கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நல்ல உச்சி வெய்யில்.. நடந்து வந்த கிழவிக்கோ பெரும் களைப்பு.... அங்கிருந்த திண்ணையில் ஓய்வாக அமர்கிறார்... பசி.... தாகம்.... அங்கும் இங்கும் பார்க்கிறார்.... கண் அயர்ந்து விட்டார். அப்போது அவ்வழியே வந்த மனிதர் அவரை இனம் கண்டு கொண்டார். பசி, தாகம்.... பார்த்தவுடன் புரிந்தது. பாட்டி.... எனது வீட்டுக்கு வாருங்கள்.... உண்டு களைப்பாறி செல்லலாம் என்கிறார். பாட்டியும் புறப்படுகிறார். அவனது மனைவியோ.... ஒரு அரக்கி.... அவனுக்கே சமைத்து உணவு கொடுக்க மாடடாள். இன்று இந்த கிழவி வேறா? நம்பிக்கையில் அழைத்துச் சென்றான். திண்ணையில் இருக்க வைத்து உள்ளே செல்கிறான். மனைவியை மகிழ வைத்து.... அதன் பின்னர் சமைக்க வைக்க வேண்டுமே... பெரும் பிரயத்த…
-
- 0 replies
- 6.5k views
-
-
போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்த பொழுது எழுதிய கவிதை. விடுதலைப் புலிகளின் உள்சுற்று இலக்கிய சஞ்சிகையான வெளிச்சம் இதழில் வெளிவந்தது. . 1.அம்மா போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வ…
-
- 0 replies
- 835 views
-
-
தமிழர் தலைவனுக்கு அகவை 63! தூங்கிக் கிடந்த தமிழர்களை ! துயிலெழுப்பிய குயிலே! துடிக்கக் துடிக்க அழித்த பகைவரை! துரத்தி அடித்த புலியே! கூறுபட்டுக் கிடந்த தமிழரை! வீறுகொண்டு எழுப்பிய வீரனே! விடுதலை! விடுதலை!! விடுதலை!!!-அதற்கு! கொடு! தலை என்றே!குமுறிய வேங்கையே! காலம் கடந்து போகும்-நம்காலம் நமக்காய் மாறும்!புலிக்கொடி! உலகில் மீண்டும்' ஏறும்!!நீ மூட்டிய விடுதலைத் தீ! என்றும் அணையாது!! நீறு பூத்த நெருப்பாய் ! எம் நெஞ்சில் !என்றும் ! கனலாய் தகிக்கும்!! வலரற்றை படைத்த தலைவா! வாழ்த்துகிறோம் !!கன்னித்தமிழ்போல்…
-
- 3 replies
- 1.3k views
- 2 followers
-
-
நீ ... தந்த ... வலிகளை தாங்கும் .... சக்தி எனக்கில்லை .... நீ தந்த வலிகள் .... என்னவென்று என் .... கவிதைகள் சொல்லும் ....!!! ஒன்று .... மட்டும் செய்துவிடாதே .... நான் தனியே இருந்து .... அழுவதுபோல் நீயும் ... அழுதுவிடாதே - என்னை .... ஆறுதல் படுத்த கவிதை ... எப்போதும் இருக்கும் .... உன்னை ஆறுதல் படுத்த .... என்னை தவிர யாருமில்லை ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 67 replies
- 90.4k views
-
-
கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:- கேப்பாபிலவு அடங்கி இருந்து உடைமையைபெற்றிட உறங்கியிருந்தனர் முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் முடிவு! அடக்கிவந்தவர் உடைமைகளை முடக்கிக்கொண்டனர் முடிந்தளவுமுனுமுனுத்தனர் முற்றுப்புள்ளியில்லை பசுமைவயல் தென்னந்தோப்பு குளிரூட்டும் தென்றல் அப்புச்சி இருந்தமாமரம் அதன் கீழ் ஒருஊஞ்சல் – என கண்ணைநிறைத்திடும் நிணைவுகளுடனும் விவசாயம் செய்யதுடித்திடும் மனதுடனும் அகிம்சைவழியில் உரிமைகள் கோரினர் பெரியதலைகள் – உதவிக்கரங்களை நீட்டுவதுபோல் நீட்டிமுடக்கிக்கொண்டன உரிமைகள் வாய் மூட பலவா…
