கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
என் ''சின்ரெல்லா'' சிறு தேவதையே...! கவிதை - இளங்கவி சோர்வு ...அரைத்தூக்கம்..... என் மனதில் பல கலக்கம்.... கண்ணிமைகள் தான் மூட கனிவான ஓர் குரல்.... மாமா....மாமா.. தூக்கமா? என் அரைத்தூக்கம் கலைந்து யாரது...? என பார்க்கிறேன்...! என் பக்கத்துவீட்டு குட்டிச்செல்லம்..? கையில் இரத்தக் கறைபடிந்த கரடிப் பொம்மையொன்று...? என்னடா செல்லம் ...? ஓடோடிச் சென்று அவளை அணைக்கிறேன்... ஆமி அடிச்ச செல்லில் என் அம்மா செத்திட்டா.... அப்பாவும் தான் மாமா...! நீங்கள் தந்த ''ரெடி பியர்'' ம் இரத்தத்தில் நனைஞ்சிட்டுது....! ''பெட் ரைம்'' கதைகள் சொல்லி என்னை படுக்கவைத்து ரசித்தீரிகள்.... ''சின்ரெல்லா'' கதையும் சொல்லி என்னை சிந்திக்கவும் வைத்தீர…
-
- 12 replies
- 2.5k views
-
-
தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு (சிறுவன்) ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன் அம்மா சோச்சி ஆறிபோச்சேயென் றோடிப்போன காலம் போச்சு ஆனதென்ன ஆகாததென்னென் றாராஞ்சு பார்க்க நேரமாச்சு. (எல்லோரும்) ஆடடா கண்ணா........ (சிறுவன்) அப்பாக்கும் துணிசல் இருக்கு பலே பலே அவர் அநியாயத்தை எதிர்த்திருக்கார் கூறே கூறே சிங்களது சேகுலரை திருப்பி அனுப்பி செந்தமிழில் வரையுமென்று செப்பி நிற்க கோபம் கொண்ட கூலிகள் குழிபறித்து கோள் சொல்லி கொள்ளி வைச்சு வேலை தள்ள வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (எல்லோரும்) வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (சிறுவன்) சிங்களமே வெளியேறு செந்தமிழ் நாட்டால் செய்யாட்டில் செய்ய வ…
-
- 26 replies
- 2.5k views
-
-
இதயத்தில் , உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! முகம் இழந்தது அகம் சிவந்து நடக்கின்றேன் வரைந்துவிடு பெண்னே எனக்கு ஒரு கவிதயை கல்லுக்குள் காதலை தேடினேன்-என் நெஞ்சுக்குள் உன்னைத் தூவினேன் எத்தனை இரவுகள் கடந்து சென்றுருக்கின்றேன் எத்தனை நினைவுகளை மறந்து சென்று இருக்கின்றேன்- பெண்னே உன்னை மட்டும் மறந்து செல்ல முடியவில்லை பூட்டிய உன் இதயத்தால் ஈட்டியாய் தைக்கும் என் உயிரை மீட்டிய பல்லவி கொண்டு தீட்டியே விடடி எனைக்கவியாய் -இனியவள் பூட்டிய இதயம் ஓலிவடிவில்.....
-
- 12 replies
- 2.5k views
-
-
என் உயிரே அன்பே உன் Üட பழகிய நாட்களை வைத்து -எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் உன்னிடம் சொல்ல காத்திருந்த -பல வாத்தைகளை சொல்லாமல் என் மனசுக்குள் புூட்டி வைத்து உள்ளே அழுதேன்- என் உயிரே ஆனால் நீ என்னிடம் பழகிய நாட்கள் சில எனக்குத் தெரியும் -நீ விரும்புவது என்னை அல்ல என் இசைகளைத்தான் என்று ஆக்கம் ...... கீதா :P
-
- 11 replies
- 2.5k views
-
-
1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை மு…
-
- 3 replies
- 2.5k views
-
-
வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்....... கவிதை - இளங்கவி....... முள்ளிவாய்க்கால்.... தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து.... மலைகள் பல சாய்ந்து..... இரத்தத்தில் நிலமெல்லாம் குளமாகி...... தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி..... இறுதிவரை வீரம் சொல்லிய மண்..... வேங்கைகை பல சாய்ந்த மண்.... வல்லரசின் வீரர்களைச் சேர்த்து.... வாங்கி வந்த குண்டுகளைப் போட்டு.... பறந்து வந்து எரிமலையை போட்டு.... பாய்ந்து வரும் பீரங்கியால் தாக்கி... எத்தனை படுகொலையை இலகுவாய் செய்துவிட்டு...... வெற்றியாம் வெற்றி....! அவர்கள் வீரராம் விரர்....! கோழையின் வெற்றி உன் கொல்லைப்புறம் மட்டும் தான்.... வந்தவர்கள் போய்விட்டால் உன் வ…
