கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ... அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!! கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ... கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!! போற்றித் துதித்த மரியன்னை கூட ... வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்! கடவுளர் மேல் நம்பிக்கை போய்.... ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும், மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! ! முள் முடி தரித்த யேசு கூட.... செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை, புத்தரிடம் சரணடைந்து.... முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?! வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க... நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ, பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!! …
-
- 16 replies
- 1.8k views
-
-
சவுக்கும் ... குப்பி சாராயமும் காற்றில் சுழன்று சுழன்று வீசியது கிர் கிர் செவிப்பறையில் அறைந்து மறைந்தன பார்வை வழி உள்நுழைந்த அசிரீரி உள்புகுந்து வெளியேறிய வெளி உள் நுழைந்து சிவப்பு நிறம் கொண்ட சவுக்கு குப்பி சாராயம் ஆள் கிணற்றுக்குள் சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 552 views
-
-
தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் காவியமான வீரப் புதல்வர்களுக்கும் வீரவணக்கம்! [size=4]புன்னகை தவழும் பொன்முகத்தோனே.....![/size] ------------------------------------------------------------ எம் மண்ணின் அழகாய் வலம் வந்த புன்னகை தவழும் பொன்முகத்தோனே தமிழர் இன்னல் களையும் வாஞ்சையுடன் உலகின் திசைகள் நாடி நின்றானே வெள்ளை மனிதரின் பெரும் வஞ்சகத்தால் புன்னகைப் பொன்முகம் சாய்ந்ததன்றோ! தமிழ் மான மரபினை மண்ணிலே பதிந்தவர் தமிழீழ மண்ணின் காற்றிலே கலந்தவர் பொய்மையின் நீட்சியாய் தொடரும் உலகிலே உண்மையின் சாட்சியாய் உயிர் துறந்தோரே! காலமும் பொய்த்தது களமும் போனது நினைவுகள் மட்டுமே நெஞ்சினில் வாழுது கனவுகள் தாங்கியே களத்தின் வீழ்ந்தவர் எம் மனதினுள் வா…
-
- 15 replies
- 874 views
-
-
வன்னிக்குச் சோறு கொடு இலங்கை வான்படைக்குக் குண்டு கொடு திண்டுவிட்டுச் சாகட்டும் தமிழினம் எண்டந்தப் பாவி சொன்னான் முண்டப் பேதைகளாய் இன்னும் முடங்கிக் கிடப்பாரோ தமிழர் தமிழகத்தில் இல்லை முண்டு பிடித்துத் தொடர்வாரோ தம்போரை பார்ப்பனியம் பணிவதில்லை அது பணியவைத்து ஆழ்வதுவே என்றந்தப்பாவி சொன்னான் இன்னமும் பொறுத்திடுமோ தமிழிதை இந்து மகாசதியும் பெளத்த மதவெறியும் இணைந்து நின்று தமிழைக் கொல்வமெனச் சொல்கிறதே இன்னும் என்ன தூக்கம் என்னருமைத் தமிழகமே நீ பொங்கியெழுந்தாலன்றி மழையில் நனைந்ததிலே பயனுண்டோ எண்ணிப்பார். 27.10.2008.
-
- 15 replies
- 2.2k views
-
-
இன்று நான் கவிதையொன்றெழுத முயன்றிருக்கின்றேன். நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிடிச்சிருந்தாச் சொல்லுங்கோ.அன்புடன்சாதாரணன். உண்மை அல்லது குழப்பம் பனைமரத்தின் கீழே பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப் பாலென்று சொல்லக் கள்ளென்று நம்பும் …
-
- 8 replies
- 1k views
-
-
-
------------------------------------------------------------------ எல்லா அறிவிப்புகளும் முடிந்துவிட்டன. செய்திகளும் புகைப்படங்களும் எல்லோரையும் நம்பவைத்து சென்றுவிட்டன. அதே முட்கம்பிகளுக்குள் அம்மாவின் முகம் சுருங்கிக்கிடக்கிறது. தங்கையின் கூந்தல் வளராமலிருக்கிறது. எங்களுக்கிடையில் அதே முட்கம்பிச் சுருள்கள் அம்மாவின் அருந்திக்கொண்டு வந்த புன்னகையை காயப்படுத்திக்கொண்டிருக்கிறது. தங்கையின் கையிலிருக்கிற புத்தகத்தை கிழித்துக்கொண்டிருக்கிறது. எனக்காக அம்மா பிட்டினைச் சுமந்து வந்தாள். காத்திருப்பின் எல்லைகளை வீடு செல்லுகிற கனவினை நகரத்திற்கு மீள்கிற நம்பிக்கையை அம்மா முட்கம்பிகளில் சொருகியிருக்கிறாள். நுளம்புகள் கூடாரத்தை தூக்கிச் செல்லும்…
