Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் ஆழிப்பேரலை நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆவணப்பதிவு. Documentary -Tsunami 2004 video by TYO Canada

  2. தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம். நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே கனடாவில் குளிரிலும் பனியிலும் நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன் அண்ணனின் வியர்வை இருக்கிறது. சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!! கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை... அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!! “கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்” பண்ணி நீ காற்று வாங்கு... உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!! என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன் அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு.. நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும். அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும். …

  3. போதுமினி எல்லாள போர் முகம் கொள்க.... 'சுதந்திர தினம்' ஐரோப்பியச் சாபம் நீங்கிய விமோசனம் நிரம்பிய நாளாய் 1948 இலங்கையின் இறைமையும் உரிமையும் இறையழித்த வரமான உரிமைகள் தினம். பிரிவினை வேண்டாம் - உடன் பிறப்புகள் நாங்கள் பிரிகிலோம் என்றும் புத்தரும் சிவனும் அல்லாவும் யேசுவும் எமக்கென்றுமே பொதுவென உரைத்தவர் எங்கே ? தோண்டுக அவர் புதை குழிகளை.... சிங்களன் தமிழன் உயிர் எடுத்திடும் பகைவன் என்றதை போய்ச் சொல்க. பாழுயுயிர் தொலைந்து ஐக்கிய இலங்கைக்குள் ஆழுவோம் என்றவர் ஆவிகள் மீளப் பிறந்தெம் அவலம் புரிய.... அவர்களைத் தோண்டுங்கள்...! வரலாற்று எச்சங்களாய் - எம் வாழ்வைச் சிங்களன் கையில் வைத்துச் சென்ற வஞ்சகர் …

  4. பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை. தேவர்கள் அமுது கடைந்தது போல் தேசியத் தலைவரை மலையாக்கி எம் நிதியை வலுவாக்கி போராட்டத்தை கயிறாக்கி எழுச்சியுடன் நாம் கடைந்தோம் காணவில்லையே விடுதலை எனும் அமுதை, சீக்கிரம் பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை போர் நிறுத்தம் வந்ததடா போனதடா எம் வலிமை கபடமாகப் பிரித்தனர் கருணாவை கண்ணி வைத்தனர் சூழ்ச்சி வலை பின்னி சிக்கிவிட்டோம் நாம் அதிலே தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கின்றோம் நாமின்று எப்பாடு பட்டேனும் காண வேண்டும் எழுச்சியுடன் தமிழீழம் பெற வேண்டும் விடுதலை எனும் அமுதை பாராண்ட தமிழினம் இன்று பாழ்பட்டுப் போகின்றோம் கலை பண்பாடு காத்து தலை நிமிந்து வாழ்ந்த இனம் இடம் பெயர்ந்து புலம் பெயர்ந்து வளம் இழ…

    • 6 replies
    • 977 views
  5. எரி நட்சத்திரம் - கருணாநிதியின் பிறந்த நாள் கவிதை - இளங்கவி கலைஞரே வாழ்க வாழ்க தமிழின் காவியத்தலைவனே வாழ்க எண்பத்தாறு வருடங்களை தமிழருக்காய் அர்ப்பணித்த தமிழ் நாட்டுச் சிங்கமாம் நீ தமிழினத்தின் தங்கமாம்...? விடிவெள்ளியாய் நினைத்து விளக்கின்றிக் காத்திருந்தோம் எரி நட்சத்திரமாய் விழுந்து ஈழத்தின் குலையறுத்தாய் குடும்பப் பாசத்துக்காய் உன் குலத்துக்கே நெருப்பு வைத்தாய் எங்கள் இனத்துக்கோர் சாபக்கேடாய் இன்றுவரை உயிர் வாழ்வாய்.... ஈழத்தில் நிலத்தினிலே குரும்பையெல்லாம் கருகிவிழ வெற்றிக்கொடியோடு டெல்லி சென்றாய் நீயோ வேண்டுமந்த பதவியென்றாய் எதிரியின் தீயிலே நாமெரிய நீ வேண்டிய பதவிபெற்றாய் வேண்டியதை பெற்றதனால் பிறந்த நாள…

