கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
என் தாயே மனையாண்ட என் மணிமகுடத்தாயே உனை வாழ்த்த எனக்கு அருள் தாரே கருவில் எனைத் தாங்கி கண்மணி போல் காத்தவளே உருவில் உனைப் போல் வந்த என்னை- உன் குருதி கொடுத்து வளர்த்தவளே- நான் ஒரு நூறு பிழை செய்தாலும் உன் உயிர் போல் எனைக் காத்தவளே கள்ளிப் பாலூற்றிக் கருவழிக்கும் மா நிலத்தில் பிள்ளைப் பாலூட்ட மறுதலிக்கும் மானிடத்தில் துள்ளி வரும் குழந்தைக்குத் தாய்ப் பாலூட்டித் தாலாட்டி வெள்ளிப் பால் நிலவை அள்ளித் தருவேன் என்று அமுதூட்டி பெண்குழந்தையென்றாலும் பொன்குழந்தை எனப் பாராட்டி கண்ணின் இமை போல் காலமும் நீராட்டி மண்ணின் பெருமையை மனத்தினில் இசையாக்கி பண்பின் சிகரமாய் எனைப் பாரினிலே வேராக்கி விண்ணில் நின்றும் இன்றும் எனைச் சீராக்கும் எ…
-
- 3 replies
- 691 views
-
-
[size=5]திணிக்கப்பட்ட பாதையின் ஓரத்தில் படிந்திருக்கும் புழுதிகளின் ஓலங்கள் தற்கொலை செய்துகொண்ட ஒருவனின் இறுதி மூச்சுக்களாய் தீண்டும் ஒவ்வொருவரையும், அநாதரவான அந்த ஒலிகளின் ஆழத்தில் வியாபித்துக்கிடக்கும் நிராகரிக்க முடியாத நிர்ப்பந்தமொன்றின் உறையாத கறைநிழலில், ஒடுங்கியடங்கிக்கிடக்கும் அவனது கனவுகள் முகத்திலறைந்து போகும். வினோத திரையொன்றால் முகங்களை மறைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் விலத்திக்கொண்டிருப்போம் எந்த சங்கடமுமில்லாமல், ஏற்கனவே திணிக்கப்பட்ட பாதையில் விலத்திக்கொண்ட சுயவன்மங்கள் சிரித்துக்கொள்ளும் சத்தமில்லாமல்........!!!![/size]
-
- 5 replies
- 691 views
-
-
இன்று திலீபனின் நினைவு நாள். புலிகளுக்கு ஆயுதமும் தெரியும் அகிம்சையும் தெரியுமென உலகுக்கு உணர்த்திய நாள் உலகில் காந்தி என்ற பெயர் அடிபட்டுப்போனநாள். அரக்கர்களின் காலடியில் எல்லாமே கனவாகிப்போனதுவோ என கலங்கி நின்ற தமிழரை தன் வயிறை முடக்கி எழச்செய்தநாள் அவனை நாம் மறக்கமாட்டோம் அவலங்களை மன்னிக்கமாட்டோம் அவனை மீள் நிறுத்தி இன்று மீண்டும் தமிழர்களின் எழுச்சி காணும் நாள்.. வீரவணக்கம் திலீபனே...
