கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்....... கவிதை - இளங்கவி....... முள்ளிவாய்க்கால்.... தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து.... மலைகள் பல சாய்ந்து..... இரத்தத்தில் நிலமெல்லாம் குளமாகி...... தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி..... இறுதிவரை வீரம் சொல்லிய மண்..... வேங்கைகை பல சாய்ந்த மண்.... வல்லரசின் வீரர்களைச் சேர்த்து.... வாங்கி வந்த குண்டுகளைப் போட்டு.... பறந்து வந்து எரிமலையை போட்டு.... பாய்ந்து வரும் பீரங்கியால் தாக்கி... எத்தனை படுகொலையை இலகுவாய் செய்துவிட்டு...... வெற்றியாம் வெற்றி....! அவர்கள் வீரராம் விரர்....! கோழையின் வெற்றி உன் கொல்லைப்புறம் மட்டும் தான்.... வந்தவர்கள் போய்விட்டால் உன் வ…
-
- 13 replies
- 2.5k views
-
-
இழிவு ஒன்றிருந்தால் ... உயர்வு ஒன்று இருக்கும் .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! இறக்கம் ஒன்றிருந்தால் ... ஏற்றம் நிச்சயம் இருக்கும் ... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! பள்ளம் ஒன்றிருந்தால் ... மேடு ஒன்றிருக்கும் வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!! தோல்வியொன்றிருந்தால் .... வெற்றி நிச்சயம் உண்டு .... வீழ்வது தப்பில்லை ... எழாமல் இருப்பது தப்பு எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
-
- 0 replies
- 1.1k views
-
-
-
கடவுளைத்தேடி நீ ஆலைய கருவறைக்குள் அமைதியாய் போய்விட்டாய், அம்மா என்ற கடவுள் என்னோடு இருப்பதால் உன்னைத்தேடியே ஆலயம் வந்தேன். முகம் கொடுத்து பேச முடியாதவனாய்-உன் பாதணிகளுக்குள் மலர் வைத்துப்போனேன். நீ கடைக்கண்ணால் கண்டதையும் நான் கண்டேன், வீதியோர குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு நீ சென்றபோது மலருக்கு தெரியாது உன்னக்கு என்னை பிடிக்காதென்று இப்போதெல்லாம் நான் வெளியே போவதில்லை. உன்பிம்பம் விழுந்த என் வீட்டுக்கண்ணாடியை சமையலறையில் மாட்டிவிட்டேன். உன் நினைவுகள் என்னை தீண்டும்போது சமயலறைக்கு ஓடிவிடுவேன், உன்பிம்பம் பட்ட கண்ணாடி முன்னே கண்ணீர் வடிக்க, அம்மா கண்டுவிடுவாள் என்று வெங்காயம் உரித்த படி நான்......
-
- 2 replies
- 600 views
-
-
ஒன்பது தசாப்தங்கள் -கடந்து.. செத்தொழிந்து... மேலும் - மூன்று தசாப்தம் முடிந்தும்... ஏன் அந்த - உற்சாக கிழவன்... உன் மனசில் - துருத்திகொண்டே கிடக்கிறான்?? வெளிப்படையாய் -பேசினாலென்ன... அந்த வெள்ளி - தாடி .. நாத்திகனுக்கு-....... ஆத்திகனாய் - இருப்பவர் தரும்... அதரவு - அதிகம் ..!!! எல்லாம்..... அவர் கருத்து...... அதிலொரு சிறு குழப்பம்... பட்டு சேலையை சாமிக்கு உடுத்தி....... அழகு பார்த்து.... பக்கத்து உறவுகள் ... ஊத்தை - துணியுடன் கிடப்பதை ரசிப்பதில் உனக்கென்ன பெருமை?? அவர் - வார்த்தையில் சொல்லுறேன் -கேளேன்... நீ வெங்காயம்!!
