Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாலியின் தமிழ்க்கடவுள் ஒரு சிறிய பீடிகை மும்பை போன புதிதில் (நவம்பர் 2000) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. இந்தி தெரியாது. ஆங்கிலம் அரைகுறை. சாப்பாடு சரியில்லை. நண்பர்கள் கிடையாது. பைத்தியம் பிடிக்காத குறை. மிகவும் நொந்துபோய் ஒரு நாள் சென்னையில் இருக்கும் நண்பரிடம் தொலைபேசியில் உரையாடினேன். அவர் கடிந்து கொண்டார். ‘வாரக் கடைசியில் ட்ரெயின் பிடித்து மடுங்கா (Matunga) போ, அங்கே சாப்பாடு கிடைக்கும் அரோரா தியேட்டரில் தமிழ்ப்படம் ஓடும், போய்ப் பார். கிரி ட்ரேடிங் கம்பெனியில் தமிழ்ப்புத்தகங்கள் கிடைக்கும் வாங்கிப் படி. சும்மா ஊர் புடிக்கலைன்னு புலம்பாதே’ என்று அறிவுரை கொடுத்தார். என்ன புத்தகம் வாங்குவது என்று அவரிடமே கேட்டேன். வாலியின் அவதார புருஷன், பாண்ட…

    • 1 reply
    • 7.4k views
  2. Product Description நூலின் பெயர் : வால்காவிலிருந்து கங்கை வரை ஆசிரியர் பெயர் : ராகுல சங்கிருத்தியாயன் தமிழில் மொழி பெயர்ப்பு : கண முத்தையா புத்தகம் பற்றி..., 1949 முதல் 27 பதிப்புகளை கண்ட அறிய அறிவுப் புதையலான இந்த புத்தகம் தமிழகத்தில் சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட சிறந்த புத்தகம் ஆகும் ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் ஜெயிலில் இருந்து எழுதி மூல நூலான வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதி முடித்தார் வால்கா வெளிவந்த சில தினங்களுக்கு பின் அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலை பல்கலைகழக மாணவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் என்று சொன்னார் மனித நாகரிக வரலாற்றை…

  3. நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீடு இன்று புதன்கிழமை யாழ.நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு நடைபெற்றது. நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வாசுதேவக்குருக்கள் சைத்தன்ய சுவாமிகளின் ஆசியுரைகள் இடம்பெற்றன. நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்திற்கு பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் யாழ்.விருது வழங்கி கௌரவித்தார். …

  4. நாஞ்சில் நாடன், கே.ஆர்.மீரா, ஹனிஃப் குரியேஷி உணவுக் கலாச்சாரம் நாஞ்சில் நாடன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். சாகித்திய அகாடமி விருது, இயல் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். இவரது நாவலான 'தலைகீழ் விகிதங்கள்', 'சொல்ல மறந்த கதை' என்னும் பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது. ஆனந்த விகடன், குங்குமம் போன்ற முன்னணி இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருபவர். புனைவு மட்டுமல்லாது கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். 'நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை'அவற்றுள் முக்கியமான ஒன்று. இப்போது நாஞ்சில் நாட்டு உணவு குறித்த கட்டுரை நூலைக் கொண்டுவர உள்ளார். 400 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நூல் அவரது பல்லாண்டுகால உழைப்பு. உணவுக் குறிப்பாக அல்லாமல் கலாச்சாரப் பின்னணியுடன் இந்த நூலை அவர் தரவுள்ள…

    • 0 replies
    • 451 views
  5. எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையில் ஒரு தலைவராகச் செயற்பட்ட கரிகாலன் எம்முடன் உரையாடுவதற்காக அங்கு வந்திருந்தார். சிறையிலிருந்த எம்மை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவவேண்டும் என கரிகாலன் எம்மிடம் கேட்டார். கைதிகளை விடுவிப்பதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதுமாறு கரிகாலன் எம்மிடம…

