Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கவிதை,

    காதலை வரமாகக் கொடுத்தான் இறைவன் ! அதனை சாபமாக மாற்றிக்கொண்டான் மனிதன் !! காதல் எப்பொழுதும் தோற்பதில்லை ! காதலர்கள்தான் தாமே தோற்றுப்போகிறார்கள் !! காதலைக் காதலியுங்கள்...! காதலும் உங்களைக் காதலிக்கும்...!! வாழும் வாழ்வினை இனிதாய் வாழவைக்கும்...!!! அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

  2. தற்போது தொற்றியுள்ள ஒரு நோய் இப்படியே தொடர்ந்து நிமிர்ந்து நிற்கின்றோம் என்று சொல்லி மக்களை பலி கொடுக்கப்போறியளே என்ற கேள்வி ஒரு நோய்போல் தொற்றி நிற்கிறது எல்லாத்தையும்ஒருவன் பார்ப்பான் என்று தறுதலையாய் திரிந்த கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்ப்பீர் நீவிர் தோல்வியுற்ற அந்த கணப்பொழுதிலிருந்து கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றப்பணம் ஒருவருக்கே தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான் எல்லாவற்றையும் விட்டு இன்றே உலக நடப்பை புரிந்து சிங்களவனோடு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்கூண்டோடு அழிந்து போவது... இல்லை தனியே நின்று மலையுடன் மோதி கூண்டோடு அழிந்து போவது தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான்

  3. இன்று உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இதேவேளையில் உதைபந்தாட்டம் பற்றிய எனது கவிதையொன்றை இணைப்பதில் மகிழ்கிறேன். பாடசாலை நாட்களின் நினைவுகளோடு மற்றவைகளையும் சேர்த்து சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதையினை கள உறவுகளுக்காக இணைக்கின்றேன். உதைபந்தாட்டம் பசும்புற்றரை செய்து பக்குவமாய் அதைவெட்டி கசங்காத கம்பளமாய் ஆக்கிடுவார் - அதனிடையே நெடுவெண் கோடுகளும் நீள்சதுரம் வட்டமும் நடுவினிலும் இடுவார் பொட்டு. உருண்டையான ஒருபந்தை ஓடிஓடிப் பதினொருவர் உருட்டி இருபுறமும் அடித்திடுவார் - இருதடிக்குள் வைத்த இடத்திருந்தும் விளையாட்டின் திறன்கொண்டும் புகுத்திவிட்டால் பெறுவார் புகழ். கூச்சலிடுவார் கூத்துமிடுவார்…

    • 20 replies
    • 4.1k views
  4. யார் அந்தக் கள்ளி?? வானத்தில் தூங்கும் கள்ளி உனக்கு அங்கு வாழ்வு தந்தது யாரடி? தாரகைகளிடையினுள் ஒரு தாஜ்மகால் உறக்கம் தங்கத்தட்டாய் பூமிக்கு மேலே ஒரு புதையலை தூங்க விட்டது யாரடி? கறுத்து போனது வானம் இறுக மூடிய விழிகளுக்குள் இருட்டின் பேரால் ஊரடங்கு சட்டம் ! விழித்தெழுந்து பார்த்தேன்! காணவில்லை! விண்வெளியில் வெள்ளை நிறம் அடித்தது யாரோ?? கும்மியடித்த இருளை ..... கொன்று போனது யாரோ? எங்கு போனாள் அவள்? அள்ள அள்ள குறையாத அழகுக் கள்ளியா நீ? யாரிடம் வாங்கினாய் யாருக்கும் சொல்லாமல் இந்த அழகை...! மெல்ல வானம் விடிகையில் சொல்லாமல் மறைகிறாய் மெல்ல வானம் சிவக்கையில் கேட்காமலே வந்து அணைக்கி…

    • 30 replies
    • 3.2k views
  5. மார்கழி மாதத்து மாலை நேரத்தில் மலர்விழி உன்னை மலர்த்தோட்டம்தனில் கண்டேன்..... மழைத்துளியில் நீயும் மயங்கி விளையாடி மலர்க்கூந்தல் கலைந்து மயங்கி நின்ற வேளையில் மலர்க்கூட்டங்களில் மறைந்திருந்து பார்த்தேன் மலர்போன்ற உன் அழகை மரகதமே உன்னையடி மறக்கவே முடியவில்லை மயில் போன்ற உன் நடையும் மல்லிகைக்கொடியிடையும் மன்மதன் அவன் உன் அழகில் மயங்கிய நின்று மதியென விழித்துவிட்டேன் மான்விழியாள் எனைக்கண்டு..... புள்ளிமான் போல நாணம் கொண்டு ஓடியே மறைந்துபோனாள் என் இதயம் திருடிக்கொண்டு தேடினேன் காணவில்லை மாரிசன் மாறிவந்த பொன்மான் அவள்தானே?

