கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு, துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு, தயக்கத்தில் கைகொடுக்க நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... புகழ் எதிர்பார்க்காதது நட்பு, சுயநலம் தெரியாதது நட்பு, தலைக்கனம் இல்லாதது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... குழந்தையில் விளையாடிட நட்பு, இளமையில் குறும்புகள் செய்திட நட்பு, முதுமையில் கலந்துரையாடிட நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உனக்கு உறவாக வாழ்வது நட்பு, உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு, உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி... உன்னை மனிதனாக்குவதும் நட்…
-
- 14 replies
- 5.6k views
-
-
-
- 27 replies
- 5.5k views
-
-
-
காதலை தருகின்றேன் இரண்டாண்டுகளுக்கு முன் இதயத்தில் உதித்த காதலை இன்று என்னிடம் சொல்லிய இளங்காளையே நீ நலமா? இன்று எனை சந்தித்த போது உன் கைவிரல்கள் நடுங்கியதேனோ பேச்சுக்கள் தடுமாறியதுமேனோ வியர்வைத்துளிகள் பூத்ததுமேனோ "எந்தன் குரல் கேட்டு உந்தன் பேச்சதனை மறந்தனையோ என் கண்களைப் பார்த்து உன் தூக்கத்தையும் தொலைத்தனையோ" ஓ...! இதைச் சொல்லத்தானோ இவ்வளவு தயக்கங்களா இருப்பினும்... நீ சொல்லிய காதலை உடன் ஏற்க மறுத்த என்னில் கோவங்கள் சிறிதுமின்றி சோகமான சிரிப்போடு நாளை என் பிறந்ததினம் நீ கட்டாயம் வரணும் என என் தலையில் கைவைத்து சத்தியம் செய்து சென்றவனே உன் பிறந்தநாள் பரிசாக என் காதலை உன்னிடம் தருகின்றேன்
-
- 46 replies
- 5.5k views
-
-
போருக்கு பின் எனது கிராமத்துக்கு ஒரு முறை செல்ல முடிந்தது உடைந்த சட்டி பானைகளும்..... விளக்குமாறு தும்புத்தடிகளும்... அகப்பை காம்புகளுமே - அம்மாவினது அடையாளமாக மிஞ்சியிருந்தது. அப்பாவின் இருப்பு சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்... பழைய முடிச்சு பொட்டாளியிலும்.... புலப்படுத்தப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து புதைந்து கிடக்கிறது எனது பழைய காற்ச்சட்டை ஓரிரு நாட்களேனும் தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம். உரலும் அம்மியும் முற்றத்தில் சிதறிக்கிடந்தது. ஊரார்கள் தூக்க முடியாமல் விட்டு விட்டார்கள் போல...... தங்கச்சியினது - எந்த அடையாளங்களும் அங்கே காணப்படவில்லை... எதிரிகளால் அவள் கொலை செய்யப்பட்டிரு…
-
- 20 replies
- 5.5k views
-
-
-
- 15 replies
- 5.4k views
-
-
எச்சரிக்கை மடல் மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும், தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவு செய்து மேற்கொண்டு, இக்கவியின் இரத்த ஓடையை இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்! ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது. நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது. உந்தும் வலு உறுதியாக வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம் வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது. பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால் எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும். வலியின்றி வளர்ச்சி இல்லை. வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும். வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு…
-
- 20 replies
- 5.4k views
-
-
"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு... 30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு... இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க.. கமல் படம். மன்மதன் அம்பு. மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு வந்து விட்@டா@மா என்கிற அளவிற்கு ஒரே கமலஹாஸன் களும்! கமல ஹாஸிகளும்! அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு நூல்தனம் காட்டும் அவரை பரமக்குடி பையன் என்றும் பெரியாரின் பிள்ளை என்றும் பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள் இந்த அம்பு... இராம பக்தர்களின் கைகளிலிருந்து …
-
- 34 replies
- 5.4k views
-
-
பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?! (முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.) சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை.. பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா? சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா? பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்.. சோழியான்: சரி.. பாடும்.. பாரதியார்: தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி த…
