கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ரோஜாச் செடியில் ஏராளமான முற்கள் உண்டு ஆனால் ரோஜாப்பூ அழகாத்தான் இருக்கும் அது போல நீ சில சமயம் கோவபட்டாலும் நீ அழகுடி...
-
- 7 replies
- 1k views
-
-
உனக்குப் பிடித்த பாடல்களாலும் உன்னை படித்த நாட்களாலும் உன்னை வடித்த வரிகளாலும் திமிருற்ற எந்தன் ஏட்டை அழித்து விட்டு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன நம் காதல் கலைந்து விட்டதென்று காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால் உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன் இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன் சில்லென்று மெய் நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன ஆனாலும் உன்னை மறந்து விட்டேன் உட்கொள்ளுமோர் பருக்கையிலும் நிராசையாகிப்போன நம் ஆசைகள் நளினத்தோடு எள்ளி நகையாடின என்றாலும் நாம் பிரிந்து விட்டோம் பார்வையில் பாசையில் தூண்டலில் துலங்கலில் நிறத்தில் மணத்தில் சுவையில் தூக்கத்த…
-
- 21 replies
- 3.4k views
-
-
என்னுடைய வலைப்பதிவில் நான் போட்ட இந்த குரல்பதிவு எப்பிடி இருக்கென்று சொல்லுங்கள்...யாழில் audio எப்பிடி இணைப்பதென்று தெரியவில்லை அதனால் இங்கே சென்று கேளுங்கள். தத்தக்க பித்தக்க
-
- 12 replies
- 1.9k views
-
-
நீ இல்லாத நிகழ்காலம் இப்போதும் இனிக்கிறது உன் கவிதைகள் உன் காதலைச் சொல்லிய அந்தக் கணத்தின் இனிமையைப்போல! உன் அறையெங்கும் சுழல்கிறது சுவாசம் தீராத எழுத்தின் தாகத்தோடு! உன் கணினியில் வழிகிறது நலம் விசாரிக்கும் உன் நண்பர்களின் மின்னஞ்சல்கள்! உன் முடிவுறாத இரவின் உரையாடல்கள் கைபேசியில் உறைந்துகிடக்கிறது மௌனங்களாக! உன் கலந்துரையாடல்களால் களைகட்டும் நம் வீடு நிசப்தம் தாங்கிய மௌனத்தின் சாட்சியாய்... உன் வளர்ப்பு நாயின் உண்ணாநோன்பும்! உன் சாம்பல் கிண்ணம் கங்குகள் காணாது காத்துக்கிடக்கிறது நீயே சாம்பலானது அறியாமல்! பழுத்த இலையின் வெம்மைபோல் சுட்டெரிக்கிறது உன் நினைவுகள் நம் கிராமத்தின் பாதையெங்கும் ய…
-
- 5 replies
- 1.5k views
-
-
அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கை இவையெல்லாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறவு ஆனால் நீ அப்படி இல்லையடா எனக்காக நான் தேர்ந்தெடுத்த உறவு உன்னை ரசித்து உன் குணத்தைப் புரிந்து நீ எனக்கானவன் என நானே முடிவு செய்து எனக்கு என நானே சொந்தமாக்கிய உறவு உன்னை எவருக்காகவும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எப்பொழுதும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
-
- 2 replies
- 6.1k views
-
-
நீ எனக்கு வேண்டாமடி சைனாவுக்கு போகவேண்டுமானாலும் சைக்கிளிலேயே செல்லும் என் தந்தை என்னைப் பக்கத்து தெருவிற்குக் கூட பைக்கில் போக சொல்லுகிறார் இவரை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** தேர்வு சமயங்களில் இரவு முழுவதும் படித்துக்கொண்டிருப்பதோ நான் விழித்துக் கொண்டிருப்பதோ என் தாய்! அவளை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** அலுவலகம் செல்லும் அண்ணன் மடித்து வைத்த சட்டையை வெட்டியாய் ஊர்சுற்ற போகும் நான் அணிந்துகொண்டாலும் ஆனந்தப்படுவானே? அவனை விட்டுவிட்டா உன்னோடு ஓடிவருவது? *** நான் செலவுக்கு பணம் கேட்கும்பொழுது – தான் நகை வாங்க வைத்திருக்கும் பணத்தை கூட புன்னகையோடு தருவாளே என் தங்கை! அவளை விட்ட…