  6. அகதிப்பெருந்துயர்... வாடி இலை சொரிந்து வனப்பிழந்து கூடிக்குலாவிடக்குருவிகளற்று ஆடையிழந்து அம்மணமாய் நின்ற மரஞ்செடிகொடிகள் எல்லாம் வாடைக்காற்று வருடிட வலிமை பெற்று பூவும் கனியுமாய் பூத்துக்குலுங்கி புன்னகை செய்யும் இளவேனிற் காலங்களில் நீலம் ஒளித்திட நிலைகொண்ட இருள்கிளித்து பால்வெளி விந்தைகளாய் பரவிக்கிடக்கும் விண்மீன்களும் பால்நிலவும் வானில் உலாவரும் வசந்தகால இரவுகளில் நீலம் உடுத்திவந்து நிலவுடன் கொஞ்சிடும் நீரலைகள் தாலாட்டும் பேரழகுக்கடலின் பெருநீளக்கரைகளில் ஊரே கூடியிருக்கும் உல்லாச நாட்களில் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து உயரப்பறக்கும் இனிமைகள் நிறைந்த இரவுப்பொழுதுகளில் நான்மட்டும் தனித்திருந்து உயிர் வத…

  7. உயிர்க்கூடு அதிர்கிறது உணர்வுகள் அழுகிறது இமை மடல் சிவக்கிறது கண்ணீர்ச்சுரப்பி வற்றி இரத்தம் கசிகிறது சாவுச்செய்திகளை கேட்டுக் கேட்டே காது என்புகள் அறுந்து போகிறது ஈழ மண்ணில் இரத்த ஆறு ஓடுகிறது சவக்குழிகள் நிறைகிறது நடுவீதியில் இறங்கி பதாகை சுமந்து உரத்து கத்தி ஒரு பயனுமில்லை நடு வீதியில் உச்சி வெயிலில் நின்று உரிமைக்காய் உரத்து கத்தியவரி;ன் உயிர் மூச்சு பட்ட பகலில் பறிக்கப்பட்டுள்ளது இலங்கைத்தீவு ஜனநாயக போர்வையுடன் கண் காதுகளை இறுக மூடிய சர்வதேசம் குருட்டு மனித உரிமை பேசுகிறது கதிர வெளியில் காட்டு மிராண்டிகள் தின்று குவித்த உறவுகளுக்காய் நீதி கேட்டவன் உயிரிழந்து கிடக…

    • 3 replies
    • 965 views
  8. 1 ‘மாவீரர்கள் சாவையே வென்றவர்கள் மக்கள் மனங்களுக்குள் வாழ்பவர்கள்’ நவம்பர்27ல் எங்கே நாங்கள் வருவோம்? நேசம் மிக்க எங்கள் தேசச்செல்வங்களே! உங்களைக் கண்டு எம் உள்ளத்துணர்வூகளை எடுத்துச்சொல்ல எங்கே நாங்கள் வருவாம்? நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்தவர்களல்ல எங்களுள் நிலைத்து வாழும் மாவீரர்கள் எங்களை நேசித்தவர்கள் நீங்கள் எமக்காக உங்கள் உயிர்ப்பூக்களை உதிர்த்தவர்கள் எங்கள் நிம்மதிக்காக உங்கள் சுகங்களைத் துறந்து போராடினீர்கள் நாங்கள் வாழவேண்டும் என்பதற்காக உங்கள் சாவூக்கான நாளை குறித்தவர்கள் நீங்கள் உண்மையாக எங்களை நேசித்தவர்கள் நீங்கள் -அதனால் உங்களிடம் மட்டுமே எங்கள் உள்ளத்து வலிகளை சொல்லி அழமுடியூம் அதனால்த்தான் உங்களைப்பெற்றவர்கள் உங்களின் சோதரங்கள்இஉறவினர்கள் த…

