கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம், நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்! வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!! எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில், முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்! அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே பெருப்பித்துக் காட்டுகின்றன! எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி... கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது! அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன், களைத்துப் போகின்றேன்... ! ஏனென்று புரியவில்லை!? பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்... ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன! என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்... மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ…
-
- 2 replies
- 1k views
-
-
புலவன் என்று பொய்புரைத்து மணந்துகொண்டவன் தன் மனைவி படிப்பறிவற்றவள் என அறிந்து ஆறுதல் அடைந்தான். அவன் சொல்லும் சொற்களை அவள் கவிதை என நம்பினாள். அந்நிலையில் அவள் கணவனுக்குச் சோதனை வந்தது. கவிதைக்குப் பரிசளிப்பதாக அரசனின் அறிவிப்பை செவிமடுத்த அவள், அவனைக் கவிதை எழுதி அரசனிடம் பரிசு பெற்று வருமாறு வேண்டிணாள். அன்புடடையாள் வேண்டுதலை மறுக்கமுடியாது விதியே! என்று அவன் அரசவைக்குப் புறப்பட, அவள் கட்டுச்சோறும் கட்டிக் கொடுத்தாள். என்ன எழுதுவது! எதை எழுதுவது! புரியாத அவன் போகும் வழியில் எலியொன்று மண்தோண்டுவதைக் கண்டான். உடனே மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று எழுதினான். சற்றுத் தூரம் செல்ல அவன் கட்டுச் சோற்றை முகர்ந்த காகம் ஒன்று கா! கா! என்று கத்தியது. கத்தலைக் கேட்டு காவிறையே! என்ற…
-
- 0 replies
- 1k views
-
-
உன் அமைதியான வேண்டுதலால் பொறுமையை இழந்திருப்பாள் பூமாதேவி * நீ சுற்றி வந்ததால் சனிஸ்வரனுக்கு பிடித்தது தேவதை தோசம் * நீ முருகனைச் சுற்றுகையில் முருகன் மீது சந்தேகப் படுகிறார்கள் வள்ளியும் தெய்வானையும் * அழகானவள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் உன்னைக் கண்டதும் தேவதை கிடைக்க வேண்டும் என்கிறார்கள் * கடைசியில் எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது பக்தர்கள் உன்னைச் சுற்றுகிறார்களா? கோயிலைச் சுற்றுகிறார்களா? -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 1k views
-
-
"என்றும் உன் நினைவில் வாழும்" "என்றும் உன் நினைவில் வாழும் ஒன்றும் அறியா குழந்தை இவன் இன்றும் உன் அணைப்பைத் தேடி நின்று கண்ணீர் சொட்டும் மகனிவன்!" "கன்றுகள் நாலா பக்கமும் பிரிந்தாலும் குன்றுகளில் பள்ளங்களில் பயணம் செய்தாலும் வென்று தோற்று வாழ்வைக் கடந்தாலும் ஈன்று எடுத்தவளை என்றும் மறந்ததில்லை!" "ஊன்று கோலாய் அவள் கட்டளைகள் சான்று பகிரும் அவள் வாழ்க்கைகள் மென்று தின்ற அவள் கொள்கைகள் இன்றும் என்றும் எம் இதயத்திலேயே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1k views
-
-
பயம்-பசி-படிப்பில்லை... கதறியழும் கந்தளாய் தமிழர் விரைவாய் வரவேண்டும் விடியலொன்று. எத்தனை எத்தனை இரவுகள். அத்தனைக்கும் விடியல்கள். எங்களின் இந்த இருளுக்கு எப்போதுண்டு விடியல்தான். சொந்தமான நிலத்தினிடை துச்சர்களால் அல்லற்படும் பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. பயமேயறியாப் பிஞசுகளை பாடாய்ப் படுத்தும் நரிக் கூட்டம். பரிதவிக்கும் மக்களையே பகடைக்காய் போல் பாவிக்கும். பஞ்சங் காணாப் பூமியிலே பசியால் வாடித் துவழ்கின்ற பந்தங்கள் துயர் தீர்ந்திடவே விரைவாய் வேண்டும் விடியலொன்று. அசுரர் ஆளும் நாட்டினிலே ஆட்சி என்றும் கொடுங்கோல்தான். பகரச் சொற்கள் வேறுண்டா? பாவிகளின்…
