Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. -- தமிழ்வாணன் கரிசனம் என்பதற்குத் தமிழ் அகராதிகள் அன்பு, கனிவு, பாசம் என்று பொருள் கூறுகின்றன. இதற்கு அருமையான பலன்கள் உண்டு. எங்கள் வீட்டிற்கு மளிகைப்பொருள் கொண்டுவந்து தரும் பையன், குரியர் கடிதத்தைத் தர வரும் நபர், தனியார் தொலைபேசிக் கட்டணத்தை வசூல் செய்ய வரும் ஆள், ஓரு புதுப்பொருளை வாங்கினால் அதை எங்கள் வீட்டிற்கு வந்து பொருத்தி தரும் தொழில்நுட்பக் கலைஞர் என்று எவர் வந்தாலும் இன்முகம் காட்டி “வாருங்கள்” என்பேன். முதலில் தண்ணீர் எடுத்து நீட்டுவேன். “டீ, காப்பி ஏதேனும் சாப்பிடுங்களேன்” என்பேன். ‘தினமும் பல வீடுகளுக்குப் போகிறோம் ஒருவர்கூட இப்படி நம்மை உபசரிக்க(?)வில்லையே’ என்று அவர் எண்ண ஆரம்பிப்பார்.இது ஓர் அடிப்படை மனிதாபிமானம். ஆனால் எதிராளியின் மனத்த…

  2. -- பாலகார்த்திகா ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்து…

  3. - என்.கணேசன் Source : http://enganeshan.blogspot.in/ பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வதுஎன்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்குஉள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பது…

  4. தூக்கில் தொங்கப் போகிறேன் என்று ஒருவன் போவோர் வருவோருக்கெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய குரலை சிலர் கேட்கிறார்கள் பலர் கேட்கமலே போகிறார்கள். சட்டென அவன் தூக்கில் தொங்குகிறான், அவ்வளவுதான் கவனிக்காமலேபோன அனைவரும் அவனைக்காப்பாற்ற ஓடி வருகிறார்கள். இங்கு வாய் மொழி பெறத்தவறிய கவனத்தை அவனுடைய செயல் சட்டெனக் கவர்ந்துவிட்டதை உணர முடியும். உடல் மொழியே 80 வீதமான கவனத்தைத் தொடுவதாக உளவியலாளர் கூறுகிறார்கள். சாகப்போன ஒரு செயலுக்கு இவ்வளவு தாக்கம் இருக்குமானால் வாழ்க்கை முழுவதும் விநாடிக்கு விநாடி நாம் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தற்கொலை முயற்சி ஒரு குறுங்காலச் செயல், அந்த உயிர் தப்பினாலும், உயிர் போனாலும் அதன் மீதான கவனம் கு…

  5. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்... http://www.youtube.com/feature=player_embedded கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’, ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்று சொல்வார் நந்தனார் சரித்திரக்கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார். ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.ஸ்ரீர‌ங்க‌ம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.…

    • 0 replies
    • 14.3k views
  6. ஒவ்வொருவரிடமும் நீங்கள் நல்லிணக்கமாக இருந்தால், அது உங்களுக்கு பல வழிகளில் திரும்ப வரும். அது திரும்ப வருகிறதா, இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கிடைத்த ஆயிரம் விஷயங்களை மறந்துவிட்டு, கிடைக்காத ஏதோ ஒரு விஷயத்துக்காக வேதனை கொள்வது போன்ற முட்டாள்தனமான எண்ணங்கள் ஒருபோதும் உங்களை மேம்படுத்தாது. கடவுள் மட்டும் தனக்குப் படைக்கப்பட்டதை எல்லாம் சாப்பிடத் தொடங்கிவிட்டால், அடுத்த வேளைக்கு அவரைப் பட்டினி போட்டு விடுவோம். உங்களுக்குள் என்ன நடக்க வேண்டுமென்று உங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக் கூடாது. உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம். அது சாத்தியமானதே ஓர் அரசியல்வாதியிடம் கேளுங்கள், பிச்சைக்காரனிடம் கேளுங்கள், கொள்ளையடிப்பவனிடம் கேளுங்கள், யாராக இருந்தாலும்…