-
- 13 replies
- 2.5k views
-
-
கிறிஸ்மஸ் விடுமுறை வ.ஐ.ச.ஜெயபாலன் விடுமுறைத் தூக்கம் மதியப் பசியில் கலைய எழுந்தேன். வீடு அமைதியில். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. வெளியே கொட்டுதே வெண்பனி. உள்ளே மின்னுதே என் பிள்ளைகள் கோலமிட்டு நிறுத்திய கிறிஸ்மஸ் மரம். முண்றிலில் கணகணப்பு ஆடைச் சிறுவர்கள் வெண்பனியில் வனைந்தனரே ஒரு மனிதனை. சிறுமி ஒருத்தி கறட் மூக்குவைத்துக் கைகொட்டிச் சிரிக்கிறாள். தேர்ந்த பொற்கொல்லனாய் கண் வாய் என்று கற்கள் பதிக்கிறான் என் பையன். ஒருநாள் உருகிவிடும் எனினும் ஆக்கி மழ்கிறாரே பனிமனிதனை. நாளை குப்பையில் எனினும் இன்றை ஒளிர வைக்குதே என் பிள்ளைகளின் கிறிஸ்மஸ் மரம். நீண்ட தூக்கமும், பெருஞ் சமையலும் ம…
-
- 9 replies
- 2.5k views
-
-
பிடித்தமாதிரி நடந்துக்கோ பிரியமாய்ப் பேசு கழுத்தளவு கவலையென்றாலும் கண்ணில் அதைக் காட்டாதே... ஆளப்பிறந்தவன் அவன் பேணப் பிறந்தவள் நீ காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால் கல்லானாலும் கணவன்... விதவிதமாய் உடுத்திக்கொள் வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு வயிற்றின் வாயிலாக அவன் மனசுக்குள் நுழையப்பார்... ஆணென்றால் அவன் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான், கட்டிய கணவனையும் குழந்தைபோல நினைத்துக்கொள்... சிரித்த முகமென்றால் சீதேவி சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி பொறுமையின் சிகரமென்றால் பூதேவி பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி... கல்யாணம் பேசியதிலிருந்து கணக்கில்லாத அறிவுரைகள்; எல்லாவற்றையும் கேட்டவள் இறுதியாய்ச் சொன்னாள்... வ…
-
- 10 replies
- 2.5k views
-
-
அண்மையில் ஒரு நீண்ட நாளைய நண்பன் ஒருவன் கதைக்கும்போது என்னிடம் கேட்டான் என்னடா முந்தி ஒரு காலத்திலை கனக்க கவிதையள் கதையள் எண்டு எழதுவாய் இப்ப வர வர உன்ரை எழுத்து இப்பிடி மோசமாய் பேச்சு தமிழிலையும் அதுவும் ஊர்வம்பு மற்றவர்கள் வம்பு என்று போய் கொண்டிருக்கு என்ன நடந்தது வயசு போட்டுதா? என்றான். அவன் திட்டினது எனக்கு கோபம் வரேல்லை ஆனால் வயது போட்டுதா எண்று கேட்டதுதான் கோபம் வந்திட்டுது அதுதான் வழைமையை விட ஒரு மாறுதலுக்கு இந்த வரிகள் கண்கள் பார்த்தால் காதல் வரும் கண்கள் பார்க்காமலும் காதல் வரும் காலத்தின் கோலம் கணணிக் காலம் இனிக்கும் மணக்கும் இதமாய் இருக்கும் இதுவல்லவோ உலகமென்று இவ்வுலகமும் மறக்கும் தடைபோட்டு தடைபோட்டு தாய் தந்தை த…
-
- 18 replies
- 2.5k views
-
-
நந்திக் கடலில் பேரம் நடந்தது எம் மக்கள் நீந்தவும் முடியாது நிர்க்கதியாய் கை அசைத்து கடல் நடுவே தத்தளித்து தவித்தனர் இப்ப மீளவும் ஈராக்கின் பின்பாய் லிபியாவில் சொல்லப்படுகிறது இந்தியாவையும் மீறி ஈழம் எடுக்கலாம் எண்ணையைத் தோண்டிக்கண்டுபிடி தமிழா அடித்துச்சொல்றாங்கள் இதுதாண்டா உலகமயமாதல் அமெரிக்கா பிரிட்டன் பிரான்சு மீட்பன்கள் அணு ஆயுதம் இருக்கெண்டு பாய்வினம் மக்களெல்லாம் சாகுதெண்டு அழுவினம் மக்கள் கரிசனை பொங்கிக் குண்டாய் பொழிவினம் எண்ணையிருந்தால் ஈழமெடுக்கலாம் தேர்தல் நெருங்கினால் அன்னை சோனியாவும் எமை ஆரத்தழுவும் தம் கையைமீறினால் தான் ராஜபக்சவும் கம்பி எண்ணலாமாம்–ம் எல்லாம் வல்ல தேசங்கள் வகுத்த நியதியாம் மக்கள் போரெழும் பூ…
-
- 7 replies
- 2.5k views
- 1 follower
-
-
