Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by அபராஜிதன்,

    'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு! இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா? அப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்! சின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்! அப்பாக்களின் அட்வைஸ்களை சிறுவயது முதல் கேட்டுக் கொண்டிருந்ததாலோ என்னவோ அப்பா எதையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை,…

    • 8 replies
    • 1.8k views
  2. 11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..! தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே சுடு செய்தியாகப் போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..! மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற…

  3. மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் மொத்த பிறப்பிடமான உலகத்தின் வெற்றிகரமான, தலைசிறந்த இந்திய தொழில் முனைவோர் கிரன்மஜும்தர் ஷா ஆவார். இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் 1953 ஆம் வருடம் பெங்களூரில் மார்ச் மாதம் 23ந்தேதி பிறந்தார் இவர் தனது பள்ளி படிப்பை பிஷப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்1968ம் வருடம் முடித்தார். பிறகு மருத்துவ படிப்பை படிக்க நினைத்தார்.ஏனோ அவர் கவனம் உயிரியல் பாடத்தில் சென்று பி.எஸ்.சி ஜுவாலஜி ஹானர்ஸ் படிப்பை மவுண்ட் காராமல் கல்லூரியில் பெங்களூரு பல்கலைகழகத்தில் 1973ம் வருடம் முடித்தார். பிறகு தனது பட்டமேற்படிப்பை மால்டிங் மற்றும் புரூவிங் கல்வியை பல்லாரத் கல்லூரி மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் 1975ம் ஆண்டு முடித்தார்.மெல்போனி…

  4. ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும். பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும். ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டு…

  5. முக்கியமாக லண்டன் சிவன் கோவிலில் நடப்பவைகள்பற்றி எழுதவேண்டும் என்று ஜோசித்துக்கொண்டு இருந்தேன்.... நேரமும் இல்லை கொஞ்சம் பயமாகவும்தான் உள்ளது... எவனாவது இருட்டு அடி கொடுக்கிறானோ தெரியவில்லை ஆனாலும் பயந்தால் ஒன்றுமே பண்ண முடியாது... சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்..... கன காலமாக சிவன் கோவில் சின்ன இடத்தில் இருந்து பெரிய கோவிலாக கட்டி அமைத்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ... கோவில் கட்டும்போது அய்யர் தேவராம் பாடுகிறது மாதிரி ஓவ்வொரு நாளும் பாட மக்களால் உருவாக்கப்பட்டதுதான் சிவன் கோவில்... பணம் இருந்த ஒரு சிலர் கூடுதலாக காசு போட்டிருக்கலாம்... ஒரு சிலர் தனி தனியாக உள் வீதி எடுத்து ஓவ்வொரு பக்கமாக கட்டினார்கள்.... கோவில் கட்டி கும்பாவிசேகம் நடந்தது இந்த வருட…

  6. 'குடி குடியைக் கெடுக்கும்': ஸ்காட்லாந்தின் புதிய முயற்சி ஸ்காட்லாந்தில், மதுபாவனையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள், உடல்நலக் குறைபாடு பிரச்சனைகள் மற்றும் இந்தக் காரணங்களால் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பவர்கள்- இப்படியான விடயங்களுக்காக ஆண்டுக்கு ஐந்தரை பில்லியன் டொலர்கள் அதாவது 550 கோடி டொலர்களுக்கும் அதிகளவில் அரச பணத்தில் செலவிடப்படுவதாக அரசு கூறுகின்றது. அங்கு 20 இல் ஒரு மரணம் மதுபாவனையுடன் தொடர்புடையதாக உள்ளது. இதனால் ஸ்கொட்லாந்து குடிப்பழக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. மதுபானத்தின் விலைக்கும் அதன் பாவனைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிவதாக ஸ்காட்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நிக்கோல…

    • 0 replies
    • 942 views
  7. பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம். பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை. தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அ…

