கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
சைவப்பற்று -பாவேந்தர் பாரதிதாசன்- இரும்புப் பெட்டியிலே - இருக்கும் எண்பது லக்ஷத்தையும், கரும்புத் தோட்டத்திலே - வருஷம் காணும் கணக்கினையும், அருந்துணையாக - இருக்கும் ஆயிரம் வேலியையும் பெருகும் வருமானம் - கொடுக்கும் பிறசொத்துக்களையும், ஆடை வகைகளையும் - பசும்பொன் ஆபரணங்களையும் மாடு கறந்தவுடன் - குடங்கள் வந்து நிறைவதையும், நீடு களஞ்சியம்கள் - விளைந்த நெல்லில் நிறைவதையும், வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த வட்டித் தொகையினையும், எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள் எங்கள் மடாதிபதி வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் - அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பலபேர்கள் - குலவிப் பின்வர முன்நடந்தா…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
உறவுகளே... ஒரு கவிதைக்கு அதைப் படைத்தவனால்தான் பூரணமான உயிர்ப்பினையும் உணர்வினையும் பூரணமாகக் கொடுக்க முடியும் என எண்ணுகின்றேன். அத்தகைய என் முயற்சியில்.... பரீட்சார்த்தமாக இன்று முயற்சிசெய்ததன் விளைவே இந்த ஒளிப்படத் தொகுப்புடனான கவிதை. இதனை என் சொந்தக் குரலில் படைத்திருக்கின்றேன். தயவுசெய்து சகித்துக் கொள்ளுங்கள் !!!
-
- 21 replies
- 3.1k views
-
-
நியூயோர்க் ஜம்பரில் லண்டன் ஸ்ரைலில் பி எஸ் 3 வாங்க பிளாசா போனேன் பிற்சாவோடு நிற்கையில் லப்டப் அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் உன்னைக் காண ஐ ஆர் கொண்டு ஸ்கான் செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் போல திறில்லாய் இருந்தாய்..! புளூருத் சிக்னலாய் என்னைத் தந்தேன் மொபைல் போன் கமராவாய் நீ என்னைப் பார்த்தாய். ஐபொட் ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி 4இல் இசைதேடி எம்பி 3 இல் இசைந்தாய் என்னோடு. ஜி பி எஸ் நவிகேற்றராய் நீ வந்ததால் கை வேயில் ரவுண்டெபவுட் தேடி அலையும் நிலை களைந்தேன். டிஜிற்றல் கமராவாய் நீ அருகில் காணும் காட்சிகளோ பல மெகா பிக்சல் அளவுகளில். என்ன மாயமோ நானறியேன் சடின்லி.. பென்ரியம் 4 காட்டிஸ்க் போல ஸ…
-
- 9 replies
- 2.2k views
-
-
காதல் கிங்கை மீண்டும் ஒருவர் கவிதை ஒன்றை எழுத உசுப்பேத்தி உள்ளார். நானும் எனது சரக்கை இங்கு அவிழ்த்து விட்டுள்ளேன். சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!! எல்லாமே நீ தானடி!! கவனக் குறைவாக நான் எனது வாழ்க்கை காரை ஓட்டி அக் சிடண்ட் பட்ட போது உயிர்ப் பிச்சைதந்த Air Bag.. கயவர்கள் எனைப்பிடித்து அதளபாதாளத்தில் தள்ளிவிடும் அகால நேரங்களில் என் சுவாசத்திற்கு உதவும் ஒட்சிசன் சிலிண்டர்.. எனக்குள் இருக்கும் வியாதிகளைக் கண்டுபிடித்து சிகிச்சை தருகின்ற லேசர் கதிர்.. நான் சோர்வடையும் நிலையில் instant ஆக அன்பைப் பொழிகின்ற ATM மிசீன்.. என் உடலை செழிப்புடன் வைத்திருக்க ஊக்குவிக்கும் Fi…
