உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
சென்னை: ஈழத்தமிழர்கள் கண்ணீரைத் துடைப்பதற்காக இரவு தூக்கமின்றி பாடுபடும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த நேரத்திலும் நம்மால் முடிந்த அளவிற்கு ஈழத்தமிழர்களின் வாழ்வில் எப்படியாவது நிம்மதியைத் தேடித்தர முடியாதா? என்றெண்ணியே டெசோ மாநாட்டினை கூட்டியுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதியின் மகளும்,திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவருமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"வருகிற 12-ம் தேதி சென்னை மாநகரில் 'டெசோ’அமைப்பின் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டினை திமுக தலைவர் கருணாநிதி கூட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் காயங்களுக்கும் அவர்…
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
தேனி: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த வாழை விவசாயி வி.குருநாதன், ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைவித்து, உலகளவில் சாதனை படைத்துள்ளார். விவசாய கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் வி.குருநாதன்,75. 45 ஆண்டுகளுக்கு முன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை சாகுபடி செய்தார். இன்று ஒரு எக்டேரில் 165 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளதால், உலகின் முதல் சாதனை வாழை விவசாயி என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளார். நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் இவரது தோட்டத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தற்போது, 150 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரான இவர், முழு பரப்பிலும் ஜி 9 திசு வாழை சாகுபடி செய்து வருகிறார். குருநாதன் கூறியதாவது: 1990ம் ஆண்டு 13 ஆயிரம் வா…
-
- 6 replies
- 1.5k views
-
-
இந்தியாவைச் சுற்றி ஒரு வலை பின்னும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கால்பதித்துள்ள சீனா, தற்போது ஆப்கானிஸ்தானுக்குள்ளும் நுழைகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு மலையைக் குடைந்து சாலை அமைக்கும் பணியை, சீனா மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கையும், முக்கியத்துவத்தையும் உடைக்கும் வகையில், சீனா இதை செய்து வருகிறது என, இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதி வி.கே.சிங் அம்பலப்படுத்தியுள்ளார். இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் வி.கே.சிங். இவர் போபாலில் உள்ள வர்க்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மாணவராக உள்ளார். பணியில் இருந்த 20…
-
- 10 replies
- 1.5k views
-
-
சீன ராணுவம் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் 10 கி.மீ. ஊடுருவி கூடாரம் அடித்தது சிக்கலான நிலையில், மேலும் 9 கி.மீ ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனப் படைகள் இந்திய எல்லையில் ஊருடுவி, லடாக் பகுதியில் 10 கிலோ மீட்டர் வந்து கூடாரம் அமைத்துள்ளதாக முதலில் தகவல் வந்தது. அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து, மேலதிக இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தங்கள் படைகள் எல்லை தாண்டவில்லை சீனா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில், சீனப் படைகள் எல்லையைத் தாண்டி, இந்திய பிராந்தியத்தில் 19 கிலோ மீட்டர் வரை நுழைந்து விட்டது, என்று அரசு புதிய தகவலை தெரிவித்துள்ளது. பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமையிலான மூத்த அதிகாரிக…
-
- 11 replies
- 1.5k views
-
-
நம் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி . இலங்கை அரசின் கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்த பேராசிரியர் லாரன்ஸ் பிரபாகர் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டார். நாம் அனைவரும் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பி இதை உறுதி செய்துள்ளார். முகநூல் நண்பர்களுக்கு எம் நன்றிகள் . Dear Tamil Elders, Greetings !, I read through your kind email and also the emails of several others.As a fellow Tamil, I am equally pained with this heinous crime . I have canceled my travel to Sri Lanka and would not participate in this conference. This is in complete respect to your sentiments. Please inform all other groups and individuals about m…
-
- 11 replies
- 1.5k views
-
-
உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏ…
-
- 8 replies
- 1.5k views
-
-
முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ:தமிழருவி மணியன் தமிழகத்தில் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் காரியங்களை தமிழருவி மணியன் தொடங்கி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன், 'அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்கப் போகிறேன்’ என்று களம் இறங்கி உள்ளார். அதற்கான முதல் கூட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் திருப்பூரில் கூட இருக்கிறது. ஜனவரி 7-ம் தேதி கூடும் அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை ஒரே மேடையில் பேசவைக்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழருவி மணியனை சந்தித்தோம…
-
- 5 replies
- 1.5k views
-
-
கைகாதா: சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரை 50 பைசாவிற்கு விற்பனை செய்து நாட்டிற்கே முன்னோடியாக மேற்கு வங்க மாநில கிராமம் ஒன்று திகழ்கிறது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மதுசுதன்கதி என்ற கிராம மக்கள் விஷத்தன்மையுள்ள மாசுபட்ட நிலத்தடி நீரைக் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அதிவேக மாற்றம் அருகிலுள்ள கிராமங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம கூட்டுறவு சொசைட்டியான ‘மதுசுதன்கதி சமாபாய் கிரிஷி உன்னயன் சமிதி’ பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு அழுக்கு நீரை சுத்திகரிக்கும் ஆலை ஒன்றை நிறுவியது. இதில் சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய படிகாரம், யுவி வடிகட்டி…
-
- 2 replies
- 1.5k views
-
-
கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் விடுவிக்கப்பட்டார். காஸாவில் வைத்து இனந்தெரியாத ஆயுத கும்பலால் கடத்தப்பட்ட பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்ரன் 4 மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். BBC's Gaza correspondent released BBC correspondent Alan Johnston has been released by kidnappers in Gaza after nearly four months in captivity. -BBC News- Photos: Associated press.