-
- 0 replies
- 768 views
-
-
நாங்களோ எம் போரைத் தொடர்ந்தோம்............. ------------------------------------------------------------------------------------------ சாவதெனினும் தன்மானத் தமிழராய் சாவதென்ற முடிவுடன் தொடர்ந்தார் தொடர்ந்ததால்தானே உரிமைப் போரை பிராந்தியம் கடந்து நகர்த்திட வைத்து அனைத்துலகிடம் கொண்டு சென்றதும் அதனையும் மீண்டும் நயவஞ்சகத்தாலே கர்ணனைக் கொன்ற கண்ணனைப்போன்று கைங்கரியத்தை அரங்கேற்றிய அசிங்கமான கிந்தியர் அரசது வங்கதேசத்திலும்காஸ்மீரிலும் கைக்கொண்ட கொடுமைகள் போன்று மீண்டும் வந்து எங்கள் தேசத்திலும் பேரழிவினை விதைத்து இனத்தினையழித்து ஈழத்தீவிலே தமிழினத்தை இல்லாதுசெய்யும் பொல்லாத பொழுதொன்றை வென்றிட வேண்டி மெளனம் காத்திட ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
நிகழ் ஒவ்வொரு நாளும் இரவு கவிகையில் ‘அவர்கள்’ வருவர். ஒழுங்கை முகப்பில் நாய்கள்குரைக்கையில் ‘அவர்கள்’ வரவைத் தெரிந்து கொள்வோம் விளக்கை அணைத்து வாசலைப் பார்த்து மௌனமாயிருப்போம் வேலியோரத்தில் நிற்பதும் நடப்பதுமாய் அவர்களின் பவனி தொடரும் புரியாத மொழியில் பேசிய போதும் அவர்கள் கேட்பது நமக்குப் புரியும்: பெண் நகை புலி. ஒலியடங்கிய சற்று நேரத்தில் எங்காவது வீரிட்ட அழுகையோ வேட்டொலியோ கேட்டபடி தூங்கிப் போவோம் விடியும் வரையும் நிம்மதி மறந்து உறங்குவதே போல் வாழவும் தெரிந்துவைத்திருக்கிறோம். - எஸ்.கே. விக்னேஸ்வரன் 1987 - ‘அமைதி’ பின்னரும் நான் வந்தேன் நீ வந்திருக்கவில்லை காத்திருந்தேன் அன்றைக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தீர்வுகள்தராத தினமேன்? தீர்வுகள்தராத தினமேன்? ————————————— தினமொரு தினம் வைத்துத் தீர்வுகள் ஏதுமின்றிக் கண்ணாடி மாளிகையில் காகிதத் தீர்வுக்காய்க் கூடிக் கலைகின்ற ஐநாவே உனக்குத் தெரியாது உயிரடங்கும் வேதனைகள்! வேதனைகள் சுமந்தபடி உலகின் மூலை முடுக்கெல்லாம் அலைகின்ற மாந்தரினம் அடிப்படை உரிமைக்காய் அன்றாடம் பிணமாகி அலைக்கழிந்து வீழ்கின்ற அவலநிலை தொடர்கையிலே நீயேன் இருக்கின்றாய் ஐநாவே! உனக்கு எதற்காகத் தினங்களென உரிமையற்ற மாந்தர்கள் உரத்துக் கேட்பது உனக்குப் புரியாது காற்றுக்கூடப் புகாத கண்ணாடி மாளிகையில் கழுத்துப்பட்டியுடன் அமர்ந்து குளிரூட்டிக் காற்றுவர குளிர்பாணம் குடித்தபடி எத்தனையாம் என்றுகேட…
-
- 0 replies
- 872 views
-
-
உட்புகுந்து உயிர் அரிக்கும் வித்தை கற்க வேண்டும் காக்க காக்க என்று கல் மண் புழுதியிலும், பனி உறையும் பாதையிலும் வீசு புயல் மழையினிலும், வேதனையைச் சொன்னபடி, குப்பைக் காடுகள்போல் அந்நியக் கண்கள் சீண்டும் அவமானம் தின்றபடி, வேர் கிழித்த வலி விளம்பி, விம்மி, வெந்துருகி அறியாத தெருவெல்லாம் அலைமோதிக் கிடந்தோமே எவர் வந்து கேட்டார்கள்? எவர் வந்து பார்த்தார்கள்? எவர்தான் எதிரியென்று எமக்குப் புரியவில்லை யார்தான் துரோகியென்று யதார்த்தம் விளங்கவில்லை சிதறுண்டு போனோம் சிதையுண்டும் போனோம் விதை அழுகிப் போனதெனும் இழிநிலை ஆனதைய்யோ... இனம் முடை நாத்தத்தில் உட்கார்ந்து கொண்டதையோ... தாங்க முட…