-
- 0 replies
- 741 views
-
-
அப்பற்றை சைக்கிள் அருமந்த சைக்கிள் குப்பைக்குள் புரண்டு கோடிக்குள் கிடந்தது நாப்பது வருச காலம் நான்தானே சுமந்தனான் இப்பதான் தெரியுதோ என்று ஏக்கத்துடன் கேட்டது அப்பரோடு இருந்த காலம் அது என்ர வசந்தகாலம் எப்படியெல்லாம் வச்சிருந்தார் எங்கெல்லாமோ சுத்தி திரிஞ்சம் கொப்பரும் கொம்மாவும் கல்யாணம் கட்டின நேரத்தில எப்பவும் எல்லா இடமும் என்னைதான் கூட்டிப் போவினம் செக்கன்ட் சோ சினிமாவுக்கும் சாமத்தில் போய் வருவம் சொக்கன் கடை தேத்தண்ணிக்கும் சட்டென்று போய் வருவம் வாட்டப்பம் இழுப்பதுவும் …
-
- 2 replies
- 723 views
-
-
தமிழர் பிரிவுகளால்...!!! தமிழர்களுக்கும் சிங்களவார்களுக்கும் போராட்டங்கள் ஆரம்பித்தோ பல வருடங்களைத் தாண்டியும் தமிழனும் வெற்றி பெறவில்லை சிங்களவனும் வெற்றி பெறவில்லை.... தமிழர்களுக்குள்ளே பல பல விஷக் கிருமிகள் இன்றைய துரோகி கருணா(கம்) உட்பட பிரிந்து சென்று கூட்டணி வைத்து தமிழர் போராட்டத்திற்கு எதிராக இயங்கும் போது இந்த சிங்கள அரக்கர்களுக்கு எப்படித்தெரியப் போகின்றது நம் இன உயிர்கள் படும் அவஷ்த்தை எப்படித் தெரியப் போகின்றது???? ஒன்றாய் சேர்ந்து சாப்பிடுவார்கள் ஒன்றாய் சேர்ந்து கதைப்பார்கள் ஒன்றாய் சேர்ந்து தூங்குவார்கள் ஒன்றாய் பயிற்சிகளும் பெறுவார்கள் எல்லாம் முடிந்ததும் இந்தப் பச்சோந்திகள் எ…
-
- 6 replies
- 1.4k views
-
-
உனனைத் தொடமாட்டேன் உன்னைத் தொடமாட்டேன் வெண்நிலவே உன்னைத் தொடமாட்டேன் கண்களிலே உன்னை நானும் கொள்ளை இடமாட்டேன் காதல் என்று சொல்லி உன்னை இழுக்கமாட்டேன் உன்னைப்போல நானும் தேய்ந்து வளரமாட்டேன் காதல்கன்னி அவள்போல உன்னை இம்சை செய்யமாட்டேன் எட்டாத உயரத்தில்-நீ ஏனி வைத்தும் உன்னைப் பிடிக்கமாட்டேன் உன்னைப்போல நானும் இங்கே தனிமையில் ஏங்கமாட்டேன் தேன் நிலவு தேவதையே-நான் தேம்பியழமாட்டேன் தேடி நீ என்னை வந்தாலும் உன்னைத் தீண்டிவிடமாட்டேன்
-
- 15 replies
- 2.1k views
-
-
மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்….. உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கப் போனவர்கள் தவிர்க்க முடியா நில…
-
- 3 replies
- 928 views
-
-
ஆட்டம் காண்கிறதா ஐக்கிய இராச்சியம்-பா.உதயன் அனைத்து உலகுக்கும் அரசியல் படிப்பித்தவையாம் அந்தப் பெரிய பிரித்தானியாவாம் அண்மைக் காலமாய் ஆடிப்போய் கிடக்கினமாம் அடிக்கடி தலைவர்கள் மாறியும் போகினம் சங்கீத கதிரை போல் எப்போதும் சுத்துகினம் பகிடி அரசியலோ என்று பார்க்கிறவ கேட்கினம் பவுண்டின் பெறுமதி குறைந்திப்போ போச்சுதாம் பணவீக்கம் எல்லாம் கூடிப் போச்சுதாம் கோணிப்பை நிறைய பணத்தை கொடுத்து பாலும் பாணும் வேண்டத்தான் காணுமாம் இனி வரும் காலம் பிரச்சனை தானம் எப்படி சனங்கள் சமாளிக்கப் போகினம் உலகம் எல்லாம் உன்னிப்பாய் பார்க்கினம் என்னப்பா இனி நடக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு …
-
- 6 replies
- 651 views
-
-