  6. வினோதினியின் 'முகமூடி செய்பவள்' எப்போது தத்தளிக்கும், எப்போது நிதானமாகும் என்று அறியா மனது எனக்கு உரித்து. என்றும் போல விளிம்பில் சிதறத்துடிக்கும் கணங்களை வாசிப்புடன் தாண்டிச் செல்லவே இம்முறையும் முயற்சித்திருந்தேன். அண்மைக்காலமாய் கவிதைகளை நிதானமாய் இரசித்து முழுமையாய் வாசிக்கும் மனதையும் தொலைத்தே விட்டதாகவே உணர்ந்திருந்தேன். தமிழில்தான் இப்படித் தோன்றுகின்றதோ என யோசித்து, ஆங்கிலத்தில் வந்த தொகுப்புக்களையோ அல்லது சஞ்சிகைகளான American poetry review போன்றவற்றையோ வாசித்தாலும் அவற்றை வார்த்தைகளாய் மட்டும் இயந்திரத்தனமாய் வாசித்துக்கொண்டுபோகின்றேன் போன்ற நினைப்பே வந்தது. தற்செயலாய் இன்று சென்னைப்புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருந்த வினோதினியின் 'முகமூடி செய்பவள்' ஐ எடுத…

  7. யாழில் உலாவரும் போது எனது புணைபெயருடன் இருந்ததிந்த தலைப்பும் அதனுடன் இருந்த "கற்பனை விஞ்ஞான கதை" என்னும் விளக்கமும் என்னை உள்ளே செல்ல தூண்டியது. கலைஞனானால் பதியப்பட்ட திரியாதலாலும் அவர்மீதிருந்ததோர் தனிப்பட்ட யாழ்கள மதிப்பினாலும் தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன். வாசிக்க ஆரம்பித்தவனை முழுவதுமாக வாசிக்க தூண்டியது அவரது கற்பனைக்கதை நடை. ஆங்காங்கு காணப்பட்ட சிறு தவறுகளை சுட்டிக்காட்ட தூண்டியபோதும் அதனை ஒரு "கற்பனை விஞ்ஞான கதை" யின் விமர்சனமாக கொண்டுசெல்வதே சிறந்ததாகப்பட்டது. யாழில விமர்சனத்திற்கு பெயர்போன கலைஞனின் படைப்பிற்கு நானே ஒரு தனித்திரியில விமர்சனம் செய்யலாமே என்றதொரு நப்பாசையுடன் இந்தத்திரியை ஆரம்பிக்கின்றேன். இந்தத்திரியில் பதியப்பதியபடும் அடியேனின் விமர்சனங்கள் கதாசி…

  8. வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும் அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட நாடு. இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்ச…

  9. நேர்காணல்: விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை! Last Updated : தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர் டி.செல்வராஜ். அவருடைய "மலரும் சருகும்', "தேநீர்' நாவல்கள் வாசகர் மனதில் என்றும் கமழ்பவை. "தேநீர்' நல்ல திரைப்பட முயற்சி. அண்மையில் அவர் எழுதிய "தோல்' நாவலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. மனித வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைக் கலையழகுடன் சித்திரிக்கும் படைப்பாளியான அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் கூட. தமிழக அரசின் விருது பெறுவதற்காகச் சென்னைக்கு வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து... நான் தமிழில் எழுதுவேன் என்று என் சிறு வயதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால் நான் பள்ளியில் படிக்கும்போது முழுக்க முழுக்க ஆங்கில…

    • 0 replies
    • 746 views
  10. வணக்கம் யாழ் கள உறவுக ளுக்கு ..... ..நமது சக கருத்துக்கள உறவு இளங்கவி அவர்கள் ,தனது கவிதை தொகுப்பை ...தொகுத்து ஒரு வெளியீடாக , தர இருக்கிறார். யாழ் களத்தில் பல கவிதைகளை தந்த அவரை , பாராடுவதும் , அதை வரவேற்று எம்மை இயன்றதை செய்வதும் யாழ் கள உறவுகளின் கடமையாகும் . இது பற்றிய மேலும் தகவல்களை அவரிடம் தனி மடலிலும் பெற்று கொள்ளலாம் .எனக்கு விபரம் தெரியுமிடத்து மேலும் விபரங்களை அறிய தருவேன். அல்லது இது பற்றி எங்களுடன் அவர் களத்தில் அறிய தருவார் என நம்புகிறேன். விரைவில் எதிர் பாருங்கள் ............