-
- 24 replies
- 3.6k views
-
-
அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே! உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா..? எல்லாம் முடிந்து விட்டது. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை! என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம். றிசானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. அதைக்கூடத் தாங்காமல் உன்பெற்றோர் தீயில் விழுந்த புளுவாய் தீய்ந்து போனதை நாம் அறிவோம். இப்போது இறந்துபோனதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..! உன் மரணச் செய்தி கேட்டவுடன் தாய் மொழிந்த வார்த்தைகள் 'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?' இன்னும் …
-
- 3 replies
- 603 views
-
-
சொர்க்கம் மனதிலே...... எத்தனை தடவை பிறப்பேன் எத்தனை தடவை இறப்பேன் எத்தனை முறை நான் புதைவேன் அத்தனையிலும் நான் உயிர்ப்பேன் கருவினில் தோன்றி கல்லறை வரையும் உறவுகள் தான் எம் வேலி கனவுகள் போல கலைந்திடும் வாழ்வில் கவலைகள் யாவும் போலி புலர்ந்திடும் பொழுதில் மலர்ந்திடும் பூவும் பொழுதினிலே தலை சாயும் அலர்ந்திடும் பொழுதில் விடிந்திடும் வேளை அழகிய மலர்கள் பூக்கும் இலையுதிர் காலம் உதிர்ந்திடும் இலைகள் இறப்பினும் மரங்கள் இருகு;கும் இயற்கையின் கையில் இயல்புகள் மாற இலைதுளிர் காலம் பிறக்கும் வசந்தங்கள் வந்தால் பாரினில் எங்கும் பசுமையின் புரட்சிகள் தோன்றும் சுகந்தமாய் சேவை தொடர்ந்திடும் வேளை சொர்க்கத்தின் வாசல் திறக்கும் பிறர் நலம் காக்கும் மனமது ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
சொற்களால் எந்தன் காதலை சொல்லவும் முடியுமா...? பார்வை ஒன்று புரியவில்லை.. பார்த்த என்னமோ மறையவில்லை அடுத்தடுத்த கேள்விகளுக்குள்ளேயே ஏன் இந்த தடுமாற்றம்? உணர்ச்சிகள் மற்றும் உயிர் வாழ ஆசை படுதே இதையத்திலை ... எங்கோ கொண்டு செல்லுதே சொற்களால் எந்தன் காதலை சொல்லவும் முடியுமா...? ... நடந்தது..... இதயம் இசையால் வசமாகா இதயம் எது? சுவாசம் என்னை தீண்ட ...உருவம் வந்தது நப்பின்னைக்குச் சொல்லவும் முடியவில்லை இதைய சந்தோசம் தந்த விழி நீர் அருவியா? அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் திரும்பத் திரும்ப அந்த நொடி என்னை பார்த்தது கண்கள் சொல்லும் கதை.... தொலைந்த அவள் என் பின்னால் வந்தாள் உயிரைக் கண்டேன் இன்று காலங்கள் மாறும் கண்கள் மாறுமா…
-
- 15 replies
- 2.2k views
-
-
சொல் அப்பா சொல்: வெள்ளை பனி உருகி வீட்டின் முன் வழிகின்றது வளைந்து செல்லும் வீதியெங்கும் பனியின் சிதறல்கள் காற்றின் திசையெங்கும் குளிரின் வாசம் பனி பார்க்க விரும்பும் மகனை கூட்டிச் சென்று காட்டுகிறேன் குவியலாக இருக்கும் பனிக்குள் குளித்தெழும்புகிறான் சறுக்கி வீழ்ந்து சிரித்து எழும்புகிறான் வெண் நுரை அள்ளி வீசி விளையாடுகிறான் இப்படித் தானே அப்பா நீயும் ஊர் முழுதும் மழை நிரம்புகையில் சைக்கிளில் என்னை வைத்து வெள்ளம் காட்டுவதும் மழையில் நனைவதின் சுகமும் வெள்ளத்தை கூறு கிழித்து சைக்கிள் ஓட்டுவதன் பரவசமும் அப்பா நீ காட்டியது தானே எனக்கும் பின்பு பனை வெளிகளினூடு போகையிலும் மலைக் குன்றுகளினூடு நடக்க…