  6. தமிழ் தாய் ஈன்ற வீரர் தமிழீழம் தாங்கிய வீரர். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழுக்காய் தமிழ் மண்ணுக்காய் தம் சுகபோகங்களை துறந்து காவியம் படைத்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய்’ தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும்-கண்டு வீறுடன் துடித் தெழுந்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தானைத் தலைவன் வழியில் தடைகள் பல தகர்த்து தரை கடல் வான் படைகளாகவும் கரும்புலிகளுமாகி காவியமானவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள் மறத் தமிழனாய் வாழ்ந்து காலன் வருகின்றான் என்று பின்வாங்காது களமாடி காவிய நாயகர்கள் ஆனவர்…

    • 0 replies
    • 661 views
  7. Started by Elugnajiru,

    நீ எதற்காகப் பயப்படுகிறாய் இரைச்சலுக்கா இல்லையேல் அமைதியான பொழுதுகளுக்கா எதைத் தவிர்க்க விரும்புகிறாய் தனிமையா அன்றேல் அதன் கடினத்தையா உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைத்தாலும் வாணொலி காதலைப்பாடினாலும் உன் கண்கள் கசிவது ஏன். நீ அலைகளாலேயே தொடர்புற மறுத்த, ஆழத்திலுள்ள தண்ணீர். நீ யாருமே அணுக மறுந்துபோன மலை. எனக்கு நன்றாக உன்னைத் தெரியும் நீ கடினமான டைட்டானியத்தால் செய்யப்பட்ட மனதையுடையவன் இருந்தாலும் உன் அயலில் யாராவது குழந்தை புன்னகைதால் உன் கண்கள் கசிவது ஏன். எனக்குப் புரியும் மொழியையும் சொற்களையும் தெரிவுசெய்து, என்னுடன் உரத்தகுரலில் பேசு எதைக்கூறுகிறாயோ அதையெல்லாம் நான் ஒரு கவிதையில் அடக்குகிறேன் …

    • 0 replies
    • 1.8k views
  8. இன்னுமா போர் அபாயம்? இலங்கைத் தமிழன்! இதோ, இந்தியக் கடற்கரைக்கு வருகிறான்... நண்பனாக அல்ல, நாடோடியாக! ஒவ்வொரு நாளும் உயிரைப் பிடித்துக்கொண்டு கரையொதுங்குகிறான்... தனியாக அல்ல, குடும்பம் குடும்பமாக! கச்சத் தீவருகே, கல்லெறி தூரத்திலே, தமிழனின் கல்லறை ஓலம் கேட்கிறது... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! தனுஷ்கோடி கடற்பகுதியிலே, தப்பியோடி வந்த தமிழனின் பிணங்கள் மிதக்கின்றன... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! இத்தனைக்குப் பிறகும், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, "இலங்கையில் போர்மூளும் அபாயம்!" என்று சர்வ சாதாரணமாக, சர்வ சதாகாலமாக, ஊடகங்களெல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றன... வேதனையாக இருக்கிறது... போர் மூண்டு எத்தனையோ காலங்கள் …

    • 3 replies
    • 1.1k views
  9. நான் பட்டைகளை அணிந்துள்ளேன், எனது நெஞ்சின் மேல், வெடி குண்டைக் காவியுள்ளேன், எனது மனதின் வெண்மையில் குளிர் காய்கிறேன், பெரு நெருப்பின் தணலாய் முகிழப் போகிறேன். மேலுள்ள வரிகள் fஉன்டமென்டல் என்னும் இசைக் குழுவின் உறுப்பினரான அகி நவாஸின் , எல்லமே யுத்தமே என்னும் புதிய இசை அல்பத்தில் வரும் ,கூக் புக் டிஐவய் , சுய சமையற் குறிப்புக்கள் என்னும் பாடலின் வரிகள். இந்தப் பாடல் தற்கொடைப் போராளிகளின் எண்ணங்களைக் காவி வருகிறது.இந்த இசைக் குழு பிரித்தானியா ஏசியர்களின் அரசியல் எண்ணக் கிடைக்கைகளை, உலகளாவிய ஆசிய மக்களின் ஏகாதிபத்திய எதிர் அரசியலின் வரிகளைக் காவி வருகிறது. இனி வெளியிடப் பட உள்ள இந்த இசைத் தட்டு பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது.இந்தப் பாட…