-
- 6 replies
- 1.6k views
-
-
புத்தர் பிறந்த நாளுக்கு இரத்தக் கறைகளுடன் அது இலங்கைக்கு வருகிறது… குஜராத் முஸ்லிம்களின் குருதி பருகிய கொம்பேறி மூக்கன் அது… காஷ்மீரின் கண்ணீரில் கண்மூடிக் குளிக்கின்ற கட்டுவிரியன் அது… இஸ்லாமிய விழுமியங்களில் இயன்றவரை நஞ்சுமிழும் இனவாத சர்ப்பம் அது… ஆர். எஸ். எஸ். தேள்களை அரவணைத்துப் போஷிக்கும் ஆபத்தான அரவம் அது… மனிதர்க்கன்றி இப்பாம்பு மாடுகளுக்குத்தான் மரியாதை செலுத்தும்… மூத்திரம் குடிக்குமிந்த மூடப் பாம்புக்கு மூத்திரம் கழுவிச் சுத்தமாயிருக்கும் முஸ்லிம்களின் மீதுதான் ஆத்திரம் எல்லாம்… இந்தப் பொல்லாத பாம்பின் மூச்சிலும் விஷமிருக்கும்… ஆதலால் மூடி வையுங்கள் ஜன்னல்களை!AkuranaToday.com | Read more http://www.akuranatoday…
-
- 1 reply
- 1.4k views
-
-
விழியோரங்கள் அரும்பிய நீர் துடைத்து கயிற்று நிரைகளுக்குள் அடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் நடுவிருந்து கண்கள் அவனையே நோக்குகின்றன..! பின்புலத்தில் சீறிப் பாயும் புலியா யாழ் இந்துவின் உண்மைப் புதல்வனா தாய் தமிழீழத்தின் செல்லப் பிள்ளையா மக்கள் விடுதலையின் ஒற்றைக் குரலா... கேள்விகள் அவன் கோலம் கண்டெழுகின்றன..! சின்னஞ்சிறுசுகளின் மாமா.. எங்கள் அண்ணா உங்கள் தம்பி பலரின் பிள்ளை சிலரின் எதிரி சிந்தனை ஒன்றை வைத்து உண்ணா நோன்பிருந்து மக்களை துயில் எழுப்பிக் கொண்டிருந்தான்..!! கனவுகள் அவன் தனக்காக கண்டதில்லை..! சனத்துக்காக தன் சாவிலும் கூட மேலிருந்து விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்... தேகத்தையே தேசத்தில் பிள்ளைகள் படிக்க கொடுத்தவன…
-
- 9 replies
- 936 views
-
-
முதல் வெடியோசையில் பிறக்கிறது காதல் .. பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் .. எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா .. என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் .. நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் .. ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு .. ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் .. கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு . . என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா .. கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் .. கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு .. அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் .. கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் .. என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை .. எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் .. அடிக்கடி பவுடர் போடும் …
-
- 7 replies
- 906 views
-
-
முட்டுவதற்கு வளர்க்கப்பட்ட ஆடு வெட்டுண்டு கிடக்கிறது மற்றைய ஆடுகள் கதறுகின்றன கத்திக்கு சொந்தக்காரன் யார் என்று பதறுகின்றன முன்பு ஒரு நாள்.. ஆடு கட்டுக்குள் அடங்க மறுத்தது யாருக்கும் சொல்லாமல் கயிறு அறுத்தது ஆயினும் பின்பு ஆடு திருந்தியது தானாகவே வீடு திரும்பியது காலங்கள் ஓடியது.. ஓநாய்களை முட்டப் பழகிய ஆடு புதிய களத்திற்கு ஒரு நாள் வந்தது அங்கே ஓநாய்கள் நிற்கவில்லை உடன்பிறந்த ஆடுகள்தான் நின்றிருந்தன முட்டுவதில் பழைய வேகம் இல்லை முட்டுகிறதா? ஒட்டுகிறதா? எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான். இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன ஓநாய்க…