-
- 0 replies
- 691 views
-
-
நான் ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியக் குடியரசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் எனக்கும் எந்திரத் துப்பாக்கிகளுக்கும் பெண்களை இருட்டறையில் பூட்டுவதற்கும் அமெரிக்க டாலர்களுக்கும் கல்லால் அடித்துக்கொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் இறைவனை நம்புகிறவன் அதனாலேயே கருணையை நம்புகிறவன் கடவுளினால் நீதி மறுக்கப்பட்டால் அந்தக் கடவுளை சந்தேகிக்கவும் தயங்காதவன் சமாதானத்திலும் சுதந்திரத்திலும் இறைவனை தொட்டு உணர்கிறவன் மசூதியை இடித்தவனை எப்படி வெறுக்கிறேனோ அவ்வாறே புத்தரின் சிலையை வெடிவைத்து தகர்ப்பவனையும் வெறுக்கிறேன் எல்லா பழங்கால தண்டனைமுறைகளும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன் நா…
-
- 2 replies
- 690 views
-
-
சுவரோரம் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் பதினெட்டாவது தென்னங்கன்றை நடுகிறார் தலையாரி சுப்ரமணி சிதிலமடைந்த மடப்பள்ளிக்குள் பசித்த எறும்புகளும் கொழுத்த எலிகளும் குடியிருக்கின்றன குதிரை வாகனத்தின் குறியை அசைத்து சிரிக்கும் சிறுவர்கள் செவ்வரளிச் செடிகளின் நிழல் மறைவில் திருட்டுப் புகையூதும் இளவட்டங்கள் பாத்திரங்களில் விழுந்த துளை அடைக்கும் பொருட்டு சிலைகளின் எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட அபூர்வமாய் வரும் பெண்கள் எதிர்க்கடையிலிருந்து தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து நந்திக்குப் பின்புறம் வட்டமிட்டு சீட்டாடும் ஆண்கள் என எப்போதும் ஆள் நடமாட்டமுள்ள எங்கள் ஊர் சிவன் கோயிலில் …
-
- 0 replies
- 690 views
-
-
என் கவிதையின் சொற்களைக் கொண்டு பழைய காலத்தை மீட்க முடியுமாவென்று கேட்கிறார்கள் பசித்த நிலங்களுக்கு நீர் வார்க்க முடியுமாவென கேட்கிறார்கள் ஒரு நாட்டின் விடுதலையை கவிதையின் சொற்கள் வாங்கித்தருமா என்கிறார்கள் எனக்கும் என் கவிதைக்குமிடையே எவ்வித கடிதத் தொடர்புமில்லை ஒரு கவிதையின் வேலை என்னவென்று கவிதைக்குத்தான் தெரியும் சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியுமென்று யாரும் மதவாதிகளைக் கேட்டதில்லை வேதங்கள் புராணங்கள் புனித நூல்கள் இறைவசனங்கள் இன்ன பிற இத்தியாதிகள் எல்லாவற்றிலும் சொற்கள் அந்த சொற்களின் ஆயுள் நீளம் எவ்வளவோ அவ்வளவு காலத்திற்கு உண்மை போராட வேண்டியிருக்கும் கவிதைகள் எலி வலையல்ல; யுத்த கால முகாம்கள் கனவுகளை கவிதையில் வைக்கப் பழகியிருக்கிறோம் போராட்ட…
-
- 0 replies
- 690 views
-
-
கலவரம் உனக்கெதற்கு ! -------------------------------- கலவரம் கொள்ளாதே நிலவரம் நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா ! பலமென்பது என்னவென்று பதுங்கும் புலி காட்டும் உளம்தனிலே உறுதியை நீ உரமாக்கி நடமாடு ! இடப்பெயர்வை ஏற்படுத்தி எம்மினத்தை வதைப்பவர்க்கு இருந்துபார் நடப்பதை தனித்தனி ஊரெல்லாம் ஒன்றாகித் திரள்கிறது அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அரற்றிக் கொள்ளாது அடைந்திருக்கா தெழுவாய் நீ ! பலமற்ற கொழு கொம்பில் பரவிப் படர்கின்ற சிங்களப் படைகளது சிதறிச் சிதைவதற்கு அகலப் படர்கிறது ! நிலங்கள் கை மாறும் களங்கள் பின்வாங்கும் காலம் அது கூட கலைப்போம் சிங்களத்தை என்றே சிந்தை கொண்டால் சிறுமை உனக்கில்லையடா ! பெருந் தலைவன் இருக்கையில…
-
- 0 replies
- 690 views
-
-
திபெத் மொழி பேசும் முத்துக்குமார் 43 வயது நிரம்பிய இந்தியாவில் கல்வி பயின்ற திபெத்திய கவிஞர் குத்ருப்...! சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வியாழக்கிழமை தீக்குளித்து இறந்து விட்டார் சுமார் 50 - க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் வியாழக்கிழமை இறந்தவர் கவிஞர் என்பது தான் மிகப் பெரும் துயரம்..! ஒரு படைப்பாளி..! திபெத்திய இலக்கியங்களை கற்று அறிந்தவர், அந்தோ பரிதாபம்..! என்றாலும் இந்தப் போட்டியிலும் எவரையும் விஞ்சி நிற்கிறார்கள் தமிழர்கள்..! இந்த வளரும் திபெத்திய படைப்பாளிக்கு, கவிஞனுக்கு ஆழ்ந்த இரங்கல் இவை தவிர நாம் வேறு என்ன சொல்ல முடியும்..! சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 689 views
-
-
அகிம்சைக்கு கதவடைப்பு வரலாற்றுப்பதிவுகள் பரமேஷ்வரா.................எனக்கு உன் முகம் தெரியவில்லை அண்ணா திலீபன் முகம் தான் தெரிகிறது அன்று நல்லூரின் வீதியில் இன்று லண்டனின் வீதியில் அகிம்சைக்கு கதவடைப்பு, சிங்களவன் அக்கிரமத்துக்கு வரவேற்பு மேற்குலக நாடுகளே வெற்கித் தலை குனியுங்கள் வரலாறு சொல்லட்டும் அதர்மத்தின் பக்கம் நின்று தமிழர்க்கு இழைத்தீர்கள் அநீதி என்று...
