Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "சோ"வென்ற மழையில் கூந்தலிலிருந்து நீர் சொட்டச் சொட்ட.... அந்த நிலாவை என் வீட்டுத்தாழ்வாரத்தில் பார்த்தேன்... முதன்முதலில் பார்த்தேன்... அவளோடு அவளின் குட்டி;த்தங்கை...சுட்டித்தங்க

  2. Started by இலக்கியன்,

    தீபங்கள் வரிசையாக ஏற்றி தீமைகள் நீங்கிய நன் நாளாம் ஈழத்தின் அவலங்கள் நீங்கி ஈர இரத்த ஆறுகள் அடங்கி ஈன சிங்கள் அரக்கன் வீழ்ந்து ஈழம் மலரும் நன்நாள்-எம் ஈழத்தமிழருக்கு தலைத்தீபாவளி

  3. இளைஞனின் ஊக்குவிப்பான விமர்சனத்தை கருத்தில் கொண்டு மீண்டும் முயற்சி செய்து இருக்கிறேன். மீண்டும் பகுத்தறிவு!! மனிதன் நான் என்று சொல்லிக்கொள்வாய்........... ஆறறிவு கொண்டேனென்று அழகாய் ஒரு கிரீடம் ........... உனக்கு நீயே சூட்டிக்கொள்வாய்!.......... கண்ணுக்கு முன்னாலொரு சிசு பாலின்றியழுது தன் ஜீவன் கரைக்கையில்..... கண்ணுக்கு தெரியா கடவுளுக்கதை குடம் குடமாய் கொண்டு சென்று.. ஊற்றி கும்பாபிஷேகம் செய்வாய்! ஏழைச்சிறுவன் ஒருவனுக்கு கல்வி தராய்............ எரிகின்றதொரு வீட்டில் தணல் எடுத்து உன் வீட்டு உலை மூட்டுவாய்......... மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில.......... "மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேட…

    • 21 replies
    • 3.7k views
  4. [தாய் மண்ணைப் பிரிந்து வந்த ஏக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருப்பது.பறவைகள் விலங்குகள் கூட தங்கள் கூடுகளையும் இருப்பிடங்களையும் தேடிப்போகவே எப்பொழுதும் முனைகின்றன.மண்ணைப்பற்றிய ஏக்கமானது ஒவ்வொரு புலம்பெய்ர்ந்த மனிதனது ஆன்மாவையும் ஓயாத தீயாக எரித்துக் கொண்டே இருக்கும்.சிதறிக்கிடந்த யூதர்களின் மனங்களில் எல்லாம் எரிந்த அந்தத்தீயே இன்று ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களின் மனங்களிலும் கணல்கிறது, என்னுள்ளும் இருக்கும் அணைந்து போகாத அந்ததத் தீயில் உருகிய சில கவித்துளிகள்....தொடரும்] பெருங்கூட்டமாய் நெடிதுயர்ந்து நிற்கும் ஓக் மரங்களின் கீழ் நான் தனிமையைத்தேடி வந்தமர்ந்தபோது காற்று துருவப்பாறைகளிலிருந்து பனித்திவலைகளைக் காவிக்கொண்டு விரட்டிவரும் வெளிச்சத் துண்டுகளிடமிருந்து …

    • 29 replies
    • 3.7k views
  5. Started by வாலி,

    காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு இரவுகளிலும் உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன் அந்த இரவுகளில் - நீயோ கருவறையைக் கல்லறையாக்கும் பாடம் படித்துக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒற்றைச் சந்திரனாய் என்னினைவுகள் உன்னையே சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க - நீயோ நட்சத்திரங்களை நெஞ்சில் வைத்து உனக்காக மட்டும் எடைபோட்டுக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை! ஒவ்வொரு முறையும் காதலால் - உன்னுடன் உயிர்மொழி தொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன் - நீயோ வெறும் உதடுகளால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாய்! காதலின் வலி உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்…