-
- 8 replies
- 938 views
-
-
நீயேன் எரித்தாய் மீனாட்ச்சி, உன் நிழலில் வாழும் மதுரையடி, . ஆடுகளம் திரைப்படத்திற்காக வெற்றிமாறனின் கேட்டுக்கொண்டதால் ஜி.வி.பிரகாஸ் இசையில் சினிமா பாடலொன்று எழுதினேன். . 2010 ஆரம்பமென நினைவு ஒருநாள் வெற்றிமாறனோடு ஜி.வி.பிரகாசின் கலையகம் சென்றபோது ஒரு சிறுவன் ’கீபோட்டை’ அற்புதமாக இசைத்துக்கொண்டிருந்தான். நான் அவரை ஜி.வி.பிரகாசின் மகனாக்கும் என நினைத்தேன். இவர்தான் ஜிவி.பிரகாஸ் என வெற்றிமாறன் அறிமுகப் படுத்தியபோது வியப்பாக இருந்தது. அவர் இனிமையான மனிதர். “என் வெண் நிலவே எரிக்காதே” என்ற பாடலை அவரது இசைக்கு எழுதினேன். இசைந்த சொற்களை இசைக்காக மாற்ற நேர்ந்தபோதெல்லாம் மனசு வலித்தது. அதனால் பின்னர் பாடல் எழுதுவதை மறந்துவிட்டேன். இப்ப மீண்டும் எழுதும்படி சொல்கிறார…
-
- 4 replies
- 1.5k views
-
-
சின்ன சின்ன கவி சொல்ல வந்தேன் வெண்ணிலாவே உன் வெண்னையினால் என் உயிர் சிதைந்தது வெண்ணிலாவே நட்ச்சத்திரங்கள் உன்னைப்பார்த்து கண்சிமிட்டுது வெண்ணிலாவே அந்த கண்சிமிட்டை எப்படித்தான் தாங்குறாயோ வெண்ணிலாவே பொறாமை கொண்ட கருமுகில்கள் உன்னை மறைக்கிறது வெண்ணிலாவே கருமுகில்கள் மறைக்கும்போதுதான் உன் உடையை மாத்துகிறாயா சொல்லு வெண்ணிலாவே வாணில் உள்ள வால் வெள்ளிகள்தான் வெண்ணிலாவே உனக்கு காதல் தூது செய்கின்றதா சொல்லு வெண்ணிலாவே உயிரோடு உயிர் சேர்ந்தால்த்தான் காதல் வெண்ணிலாவே காதலிலே தோல்வியுற்றால் மரணம் தானா பதில் சொல்லு வெண்ணிலாவே
-
- 4 replies
- 1.4k views
-
-
நிலா அக்காவின் கவிதைகள் நேக்கு மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கிற நேரம் பழையகளம் யாழ்களத்தில் போய் படித்தேன் அதில் பல கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன சோ அங்கே இருந்து தூக்கி கொண்டு வந்துட்டேன் ................நிலா அக்கா ஏசமாட்டீங்க தானே (அது தானே போட்சாச்சு பிறகு என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கு ) வெண்ணிலா அக்கா யாழ்களம் 2 யில் எழுதிய கவிதைகளிள் சில!! காத்திருக்கிறேன் வாழ்வின் தேடுதலுக்காக நகர்ந்த நாட்களில் என்னை நீதான் அடையாளப்படுத்தினாய் உன் மௌனத்தின் வேர்களில் பூத்திருக்கிறது என் காதல் பூ பனித்துளியை பேட்டி காணும் மேகங்கள் விண்மீனைப் பிடிக்கும் மூங்கில்களில் அவசரம்.. இப்படியான என் கனவுகளின் தொடர்ச…
-
- 5 replies
- 3.9k views
-
-
வட்ட..... வட்ட .... வெண்ணிலாவே... தொட்டு தொட்டு பேச வாவேன்..! நெட்டநெடு வானதிலே தன்னம் தனியாக நீ என்னை... என்னை சுற்றி வாறாய் இதை நிறுத்தாயா...? உன்னை...... உன்னை.... நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்.. நிம்மதியாய்... நித்தியமாய் இரண்டு வார்த்தை கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம் கீழ் இறங்கி வராயோ..? நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. கதிரவன்... கண்ணுறங்கும்நேரத்தில்... நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே.... எப்படித் தான் நன்றி சொல்வேன்.. நான் உனக்கு... மல்லிகை மொட்டவிழும் மாலை நேர…