    • 0 replies
    • 1.4k views
  7. ஆரியர்களின் பூர்வீக நாடு எது? - பொறியாளர் பி.கோவிந்தராசன்- முன்னுரை: யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இது தென்னிந்தியரின் / திரா விடரின் / சிவனடியாரின் பரந்த மனப் போக்கினைத் தெரிவிக்கின்றது. இத் தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உரு வாக்கியது வேதமதம். இந்த மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்தால் கொடுந் தண்டனை. வேதமதத் தில் ஆரியர்களே முதல் வருணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்யவேண்டும். ஆரியர்களின் ஆரிய மொழியான சமஸ் கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ச…

  8. இறைவனிடம் கையேந்துங்கள்! இஸ்லாமிய பாடலை சாமியார்கள் பாடுகின்றனர் ! கேளுங்கள் பாருங்கள்! https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g

  9. நாடி வகைகள், பார்க்கும் விதம் நோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித் மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம். நாடி எப்படி உண்டாகிறது? நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி …

  10. புத்தர் தவம் செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு 29 வயது. 35வது வயதில்தான் அவர் ஞானம் பெற்றார். இந்தத் தவ வாழ்வின்போது அவர் சந்தித்த தடைகள் பல. முதலாவது உடல் தொடர்பான அசவுகரியங்கள். "சரிபுட்டா, என் தவ வாழ்வு மற்ற தவ நெறிகளில் இருந்து வேறுபட்டது. அதற்கு அடுத்ததாக, பயங்கர நினைவுகள் தந்த தொந்தரவுகளைச் சொல்லலாம்" என்று தன் சீடரிடம் இது பற்றி விவரித்து இருக்கிறார். பயம் தந்த அனுபவம் இந்த இடத்தில் பொதுவாகக் கூறப்படும் பூதங்களைப் பற்றிய கதைகளுக்கு பதிலாக, மனித அனுபவ எல்லைக்கு உட்பட்ட வார்த்தைகளில் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை புத்தர் வெளிப்படுத்தினார். காட்டில் தனிமையில் கழித்த இரவுகளில் திடீரென அவர் மனதில் பயம் பெரிய உருவம் எடுக்கும். "காட்டில் இருந்தபோது அதிகமும் பயந்திருக்க…

  11. தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், எந்த ஈனர்களும் எம்மை அழிக்க முடியுமா...? https://www.facebook.com/photo.php?v=289486967787367&set=vb.126587470724769&type=2&theater

    • 2 replies
    • 1.2k views
  12. புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில், வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? சத்குரு: உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திகொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மஹா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்திகொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்கவிடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும்போது, சில தீய சக்திகள் அங்கே இருக்கலாம். எனவே, ஒரு பூசணிக் காயை நம் வீட்டின் முன் கட்டும்போதே, அந்த இடத்தில் உண்டாகும் நேர்மறை அதிர்வுகள் அந்த இடத்தில் உள்ள எதிர்மறைச் சக்திகளை அகற்றிவிடுகின்றன. நாம் அதைச் சாப்பிடும…

    • 0 replies
    • 685 views
  13. விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..? நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும…

  14. வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவரா நீங்கள்? சந்தோஷமாக வாழ ஆர்வம் இருக்கிறது, ஆனால் அதனை நிஜமாய் மாற்றுவது எப்படி என்கிற கேள்வியும் இணைகிறதா? இதோ, வாழ்வை மாறுபட்ட கோணத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அலசும் வரம் வேண்டுமா? சாபம் வேண்டுமா? மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் வாழ்க்கையின் போக்கை, தங்கள் விருப்பு வெறுப்பைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். "எனக்குப் பிடித்திருப்பதால் இதைச் செய்கிறேன்" என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது முக்கியமில்லை. உங்களைச் சுற்றி இருப்பவைக்கு உங்களைப் பிடித்திருக்கிறதா என்பதே கேள்வி. ஏனென்றால், உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது இரண்டுமே இருவிதமான பிணைப்புகள்தான். இரண்டுமே …

