Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிட்சர்லாந்து தேசத்தில் அதிகமானோர் மது போதையால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் குறிப்பாக அண்மையில் சுவிஸ் பிரபல பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியும் கூட மது பழக்கத்துக்கு அடிமையாகி ஆரோக்கியம் கெடுவதும் குடும்ப வன்முறையை தூண்டுவதும் கடன் தொல்லைகள் வருவதும் தமிழர்கள் மத்தியில் அதிகம் என்றும் அந்த சில பத்திரிகைகள் சுட்டி காட்டியுள்ளது ......

    • 14 replies
    • 2.8k views
  2. கனடிய அரசு, அமெரிக்க அரசு, தென்னாபிரிக்க அரசு போன்றவற்றுடனான உறுதியான உறவின் மூலமே பல விடயங்களை இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக பலவற்றை சாதிக்க முடிந்தது. அத்தோடு உலகத் தமிழர் பேரவையோடு இணைந்து ஐக்கியநாடுகளவையில் தீர்மாணம் வருவதற்கு நாங்கள் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டோம் என கனடியத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ராஜ் தவராஜசிங்கம் தெரிவித்தார். கனடாவின் பிரதமரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட குடிவரவு அமைச்சர், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ரூடோ, அமெரிக்க உயரிஸ்தானிகத்தின் முக்கிய அதிகாரி, இந்தியத் தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பொங்கல் விழாவில் வைத்தே இதனை அவர் தெரிவித்தார். 1,200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேசிய குடிவரவு அமைச்சர் கனடியத் தமிழ்க் காங்கிரஸி…

  3. யாழ்ப்பாணம் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா பெண்டில் சிட்னி பெண்டில்ஹில் சிவிக் பூங்காவில் கோலாகலமாக நடந்தேறியது. இது குறித்த ஒரு வர்ணனை. முன்வைக்கிறார் - றைசெல். http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/386499

  4. பிரான்சில் ‘தமிழர் திருநாள் – 2015′ – சிலம்பு அமைப்பின் அறிக்கை JAN 18, 2015 | 20:56by ஐரோப்பியச் செய்தியாளர்in சிறப்பு செய்திகள் பிரான்சில் சிலம்பு அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் பொங்கல் நாளான ‘தமிழர் திருநாள் – 2015′ ஒன்பதாவது ஆண்டாக எதிர்வரும் 24 25 ஆகிய இருநாட்கள் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவிபரமாவது: புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் ‘Fête de la Diaspora Tamoule 2015 France’ தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – எனும் விருதுவாக்கியத்துடன் தொடரப்படும் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரா…

  5. யேர்மனி லண்டவ் நகரில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகள் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி மற்றும் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் லண்டவ் இணைந்து தமிழர் புத்தாண்டான தைத் திருநாளை 15.01.2015 அன்று தோரணம் மாவிலை கட்டி முற்றத்தில் அடுப்பு வைத்துத் தமிழீழ வரைப்படத்தை கோலமாகப் போட்டு வெகுசிறப்பாகத் தமிழுறவுகளுடன் இணைந்து மகிழ்வோடு கொண்டாடினர். தமிழர்களுடைய புத்தாண்டைத் தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடியது தாயகத்தை நினைவூட்டும் வகையிலே மிகவும் சிறப்பான விடயமாகத் திகழ்கின்றது. தமிழர் புத்தாண்டு நிகழ்வில் பல இளையோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பால் பொங்கி வருகையிலே „பொங்கலோ பொங்கல்' எனக்கூறிப் பெரியோர் முதல் சிறியோர் வரை அரிசியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். பகலவனுக்க…