  11. விவசாயி சஞ்சிகை வெளியீடு – பத்திரிகை செய்திக்குறிப்பு இயற்கை விவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய “விவசாயி” எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் சஞ்சிகை ஆசிரியர் சி.அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது. ‘நஞ்சில்லா உணவு நாளைய சந்ததிக்கு’ எனும் மகுடவாக்கியத்துடன் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி மற்றும் உள்ளூர் உற்பத்திகள் ஆகியவற்றுடன் தமிழரின் மரபுசார் வாழ்க்கைமுறை தொடர்பான விவசாய விற்பனர்கள், சாதாரண விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆக்கங்களுடன் சஞ்சிகையாக மாதாந்தம் வெளிவர…

  12. பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம். …

  13. வீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல். புயலின் கண் எத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன். பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்து…

    • 62 replies
    • 27.5k views
  14. உடலில் விழும் அடியைவிட மனதில் விழும் அடி வலி மிகுந்தது. அதுவும் சின்னஞ்சிறு வயதில் யாராவது மிக மோசமாக திட்டிவிட்டால், அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். எத்தனை வயதானாலும் அந்த வலி மறப்பதே இல்லை. அப்படிதான் மேரி மெக்லியோட் பெத்யூனுக்கும் நடந்தது. அமெரிக்காவில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்கு உரிமை, சொத்து உரிமை, கல்வி உரிமை எதுவும் கிடையாது. திருமணம் செய்துகொள்வது கூட எஜமானர் அனு மதித்தால் மட்டுமே நடக்கும். குடும்பமே பண்ணை முதலாளிக்கு அடிமைப் பணி செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்த்துப் பேசினால் பட்டினி போட்டு அடித்து வதைப்பார்கள். தப்பி ஓடினால் பிடித்து வந்து சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவார்கள். அதன் பிறகு வாழ்நாள் …

  15. வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன் Source :Sankathi

    • 3 replies
    • 2.7k views
  16. வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள் டிசே தமிழன் -'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு- 1. யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது. 'வன்னி யுத்தம்' என்…

  17. வெண்முகில் நகரம் – நாவல் வாசிப்பனுபவம் இராதா கிருஷ்ணன் வெண்முகில் நகரம் நாவல் வாசித்து முடித்தவுடன் மனதில் நின்ற முதல் கதாபாத்திரம் என்று பார்த்தால் பூரிசிரவஸ் வருகிறார். அழகான மூன்று காதல் வாய்ப்புகள் அமைகிறது. அமைந்த சில காலங்களிலேயே அவை இல்லாமல் ஆகி விடுகின்றன .கனவுடன் செல்லத் தொடங்கி முடிவில் வெறும் கையுடன் தனது நாட்டிற்கு செல்லும் நிலையில் நாவல் முடிகிறது. கனவுகளை பின்தொடர்ந்து முடிவில் வெறும் கையுடன் திரும்புகிறான் . இவனுக்கு இணையான இன்னொரு பாத்திரமாக நாவலில் சாத்யகி வருகிறான். அவனுக்கு தன்னை கிருஷ்ணனுக்கு அளிப்பதை தவிர வேறு கனவுகள் இல்லை. கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதே அவனது விருப்பமாக இருக்கிறது .அதற்காக தொழுமர் ( அடிமை) பணியில் இணையும் அளவுக்கு கிருஷ்ணர் மீது அன்…