    • 1 reply
    • 996 views
  10. எங்களுக்காக தங்கள் இசை வாழ்வையே அர்ப்பணம் செய்யும் தேனிசை ஜயா அவர்கள் facebook ல் வலம் வருவது சும்மா தட்டிய போது கிடைத்தது. அனைவரும் அங்கம் ஆகி மற்றைய பாடகர்கள் போல் பெரும் அங்கத்தவர்களை பெற ஊக்குவிப்போம். http://www.facebook.com/pages/Thenisai-Sellappa/73859321965#!/pages/Thenisai-Sellappa/73859321965

  11. பல வருடங்களுக்கு முன்னர் எழுதிக் கைவிடப்பட்ட கவிதையொன்று இன்று தட்டுப்பட்டது. உங்கள் பார்வைக்கு. உயிர்த்தேன் வ.ஐ.ச.ஜெயபாலன் காலப் பாலை நடுவினிலே வினோதங்கள் வற்றி உயிர்ப் பம்பரம் ஓய்கையிலே வாழும் கனவாக என் முன்னே வளரும் சிறு நதியே. உன் தோழமையின் பெருக்கில் துயர்கள் கரையுதடி வாழத் துடிக்குதடி கண்ணம்மா என் வார்த்தைகள் காவியமாய் * கூதிர் இருட் போர்வை உதறி குவலயம் கண் விழிக்க போதியோடு இலை உதிர்த்த இருப்பும் புன்னகைத்தே துளிர்க்க மனிதருக்கிடையே நாணற்றுச் சூரியன் மண்ணைப் புணருகின்றான். மூதி எழுந்திடென்றாய் கண்ணம்மா மூச்சால் உயிர் மூட்டி. * கடைசித் துளியும் நக்கி காலி மதுக் கிண்ணம் உடைத்து என் வாழ்வின் ஆட்டம் முடிந்ததென்றேன். நீ கள்நதியாக நின்றாய். உயிர்த்தும் புத்துயிர…

    • 9 replies
    • 1.3k views
  12. தமிழ் வென்றிடப் போகுது..! வெல்லத் தமிழினி வெல்லும் எனும்படிச் சொல்லத் தகுமொரு சூழல் வருகுது! மெல்லத் தமிழனை மெல்லத் துணிகிற புல்லர்ப் படைமிசை பூசல் பெருகுது! உள்ளத் துணிவொடு நிற்கும் தெளிநிலை கொள்ளத் தமிழினம் எங்கும் திரளுது! கள்ளத் தனமொடு காடைத் தனமதும் தள்ளப் படுமெனக் காலம் புகலுது! கொல்லைப் புறவழி வந்தனர் என்பதும் கொள்ளைச் செயல் புரிகின்றனர் என்பதும் கிள்ளுக் கீரைகள் நாமிலம் என்பதும் வெள்ளிடைக் குன்றென நன்கு விளங்குது! குள்ள நரிகளும் கூலிப் படைகளும் கள்ளிச் செடிநிகர் காவிப் பிக்குகளும் எல்லை மிகக்கடந்(து) ஈனம் புரிவது சொல்லுந் தரமின்றிச் சோகம் தருகுது! துள்ளித் திரிந்திடும் பள்ளிப் பருவத்துக் கொள்ளை அழகுக் குழந்தைகள் …

  13. அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்பம் துய்ததுடன் முடிந்து விடுகிறதா எல்லாம். பிடித்த புத்தகத்தில் இரசித்த பக்கமென தட்டிச் செல்ல முடியவில்லையடி. முட்டைகள் மீது பின்காலால் மணல்மூடி திரும்பியும் பாராத ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய். மாயை போலாயிற்று எல்லாம். இன்பம் இருவரும் நாடியதுதான். நட்பு நான் மட்டுமே தேடியதோ ? முதற் கண் பொழுதில் முதுகு சில்லிட ஒரு கணம் தரித்தாய். உன் இதயத்துள் இருந்து அடி வயிறு அதிர இறங்கிய இன்பச் சூனியம் மறைக்க சினந்து முகம் திருப்பினாய். நானும் கள்வன் என்பதறியாது. அடுத்த நாள் ஆயிரம் ஒத்திகையோடு வந்து மணி கேட்டேனே. ஏழனம் தெறித்தது உன் பார்வையில் …

