Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 1-9-2013 அன்று நடைபெற்ற நாத்திகர் விழா பேரணி. http://www.youtube.com/watch?v=FyXavk3tdTA&feature=share&list=UUGJTRElIv1hmK2z2dv_GJdQ

  2. உறவுகளே இன்று பல வருடங்களின் பின் என் பாடசாலை நண்பன் ஒருவனை முகப்புத்தகம் ஊடாக சந்தித்தேன் ....இந்த கணங்கள் இந்த புலம்பெயர் வாழ்வில் அனுபவித்த அனைத்து சுமைகளையும் போக்கி புத்துணர்வை தந்தன ........உண்மையில் பழைய அந்த காலங்களுக்கு என்னை அவன் அழைத்து சென்றுவிட்டான் . இன்பங்களும் ,அவற்றின் ஊடாக மனதிற்கு இடம் தரும் வலிகளையும் அவனுடன் உரையாடியதில் இருந்து பெற்றுகொண்டேன் ...............இந்த நாள் இன்பமா, சோகமா என்று தெரியாமல் தத்தளிக்கிறேன் , /intl/en_ALL/images/logo.gif]

  3. ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சி…

    • 45 replies
    • 6.7k views
  4. பெண்கள், கண்களா...? ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த மனைவிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மனதார ஆசிர்வாதம் செய்தனர். மனைவியரை அமர வைத்து கணவர்கள் மரியாதை செய்தது பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. பெரும் திரளான தம்பதியர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள "மனவளக்கலை மன்றம்" வேதாத்திரி மகரிஷி அறிவுத் திருக்கோயிலில், மனைவி நல தின வேள்வி நடந்தது. இதில் ஏராளமான தம்பதியர் கலந்து கொண்டனர். "வாழ்வில் இன்ப துன்பங்கள், ஏற்றம் இறக்கங்கள், நன்மை தீமைகளை மனதார ஏற்று இல்லறத்தில் இணைந்த தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்…

  5. Started by nunavilan,

    புஜ்ஜு ஐ லவ் யூ https://www.facebook.com/video/video.php?v=2140069230247

    • 5 replies
    • 1.1k views
  6. வாங்கோ வாழைக்குலை பழுக்கப் போடுவம்! செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். நம்மூர்களில் கிராமப் புறங்களில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றிலிருந்து நாம் குளிக்கும் போதும், ஆடைகளைத் துவைக்கும் போதும் வெளியேறுகின்ற…

  7. டெல்லி: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன், அவரது சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் அது குற்றமாகாது என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாலில் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) கூறுகிறது. இந்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இருந்தால் அவர்களுக்கு இடையிலான உடல் ரீதியான உறவு குற்றச் செயலாகாது என்று கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. டீன் ஏஜ் செக்ஸுக்கு முழுமையாக தடை கிடையாது இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையமும், டெல்லி காவல்துறையும் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவில், 18 வய…

  8. விடுதலை என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளனவாயினும் விட்டு விடுதலையாதல் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே எம் புலன்களும் மனதும் ஆடக்கி ஆளப்படுகின்றன என நான் எண்ணுகிறேன். மனைவியிடமிருந்து, கணவனிடமிருந்து, பிள்ளைகளிடமிருந்து, காதலன் காதலியிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தன் பொறுப்பிலிருந்து விடுதலையாகி நின்மதியாக இருக்கவே பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அவ் அரிய நிலை பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது அதீதமாக அவர்பால் ஈர்ப்புக்கொண்டு அவரும் எம்மேல் அந்தளவு அன்பு கொண்டுள்ளார் என எண்ணி அவர்களுடன் உரையாடுவதைப் பேறாகவும் எண்ணி உரையாடிக்கொண்டிருப்போம். ஆனால் அன்பு என்பதும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது என்பது…

