வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
சிறிலங்கா இனவாத அரசாங்கத்தின் கனடா விரோத போக்கை கண்டித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவிருக்கின்றது. இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் இன அழிப்பை தொடா்ந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு, அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் அனைத்துலக இராஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கு எதிராகவும் அதன் கட்டுமாணங்கள், செயற்பாட்டாளர்களுக்கு எதி…
-
- 0 replies
- 628 views
-
-
கனடாவின் டொரென்டோவில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகத்தில் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்று தருவதாக கூறி, கனடாவில் வாழும் சிங்களவர் ஒருவர் அங்குள்ள தமிழர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் தமிழர்களை ஏமாற்றி குறித்த நபர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுலவகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கனடாவில் வீடுகள் மற்றும் மனைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடாவில் வசித்து வரும் சிங்களவரான வசந்த அபேசிறி என்ற நபரே இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அபேசிறி என்ற இந்த நபர் தூதரக அலுலவலகத்தில் பணியாற்றும் அவ…
-
- 5 replies
- 808 views
-
-
எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் பெண்களுக்கும் உள்ளது பாடகி, பெண் விமானி சாதனைப்பெண் அர்ச்சனா செல்லத்துரை உடனான நேர்காணல் எந்தத்துறையும் யாருக்கும் தனித்ததொன்றல்ல. எதனையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் சக்தி பெண்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் அர்ப்பணிப்பாகச் செயற்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிறார் பாடகியாகவும், பெண் விமானியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் எம் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இளம் தமிழ் பெண் அர்ச்சனா செல்லத்துரை. மறத்தி இசைத் தொகுப்பினை தாய் மண்ணில் வெளியீடு செய்வதற்காக வருகை தந்திருந்த அர்ச்சனா செல்லத்துரை கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ…
-
- 2 replies
- 703 views
-
-
சட்டமூலம் 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலாங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் ஒன்ராறியோவில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால், மேற்படி சட்டத்தினைப் பாதுகாக்கும் போராட்டத்தில் அனைத்துத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது ஓர் அவசரமான காலத்தின் தேவையாகும். சிறிலங்கா அரசால் தொடரப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலம்-104இற்கு எதிரான வழக்கினை எதிர்கொண்டு நடத்தப்படும் சட்டப்போராட்டத்தில் இணைந்துள்ள பல தமிழ் அமைப்புகளின் பட்டி…
-
- 0 replies
- 812 views
-
-
பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்த தமிழ்க்குடும்பம் கைது மார் 22, 2014 பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமூகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாண்டிச்சோியைச் சேர்ந்த ஒரு தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள (la citளூ des 4000) ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக…
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை திகதி: 11.07.2010 // தமிழீழம் தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதிகள் உரிமைபெற்று கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாழ்ந்துவரும் ராதிகா என்ற குடும்பப்பெண்ணே குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 472 views
-
-
வணக்கம் லண்டனில் கறுப்பின[கலப்பின]இளைஞர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே...அவ் இளைஞர் போதைவஸ்து கடத்தல்,காங் லீடராக இருந்தாலும் பின் தொடர்ந்த காவல் துறையினர் அவரை கைது செய்யாமல் பொது மக்கள் முன்னிலையில் அவரை சுட்டுக் கொண்டது சரியா? பிழையா? ஊர்வலமாக போன மக்களுக்கு தகுந்த பதிலை கொடுத்திருந்தால் பிரச்சனை இந்த அளவிற்கு போய் இருக்குமா?... இவ் இளைஞர் வெள்ளையாக இருந்திருந்தால் காவல் துறையினர் அவரை சுட்டுக் கொண்டு இருப்பார்களா? லண்டன் காவல்துறையினரும்,பிரித்தானியா அரசும் வேண்டும் என்றே இக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்...பொருளாதார பிரச்சனையை திசை திருப்புவதற்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது கருத்து.