    • 21 replies
    • 4k views
  14. அன்னையின் வீடு வ.ஐ.ச.ஜெயபாலன் இது ஓர் அதிஸ்டம் இல்லாத போராளியின் கவிதை மேலும் சரியாகச் சொல்வதெனில் ஒரு போர்க் குணமுள்ள கவிஞனின் மரண வாக்குமூலம் போன்ற அதிஸ்டமில்லாத கவிதை இது. எரிகிற அன்னை வீடில் நின்று என்னை வசைப்பாடிகிற சகோதரரே நான் எதிர்பார்ததில்லையே ஒரு துண்டு நிலத்தை செப்புச் சல்லியை ஒரு வாக்கை அல்லது ஆதரவான உங்கள் பாராட்டுதலை. என் பிள்ளைகளின் உணவை உண்டும் என் மனைவியின் தண்ணிரை அருந்தியும் பாடுகிறேன் நான். அன்னைவீட்டுக் கூரை எரிகிறது என் சகோதரர்களோ பாகப் பிரிவினைச் சண்டையில். தண்ணீர் ஊற்றுவதானால் அவன் பக்கத்துக் கூரையில் ஊற்றாதே …

    • 4 replies
    • 1.2k views
  15. என்னை நம்பவைத்து என் கழுத்து நரம்புகளை நறநற வென அறுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த என் கண்களை கூரிய முனையால் குத்தியிழுத்தெடுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். நா நுனியில் நட்பென்று பேசி நீ நிலைநாட்டும் நயவஞ்சகம் எனக்கு பிடிக்கும். கனிவாய் நீ பேசி கன்னத்தில் தடவி கண்களால் சைகை செய்து என் கணங்களை நீ எண்ணிக் கொண்டிருப்து பிடிக்கும் உன் வலையில் நான் வீழ்ந்து விட்டதை உணர்ந்தும் உண்ணாமல் உறங்குவது போல் இரசிப்பது பிடிக்கும் உன்குலமே அழிந்தாலும் உன் காலம் கனிந்து வரும்வரை உள்ளுக்குள் நகைத்தபடி என்னை போட எத்தனிக்கும் உன் குணம் பிடிக்கும் என் முதுகை தடவியபடியே எந்த இடத்தில் குத்தலாமென சர…

  16. காதலித்துப் பார்.. கடதாசி வீணாகும் கல்லாப்பெட்டி காலியாகும்.. கண்ணீர் பெருகும் கவலை மிஞ்சும்.. காதலித்துப் பார்.. கடற்கரை வெளியில் கருவாடாய் காய்வாய் கள்ளமில்லா உன் நெஞ்சில் களவும் பொய்யும் குவியும். காதலித்துப் பார்.. காற்சட்டைப் பொக்கட் கிழிஞ்சு போகும் காவாலியும் உன்னைச் சுரண்டுவான்.. காரில் பெற்றோல் தீரும் காண்போர் முகம் சுழிக்கும்... காதலித்துப் பார்.. கிரகம் பிடிக்கும் கிருபை இழக்கும்.. கறுமம் இவன் பிறப்பென்று கவிதை சுயம்பாடும். காதலிக்காமல் பார்.. உன்னை நீயே நேசிக்கப் பழகுவாய் உள்ளம் திடமாகும் உழைப்பு இதமாகும் உன்னை நீ அறிவாய் உலகம் உன்னில் …

  17. Started by pakee,

    [size=4]கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி ஆறுதல் சொல்ல வரவில்லை தினகுறிபிற்கு தெரியும் என் மனதின் வலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி வெளிச்சத்தை இன்னும் தரவில்லை [/size][size=1] [size=4]மரணத்திற்கு தெரியும் என் வாழ்கையின் வலி ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும் நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...[/size][/size]