  8. Started by akootha,

    அந்த அறை முழுவதும் ஒரே அமைதி ஒரே சோகமயம் எடுத்திருப்பதோ வெறும் 183 ரன்கள் அறையில் நுழையும் போது அறையின் முழு சூழ்நிலையையும் புரிந்து கொண்டு எல்லோரையும் அழைத்து சிரித்த முகத்துடன் பேசத்துவங்குகிறார் கபில்தேவ் "நம்மைப் போன்ற சிறந்த வீரர்களை அவர்களால் 183 ரன்களுக்கு அவுட் செய்ய முடியுமென்றால் நம்மாளும் முடியும் நம்பிக்கையோடு விளையாடுங்கள்" என்றார். அன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு உலககோப்பை பெற்று தந்த ஆட்டம். உலகமுழுவதும் பொருளாதார பெருமந்தம் எங்கு பார்த்தாலும் வேலை நீக்கம்,பங்கு சந்தைவீழ்ச்சி.இது தீர 5 வருடங்கள் ஆகும் என் உலக வல்லுனர்கள் எல்லாம் கை விரித்தனர்.ஆனால் ஒரு மூலையில் மட்டும் "வெற்றி உனது வெற்றி உனது" என ஒரே ஆனந்த தாண்டவம் ஒரு சின்ன நம்பிக்கை சுடர் மட்ட…

    • 0 replies
    • 1k views
  9. Started by வீணா,

    சே குவேரா வாழ்க்கையை வேறு எந்த இயக்குனர் படமாக்கியிருந்தாலும், கொஞ்சம் செயற்கைத்தனத்தோடு அதிமனிதராகவே அவரை சித்தரித்திருப்பார். ஏனென்றால் பொதுவில் அவருக்கு இருக்கும் பிம்பம் அத்தகையது. “சே” புரட்சியின், கட்டுடைத்தலின், எதிர்ப்பின், கலகத்தின் மாபெரும் சின்னமாகவே ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இந்தப் படத்தில் மிகமிக யதார்த்தமாக அவரை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் ஸோடர்பெர்க்-கும் நடிகர் பெனிசியோ டெல் டோரோ-வும். சமகாலத்தில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் டெல் டோரோ என்பதை அவர் இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். கேண்ஸ் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டாலும், ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்றவை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. சே குவேரா பா…

  10. இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குப் ‘சிறிய பையன்’(Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன் தான் அவன். வட அமெரிக்கா தன் கொடுரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுவதாயிரத்திலிருந்து என்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டுப் போனார்கள். அ…

  11. Started by arjun,

    இப்ப கொஞ்ச நேரம் முதல் சொப்பிங் செய்ய WAL-MART இற்கு போனேன் ,அங்கு எனது ஒரு அக்காவை பிள்ளைகளுடன் சந்தித்தேன்.அவரது மூத்தமகன் மகன் மனிபாலில் பல்வைத்தியம் படித்துவிட்டு கனேடியன் லைசன்ஸ் சோதினை எடுத்துவிட்டு நிற்கின்றார் ,மகள் கரீபியனில் மருத்துவம் படிக்கின்றார் .அவர்கள் வீட்டை விட்டு பெரிதாக வெளிக் கிடுவதில்லை.பெற்றோருடன் ஒட்டிப்பிடித்த படி,நெடுகிலும் அப்படித்தான் . எனது வீட்டில் இந்த மாதம் முதல் மனைவி இரவு வேலை, ஆள் பத்துமணிக்கு தான் வரும்.பெரியவர் வந்தார் வெள்ளி இரவு என்பதால் நண்பர்களுடன் பறந்துவிட்டார்,திரும்பிவர இனி இரவு பத்து,பதினொன்று ஆகும் .சின்னவர் வந்தார் இரண்டு பீ.எஸ் ,3 கொன்றோலர்களையும் ,பாஸ்கேட்பால் கேமுகளையும் கொண்டு பக்கத்துவீட்டு நண்பரிடம் போய்விட்டார் த…

  12. இது நான் இருக்கும் இடத்தில் நடந்தது. சிட்னி அகதி முகாமில் தூக்கு மாட்டி இறந்தபின் இதை எழுதனும் போல் இருந்திச்சு. போன வருடம் 15க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் குடித்துவிட்டு ஒரு போட்டி, மின் கம்பத்தில் ஏறி கம்பியைத் தொட்டால் $1000. ஒருவன் ஏறி இறங்கி வந்தபின் அவன் சொன்னான் தொட்டுவிட்டேன் என்று சிலர் இல்லையென பயங்கர அடிபாடு, அதில் சிலர் வெளிக்கிட்டு வீட்டை போக அதற்கு முதலே அங்கு போய் காவல் நின்று திரும்ப அடிபாடு அதில் ஒருத்தனுக்கு கத்தி குத்து, பொலிஸ் வர கில்லி படம் மாதிரி நண்பேண்டா என்று கூறி தவிர்த்துவிட்டார்கள் ஜெயிலை, பக்கத்து வீடுகளுக்கு எப்படி இருந்திருக்கும் இவர்களின் செயல். இவர்கள் அகதி முகமில் இருந்து வெளி வந்தவுடன் ப்ரிட்ஜ், வசிங் மிசின், தளபாடங்கள்,…