-
- 33 replies
- 2k views
-
-
அண்மையில் தமிழ் மாணவர்களிற்கு சில போட்டிகளை அவுஸ்ரெலியா தமிழ்பட்டாதரிகள் சங்கம் நடத்தியது (அவுஸ்ரேலிய தமிழ் பட்டமில்லாத சங்கதிற்கு நான் தான் தலைவர்) :P அதில் எழுதுபோட்டி,உரையாடல்போட்டி,வ
-
- 22 replies
- 3.5k views
-
-
மழை குறித்த கணிப்புகள் துல்லியமா இல்லை என வானிலை மையம் மீது மக்கள் அதிருப்தி சென்னை: தமிழகத்தில் மழைப் பொழிவு மற்றும் காற்றழுதத் தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் தகவல்கள் பெரும்பாலும் குழப்பமாகவே உள்ளது. அது கூறுவது பெரும்பாலும் நடப்பதில்லை என்று மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருந்தாலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியபடி இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாகும் போதும், மழைக்காலத்தின்போதும் எந்த டிவியைத் திருப்பினாலும் ரமணன் முகம்தான் தெரியும். அந்த அளவுக்கு பருவ மழைக்காலங்களிலும…
-
- 2 replies
- 692 views
-
-
கனடா- 2012ல் இருந்து ரொறொன்ரோவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். இவ்வேளையில் பயம் வன்முறை மற்றும் பாசம் நிறைந்த மூன்று நிர்மலேந்திரன் சகோதரர்களின் தொடர் கொலை, CBC-யின் Metro Morning நிகழ்ச்சியில் நினைவு கூரப்பட்டது.நிர்மலேந்திரன் சகோதரர்கள் இளம் வயதினராக கனடா வந்தனர். 1990ன் நடுப்பகுதியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் அலையின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்த றீஜன்ட் பார்க்கில் வளரந்தவர்கள்.மூவரில் மூத்தவரான நிக்சன் 23வயது 2012ல் ஈற்றன் சென்ரரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அவரது முன்னாள் நண்பர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து குறைந்தது ஒரு வருட காலத்திற்குள் இவரது நடு சகோதரர் ற…
-
- 0 replies
- 409 views
-
-
கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. விசிட்டர் வீசா அத்துடன், கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. புதிய நடைமுறை எனினும், புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்ட…
-
- 0 replies
- 960 views
- 1 follower
-
-
பிரித்தானிய பிரஜா உரிமை (citizenship) மற்றும் நிரந்தர வதிவிட (PR) உரிமை பெறுவதற்கான பரீட்சைக்கு தோற்றுவோர் அதற்கான முழு பாடவிதானம் மற்றும் மாதிரி வினாக்களை பெறுவதற்கு: http://www.ajeevan.ch/content/view/1461/1/
-
- 0 replies
- 989 views
-
-
35 வருட ‘ஜியோப்படி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்? வழங்குனர் அலெக்ஸ் ட்றெபெக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அமெரிக்க தொலைக்காட்சியில் கடந்த 35 வருடங்களாகத் தொடர்ந்து 8000 காட்சிகளை ஒளிபரப்பை வரும் போட்டி நிகழ்ச்சியான ‘ஜியோப்படி’ யை (Jeopardy) நடத்திவரும் வழங்குனரான அலெக்ஸ் ட்றெபெக் சதயப் புற்றுநோய் காரணமாகத் தொடர்ந்தும் நிகழ்ச்சியை நடத்தமுடியாத நிலை ஏற்படலாம் என கனடாவின் சீ.டி.வி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டார். கனடியரான அலெக்ஸ் ட்றெபெக் தொடர்ச்சியாக நடத்திவரும் ‘ஜியோப்படி’ தொலைக்காட்சிப் போட்டி நிகழ்ச்சிகளில் முதல் தரமானதும், பல மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டதுமான நிகழ்ச்சியாகும். போட்டியாளர்கள் உலகத்தி…
-
- 0 replies
- 798 views
-
-