ஏக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம் தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம் தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம் தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம் வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம் வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம் வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம் வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம் உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம் ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம் துளசி
-
- 11 replies
- 2.5k views
-
-
நன்பர்களே..................... காதல் இல்லாத உலகம் -அது உலகமே இல்லை... காதல் என்றும் தப்பல்ல -அது காதலாக இருக்கும் வரை நீங்கள் யாரையாவது காதலியுங்கள் ஆனால் உங்கள் காதலை காதலியிடம் சொல்லுங்கள்... காதலை அவள் மறுத்தால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அல்லது இரண்டு வாரங்களில் மறந்து விடுவீர்கள்.. ஆனால் அதை சொல்லாமல் உங்களுக்குள்ளயே வைத்து புதைத்து விடாதீர்கள்.. காதலை சொல்லி காதலியின் முடிவை தெரிந்து கொள்ளுங்கள்-அது இல்லாமல் உங்களுக்குள் உங்கள் காதலை வைத்து நீங்களே கொல்லாதீர்கள்...- அது கருவை வயிற்றிலேயே அளிப்பது போண்றது. அதனால் நன்பர்களே...... உங்கள் காதலை தைரியமாக சொல்லுங்கள் காதலை சொல்லாமல் முட்டாளாக இர…
-
- 13 replies
- 2.5k views
-
-
நாலெழுத்து படித்து விட்டால் நானே ஊருக்கு நாட்டாமை என்பான் கோர்ட்டும்- சூட்டும் அணிந்து விட்டால் நான் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை என்பான் அவன் பாட்டன் - கோவணத்துடன் திரிந்ததை ஒருவருக்கும் சொல்லான் மறைப்பான் -மகிழ்ச்சி வேறு கொள்வான்! ஏனடா நீ இப்பிடி? வெள்ளையும் சுள்ளையுமாகி நீ இங்கு திரிந்தாலும் வெள்ளைகாரனுக்கு நிகர் என்று சொன்னாலும் கிளிந்த சேலையுடன் இருந்த போதும் உன் அப்பன் இருக்க உன் தாய் தாலி அடைவு வைத்து தாயகத்தை பழிப்பவனே- உன்னை அனுப்பி இருப்பாள் உணர்ந்ததுண்டா-உறைக்காதா சீ போடா- மூடா !!
-
- 15 replies
- 2.5k views
-
-
கரும்புலி மில்லர் கரும்புலிகளில் மூத்தவன். வசந்தனாய் பிறந்து மில்லராய் வாழ்பவன்! மின்னல் எனத் தோன்றி மில்லர் ஆனவன்! கரும்புலிகளைப் படைத்து பிரம்மா ஆனவன்! உன் பின்னே எத்தனை தோழர்கள் பார்! அன்று கொட்டியா வருகுதென்று சுவை சுவையாய் நகைச்சுவை சொன்னவனே நீ! இன்று இருதாசப்தங்கள் கடந்தும் எங்கள் நெஞ்சு கனக்க வைத்தவன் நீ! பிறந்தவருக்கு மட்டுமில்லை! இனி மரணித்து மலர்ந்த உன் போன்றவர்க்கு பிறந்தநாளே கொண்டாடுவோம்! கரும்புலிநாள் என்றால் பன்னீர்ப் பூக்களை மட்டுமல்ல கண்ணீர்ப் பூக்களையும் காணிக்கை செய்கின்றோம்! நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் பெருந்தலைவன் பார்வையின் கீழ் நிமிர்கின்றோம்! ஊருக்கும் பேரு…
-
- 11 replies
- 2.5k views
-
-
நீண்ட இரவின் முடிவில் காத்திருக்கின்றது நேற்றைய வாழ்வில் உதிர்ந்து போன ஒரு பூவின் இதழ் காட்டு வழிப் பயணத்தின் இறுதியில் கிடைக்கின்றது வற்றிப் போன நதியின் சுவடு தூரப் பயணம் ஒன்றின் கடைசித் தரிப்பிடத்தில் அழிந்து போனது ஆரம்பித்த இடமும் இறுதி புள்ளியும் எங்கு சென்று தேடுவேன் காணாமல் போன என் உயிர் தொங்கிய பெரு விருட்சத்தை அடர்ந்து பெரிதாக நின்றிருந்த பெரு விருட்சத்தின் கிளையில் தொங்கிய பறவைகள் அனைத்தையும் பெரும் பூதம் தின்றுகொழுத்த கதையையும் அந்த பூதத்தை என் தோழர்களே வளர்த்து பறவைகளை தின்னக் கொடுத்த கதையையும் எப்படிச் சொல்வேன் என் பிள்ளைக்கும் அவன் பேரனுக்கும் என் வரலாறு முழ…
-
- 13 replies
- 2.5k views
- 1 follower
-
-