-
- 24 replies
- 7.4k views
-
-
வெண்புறா பனியும் என்னிடம் கடன்கேட்கும். - பஞ்சு முகிலும் என்னிடம் கடன்வாங்கும். கனிவும் என்னிடம் மண்டியிடும். - எக் கருமமும் என்னிடம் சிரம் தாழ்த்தும். உயர்திணை, அஃறிணை பிரித்தெடுத்தால் அஃறிணை எந்தன் ஆதாரம். உயிரே இல்லாச் சடமல்ல - நான் உரைக்கும் கதையைக் கேள் மெல்ல! காவியத்தூது போனதுண்டு. கலங்கரை விளக்கு ஆனதுண்டு. சோவியத் வானில் பறந்ததுண்டு. சொர்க்க வாசலைத் திறந்ததுண்டு. வானிடை உலவும் மதியழைத்து - மந்த மாருத இழையில் ஏணை கட்டி மானுடப் பிறப்பைத் தாலாட்டி மகிழ்ச்சி தந்திடக் காத்திருந்தேன். இன்று..... அமைதிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார். அன்புச் சின்னமாய் ஆக்கி வைத்தார். அகிம்சை காக்கும் அரியணையில் அடிமைப்படுத்திப் …
-
- 11 replies
- 2.2k views
-
-
அதிகாலை வேளை அந்தக் கோடை நடுவிலும் நனி குளிர் நடுக்கம்..! வந்த அழைப்பை... போர்வைக்குள் ஒளிந்திருக்கும் ஆசை முந்திக் கொள்ள அழைப்பு மிஸ்ஸானது. மீண்டும் சிணுங்கும் அந்தத் தொலைபேசி சினந்து எழுப்ப... "என்ன ரெடியோ வெண்புறா நிகழ்வு இருக்கு போகலாம்" மறுமுனைக் குரல் அழுத்த.. முடிவு... "காட்டாயம் அவைக்காகப் போகனும்.." மனது உறுதியானது. தமிழன் பரம்பரை பரம்பரையாய் நாற்று நட்ட வயல்கள் நடுவே சிங்களம் விதைத்த கண்ணிவெடிகள் கால் பிடுங்கி அழித்தது எம் மக்கள் வாழ்வு..!! அது கண்டு நெஞ்சுருகித் துணிவு கொண்டு புறப்பட்ட புறாக்களே இந்த வெண்புறாக்கள்..! சம்பிரதாயத்திற்கு ஒலிவ் கிளை ஒன்றை நுனிச் சொண்டில் உயரக் காவி வித்தை காட்டி.. வேட்டையாளர் வேடம் கலை…
-
- 5 replies
- 713 views
-
-
தமிழ் செல்வன் வான் செல் தமிழ் சமர்களில் சிலிர்த்தான் சமாதானத்தில் சிரித்தான் நீ சிலிர்த்த போதெல்லாம் சிங்களம் மரித்தது. சிரித்த போதெல்லாம் - புறா சிறகு விரித்தது. தமிழீழத்தின் பிரமாதம் அவர் - நீ பிரதமர். சிரித்தே சிகரம் தொட்ட உத்தமர். பல களம் வென்ற போரியல் வித்தகர். தமிழீழ அரசியல் துறை - தரணி அரசியலில் துரை - உலகில் தமிழ் உள்ள வரை - தமிழா இவர் புகழ் பறை. சமாதான செயலகத்தில் சமாதான செயல் அகத்தில் - அதனால் ஆயுதம் இல்லை கரத்தில் - இன்றேல் எதிரி வீழ்ந்திருப்பான் கணத்தில் எங்கே? எங்கள் சமாதானத்தின் சமாதி. புலியும் புறாவும் சரி பாதி - புவி வல்லரசுகளின் போதி - புத்தா உன் மக்களுக்கு சமாதானத்தை போதி. …
-
- 3 replies
- 1.3k views
-
-
வெந்நிப் பழசு கவிதை: தமிழச்சி தங்கபாண்டியன் - ஓவியம்: ஸ்யாம் அப்பாவிற்கு வெந்நிப் பழசு பிடிக்கும். அம்மா அருகிருக்க முன்னிரவுகளில் வெந்நிப் பழசும் சின்ன வெங்காயமும் நிலவும் நட்சத்திரங்களுமாய் எங்களுக்குக் கதை சொல்லும். கண்ணோரங்கள் சுருங்கி விரிய ருசிப்பின் சுவையை உதடு கடத்தும் அப்பொழுதில், ஒதப்பழம்போல் அப்பா கனிந்திருப்பார். எச்சிலூறப் பார்க்கும் என்னோடு கட்டெறும்புகளும் காத்துக்கிடக்கும் முழு நிலவொன்றில் சிந்திவிட்ட ஒரு சுடு பருக்கை நினைவின் குளிரிடுக்கில் உறைந்து போனது சுருங்கி விரியும் ஓதப்பழக் கண்களாய் இந்த இரவில் உணவு மேசையில் தனியொருத்தியாய்த் தட்டெடுக்கிறேன். மதியத்தின் எச்சமாய்ச் சுருங்கியதொரு பரு…
