உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26856 topics in this forum
-
ஒரு கறுப்பனிடமிருந்து அமெரிக்காவை காப்பாற்றும்படி கோஷம் .. கேள்வி – பதில் வடிவில் அமெரிக்கத் தேர்தல் விபரம் பாராக் ஓபாமா குடும்பம் மாக்ஸ்டிக் பின்னியைச் சேர்ந்தவர்கள், இவர் தீவிரத்துக்கு ஆதரவு தெரிவிப்பார், அமெரிக்காவே விழித்தெழு, விழித்தெழு, இந்த மனிதனிடம் இருந்து அமெரிக்காவைக் காப்பாற்று என ஒரு பெண்மணி வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று கூச்சல் போடுகின்றார், இவர் ஒரு கையில் அமெரிக்காவின் தேசிய கொடியையும் மறு கையில் இஸ்ரேல் கொடியுடன் வெள்ளை மாளிகைக்கு முன்னர் வலம் வருகின்றார். வருகின்ற செவ்வாய்க்கிழமை வரும் இடைத்தேர்தலில் மக்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள் எனவும் இவ் பெண்மணி கோஷம் போடுகின்றார். கேள்வி : இது என்ன மீண்டும் அமெரிக்காவில் தேர்தலா? பதில்…
-
- 1 reply
- 657 views
-
-
முன்கூட்டியே தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து பிரிட்டன் எம்பிக்கள் வாக்களித்ததையடுத்து டிசம்பர் 12ம் தேதி பிரிட்டனில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு முன்பு இத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. பிரக்சிட் விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் தேக்க நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 438 எம்பிக்கள் வாக்களித்தனர். தேர்தல் வேண்டாம் என 20 எம்பிக்கள் மட்டுமே மறுத்தனர். நாளையுடன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரிட்டனுக்கு 3 மாத கால அவகாசம் அளித்துள்ளது ஐரோப்பிய …
-
- 0 replies
- 324 views
-
-
வரும் திங்கள்கிழமை உலகையே அதிர வைக்கும் முடிவு வெளியிடப்படுகிறது.. நாசா அதிகாரபூர்வமாக அறிவிப்பு..! 9 mins ago பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் மட்டும் தனியாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கான முதல் தடயங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தேடி வருகிறது. சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிரினம் வாழக்கூடிய அம்சங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கிறதா என்பதை கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ‘நாசா’வின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள். உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக் கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் மனிதர்களைப் போன்ற …
-
- 2 replies
- 837 views
-
-
இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு அ.தி.மு.க,. செயற்குழுவில் இன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டிய தமிழக முதல்வர் ஜெ.,வுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும்,40 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெற பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய ஜெ., வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ மற்றும் பா.ஜ.,வை நம்ப முடியாது என்றும் அதனால் தனித்து போட்டியிடப்போவதாகவும் ஜெ., கூறியுள்ளார். சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்…
-
- 1 reply
- 471 views
-
-
வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன் : கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழிவிசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நேற்று முழுவதும் இறுக்கமாக தோற்றமளித்த கனிமொழி, இன்று லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார். நீதிமன்றத்திற்குள் கனிமொழி அவசர அவசரமாக செல்ல முற்பட்டபோது தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஓரிரு நிமிடம் பேசினார். கனிமொழி, ‘’ நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று கூறினார். நக்கீரன்.