-
- 2 replies
- 1k views
-
-
மக்களின் தீர்ப்பை இனத்தின் விதியை ஒருசிலர் கையில் எடுத்து நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து என முனிவர் கணக்கா கதை சொல்ல கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள் சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என தலைமை செய்த தெரிவை நாங்களே மாற்றுவோம் என பொங்கினர் இங்கின பல தலைமை விளங்கவில்லை ... பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார் நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம் பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம் எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை .. காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும் நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது. மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம் புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர…
-
- 7 replies
- 1k views
-
-
யாருக்கும் பிரச்சனை இல்லை... --------------------------------------------------------- பாலஸ்தீனப் போராளிகள் பற்றி நான் பேசலாம். அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் பற்றி நான் எழுதலாம். தியான் மென் சதுக்கக் கொலைகளுக்கும் நான் குரல் கொடுக்கலாம்... யாருக்கும் பிரச்சனை இல்லை ஈராக் பற்றி நான் கவலைப் படலாம் திபெத்தியர்களுக்காக நான் கண்ணீர் விடலாம்.. பர்மியப் பெண்ணுக்கும் நான் பரிந்து பேசலாம். யாருக்கும் பிரச்சனை இல்லை சேகுவேராவை நான் கொண்டாடலாம்.. பிடல் காஸ்ட்ரோவை நான் வணங்கலாம்.. கொசோவா விடுதலையை நான் ஆதரிக்கலாம்.. யாருக்கும் பிரச்சனை இல்லை உலகின் எந்த மூலையில் இனக் கொலை நடந்தாலும் ந…
-
- 4 replies
- 1k views
-
-
தேநீர்க் கவிதை: அவள் இல்லாத... முத்து சுகா அவள் இல்லாமல் சபிக்கப்பட்ட என் பொழுதுகள் விடிந்துகொண்டிருக்கின்றன ஏழு மணிக்கும் எட்டு மணிக்கும். ஜீவனில்லாத வீட்டுக்கு எத்தனை கதவு..? எத்தனை பூட்டு..? எப்போதும் ஊளையிடும் ஜன்னல் காற்றுகூட உன்னைத்தான் கேட்கிறது. நீ தொட்டெடுக்கக் காத்திருக்கும் வாசற்படி செய்தித்தாளாய் நான். அருகில் இருந்தாலும் அப்பால் இருந்தாலும் …
-
- 0 replies
- 1k views
-
-
கண்கள் பூத்திருக்க கருவிழிகள் பார்த்திருக்க வெஞ்சமரில் விதையான வீரர்களின் வாழ்த்தொலியில் பொங்குதமிழால் பூரித்த மண்ணிலே வெந்து வெந்து நீறான சிங்களத்தினை வெற்றிகொண்டெழும் எம் வீரப்புலிக்கொடி நாட்கள் அதிகமில்லை நன்னாளும் தொலைவில் இல்லை பார்க்கும் இடமெங்கினும் பார்புகழும் வகைதன்னிலே பறந்திடும் எம்கொடி பார் தமிழே பார் வீரத்தமிழ்த்தலைவன் வெற்றியின் அரசனவன் வீறுகொண்டெழுந்திடுவான் வெற்றித்திலகத்தை பெற்றிடுவான் ஆற்றல் மிக்க அவனிடம் ஆயிரம் கலை உண்டு தோற்றோடும் பகைகண்டு தொடைதட்டி மகிழ்ந்திடான் விதையான தன்மக்களை மனதார நினைத்திடுவான் தாய்க்கு பிள்ளையாய் தமிழிற்கு தாயாய் வந்துதித்த எம்தலைவன் வெற்றி வாகை சூட வீறுகொண்டு நாம…
-
- 3 replies
- 1k views
-
-
இன்னும் ஏன் மௌனம்.....??? வாருமய்யா வாருமய்யா மனித உரிமை வாதி ஜய்யா.... மலிந்து போயு கிடக்கிதுங்கு மனிதயுரிமை பாருமய்யா... வீதியிலே பிணங்களாகி வீழ்ந்திருக்கு பாருமய்யா... விதைவையாகி உறவு இங்கு கதறுவதை காணுமய்யா.... ஆண் உறுப்பை அறுத்தெறிந்து அழித்து கொண்டான் பாருமய்யா... உடல் சிதறி உருக்குலைந்த உறவுகளை பாருமய்யா.... என்ன செய்தார் என்றிவரை கொன்றழித்தான் கேளுமய்யா....??? குண்டு மழை பொழிந்து உயிர் பறித்தான் இங்கு பாருமய்யா... குஞ்சுகளும் பிஞ்சுகளும் பிய்ந்து கிடக்கு பாருமய்யா... எத்தனையோ கொடுமைகளை பகையாடுதிங்கே காணுமய்யா... அத்தனையும் கண்டு …