  9. அப்போது நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த வருடம் காபொத சாதாரண பரீட்சைக்காக மாலையில், சனி ஞாயிறுகளில் எல்லாம் டியூசனுக்குப் நண்பிகள் சேர்ந்து போவோம். கொஞ்ச நாட்களாக புதிய முகமொன்று எங்களுக்குக் காவலுக்கு பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. ஆள் பார்க்க அழகாகவும் உயரமாகவும் இருந்தான். ஆனால் எதோ ஒரு குறை ஆளில் உள்ளதாக மட்டும் எனக்குப் பட்டதன்றி என்ன என்று விளங்கவில்லை. பதின்நான்கு வயது எல்லாவற்றையும் விளையாட்டாக எடுக்கும் வயது. எங்களில் ஒருத்தியை சைட் அடிக்கிறான் என்று மட்டும் தெரிகிறது. ஆனால் யாரை என்று கொஞ்சநாள் புரியவில்லை.நான் அவனை மறித்துக் கேட்கட்டுமாடி என்றதற்கு இருவரும் ஒருசேர வேண்டாம் என்றனர். சரி என்ன நடக்கிறது என்றுதான் பொறுத்திருந்து பார்ப்போம…

    • 55 replies
    • 4.4k views
  10. திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும். அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் நபர், மிகவும் நெருங்கிய நண்பனாகவோ/தோழியாகவோ இருந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டா? ஆம், தெரியாதவரை திருமணம் செய்து கொண்டு, மனம் ஒத்துப் போகாமல் இருந்து, அடிக்கடி சண்டை போடுவதை விட, நன்கு புரிந்து கொண்டு, காதல் மலர வைத்த தோழன்/தோழியை மணந்தால், நிறைய …

    • 12 replies
    • 1.3k views
  11. தெரிந்து கொள்வோம் 1.சமாதானம் என்பதற்குரிய நிறம். வெள்ளை 2. முதன் முதல் உலகில் முப்படையுடன் ஆட்சிபுரிந்தவன் சிவதாசன் ஜஇராவணன்ஸ 3. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு. 1945ம் வருடம் 4. முதன்முதல் கணிணியைப் பாவனைக்கு அறிமுகப்படுத்திய நாடு. அமெரிக்கா , 1977ம் வருடம் 5. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறநூல். திருக்குறள், 600 மொழிகளுக்குமேல். 6. உலகில் பெரிய தேசியகீதம் உள்ள நாடு கிரேக்கம் 7. உலகில் சிறிய தேசியகீதம் உள்ள நாடு ஐப்பான் 8. உலகின் மிகப்பெரிய ஐனநாயகநாடு இந்தியா 9. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் 10. உலகின் மிகப் பெரிய இராணுவம் கொண்ட நாடு சீனா மிளகின் பெருமை பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். இது தமிழர் முதுமொழி.முதன்முதல் மிளகின் சிறப…

  12. வேட்டி உடுப்பது எவ்வாறு என்று காட்டும் யுரியூப் இருந்தால் இணையுங்கேன். இது பல பேருக்கு உதவியாய் இருக்கும். வேட்டிக்கு என்ன ஆங்கிலப் பெயர்?

  13. மனைவி அமைவதெல்லாம்....? திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒருவித உற்சாகத்துடனும், பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாளே கிடையாது. வரப்போகும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும், கற்பனைகளும் சுவாரசியத்தை இன்னும் கூட்டியது. நிறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன்...வருகிறவளுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும்..ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தால் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது. கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து, பார்வையில் படும்படி வைத்தேன்.. இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன். எஸ்.ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன். கேரம், செஸ்…

  14. நான் ஒரு பெண் – ஜக்குலின் அன் கரின் நான் ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள். ஏனென்றால் நான் ஒரு பெண். பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள் என்னையும் என் போன்றவர்களையும் இந்தச் சமூகம் நோக்குகின்ற முறைக்கெதிராகக் குரல் எழுப்புமாறு நான் நிப்பந்திக்கப்படுகிறேன். பெண்களை முழுமையாகவும், தனிநபராகவும், ஆண்கள் அனுபவிக்கும் முறைக்கெதிராகவும் நான் குரல் எழுப்புகிறேன். பெண்களைச் சிறுமைப்படுத்திப் பார்க்கும் முறை பெண்கள் கூட தம்மை அப்படிப் பார்க்கும் படி செய்துவிடுகின்றது. நான் ஒரு பெண். மற்றப் பெண்களையும் போலவே அறிவுள்ளவள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள், எனக்கென சொந்தமான புத்தியும் கொண்டவள், என்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களில் தங்கி நிற்பதற்க…