-
- 0 replies
- 1.9k views
-
-
ஊடகங்களில் கேலிச்சித்திரங்களுக்கு என்று ஒரு தனி இடமுண்டு. ஒரு கட்டுரையின் சாரத்தை ஒரு ஓவியரின் நேர்த்த்தியான கோடுகள் ஓரிரு நொடிகளில் உணர்த்தி விடும். ஆனால் அதைச் சாதிப்பதற்கு அரசியல் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும், ஓர் அரசியல்வாதிதயின் சாராம்சமான பண்பையும் புரிந்து கொள்ளும் அரசியல் கூர்மதி ஒரு கேலிச்சித்திரக்காரருக்கு வேண்டும். அரசியல்வாதியிடம் அந்தப் பண்பு வெளிப்படும் தருணத்தை சிக்கெனப் பற்றி தனது கோடுகள் மூலம் வாசகன் மனதில் அதை வரைந்துவிடும் ஆற்றல் கொண்ட பிசிறற்ற தூரிகை வேண்டும். கதைகள், உவமானங்கள், உருவகங்கள், தொன்மங்கள், பழமொழிகள், மக்கள் வழக்குகள் ஆகியவற்றைச் செறிவாகக் கையாளும் சொல் திறனும், கலைத்திறனும் இணைந்திருக்க வேண்டும். எல்லாம் இருந்தாலும் பத…
-
- 0 replies
- 788 views
-
-
சீன அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தனக்கு சொந்தமான பகுதியாகக் குறிப்பிட்டு, விஷமம் செய்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை போரும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம், தன்னால் முடிந்த அளவுக்கு சீன அரசு விஷமத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சீன அரசு சார்பில், "மேப் வேர்ல்டு' என்ற வரைபடம் (மேப்) சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், சீனாவின் நிலப்பரப்பு தொடர்பான விவரங்களும் இடம் பெற்றுள்ளன. சீன மொழி…
-
- 3 replies
- 692 views
-
-
வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்! அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க வரிகளை அதிகரிப்பதையும் சீன அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் இடைநிறுத்துவதையும் நோக்காக்க கொண்டுள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த பேச்சுவார்த்தைகள், நவம்பர் 1 முதல் சீன இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் 100% வரிகளின் அச்சுறுத்தலை நீக்கியதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் கவன…
-
- 0 replies
- 470 views
-
-
21 Oct, 2025 | 12:53 PM அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது. சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார். மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்…
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
பாங்க் ஆஃப் கனடா வர்த்தகப் போருக்குத் தயாராகிறது இன்று எதிர்பார்த்தபடி BoC விகிதங்களை 25bp குறைத்தது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சில முன்னேற்றங்கள் கொடுக்கப்பட்டால் விகிதங்கள் அடிமட்டத்தில் அல்லது அதற்கு அருகில் இருக்கும், ஆனால் அமெரிக்க-கனடா வர்த்தகப் போரின் மிகப்பெரிய கேள்விக்குறி இன்னும் வெட்டுக்களுக்கான கதவைத் திறந்து வைக்கிறது. இறுதியில், கட்டணங்களின் ஒப்பீட்டு வளர்ச்சி-பணவீக்கம் தாக்கம் BoC இன் எதிர்வினையைத் தீர்மானிக்கும். அதிக USD/CAD உயர்வை எதிர்பார்க்கிறோம் படம் இந்த கட்டுரையில் BoC வெட்டி QTயை முடிக்கிறதுவர்த்தகத்தில் அதிகரித்த நிச்சயமற்ற தன்மைUSD/CAD டிப்ஸில் கவர்ச்சிகரமானதாக உள்ளது …
-
- 1 reply
- 277 views
-
-
வர்த்தக மோதல் : அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது சீனா !! அமெரிக்காவின் சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் சீன அதிகாரிகள் மீதான சமீபத்திய அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக இந்த தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதி செயலாளர் வெண்டி ஷெர்மன் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்கு பதிலளிக்கும்…
-
- 0 replies
- 337 views
-
-
வர்த்தகத்திற்காக திமிங்கிலங்களை இனி வேட்டையாடலாம் – ஜப்பானுக்கு புதிய அனுமதி! ஜப்பானிய மீனவர்கள் எதிர்வரும் காலங்களில் திமிங்கிலங்களை வர்த்தகத்திற்காக வேட்டையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (திங்கட்கிழமை) நீக்கப்பட்டுள்ளது. உலகத் திமிங்கில பாதுகாப்பு ஆணையத்திலிருந்து ஜப்பான் விலகியதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மூன்று தசாப்தங்களின் பின்னர் 5 ஜப்பானிய திமிங்கில வேட்டை கப்பல்கள் முதல் தடவையாக வர்த்தக நோக்கில் பயணத்தை ஆரம்பித்துள்ளன. திமிங்கில வேட்டைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது…
-
- 0 replies
- 424 views
-
-
வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த முதல் பதிலடி பகிர்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 1 அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் உடனான சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படையான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தினார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமெரிக்காவில் இறக்குமதியாகும் பல பொருட்களின் வரியை டிரம்ப் உயர்த்தியுள்ளார் "பாதுகாப்பு சுவர்களுக்கு மத்தியில் தீர்வு கிடைக்காது. ஆனால், மாற்றத்தை அரவணைப்பதன் மூலம் கிடைக்கும்," என்று அப்போது கூறிய மோதி, "அனைவருக்கும் சம வாய்ப்புள்ள களமே நமக்குத் தேவை. திறந்த மற்றும் நிலையான சர்வதேச வர்த்தகத்தையே இந்தியா விரும்புகிறது," என்று பேசினார். எனினும், சர்வ…
-
- 1 reply
- 710 views
-
-
வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி YouTube வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு சீனா பதில் அளித்துள்ளது. சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க வரியை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீனா வர்த்தக அமைச்சகம் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறும்போது, ”சர்வதேச வர்த்தகத்தில் ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என்றால், வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க சீனா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. முன்னதாக சீனப் பொ…
-
- 0 replies
- 491 views
-
-
வர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப் காரி கான் ராஜிநாமா – கடந்த வார நிகழ்வுகளில் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மிக முக்கியமான விஷயம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர்தான் காரி கான். உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அதிபர் அறிவித்ததை எதிர்த்து கான் வெளியேறியது தலைப்புச் செய்தியானது. 14 மாதங்களில் ட்ரம்ப் குழுவில் பலர் வெளியேறியிருந்தாலும் இவரது வெளியேற்றம் சர்வதேச அளவில் விவாதப் பொருளானது. 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் நிலவிய பெருமந்த பொருளாதாரத்துக்குப் பிறகு அனைத்து நாடுகளின் தலைவர்களும் தற்சார்பு…
-
- 0 replies
- 496 views
-
-
வர்த்தகப் போர்; அமெரிக்காவும் சீனாவும் இந்த வாரம் பேச்சுவார்த்தை! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போரை தணிக்க முயற்சிக்கும் வகையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் இந்த வாரம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். மே 9 முதல் 12 வரை சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் சீன துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் கலந்து கொள்வார் என்று பீஜிங் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் வொஷிங்டனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்களது அலுவலகங்கள் அறிவித்தன. வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ஜனாதிபதி டொ…
-
- 0 replies
- 237 views
-
-
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது April 16, 2025 12:27 pm சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் வாங்கக்கூடாது என்று சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விமானங்களைத் தவிர, விமான பாகங்கள் மற்றும் கூறுகளும் விலை அதிகமாகியுள்ளது. முன்னதாக சீனாவின் ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் ஆகியவை 2025 மற்றும் 2027 க்கு இடையில் 179 போயிங் விமானங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த விமானங்களை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையை தடையைத் தொடர்ந்து, சீன நிறுவனங்கள் ஐ…
-
- 0 replies
- 340 views
-
-
வர்த்தகம், முதலீட்டுக்கு ஏற்ற நகரம் சென்னை: அமெரிக்கா வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற நகரமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை மாறியுள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டே முதல் முறையாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னைக்கு வர உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இம்மாதம் 19-ம் தேதி இந்தியா வருகிறார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவர் 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார். தென்னிந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் சென்னை வளர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை சுற்றுப் பயணத்தின்போது அரசு அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் ஹிலாரி பேச்சு நடத்துவார் என்று பொருளாதாரம…
-
- 1 reply
- 689 views
-
-