  13. அண்மையில் ஒரு பத்திரிகைச்செய்தி எனது சிந்தனையைக் கிளறி விட்டிருந்தது . ஒருவர் தனது முயற்சிகள் தோல்வியடையும் பொழுது , அதன் எதிர்வினையை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார் . இதுபற்ரிய உங்கள் கருத்துக்களை , கள உறவுகளாகிய நீங்கள் பதியுங்கள் . செய்தியின் சாரம் பின்வருமாறு போகின்றது ........................................ ஜேர்மனிய பெர்லின் நகரில் 100க்கு மேற்பட்ட கார்களை தீ வைத்து கொளுத்திய நபரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பற்று கடனில் திண்டாடிய 27 வயது நபரொருவரே இவ்வாறு விலையுயர்ந்த கார்களை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். 3 மாத காலப் பகுதியில் மட்டும் 67 ஆடம்பர கார்கள் அந்நபரால் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இத் தீவைப்பு சம்பவங்களுக்கு சி…

  14. சம்பிரதாயங்களுக்கு வெளியால் ஒரு தீபாவளி மற்றவனைக் கொன்று விளக்கேற்றும் மடமைத் தீபாவளியை அகற்றி யாரையுமே கொல்வதில்லை என்ற புதுமைத் தீபாவளியை இன்று பிரகடனப்படுத்துவோம்... இன்று ஈழத் தமிழனுக்கு ஒரு புதுமைத் தீபாவளி..! நாமெல்லாம் புது மனங்களுடன் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல அதிலிருந்து விடுபட்டு அட.. நமக்கும் தீபாவளி இருக்கிறதா என்று சிந்திககிறார்கள்… தீபாவளியை நாம் கொண்டாடலாமா இல்லை அமைதியாக இருக்கலாமா என்ற எண்ணங்கள் பலரிடையே இன்றும் இருக்கிறது. புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகளில் வரும் தொலைக்காட்சிகளும், இணையங்களும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தி அட.. தீபாவளி நடக்கிறது என்று பிரச்சாரம் செய்து வருகின்ற…

  15. அன்பான கள உறவுகளுக்கு!!!!!!!!!!! நீண்டகாலமாக என்னுள் உறுத்துகின்ற ஒரு விடையத்தை உங்களுடன் பகிருகின்றேன். எங்களுக்கு எமது அப்பா ,அம்மா நல்ல அழகான தமிழ்பெயராக வைத்திருப்பார்கள் . அவை பெரும்பாலும் தங்களது மூதாதையரை ஞாபகப்படுத்தவோ ,அல்லது மத நம்பிக்கையின் பேரிலேயோ அமைந்திருக்கும் . ஆனால் நீண்ட அழகான பல அர்த்தங்களைத் தரக்கூடிய பெயர்களையே எமது பெற்ரோர்கள் எங்களுக்குச் சூட்டி எங்களை அழகு பார்த்தனர் . பல காரணங்களுக்காக இடம் பெயர்ந்த நாங்கள் பல காரணங்களுக்காக எமது பெயர்களை குறுக்கி, அல்லது பிரஜாஉரிமை கிடைத்தவுடன் ஐரோப்பியப் பெயர்களை வைக்கின்றோம். இதற்கு காரணங்களாக வேற்ரு இனத்தவர்கள் தங்கள் பெயரைக் கூப்பிடக் கஸ்ரப்படுகின்றனர் என்று ஒரு வியாக்கியானத்தைத் தருகின்றார்கள் . கோ…

  16. எனக்கு தெரிந்தவர்கள் ஒரு அம்மாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான்... வேறு பிள்ளைகள் இல்லை..... அந்த அம்மாவின் கணவரும் இறந்து விட்டார் சில வருடங்களுக்கு முதல்.... எல்லோரும் ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் கண்டிப்பாக நினைப்பார்கள் ... ஆண்கள் கல்யாணம் பண்ணி மனைவிக்கு பின்னால் போனாலும் பெண் குழந்தை தன்னை வைத்து காப்பாற்றும் என்றுதான் நினைப்பார்கள்...அந்த அம்மாவும் கற்பனையோடும் மகள் தன்னுடன் கடசிவரை இருப்பாள் என்றுதான் நினைத்து இருப்பார்... மகளை படிக்கவைத்து லண்டனில் கல்யாணம் பண்ணி அனுப்பி வைத்தார் அவர் கணவர் போன பின்பும்... மகளும் இங்கே வந்து நல்ல வசியாகதான் வாழ்கிறார்.. அவருக்கு பிள்ளைகளும் பிறந்தது... பிள்ளைகள் பிறந்தபோது அவங்கள் அம்மா த…

