்வாறு நாசம் செய்யப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கிழக்கில் கருணா ஒட்டுக்கும்பலின் கோர முகங்கள், கிழக்கு மக்களின் குர…

    • 14 replies
    • 3.8k views
  5. இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு. சரி. இனி விசயத்துக்கு வருவோம். என்னுடன் வேலை பார்க்கும் இரண்டு யாழ்பாணத்து தமிழ் நண்பர்களை சென்ற திங்கட்கிழமை சந்தித்தேன். ஒருவரிடம் கண்டவுடன் கேட்ட கேள்வி, "என்னப்பா, எங்கட தமிழ்ச்செல்வனை கொண்டுட்டாங்கள்". அதற்கு அவர் கேட்ட கேள்வி, "எந்த தமிழ்ச்செல்வனை ?". எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. "அதுதானப்பா, எங்கட அரசியல் துறைப்பொறுப்பாளர்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர் கேட்ட கேள்வி," சண்டையிலயோ செத்தவர் ?". அதற்கு மேல் என்னத்தைச் சொல்ல ? மற்றவரிடம், "என்னண்டப்பா இந்த வீகெண்ட் போச்சுதெண்டே…

    • 17 replies
    • 6.1k views
  6. *கெழும்பில் வாாழும் ஒரு இனஉணர்வுள்ள ஒரு தமிழன் இணையதளங்களில் இணைக்கச்சொல்லி எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதத்தை இங்கு இணைக்கிறேன் அன்பின் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, எமது முப்பது வருடகால போராட்ட வரலாற்றிலே இது ஓர் முக்கியமான மாதம். நாம் போராட்டம் என்று குறிப்பிடுவது வெறும் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்லாது இத்தனை காலமும் எமது தமிழ் பேசும் உறவு நெஞ்சங்கள் சந்தித்து வந்த இன்னல்களையும், இழப்புகளையும், கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளையும் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் குறிக்குமாகும். செம்மொழியாம் தமிழ் ஆனால் அதிலும் இல்லை வார்த்தைகள் எமது மக்களின் துயரங்களை விவரிப்பதற்கு. இன்று நாம் ஓரு உற்ற தளபதியை இழந்து இன்னொரு மாபெரும் இழப்பை சந்தித்து நிற்…

  7. சிங்களப் படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு போராளிகளுக்குமான மாபெரும் எழுச்சி வீரவணக்க நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணிக்கு ரொறன்ரோவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. சிறிலங்கா அரசின் வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரகாவியமாகி விட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு அவுஸ்திரேலியா சிட்னியில் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  9. யாழ் நேசக்கர அமைப்பினரின் கடைமைத்திட்டம்.2 யாழ் நேசக்கரம் அமைப்பு தனது இரண்டாவது திட்டத்தினை தமிழீழ பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவம் என்கிற நிறுவனத்தினுடாக சில திட்டங்களை நிறைவேற்ற உள்ளது எனவே இத்திட்டம் முதலாவது திட்டத்தினைவிட பெரியதிட்டம்.இதற்கும் யாழ் நேசக்கரம் அமைப்பினர் அனைவரும் ஏற்கனவே தங்களாலான பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றார

  10. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 மாவீரர்களுக்கான வீரவணக்கக் கூட்டம் மலேசியாவில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

  11. Started by putthan,

    வீரகாவியமான வீரமறவர்களுக்கு வீரவணக்கங்கள்.. தமிழீழம் முழுவதும் வீரகாவியமான சு.ப தமிழ்செல்வன் உட்பட ஏனைய ஜந்து போராளிகளிற்கு தொடர்ந்து ஜந்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்,புலத்தில? வாழும் நாமும் செய்தி கேட்டவுடன் உணர்ச்சிவசபட்டோம் தொலைபேசியில் எமக்கு தெரிந்த நண்பர்களுடன் எமது ஆத்திரத்தை,மகிந்தாவை வெட்ட வேண்டும்,தலைவர் எனி பார்த்து கொண்டிருக்கக் கூடாது இன்றிரவே போய் குண்டு போட வேண்டும்,இதற்கு கட்டாயம் தலைவர் நல்ல பதில் கொடுக்கவேண்டும் அப்போது தான் எங்களின்ட ஆத்திரம் தீரும் என்று எமது ஆதங்களை கொட்டி தீர்தோம் யாழ்களத்திலும் அதே உணர்ச்சிகள் கொந்தளித்தன. வெள்ளி இரவு தான் கொந்தளித்தோம் கொதித்தோம் தூங்கி முழித்தவுடன் உணர்ச்சிகள் கொஞ்சம் அடங்கிட்டு சனிகிழமை தொடர்ந்து …

    • 4 replies
    • 2.3k views
  12. லண்டனில் பிரிகேடியர் தமிழ்செல்வன் நினைவு கூட்டம் நாளை நவம்பர் 5ம் திகதி திங்கள் கிழமை லண்டன் கரோ பகுதியில் பிரிகேடியர் தமிழ் செல்வன் அவர்களின் நினைவுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காலம்: நவம்பர் 5ம் திகதி திங்கள் கிழமை மாலை 6 மணி இடம்: Harrow Leisure Centre Christchurch Avenue Harrow Midlesex HA3 5BD

  13. கனடிய அரசின் கவன ஈர்ப்பும் துயர்பகிர்வு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (04.11.07) ரொறன்ரோ நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  14. வெள்ளி 02-11-2007 02:36 மணி தமிழீழம் [செந்தமிழ்] கனடா கந்தசாமி கோவிலில் வீரகாவியமான 21 கரும்புலி மாவீரர்களுக்கு சிறப்பு வழிபாடு! கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Road, Scarborough, ON M1K 1R5) 22.10.07 அன்று எல்லாளன் படைநடவடிக்கையில் வீரகாவியமான மாவீரர் தெய்வங்களை நினைவு கூர்ந்து நவம்பர் 2ம் திகதி மாலை 7.30 மணிக்கு சிறப்பு பூசையும் வழிபாடும் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு வழிபாட்டில் தமிழ் தேசியக் கூட்ட நாடாளுமன்ற உறுப்புனர் ஈழவேந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் தெரியவருகிறது நன்றி பதிவு.