-
- 0 replies
- 689 views
-
-
தீயதை தீய்த்தி டு! வேண்டாம் தீக்குளிப்புகள் உங்களை நாங்கள் சந்தேகப்படவில்லையே?! ஏன் உறவுகளே எங்களுக்காய் ஒலிக்கின்ற உங்கள் குரல்களை நெருப்புக்கு வார்க்கின்றீர்கள்?! நாடற்று நாதியற்று கதியென்று தாயக உறவுகளே உமைத்தானே நம்புகின்றோம் தீயிட்டு உங்களை நீங்களே எரித்திட்டால்! நாம் இனி எங்கு போவோம்?! தமிழர் வாழ்வழித்து கொக்கரிக்கும் சிங்கள அரசுக்கு எம் உணர்வுகள் புரியுமா?! தீ வைத்து உங்களை நீங்களே கொளுத்தினால் தாயக விடுதலை பிறக்குமா?! நியாயத்தை நீதியை மனிதாபிமானத்தை நேசிக்கும் இனமான உணர்வுகள் எரிந்திட்டால்!... நஞ்சினை மட்டுமே கக்கிடும் துரோகிகள் மட்டுமே மிஞ்சுவர் தாயக உறவுகள் என்றிங்கு சொல்வது வெறும் வார்த்தைக்காக …
-
- 0 replies
- 689 views
-
-
[size=3] [size=4]கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.[/size] [size=4]ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.[/size] [size=4]காவியக்கவிஞனே![/size] [size=4]உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்[/size] [size=4]நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்[/size] [size=4]தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்[/size] [size=4]தங்கள் குணம…
-
- 0 replies
- 689 views
-
-
ஒளிதந்த அந்தப்பேரிரவு (பாகம்1) எப்படியோ இருபத்தாறுவருடங்கள் ஓடிமறைந்து விட்டன.இந்த இருபத்தாறுவருடங் களில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்..தோல்விகள்...பெருவெ ற்றிகள்.. திருப்பங்கள்..அழிவுகள்...!ஆனாலும் அன்றைய்பொழுதின் அதிர்வுகள் இன்னமும் நெஞ்சின்ஓரங்களில்...!எல்லாவற்றையும் இழந்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றம் இன்று எல்லோர்மனங்களினுள்ளும் பிசைந்தாலும் அந்த 23யூலை 1983 ன் நாளில் எதிரிக்கு ராணுவரீதியாக சொன்ன பெரும்செய்தியும் அதைவிட அரசியல்ரீதியாக எம் தாயகமக்களை எழுச்சிபெற செய்ததும் என்றும் நெஞ்சிருத்தி நினைலுகொள்ளத்தக்கது.பார்ப்ப
-
- 0 replies
- 689 views
-
-
மௌனித்த வெளியில் நின்று முனகும் குரல் - வெற்றி துஷ்யந்தன் அச்சப் பிராந்திய இரவுகளோடு நகர்ந்த நரக நாள்களின் நினைவுகளால் சூழ்ந்து கிடக்கின்றது இந்த காற்று மண்டலம். யாரெனத் தெரியா உடலங்களின் மீது பாதங்களை பதிந்து பாதைகளை தேடிய -எங்கள் ஆற்றாமைகளும் இயலாமைகளும் அரங்கேற்றம் கண்ட பெருவெளியில் எல்லாவற்றையும் தொலைத்தோம். உருப்பெற முடியா உணர்வுகள் அனைத்தையும் அடக்கி கொண்டு உள்ளுக்குள்ளே புதைத்து வெடித்தோம். விதைகளின் கனாக்களை விழிகளில் சுமந்தபடி விடுதலை பற்றிய சொல்லாடலின் பெரும் அர்த்த புஷ்டியை உணர்துகொண்டோம். ஒரு இனத்தின் பெரும் கனவின் சாத்தியம் பற்றியும், ஒரு இனத்தின் தனித்த தேசத்தின் வல்லமை பொருந்திய சுய வாழ்வுரி…
-
- 0 replies
- 689 views
-
-
ஆடி பாடி திரிந்த குழந்தைகளை நம் நாட்டின் வருங்கால முத்துக்குகளை கொலை வெறி கொண்ட சிங்கள அரசு கொன்று குவிக்குறது எத்தனை குழந்தைகள் ஆனதைகளாய்.. எத்தனை குழந்தைகள் ஊனமாய்.. அலயோசை அடித்து சத்தம் கேட்பது போல் நம் குழந்தைகளின் அலறல் ஓசை உங்கள் காதில் விழ வில்லயா உலக நாடுகளே?