    • 1 reply
    • 582 views
  6. புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே) மனிதர்களுக்கிடையேயான உறவுகள் மிக அற்புதமானவை. உறவுகளின் மதிப்புகளை, நுகர்வோர்மயமான வாழ்வின் அடிப்படையில், பொருள், புகழ் என்ற அற்ப ஆசைக்கு முன்னும் நாம் தொலைத்துவிடுகின்றோம். உறவுகள் தொலைவதைப் பற்றிய பிரக்ஞையற்றும் இருக்கின்றோம். இந்தப் வரிசையில் இன்னும் ஒரு விடயம் சேர்ந்திருப்பதை தற்போதைய காலங்களில் உணர்கின்றேன். அது இன்று எம்மிடையே காணப்படும் குழுமுறைக் கலாச்சாரம் ஆகும். இப்படியான குழு கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே எமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது என்பதை இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஒற்றுமையை வளர்க்கவும், கலை கலாச்சார விழுமி…

  7. f57ab7773e8fc7515e39a32a3e34e2e9

  8. «நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது அர்த்தப்படுத்த முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது கபடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்»இவ்வாறு நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். …

  9. இரா.சேகர் அண்ணா இப்பிடியான புலம்பெயர் நாட்டிலே வாழ்கின்ற பாடகிகளுக்கும் உங்கள் இசையில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கும் போது அது அவர்களுக்கு உற்ச்சாகமா இருக்கும் இவருடைய தாயார் தமிழ் ஈழம் இவருடைய தந்தை ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் ஆனாலும் தமிழ் கலைகளோடு பயணிப்பவர்..... இப்பிடியானவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குங்கள் அவர்களுக்கு உற்ச்சாகமாக இருக்கும்....

    • 7 replies
    • 1.4k views
  10. பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்கள் பலவந்தமாக நாடுகடத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக மனித உரிமை அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் கவலை வெளியிட்டுள்ளனர். ஈழத் தமிழ் படகு அகதிகளை நடுக்கடலிலேயே வழிமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனங்களும்இ எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக ஈழத் தமிழர்களை நாடு கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக பலவந்தமாக நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் இலங்கை அரச படையினரால் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைக…

    • 0 replies
    • 1.3k views
  11. ரொறன்ரோவின் நகை மாளிகை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காபுரோவைச் சேர்ந்த 26 வயதான ஆதவன் ரேனு-வசந்தகுமார் (Arthavan Rehnu-Vasanthakumar, 26) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 1920 Eglinton Ave வீதி கிழக்கில் அமைந்துள்ள Jewellery Exchange இல் இவர் மேற்கொண்ட துப்பாக்கி முனையிலான கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. இவர் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://seithy.com/breifNews.php?newsID=124352&category=TamilNews&language=tamil

    • 3 replies
    • 1.5k views
  12. மார்ச் 8 பெண்கள் தின நினைவாக.... நூல் அறிமுகம் - (சுய)விமர்சனம் - கலந்துரையாடல் அரங்க நிகழ்வு செல்வி அரங்கு மூன்று ஆண்களின் உரை அரங்க நிகழ்வு சிவரமணி அரங்கு மூன்று பெண்களின் உரை (சுய)விமர்சனமும் கலந்துரையாடலும் மேலதிக விபரங்கள் விரைவில். இந்த நிகழ்விற்காக நீங்கள் முன்கூட்டியே இந்த நாளை ஒதுக்கிவைப்பதற்கான அறிவிப்பு இது. தமது துணைகளுடன் அல்லது காதலர்களுடன் வாழ்பவர்கள் இருவரும் இணைந்து வருவதை எதிர்பார்க்கின்றோம். தனித்து வாழ்பவர்கள் அர்த்தநாரிஸ்வரராக வாருங்கள். இது ரொரன்டோவில் வாழ்கின்ற நண்பர்களுக்கான அழைப்பிதழ் இந் நிகழ்வை உங்கள் நண்பர்களுடன் பகிரவும் இடம்: Don Montgomery Community Recreation Centre (formerly Mid-Scarborough Arena) 2467 Eglinton Ave. E …