  9. Started by கவிதை,

    நான் கேட்டுத் தூங்கிய ஆராரிரோ பாட்டில், பாதிப் பாட்டை பாடி முடித்த... பாசத்தின் உருவம் அவர்! சரியெது பிழையெது எதுவும் தெரியாத பருவம், அம்மாவைத் தாண்டினாலும்..... என் அப்பாதான் எல்லை! கண்டிப்பும் தண்டிப்பும் இருந்தாலும், அன்பு அத்தனைக்கும் உறைவிடம் அங்கேதான்! அப்பாவின் கைபிடித்து நடைபயின்ற நேரங்களும், கல்லூரிவரை கவனித்த காலங்களும், இன்றுவரை கண்முன் காட்சிகளாய்... காலத்தால் அழியாத பாசங்களின் சாட்சிகள்! உயிரைக் கொடுத்து உருவாக்கி... தன் உயிரைக் கொடுத்தும் தன் உயிராய் எனை நினைத்து வளர்த்த... என் தெய்வத்துக்கு, என்ன கடன் பட்டேனோ? என்ன தவம் செய்வேனோ?? நாளைக்கு.... நானும் ஒரு அப்பா!!!

  10. காற்று வந்து காது துடைத்து கலைத்துப் போகும் பஞ்சு மேகம்...!! விண்ணில் கோடி விதைகள் கொண்டு விதைத்த பருத்தி பஞ்சு மேகம்...!! நட்சத்திர மழலை கண்ணாமூச்சி ஆட வைக்கும் பிஞ்சு பஞ்சு மேகம்..!! நனைந்த நிலவு நுதல் முற்றும் சுற்றிக் கொள்ளும் பஞ்சு மேகம்...!! பகலவன் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லும் சொகுசு பக்கணம் பஞ்சு மேகம்...!! கடலோடு மணம் கொண்டு கருவாகி மழை ஈன்று பஞ்சரிக்கும் பஞ்சு மேகம்...!! வானத்தோடு மின்னல் சண்டை அமைதித் தூது வெளிர் பஞ்சு மேகம்...!! அண்டையோடு சண்டையிட்டும் அன்பு குழகி ஆர்ப்பரிக்கும் தரணி மெச்சும் பஞ்சு மேகம்...!! அர்த்தங்கள்: பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்…

  11. கடைசிப் பாலகனின் இரத்தம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தீபச்செல்வன் மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில் குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும் மூடாத வாய்களில் மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன இரத்தத்தில் பிறந்து இறுதிவரையில் இரத்தம் காயாமல் பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர எனது நிலத்து பாலகர்கள் திரிகையில் இலையான்கள் காயங்களை அரித்து அவர்களைத் தின்று முடித்தன எல்லோருடைய கண்களின் முன்பாகவும் எனது தேசத்திற்கெதிரான போரில் பாலகர்களை பலியிடும் பொழுது தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில் தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது பெண்…

  12. ஊரில் இருக்கும் நண்பா நலமா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் என்று சொன்னாய்...!!! காசு கொடுத்து சந்தோசங்களை விலைக்கு வாங்கும் நான் சந்தோசங்களை விற்று காசை விலைக்கு வாங்க ஆசைப்படும் நீ இதுதாண்டா உனக்கும் எனக்கும் இப்போது வித்தியாசம்.. நான் நேரத்துக்கு நித்திரை கொண்டு நான்கு வருடங்கள் ... நிம்மதியாய் நித்திரை கொண்டு ஆறு வருடங்கள்...!!! இதையே வைரமுத்து பாட்டில் சொன்னால் மண்டையை மண்டையை ஆட்டிக் கேள் சங்கர் படமாய் எடுத்தால் விசிலடித்து கைதட்டு உன் ”நண்பன்” நான் சொன்னால் மட்டும் கொடுப்புக்குள் சிரித்து நக்கல் அடி..!!! கனவுகளை விற்று நித்திரைகளை விலைக்கு வாங்காதே விரல்களை அடைவு வைத்து தூரிகைகளை வட்டிக்கு வாங்காதே....!!!! …