-
- 0 replies
- 688 views
-
-
மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மனுநீதிச் சோழன். பட்டினித் தீ மூட்டிய பெருந்தீ பாரதப் பேரரசின் பாராமுகம் பலியெடுத்த பெரு வீரன். மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மனுநீதிச் சோழன். எங்கள் மனமெங்கும் எரிகின்ற அணையாச்சுடர். ஆண்டுகளாய் அடிமையின் மீதமாய் நீண்டு போன வரலாற்றில் தமிழர் நிலைமாற்றப் பிறந்த நியாயத்தின் சுடர். நிலம் வாழும் வரையுந்தன் வரலாறும் வாழ்வின் அர்த்தமும் வீரமும் ஈகமும் - என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கும். - சாந்தி - rameshsanthi@gmail.com http://mullaimann.blogspot.de/2014/09/blog-post.html
-
- 0 replies
- 687 views
-
-
-
[size=4]மழைக்கூதல் தேகம் தீண்டிப்பரவியவள் சோம்பல் கலைத்தது. கிளைகளின் ஆலாபனை இடம்மாறும் புறாவின் குறுகுறுப்பு கடகத்துள் கிடந்த நாயின் முனகல் கட்டையை சுற்றும் ஆடுகளின் அரவமென, அறிகுறிகளால் அவஸ்த்தைகளை உள்வாங்கி இயங்கத்தொடங்கினாள்.[/size] அள்ளிவந்திருந்த [size=4]கொக்காரை பன்னாடைகளை தாவரத்து ஓரம்தள்ளி மழைநீரேந்த பானைகளை அடுக்கி, தூவானம் தொடாதவிடத்தில் காயாத ஆடைகளை கட்டி, உவனிக்காதவிடம் பார்த்து அடைக்கோழியின் கூட்டையரக்கி, பெருமூச்சுடன் வான்பார்க்கையில் விழுந்தது துளிகள் முகத்தில்.[/size] பாத்திரங்களில் ஒழுக்கு நீர் [size=4]ஒசைலயத்துடன் விழ, தெறித்ததுளிகளால் நனைந்தது நிலம் சாம்பலற்ற அடுப்போரம் வாயிலேதுவுமின…
-
- 5 replies
- 687 views
-
-
சாத்தான்களின் வருகையால் …. மனிதம் நசுங்கும் பொழுதொன்றில் வரும் என் அவலக்குரல் -உங்களுக்கு ஒப்பாரிப் பாடாலாய் தோன்றலாம் இதுதான் வாழ்க்கை எமக்கு நித்தம் சப்பாத்துக் கால்களில் மிதிபட்டு நசுங்குகிறது எம் குரல்வளை... உயிர் உறையக் கதவடைத்து துயில்கையில் நாய்களில் ஓலத்தில் எமனின் பிரசன்னம் ! மூச்சு விட மறந்து உயிர் பற்றி தவிக்கையில் இடித்து உடைகிறது கதவு தாழ்ப்பாள் தெறிக்க ... இராணுவ மிருகங்கள் ஊர் புகுந்தபின் அன்றாட வலிகளாய் போனது இதுவும் .. ஆண்பிள்ளைகள் கைதாக்கி முற்றத்திலே சோதனை என தொட்டுத் தடவுகையில் செத்துப் போகிறாள் முதல் தடவை தமிழிச்சி .. பெற்றவர், கட்டினவர் கண்முன்னே அடித்து உதைத்திழுத்து செல்லுகையில் யார் கதறலு…
-
- 2 replies
- 687 views
-
-
இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.