-
- 1 reply
- 1k views
-
-
காதலில் கவிதையில்லை... திங்கள்கிழமை, டிசம்பர் 8, 2008, 12:53 -ரிஷி சேது உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய் நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில் நீ காதலைச் சொன்னாய்- நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்... நீ கொஞ்சம் கொஞ்சமாய் உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய் உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை அதுவும் தேவைப்பட்டது- நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்.. நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர் சிறுகுஞ்சாய்.... ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம் ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்.. நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்.. நான் எதி்ர்பார்…
-
- 3 replies
- 1k views
-
-
உயிரே என் உயிரே ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ஓர் நாளில் மறந்தாயோ ........ மனசே என் மனசே அவள் மனதை சொல்லாயோ உணர்வே என் உணர்வே அவள் உணர்வை சொல்வாயோ உனை நான் பிரிந்தும் உடலால் இழந்தும் உனையே நினைத்தேன் உயிராய் தானே சுரங்கள் இல்லா கவிதையா இருந்தும் உனையே நினைத்தேன் இசையா தானே உயிரே என் உயிரே ...... ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ........ ஓர் நாளில் மறந்தாயோ ........ music உன் உணர்வை நான் புரிந்தேன் என் உணர்வை ஏன் மறந்தாய் உனக்கென்று நான் பிறந்தேன் ஏன் இங்கு எனை மறந்தாய் சாலை ஓரம் தவிக்கின்றேன் பிணமாக நடக்கின்றேன் நீ போகும் இடமெல்லாம் தனியாக தவிக்கின்றேன் உய…
-
- 2 replies
- 1k views
-
-
''அதிரடி தாக்குதல் நடக்குது விடுதலை ஈழம் பிறக்குது....|| தீயாய் எழுந்து தீங்குகள் எரி கயவர் என அறிந்தால் காவு எடு... ஈழத் தாய் ஈன்ற- நீ ஈழ மகனென்றால் இன்னல் துடை இரும்பு கரம் அறு.... போர் வாளெடுத்து போருக்காய் வந்த பகை வாளை பந்தாடு..... நீ காவிய தாய் மகனெ;னறால் கலங்கம் துடை ''புலம் பெயர்ந்து வந்தாயாயினும் புலியாகி எழு.......'' சிறும் பம்பாகி - பகை சீறி வந்தால் சிரச் சேதம் செய்..... உன் தமிழை உரையாடி உன்னோடு உறவாடி உள்ளிருந்து உளவெடுத்து உன்னை உதைப்பானாயின்- அவனை வெட்டி எறி- உலகிருந்து வெற்றிட மாக்கு..... போலியென நீ அறிந்தால் பொறுக்கியாய் இரு கயவன் அவனே தான் களுத்தை அறு..... ''வந்த நாடதுவ…
-
- 1 reply
- 1k views
-
-
வதையின் மொழி வதை என்பது ஈழத்தமிழனின் வாழ் வென்றானது -இன்று உயிர்த் தமிழுக்கும் தமிழனுக்கும் அதுவே மொழியானது சிறை என்றும்,சித்திரவதை என்றும்- அது இலக்கணம் சொன்னது கொலை என்றும்,கொடும் அவலம் என்றும் நா கூசாமல் பேசியது என்ன இது ? பெண்னென்றும் ஆணென்றும் அது பேதமற்று வதைத்தது.. தெருவில் வாழும் உயிருக்கும் கருவில் வளரும் உயிருக்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன ... ஏன் என்றார்கள் மக்கள் ...?நீ தமிழன் ! அதனால் என்றது வதைமொழி .. தமிழ்த் தாயின் கருவறையில் உயிர் பெற்றதால் -தனக்கென கல்லறை கூட இல்லாது போனான் தமிழன் ...! கலங்கி தவிக்கின்றன- ஈழத்தில் கருவறைகளும் கல்லறைகளும் ...! உயிர் தாங்க கருவறைகளும், உடல் தாங்க கல்லறைகளும் மௌனமாய் மறுக்கின்றன- இருந்து வாழ்வ…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் ஈழம்தான் சரியான தீர்வு என்றாலும் தற்காலிகமாக அதற்கு முன் ஒரு தீர்வு வேண்டும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திமுக வின் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தேர்தல் காலத்திற்கு சற்று முன் தமிழ் ஈழம்தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு எனக்கூறியதுடன் அதை அடைந்து கொடுக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கருணாநிதி அவர்களும் தமிழீழம் அமைய, தானும் முயற்சிக்கப் போவதாக தேர்தல் காலத்தில் கூறினார். காங்கிரஸ் கட்சியைத்தவிர ஏனையவர்களெல்லாம் ஈழத் தமிழ்மக்களின் விடிவுக்காக் குரல் கொடுத்துக் கொண்டே வந்துள்ள…