  17. தாயகத்திர் கராச்சார சீர்கேடுகள் துரித முறையில் அரங்கேறிக்கொண்டு செல்லுகின்றது . சிங்கள இனவாத அரசினால் இது எங்கோ சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு பக்கம் தாயகத்தில் உள்ளவர்கள் காணாததை கண்டவுமன் அளவு மீறி செயல்படுகின்றனர். மறுபக்கம் புலம்பெயர் தமிழர்கள் ... எமது பணத்திமிரை தாயகத்தில் அரங்கேற்றுகின்றோம். அப்பாவிகள் வயிற்றிலும் அடிக்கின்றோம். 100ருபாவிற்கு விற்கும் பொரளை 200ருபாவிற்கும் வாங்குகின்றோம் பாவம் அங்கு வாளும் ஏளைகள்...விட்டுவிடுங்கள் அவர்களை.. காமத்திற்காக தாயகம் செல்லும் இன்னெரு கூட்டம் அட பாவிகளா ... அங்கு தத்தளிக்கும் பெண்களும் உங்கள் சகோதரிக்ள தானடா ...பணத்தை கஸ்டப்பட்ட பெண்னின் தாய் தந்தையிடம் காட்டி இவர்களுக்கு கை படாத றோஜா வேணுமாம் அதற்கு பல…

    • 6 replies
    • 1.1k views
  18. 1,10,19,28 திகதிகளில் பிறந்தவர்களுக்கு உடன் பழகுபவர்களும் குடும்பத்தில் உள்ளவர்களும் கைராசிக்காரர் என்று உங்களை நினைப்பார்கள். எந்தக் காரியத்தை உங்கள் கையால் தொடங்கினாலும் அது நல்ல சக்சஸ் தரும் என்று அனைவரும் நம்பும் நிலையில் உங்களுக்கு என்று ஒரு காரியம், ஒரு முயற்சி தொடங்க நினைத்தால் அது மட்டும் சக்சஸ் கோமல் போவது ஆச்சரியத்தை, அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கும். தன்னால் பிற மனிதர்கள் எவ்வளவோ நல்ல பயனை அடையும்போது, தன் அதிஸ்டம் தனக்கு வேலை செய்யாமல் போகிறதே என்று ரொம் வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். மற்ற ஒருவருக்காக ஒரு காரியத்துக்கு போகிறீர்கள். அக்காரியம் உடனே கைகூடுகிறது. உங்களுக்காக அதே காரியத்துக்கு போகிறீர்கள் உடன் முடியாமல் நாளை மறு நாள் என்று இழுபறி நிலையாகு…

  19. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும்இ பக்தனாகவும்இ இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக…

  20. ஊரில தங்கட பெண் பிள்ளைகளை ஒழுக்கமாகவும்,ரீசன்டாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் தங்கட பிள்ளைகளை தனிய பெண்கள் மட்டும் படிக்கும் மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுவார்கள்[அந்தப் பாடசாலையில் படித்தால் போல அந்த பெண்கள் எல்லாம் ஒழுக்கமாய் இருக்கிறார்களா என கேட்கக் கூடாது.] அதே மாதிரி புலம் பெயர் நாட்டிலும் பல பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுகிறார்கள் இது ஆரோக்கியமானதா? என்னைப் பொறுத்த வரை படிக்கிற பிள்ளை எங்கேயும் படிக்கும் அதே மாதிரி ஒழுக்கமாய் இருக்க விரும்புவர்கள் கலப்பு பாடசாலையில் படித்தாலும் ஒழுக்கமாய் இருப்பார்கள்.தவிர ஆண்,பெண் சேர்ந்து படிக்கும் போது ஆண்,பெண் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் போகும்...பெண்கள் தைரியசாலிகளாக,எதற்கும் வெட்கமி…