  15. மூன்று என்ற சொல்லினிலே... மிகக் கடினமானவை மூன்றுண்டு: 1. இரகசியத்தை காப்பது. 2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது. 3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது. நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்: 1. இதயத்தால் உணர்தல். 2. சொற்களால் தெரிவித்தல். 3. பதிலுக்கு உதவி செய்தல். மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு: 1. சென்றதை மறப்பது. 2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. 3. வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது. இழப்பு மூன்று வகையிலுண்டு: 1. சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு. 2. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. 3. திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு. உயர்ந்த மனிதனின் வாழ்வ…

  16. மன உறுதி பெற பயிற்சி… Author: கந்தசாமி இல.செ மன உறுதிக்குப் பயிற்சி இன்றியமையாதது. செய்ய நினைக்கும் செயலை உடனே தொடங்குவது, எடுத்ததை முடித்துவிட்டு, அடுத்த செயலுக்குச் செல்வது, நமக்குத் தேவையில்லா தவற்றை ஒதுக்கி விடுவது, விரதங்கள் மேற்கொள்வது ஆகியவை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளாகும். 1. இப்பொழுதே தொடங்குவோம் மன உறுதியை வளர்த்துக் கொள்ள பல்வேறு வழிகள் இருப்பினும் முதல் வழி, செயல் செய்வதுதான், அதற்கு முதற்படி செயலில் இறங்கிவிடுவதுதான், செயலைத் தொடங்கி விட்டால் போதும், செய்யும் ஆற்றல் தானாக வளரத் தொடங்கிவிடும், தொடர்ந்து செய்யும் வழிமுறைகளும் விளங்கத் தொடங்கும் இன்றே – ‘ இப்பொழுதே ‘ – தொடங்குங்கள் – இது முதற்படி. தொடங்குவதற்கு முன் நமது இலட…

    • 0 replies
    • 1.8k views
  17. வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு பின்னர் அனுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான். ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதில்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவறல்ல. ஆனால் அது மட்டுமே எல்லாம் என்றாகி விடாது. ஆகவே வெறும் வெளித்தோற்றத்தை மட…

  18. உளவியல் நோக்கில் காதல் உளவியல் என்றால் என்ன? உள்ளம்(மனம்) பற்றிய அறிவியல். அப்படியாயின், உள்ளம்(மனம்) என்றால் என்ன? மூளை இயங்கும் செயலை உள்ளம்(மனம்) என்று ஒப்பிடுகிறார்கள். எனவே, உள்ளம்(மனம்) என்றால் மூளையுடன் தொடர்புடையது. இனி, காதல் என்றால் என்னவென்று தெரியுமா? அதுதானே, இதுவரை வரையறுத்துக் கூற முடியாதுள்ளது. ஆயினும், மூளையில் சுரக்கப்படும் ஓமோனின் தூண்டுதலால் ஏற்படும் நடத்தை மாற்றமே காதல் என அறிவியலாளர்கள்(விஞ்ஞானிகள்) கூறுகிறார்கள். ஒக்சிரோசின்(Oxytocin Hormone) என்னும் ஓமோன் மூளையில் சுரப்பதால் தான் தாய்-பிள்ளை உறவில் அதிக அன்பு ஏற்படுகிறது. இதுவே காதல் ஓமோன் என்றும் அழைக்கப்படுகிறது. (ஆயினும், பாலுறவில் மகிழ்வு மற்றும் பிரசவலி ஆகியவற்றுடன் இதற்குத் …

  19. வீட்டிற்கு வந்த உறவினரிடம் கணவர் கூறினார், ”என் மனைவி கேட்டதை எல்லாம் நான் நிறைவேற்றி வைத்திருக்கிறேன். முடியாது என்று நான் ஒரு போதும் சொன்னது இல்லை.” உறவினரோ அவரை மனமார பாராட்டி அந்தப் பெண்ணைப் பார்த்து 'நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி” என்று கூறினார். அதற்கு அந்தப் பெண் 'ஆம்' என்று தலையசைத்து ஒரு புன்முறுவல் மட்டும் பூத்தார். அவளது மனம் அமைதியாகச் சொன்னது “என் கணவரால் செய்ய முடிவதைத் தான் நானும் கேட்பேன்” என்று. இத்தனை அழகான, மென்மையான ஒரு உலகம் தான் பெண்ணின் இதயம். அது ஆராயப்படவேண்டியது அல்ல.. ரசிக்கப்படவேண்டியது.. பாதுக்காக்கப் படவேண்டியது.. http://www.ilaignan.com/1917 ம்ம்...திரியை கொளுத்திப் போடுவம்...பத்திக்கிதா...? இல்லை ஊத்திக்கிதா...?ன…