  13. அகர வரிசை அடுக்காக்கி அன்பே அமுதே அழகே என்று அடுக்கு மொழி பேசிலேன் அன்னைக்கு அடுத்ததாய் அகத்திலொரு அணியாய் கொண்டேன் அருகிருந்து நீ அன்பு வளர்க்க - இன்று அவதிப்படுகிறேன்..! அழகிய மலராய் அகிலம் வந்தாய் அகத்திலும் வந்தாய் அருகிருக்க மட்டும் அனுமதி மறுக்கிறாய் அன்பான உறவுக்கு அவசரம் ஏனோ அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...! அவலம் இவன் அன்பு தாழ் திறக்க அவதிப்படுவது அறியாயோ அருமலரே....! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் அன்று அரிவரியில் அவசரமாய் உச்சரித்தது அர்த்தமாய் இன்று அதிர்கிறது மனத்திடலெங்கும்..! அது கேட்டு அரங்கேறத் துடிக்கிறது அன்பான குருவியதன் அருங்கவி..! அது ஒரு ஜீவகவி …

  14. " இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!" செத்துப்போ என்று தள்ளிவிடப்பட்ட தரித்திரங்களின் குழந்தைகள்! இத்தனை நாளும் பக்கமிருந்து அல்லல் கொடுத்த தொல்லைகள்! சேர்த்துவைத்த செல்வங்களை வாரிச் சுருட்டிய பிடுங்கிகள்! செங்குருதி தெளித்து வல்லூறுகளை வரவழைத்த வல்லூறுகள்! வீணான ஒன்றுக்காய் வில்லாடிய வீணர்கள்! மண்ணோடு மண்ணாக குடியழித்த கொடூரர்கள்! தீவிரவாதிகளென தீர்ப்பெழுதப்பட்ட தீராத போர்வெறி வியாதிகள்! முப்பதாண்டு காலமாய் முன்னேறவிடாத தடைக்கற்கள்! அப்பாவிப் பிஞ்சுகளை பலிகொடுத்த பாவிகள்! சாதிப்போம் என்று சொல்லி சாகடித்த சனியன்கள்! இப்படியெல்லாம் எங்களைத் திட்ட, நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம்!!! …

  15. [size=5]மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், நிர்வாணத்தை நிகழ்த்தி தனிமையால் புதர்களையும் உருவாக்கினான் முதலில். இருளடர்ந்த சுவருக்குள் வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் கிளைகளின் ஈரலிப்பில் பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான். கல்லறையின் வாசலில் இறகொன்று கிடந்தது பறத்தல் பற்றிய கனவோடு....[/size]

    • 7 replies
    • 717 views
  16. இருக்கிறதோ...... இல்லையோ ................. தவிக்க வைப்பது தெய்வமும் காதலும் மட்டுமே. ************* எருக்ககலை நாயுருவி குருக்கத்தி கூப்பிட்டுக்குத்தி இவைக்கே தெரியும் என் காதல். ************ மொழிபெயர்க்க முடியாமல் விழிகளால் எழுதும் வித்தையை எங்கே கற்றாய்? ************ நீ கடந்தபின் பார்க்கும் துணிவை பார்த்து சிரிக்கிறது-உன் ஒற்றைப்பின்னல். *********** எங்கேயும் எனைபிரிந்து போய்விட முடியாது உன்னால், அங்கே உனக்கு முதல் என் கவிதை இருக்கும். ********** வழியனுப்புதல் நிச்சயம் பாடையிலா??? பல்லக்கிலா??? ********** என்றாவது ஒருநாள் உன் பெருமூச்சு சொல்லும் என் மீதான காதலை. ********** எரிப்பவர்களிடம் கேட்டுப்பார் ஒரு இடம் எரிய…

  17. Leave me alone. என்னை தனியாக இருக்கவிடு. கட்டிக்கட்டியாய் இரத்தம் சுரந்து சட்டை எல்லாம் நனையும். மாமிசம் கழுவிய நீர் போல் உதிரப்போக்கு அதிரப்போகும். வலிக்கும் தாங்கிக்கொள்வேன். சங்கடமாகும் சமாளித்துக்கொள்வேன். சஞ்சலமாகும் நெஞ்சுறுதிகொள்வேன். வயிற்றுக்கு கீழ் தசை பிடிக்கும் மசையமாட்டேன். மார்பு வீங்கி தலைவலிக்கும் சோர்வு கொள்ளமாட்டேன். உணர்ச்சியுண்டாகும் உணர்ந்து நடந்துகொள்வேன். தோள்மூட்டு வலிக்கும் தோற்றுவிடமாட்டேன். வெறுப்பேறும் பொறுத்துக்கொள்வேன். அருவருப்பாகும் அலட்சியப்படமாட்டேன். சோ…