-
- 46 replies
- 5.4k views
-
-
இன்னும் ஈரமாய் இதயத்தில்....! பூவரசம் இலையில் பீப்பி ஊதி.. லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி.. வாழைநாரில் தாலி கட்டி.. மண்சோறில் விருந்துவைத்து... ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...! தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து... பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி... ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து... உரத்து உரத்து பாடினது நினைச்சாலே.. இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...! மாங்காய் சம்பல் போட்டதும்.. நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்.. பொன்வண்டு பிடித்து தீ பெட்டியில் அடைத்து... குஞ்சு பொரித்திட்டுதா என்றே... நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து... இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..! தீ பெட்டியில் தொலைபேசி பேசி ம…
-
- 37 replies
- 5.4k views
-
-
முன் சிரித்து உள்ளத்தில் ஒன்றை வைத்து உண்மையில்லா வார்த்தைகளை பேசுகின்ற மனிதர்களோ நாமெல்லாம் ஓரே இனம் ஆனால் என் குலம் தான் உயர்ந்தது நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள் ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர் அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு வேஷம் போடும் சுயநலவாதிகளோ எது உண்மை ? எது பொய்? இதைவிட எது நன்மை என்று பார்க்கும் மனிதர்களோ துன்பங்களையும் , துரோகங்களையும் அவமானங்களையும் கண்டு வாடிப்போகாதே மனமே
-
- 21 replies
- 5.3k views
-
-
பள்ளி காதலை நினைத்துப் பார்க்கிறேன் அமைதியான ஒடையின் - சிறு அலையெழுப்பும் சத்தங்களாய் என் மனதில் சிறு சலனங்கள். ஆரம்ப கல்வியின் பின் அடுத்ததாய் ஆறாம் வகுப்பு முதல் சில நாட்களில் முன் அறியா பல முகங்கள் பல்வேறு திசையிருந்தும் பாடசாலையை மொய்த்திருக்க என் வகுப்பிலே பளிச்சென்று ஒர் முகம் பட்டாம் பூச்சிபோல் என்கண்களில் ! பயமொரு பக்கம் மீண்டும் பார்க்க துடித்தது என் முகம் காரணம் புரியவில்லை அவளை பட்டாம் பூச்சியென்பதா பால் நிலவு என்பதா பயமறியாது துள்ளி ஓடும் மான்குட்டி என்பதா? அவளின் பார்வையொன்று என்மேல் விழுவதற்கு கண்களை மூடிக்கொன்று கணபதிக்கு கற்பூர நேத்தி வைக்கிறேன் மூடிய கண்களை மறுபடியும் திறப்பதற்குள் உணர்கிறேன…
-
- 7 replies
- 5.3k views
-
-
நட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....!காவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....நான் சொல்லிவிடப்போகிறேன் ....?எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!!புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....?புனித பைபிளில் சொல்லாத நட்பா ....?மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....?இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...?நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...?சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...?முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....?பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!!மனைவியிடம் எதையும் மறைக்காமல் .....பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....புரிந்…
-
- 3 replies
- 5.3k views
-
-
uary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே …
-
- 19 replies
- 5.3k views
-
-
வித்தியாசமாக இந்தத் திரி சின்னச்சின்னதாக கவிதைகளும் காட்சிகளும் பேசும் தொடர்
-
- 44 replies
- 5.3k views
-
-
ஒன்பதாம் ஆண்டு.... சைவ சமய பரீட்சை குனிந்து கரிசனையோடு எழுதுகிறேன்..... என் கண்ணும் விடைத்தாளும் விளையாடிகொண்டிருக்கும் வேளை ஏதோ ஒன்று அந்நியமாய்... என் கண்ணில் இடர்ப்பட... என் மனதிலோ.. வெட்கம் பூரிப்பு...... ஓர் இனம் புரியாத மாற்றம்... இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு.. அது... என் மூக்கின் கீழோரம் ஆடவனின் வீரச்சின்னம் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.... பரீட்சை எழுதவில்லை... ரசித்திருந்தேன்.. அன்று தான் பிறந்திருந்த என் மீசையை..... வருவாயா வருவாயா என பார்த்து.. களைத்திருந்து... காத்திருந்து.. என் மூத்தோர்... மீசையை.... நான் பார்த்து அவாப்பட்டு.... இறுதியில் …
-
- 26 replies
- 5.3k views
-
-