-
- 1 reply
- 2k views
-
-
கட்டோடுவந்த கார்குழலாள் தளிர் நடையில் நெஞ்சம் பட்டோடுகின்றதுவே ! இதை எப்பாடு பட்டும் மட்டோடு வைக்க - மனம் விட்டோடுகின்றதுவே . முக்காலம் உணர்ந்த முனிவனவன் மனதுக்கும் மாறாது இந்தக் குறை. சித்தர் பாட்டுக்கும் முன்னாலே வந்தாச்சு அன்றே மாறாத துன்பக் கதை. தடை தட்டாத முகிலும் மண்ணை எட்டாதே மழையாய் துன்பம் பட்டாகவேண்டும் மனம். காதல் கிட்டாத நிலையில், முட்டாத வரையில், வீணாகும் வாழ்வு தினம். பருவச் சிட்டோடு வாழ கிட்டாதோ அந்த எட்டாத வானவெளி ? இனி .. வற்றாது ஊறும் முற்றாகும் வரையில் திகட்டாத காதல்க் கவி. ----------------------------------------------------- 1997 காலப்பகுதி நடுநிசி ஒன்றில்,சந்தத்தை மட்டுமே…
-
- 1 reply
- 796 views
-
-
விதியுடன் அரங்கேறும் எம் விளையாட்டு வினையிது யார் செய்த பாவம்-கண்ணே உயிர்கள் பணயம் எம் உள்ளத்தில் உறங்காத பய அலைகள் நீயும் சேர்ந்து கொண்டாய் நீளும் எம் துயரங்களுடன் அனுபவித்துப்பார் இதுதான்-இந்த அந்தரங்க உலகில் எம் அவசர வாழ்வு அனாதைகளை காக்க இல்லங்கள் ஆயிரம் இன்னும் கட்டுவோம்-ஆம் அனாதைகளுக்கு எம்மிடம் பஞ்சமில்லை அங்கவீனர்கள் பாவம் அங்கே தனிமையிலே அவர்களுக்கு கதைபேசி மகிழ புதிய நண்பர்கள் விரைவில்... வெறுக்காதே இம்மண்ணுலக வாழ்வை வெறுத்திடு இம்மண்ணில் உன் பிறப்பை மட்டும்....
-
- 0 replies
- 790 views
-
-
வெறுமை சாலைகளிலும் மரங்களிலும் மனிதர்களிலும் இறங்குகிறது வெறுமையான இரவு. காத்திருப்பவை நாய்களின் குரைப்பும் சோற்றின் மௌனமும். ஏதொ மறந்து போய்விட்டது யாருடைய களைத்த முகமும் உன்னைத் தேடுவதில்லை. இழந்தது வசவுகளின் கசிந்த அன்பு. இன்று கால்களுக்குக் கீழ் எந்தத் தரையும் இல்லை என்னிடம் தரப்பட்டவை வார்த்தைகள் என் பின் இருப்பவை துகள்கள். கதியில் மறைந்தது சிரிப்பு ஏன் அழுகையாகக்கூட இருக்கலாம். இப்பொழுதுதான் இங்கு எங்கேயோ ஓய்ந்திருக்கவேண்டும் அந்தப்பாடல் கண்களில் ஒளிர்ந்து தன் புறாக்களை அசைத்து போகிறாள் ஒரு பெண் உச்சிவெயிலில் வேர்க்க விறுவிறுக்க வந்த நண்பன் நீல மேகங்களிடை மறைந்த ஒரு தேவதையைப் பார்த்திருக்கவேண்ட…
-
- 9 replies
- 1.6k views
-
-
வெல்லும்! வெல்லும் எம் ஈழம்! தலை போனால் போகட்டும் தன்மானம் சாகாது உயிர் போனால் போகட்டும் உணர்வுகள் சாகாது நிலம் போனால் போகட்டும் பலமிங்கு குறையாது தோல்விகள் வந்தாலும் மனமிங்கு சளைக்காது! விடுதலை ஒன்றேதான் குறிக்கோளாய் ஆனபின் இடையில் வரும் எதுவுமே இடைஞ்சலாகாது! இலக்கொன்றே எம் வெற்றி அதுவரை போராடு தலைவன் வழிசென்ற தலைகளென்றும் குனியாது! களத்தினில் நிற்பவன் பலத்தை எடை போடாதே சிங்கள அரசுக்கு நீ சிபாரிசு செய்யாதே!உள்ளிழுத்து பின் பொங்கும் சுனாமியாய் வருவார்கள் தமிழ் ஈழமே வென்றுதான் புலிகள் வெளிவருவார்கள்! வலிகளை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளாதே புலிகளை நம்பிக்கொள் உன்வீரம் சாகாதே!! தமிழினம் நிமிரணும் எதற்குமே சோராதே! ஈழம் வெல்…