  6. மீண்டும் உயிர் பெறும் மாவீரம் மீண்டும் உயிர் பெறும் மாவீரம் “”””””””””””””””,,,”””””””””””””””” உறங்கிக் கிடந்த உறவுகளே உங்கள் வீரம் ஓய்ந்து போகவில்லை உயிர்பெறத் துடிக்கின்றது “”” எங்கள் கண்மணிகள் கல்லறை எங்கும் பகைவன் பாதங்களின் சிதைவு கண்டு முட்புதர்கள் கூட மூடிக்கொண்டது ” கல்லறை எங்கோ ஓரமாய் விழியிளந்து விசும்பும் சத்தங்கள் உறவுகளின் உள்மனதை உரமூட்டியதோ,, வீரம் மெருகேறிய கைகளில் வீச்சருவாள், புனிதம் கொள்கின்றது மாவீரர் துயிலும் இல்லம் ” இன்று மிளிரும் மாவீரர் நாள் மிடுக்குடன் எழுந்து கொள்ளட்டும் ” கார்த்திகை 27 கண்மணிகளின் புனித நாள் ” மாற…

  7. அழகிய திருமுகம் பார்த்து சில நொடி சிரித்தேன் மறு நொடி இதயம் புகுந்தாய் …. தசைகள் சிரிக்க விடவில்லையோ? பெண்ணே நான் உன் இதயம் புகுந்தேன் என்று ஏற்க மறுக்கும் உன் பார்வை அர்த்தம் தெரியா அந்த ப்பார்வை. கற்பனைகளுக்குள் காலடி வைத்தது எந்தன் இதயம். …. ஒருநாள் பொறுக்க வைத்து மறுநாள் மலர்ந்த புன்னைகையில் இதய நாயகணாக வைத்தாய் கண்ணே. ….. தொலைதொடர்வில் பயத்தோடு கேட்டாய் சந்தோச என் அலர்ரலை. சில நொடியில் ராஜரீகம் ஏரினாய் என் ரானியாய். பல நெறி சொல்லி உன் உயிராக்கினாய் அழகிய ராஜ்யதியே ====================================================================== முதல் பார்வையில் வரும் காதல் பற்றி எழுத்து பிழைகளு…

    • 1 reply
    • 3.7k views
  8. Started by வர்ணன்,

    இதயம் அனலில் வேகுதடி- எந்தன் இருவிழி - தூக்கம் கொன்றதடி! செல்லமாய் என்னை கிள்ளு- உந்தன் சிரிப்பால் என்னை கொல்லு! சுட்டெரிக்கும் வெய்யில் கூட மழையென்றாச்செனக்கு! சுந்தரி நீ கள்ளி - பாரேன் உன் உதட்டு சிவப்பில் என் உயிர் ஒளிந்து கொண்டதடி! நெருப்பை நீர் அணைக்கும்! மழையை மண் அணைக்கும்! நான் கொண்ட காதலை நீ அணையேன்- மல்லிகை பூவென என் வாழ்வு மணக்கும்! ஆயிரம் பாஷை இங்காகலாம்! உந்தன் செல்ல அதட்டல் பேச்சே- தாய் மொழிடி எனக்கு! ஏய்டா என்பாய் குட்டிமா- என் ஜீவன் அர்த்தம் கொள்ளுமே! ஏது வாழ்வு ? அதுவல்லவோ ? என் இருகரங்களில் -தலை சாய்த்து குழந்தை என்றாகி நீ தூங்கு! நீ தூங்கும் அழகை நான் ரசிப்பேன் தந்தையென்றாகாமலே - உன்னை …

  9. எனது சின்னஞ் சிறிய முகம், உனது முகம் பார்க்கும் கண்ணாடியென, உற்றுப் பார்த்த படியிருப்பாய்! உன் முகத்தின் இளமைக் காலப் புன்னகை, இன்னும் நினைவிருக்கின்றது! உனது அணைப்பின் இதமும், இதயத் துடிப்புக்களின் ஓசையும்,, இன்னும் கேட்கின்றது! மொட்டை வழித்த போது, முதற் பல் தோன்றியபோது, முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது, முதன் முதலாய் நடந்த போது..... எல்லா முதல்களிலும் , அருகிலிருந்து பூரித்தாய்! நிலாக் காட்டி, நீ ஊட்டிய பால் சோறு, இன்னும் இனிக்கின்றது!, நான் சிரிக்கையில் சிரித்து, நான் அழுகையில் அழுது, உனக்கென்று,ஏதுமின்றி, உணர்ச்சியில்லா ஜடமானாய்! எங்கோ அனுப்பி வைத்தாய்! எத்தனை போராட்டங்கள்? எத்தனை இடம்பெயர்வுகள்? ஆயிரம் …