    • 1 reply
    • 927 views
  18. ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து.) அழகு. நீல வானம் அழகு - அதில் பறக்கும் குருவிகள் அழகு பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில் மலரும் மலர்கள் அழகு உயர்ந்த மலைகள் அழகு -அதில் வளரும் தேயிலை அழகு நீண்ட கடல் அழகு - அதில் விளையும் முத்து அழகு பூக்களின் இதழ்கள் அழகு - அதில் தேனுறிஞ்சும் தேனீ அழகு பச்சை புல்வெளி அழகு - அதில் மேயும் பசு அழகு மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )

  19. நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை… நவம்பர் 11, 2020/தேசக்காற்று/உலைக்களம்/0 கருத்து நிலத்தை உடைத்துப் பீறும் நெருப்பாற்றை கைகளால் பொத்தலாம் என்றா நினைத்தாய்? மின்னாமல் ஒரு இடி எதிரியின் மடியிலே – விழுந்தது. பகைவனின் சிம்மாசனத்தின் பட்டு பட்டுத்துணியில் பொத்தல் விழுந்தது. கண்டியில் எண்கோண மண்டபத்தின் சுவர்கள் வெடித்துச் சிதறிக் கொண்டன. ஜெயவர்த்தனபுரத்தின் பாராளுமன்றப் படிக்கற்கள் மந்திரி;களின் பாதம்படுவதற்கு கண்டனம் தெரிவித்தன. ‘இலங்கை இராணுவம் அணிவகுப்புக்கு மட்டுமே அழகானது’ சிங்கள மக்கள் தெரிந்து கொண்டனர். “சிசில்” வெறும் விசில் என்பதை பூநகரிக்குள்ளே புலிகள் புகுந்தபோது கூலிப்படைகள் க…

  20. 1983ம் ஆண்டு கலவரம் தொடங்குவதற்கு ஒரு சில நாட்களின் முன்னம்தான் எனது யப்பானியத் தோழி ஆரி யுடன் தமிழகத்தில் இருந்து கொழும்பு திரும்பியிருந்தேன். கொழும்பில் சி.ஐ.டி தொல்லை இருந்தது. அதிஸ்டவசமாக கலவரத்துக்கு முதன்நாள் முஸ்லிம் கிராமமான மல்வானைக்குப் போயிருந்ததால் உயிர் தப்பியது. 1983ம் ஆண்டுக் கலவரத்தைப் பதிவுபண்ணிய இக் கவிதை வெளிவந்த நாட்களில் பேராசிரியர் பெரியார்தாசன் 100க்கும் அதிகமாக பிரதி பண்ணி தமிழகத்தில் பலருக்கு கிடைக்கச் செய்திருக்கிறார். இது அதிகமாக வாசிக்கப் பட்ட எனது கவிதைகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். ஜெயபாலன் உயிர்த்தெழுந்த நாட்கள் -வ.ஐ.ச.ஜெயபாலன் அமைதிபோல் தோற்றம் காட்டின எல்லாம் துயின்று கொண்டிருக்கும் எரிமலை போல. மீண்டும் காற்றில் மண் வ…

    • 2 replies
    • 723 views
  21. கைகள் இரண்டை கழுவாமல் கோக்குறாங்க உடல்கள் இரண்டை குளிக்காமல் தழுவுறாங்க இதழ்கள் இரண்டை எச்சிலுன்னு பாராமல் கவ்வுறாங்க நாக்கு இரண்டை நாதாரிகள் நக்கிறாங்க..! வாய்கள் இரண்டில் வார்த்தைகளோ ஆபாசம் கண்கள் இரண்டில் காட்சிகளோ அபந்தம் கைகள் இரண்டில் வேலைகளோ அசிங்கம்..! சோடி இரண்டு புதர்களுக்குள் குத்தாட்டம் உடல்கள் இரண்டு கார்களுக்குள் பந்தாட்டம் கால்கள் இரண்டு போடுவதோ கரகாட்டம்..! இணையத்தில் இணையுது இரண்டு FB இல் உடையுது இரண்டு துணிகள் துறந்து நடக்குது நாடகம் அதை காணொளின்னு பதியுது பகிருது காமத்தில் கோலோஞ்சினது..! கடைசியில்.. கொஸ்பிற்றல் நிறையுது பக்கெட்டுக்கள் குமியுது மாத்திரைகள் தீருது கூடவே கிருமிகளுக்கும் கொண்டாட்டம் அதுகளும் இது…