-
- 29 replies
- 5.2k views
- 1 follower
-
-
எல்லோரும் அவரவர் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்ய வேண்டும். பணத்தால்.. வசதியால் மட்டும் மனிதருக்கு மகிழ்ச்சி வந்து விடாது.. நம் செயல்களால்தான் இல்லறம் இனிக்கும்... பெண்களின உடல் சார்ந்த பலவீனங்கள்.. தொல்லைகள் எத்தனை ஆண்களுக்குத் தெரிகிறது...? “அனாசின் போட்டுக் கொண்டு வேலையைக் கவனி...” என்று சொல்லி விட்டு டி.வி பார்க்கும் என் அன்புக் கணவனே... மாத்திரை எதற்கு...? அலறும் டி.வி சப்தத்தைக் குறைத்து விட்டு நிறையப் போச்சா.. சோர்வா இருக்கா என்று அன்புடன் கேளேன்... உதடு கடித்து.. கண்மூடி சாய கொஞ்சம் உன் தோள் கொடேன்.. வயிறு வலியால் பெருகும் கண்ணீரைத் துடைத்து விடேன்... சுமை இறக்கும் குழந்தையை அலம்பி விட்டு..உடை மாற்றி தொட்டிலாட்டி கொஞ்சம் தூங்க …
-
- 1 reply
- 465 views
-
-
புரட்சி -----------இனி ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்..... ................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை...... ................................................................உலக விடுதலைக்காய் போராடிய......................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ...................…
-
- 2 replies
- 992 views
-
-
சில்லென்ற காற்று மார்புக்குள் நுழைந்து.. சில்மிஸம் செய்ய.. ஈரமண்ணில் கால்கள்.. ஆழப்பதிந்து.. நடையைத் தடை செய்ய.. உள்ளேறிய போதை ஜிவ்வென்று... பறக்கச்செய்ய... கடலலைகளின் பேரிரைச்சல்.. குழந்தைகளின் கூச்சல்.. சுண்டல்காரன்..கத்தல் எல்லாம் காதுக்குள் நுழைந்து..இதயச் சுவருனுள்..எதிரொலி செய்ய.. தள்ளாடி நடந்த கால்கள்.. கல்லில் மோதி..கீழே விழுந்து..மெல்லத் தவழ்ந்து.. கரையேற்றி விட்ட படகோடு சாய்ந்து.. வயிற்றுக்குள் குமட்ட.. எடுத்த வாந்தியோ.. சட்டையெல்லாம்... தொத்திக்கொள்ள.. நாற்றம் மீன்.. நாற்றத்தை தூக்கி சாப்பிட...தலைசுற்ற.. இருட்டும் கடல்.. நிலவோடு ஏளனம் செய்ய.. பக்கத்தில் யாரோ.. "இந்த அலையும்.. நீயும்..ஒ…
-
- 16 replies
- 1.8k views
-
-
மழை வரும்போதுதான் குடையை தேடுவான்! மூச்சு முட்டும்போதுதான் யன்னல் இருப்பதை நினைப்பான்! நாளை எப்பிடி- சிரிக்க வழியென்று எண்ணி இன்றைய பொழுதை அழுதே- தொலைப்பான்! உழைக்கும் காலத்தில் சேமிக்க நினையான்! உதிரம் செத்து போனதொரு காலத்தில்- காசை எண்ணி தேம்பி தேம்பி அழுவான்! படிக்கும் காலத்தில் சீ என்ன வாழ்க்கை என்று சினப்பான்! காலம் முடிந்தால் ஐயோ இனி என்னாகுமோ என் வாழ்க்கை என்று அழுவான்! அடை மழை பெய்யும் நாளில் - நீரை சேர்த்து வைக்க நினைக்கான்! அனல் வீசும் கோடை வந்தால் குடத்தை தூக்கி கொண்டு ஊர் ஊராய் திரிவான்! போர் செய்யும் வீரருக்கு ஐந்து சதம் கொடுக்கான்! ஊரெலாம் - குண்டுவீச்சில் ஒருமூலை சென்றொதுங்கினால் தமி…