-
- 0 replies
- 1k views
-
-
இளைஞனே சாட்டை எடு. சவுக்கடி கொடு. சமுதாயம் அழட்டும் சத்தம் போட்டு அழட்டும். போதும் நிறுத்து - மதம் என்ற பெயரில் மனிதனை கொல்வதை. எடுத்திடு ஒரு தீ கொளுத்திடு சாதி தரித்திர தலைவர்கள் தலை சாய்க்கட்டும் சரித்திர தலைவர்கள் உருவாகட்டும். புரட்சிகள் படை புது யுகம் விடை.
-
- 3 replies
- 1k views
-
-
முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வ…
-
- 1 reply
- 1k views
-
-
காதலர்களாக சுற்றித் திரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால் சீ அசிங்கம் என்று.... கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்... இரண்டு குழந்தைகள் பெற்ற பின் அடுப்பு வீட்டில் யாரும் கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு என்றால்... சில காலத்திற்கு பிறகு கன்னத்தில் சுருக்கு விழுந்து பழைய நினைவுகலுடன் ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள் சொன்னால் வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா என்றால் அவள்... …
-
- 0 replies
- 1k views
-
-
(2004 கவிதை மீண்டும்.. நினைவுகளை மீட்க) இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது கிபீரும் ஆட்லறியும் இந்தியா இரகசியமாய் அனுப்பியது மிக்கும் மிரண்டாவும் அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது பெல்லும் கிறீன்பரேட்டும் ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது தரையில் தாங்கியும் ஆகாயத் தாங்கியும் சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது எப் 7ம் ரி 56 உம் பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது மல்டிபரலும் பல்டி அடியும் சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல் இன்னும் விட்டது குறையாய் தொட்டது குறையாய் யார் யாரோ எல்லாம் ஆயுத வியாபாரச் சந்தை விரித்தார் எங்கள் அன்னை பூமியின் அழிவுகளின் மேல்....! இத்தனைக்கும் சாட்சியாய் இதோ அவள்....…
-
- 4 replies
- 1k views
-
-
கல்லறைகளில் தெய்வங்கள் சபிக்கின்றன எங்கள் ஊர்களில் எம் தெய்வங்கள் கல்லறைகளில் தான் உயிர்ப்புடன் உறைந்திருக்கின்றன எம் தெய்வங்கள் கல்லாகிப் போனதில்லை எம் பிரார்த்தனைக்காக காத்திருந்ததும் இல்லை அவர்களின் நேர்த்திக் கடன்கள் எம்மை நோக்கியே இருந்தன கல்லறைக்கு போகும் முன் தம் கழுத்தில் தொங்கிய கனவை எம் உயிர்களில் மாட்டி விட்டே போயினர் எமக்காக பசித்திருந்தனர் எமக்காக விழித்திருந்தனர் எமக்காக நிலவற்ற இருள் வேளைகளிலும் தன்னந் தனியாக காடுகள் கடந்தனர் எதிரியின் இறுதி தோட்டா முடியும் வரைக்கும் உண்ணாதிருந்தனர் நெஞ்சம் தகிக்கும் கனவுகளை எம் தெய்வங்கள் கண்டன ஊரின் எல்லைவரைக்கும் எதிரியை துரத்துவதாக சன்னதம் க…
-
- 4 replies
- 1k views
-
-
குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் . மாடு தழுவி மாளாது தினவு என யானை தழுவ மழைக்காடு சென்றவரே மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில் கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய் குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள் காலமெல்லாம் வாழ்வர் மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய் புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய் வனதேவதைகளாய் பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.