-
- 5 replies
- 1.2k views
-
-
செல்வண்ணை! உன் பெயரை உச்சரித்துவிட்டு கண் கலங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிரிக்கும் புலி நீ சீறும் சினத்தை சின்னச் சிரிப்புக்குள் அடக்கிவைத்திருக்கும் பேராற்றல் உனக்கு. நெருப்பு வானத்தில் ஒரு குளிர் நிலவு நீ உனக்குள்ளும் நெருப்பாறுகள் ஆனாலும் அதை பக்குவப்படுத்தி பயன்படுத்தத் தெரிந்தவன். பத்திரிகைகளுக்கூடாகத்தான் உன்னோடு பழகியிருக்கிறேன். தீயாக தினேசாக சுழன்றடித்த சூறாவளியாய் உன்னோடு பழக்கமில்லையென்றாலும் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பனிபூசிய அனல்கள் பறக்கக் காண்பேன். ஒரு தவறிப் பிறந்தவனின் காட்டிக்கொடுப்புக்கு தமிழன் இழந்து நிற்பது "ஒரு பிரிகேடியரை". எதிரியின் எத்தனை பிரிகேடியர்களை கொன்றொழி்த்தாலும் ஈடாகுமா உ…
-
- 4 replies
- 1.8k views
-
-
நீ என் தோழியா..? இல்லை காதலியா...? கவிதை........ உன்னுடன் நட்புக்காய் உனைச் சுற்றும் பக்தனானேன்..... உன் நட்பை பெறுவதற்காய் என் நாட்கள் பல தொலைத்தேன்....! என் நீண்ட போராட்டத்தில் மெது மெதுவாய் என் நண்பியானாய் அதன் பின் என் நேரங்களில் பல மணிகளைத் தின்றாய் எனை நடு சாமத்தில் எழும்ப வைத்தாய் நடு வீதியிலும் நடக்க வைத்தாய்..... எனை தெரு நாய்கள் பார்த்து தினம் தினம் குரைக்க வைத்தாய்...... நீ என்னை நெகிழ வைத்த நண்பியாய்...! என் இதயத்தின் இடங்களெல்லாம் முழுதாக வல்வளைத்தாய்...! நாம் சந்திக்கும் பொழுதுகளில்... அந்த சந்தோச வேளைகளில்.... உன் சிரிப்புக்காய் சொல்லும் …
-
- 20 replies
- 4k views
-
-
நீ என் நிலவரசி முகில்களைக் கிழித்து வெண்புரவி பறக்கிறது. கைக்கெட்டாத் தூரத்தில் என்று காற்று காதில் கிசுகிசுத்தது. ஆழிக்குமிழிகள் போல் வெளியே தெரியாமல் உள்ளத்ததில் பெரிய பெரிய.. முகில்களைக் கிழித்தாயிற்று அடுத்தென்ன? இன்னுமின்னும் அண்டத்தை நோக்கி பயணம் தொடர்கிறது. தொட்டே தீருவேன் வேட்கை வியாபித்து விரிகிறது. கட்டித் தழுவி நீயிடும் முத்தத்திற்கான அவா ஆவியை உசுப்புகிறது. தீபோல் உன்மேல் நான்கொண்ட காதல். என்னை எரித்தெரித்து என் சுயத்தை சாம்பலாக்கி சரசமிடுகிறது. உருவழிகிறாய் என்று ஓரத்தில் ஒருமனம் விசிக்கிறது. உணர்ந்தும், உயிர்ப்பு உன்னை மட்டுமே யாசிக்கிறது. அடி!, என் நெஞ்சக் கூட்டறையில் குடிகொண்ட நிலவரசி என் மஞ்சச் சாய்கைக்கு நீ மடிதருவதெப்ப…
-
- 6 replies
- 1.7k views
-
-
கடல் வெள்ளம் போல் புகுந்து கனவுகளை வளர்த்தவளே காந்தப் பார்வையாலே கண்களுக்குள் இனித்தவளே தவறு நான் செய்யவில்லை தண்டனை நீ தருகின்றாய் சிறைக்குள் நான் துடிதுடிக்க சிரித்து நீ போகின்றாய் ஊமைக் குயிலடி நான் உள்ளுக்குள் அழுகின்றேன் ஓரிரு வார்த்தைளோ மெல்ல மெல்ல கொல்லுதடி என் உதிரத்தால் எழுதி வைக்கும் உண்மையடி பெண்ணே நீ போகுமிடமெங்கும் பாதி உயிரோடும் என் பயணம் தொடரும் புத்தகப் பையுக்குள்ளே பாவத்தை சுமப்பவளே இறந்து நான் போன பின்னே என் இதயத்தை அறுத்துப்பார் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் உன் பெயர் அப்போதாவது நீ என்னைக் காதலி...