  18. வெண்முரசு – ஒரு பார்வை வெ.சுரேஷ் வெண்முரசு- ஒரு பொதுப்பார்வை நேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது ஜெயமோகனின் மகாபாரத ஆக்கமான வெண்முரசு. அவரே கூறியிருக்கும்படி, இது 10 வருட செயல்திட்டம். ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் பத்து புத்தகங்கள் வர வேண்டும். ஆனால் தொடங்கிய 7 மாதங்களிலேயே 3 புத்தகங்கள் வந்துவிட்டன. சுமார் 2500 பக்கங்கள் அளவுக்கு எழுதியாயிற்று. இதற்கிடையே பல கட்டுரைகள், கேள்வி பதில்கள், விவாதங்கள், வெண்முரசு பற்றிய கேள்விகளுக்கென்றே தனியாக ஒரு தளம், இலக்கியச் சந்திப்புகள் மற்றும் நெடும்பயணங்கள். ஜெயமோகனின் ஆற்றலும் உழைப்பும், அனைத்துக்கும் மேலாக புறச்சூழல் எப்படி இருந்தாலும் கவனம் குலையாத அவரது படைப்பூக்கமும், இதுதான் யோக மரபில் சொல்லப்படும் ஏகாக்கிர…

  19. வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் ச…

  20. வெண்முரசு நாவல் 17: இமைக்கணம் வெண்முரசு மகாபாரத 26 நாவல் வரிசையில் 17 ஆவது நாவலாகிய “இமைக்கணம்” வாசிப்பை நிறைவுசெய்துவிட்டேன். பகவத்கீதையின் யோகதத்துவங்களை விரிவாகச் சொல்லும் நாவல். மகாபாரதப்போரின் நடுவே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாகவே அறிந்திருக்கின்றேன். எப்படிப் போர் நடுவே அர்ஜுனனின் கேள்விகளுக்கான பதில்களை தத்துவ விளக்கங்களோடு கிருஷ்ணர் சொல்லியிருக்கமுடியும் என்ற கேள்வி இருந்ததால், கீதை ஒரு இடைச்செருகல் என்றே நினைத்திருந்தேன். மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை எனவும் நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமான நாராயணவேதம் எனும் கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்றும…

  21. வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப் சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார். வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவ…

    • 7 replies
    • 2.5k views
  22. வென்றது ஆரியம் துணைநின்றது திராவிடம்: சிறையிலிருந்து சீமான் எழுதும் புதிய நூல் திகதி: 09.08.2010, தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது மீனவனை அடித்தால் நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன் என இன உணர்வுடன் பேசிய நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமானை சென்ற மாதம் தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது.இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கருணாநிதி அரசு மீது கடும் கோபத்தை மீது ஏற்படுத்தியது. நாம் தமிழர் என்னும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மற்றும் ஈழப்பிரச்சனை தொடர்பாக மிகவும் பரபரப்புடன் இயங்கிய சீமான் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக …

  23. வெற்றிச் செல்வியின் "ஆறிப்போன காயங்களின் வலி" புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடையவும் சனக்கூட்டத்தில் இருந்து விலகி அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டு முழுதையும் படித்து முடித்தது மூன்று மணி நேரத்துக்கு முன்புதான். சிட்னியில் மழை கனத்துப் பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுக் கொளுத்திய உச்சபட்ச வெயிலுக்கு எதிர்மாறாகக் குமுறிக் கொட்டிய அந்த மழைதான் இந்த நூலில் வெற்றிச்செல்வி கொணர்ந்த உணர்வின் வெளிப்பாடோ எனத் தோன்றியது. அந்த மழைக் கதகதப்போடு என் கண்ணீரும் சேர்ந்து கொள்ள இலக்கியா இருக்கும் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் நோக்கி நடந்தேன். எதிர்…

  24. பிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது... புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்! ''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.