-
- 16 replies
- 2.8k views
-
-
சொல்லு தலைவா ! எங்கள் பகை கொன்று உங்கள் முன்னே வரவா நில்லு தமிழா! நீ பக்கம் நிற்க அண்ணன் படை வெல்லும் அல்லவா! (சொல்லு) கண்ணில் தெரியுதெங்கள் தேசம் - நாளை கையில் வந்து சேருமல்லவா! வையம் போற்றுமொரு நாடு - நாளை எங்களது ஈழம் அல்லவா! (சொல்லு) பாவம் கொஞ்சம் பாரு! ஓடச் சொல்லிக் கேளு!! ஓடாப்பகை நாமழித்து வீடனுப்பலாம் ஈழமண்ணை மீட்டெடுத்து நாடமைக்கலாம். வன்னி மண்ணைப் பாரு - மண்ணை தொட்டு நெற்றி பூசு வீரம் வாழும் மண்ணு என்று வாழ்த்துப்பாடலாம் வீழ்ந்த வீரர் காலடியில் பூக்கள் தூவலாம். அணைகட்ட உழைத்திட்ட அணிலாய் - நம் அண்ணனின் அணியிலே செல்வோம். பகையென்று வருகின்ற எவர்க்கும் - நம் மண்ணிலே புதைகுழி அமைப்போம் ப…
-
- 11 replies
- 2.3k views
-
-
(கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட வாணிவிழா - 2008 கவியரங்கில் இடம்பெற்ற எனது நண்பன் கி.குருபரனுடைய கவிதை இது) தூயதாய் நூல்கள் கற்று துலங்கிவரும் இச்சபையில் பாலகன் நான் வந்து பாடுவதோ? – யாரிவரோ? தொக்கிநிற்கும் கேள்வி துவங்கின் எனைக்காக்க விக்கினேஸ்வரா சொல்லு விடை! வள்ளியை மணமுடிக்க வயோதிபனாய் வந்த வெள்ளி மயில் வாகனனே வேலவனே – நல்லூரின் உள்ளிருந்து கொண்டே உயிர்காப்பாய் என் கவிக்கு கல்லெறி சேராமல் கார்! பெற்றுப் புரந்தந்து பேணிப்பல செய்து உற்ற தேவைகளை உடன்முடித்து- கற்கவைத்து நாலுபேர்முன்னே நடமாட வைத்த வைத்த அம்மா நீ போனாலும் மறவேன் புகழ்! எதுகை மோனை இலட்சணங்கள் கற்பித்து புதுமை செய்கின்ற புரட்சியனே – ச வே ப பா வாடை பிடிக்க வைத்…
-
- 7 replies
- 2.7k views
-
-
சொல்வனம் படம்: கே.ராஜசேகரன் அன்பு எனும் நான் என் அன்பு ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம் மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல் கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும் தாய் யானைப் பிளிறல் சத்தம் கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா முதுகாவலாளியின் குட்டித் தூக…
-
- 41 replies
- 20.5k views
-
-
சொல்வாயா...!!! உனை நான் பார்த்தேன் எனையே உடன் மறந்தேன் காளை உனை நினைத்து காதல் கொண்டு துடித்து நீ செல்லும் வழி மீது நிலா இவள் விழி வைத்து துடிதுடிக்கும் இதயத்தோடும் படபடக்கும் விழிகளோடும் கன்னி நான் காதலோடு உனை எண்ணிக் காத்திருக்கின்றேன் திருமகனே என் மனமகனே ஒருமுறையேனும் உன் உதட்டைக் குவித்து நெத்தியில் அன்பாக முத்தம் ஒன்று இட்டு சத்தமாக சொல் கன்னி இவளே உன் காதலி என்று...! சொல்வாயானால், வெண்ணிலா சிரிக்கும் விண்மீன் ஒளிரும் வானம் பூத்தூவும் வானவில் நிறம்கூடும் மின்னல் மின்னும் முகில்கள் நாணும் இவைக்காக என்றாலும் அவைமுன் காதலை சொல் கன்னி இவளே உன் காதலி என்று...!