-
- 0 replies
- 659 views
-
-
நீ என்றும் என் காதலி.... கவிதை - இளங்கவி அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன், யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய மு…
-
- 4 replies
- 2.1k views
-
-
நீ என்றும் என் காதலி' அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன் யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! அனைத்தையும் அடித்துவிடும் அழகான ஓர் முகம்... ஆனாலும் கண்களிலே கண்ணீர்... கலைந்த கூந்தல்.... மாற்றான் கைபட்டு கசங்கிய மேலாடை... மான மறைப்புகளில் ஆங்காங்கே இரத்தத் துளி..... கலைந்த கூந்தலையும் அலங்கரித்த கார்த்திகைப் பூ என் கண்முன்னே கதறுகிறாள் ஏன் என்னை கைவிட்டாய்..? நான் கேட்டென்...? எப்போ உனை கைவிட்டேன்...? நான் உன்னைப் பார்த்ததில்லை...! அட பாதகனே.. எனை பிரிய மனமின்றி அன்று ஏங்கி அழுது நின்றாய்... எனை விட்டு பிரிய முதல் …
-
- 2 replies
- 1.1k views
-
-
நீ எப்படி.. அவன் என்றும் இவன் என்றும் அடுத்தார் வாழ்வை எடை போடும் மனிதா நீ எப்படி-உன் வாழ்வெப்படி.. அடுக்கடுக்காய் ஊர்வம்பை அளக்கின்ற போது.. ஆனந்தம் கடலாய் அலைமோதுகிறதோ.. அழ்மனத்து சகதியை வெண்திரை மூடுகின்றதோ.. உன்னைத்திருத்திக் கொள் உலகம் திருந்துமென்றார்... உண்மை அது மெய்..- நீ உன் வாயை உளறவிட்டு ஊர் வாயை அலறவிட்டாய்.. ஊரார் வம்பை ஊட்டி வளர்த்து தன் வம்பை தானே வளர்ததாய்.. வந்த நாள் நல்ல நாள் வாழும் நாள் கொஞ்ச நாள்-அதற்குள் ஆயிரம் பேர் தலையை உருட்ட நினைக்கும் அபூர்வ சிந்தாமணியே.. துன்பத்தில் வீழ்ந்தோரை வம்புக்குள் இழுத்து இன்பத்தைக் காண்பதுமேன்.. பிறர் துன்பத்தில் இன்பத்தை கண்டு களித்து வாழ்வுக் க…
-
- 14 replies
- 1.8k views
-
-
ஓ துகிலுரியப்பட்ட தங்கையே துட்சாதனன்களோடு நவகண்ணன்களும் கைகோர்த்துச் செய்த கொடுமை... பிணங்களின் நினங்களின்மேல் அபிவிருத்திப் பாடைகட்டும் அரக்க உலகே எப்போது உன் மனச்சாட்சி திறக்கும்... மனமிருக்கிறதா இருந்தால்.............. இன்றேனும் இல்லை நாளையேனும் உன் மனதைத் திறப்பாயா இல்லை சிங்களத் திமிரோடு சங்கமித்து சங்கமித்திரையையும் சாகடித்துப் புணர்வாயா? புணர்வதற்கு பெண்ணெண்ண பிணமென்ன.... தூ........... சிங்கம் புணர்ந்தெடுத்த சிங்களத்து வம்சமது செங்களத்தில் பட்டபாட்டை இப்படித்தான் தீர்த்ததுவோ! இதன்பின்னும் ஈனர்களாய் ஒரு கூட்டம் வீணர்களாய் ஒரு கூட்டம் வெட்டிகளாய் ஒரு கூட்டம் வேண்டாம் தாயே நீ எம்மை மன்னிப்பாய்! காத்திடவும் முடியாது நீதி காண்பதற்கும் முடி…
-
- 10 replies
- 868 views
-
-