-
- 0 replies
- 686 views
-
-
TRIBUTE TO BALAMURALI KRISHNA என் மனம் கவர்ந்த மா பாணன் பால முரளி கிருஸ்ணாவுக்கு கவிதாஞ்சலி **************************************** தங்கரதம் சென்றது விதியினிலே ஒரு தளிர் மேனி வெந்தது தீயினிலே மரகத வீணைகள் துயர் பாட மானிக்க மாலைகள் உனை மூட * செவ்விள நீராய் கண் திறந்து செம்மாதுளையின் மணி நீர் உகுத்து ஆற்றொணத் துயரினில் ஓலமிட்டு ஆபோகி கைவளையல் உடைந்தது போல் * துயர் மிகும் வேழைகள் தேனாக இனி தென்றலின் வண்ணத்தில் நீபாட மின் புடப் பேழையுள் தீயாகி தேவனின் பொன்மேனி நீறாகி
-
- 1 reply
- 686 views
-
-
சொந்த மண்ணில் அகதியாய் அவர்கள் வந்த மண்ணில் அகதியாய் நாங்கள் நாங்களும் அவர்களும் ஒன்றுதான் அங்கே தமிழன் அகதி இங்கே அகதித்தமிழன் இப்படிக்கு அகதித் தமிழன் அனலைதீவன்
-
- 1 reply
- 686 views
-
-
-
ஆழ் கடலிடியில் அமிழ்த்தப்பட்ட காற்று நிரம்பிய பலூனைப் போலொரு இருதயத்தோடிருக்கும் சிறுமி தன் குரல்களை தானே நசிக்கிறாள் பறிக்கப்படாத உண்ணிப் பழங்களை உண்ணும் வண்டுகள் உனைத் தேடுகின்றன நாவற் தடிகளால் அடித்து வகுப்பெடுக்கும் செடிகள் வாடிப்போயிருக்கின்றன குழந்தைகள் காணாமல் போகுமொரு தேசத்தில் இனி என்னதான் இருக்கும்? எனது தேசத்தின் குரலாயிருந்த சிறுமியே! முன்பு குழந்தைகளுக்குச் சவப்பெட்டிகள் விற்கப்பட்ட நகரில் இப்போது சிறைச்சாலைகள் திறக்கையில் எப்படி உனக்கு ரிப்பன்கள் வாங்கித் தருவேன்? அண்ணாவுக்காக அழுதது குற்றமெனவும் அவனைத் தேடியது தண்டனைக்குரியதெனவும் உன்னையும் கடத்துகையில் நீயும் காணாமல் போகிறாய் காணாமல் போய்விட்டன பள்ளிக்கூடக் கதிரைகளும் அண்ணாவோடு ஓடிப் பிடித்த…
-
- 0 replies
- 685 views
-
-
'' உடன்பிறப்பு '' ~~~~~~~~~~~~~ நம் தானைத்தலைவனின் நெஞ்சத்தில் இடம்பிடித்த எம் உடன்பிறப்பே ....... ! நம் தேசத்தின் விடியலுக்காய் வழிகாட்டிய எம் உடன்பிறப்பே .......! நம் விடுதலை தேசம் வரவில்லையோ என்று ஏங்கி தவிக்கும் எம் உடன்பிறப்பே .........! நம் எதிர்காலச்சந்ததிக்காய் உயிரை நீத்த எம் உடன்பிறப்பே .........! நம் தேசத்துக்கான உறவுகளை தலை சாய்த்து வணங்குகின்றோம் எம் உடன்பிப்புகளே !!!!!!!!!
-
- 0 replies
- 685 views
-
-
[size=5]மவுனத்தின் மொழிபெயர்ப்பு ! [/size] சிறகு விரிச்சி பறக்குதே -மனசும் சித்தாடைக் கட்டி விரியுதே கொத்தோட பறிச்சவன் யாரடி கொண்டாட தேதியுந்தான் கூறடி. சித்திரையில் முளைத்தவனோ சினம் கொண்டே பிறந்தவனோ கத்திரியிலும் குளிரெடுக்க கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ? மலர் வனமே சென்றாலும் மணமேனோ வீசலையே- கட்டாந்தரையில் நானும் களையெடுக்கப் போனேனே.. கடுகுவெடிக்குமுன்னே காதை பொத்தி நின்றேனே களவு போனது நிஜம் தானோ கண்ணுறக்கம் மறந்ததேனோ? சொல்லுனக்காய்த் தேடித்தேடி சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ மவுனத்தை மொழிபெயர்க்க மல்யுத்தம் பயில்கின்றேன. மன்றாடித்திண்டாடி நானும் மயங்கித…
-
- 2 replies
- 685 views
-