    • 1 reply
    • 2.5k views
  13. கனடா ரொறன்ரோ பிர்ச்மவுன்ட் பகுதியில் பின்ச் அவனியுவில் உள்ள தொடா்மாடிக் குடியிருப்புப் பகுதியில் 40 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவர் கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தொடா்மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டில் சென்று கொண்டிருக்கையில் அந்த லிப்டுக்குள் வந்த இளைஞன் ஒருவா் குறித்த பெண்ணைப் பின்தொடா்ந்து சென்று அப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு அப் பெண்ணை கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் அதனை தனது தொலைபேசியால் வீடியோ எடுத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் கடந்த வருடம் நவம்பா் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞன் இதன் பின்னா் பல தடவைகள் அப் பெண்ணை அச்சுறு…

    • 19 replies
    • 2.9k views
  14. சுவிசில் கலை வியாபாரி ஒருவர் ராஜமரியாதை கொடுத்து உபசரித்து, தன் நண்பனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் சூரிச் மாகாணத்தில் பிரம்மாண்ட ஹொட்டல் ஒன்றை நடத்தி வரும் நபர்(29) ஒருவர், கலை பொருட்களையும் விற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பர் மாத கடைசியில், இவருக்கு நெருக்கமான நண்பரின் பெற்றோர் சுற்றுலா சென்றுவிட்டதால், தனது ஹொட்டலில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இவர்களுடன் சேர்ந்த மொத்தம் நான்கு நண்பர்கள் தங்கியுள்ளனர், அனைவரையும் நன்கு உபசரித்துள்ளார். இந்நிலையில் கலை வியாபாரியின் நண்பர் திடீரென மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், தான் தான் …

  15. பிரம்மாண்டம் என்றாலே அது துபாய் தான், செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுகள், மிக உயரமான கட்டிடம் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த பட்டியலில் இணையவிருக்கிறது ஹார்ட் ஆப் யூரோப் (Heart Of Europe) என்ற பனிப்பொழியும் செயற்கை தீவுகள் நகரம். இதனை உருவாக்க Kleindienst என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு பனி பொழியக்கூடய‌ பகுதிகளான ஆஸ்திரியா, மொனாக்கோ, ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் செண்ட்.பீடர்ஸ்பர்க் பகுதிகளைப் போன்ற செயற்கை நகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Kleindienst நிறுவனம் கூறுகையில், ஜேர்மன் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த திட்டத்தில் பூமிக்கு அடியில் குளிரூட்டபட்ட குழாய்கள் அமைத்து, மேலிருந்து விழும் பனி உடனே உர…

  16. கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தேர்தல் புறக்கணிப்புகள் தமிழ் மக்களுக்கு தீமையையே விளைவித்துள்ளன. யூன், 1931 இல் சட்ட சபைக்கு நடந்த தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் பேரவை (Jaffna Youth Congress) புறக்கணிக்கச் சொன்னது. அதன் விளைவாகத் தனிச் சிங்கள வாரியம் (Pan Sinhala Board of Ministers)ஒன்று உருவாகியது. அதன் விளைவுகளைத் தமிழ் மக்கள் பின்னாளில் அனுபவித்தனர். 1994 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணித்தார்கள். அதன் விளைவாக யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் டக்லஸ் தேவானந்தாவின் இபிடிபி கட்சி 10,744 வாக்குகளை மட்டும் பெற்று 9 உறுப்பினர்கயோடு நாடாளுமன்றம் சென்றது. அதன் விளைவுகளை இப்போதும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். 2005 ஆம் ஆண்டில் விடுதலைப…

    • 0 replies
    • 448 views
  17. தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று கனடா மார்கக்ம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த மூன்று வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும், உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுககும் பெருமை சேர்ப்பதாகும். அவவ்கையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும், பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 04.01.2015 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்கக்ம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவர…