  22. கோப்பையில் குடியிருக்கும் என் வாழ்வு பற்றிய புரிதல் நிரப்பி முடிக்க இனி ஒன்றும் இல்லை எல்லா glass களிலும் நிரம்பித் தளும்புகின்றது மது முதலில் சின்ன எரிச்சலுடன் இறங்குகின்றாள் தேவதை ஆடை கழற்றி அணங்கு ஆடுவது போன்ற பிரமை உடலின் நரம்பெங்கும் உலவுகின்றது ஒவ்வொரு முடிச்சுகளிலும் சொர்க்கம் ஒவ்வொரு உறிஞ்சல்களிலும் அற்புதம் வெற்று glass களிலும் மிச்சமிருக்கின்றது ஒருவனின் வாழ்வு பற்றிய புரிதல் ************ கடந்த வருடம் என் glass களில் இன்னேரம் மரணம் நிரம்பியிருந்தது மரணச் செய்தியால் என் வாழ்வுக் கிண்ணம் நிறைந்திருந்த காலம் அது என் நண்பர்கள் என் மருமக்கள் என் உறவுகள் என்று கொத்தாய் அழிந்த காலம்…

  23. Started by sWEEtmICHe,

    :arrow: இங்கே கிலிக் >>> பாசம் என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவர் அடுத்த முகம்...? ----பா-ச-ம்........ பாசத்தை காட்டி என்னை கொல்லாதே செல்ஷ் வார்த்தை ஒன்றை சொல்லி..... பூமியின் பந்தையே சுற்றி விட்டாய் ஏன்டா பாசம் வளர்த்தேனோ உன் மேல்........ புரியுமுன்......... ... சுடும் இதையத்தில் முள் தைத்தாய் இன்று உன் நினைவை புதைத்து விட்டேன் ........சாம்பலாய் சொல்லிவிட்டு பிரிந்து போகிறேன்...... :cry: :cry: விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)

  24. அவளின் அன்பு என்றும் மறக்கமுடியாது.... அவள் என்னுடன் இருந்த நாளில் துக்கம் என்பதே தெரியாது. அவளின் குறும்பு ஒரு மகிழ்ச்சி அவளின் கள்ளத்தனமான வெறுப்பு ஒரு சுகம்.............. என்று அவளை பிரிந்தேனோ-அன்றே நான் என்னை இளந்தேன்.. அவள் எனக்கு அவளின் அன்பைத்தான் விட்டுச் செல்லவில்லை-ஆனால் பசுமையான அவள் நினைவுகளை விட்டுச்சென்றுள்ளாள்.... அவள் நினைவுகளுடனே என் நாளை களித்துடுவேன் அவள் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் அழியா சுவடுகள் எத்தனை காலம் ஆனாலும்-அது மாறாத காதல் வடுக்கள்.................... >>>>***டினேஸ்***<<<< >>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று ந…

    • 2 replies
    • 1.9k views
  25. Started by Thulasi_ca,

    அம்மா அகிலத்தின் ஆரம்பமே அம்மா ஆத்மாவின் துடிப்பே அம்மா இன்பத்தின் அத்திவாரம் அம்மா ஈகையின் சின்னமே அம்மா உறுதியின் உயிரே அம்மா ஊக்க மாத்திரையே அம்மா எளிமைக்கு உதாரணம் அம்மா ஏற்றம் தருபவள் அம்மா ஐயம் தீர்ப்பவள் அம்மா ஒழுக்கதின் உதாரணம் அம்மா ஓயாத அலையே அம்மா ஔடதம் வாழ்வில் அம்மா துளசி

    • 12 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.