Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது… ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது… (விழியிரண்டும்……) சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்… முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப் பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்… (விழியிரண்டும்……) பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே ஏதிலியாய்ப் பாவியராய் பயணிக்கும் நேரமித…

  2. உறவுகளே... ஒரு கவிதைக்கு அதைப் படைத்தவனால்தான் பூரணமான உயிர்ப்பினையும் உணர்வினையும் பூரணமாகக் கொடுக்க முடியும் என எண்ணுகின்றேன். அத்தகைய என் முயற்சியில்.... பரீட்சார்த்தமாக இன்று முயற்சிசெய்ததன் விளைவே இந்த ஒளிப்படத் தொகுப்புடனான கவிதை. இதனை என் சொந்தக் குரலில் படைத்திருக்கின்றேன். தயவுசெய்து சகித்துக் கொள்ளுங்கள் !!!

  3. எங்கோ ஒளிந்திருக்கிறாய் உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ? மரங்களின் மௌனத்தால் பறவைகள் அழுகின்றன யாருக்கு யார் மெல்லியதாக பரவுகிறது ஒரு கேவல் ஒலி என்ன நிகழ்ந்திருக்கும்.. ஒரு பகிரமுடியாத மரணம் ஒரு விபத்து காமம் தீராத ஒரு கலவி குறைந்த பட்சம் இன்னொரு காதல் தோல்வி.. மெல்ல காற்று குளிர்கிறது வானம் அழக் காத்திருகிறது நனையக் காத்திருக்கிறேன் மழையில் கண்ணீரில்

  4. வணக்கம் சகோதரரே சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைச்சதிலை இருந்து நாங்கள் படுற பாட்டை ஒரு கவிதையா எழுதுவம் எண்டு வெளிக்கிட்டனான். ஒரேயடியா எழுதினா நீங்களெல்லாம் கூடிப் போச்சுது எண்டு சண்டைக்கு வருவியள் எண்டபடியாலை கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன். நல்ல பிள்ளைகள் மாதிரி வாசிச்சுப் போட்டு உங்கடை கருத்துக்களைக் கட்டாயம் எழுதுங்கோ. அப்ப தானே எனக்கும் உசார் வரும். (அடுத்த பாகம் எழுதினதும் தலையங்கத்தை நான் இரண்டாம் பாகம் எண்டு மாத்திறன் . அப்ப உங்களுக்கு வாசிக்க லேசா இருக்கும். வரலாற்றை மறப்போமா? (முதலாம் பாகம்) போர் ஓய்ந்து விட்டதனால் போராட்டம் முடிந்ததென்று புளகாங்கிதம் கொண்ட புதல்வர்களே கேட்டிடுவீர் சாமான்கள் போவதனால் சமாதானம் வந்ததென்று சந்த…

  5. கரும்புலிகள் தினத்தையொட்டி 1998 ஆம் ஆண்டு இலண்டன் ருட்டிங் முத்துமாரி அம்மன் கோவிலுக்காக எழுதிய பஜனைப் பாடலை கள உறவுகளுக்காக இங்கே இணைக்கிறேன். முத்துமாரி அம்மன் பாடல் கரும்புலிகள் - பஜனை அம்மா தாயே முத்துமாரி இம்மா நிலத்தின் சொத்துக்காரி சிம்மாசனத்தில் இருப்பவளே எம்மா நிலத்தைக் காப்பாயே! (அம்மா தாயே...) (1) சங்கு சக்கரம் கொண்டவளே சிங்கத்தின் மேலே இருப்பவளே தங்கத் தமிழைக் காப்பாயே எங்கும் சுகத்தைத் தருவாயே (அம்மா தாயே...) (2) கற்புூரதீபம் நாம் வளர்த்தோம் வெற்றிலை பாக்குடன் பழம்படைத்தோம் நெற்றிக் கண்ணார் நாயகியே உற்றார் உறவைக் காப்பாயே (அம்மா தாயே...) (3) சங்கத் தமிழாய் வளர்ந்தாளே வங்கம் போலே பரந்தாளே பங்கம் செ…