-
- 3 replies
- 1.5k views
-
-
இர்மா சூறாவளி: கியூபாவை தாக்குகிறது; அமெரிக்காவை நெருங்குகிறது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பல கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவை கடக்கிறது; அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை நெருங்குகிறது. படத்தின் காப்புரிமைREUTERS கடந்த சில மணி நேரத்தில் மேலும் வலிமை கூடியுள்ள இர்மா அதிகபட்சமாக மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. …
-
- 3 replies
- 1.5k views
-
-
கனடாவில் நடைபெறும் தமிழர்களது தெரு திருவிழாவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். [Sunday 2015-08-30 21:00] கனடா ரொறன்ரோவில் முதன் முறையாக தெரு திருவிழா நெடைபெற்று வருகிறது நேற்றுநடைபெற்ற நிகழ்வில் சுமார் ஓரு மைல் துாரத்திற்கு வீதி மூடப்பட்டு நண்பகல் 12 மணிமுதல் இரவு 11 மணிவரை நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்தனர். தமிழ் கலை கலாச்சார தமிழின வரலாற்று நிகழ்வுகள் பலவும் நடைபெற்றன. இன்றும் இரண்டாம் நாள் நிகழ்வு ஆரம்பமாகி கோலாகலமாக பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் தெரு நீளத்திற்கு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.. நிகழ்வுபற்றிய விரிவான செய்தி தொடரும்... http://www.sei…
-
- 2 replies
- 1.5k views
-
-
வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜ…
-
- 4 replies
- 1.5k views
-
-
மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார் சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார். பெய்ஜிங்: சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வன…
-
- 11 replies
- 1.5k views
-
-
டெல்லி: ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் இருந்து சச்சின் விலகிவிட்டார். திபெத்தியர்கள் எதிர்ப்பு ஒருபுறம் இருக்க இந்தியாவில் நாளை ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடக்கவுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதியை கால்பந்து அணியின் கேப்டன் பூட்டியா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திபெத்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சுடர் ஓட்டத்த்தில் இருந்து பூட்டியா விலகிக் கொண்டதால் முதல் பரபரப்பு எழுந்தது. அடுத்ததாக கிரண் பேடியும் இந்த ஓட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை சோகா அலிகான் தானும் விலகுவதாக அறிவித்தார். இந் நிலையில் சுடர் ஓட்டத்தில் இருந்து சச்சின் டெண்டுல்கரும் விலகிக் கொண்டுள்ளார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான கடைசி 2 டெஸ்டுகளிலும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
ஜப்பானில் மணிக்கு 311 மைல்கள் (501 km/hour) வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் ரயில் ஒன்றின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ரயில் மேக்னட்டிக் சக்தியில் இயங்குவதால் அதிவிரைவாக செல்ல முடிகிறது. இந்த ரயில்களுக்கு சக்கரங்கள் கிடையாது. டோக்கியோவில் இருந்து நாகோயா என்ற நகருக்கு சோதனை ஓட்டமாக இந்த ரயிலில் பயணம் செய்வதால் 40 முதல் 90 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும். $64 பில்லியன் செலவு செய்து இந்த ரயிலை ஜப்பான் ரயில்வே வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரயில் வரும் 2045ஆம் ஆண்டுவாக்கில் டோக்கியோவில் இருந்து ஒசாகா வரை நீட்டிக்கப்படும். வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிவடைந்ததால் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகளின் உபயோகத்திற்காக செ…
-
- 2 replies
- 1.5k views
-
-
மரபணு மாற்றுப் பயிர்களின் நுழைவுக்கு இரண்டாவது பச்சைப் புரட்சி என்று பட்டமும் சூட்டப்படுகிறது. ஆனால் முதல் பச்சைப் புரட்சியின்போது அமைதியாக இருந்துவிட்ட பாரதம் இன்று பி.டி. கத்தரிக்காயை எதிர்த்து போர்க் கோலம் பூண்டுள்ளது. இதன் விளைவாக அனுமதி வழங்கும் குழு பரிந்துரை செய்த பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்குவதற்காக முன்பு ஐந்து மாநிலங்களில் பொதுமக்கள் முன்பு கலந்தாய்வு நடத்தி கருத்துக்களைப் பெறுவேன் என்று சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை விடுத்து இருக்கிறார். ஜனவரி 27-ம் தேதி முதலமைச்சர்களை அழைத்து கருத்து அறிவேன் என்றும் சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்தது. பி.டி. பயிர்கள் பாரதத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்று சொல்லுபவர்கள் முன் வைக்கும் வாதம் என்ன? …
-
- 0 replies
- 1.5k views