எங்கள் கனவு சுதந்திர வாழ்வு உங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கான கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர் ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர் இருந்தும் கனவின் தினவை கண்களில் ஏந்தியோர் சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர், புராணகாலப் பொழுதில் இருந்தே உமக்கு நாம் தான் போரும் புகைச்சலும் கடல் தாண்டி நீவிர் கதியால் போட வந்தவேளை மீண்டுமொருமுறை எங்கள் பூஞ்சோலை உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள் ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம் சிதைதலின் வலி எத்தகையதென்பதின் நினைவூட்டல் அது, அதன் பின் காலம் சுழன்று நிழலின் பின்னே நிசமாய் அரசு நிகழ்ந்தது எத்தனை உயிர்களின் …
-
- 1 reply
- 865 views
-
-
""""கூட்டமாய் கூடாதீர் தளபதிகளே"..."""" அன்புத் தளபதியே அஞ்சும் மனதொன்று கெஞ்சி கேட்கிறது கூட்டம் இட்டு கூட்டமாய் கூட்டத்தில் நீவீர் ஏன்....??? நீர் மக்களின் தொண்டன் மரணம் உங்களுக்கு தூசு புரிகிறது இருந்தும் மனசு பதைக்கிறது... விருட்சங்களே எங்களின் விசாலங்களே நீவீர் வீழ்ந்தால் எம் விடுதலை என்னாவவது....??? வட்டமிட்டு வானத்தில் வள்ளூறு சுற்றி திரிகிறது... அலரி மாளிகையின் அரக்கன் உயிர் குடித்து ஏப்பம் விடுகின்றான்... வீதி உலா போகும் மனித மரங்களை வெட்டி எறிகின்றான்... ஆணி வேர் அறுந்து எத்தனை குடுமபங்கள் அல்லாடுகிறது... கண்ணீரோடு எத்தனை உறவுகள் தள்ளாடுகிறது... சுமையா…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாராவது கவிஞருக்கு சிலேடையாக கவிதை எழுதமுடியும் என்றால் தயவு செய்து பதில் அனுப்பவும். எனக்கு ஓரளவுக்கு Rap பாடல்கள் பாடத்தெரியும் ஆனால் கவிதை வருது இல்லை ஆகவே உங்களால் முடிந்தால் எனக்கு உதவவும் ஒரு விடயம் எனக்கு புலிகளின் வான்படை தொடர்பாக கவிதை வேண்டும்
-
- 18 replies
- 3.1k views
-
-
-
-
நான் அழகா அல்லது உன் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் மலர்கள் அழகா என் உள்ளம் அழகா அல்லது உன் கனவுக் கன்னியின் உள்ளம் அழகா என் குரல் அழகா அல்லது உன்னவளின் குரல் அழகா என் காதல் அழகா அல்லது உன் வருங்கால காதல் அழகா இத்தனை அழகையும் ரசிக்கும் என்னவன் அழகா அந்த அழகன் தான் எங்கே ??? மேகமாய் வந்து..............
-
- 17 replies
- 2.7k views
-
-
நீ கொடுத்ததில் விலை மதிக்கமுடியாதது எது தெரியுமா? நீ உனக்கே தெரியாமல் எனக்கு கொடுத்த உன் நினைவுகள்தான்...
-
- 0 replies
- 820 views
-
-
நவராத்திரி நாயகியே! முத்தமிழாய் இனிக்கின்ற முப்பெரும் தேவியரின் விந்தைகளை வித்தைகளைக் கொண்டாடும் நாள் வருது! இத்தரையில் பிறந்துவிட்ட அத்தனை பேரினுள்ளும் சக்தி என்றே ஒன்றேதான் இயக்கங்கள் நடத்திடுது! "அன்னை" என்ற சொல் ஒன்றே அன்பை அள்ளி வழங்குதல் தான் தேவைகளைத் தான் அறிந்து கொடுக்கின்ற உறவு அவள் தான்! முதல் மூன்று நாட்களும் மன உறுதி வீரம் தனை அள்ளித் தருகின்ற மலைமகளாய்!அடுத்த மூன்று நாட்களிலும் குறையாத வளம் நிறைவாகத் தரும் செல்வி திருமகளாய் நிறைவாய் மூன்று நாட்களிலும் அறிவுக்கண்ணைத் திறந்து கல்விஞானம் கொடுக்கின்ற கலைமகளாய் அருள் வழங்கும் சக்தி அவள்! அவல்,கடலை,சுண்டல் என இந்து வீடெங்கும் களைகட்டும்! பாடல்களும் பண்ணுமங்கே மனசுக்கு சுகம் கூட்டும்! விண்ணாளும் த…
-
- 15 replies
- 2.5k views
-
-
மாமரி அன்னையின் குழந்தையே ஏசுவே மாநிலம் யாவும் மாதவன் பிறப்பில் மகிழ்வும் ஆரவாரமும் மறுவாழ்வும் ஈழத்தமிழனுக்கு அவலம் மட்டுமா ? கண்ணீரும் செநீரும் , கொட்டும் மழையும் போதாதென்று ,எதிரியின் செல் மழையும் என்ன பாவம் செய்தாள் தமிழீழ தாயவள் வீதி எங்கும் மின் விளக்கு , விழா கோலம் நாதியற்ற தமிழன் மட்டும் நாய் படா பாடு , உண்ண உணவில்லை , உடையில்லை படுக்க பாயில்லை ,மண் தரையும்,மழைவெள்ளம் ஏனையா ஏசுவே எமக்கு இந்த கோலம். நேசக்கரம் நீட்ட , புது யுகம் பிறக்கவேண்டும் தமிழர் வாழ்வு மலர மாண்ட மண் வேண்டும் ஏசு பிறக்கவேண்டும் ,மக்கள் மகிழவேண்டும் புது வருடத்தோடு புது வாழ்வு பூக்க வேண்டும்.