  6. நெருப்புக் குயில்கள் நிந்தனை எத்தனை வந்தணைத்தாலும் தங்கள் கருத்தை தயங்காது உரைக்கும் சிகப்புப் பக்கச் சிந்தனையாளர்கள். சகட்டுமேனிச் சமூகத்தை - தங்கள் சிகப்பு எண்ணங்களால் சீர்தூக்கி வைப்பவர்கள். முரட்டு மாட்டின் முதுகில் ஏறி - அதைப் புரட்டி எடுத்து சிறு பேனா முனையில் விரட்டும் விவேகிகள். முட்டாள்த் தனத்தின் முகமூடி கிழிப்பவர்கள். கட்டாக் காலிகளையும் தம் எழுத்துக்களால் கட்டி வைப்பவர்கள். எட்டா உயரத்தில் எதுவும் இல்லையென்று சிட்டாகப் பறந்து சிறகடித்துக் காட்டுபவர்கள் சாட்டையாய் வீசும் சடுகுடு வார்த்தைக்குள் - ஓர் சமுதாயத்தின் பொல்லாச் சங்கதிகள் உரைப்பவர்கள். பழமையை எதிர்த்து புதுமையை அணைத்தாலும் பாழாய் போகாமல் பண்பு…

    • 10 replies
    • 1.9k views
  7. ஆழிப்பேரலையே – எங்கள் ஆன்மாக்களை புரட்டிப்போட்ட சுனாமியே ஆசியாவையே அழித்தொழித்து அகிலத்தையே அதிரவைத்த ஊளித்தாண்டவமே ஆண்டுகள் ஆயிரமானாலும் ஆறுதல் கோடிகள் சொன்னாலும் அடங்குமோ எங்கள் மனத்துயர்? அணையுமோ எங்கள் துயர் நெருப்பு? நினைவுகளை அழிக்கமுடியாமல் நித்தமும் கலங்கி நிற்கிறோமே…. மரங்களை அடுக்குவது போல் பிணங்களை அடுக்கிவைத்த காட்சிகள் மனக்கண்களில் விரிகிறதே – உடல் அணுக்கள் அனைத்தையும் உலுப்புகிறதே இறுதிக்கடன் செய்வதற்குகூட இனசனத்தை விட்டுவைக்காமல் குடும்பத்தோடும் குடியிருப்புக்களோடும் கூடிவாழ்ந்த ஊரோடும் உற்றார் உறவினரோடும் கொத்தொடும் குலையோடும் மொத்தமாகக்கொன்றொழித்த உன் கொடுமைதனை கோரத்தாண்டவத்தை எண்ணுகையில் உள்ளம் வெடித்த…

  8. வணக்கம் இங்கு பலதரப்பட்ட கவிஞர்கள் இருக்கின்றீர்கள். அதாவது எழுச்சி கவிதைகள் எழுதுபவர்கள் அல்லது காதல் கவிதைகளில் கற்பனை சிறகை விரித்து பறப்பவர்கள் அல்லது இரண்டு கவிதைகளையும் காலத்துக்கு ஏற்ப எழுதுபவர்கள் என்று பலவகைப்படுத்தலாம். ஆனால் யாழ் வரும் வாசகர்கள் என்ன மாதிரி கவிதையை விருப்பி படிக்கின்றார்கள் என்பதை அறிய நீண்ட நாள் ஆசை. மற்றைய பக்கங்களை விட கவிதைப்பக்கங்கள் தான் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போகின்றது. எல்லாவற்றிக்கும் வாக்குப்பதிவு வைக்கின்றார்கள். இதற்கு நான் வைக்கின்றேன் . உண்மையாக வாக்களியுங்கள்.

  9. Started by vanni mainthan,

    வாடா....வா... பெரியவரா பெரியவரா பெரகரா - நீங்க பெரிய அடி வேண்ட வேணும் பெரகரா.... ஓடி வந்து ஆட்சியில ஏற வாங்க ஓலமது கண்டு நீங்க ஓடணுங்க.......... எம் தமிழில் பாதியரை கொன்றவரே ஏறி குந்தி ஆட்சியிலே ஓட வாங்க.... நாட்டை விட்டு வேறு நாடு ஓடினாயோ....?? உன் உடலை நரியும் களுகும் கொத்த வேணும் ஓடி..வாடா.......... பண்டை கால புலி என்றா நீ நினைத்தாய்....??? அட உனக்கு பாடை கட்ட வேணுமின்று ஓடி வா.... அடுக்கடுக்காய் நெஞ்சுக்குள்ளே அடுக்கி வைத்தோம்- உன்னால் அழிந்தவரின் சோகங்களை தேக்கி வைத்தோம்..... இறக்கி வைக்க முடியாமால் தவித்து நின்றோம் இப்போ உன்னை இறக்க வைத்து நாங்களதை தணித்து வைப்போ…