  21. மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல் கனகி புராணம் எழுதியவர்: நட்டுவச் சுப்பையனார் பிள்ளையார் காப்பு 1. சித்திர மறையோர் வீதி சிறந்திடும் வண்ணையூர்க்குக் கத்தனாம் வைத்தீசர்க்குக் கனத்ததோர் நடனஞ்செய்யும் குத்திர மனத்தளாகுங், கொடியிடை, கனகி நூற்குப் பித்தனாயுலா மராலிப் பிள்ளையான் காப்பதாமே நாட்டுப் படலம் 2. தடித்தடி பரந்திட் டெழுந்து, பூரித்துத், தளதளத் தொன்றோ டொன்றமையா(து) அடர்த்திமையாத கறுத்த கணதனால் அருந்தவத் தவருயிர் குடித்து, வடத்தினு ளடங்கா திணைத்த கச் சறுத்து, மதகரிக் கோட்டினுங்கதித்துப், படத்தினும் பிறங்குஞ் சுணங்கணி பரத்து, பருமித்த துணைக் கன தனத்தாள் 3. நடந்தா ளொரு கன்னி மாராச கேசரி, நாட்டிற் கொங்கைக் குடந்தா ந…

  22. தோல்வி என்பதே இல்லை வெற்றி வெளிச்சம் - இயகோகா சுப்ரமணியம் உயர்வும் சரிவும் காணாத் தொழில்கள் நமது பூமியில் எதுவுமில்லை; உணர்ந்து தெளிந்து முனைந்தவர் தோற்ற சரித்திரம் இங்கே என்றுமில்லை. ” அவர் தொட்டது துலங்கும். தொட்ட தெல்லாம் பொன்னாகும்” என்று பொதுவாக வெற்றி பெற்றவர்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடுவது உலக வழக்கம். வெற்றி பெற்ற மனிதர்களோடு நாம் போற்றும் அத்தனைபேருமே தோல்விகளை பல முனையில் சந்தித்து, அதையும் மீறி வந்தவர்கள்தாம். ”என்னதான் இருந்தாலும் உங்க சாதனை அற்புதம் சார்” என்று பாராட்டும் போது, ”அய்யோ. அதெல்லாம் இல்லீங்க. கூட்டு முயற்சி. ஆண்டவன் செயல்” என்று அவர்கள் சொல்லும்போது, ”ஆஹா. என்ன ஒரு அடக்கம், பெருந்தன்மை” என்று மேலும் அவரைப் பாராட்டுவோ…

  23. நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறந்த குடிமகனாய் இரு என்றார் மகாத்மா காந்தி. அந்த அருமையான போதனையை நம்மில் பலர் தவறாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நானும் சிறந்த குடிமகன்தான் என மார்தட்டிக்கொள்பவர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் தலைகால் புரியாமல் மயங்கி விழுவதும் உண்டு. அப்படி அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு எங்கே இருக்கிறோம்,எப்படி இருக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் விழுந்து கிடக்கும் அத்தகையதொரு நபரையே படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் விழுந்துகிடந்த 'குடி' மகனை எமது செய்தியாளர் தனது கெமராவில் க்ளிக் செய்து கொண்டார். உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அசு…

  24. குதி உயர்ந்த செருப்பு நல்லதா? கெட்டதா? http://4.bp.blogspot.com/_tX4buy0NvMU/S0L6UTVKqpI/AAAAAAAABRo/6Rxd5fFuPYc/s1600-h/image002.jpg

  25. மேற்கு நாடுகளில் நேர முகாமைத்துவம் (Time Manage Ment) வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது. நேரத்தை முறையாகக் கையாளும் போது சோர்வுக்கும் பதற்றத்திற்கும் இடம் இல்லாமல் போய் விடுகிறது. உரிய நேரத்தில் பணிகளை வேகமாகச் செய்து முடிக்கும் போது ஓய்வும் நிம்மதியும் கிடைக்கின்றன. வீட்டுப் பெண்ணாக இருந்தாலென்ன, வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலென்ன இருவருக்கும் நேர முகாமைத்;துவம் அவசியம் தேவைப்படுகிறது. ஆரம்பிக்கும் போது கடினமாக இருக்கலாம் சிறிது நாட்களில் அதன் அனுகூலங்களை அனுபவிக்க முடியும். குடும்பத்தினரைக் குறிப்பாக இளையோர்களை நேர முகாமைத்;துவக் கட்டுப்பாட்டில் பழக்கி விட்டால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும். எமது தாயக வாழ்வைத் துறந்து புலம் பெயர்ந்த வாழ்வை மேற்கொள்ளும் எமக்கு மேற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.