ரூ.4400 கோடியில் புதிய பென்ஸ் டிரக் ஆலை சென்னை அருகே கட்டப்பட்டுள்ள டெயம்லர் குழுமத்தின் புதிய டிரக் தயாரிப்பு தொழிற்சாலையை முதல்வர் ஜெயலலிதா இன்று துவங்கி வைத்தார். ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் குழுமம் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டில் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. மேலும், டெய்ம்லர் பிராண்டில் கனரக வாகன விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தனது வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் விதமாக கனரக வாகனங்கள் தயாரிப்பு துறையிலும் டெய்ம்லர் இறங்கியுள்ளது. இதற்காக, பாரத் பென்ஸ் என்ற புதிய பிராண்டையும் கடந்த ஆண்டு இந்தியாவில் டெய்ம்லர் குழுமம் அறிமுகம் செய்தது. மேலும், சென்னை அருகே ஒரகடத்தில் ரூ.4000 கோடி முதலீட்டில் உலகத் தர…
-
- 5 replies
- 1.2k views
-
-
சோமாலியாவில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய வறட்சியான காலநிலை மற்றும் பசி பட்டினியால் சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் மரணமடையக்கூடும் என ஐ.நா எச்சரித்துள்ளது. கிழக்கு ஆபிரிகாவில் 60 வருட காலப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியான காலநிலை மற்றும் பட்டினியால் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்ததாகவும் ஜ.நா தெரிவித்துள்ளது. இஸ்லாமிய கட்டுப்பாட்டில் உள்ள தென் சோமாலியா பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 12 மில்லியன் மக்களுக்கு உணவு தேவை என ஜ.நா சுட்டிக்காட்டியுள்ளது. சோமாலியாவில் சுமார் 4 மில்லியன் மக்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. _ http://www.virakesari.lk/news/…
-
- 1 reply
- 945 views
-
-
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் கலைஞரின் காலை வாரிவிட்டு "தவிர்க்க முடியாத" காரணத்தால் போகாத இடம் சென்றீர்களே! நீங்கள் நினைத்த மரியாதை கிடைத்ததா? கறுவேப்பிலை மாதிரி தானே உங்களையும் உங்கள் தொண்டர்களையும் நீங்கள் நாடிச்சென்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்? தோழர் திருமாவளவனுக்கு இருக்கும் சுயமரியாதையில் கிஞ்சித்தும் உங்களுக்கு கிடையாதா? நீங்கள் கூட்டணியில் இருக்கும் இயக்கத்துக்கும், உங்கள் இயக்கத்துக்கும் எந்தெந்த கொள்கைகளில் ஒத்தக் கருத்து உண்டு என்று விளக்க முடியுமா? பொடா சட்டம் ஆகட்டும், ஈழத்தமிழர் பிரச்சினை ஆகட்டும் எதில் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? உங்கள் இயக்கத்தின் கருத்துக்களை ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள் ஓரணியில் திமுக கூட்டணிய…
-
- 46 replies
- 6.8k views
-
-
ஆப்பிரிக்காவில் உள்ள 26 மிக வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையை விட எட்டு வட இந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு கூறயுள்ளது. பிகார், சத்தீஸ்கர், ஜார்காண்ட், மத்தியபிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் 42 கோடியே பத்து லட்சம் பேர் வறிய நிலையில் இருப்பதாக ஐ நாவின் ஆதரவுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு முயற்சியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. வருமானத்தை மட்டுமல்லாது, கல்வி சுகாதார வசதிகள் போன்றவை எந்த அளவுக்கு கிடைக்கின்றன என்பது போன்ற விடயங்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரந்து பட்ட வறுமைக் குறியீடு என்பதன் அடிப்படையில…
-
- 2 replies
- 1.1k views
-
-
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சுவிஸ் மக்கள்: - வெளியான பகீர் ஆதாரங்கள்! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் அந்நாட்டிலும் வறுமை கோட்டிற்கு கீழ் இன்றளவும் மக்கள் வசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சுவிஸ் நாட்டை சேர்ந்த Caritas என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இதில், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ஒவ்வொரு 20 வாலிபர்களில் ஒருவர் வறுமையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.அதாவது, நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களில் 73,000 பேர் வறுமையில் இருந்துள்ளனர்.இதே நிலை கடந்த 2013-ம் ஆண்டு 55,000 எனவும், 2007…
-
- 0 replies
- 439 views
-
-
லண்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத…
-
- 0 replies
- 383 views
-
-
வறுமையில் வாடும் வடகொரியா By DIGITAL DESK 5 16 SEP, 2022 | 01:58 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா “அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கில் அதிரடியாக கூறினார். கொரிய போரின் 69ஆவது ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கூற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். “போர் நடைபெற்று 70ஆண்டுகளுக்கு பின்னரும் தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆபத்து நிறைந்த, சட்டவிரோத பகைமை விளைவிக்கும் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா தனது செயல்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகைய…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-