-
- 15 replies
- 2.7k views
-
-
அன்பர்களே, நான் சிங்கப்பூரை விட்டு 3 வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்தபோது என் துறையில் (கட்டடவியல் பொறியியல்) வேலை கிடைக்கவில்லை. 3 மாத முயற்சியின் பின் பலர் சொற்படி தொழிற்சாலை வேலையில் சேர்ந்தேன். சோகம் தாங்க முடியவில்லை. பின்னே? சிங்கப்பூரில் முதுநிலை வடிவமைப்பாளராக இருந்துவிட்டு, அதை சும்மா விட்டுவிட்டு இங்கே வந்து இப்படி ஆகிவிட்டதே என்று. சிங்கபூர் நிரந்தரவாசி (PR) உரிமையைக்கூட கைவிட்டுவிட்டு வந்துவிட்டேன். தொழிற்சாலையில் மரப்பொருட்கள் செய்யும் வேலை. மேசை, நாற்காலி போன்றவை. அப்போது சோகத்தில் கவிதை பொத்துக்கொண்டு வந்தது. 1) மரக்காலை வேலை ஒன்று... ("மழைக்கால மேகம் ஒன்று.." என்ற வாழ்வே மாயம் படப் பாடல் மெட்டில் பாடவும்.) மரக்காலை வேலை ஒன்று எனை ரொம்…
-
- 10 replies
- 3k views
-
-
எப்போதும் நான் அப்படியே இருக்கிறேன் மற்றவரைப் புரியமுடியாது உற்றவரின் துயரம் அறியாது கற்பனை வானில் பறந்துகொண்டே கடிவாளமற்ற சிந்தனையோடு என்னைக் காயப்படுத்துவோரை கழற்றி எறிய முடியாதவளாய் மீண்டும் மீண்டும் மனதில் விழுப்புண் தாங்கியபடி விழுங்க முடியாதைதை எல்லாம் எப்படியோ விழுங்கியபடி ......... எப்படி மீண்டு வருவேன் நான் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் எழ மனம் ஆசை கொள்கின்றது ஆனாலும் சூழ எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் வீரியத்தில் கைகொடுக்க யாருமேயற்று காணும் இடம் எங்கும் தீ நாக்குச் சூழ செய்வதறியாது தவிக்கிறேன் நான்
-
- 2 replies
- 724 views
-
-
பரீட்சை(பிரசவம்!) தாய்மார்கள் மாத்திரமே பிரசவ வலியுடன் பிள்ளைகள் பெறுவதாய் எவர் சொன்னார்? பள்ளியில் கற்கின்ற மாணவர் நாமுந்தான் வருடத்தில் மூன்றுமுறை மகப்பேறு அடைகின்றோம்! கற்பிணிப் பெண்களிற்கு இருக்கையைவிட்டு எழுந்தால் மட்டும் வேதனை! மாணவர்களிற்கோ இருந்தாலும் வேதனை! எழுந்தாலும் வேதனை! தைமாதம் பள்ளியில் தொடங்கும் தேனிலவு சித்திரை புது வருடத்தில் பிரசவ வலியாகி எமது உயிரைக் கொல்லும்! தொடர்ந்து தேனிலவு தொழிலாளர் தினத்துடன் தொடங்கி மூன்று மாதங்களில் எமக்கு மறுபடியும் பிரசவம்! மார்கழியில் குழந்தை யேசுவின் பிறப்பு வரும்வரை தேனிலவும் பிரசவமும் பள்ளியில் எமைச் சக்கரமாய் சுற்றிவரும்! மூன்று மாதங்களில் வருந்த…
-
- 21 replies
- 3.3k views
-
-
தூத்துக்குடி முத்தே தென்பாண்டி துறைமுத்தே ஆத்தூர் கொழுவநல்லூர் ஆண்மை தமிழ் மகனே காத்து தமிழ் இந்தக் காசினியில் நிமிர வைக்கத் தீய்த்து வதை தீயில் சிதைந்து துடித்து இறந்தாய் சோத்தி உதிரிகளும் துணிந்தேழுந்தோம் மறவர்களாய் கோத்து கைமோதி குவலயத்தில் தமிழ் அரசு பூத்திடவே வைப்போம் புலியே முத்துகுமரா ஏத்தி தொழும் ஈழம் என்றும் ஒளிக் கோபுரம் நீ தமிழோசைக்காக கணியன் நன்றி www.Tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...7&Itemid=68