  10. Started by putthan,

    போராட ஆசை போர்களம் செல்லாமல் ஆயுதம் ஏந்த ஆசை-எதிரியிடம் ஆயுதம் இல்லாத பொழுது களத்தில் வீரநடை போட ஆசை கன்னிவெடி அகற்றப்பட்டபின்பு உண்மையை சொன்னா என்ன உயிருக்கு ஆசை புலத்துக்கு பறந்தோடினேன் புலத்திலும் புதிய ஆசைகள் புகை பிடித்து புனிதனாய் வாழ ஆசை நவ நாகரிகமாக வாழ்ந்து நமது கலாச்சாரம் பேணிட ஆசை மாற்றான் குழந்தை தமிழ் பேச மம்மி என்று என் குழந்தை அழைத்திட ஆசை தமிழ் பேசாமல் தமிழ் வளர்த்திட ஆசை அணு அளவும் உண்மை பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட ஆசை களத்தில் தமிழர் படையின் வெற்றியை கேட்க ஆசை புலத்தில் சிங்கள கிரிக்கட் அணி வெற்றி செய்தியை கொண்டாட ஆசை சிறிலங்கன் என்ற பெருமையை சிரிப்புடன் சொல்லவும் ஆசை முதல் நாள் …

  11. அன்றொருநாள் அழுது கொண்டிருந்தேன்..... அம்மா மடியில்-முகம் புதைத்து விக்கி.....விக்கி......... அழுது கொண்டிருந்தேன்....... ஏன் அழுதேன்...? தெரியவில்லை-ஆனால் அழுது கொண்டிருந்தேன்....... தாயோ தலை வருடி தாலாட்டு பாடினாள்.... ''ஆராரோ...ஆரிவரோ.......'' அறியவில்லை.... அப்போதோ-அறியும் பருவம் இல்லை.... அழுது கொண்டேன் ''ஆராரோ....ஆரிவரோ.....'' புரிய வில்லை.. பருவம் வந்த பின்பும்... இன்றும் அழுகின்றேன் எதற்காக அழுகின்றேன்...? எனக்குப் புரியவில்லை ஆனால்-அழுகின்றேன்...... பாடம்மா- ஓர் தாலாட்டு இன்றவளைக் கேட்டுவிட்டால்... தாயவளும் அழுதிடுவாள்... அப்போ... யாரிடம் கேட்பேன் எனக்கோர் தாலாட்டு....?? ஏன்....? …

  12. அடகு கடையில் ஆச்சியின் காத்திருப்பு. சொந்த மகளின் தாலி தொடங்கி பேத்தியின் கம்மல் வரை ஆச்சியின் மடிப்பெட்டிக்குள் கூப்பன் மட்டையோடு கசங்கிக் கிடந்தன. வட்டியில் வயிறு வளர்க்கும் அடகுகடை ஆறுமுகத்திடம் சரணடையக் காத்திருந்தன. ஆச்சியோ ஓரமாய் குந்தி இருந்து.. கற்பனை வளர்க்கிறாள். இந்தப் போகம் மேடை பார்த்து நல்ல போயிலை மண்டைதீவு போய் வாங்கி வந்து.. கோப்பை போட்டு உழுத நிலத்தில் நட்டு அதை குழந்தை போல தொட்டுத் தடவி வளர்த்து சொந்த வயிற்றுக்கு பாணும் சம்பலும் தந்து.. புகையிலைக்கு பெருத்த செலவில் எருவும் உரமும் நேரம் காலம் பார்த்துப் போட்டு தீனியாக்கி.. வாடகைக்கு மிசின் பிடிச்சு பாத்தி கட்டி வாய்க்கால் வழி தண்ணீர் பாய்ச்சி.. ஊற்றெடுக்கும் அந…