நீ ஒரு துரோகி!! சிங்களத்தின் வாழை பிடித்துகொண்டு போகும் கருணா ..!! அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் ..அவனின் அரசவையில் உனக்கொரு பதவி!! வீரத்திற்கு பேர் போன தமிழச்சியும் ஒரு வேங்கை! துரோகியாக ஓடி ஓளிந்த நீ ..அவர்களின் சேலையை வாங்கி கட்டிக்கொள்! உன் பெயரை சொன்னாலே கன்னத்தில் அறைகிறதாய் படுகிறது! எதிரியின் கோட்டையில் உனக்கொரு புகலிடம்.. ச்சீ!! ஈழ தமிழரிடத்தில் இப்படியொரு கேவல மனிதனா?! தமிழர்களை அழிப்பதற்கு நீ ஒரு கேடயம்.. உன் பெயரை சொன்னாலே உலகமே காரி துப்பும் அளவிற்கு நீ ஓர் அசிங்கம்!! இனபடுகொலைக்கு வழிகாட்டும் நீயொரு துரோகி!! இலங்கை தமிழனிடத்தில் அழிக்க வேண்டிய பேர் நீ!! ஆக்கம் : - மீனலோஷினி
-
- 0 replies
- 1.8k views
-
-
நீ கவனமாக இரு……… போராட்டம் வீண் போகாது.” Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராளி இறுதியா…
-
- 0 replies
- 918 views
-
-
[size=4]அஞ்சாதா சிங்கமென்றும்[/size] [size=3][size=4]அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞனெனில் நானோ கவிஞனில்லை என்பாட்டும் கவிதையல்ல. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞனெனில் நானோ கவிஞனில்லை[/size][/size] ******** **********************…
-
- 11 replies
- 1.9k views
-
-
வா தோழியே .... எல்லோரும் பொறாமை படும் ...... அளவுக்கு நட்பாய் இருப்போம் ...... இப்படியும் நட்பாக இருக்க ..... முடியுமா என்பதை ...... நிரூபிப்போம் .......!!! கையில் முத்தமிட்டால்...... காதலியாகிவிடுவாள் ..... கை கொடுத்து உறவுவந்தால் ..... நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
-
- 4 replies
- 23.2k views
-
-
வன்னியில் கற்பழிப்பாம் யாழில் கொலையாம் தீவில் மண் பறிப்பாம் அகதி முகாமில் கருவறுப்பு தொடர்கதையாம் எழுதுகிறார் பேசுகிறார் சாவீடு போல் பறை அடித்து அழுகின்றார் எல்லாம் சரிதான் இதை மாற்ற என் செய்தார் நாலு பேர் சேர்வோம் என்றால் நாலே நாலு பேர் தானா... சுமை யாவும்அவர் மேலா..... வேலை வீடு வீடு வேலை நேரமிருந்தால் கொஞ்சம் சினிமா பெரும் பகுதி தொடர் நாடகம்என தூங்கிக்கிடக்கின்றார் துளியளவும் அதற்கான உழைப்பில்லை ஆனாலும் மண் வேண்டும் தான் பிறந்த தனை ஏற்ற மண் வேண்டும் அதற்காக உழைப்பதெப்போ...? அதற்கான உனது நேரம் என்ன..? பாதை தெரிந்ததுதான் பாதையில் நடந்தாயா ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல் பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்? வா வாரத்தில்…
-
- 14 replies
- 1.5k views
-
-
கலைவாணி நீ தந்தாய் எழுத்தாணி..! தலைவணங்கி வேண்டுகின்றேன் துணைவாநீ...!! ஞாலத்தின் ஒளியாகி... ஞானத்தின் வழியாகி... முத்தேவிகளில் முத்தானவளே...! முத்தமிழின் வித்தானவளே...!! தாய்த்தமிழுக்காய் எழுதுகின்றேன் -உனைத் தாயாகத் தொழுகின்றேன்! -என் தயவாக நீயிருந்து - என்றும் நான் தவறாமல் பார்த்துக்கொள்!