-
- 10 replies
- 2k views
-
-
மழை எப்போது எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பது காற்று எதிரியே நீ எதுவரை வரவேண்டும் எங்கே விழவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் விடுதலைப் புலிகள் புலிகள் முன் நகராது இருக்கும் வரைதான் வெற்றிக்களிப்பில் கர்ஜனை செய்வீர்கள் பொன்சேகா படைகளே ஒன்றன் பின் ஒன்றாய் ஏவுங்கள் எறிகணைகளை பறந்து வந்து போடுங்கள் குண்டுகளை பொறுத்துக் கொள்கின்றோம் எமது தேசத்தின் அமைதி குலைத்த சிங்களமே… எங்கள் தலைவனின் மௌனம் கலையும்போது வதைபடுவாய் பொறுத்துக்கொள்… எதிரியே உன் தளத்தில் வந்து நின்றவாறு புலிகள் ஏவும் உனது எறிகணைகள் உன் தலையில் வீழ்ந்து வெடிக்கும் என்பதைக் கருத்தில்க்1கொள் குதித்து வ…
-
- 3 replies
- 2.5k views
-
-
வெற்றிடத்தில் ஒரு குறிப்பு அந்தக் கதையில் நிறைய அறைகள் இருந்தன ஒவ்வொருவராகப் புகுந்து வெளியேறிக் கொண்டிருந்தனர் அந்தக் கதையில் நிறைய ஜன்னல்கள் இருந்தன காற்றும் இசையும் உள் நிறைந்து வெளி வந்தது அந்தக் கதையில் நிறைய மரங்கள் இருந்தன அணிலும் பறவைகளும் விளையாடின அந்தக் கதையில் விதைகள் நடப்பட்டிருந்தது படிக்கப் படிக்க பூத்துக் குலுங்கியது அந்தக் கதையில் மழை பெய்தது வானவில் தென்பட்டது கடவுள் குழந்தைகளோடு பேசிக்கொண்டிருந்தார் அந்தக் கதையில் வாசிப்புத் தன்மை கடைசி பக்கத்திலிருந்தும் படிப்பதுபோல் அமைந்திருந்தது முன்னிருந்தும் பின்னிருந்தும் படித்துக் கொண்டே வந்தவர்கள் சந்தித்துக் கொண்டார்கள் வெற்றி…
-
- 11 replies
- 1.4k views
-
-
புழுதியப்பிய தெருக்களின் முனைகளில் அழுதபடி குழந்தைகளும் அனாதைகளான அவர்களுமாக தெருக்கள் இப்போது துயரங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. எல்லோரையும் எல்லாவற்றையும் அழித்துச் சென்றவர்களின் முகங்களால் நிறைந்து கிடக்கிறது நிலம். நீதியின் சாட்சிகளாய் அலைகின்றவர்களின் முகங்களில் பயமும் வறுமையும் பதியமிடப்பட்டிருக்கிறது….. ஆணிவேருடன் ஒரு சந்ததியும் அதன் குருத்துக்களும் கனவுகளும் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட அடையாளங்களை அழிக்க யார்யாரோ வருகிறார்கள் அறிக்கைகள் எழுதுகிறார்கள் எல்லாம் வளமைபோல் அவர்கள் போய்விடுகிறார்கள்…. இரவுகளில் தனித்துறங்கும் பயத்தில் ஊரில் குடும்பங்கள் ஓரிடத்தில் கூட அச்சமுறு இரவுகளோடு குழந்தைகளையும…
-
- 3 replies
- 926 views
-
-
நண்பா! நீ இல்லை இருந்தும் கடிதம் எழுதுகிறேன் தமீழீழம் எங்கும் எம் சுவாசம் இருந்திருக்கிறது இன்று எங்கும் ஆக்கிரமிப்பு நண்பா ! உன் புதைகுழியில்க்கூட நீ இல்லை என் ஞாபகங்கள் கிளரும் மாவீரர் வீடுகள் முன் அவன் நிற்கிறான் இன்னும் கப்பல்கள் நிற்கின்றன கடல் இல்லை இருக்கிறோம்முகவரி அற்று உங்கள் இறுதி வாக்குமூலங்களை சேகரித்த நாம் இருக்கிறோம் வெற்றிடம் நிரப்ப காற்று வரும் நம்பிக்கையை விதைத்துவிதைத்து எம் உயிர் இழுபடுகிறது கண் மூடினால் உம் முகங்கள் வரும் இடைவேளை அற்று பார்க்க விரும்பினும் "குற்ற உணர்வு " ஏதோ செய்கிறது "இயலாமை " எமை சாகடிக்கிறது நண்பா! எதிலும் ஒன்றாய் இருந்…
-
- 11 replies
- 1.2k views
-