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று சொல்லப் பட்டுள்ளதே தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற மாகாவியங்களில் முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன. காலம்தோறும்…
-
- 1 reply
- 1.6k views
-
-
தோல்வி நிலையென நினைத்தால்..... கவிதை - இளங்கவி தொடர்வாய்ப் பெற்ற பல வீழ்ச்சியினாலும்..... தொடர்ந்து கொண்டிருக்கும் பல அதிர்ச்சிகளாலும்..... துவண்டு விடாதே தமிழினமே....! எங்கள் விதியினை நாமே எழுதுவோம் எழுச்சி கொள்ளு எம்மினமே...! எதிரியின் கூச்சலுக்கேல்லாம் பயந்து ஓட நீயொன்றும் கொல்லையில் பறக்கும் கோழியல்ல.... எதிரியின் குதம்வரை சென்று அவன் குடலைப் புடுங்கிய கோரப் புலியின் பலம் உனக்கு.....! நீ கோடியாய்ச் சேர்ந்து கொதித்து எழுந்திட்டால் ; அவன் கோட்டைகள் எரியும் உன் விடுதலைக்கு....! அவன் கோவணம் கழட்டி நீ தோய்த்துப் போட்டால் கொத்தடிமையாய் இருப்பாய் அந்தக் களிசறைக்கு.... நம் விரலை வைத்தே எம் கண்ணைக் குத்துறான் …
-
- 8 replies
- 1.2k views
-
-
ஊர் நேற்றெம் ஊரிருந்த காற்றில் இதமான குளிரும் நேர்த்தியான சுகமுமிருந்தது சாணிமெழுகிய தலை வாசலில் சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது. வாசலிறங்கக் கோலமிருந்தது. வயலில் நம்பிக்கை விளைந்தது. வெளியே அறியப்படாத எத்தனையோ உள்ளே வெளிச்சம் நல்கின. அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும் குறுக்காகக் கட்டிய மாராப்பிலும் நிறையும் மனமிருந்தது. மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில் இருளெனும் எழிலிருந்தது. அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது. ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில் தேவ நிலை சித்தித்தது. ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும், கூத்துப் பாட்டும், நாதஸ்வர மங்கலமும் தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு எங்கே துரத்திப் பிடியென்பதாய் ப…
-
- 5 replies
- 658 views
-
-
ஏய்திட மாட்டீரே! --------------------------- மண்ணுக்காய் உயிர்தந்தோர் எண்ணத்தைச் சுமந்தபடி வீட்டுக்கு வாக்களிப்பீர் விடியலுக்காய் நடப்போமென்று வீரமுடன் பேசி நின்றார்! விமோசனத்தை காண்பதற்கு வாக்களிக்க வருமாறு உலகத் தமிழ் உறவுகளும் உரிமையுடன் கேட்டு நிற்க உக்கிவிட்ட மனதினுள்ளே ஊமையாய் காயங்கள்.... புன்னைகைத்து அட்டை வேண்டிப் போட்டோம் நாம் புள்ளடியை வீட்டுக்கே! எமக்கு வாழ்வு வேண்டாம் எமது சந்திக்கு வாழ நிலம் வேண்டும் என்ற வாஞ்சையிலே வாக்களித்தோம் ஏய்திட மாட்டீரே! எங்களையாமாரே ஏய்திட மாட்டீரே!
-
- 3 replies
- 647 views
-