-
- 4 replies
- 1.5k views
-
-
நீ திருந்தவே மாட்டாயா.....??? ஏய் சமுதாயமே பெண்ணுக்கு மட்டும் இங்கு பெரும் தடைகள் ஏன்....??? காலச்சாரம் என்றிங்கு கால் கட்டு ஏன்...??? இரக்கம் இன்றி அவள் மீது அடக்குமுறை ஏன்.....??? மண் பார்த்து மங்கையவள் நடக்கவேனும் என்கிறியே.... பண்பாடு என்றுயதை வந்து வேறு முழங்கிறியே.... காளையோடு பெண்ணவளை கதைக்கலாகா என்கிறியே.... அது மீறி பேசி வந்தால் அபச்சாரம் என்கிறியே... கட்டியவன் தனை இழந்தால் விதவை என்று உரை(த)க்கிறியே... இவள் முன்னாடி வந்தாளே முழிவியழம் என்கிறியே.... சந்தி சபைகளிலே பின்னாடி வைக்கிறியே... இன்நாளு வரைக்கும் இதை இழிவாக செய்யிறியே...…
-
- 16 replies
- 2.2k views
-
-
நீ தூங்கும் நேரத்தில்…………. அந்த அமைதிப் பிரதேசத்தின் அமைதியைக் குலைத்தபடி வானில் “ஜிவ்” என்று பறந்த இரு சிட்டுக் குருவிகளின் “கீச் கீச்” சத்தம் ஆங்காங்கே “மினுக் மினுக்” என்று ஒளிரும் மெழுகுவர்த்திகளின் மெல்லிய சுடர் கூடியிருந்தோர் விழிகளில் தூவானமாய்த் தொடரும் கண்ணீர் அருவி பூக்கள் மடடும் புன்னகை மாறாமல் சூழ்நிலை மறந்து தமக்குள் பேசி சல்லாபித்துக் கொண்டன யார் யாரோ வருவதும் போவதுமாய் வருடத்திற்கு ஒருமுறை இங்கு வசந்த விழா ஆனாலும் அனைவர் மனங்களும் அலைமோதும் ஆதங்கம் வேதனையின் வெளிப்பாடாய் ஆடைகளில் கறுப்பு வெள்ளை அமைதியின் பிடியில் உறங்கும் அவர்களுக்காய் மனங்களின் தேடலில் விழிகளில் ஏக்கம் இது ஒருவழிப் பாதை ஆய…
-
- 5 replies
- 1.9k views
-
-
நீ நாட்டை ஆழலாமோ...??? குருதி நீரினிலே குளியல் செய்கின்ற மடையன் மகிந்தாவிற்க்கு மக்களாட்சியேன்...??? சினை கொண்ட சமரசத்தை சிதைக்க நினைக்கின்ற வெறி பிடித்த மடையனுக்கு வெள்ளை மாளிகையேன்...??? பிண பூவால் மாலைகட்டி தினம்தோறும் போடுமவன் நாட்டதிபனாகி நாடதனை ஆழலாமோ....??? சுதந்திரத்தை பறித்தின்று சுடுகாட்டில் புதை;துவிட்டு மக்களை பிடித்தின்று மயாணத்திற்கனுப்புகின்ற மாபாவியிவன் நாடதனை ஆழலாமோ...?? ஒளி கொடுத்த உதயத்தை சிறையிலே அடைத்து விட்டு விடியலை பேசுகின்ற வீணாண மனிதனிவன் நாட்டதிபரென்று நாடேறியாழலாமோ...??? - வன்னி மைந்தன் -
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=3] நீ பருகாத கோப்பை[/size][size=3] மயக்கச் சுழலில் காற்றில் கிறங்கியது நீ முத்தமிடுவதைப் போன்ற தேநீர் பருகும் நேரம்[/size][size=3] [/size][size=3] உனக்காக காத்திருந்தது என் தேநீர் கோப்பை[/size] [size=3] அந்தி வெயிலில் மின்னிய அதன் நிழல் கிழக்கில் மிக நீளமாக சரிந்து விழுந்தது[/size] [size=3] ஒரு நதியை ஊற்றினாலும் நிரம்பாது அதன் தனிமை[/size] [size=3] எடுத்தால் நொறுங்கிவிடுவதுபோல் அதன் மௌனம்[/size] [size=3] நட்சத்திரங்கள் எட்டிப் பார்க்கும் பின்னிரவில் அமைதிப் பள்ளத்தாக்காய் மாறிவிட்டது நீ பருகாத கோப்பை[/size] [size=3] -பழநிபாரதி[/size][size=3] [size=2]http://www.ilankathir.com/?p=8068[/size][/size]
-
- 0 replies
- 695 views
-
-
வீர வேலன் எங்கள் தோழன் ஊருக்கு நீ பாலகன் வீரர்களுக்கு நீ மாவீரன் கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான் நீ நொண்டி விளையாடினாய்... கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி நீ பந்து விளையாடினாய்.... பதுங்கு குழிகளுக்குள் மறைந்து கண்ணாமூச்சி விளையாடினாய்... நீ விளையாடிய விளையாட்டையும் கொரில்லா பயிற்சியாக ரசித்தார் உம் தந்தை உலகத் தமிழ்த் தந்தை... கையில் கொடுத்த பிஸ்கட்டுகளையும் நெஞ்சை துளைத்த குண்டுகளையும் ஒன்றாகவே பார்த்த வீரன்... வயிற்று பசிக்கு பிஸ்கட்டையும் மார்பு பசிக்கு குண்டுகளையும் உண்ட வீரன்... நீ! பூக்களின் தேசத்தில் போர்க்களம் புத்தன் கை பிடித்தே யுத்தம் செய்த ஆரிய அரக்கன்... புத்தமும் காந்தியமும் கை கோர்த்தே பாலச்சந்த…
-
- 1 reply
- 598 views
-