  10. பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிக்க முடியாத கவிதையாக இன்னும் மன அடுக்குகளில் இறைத்துக் கிடக்கிறது மானுடத்தேடல். பிறந்ததற்காய்... வாழச் சபிக்கப்பட்டிருக்கிறது அடிமைகளின் வாழ்வு. முடிவுகள் அற்ற தேடல் தீராக்கடனாளி ஆக்குவதில் தீர்க்கமாய் இருக்கிறது. வகைப்படுத்த முடியா வலிகளை எடுத்தெழுதுவதில் எவ்விதப் பயனுமில்லை நித்திய நோயாளியாக விரும்பின் கூறுக கொத்தணிக் குண்டுகள்போல் தமிழினத்தின் வாழ்வு சிதறிச்சிதறி சின்னாபின்னமான கதைகள் கோடியுண்டு முற்காலம், பிற்காலம் இடைப்பட்ட இக்காலம் தெளிவற்ற கலங்கலுக்கு உரித்துடையதாக காட்சியாகவும், சாட்சியாகவும்.... மாயமானாகப் புலப்படு…

  11. Started by priyasaki,

    மறந்து விடவா? தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

  12. சிலையாக வடித்த சிற்பம் தான் அவளோ இப்பொழுது மலர்ந்த மல்லிகைதான் இவளோ கண்கள் இரண்டும் கதைகள் பேசின காதலின் விரசம் இதழ்களில் தவழ்ந்தன வகுப்பறையில்.... பாடங்கள் மறக்க பாடம் கற்பித்தாய் நீ ஆசான் நான் மாணாக்கன் ம்ம்ம்..... பாடம் நடத்து

  13. Started by கஜந்தி,

    உலக மென்னும் அற்புத படைப்பின் அழகிய பொய்கள் நாங்கள் அறிவு கொண்டு அழிவையே நேசித்து போலி கொண்டு நிம்மதியழித்து இன்பம் தேடி துன்பம் நேசித்து காலம் தனை காகிதக் குப்பையாக்கி மரணம் கொண்ட மாய வாழ்வின் உதிர்ந்த இதழின் கற்பனை கொண்டு வாழ்வின் சரித்திரத்தை இறந்த உயிரின் இரத்தத்தில் எழுதுகின்றோம்

  14. ஒரு நொடி அவள் சிரித்துப் பேசினால் நூறு நொடி என் ஆயுள் நீள்கிறது. ஒரு துளி கண்ணீர் சிந்தினால் நூறுநாள் என் ஆயுள் குறைகிறது...

  15. Started by nunavilan,

    தண்ணீர் தேசம் -I கவிஞர் வைரமுத்து கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி அவள். அவன் அழகன். இளைய அறிஞன். காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன். என்ன யோசனை? என்றா…

    • 12 replies
    • 2.8k views
  16. வான் மழை கழுவி வந்த வானவில்லின் வர்ணம் கொண்ட மலரே..... தென்றலிடம் கடன் வாங்கிய விசிறி கொண்டு திரவியமாய் பரப்பும் நறுமணம் கொண்டவளே.. மெல்லிதழ் தான் அசைத்து என்னை மெல்ல அழைத்திட்டாய் செவ்விதழ் விரித்து உன் தேனமுதம் பருகவிட்டாய்... எள்ளளவும் மனப் பயமின்றி நான் உன்னை தழுவி இன்புற்றேன் உன் பட்டுடல் பட்டு பக்குவமானேன்..! நான் மட்டும் உன் அன்புக்குக் காதலனாக மாலைக்குள் நீ வாடினாலும் உன் ஆயுள் முடிந்தாலும்... உன் சந்ததி பெருக்கும் மகரந்தம் தாங்கியவனாய்..! தியாகத்தின் செம்மல் நீ... உன்னை நாளும் ஆணை ஆடையாய் மாற்றிடும் மனிதப் பெண்ணுக்கு உவமை சொல்பவன் ஓர் மடையன்..! [size=2]Photo taken …