  13. வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல என்னுடைய மண்ணில்ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறதுமணிப்பூரில் ஒலிக்கும்இந்திய கீதம்போல என்னுடைய மண்ணில்ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறதுதிபெத்தில் பறக்கும்சீனக் கொடி போல என்னுடைய விரலில்நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறதுமியன்மாரியரின் கையில்தீயால் இடப்பட்ட காயத்தைப்போலதீபச்செல்வன் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…

    • 6 replies
    • 3.7k views
  14. உன் நினைவுகள் * உன் பெயர் எழுத என் பேனா ஓடும் போதெல்லாம் கேலிச் சிரிப்போடு வந்து பிள்ளைக் குறும்பாய் பிடுங்கி எரிந்தாய்! * உன் மெல்லிய உதடுகளால் புன்னகையிட்டு மேனியெங்கும் மின்சாரம் பாய்ச்சி என் போர்வைக்குள் புகுந்து நித்திரை கலைத்தாய்! * என் ஜன்னல் வழி நழுவி வந்து சில்மிஷக் கணங்களில் என் பெண்மை பூக்கச் செய்து உயிரை உருக்கி உலையிலிட்டு ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்! * உன் முத்தங்களை பொக்கிஷமாய் மார்புக்குள் பொத்தி வைத்தேன் பிரிவின் துயரில் அவை கரைந்து போயின! * ஞாபகச் சின்னமான நம் நிழல்படம் சிதிலமாகி சிதைந்து கிடக்கிறது! * வீத…

    • 8 replies
    • 3.6k views
  15. என்ன செய்ய போகிறோம்? ----------------------------------------- எவ்வளவு அழகிய பூமி.....என்னை சுற்றி இருப்பது! என்னதான் வாழ்கை பெரிய சுமையாக தெரிந்தாலும்.. கொட்டுகின்ற பனியும்...அதனை கொஞ்சுகின்ற புல் தரையும் .. நான் நட்டு வைத்த செடியில் முதல் முதலாய் பூத்து.... நாணத்துடன் சிரிப்பது போன்ற பூவும்... சின்ன குழந்தை முத்தமாய்.. என் தேகம் நனைக்கும் மழை துளியும்.. என்றோ பிரிந்து வந்தாலும்.. இன்னும் என் இதயத்தின் வலி கொண்ட சிறகாய்......... இன்றும் என் உயிர் பிசையும்..... வாழ்ந்து விட்டு வந்த என் தேசத்து வசந்தமும்.. ம்ம் எண்ணியே பார்க்கிறேன்.. இன்னும் ஏதோ இருப்பது போல்த்தான் இருக்கு வாழ்வில்..! ஆயினும்.. நான் இரசித்த அழகுகள் எல்லா…

    • 14 replies
    • 3.6k views
  16. Started by கவிதை,

    அதிகாலை அழகாக தெரிகிறது… அவள் முகத்தில் விழிப்பதனால்! ஒவ்வொரு நாளும் அவளோடுதான்... ஆனந்தமாய் விடிகிறது! ஒவ்வொரு நொடியும் அழகாக... விதம்விதமாய்த் தெரிவாள்! கழுவாத முகத்தோடும் களையாக இருப்பாள்! களைத்தாலும் சளைக்காமல் அவள் வேலை முடிப்பாள்! உழைத்தாடி வரும் தலைவன் களைப்பெல்லாம் போக, கனிவான வரவேற்று அன்பாகப் பார்ப்பாள்! குழந்தையாய் சிரிப்பாள்… அவனோடு.... குழந்தையும் சுமப்பாள்! உயிரோடு உயிராக… உலகமே அதுவாக, அவனுக்கும் அவளுக்குமாய்… அவளின் சின்ன உலகத்துக்காய்... அவள் தன் உயிரையும் கொடுப்பாள்! ஒவ்வொரு மனைவியும் அவள் கணவனுக்கு இரண்டாவது தாய்தான்!!! So...Guys! Love your wife!