    • 0 replies
    • 1.1k views
  15. ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு குளம் வெட்டினார்,குளத்திற்கு மடை வழியாகத் தண்ணீரைத் திறந்து விட்டார்கள். கால்வாயில் இருந்து மடை வழியாக போன தண்ணீர் எல்லாம் பூமிக்குள் போனதே தவிர குளம் நிறையவில்லை. யார் யாரெல்லாமோ வந்து என்ன என்னவோ செய்தும் குளத்தில் தண்ணீர் தேங்கவே இல்லை. ராஜாவுக்கு ரொம்ப கவலையாப் போச்சு...ஏதோ தெய்வ குத்தமா இருக்குமுன்னு நினைச்சு பரிகாரமும் பண்ணிப் பார்த்தாச்சு.. அப்பவும் குளத்திலை தண்ணீர் தேங்கவே இல்லை.. இப்படி இருக்கும்போது அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் நடந்த விடயங்களை எல்லாம் கேள்விப்பட்டு ராஜாவிடம் போய், ராஜாவே அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்க நான் ஒரு வழி சொல்லுறேன் .. செய்றீங்களா என்றார். ராஜாவும் விளைச்சல் பெருகணும், வெள்ளாமை வெளை…

  16. அன்பே கடவுள் என்று எல்லா மதங்­களும் எமக்கு கற்­று­தரும் இந்­த­வே­ளையில் ஊண்­இ­யல்­பு­க­ளுக்கு அடி­மை­யா­காது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­தி இன்பம் காண்­ப­தாலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி காண­து­டிப்­பதாலும் ஒவ்­வொ­ரு­வரும் அமைதி இழந்து காணப்­ப­டு­கின்­றனர் என மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தெரி­வித்தார். நேற்று முன்­தினம் புதன் கிழமை மன்னார் பொது­வி­ளை­யாட்டு மைதான முன்­றலில் தென் ­ப­கு­தி­யி­லுள்ள அளுத்­கம பேரு­வளைஇ தர்கா நகர் போன்ற இடங்­களில் முஸ்லிம் மக்கள் மீது கட்­ட­விழ்க்­கப்­பட்­டி­ருக்கும் வன்­செ­யலைக் கண்­டித்து இவர்­க­ளுக்­கான சர்­வ­மத பிரார்த்­தனை இடம்­பெ…

    • 0 replies
    • 700 views
  17. அமைதியை அடைவதற்கான அழைப்பு "அமைதி [சமாதானம்] , உங்கள் உள்ளேயே இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் ஒரு வசுவில் ஏறும்போதும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்களுடனேயே இருக்கிறது. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்ட விரக்தியில் நீங்கள் இருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அந்த அமைதி உங்களுடன் வரமுடியாத எந்த இடத்திற்கும் உங்களால் போகமுடியாது. ஏனெனில் அது உங்கள் உள்ளேயே இருந்துகொண்டிருக்கிறது." …

    • 0 replies
    • 1.3k views
  18. உனக்கு வரலாறு தெரியுமா? வா. மணிகண்டன் பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் நான்கைந்து சமணர்களையாவது பார்க்க நேரிடுகிறது. முன்பு திகம்பரர்கள் என்கிற நிர்வாண நிலையை அடைந்தவர்களும் நடந்து செல்வார்களாம். திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட கலாச்சாரக்காவலர்கள் தாக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பார்க்க முடிவதில்லை. இப்பொழுது வெண்ணிற உடையில் செருப்பில்லாமல் நடந்து செல்வபவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்தான் கண்ணில் படுகிறார்கள். அதன் பிறகு எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது. வலுவுள்ளவன்தானே எப்பொழுதும் வரலாற்றை எழுதுகிறான்? சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் க…