Hatun Sueruecue 23 வயது நிரம்பிய துருக்கி நாட்டைச் சேர்ந்த இளம் தாய். வாழ்ந்தோம் இறந்தோம் எனும் சாதாரண வாழ்வை என்றுமே அவள் விரும்பியதில்லை. தனது வாழ்வுக்கான தீர்மானங்களை தானே எடுக்க வேண்டும். கற்பனையில் மிதந்து கனவுலகில் பறந்து எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவளது விருப்பம். அவளது விருப்பத்துக்கு எதிராக நின்றது அவளது பெற்றோர்களும் சகோதரர்களும்தான். தொன்மையான கலாச்சாரத்துக்குள்ளும் மதக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் மூழ்கிப் போயிருந்த அவளது குடும்பம் Hatunஐயும் அதற்குள் அழுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அவள் தன்மீது விழுந்திருந்த அழுத்தச் சுமைகளை தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து விட்டாள். ஆனால் அதற்குள் முற்று முழுதாக ஊறிப் போயிருந்த அவளது குடும்பம் வே…
-
- 7 replies
- 1.9k views
-
-
கனடாவின் அதி உயர் கடேற் விருது அமோஸ் டன்ஸ்டன் என்ற இலங்கைத் தமிழ் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அண்மையில் இந்த விதை வழங்கி கெளரவித்தார். கனேடிய கடேற் விருதுகளில் அதி உயர் விருதாகக் கருதப்படும் Lord Strathcona Award விருதே, அமோஸிற்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் கடேற் வீரர்களை ஊக்குவித்து கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது. கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட அமோஸ் தற்போது கனேடிய பிரஜையாவார். மணி டன்ஸ்டன் - மேரி டண்ஸ்டன் ஆகியோரின் சிரேஸ்ட புதல்வாரன அமோஸ் American Football விளையாட்டிலும் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த…
-
- 9 replies
- 1.7k views
-
-
எனது கசப்பு அனுபவம் புலம் பெயர்ந்து வந்தும் விலங்குகளால் சிறைப்பட்டேன் சில நிமிடங்கள். இரண்டு தினங்களிற்கு முன்னம் Hasle (OSLO)என்ற இடத்தில் வேலை முடிந்து இரவு 10.00 மணியளிவில் வீடு செல்வதற்காக நடந்து வந்தகொண்டிருந்தேன். திடீரென நான்கு வாகனங்களில் வந்த (மொத்தம் 20 அல்லது 25 பேர் ) இராணுவக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு கைவிலங்கு இடப்பட்டு அவர்களின் வாகனத்திற்குள் அத்துமீறி ஏற்றபட்டடேன். எனது தொலைபேசி ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து 5 நிமிடங்கள் கழிந்த பின் எல்லாவற்றையும் திரும்ப ஓப்படைத்து விட்டு மன்னிப்பு கேட்டு விடுதலை செய்தார்கள். என்னை கைது செய்த காரணத்தை ஆரம்பத்தில் இருந்து சொல்லவே இல்லை. இந்த தேசத்து மொழியிலும் நான் பெரிதாக தேர்ச்சி இல்லை இருந்தும் வாக்கு…
-
- 19 replies
- 2.5k views
-
-
நன்றி www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...3&Itemid=68
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பிரான்சில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. நான் செல்லும் போது பிரான்ஸ் பொலிஸ் பலர் இன்று அங்கு நின்றதால் என்னடா இன்று புதுமையாக இருக்கிறதே, எம்மக்கள் பிரச்சினை கொடுப்பதில்லையே என்று நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது, பிரான்ஸ் நாட்டு மாணவர்களும் அவ்விடத்தில் குவியவிருப்பதால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று. எமது போராட்டம் நடந்த போது சிறிது நேரத்தின் பின் இடையில் எமக்கு அருகில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் வேலையில்லா பிரச்சினைக்காக (எனக்கு விளங்கியவரை அப்படித்தான் நினைக்கிறேன்) போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோசமும் விசிலடியும் உண்மையில் அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி விட்டிருந்தது. இன்று நடந்த எமது போரா…
-
- 14 replies
- 1.1k views
-
-
வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:39.07 PM GMT +05:30 ] தாயகத்தில் மனிதப்பேரவலத்தில் சிக்கியுள்ள தமிழ்மக்களுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நாளை வெள்ளிக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலமும் அதனை தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த மெழுகுவர்த்தி ஊர்வலம், இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென். பற்றிக்ஸ் கத்தீஸ் தேவாலயத்தை சென்றடையவுள்ளது. அங்கு இரவு 10 மணிவரை தாயகத்தில் தமிழ் உறவுகள் எதிர்நோக்கியுள்ள மரண அவலத்திலிருந்து விடுபடவேண்டியும் அவர்களுக்கு விரைவில் விடிவு பிறக்க வேண்டும் என்று கோரியும் சர்வ மத பிரார்த்தனையு…
-
- 0 replies
- 618 views
-
-
The Sri Lankan President has vowed to finish his final military push within 48 hours and capture all left over territory in the "safe zone". How can this be possibly achieved in such a short period of time without annihilating tens of thousands of civilians in the "safe zone". ICRC, the only international agency in Sri Lanka, cannot access the "safe zone". Sri Lanka is about to embark on a horrible onslaught with no witnesses and no regards for international calls. Please call or send a letter outlining your concerns to as many people as possible. Every letter could possibly make the difference in saving innocent lives in Sri Lanka. Below are some possible conta…
-
- 2 replies
- 1.8k views
-
-
Please vote for Tamileelam !!! http://www.judgeandjury.org/
-
- 1 reply
- 962 views
-
-
Three men have today (26 August 2009) been convicted of trying to defraud banks of hundreds of thousands of pounds. Mr. Chelliah Morali, aged 35 years and an Indian national of Broughton Road, Croydon was found guilty of one count of conspiracy to defraud and one count of possession of articles for use in fraud (forged passport, utility bills and bank cards). Mr. Sinnaiah Krishnapillai Sudaharan, aged 48 years and a United Kingdom national of Poole Road, Epsom was convicted of one count of conspiracy to defraud and two counts of possession of an article for use in fraud (passports, utility bills and numerous financial documents). Finally, Mr. Azam Shaik, ag…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது' உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே!' ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு „ஒரு மந்தையில் இருந்து பிரிந்து போன ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே' என்பதை விட உணர்ச்சிகரமாகவும், பரபரப்பாகவும் சில சம்பவங்…
-
- 23 replies
- 2.5k views
-
-
பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, மற்றும் ஸ்ராஸ்புக் இளையவர்கள் நடன ஆசிரியர், மற்றும் பெரியவர்கள் ஏற்றி வைத்தன…
-
- 0 replies
- 639 views
-
-
செந்தமிழன் சீமானை கைது செய்த தமிழக, இந்திய அரசை கண்டித்து டொராண்டோ இந்திய துணை துதரக முன்னால் மாபெரும் அமைதிவழி கண்டனப் போராட்டம். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு அவுதியுரும் தமிழக மீனர்வகள்க்காவும், அவர்கலுகை குரல் கொடுத்த செந்தமிழன் சீமானை சிறைப்படுத்திய தமிழக அரசின் செயல் பாட்டை கண்டித்தும், ஈழ பிரச்சனையில் இந்திய மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராய் இலங்கை அரசுக்கு துணை போகும் நிலைப்பாட்டைக் கண்டித்தும் வரும் 27.08.10, வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2.00மணி முதல் 7.00வரை டொராண்டோ இந்திய துணை துதரக முன்னால் மாபெரும் அமைதிவழி கண்டனப் போராட்டம் http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2373
-
- 0 replies
- 655 views
-