-
- 22 replies
- 3.5k views
- 1 follower
-
-
தேநீர் கவிதை: எனக்குள் ஒலிக்கும்கொலுசு தூக்கி எறிந்துவிட்டுப் போ ஒரு புன்னகையை. தூர தேசங்களுக்குப் பயணிக்கிறேன் நான். உன் கூந்தல் இரவில்தான் தேடிக்கொண்டே இருக்கிறேன்... எனக்கான வெளிச்சத்தை. கடந்த காலத்தின் கண்ணீர்த் துளிகளில்தான் நிகழ்காலத்துக்குள் நீந்திக் கொண்டிருக்கிறேன். தனிமை வலைபின்னுகிறது. சிலந்திப் பூச்சியாய்ச் சிக்கித் தவிக்கிறேன். மணலற்ற ஆறாய் வறண்ட வாழ்க்கையில் வந்து வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தலைவர் இருக்கிறார் மீண்டும் வருவார்.. இது எம் முதல்வனைக் கொண்டாடும் தருணம் பகிருங்கள்.... என் தலைவனுக்கு ஒரு பக்தனின் வாழ்த்துப்பா!! --------------------------- காந்தள் மலர்க் காடுகளே! எனக்கொரு கடி மலர் வேண்டும் வெடிகளுக்குள் முளைத்தெழுந்த எம் வீரப் புதல்வன் பொன் அடிகளுக்கு அதைச் சாற்றவேண்டும் நீடூழி வாழ்கவெனப் போற்றவேண்டும் கதைகளிலே படித்துவந்த காவியத்து வேல் முருகன் சதை உடுத்தி வந்த நாள் இன்று போர்க் கதை உயர்த்தி வா!! போரில் வென்றுவா என மனம் பதை பதைக்கப் பிணமான எதிரிகளின் சிதைகளுக்கு தீ வைத்த தெய்வத் திரு வேந்தன் தமிழின வாதை துடைத்த வரலாற்று நாயகனை வாழ்த்த வேண்டும் வாருங்கள் …
-
- 3 replies
- 1.6k views
-
-
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! மாவீரர்கள்! யார் இவர்கள்? தன்னலம் கருதாத தியாகிகள்! தமிழ்நலம் கருதிய ஞானிகள்! எங்களுக்காக தங்கள் உயிரையே துறந்த துறவிகள்! தமிழர் இதயங்களில் என்றும் நிலைத்து வாழும் தெய்வங்கள்! கடலிலும் தரையிலும் காற்றிலும் கலந்து இருப்பவர்கள்! எங்கள் சுவாசத்தினூடக எம் உதிரத்தில் கலந்து எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்! விடுதலைத் தீ அணைந்து போகாமல் தம் உயிரை உருக்கி நெய்யாக வர்த்தவர்கள்! தாம் உருகி உலகத்திற்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்! கல்லறைக்குள் உறங்குகின்ற கார்த்திகைப் பூக்கள்! சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்! தூங்கிக் கொண்டிருந்த தமிழனின் துயில் எழுப்பி! துயிலும் இல்லங்களில் மீள…
-
- 33 replies
- 5k views
- 1 follower
-
-
1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறே…
-
- 0 replies
- 1.1k views
-
-