    • 8 replies
    • 3.6k views
  17. Started by pakee,

    என் கவிதைகள் கண்மூடி சிந்தித்தவைகள் அல்ல இதயம் கதறிச் சிதறியவைகள்...

    • 0 replies
    • 3.6k views
  18. Started by Jamuna,

    அழகு ரோஜாவே!! ரோஜாச்செடி போலவேதான் உறவுகள் என்றெண்ணி உறவுகளை விலத்தியிருந்த என் வாழ்வில் நுழைந்தாய் முட்களற்று வாசனை நிரம்பிய அழகு ரோஜாவாக... உனை கண்டநாள்முதல் நான் ஆனந்தம்கொண்டு தினமும் அலங்கரித்து மனம் மிகமலர்ந்தேன் அன்பே ரோஜா உன்னை கையில்பற்றி துடியிடை தொட பலர் ஆசைபட சிலர் சொந்தமாக்கி முத்தமிட துடித்திட நான் மட்டும் உனை என் கண்களுக்குள் பொத்தி வைத்து அந்த முட்கள் நிரம்பிய ரோஜாப்பூவாகவே பார்த்தேன் ஏனெனில் நீயும் ஒருநாளில் உதிர்ந்துவிடுவாயோ என்று ஆனால்.. நீயோ உதிர்ந்திடாத ரோஜா என் வாழ்வின் ஆயுள்ரோஜா நிம்மதியை தந்திடும் ரோஜா அன்பான அழகான ரோஜா என்று நன்குணர்ந்தேன் நான் போலியான உறவு…

    • 10 replies
    • 3.6k views
  19. இனிக்கும் நினைவலைகள் நெடிதுயர்ந்த நிழல்மரங்கள் கீழ் நிழலில் நீட்டிக்கால் வைத்துநான் நீண்டு படுத்திருந்திருந்தேன் விடிகாலை எழில்கூடி வெளிவந்த ஆதவனும் நடுவானில் நின்றிருந்து சுடுகதிரை வீசிநின்றான் துடிகூட அசையாத தளிர்ச்சோலை மலர்க்கூட்டம் தம்மழகால் எனைமயக்கி தாள்வாரம் நின்றுவிட இடையிடையே தொலைவினிலே இறக்கையினம் இசைபாட இன்னிசைபோல் தென்றலிலே மிதந்து வந்ததுவே முடிசார்ந்த மன்னவரின் முன்சரிதை மலர்எடுத்து இடையின்றி ஒவ்வொன்றாய் இனித்துச் சுவைத்திருந்தேன் துடியிடையும் பிடிநடையும் துவளும் தமிழ்ப்பாவையர்கள் வடிவழகின் வர்ணனையை மனக்கண்ணால் ரசித்திருந்தேன் அடியாளும் அடிசிலொடு இரசமுடன் இருகறிகள் மடைபோட்டு முடித்துவிட்டு மன்னவ…

    • 10 replies
    • 3.6k views
  20. மன்னிப்பாயா...மறுப்பாயா உன் தூக்கம் எனக்கு விளையாட்டு இல்லை நீ தரும் அன்பும் எனக்கு விளையாட்டு இல்லை இதை நீ தவறாக புரிந்தது ஏனோ??? உன்னிடம் நான் என்றும் பாசமாவே இருப்பேன் என்று சொல்வது எல்லாம் கவிதைகளில் மட்டும் தான் என்று நினைத்துவிட்டாயோ நீ பாடு பட்டு வேலை செய்வதும் நான் அறிவேன் தூக்கமின்றி உழைப்பதும் நான் அறிவேன்...ஆனால் உன் தூக்கத்தை நான் கெடுக்க நினைத்ததுமில்லை நினைக்க போவதுமில்லை... தவறாய் ஒருபோதும் எண்ணவே வேண்டாம் நான் ஒன்றும் நீ தரும் இடத்தை விளையாட்டாக நினைத்ததில்லையடா... ஏன் இப்படி எல்லாம் சொல்லி நோகடிக்கின்றாய்...உன்னில் நான் வைத்திருப்பது ஆயுள் வரை யார் மறுத்தாலும் மாறாத மாற்ற முடியாத …