    • 21 replies
    • 2k views
  20. ஒருவர் பெற்றவரால், சுற்றத்தால், உறவினரால், நண்பரால்,கணவன் மனைவியால், காதலன் காதலியால், பிள்ளைகளால், ஆசிரியர்களால், சக மாணவர்களால்,ஏன் முகம் தெரியாத யாரோ ஒருவரால் கூட நாம் நிராகரிக்கப்படலாம். மற்றவரால் நாம் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் வேதனை, ஏமாற்றம், தவிப்பு என்பன எம்மை வாழ் நாள் பூராகவும் நினைவில் வந்து கொல்லும் வல்லமை கொண்டது. சிலர் அவற்றை உடனே மறந்துவிட்டாலும் எப்பொழுதோ ஒருமுறை நினைவில் வந்து குதியாட்டம் போடுவதைத் தடுக்கவே முடியாது. சில நிராகரிப்புகள் காரணமின்றியே எம்முடன் கூடவே இருந்து தினமும் கொல்லும் தன்மை வாய்ந்தது. எம்மை எந்த வேலையும் செய்ய விடாது மனதை அழுத்தி எம்மை நோய்க்கு உட்படுத்தும். தூக்கம் தொலைக்க வழிவகுக்கும். இன்னும் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம்.…

  21. அப்துல்கலாம் நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனாக இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். “எல்லாம் தயாரா? பிரச்சினை ஒன்றுமில்லையே?” திரும்பத் திரும்ப உதவியாளர்களை கேட்டுக்கொண்டே இருந்தார். “எல்லாம் சரியாக இருக்கிறது சார். நிச்சயமாக நாம் வெல்வோம்” அவர்களது பதிலில் திருப்தியடைந்தாலும் ஏதோ ஒன்று அவருக்கு இடித்துக்கொண்டே இருந்தது. ஆகஸ்ட் 10, 1979. ஸ்ரீஹரிகோட்டா. முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி பூமியின் சுற்றுப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். ரோகிணி என்பது சோதனை சேட்டிலைட். பிற்பாடு இந்தியா செலுத்த திட்டமிட்டிருக்கும் சேட்டிலைட்டுகளின் தலைவிதியை இந்த நாள்தான் தீர்மானிக்கப் போகிறது. திட்ட இயக்குனராக இருந்த அப்துல்கலாமும் அவரது குழுவினரும் ஏழு ஆண்டுகளாக இரவுபகல…

  22. வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!! யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா?இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். .சிறியோர் முதல் பெரியோர் வ…

  23. இன்று இணையத்தில் கடலை போட்டுக் கொண்டும் சோழம் கொறிச்சுக் கொண்டும் இருக்கும் போது கண்ணில் அகப்பட்ட கட்டுரை இது. சரி, எதுக்கும் இருக்கட்டும் என்று இங்கு கொண்டு வந்து போட்டுள்ளேன். கட்டுரையாளர் வருண் நுனிப்புல் மேய்கின்றாரா அல்லது உண்மையிலேயே நாங்கள் அப்படியா என்று ஒரு சின்ன டவுட் ---------------------------------- ஈழத்தமிழர்களும் நம்ம ஊர் பார்ப்பனர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா? வியாசன்னு புதிதாக ஒரு ஈழத்தமிழர் அதிகமான பதிவுகளும் விவாதங்களும் செய்கிறார். இவர் பதிவுகளை, விவாதங்கள வாசிக்கும்போது ஏற்கனவே எழுந்த சில சிந்தனைகள் மறுபடியும் வருகிறது. வியாசன்.. * தமிழர்கள் தமிழர்களையே மணக்க வேண்டும் என்றார். * பரத நாட்டியத்தை தமிழர்கள் புறக்கணிக்கக்கூடா…

  24. திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று� ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள். முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..! திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உற…

    • 25 replies
    • 12.1k views
  25. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில், தமிழ்நாட்டு வாழ்க்கை, எவ்வாறு இருந்தது என்பதை,ஒரு வெள்ளையரால் எடுக்கப் பட்ட, இந்தக் காணொளி,தெளிவாகக் காட்டுகின்றது! https://www.facebook.com/photo.php?v=10151302536751608 மூலம்: முகநூல்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.