  15. Started by putthan,

    மீண்டும் ஒரு முறை உங்களுடன் கோசிப்பில் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி இந்த கோசிப்பும் கள உறவு சிவகுமார் சொன்ன மாதிரி புத்தன் கோசிப் எழுத வேண்டும் என்று எழுதுகிறார் போல இருகிறது என்று கவலைபட்டார்,கவலைபடவேண்டாம் நண்பரே எழுத வேண்டும் என்று தான் இதையும் எழுதுகிறேன். எழுதுறவர்கள் எல்லாம் எழுத வேண்டும் என்று தான் எழுதுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.உலகத்தில் உண்மையான எழுத்தாளன் உங்களை போன்றோர் மட்டும் தான் நிதானித்து சிந்தித்து அழகாக கலையுணர்வுடன் படைப்பார்கள் அவர்கள் தான் படைப்பாளிகள்,மேதைகள்.ஆனால் நான் படைப்பாளி அல்ல "கோசிப்பாளி" அது தான் கோசிப் பண்ணுகிறேன்.சரி விசயதிற்கு வருவோம். அவுஸ்ரெல…

  16. இத்தாலியில் நடைபெற்ற அரசசார்பற்ற அமைப்புக்களின் கண்காட்சி நிகழ்வு தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் இணைந்து தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தனது வேலைத்திட்டங்கள் குறித்த காணொளிப் படக்காட்சிமற்றும் புகைப்பட ஆவணப்பிரதிகள் என்பவற்றை மக்களின் பார்வைக்காகவைத்துள்ளது. இத்தாலியின் லெச்சே மாநிலத்தில் கடந்த 26-10-2007 தொடக்கம் 28-10-2007 ஆம் நாள்வரை 120க்கு மேற்பட்ட அரசார்பற்ற அமைப்புக்கள் கலந்துகொண்டு நடாத்திய மாபெரும் கண்காட்சி நிகழ்வு நடைபெற்றது. ] இந்த நிகழ்விலேயே தமிழர்புனர்வாழ்வுக்கழகமும் இணைந்துகொண்டு தமிழர்தாயகத்தில் தனது தற்போதையை வேலைத்திட்டங்கள் குறித்த காணொளிப் படக்காட்சி மற்றும் புகைப்பட ஆவணப்பிரதிகள் என்பவற்றை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளது. இக் கண்காட்சியைப…

  17. தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடல்களின் ஆங்கில மொழியிலான இசைத்தட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (03.11.07) லண்டனில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 971 views
  18. அனுராதபுரம் சிங்கள வான் படைத்தளம் மீது 22.10.2007 அன்று அதிரடித் தாக்குதல் நிகழ்த்தி வீரச்சாவினை அணைத்துக்கொண்ட 21 கரும்புலி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  19. Started by putthan,

    சிட்னியில் கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமன் என்ற தலைப்புடன் தங்களது கழகத்தை தொடங்கி உள்ளனர் அவுஸ்ரெலியாவில்.மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் கம்பன் கழகதிற்கு ஒரு வெற்றி என்று தான் நினைக்கிறேன்.சிட்னி டமிழ்சிற்கு சனி,ஞாயிறு என்றால் இப்படி பொழுதுபோக்கு தேவை தானே கொஞ்ச புராண கதைகளுடன் பக்தி கதைகள் சம்பந்தமான விடயங்கள் என்றால் சனம் காஞ்சிபுரசேலை,பட்டுவேட்டியு

    • 18 replies
    • 3.8k views
  20. சுவிட்சர்லாந்து தேர்தலின் வாக்குப்பதிவு முடிவு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இனத்துவேஷத்தை தூண்டும் விடயங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தேர்தலில் வலதுசாரி எண்ணம் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி பெருமளவிலான வாக்குகளை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கட்சி வெளியிட்ட பிரச்சார சுவரொட்டி ஒன்றில், மூன்று வெள்ளை செம்மறி ஆடுகள், கறுப்பு செம்மறி ஆடு ஒன்றை சுவிட்சர்லாந்தில் இருந்து எட்டி உதைப்பது போல காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதை தான் தாங்கள் இதன் மூலம் கூறுவதாக இக்கட்சி கூறியது. ஆனால் …

  21. ஜேர்மனியில் மாவீரர் நாள் - 27.11.2007 அன்று டோட்முண்ட் நகரில் நடைபெறுகின்றது

  22. கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்டு மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் அட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கனடா தலைநகர் ஓட்டாவா மற்றும் கனடாவின் வணிகத் தலைநகர் ரொறன்ரோ பெருநகரங்களைக் கொண்ட ஒன்ராரியோ மாநிலத்திற்கான சட்டசபை 107 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 41 உறுப்பினர்கள் ரொறன்ரோ பெரும்பாகத்தை பிரதிநிதித்துப்படுத்துபவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.