    • 3 replies
    • 1.5k views
  19. * நீ விரும்பியதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உன் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு உன்னைப் பாத்திரமாக்கிக் கொள். * முதலில் உன்னுள் உள்ள பொய்யானவை, இருளானவை ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்று. அப்போதுதான் நீ ஒளி பெற்ற தெய்வ சக்தியை உணர முடியும். * "நீங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கடவுளிடம் உறுதிப்பாட்டுடன் சொல்வீர்களானால், உங்களை எப்போதுமே நேர்மையாக இருக்கச் செய்யும்படியான சூழ்நிலைகளை கடவுளே அமைத்துத்தருவார். * தெய்வ சக்தியை, உன்னுள் பிரதிஷ்டை செய்ய விரும்பினால், நீ உடல் எனும் கோயிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். * உங்கள் கரங்களை எதிரிகளிடம் நீட்டாதீர்கள். அவர்கள் முன் அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்ள…

    • 0 replies
    • 1.1k views
  20. இது உண்மையா பொய்யா தெரியாது..... வானவில் என்னும் வலை தளத்தில் படித்தது.... -------------------------------------------------------------------------------------------------------- உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு.பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார். அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார…

    • 3 replies
    • 13.8k views
  21. யாத்திரைப்பத்து சிவன் உலகம் செல்லும் யாத்திரைக்கு அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின், இது, 'யாத்திரைப்பத்து' எனப்பட்டது. பதிகம் 1. திருச்சிற்றம்பலம் பூவார் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளங் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. பொருள் : பூ ஆர் - மலர் நிறைந்த, (பூசைனைக்கு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட எம்பெருமான்) சென்னி - முடியையுடைய, மன்னன் - அரசனாகிய, எம் புயங்கப் பெருமான் - பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியோமை - சிறியவர்களாகிய நம்மை, ஓவாது - இடையறாமல், உள்ளம் கலந்து - உள்ளத்தில் கலந்து, உணர்வு ஆய் - உணர்வுருவாய், உருக…

  22. குண்டலினி,உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. குண்டலினியைப் பற்றி உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நான் விவரிக்கிறேன். ஏனென்றால், இதைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது. அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது, ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது. இந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பலானவர்கள் அந்த மின் நிலையத்தை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை, இல்லையா? அவர்களுக்கு அப்படி என…

  23. சிவபுராணத்தின் படி, ஒருவன் இறக்கப் போகிறான்... என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார். அப்போது சிவன் ஒருசிலவற்றை…

    • 27 replies
    • 14.5k views
  24. நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” -சித்தர் சிவவாக்கியம் நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அவர்தான் சிவவாக்கிய சித்தர். நட்டு வைத்த கற்சிலைகளையே தெய்வம் என்று சொல்லி பூக்களைச் சூடி அலங்கரித்து கோயிலைச் சுற்றி வந்து வாய்க்குள் முணுமுணுத்து மந்திரங்களைச் சொல்லி வணங்குகிறீர்கள். அந்த நட்ட கல்லும் பேசுமா? நாதன் இருப்பதைக் காட்டுமா? சட்டியில் வைத்து சுட்டு சமைத்த கறியின் சுவையை அந்தச் சட்டி, சட்டுவம் அறிய முடியுமா? அது…

    • 0 replies
    • 11k views
  25. வேதாந்தம் எனப்படும் தத்துவம் உபநிடதங்களின் சாரம். வேதங்களின் அந்தமாக விலங்கும் உபநிடதங்கள் இந்தப் பிரபஞ்சம் குறித்தும் அதன் ஆதாரம் குறித்தும் தேடலை மேற்கொள்கின்றன. இந்தத் தேடலில் பல்வேறு தத்துவங்களும் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன. கவித்துவமான முறையில் மிகச் சுருக்கமாகச் சொல்லப்படும் இந்தக் கருத்துகள் பல விதமான விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் வழிவகுக்கின்றன. மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் பற்றிச் சிந்திக்க விரும்புபவர்களுக்குப் பல விஷயங்களை அள்ளித் தருவது வேதாந்தம். ஆத்மா, பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன. உபநிடத சிந்தனைகள் ஆத்மாவைப் பற்றி விளக்குவதற்கு முன்பு நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.