    • 3 replies
    • 1k views
  18. புறப்படு புலியென!!! கொத்துக்கொத்தாய் செத்துவிழும் என் சொந்தங்கள் கண்டு மரணங்கள் மரத்திங்கே போயாச்சு! எத்தர் கூட்டமிங்கே எக்காளமிட்டுக் களித்திருக்க இன்னும் வலுப்பெற்று மனம் உறுதி ஆயாச்சு! ஆரா"றோ"போடும் பணத்துக்காய் பிணம் குவிக்க எம் இனத்துள்ளே எட்டப்பர் கூட்டங்கள்! வாலாட்டும் நாய்கூட தன் எஜமானர் இனத்திற்கே! இங்கோ உயிர் வளர்க்கும் காக்கை வன்னியர்கள்! எந்த நேரம் வந்து நாடுகள் தடை போட்டதோ அந்த நேரம் பொங்கியெழவில்லை அதனால் உயிரிழப்புகளே நாம் கொடுக்கும் விலை! இனியும் இங்கே பொறுத்திருந்தால் வரலாற்றில் எம் இனமே இல்லை! பங்கு போட்டால் பங்கம் வரும் தன் தேசம் துண்டாகும் என்றொரு பாசாங்கு நடத்துகின்ற கூட்டம்! நம்பி நம்பி நின்ற எம்…

  19. அவள் 1 மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீதக் கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்களை. கனவுவரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ. முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள். மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். வாழ்வு புதிர்கள் போன்…

    • 4 replies
    • 712 views
  20. மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் ! கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய் வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும் வடிவு தந்த பச்சைய மரங்களும் எட்டும் தூரம் வரையும் எதுவுமில்லாத் தரைமட்டமாய்…. சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித் தொண்டைக்குள் உறைகிறது…. ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக மீளவும் தடையரணில் கால்கள் தடையிடப்படுகிறது….. போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய் பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும் நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய் குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது…… *மீள்குடியேற்றம்* மீண்டும் நிவாரணம் வரிசை நிம…

    • 0 replies
    • 615 views
  21. (16-04-2007) எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால் வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார்.ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன.வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழிற்…

  22. வீரக்காய் ஆயயிலே வீழாத வீரம் பேசி என்னையும் ஆய்ந்தவனே நாவல் காய் ஆயயிலே நல்ல நண்பி நீ எனக்கு என நா பிறழாது உரைத்தவனே! காரை முள் குத்தி கடுப்பில் நான் அழுது துடிக்கையிலே உன் நெஞ்ஞ்சு தச்சதைபோல் உருகி அழுதவனே! கார்த்த்ட்கை பூ பறிக்கையிலே காதோரம் வந்து சொன்னேன், பேதை என் மனதில் காதல் பூத்ததென்று. பூ போன்ற மென்மையான உன் மனதோ பூகம்பம் நிகழ்ததை போல ஈச்சம் பழம் ஆயயிலே இரும்பைப்போல் உரத்துச் சொன்னது. ஈழத்தை காதலிக்கும் காளை உன் மனதில் ஒருத்திக்கும் இடமில்லை என்று. இயம்பிய வார்த்தைக்கு ஒப்ப களமாடி நின்றாய். ஆனால் இன்று வீரம்பழம் பழுத்திருக்கு நாவல் பழம் நிறைந்திருக்கு கார்திகையும் படர்ந்திருக்கு. நீ மட்டு…

  23. (படித்ததில் பிடித்தது) அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு அன்றைய நள்ளிரவு இருள் பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு அப்பா இல்லாமல் போன காலம் குஞ்சுகளுக்கு யாருடைய காவல் அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர் வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள் ருசி தானே இந்த (சிறை) உணவு வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் …

    • 2 replies
    • 943 views
  24. Started by gowrybalan,

    • 15 replies
    • 5.5k views
  25. தன்வினை தன்னை சுடும்...(நொருங்கிய கிபிர்) முகில்கிழித்து வானதிர உள் நுழைந்தாயே.... எம் தமிழர் உயிர் குடித்து நீ மகிழ்ந்தாயே.... காலையிலே வந்து வேறு குண்டடித்தாயே... கணப் பொழுதில் உடல்கிழிந்து நீ அழிந்தாயே.... செருக்கோடு வந்துயன்று நீ திரிந்தாயே.... அந்த செஞ்சோலை உயிர்களையும் நீ குடித்தாயே.... வெறிபிடித்து உயிர்குடிக்க நீ அலைந்தாயே... இன்றோ பார் உடல் சிதறி நீ விழுந்தாயே....!!! - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :P :P :P :P

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.