  17. உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும் கொம்பு முளைத்த எங்கள் மாடுகளோடு கொம்பில்லாத மாடுகள் வந்து மோதிப் பார்க்கின்றன. கொழும்பில் இருந்து தடித்த கொழுப்போடு பறந்து வரும் எருமைகளால் மாதாவின் தலையைத்தான் உடைக்க முடிகிறது. வானத்தில் புல் முளைத்தால் எங்கள் மாடுகளுக்கு சிறகுகள் முளைக்கும் என்பதை மறந்துவிட்டன பறந்து வருகிற எருமைகள். உடையாத மனதோடு உயிர் காக்கும்படி அடைக்கலம் தேடும் கோவில் வாசலில் மாதாவின் தலை தலைகிழாய் கிடக்கிறது. எண்பத்தைந்து மாக்கள் செத்தால் என்ன? எண்பதினாயிரம் மக்கள் செத்தால் என்ன? எந்த நாடும் கேட்காது. மதம் பிடித்த யானைகள் மதம் பிடிக்காத பூனைகளோடு கைகுலுக்கி மகிழ்ந்து மௌனமாகிப் போனது. …

    • 7 replies
    • 1.8k views
  18. அழிவின் உச்சத்தில் வன்னிமண்.... கவிதை.... அழிவின் உச்சத்தில்; இன்று நம் அழகான வன்னிமண் ஆனந்தத்தின் உச்சியிலோ நமை அழிக்கும் தென்னிலங்கை..... ஆறாய் ஓடிடுதே; நம் அரும்புகளின் இரத்தங்கள்.... அதைக் கண்டு ரசித்திடுவான் அதிகாரச் சிங்களவன்.... உயிர்காக்க ஓடும் வழி உயிர்களின் மரணப் பாதையாகி நம் மழலையெல்லாம் வீதிகளில் மண்ணாகிக் கிடக்கிறதே.... இக்கொடுமை பார்க்காமல் ஒருகணம் கண்மூடி திறப்பதற்குள் அடுத்தகுண்டு எடுத்திடுமே மழலைகளின் தாயின் உயிர்.... ஐயையோ பரிதாபம் இதைக் கேட்டாலே நம் உயிர்போகும்..... அதைக் காணொளியில் கண்டதுமே நம் கண்களிலே நீர்த்தேக்கம்.... நம் வன்னியிலே இன்று ஜனனத்துக்கு விடுமுறையா…

  19. இரத்தத்தில் தோய்ந்த இளம் மல்லிகைகள் கவிதை - இளங்கவி அதிகாலைச் சூரியனின் அழகு வெளிச்சத்திலே பனித்துளிகள் தாங்கி பூத்திருந்த மல்லிகைகள் இன்று அதே சூரியன் அதே ஒளிக்கீற்று ஆனால் பனித்துளிகள் இல்லை மலர்ந்திடும் மல்லிகையும் செங்குருதித் துளிதாங்கி சிவந்து மலர்கிறது..... ஆனாலும் கார்த்திகைப் பூ மட்டும் கலங்காது நிற்கிறது...! மனதெல்லாம் மகிழ்விக்கும் நம் மண்ணின் செல்வங்கள் சிதறிவிட்ட முத்துக்களாய் தெருக்களிலே கிடக்கிறது தாங்கள் சிந்திவிட்ட இரத்தத்திலே தம் வாய்மூடி கிடக்கிறது...! எமது பிய்ந்த மழலைகளின் பிணக்கோலம் காட்டி போரை நிறுத்தச் சொன்னால் மேற்குலகுலகின் பதில் நமக்கு காட்டாதே ..! காட்டாதே...! மேற்குலகுச் சிறு…

  20. மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன், மாவீரன் மேஜர் சிட்டு! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றாறுகளின் சிரிப்பொலியில், சங்கீதம் படித்தவன்! ஓயாத அலைகளின் காலத்தில், வெற்றி நடை பயின்ற, வேங்கைகளின் படை நடையில், ‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்! கலைப் பண்பாட்டுக் கழகத்தின். காவலனாய் வாழ்ந்தவன்! கறையாக நிலைத்து விட்ட கண்ணீரால் காவியங்களும், சிதறிப் போன சொந்தங்களின், செந்நீரால் ஓவியங்…

  21. Started by கோமகன்,

    நீயா அவள் ???? நித்தம் நித்தம் வந்து முத்தம் கொடுத்த என்னை சித்தம் கலங்கிய பித்தா என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ?? எந்தன் பிழைதான் என்னவோ?? பள்ளியறையில் பங்காக சிந்து பாட வந்த பொழுது என்னை நீ , முட்டித் தள்ளியதும் ஏனோ ?? கொத்துக் கொத்தாக நீயாக , வந்து முத்தம் கொடுத்ததும் , முன்பு நீ , அத்தான் !! அத்தான் !! என்று நொடிக்கொரு தடவை அழைத்த நினைவு , என் நினைவில் முட்டித் தள்ளியதே........ அடி கள்ளி..... நீயா அவள் ???? கோமகன் 11 மார்கழி 2013

    • 19 replies
    • 3.4k views
  22. Started by Hariny,

    ¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð? þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ? ¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ. PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.