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது சீனாவின் போர்க் கப்பல் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தி வருகின்றனர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பதால் அங்கிருந்து இந்திய கடற்பரப்புக்குள் அந்த கப்பல் ஊடுருவியதா? அல்லது சீனா வர்த்தக கப்பலுக்கு பாதுகாப்பாக வந்ததா? என்றும் அந்த கப்பலில் ஆயுதங்கள் ஏதேனும…
-
- 11 replies
- 1.5k views
-
-
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்: 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீச்சு - நேரலை விவரம் பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம் 22 ஜூன் 2025, 01:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் பற்றி இரான் கூறுவது என்ன? 'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி' இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு டிரம்ப்…
-
-
- 30 replies
- 1.5k views
- 1 follower
-
-
சித்தி’ ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க ராதிகா செல்வி யைக் களமிறக்கி விட்டி ருக்கிறது தி.மு.க. இதனால் தென்காசி தொகுதி சூடாகி யிருக்கிறது. நெல்லை மாவட்டம் தென்காசி தொகுதியில்தான் அரசியல் அனல் அக்னியாகக் கொதிக்கிறது. தி.மு.க. வேட் பாளராக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக நடிகர் சரத்குமாரும் போட்டியிடுவதே இதற்குக் காரணம். கருப்பசாமியின் தேர்தல் அனுபவமா? சரத்குமாரின் ஸ்டார் வேல்யுவா? எது ஜெயிக்கும்? என்பதுதான் இப்போதைய கேள்வி. சரத்குமாரும், அவருக்குத் துணையாக நடிகை ராதிகாவும் கலக்கி வருகிறார்கள். ராதிகாவின் பிரசாரம் பெண்களை சுண்டி இழுக்கிறது. இரண்டு ஸ்டார்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது, தி.மு.க. எனவே, சித்தி ராதிகாவை கவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் பயங்கரம் : மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவில் மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 22 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், எனவும் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355686
-
- 19 replies
- 1.5k views
- 1 follower
-
-
ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகினூர் வைரம்: பிரிட்டன் அரசி மீது வழக்கு! இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பிரிட்டன் அரசர் நான்காம் ஜார்ஜ் காலத்திலிருந்து ( 1937-ம் ஆண்டு முதல்) பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது. தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தில் கோகினூர் வைரம் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு முதல் அவரது கிரீடத்தில் கோகினூர் வைரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரிட்டன் அரசுரிமை பொருளா…
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு முன்புவரை எல்லாரையும் ஆட்டி வைத் துக்கொண்டிருந்த இவர் இப்போது ஆடிப்போய் இருக்கிறார். கரன்ஸியை எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இப்போது கம்பி எண்ணும் வேலை. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் : ‘‘நான் சென்னை தி. நகரில் பொறந்தேன். அம்மா பர்மாவைச் சேர்ந்தவர். அப்பா தெலுங்கு நாயுடு. பணவசதி படைத்த குடும்பம் இல்லை என்றாலும் நடுத்தர வர்க்கம். எனது பள்ளிப் பருவத்தில் எதுவும் சிறப்பாக அமையவில்லை என்றாலும், கல்லூரியில்தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தக் கல்லூரியில் பிரபல சகோத…
-
- 5 replies
- 1.5k views
-
-
பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது கிளம்பிய இனவெறி சர்ச்சை ஒரு நாடகம் என்று கூறப்படுவதற்கு ஷில்பா ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றார். நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து நடிகை ஜேட் கூடி உள்ளிட்ட சில பெண்கள் ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் சீண்டி திட்டி ரகளை செய்தனர். இதனால் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். ஷில்பா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த இன வெறி சர்ச்சையே ஒரு பெ>ய நாடகம் என புதிய புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பிக் பிரதர் நிகழ்ச்சியை வடிவமைத்தவரான பாரூக் டோண்டி என்பவர், இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்கவே இதுபோ…
-
- 6 replies
- 1.5k views
-
-
சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள். சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
Published By: RAJEEBAN 22 NOV, 2023 | 05:14 PM அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும் நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு …
-
-
- 13 replies
- 1.5k views
- 1 follower
-