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன் நீயே சொல் .. என் நம்பிக்கை நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல் நீ தள்ளியே நின்றால் விழுந்திட மாட்டெனோ உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா சரி வா போய் வருவோம் அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான் ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில் இரு…
-
- 9 replies
- 5.3k views
-
-
-
மன அழுத்தங்களும் வருத்தங்களும் மனம்விட்டு அகல, சிலநேரம் கற்பனைக் கடலில் நீந்துவது வழமை! அப்படியான இன்றைய பொழுதிலும், மனதில்தோன்றிய கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஒரு கவிதையாய் கிறுக்கினேன்! என் மனத்தின் மீது தேனாய் இனித்த உணர்வுகள் "சென்சார்" செய்யப்பட்டு கவிதையாய் உங்களுக்கு.......... (வயது வந்தவர்களுக்கு மட்டும்) உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ , உடல் முழுதும் பரவிச்செல்ல... கடல் மீது மிதக்கும் கப்பலானது, தேகங்கள் இரண்டும்...! மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக... அமைதியான கடலும், ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்... அடங்காக் குணங்கொண்டது...! நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்... வள்ளமும் கள்ளமாய் செல்லமாய், கொஞ்ச ... மோக வேகமெடுத…
-
- 27 replies
- 5.3k views
-
-
கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு. உயிராய் முளைத்த அவர் காதலில்... பூவாய் மலர்ந்தேன் செடியாகும் கனவோடு..! கருவறை தந்தவள் கருணையே இன்றி பாதியில் பறித்தாளே சாய்த்தாளே என்னுயிர்.! கண்ணீர் கூட காணிக்கை இல்லை உரிமைகள் கூட எழுத்தில் இல்லை கருக்கலைப்பென்று வாழ்வை அழிப்பவரே ஒரு கணம்... எனக்காய் அழுவீரோ..??! இல்லை தொலைந்தது தரித்திரம் சரித்திரம் படைபீரோ..??! நீரும் ஓர் நாள் கருவோடு இருந்தீர் மறந்தீரே துணிந்தீரே பாதகரே..! கண நேர சுகத்துக்காய் ஏனென்னை பலியிட்டீர்... சிதைக்கின்றீர் தளிருடலை..! பிறந்ததும் கொஞ்சும் உறவு பிறக்க முன் பாடையில் போவது பாவமில்லையோ..??! தளைக்க மானுடம்..!!! கரு…
-
- 11 replies
- 5.3k views
-
-
உன்னை .... காதல் செய்த நாளே .... காதலில் கருத்தரித்த நாள் .... என்னை .... காதலித்த நாளே .... காதலின் பிறந்த நாள் ....!!!+உன்னை ..... மறக்கும் நாள் வரின் .... என்னை இழக்கும் நாள் .... தொடங்கும் ..... உன்னை .... இழக்கும் நாள் தோன்றின் .... என் ......... மரிக்கும் நாள் தோன்றும் ....!!!@கவிப்புயல் இனியவன் காதல் ஒன்று கவிதை இரண்டு
-
- 6 replies
- 5.3k views
-
-
கோத்தபாயா..! காலக்கெ(கே)டு உனக்கு நாங்கள் வைப்போம்... கவிதை - -இளங்கவி உன் காலத்தின் கெடு கட்டுப்படுத்தா வீரர்கள் காலவதியான உன் வீரத்துக்கு கட்டுப்படா வேங்கைகள்.... எத்தனை காலக்கெடு உனக்கு எத்தனை தோல்விகள் இருந்துமா புரியவில்லை; புலிகள் உன் சொல்லெல்லாம் சுட்டெரிக்கும் தமிழீழச் சூரியன்கள் கோழையின் சொல்லுக்கு ஓர் துளியளவும் மதிப்பில்லை எம் வீரர் சொல்லமாட்டார் சொன்னால் உன்னுயிர் உனக்கிலை... அப்பாவி உயிர்களை கொன்றொளிக்கும் ஆசாமி அதன் பின்னர் சொல்லிடுவாய் புத்தம்..! சராணம்..! கச்சாமி..! தமிழீழ போர்களத்தில் எங்கள் பூக்கூட நெருப்பாகும் புரிய மறுத்துவிட்டால்; உங்கள் பிணங்களைக்கேள் பதில்சொல்லும் புலிகளை நினைத்தாயோ; உ…
-
- 12 replies
- 5.3k views
-
-
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008 உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்! எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான் சொந்த இனத்தவனைக் நீங்கள் காத்திட …
-
- 22 replies
- 5.3k views
-
-
இடிவிழுந்த மனதோடு இயங்குகிறேன் _இங்கு தடியிளந்த கொடியென தளம்புகிறேன் .... வெப்பமூச்சு வெடித்தெழும்ப தேடுகிறேன் _இங்கு எப்பவாச்சும் ஒருகண் மூடி எப்படியோ தூங்குகிறேன் .......... தப்பாச்சோ நான் வந்தவழி _இன்னும் முப்பாச்சல் போடுது பட்டகடன் ! கஞ்சியோடு கந்தல்துணியோடு கவலையற்றிருந்தவன் _அடுத்த கணத்துக்கே அஞ்சி வாழ்கிறேன் வண்ணமாக ......... இல்லையென்றால் அசிங்கமென்று நெஞ்சிலுதைக்குது ௬ட்டம் ! முந்திவந்து வென்றவறெல்லாம் முக்குகினம் சந்திரனிலிருந்து தாம் வந்தவர்போல் பிந்திவந்தவரைக்கண்டால் .....இவங்க . தொந்தரவென்று புலம்புகினம் ........ எதுவும் சொல்வதில்லைஉறவுகளுக்கு ஏங்கவேண்டுமா என்னால் ? ஒற்றை வார்த்தையில் மு…
-
- 15 replies
- 5.3k views
-
-
உன்னை நினைத்து எழுதிப்பார்த்தேன்... வார்த்தை வரவில்லை இன்னும்- முயன்று பார்த்தேன்... முடிவாய் ஒரு வரி - அது என் தேவதை ! ஆம்..... அழகுக் கவிதை அது.... உன் பெயர்தானடி! .................................................
-
- 34 replies
- 5.2k views
-