-
- 2 replies
- 1k views
-
-
-
அன்னையே சக்தியே!..... மங்காப் பொன்னென மனதினில் நிறைபவள் கண்ணில் தெரிகின்ற காட்சியாய் இருப்பவள் அண்டங்கள் யாவிலும் அன்னை உறைபவள் கொண்டிடும் கோலங்கள் அனைத்திலும் பொலிபவள் என்னென்ன வேண்டுமோ தாயிடம் கேளுங்கள் பிள்ளையின் குறைதனை அன்பினால் தீர்ப்பவள் தீயவை எல்லாம் திரிசூலத்தால் அழிப்பவள் அன்பென்ற ஒன்றுக்காய் அகிலமே அளிப்பவள் குங்குமத் தாயவள் மங்களத் தாயவள் மடி ஏந்தி வேண்டினால் மனக்குறை போக்குவாள் தங்கிடும் வெற்றிக்கு சக்தியை வேண்டுவோம் விரைவினில் ஈழம் மலர்ந்திட வேண்டியே பாடுவோம்!
-
- 4 replies
- 1k views
-
-
ஆண்டுகள் ஏழு கடந்தும்.. சுவடுகளாய் கட்டிய சேலைகளும் காவிய பொம்மைகளும் சீன அமிலத்தில் கரைந்து போன எலும்புக்கூடுகளுக்கு மாற்றீடாய்..! இலட்சியம் சுமந்த மறவர் பின் விடுதலைக் கனவோடு பாதம் பதித்த நம்பிக்கைகள்... எதிரியின் உயிர்ப்பிச்சைக்காய் ஏங்கியே ஒதுங்கிய அந்த மணற்றரையில் உப்பில் கலந்து உடல் கரைவார் என்று யார் நினைத்தார்..! கந்தகக் குண்டுகளோடு பொஸ்பரஸ் அதுஇதென்று ஆவர்த்தன அட்டவணையில் அடங்கியவை எல்லாம் கொட்டி உலகம் எல்லாம் ஒன்றாய்க் கூடி ஓர் இனத்தின் தலைவிதியை தலையறுத்து சன்னங்களால் சன்னதம் ஆடிய பூமி அது..! இலைகள் உதிரலாம் கி…
-
- 5 replies
- 1k views
-
-
அம்மா எனும் உறவு.... தாய்ப் பாசம் அனைத்து உயிரும் ஆசைகொள்ளும் உன்னதப் படைப்பு அவள்.... அம்மா என்று அழைத்ததுமே உன் அருகில் நிற்கும் நினைவு இவள்..... அவளை மனதிலே நினைத்துவிட்டால் காற்றுனை தாலாடும் உணர்வுகொள்வாய்... உன் கவலையெல்லாம் மறந்துவிடும் வானத்து நிலாகூட - உன்னை நெருங்கிவந்து முத்தம் தரும்.... அவளை நினைக்கும் போதெல்லாம் நீ மீண்டும் பிறந்திடுவாய்.... பிறப்பின் உணர்வு கொண்டு குழந்தைப் பருவதின் குதூகலம் உணர்ந்திடுவாய்.... தாயெனும் தெய்வமது தன் பசியில் உனை வளர்ப்பாள்... உன் தூக்கம் தருவதற்கு தன் இரவை செலவுசெய்வாள்... பல கண்டங்கள் தூரத்திலும் உன் துக்கம் அறிந்திடுவாள்.... அதுபோல நீயு…
-
- 1 reply
- 1k views
-