-
- 0 replies
- 943 views
-
-
1989.... ஈழத்தில் இந்திய ஆக்கிரமிப்பு நேரம் புலியும் சிங்கமும் கைகுலுக்கிய காலம்.... பலாலியில் இருந்து சிங்கள விமானப்படை இருக்கை கழற்றிய வெற்று.. விமானங்கள் சில பல ஆயிரங்கள் கறந்து.. மந்தைகளாய் அடுக்கிப் பறந்தன தமிழ் இளைஞர்கள் கூட்டம்..! மேற்கு நாட்டில் அகதி அந்தஸ்துக்காய் அலையும் தமிழன் அணியணியாய் புறப்பட்டான்.. காணி விற்றும் தாலி விற்றும் பணம் திரட்டியே சொகுசாய் ஒரு வாழ்க்கை தேடி.. தாயக விடியலைப் பின்போட்டு தன் குடும்ப விடியலை முன் வைத்து...! 1990...... காலம் மாறிப் போனது குலுக்கிய கரங்கள் சண்டை இட்டன..! அதே இருக்கை கழற்றிய விமானங்கள் தமிழன் தலையில் பீப்பாய் குண்டுகளாய் கொட்ட... ஓடினவன் அதிஸ்டமென்…
-
- 116 replies
- 11.2k views
-
-
சோல்ஜர் @ சொறிநாய் சொறிநாயைப் பிடித்து “சோல்ஜர்” எனப் பெயர் வைத்து கறியோடு சோறும் வெறியேற அபினும் குழைத்துண்ணக் கொடுத்து வடக்கே போ என்றான் வேட்டைக்கு காவாலி சோல்ஜர் கடைசித் தெருதாண்டி முக்கி முணகி மோப்பம் பிடித்தபடி கால்தூக்கி எல்லை வரைகின்றான் என் வீட்டுச் சுவரில் அடித்து விரட்ட ஆளில்லா வீடொன்றில் நாநீட்ட தாகம் தணித்தவளின் கைநக்கி கோரைப்பல் தெரியச் சிரித்தான் வேட்டை நாயில்லா வீடொன்றாய்ப் பார்த்து கோழி இரண்டையும் -தென்னங் குலை நான்கையும் தேசியச் சொத்தாக்கினான் சிதறுண்ட கால்கொண்ட சிறுபுலியின் கதவுடைத்து பெண்மையை அரசுடைமையாக்கினான் காலம் பொறுமையாய் காத்திருக்கிறது காலம் வருவதற்காய் http://www.eelavayal.com/2012/12/blog-post.html
-
- 0 replies
- 636 views
-
-
-
- 14 replies
- 2.2k views
-
-
நொடிப் பொழுதில் மடியக் குண்டு செய்யும் தொன் கணக்கில் அது கொட்டி.. மடிந்த பின் கட்டுப் போடும்..! மடியக் கொலைக்கருவி தரும் மடிந்த பின் ஒளித்து விட்ட அக்கருவி சாட்சியம் தேடும்..! மடியக் கொலைஞர்கள் ஏவி விடும் மடிந்த பின் ஏவியவர் யாரோ நீர்த்துவிட்ட நீதி தேடச் சொல்லும்...! மடியும் போது ஊடக வாய்கள் மெளனமாகும் மடிந்த பின் கூக்குரல்கள் அனுமதிக்கப்படும்..! மடியக் காரணம் யாரோ மடிந்த பின் மரண விசாரணை அவனிடமே பாடை தரும் ...! மடியும் போது ஒற்றைக் கரணம் மடிந்த பின் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கும்..! மடிய முன் பயங்கரவாதின்னு உச்சரிப்பு உச்சக்கட்டம்..! மடிந்த பின் தியாகின்னு உச்சரிப்பு முணு முணுப்பாய் மாறி நிற்கும். மடியும் போது …
-
- 7 replies
- 882 views
-