    • 0 replies
    • 1.4k views
  18. இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த மாதம் 23-ம் தேதி அன்று லண்டனின் பிராட்டில்பை என்ற கிராமத்தில் உள்ள சாலையில் தன் நாய்களுடன் நடந்து சென்றபோது வித்தியாசமான வாசனையை உணர்ந்த ரோசி புதருக்கு அடியில் ஒரு பளபளக்கும் வைரத்தைக் கண்டுபிடித்தது. அந்த வைரம் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சிறிய பாராசூட்டில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆலன் வாழ்வில் அதிர்ஷ்டம் அடித்தது. இணையதளத்தில் வைர வியாபாரம் செய்யும் நிறுவனமான ‘77 டயமண்ட்ஸ்’ தனது கடையின் விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஹீலியம் பலூனில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நன்கு பட்டை தீட்டப்பட்ட வைரத்…

  19. மலரும் புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தை மாதம் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தரும் மாதமாகும். தைத் திருநாள் பொங்கல் விழாவுடன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்தை வரவேற்பது தமிழர் பண்பாட்டுடன் நன்கு இணைந்து போயுள்ள வாழ்வியல் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையுடன் நாம் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக! தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப் புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை. 2014…

  20. யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனியில் ஆலன்,பேர்லின் மற்றும் எஸ்சேன் நகரில் 26 .12 .2014 நேற்றைய தினம் மதியம் ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முனெடுக்கப்பட்டது. ஆலன் நகர தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது . பிரார்த்தனை முடிவில் அனைவரும் அவ் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு சுடர் ஏந்தி அமைதிப் பேரணியாக சென்றனர் .அங்கு ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களின் நினைவாக வைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினர் .இறுதியாக கொல்லப்பட்ட மக்களை நினைவில் நிறுத்தி அவர்களுக்கான பிரார்த்தனையை மதகுரு Bernhard Richter அவர்கள் மேற்கொண்டார். பேர்லின் நகரத்தில் தேவாலயத்த…

    • 0 replies
    • 427 views
  21. பரிசின் புறநகர்ப்பகுதியான நந்தேர் (NANTERRE) என்னும் இடத்தில் தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது... நினைவுப்பாடல்களும் அஞ்சலி நடனங்களும் இடம் பெற்றன.... யாழ் இணையத்துக்காக பிரான்சிலிருந்து விசுகு.

  22. 27/12/2014 அன்று சனிக்கிழமை பிரான்சிலுள்ள தமிழ்ச்சோலை பாடசாலைகளினால் நடாத்தப்படும் முத்தமிழ்விழா நடைபெற்றது பிரதம அதிதியாக நெல்லை நடராஐன் அவர்கள் தமிழகத்திலிருந்து வந்து கலந்து கொண்டார்.. அவர் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட படங்கள்.. பிரான்சிலிருந்து யாழ் இணையத்துக்காக விசுகு..........

  23. அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்துவெளிவரும் Promotionworld எனும் நிறுவனம், சர்வதேச அளவில்இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும் அதன்சிறப்புதேர்ச்சி, வளர்ச்சி,நன்மதிப்பு தொளின்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ,பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாகவைத்து மிகசிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகாரவிருதினை கடந்த8 வருடங்களாக வழங்கிவருகின்றது. வவுனியா, வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம்மற்றும் இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions தனியார்நிறுவனம்Promotionworld நிறுவனத்தினால்The Readers Choi…

  24. கார் வாங்கலாம் வாங்கோ மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும். சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை. பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த காரா? எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும் என்றுதான் என நான் நினைக்கின்றேன். அடுத…

  25. விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கு : ஐரோப்பா அமெரிக்கா இந்தியாவிடம் கோரும் தீர்மானம் ! DEC 27, 14 • IN ஒளிப்படச்செய்தி, செய்திவலம், தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும், இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது எனக் கோரியுள்ளது. நடந்த முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களில் ஒன்றாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிக…

    • 2 replies
    • 796 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.