    • 39 replies
    • 5.9k views
  23. கரை தேடும் கட்டெறும்பாக வாழ்கைக் கடல் மீது நம்பிக்கையோடு கரைசேர நான் மிதக்க இடையில்... அலை மீது துரும்பாக எனைக்காக்கும் கப்பலாக நீ வந்தாய். காதல் எனும் கயிறு போட்டு தொற்றிக் கொண்டேன் உன்னிடத்தில். நீயோ... பத்திரமாய் எனை கரை சேர்ப்பாய் என்றிருக்க காதல் கசந்ததென்று.. நடுக்கடலில் தள்ளிவிட்டாய். பரிதவித்தே போனேனடி. நம்பிக்கை தகர்ந்து..!! ஈவிரக்கம் இல்லாதவளே உன்னை ஓர் நாள் கடல் நடுவே திமிங்கலம் ஒன்று கவிழ்க்குமடி... அப்போதும் கட்டெறும்பாய் நான்.. அலை மீது உனக்கு உதவிடுவேன் நிச்சயம் பழிவாங்கேன்..! அது உன்னுடன் காதலுக்காய் அல்ல என்னுடன் உள்ள ஜீவகாருணியத்திற்காய்..! (படத்துக்காய் ஓர் வரி.)

  24. அண்டம் சதிராட பிண்டமாய் நான் பிண்டத்தில் குடியிருந்து பிண்டமும் பிண்டத்தைச் சுமக்க நீரினுள் குடியிருந்தேன் நான். முக்கிலும், வாயிலும் நிணமும் நீரும் சூழ்ந்துருக்க நாபியில் சுவாசித்துப் பிண்டமாய் நான், தவிக்கின்ற பிண்டமாய் நான் கையும் காலும் சுருட்டிக் கொள்ள அசைய முடியா சூழலில் அசைந்தாடும் பிண்டமாய் நான் ஓசையின்று அழும் பிண்டமாய் நான் தவிர்ப்பு ஏறி. இடம் போதாமல் கை,கால் அசைத்து உதைத்து எழும்பிப் பிண்டமாய் சுழன்று உதைத்து உதைத்து பிண்டம் வெளி வர பனிக்குடம் உடைத்து வெளிவர பிண்டத்தில் இருந்து உயிர்ப்பு நிலை எய்திப் பிண்டமாய் நான், எடுத்துக் கொஞ்சிய கைகளில் குழந்தையாய் நான். நான் வளர்ந்து,வாழ்ந்து நரை,திரை எய்தி மரணி…

    • 2 replies
    • 762 views
  25. மண்குளிரச் செய்த முகில்கள் – கவிஞர் புதுவை இரத்தினதுரை மாரிமழை யாகி நீர்தெளித்து ஆடி மண்குளிரச் செய்த முகில்கள். மாதவங்கள் செய்த போதெமது பூமி மடியிலுரு வான உயிர்கள். போரில்விளை யாடும் வேளையுடல் வீழ்ந்த போதுமுயி ரான சிலைகள். பூங்குயில்கள் பாடும் ஈழமதை வாங்கப் போயெரிந்து போன புலிகள். மாலைமணி ஆறு ஆகும்பொழு தாக மாரிமழை கொஞ்சம் ஓயும். மாலைமலர் சாத்தித் தீபஒளி காட்டும் வேளைவிழி ஆறு பாயும். சாலை, கடை யோடு, வீடுஎன யாவும் சாமிதுயி லில்லம் கூடும். சாதிமத மென்று வேறுபட லின்றித் தேவநிலை கொண்டு பாடும். வாரியெடுத் தும்மை வாசல்தனில் வைத்து வாசமலர் தூவும் பொழுதில் வந்தெமது கண்ணில் நின்றுதெரி கின்ற வாறுவர வேண்டும் அருகில். தேரிலெழுந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.