இனி எம் கல்லறைகளுடன் பேசுக! எம் இருதயத்தை பிளந்த யுத்தக் கல்லை பார்த்ததுபோதும் எமை கொன்று வீசிவிட்டு வெற்றிக் கூச்சலிடும் உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும் எம் தேசமழித்து அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே ஒற்றை நாடென நடனமாடும் வரைபட கல்லைப் பார்த்ததுபோதும். எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு வருகவெம் சிங்களச் சகோதரர்களே! வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும் நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும் மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன் போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும் மாண்டவர்களின் துயில் கலைத்து உறங்க இடமறுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
UNSUNG EULOGY பாடா அஞ்சலிவ.ஐ.ச.ஜெயபாலன்..உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் இறு…
-
- 0 replies
- 1.4k views
-
-
அவனில்லை இன்று எம்மோடு அவன் நினைவுகள் நீர்சூடி வழிகிறது விழியிரண்டும். அவனில்லா வனம் ஆளில்லா நிலம். அவனின்றி அனைத்துமே அனாதைப் பிணம். ஆனைகள் மிதித்து அடங்காத் துயர் மூடி அ (உ)லையும் காற்றும் ஊழித்தீயூறி அடைகாக்கும் தாயாகிறது. அவன் போலொருவன் பிறப்பான். பிரபாகரன் என்ற பெருந்தீயாய் இருப்பான். அவன் வருவான் ஆன்மபலம் தருவான். அனைத்துமே அவனாகி எமையுருக்கி ஒளிர வைப்பான். காலக் கணக்கிருப்பை கார்த்திகை ஈரம் காலவிதி கடத்திக் கரையேற்றும். கனவுகள் விதைத்துக் காத்திருக்கிறோம். சாந்தி நேசக்கரம் …
-
- 0 replies
- 1k views
-
-
தினமும் யாரோ ஒரு தோழனின் ஞாபகம் தோழியின் ஞாபகம் வந்தே போகும் அதுவே எங்கள் விடுதலையின் விலாசம். ஆயினும் கார்த்திகை மாதம் கண்ணீரால் கரைந்து கனக்கும் சோகம் சொல்லிப்புரிவிக்க இயலாத பாரம். எல்லா மாதம் போலல்லாத கார்த்திகையே எங்கள் காவியங்கள் கண்திறந்து கதை சொல்லும் காலம். எத்தனையோ ஞாபகங்கள் அத்தனையும் ஒருசேர உயிர் வேகும் மாதமிது. உயிர் போகும் வரையுமெங்கள் ஊர்காத்து உயிர் காத்த வீரர்களை உயிர் கரைய நினைவேந்தும் மாதம். சாந்தி நேசக்கரம் 11. 11. 17
-
- 0 replies
- 883 views
-
-
பிரபாகரன் இறைவன் ஆனான்… ஆறுமுகன் இறந்து போனான்.!! ஆசியாக் கண்டத்தின்உச்சத்தில் உதித்தஈழத்துச் சூரியன்!அச்சத்தில் மூழ்கியஅப்பாவித் தமிழரின்விலங்கினை உடைத்துஉலகின் உச்சத்தில் வைத்தஉன்னதத் தலைவன் இவன்!பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்தமிழனை சிங்களக் கொள்ளையன்அடிமைப் படுத்தி ஆண்ட போது…இலங்கைத் தலையின் மூளையில்வல்வைத் தாயின்…வீரத் திரு வயிற்றில்உலகத் தமிழர்களின்…ஒட்டு மொத்த மூளையாகஉயிராகி… உருவாகினான்..!கார்கால மழையில் – ஓர்கார்த்திகை நாளில்இருட்டியது ஊரு…இருபத்தி ஆறு நன்னாளில்எடுத்தது வீரத்தாய்க்கு வலி!பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!அன்று – உருவானதுதமிழர்களுக்கான புதிய வழி!!இலங்கைத் தலையில் பிறந்துதமிழர்களின் மூளையானன்!ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…மூலையில் முடங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதை குழிகளுக்குள் அவர்கள் அண்ணாந்து பார்க்க உறவுகள் அவர்களை தலை கவிழ்ந்து பார்க்க கண்ணுக்கு புலப்படாத உருவங்கள் உணர்வுகளில் முழுமையாக நிரம்பியிருக தேற்றுவராரற்ற கணங்களில் நாங்கள் இருக்கின்றோம்…. நாடு இருக்கின்றது…… மீழுவோம் ஒரு நாள் ஆழுவோம் ஒருநாள்… நம்பி உயிர்கொடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கு தவறும் போதெல்லாம் மனசாட்சி உள்ளவர்களுக்கு துரோகம் முக மூடியை கிழித்து எட்டிப்பார்க்கின்றது அதற்கும் அப்பால்.. நினைக்க நினைவு கூர நேரமில்லை.. நேரமிருந்தாலும் ஒன்றுபட முடியவில்லை மிஞ்சியது எதுவும் இல்லை ஆகவே உங்களை தோண்டி எடுத்து எதாவது தேறுமா என்றும் பாரக்கின்றார்கள்… உங்கள் தியாகமே எம்மினத்த…
-
- 0 replies
- 993 views
-
-
மண்குளிரச் செய்த முகில்கள் – கவிஞர் புதுவை இரத்தினதுரை மாரிமழை யாகி நீர்தெளித்து ஆடி மண்குளிரச் செய்த முகில்கள். மாதவங்கள் செய்த போதெமது பூமி மடியிலுரு வான உயிர்கள். போரில்விளை யாடும் வேளையுடல் வீழ்ந்த போதுமுயி ரான சிலைகள். பூங்குயில்கள் பாடும் ஈழமதை வாங்கப் போயெரிந்து போன புலிகள். மாலைமணி ஆறு ஆகும்பொழு தாக மாரிமழை கொஞ்சம் ஓயும். மாலைமலர் சாத்தித் தீபஒளி காட்டும் வேளைவிழி ஆறு பாயும். சாலை, கடை யோடு, வீடுஎன யாவும் சாமிதுயி லில்லம் கூடும். சாதிமத மென்று வேறுபட லின்றித் தேவநிலை கொண்டு பாடும். வாரியெடுத் தும்மை வாசல்தனில் வைத்து வாசமலர் தூவும் பொழுதில் வந்தெமது கண்ணில் நின்றுதெரி கின்ற வாறுவர வேண்டும் அருகில். தேரிலெழுந…
-
- 0 replies
- 628 views
-
-
தமிழீழத்தை காதல் செய்து ஈகத்தால் உயர்ந்துவிட்ட ஈகியரை வணங்குதற்காய் வருகின்ற நாட்களிலே அவர் விட்டுச் சென்ற கடமைக்காய் நாமெல்லாம் கரம்கோர்த்து ஒன்றானால் தமிழீழ மண் விடியும் தரணியெங்கும் கொடி பறக்கும் தமிழினத்தின் தலை நிமிரும் தமிழரது தாகமென்ற தாயகத்தைக் காத்து நின்ற தாயகத்து நாயகரை வணக்குமிந்தக் காலத்திலே ஓரணியாய் ஒன்றிணைந்தே வாருங்கள் அணி அணியாய் ஓடிடுவான் எதிரியவன் ஒன்றிணைந்தே சேருங்கள்!
-
- 0 replies
- 559 views
-
-
காதல்கொள்! மண் மீதும் மண்ணைக் காதலித்து மரணத்தை வென்ற மாவீர் ஈகத்தின் மீதும் காதல் கொள்!
-
- 3 replies
- 1.3k views
-
-
கத்தலோனியா மூதாட்டி தங்க நகரமெங்கும் இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில் புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி, முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள். 'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன் துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி 'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள் சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!'…
-
- 0 replies
- 1.2k views
-
-
-