  21. ஆக்காண்டி ஆக்காண்டி... சண்முகம் சிவலிங்கம் ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். வைத்ததுவோ ஐஞ்சு முட்டை பொரித்ததுவோ நாலு குஞ்சு நாலு குஞ்சுக் கிரை தேடி நாலுமலை சுற்றி வந்தேன், மூன்று குஞ்சுக் கிரைதேடி மூவுலகம் சுற்றி வந்தேன். ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். குஞ்சு பசியோடு கூட்டில் கிடந்த தென்று இன்னும் இரைதேடி ஏழுலகும் சுற்றி வந்தேன். கடலை இறைத்துக் கடல் மடியை முத்தமிட்டேன். வயலை உழுது வயல் மடியை முத்தமிட்டேன். கடலிலே கண்டதெல்லாம் கைக்கு வரவில்லை. வயலிலே கண்டதெல்லாம் மடிக்கு வரவில்லை. …

  22. நாம் என்ன ஊமையா? இந்த நிமிடம் இதே வருசம்.. இமைகளின் மீது....... இரும்பு பறவைகள் .... எரிதிராவகம் வீசி போன நாள்! இந்த நாள்..! சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்..... சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன பேரினவாதத்தின் ...... தமிழன் குடல் வெளி எடுத்து.. கும்மி அடித்த நாள்! விலா எலும்பு நோக பெற்றவள் வயிறும் வைரம் என்றும் அவள் கருதிய மகனும் ஒன்றாய் குடல் கிழிந்து செத்தாரே.. உலகமே உனக்கு அது தெரியுமா? நாம் என்ன செய்தோம் இறைவா? நாம் என்ன உனக்கு தீராத பகையா? நெஞ்சு மீது மூட்டிய தீ இன்னும் ஈரம் பாயாமல் ஊரெல்லாம் இருக்கிறதே கொல்லுங்களேன்- எம்மை தொலைந்தோம் நாம் என்று.. யாருக்கும் சொல்லியும் விடுங்களேன்! இருக்கும் ப…

    • 27 replies
    • 3.6k views
  23. ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி மே13' நிகழ இருப்பது ஆண்டவன் கட்டளை.. ஈழத்து வேதனையின் ஏக்க விளைச்சல். கோபப்படாமல் ஐயா குறித்து வைத்துக்கொள்ளுங்கள் வெளியில் நீங்கள் வேசமிட்டு நாடகம் ஆடினாலும் உங்கள் கள்ளமான உள்ளுணர்வில் இப்படித்தான் நடக்கும் என்று கருக்கட்டி ஊற்றெடுத்த உண்மை உத்தியோக பூர்வமாக பிரசவமாகப்போகும் பொழுது. காலதேவன் உங்களுக்கு கட்டை இறுக்கப்போகும் கனிவான கடைசி நாள். சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள் இப்போதே நீங்கள் தத்தளிப்பது தெரிகிறது இருந்தும் இது சிறிய ஆரம்பம் மட்டுமே. தொடர இருப்பது பெருங்கதை . நவீன நரசிம்மர் உங்களுக்கு இனி நிரந்தர ஆட்சி விடுமுறை ஆனாலும் நீங்கள் தொடர்ந்து அரச விர…

  24. ஒளிமிளிர்ந்து நடனமாடிய உன்கண்களை முதல் முதலில் சந்தித்தபோது என் இதயத்தில் வாள் உருவியது போல் ஒரு வலி உணர்ந்தேன்... பட்டாம் பூச்சியாகப் பறந்து திரியும் உன்னை காதல் என்ற குறுகிய வட்டத்தினுள் அடைக்க மனமில்லை அருகில் பறக்கும் உன்னை விட்டு வேறு திசை நோக்கிப் பறக்கும் மனநிலையும் எனக்கில்லை...! தொந்தரவு செய்வதையே உயிர் மூச்சாகக் கொண்ட இந்த உலகில் யாருக்கும் எந்த இடஞ்சலுமில்லாது தொடர்ந்தே நட்பென்னும் பரந்த வானில் சேர்ந்தே பறக்கலாம் வா...

  25. விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதி பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்த போதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்ப விட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.