எனக்கும் அவளுக்கும் .... உயிர் பிரியும்வரை .... காதல் பிரியாத காதல் .... இருக்கிறது .....!!! அவளூக்கு ஏதும் நடந்தால் .... நான் இறந்து பிறப்பேன் .... எனக்கு ஒன்றென்றால்.... அவளும் இறந்து பிறப்பாள்.....!!! நாம் ஒருவரை ஒருவர் .... சந்திக்கும்போது ..... கீறியும் பாம்புமாய் .... இருப்போம் -காதல் நகமும் சதையும்போல் இனிமையாய் இருக்கும் ....!!! + கே இனியவன் ஈகோ காதல் கவிதை
-
- 0 replies
- 2.5k views
-
-
தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து அயலவர்க்கு அடையாளம் காட்டியது முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது முருங்கைக் கீரை சத்துணவானது எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில் குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது என் தந்தை என்னே தாய்மை என்றார் எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் நாட்கள் எண்ணும் வேளை தன்னில் இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க அரசினர் வைத்திய சால…
-
- 10 replies
- 2.5k views
-
-
சிங்களவன் கால் கழுவவா? சிரித்துகொண்டே சரியென்பார் வெள்ளை சேலையுடுத்தி இவர் மகளைகூட அழகுபார்ப்பார் ........ மனசு என்பது ஏதடா?! இந்த மனிதனிடம் அது இருக்குமா- அது நீ கூறடா! சேற்றில் அமிழுதடா தீயில் எரியுதடா உனை தூக்கி வளர்த்தவொரு ஜீவனே! பார்த்து நிற்கிறாய் -பதுங்கி மறையுறாய் இது பாவமென்று சொல்வேன் அது நியாயமே! கூடு கலையுதடா குருவி தொலையுதடா கூடவிருந்த உயிர்யாவும் ஓடி மறையுதடா எண்ண மறுக்கிறாய் நீ எனக்கென்ன என்றே கிடக்கிறாய் திண்ணைவரை தீ வந்தபின்னும் தெய்வம் காப்பாத்தும் என்று நம்புறாய்! இருப்பு அழியுதே வாழ்வு கறுப்பு ஆகுதே வண்ணக்கிளிகளை வல்லூறுகள் கொன்று தின்னுதே வயல் கொண்டபயிர் வாடி நிக்குதே …
-
- 17 replies
- 2.5k views
-
-
படத்தைப் பெரிதாக்கி வாசிப்பதற்கு : http://www.kathala.net/gallery/albums/user...lood-Flower.jpg படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 12 replies
- 2.5k views
-
-
முதல் இரவின் சங்கமத்தில்....... நம் காலைப்பொழுது இவர்களுக்கு முதலிரவு எங்கே தெரியுமா ! கோடி கண்கள் பார்த்திருக்கும் ஓர் வெட்ட வெளியில் ! அவளின் வருகைக்காய் நீண்ட நேரம் காத்திருந்தான் ? நேரமும் நெருங்கியது காத்திருந்து காத்திருந்து கலங்கிவிட்டான் - காரணம் இவர்கள் பொருத்தமில்லா யோடிகள் நிறத்திலும் ஏன் குணத்திலும் தான் ! இவளோ பால் வெள்ளை அவனோ கறுப்பின் மறு உருவம் அவளும் வந்துவிட பறவைகளின் இன்னிசை பூச்சிகளின் ரீங்காரம் மரத்தின் இலைகளின் சல சலப்பு கடல் நீரின் அலையோசை இத்தனையும் சேர்ந்தொலிக்க இணைகிறது முதலிரவில் இவர்களின் உடல் இரண்டும் ! இவளின் ஆதீக்கம் அவனை அடியோடு மறைத்துவிட பார்த்தோர்கள் பர…
-
- 8 replies
- 2.5k views
-
-
கீழேயுள்ளது தூயாவின் கற்பனை காதலிக்கு ஒரு மன்மதராசா இருந்தா எப்பிடியிருக்கும் என்று ஒரு கற்பனை உலா... ---------------------------------------------- ¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø... ------------------------------------------- ¸ñ§½.. §À¨¾ô ¦Àñ§½... §¸û! ¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý ±¾ü¸¡¸? ¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢ þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É, º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ ¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý. ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö... «ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä ¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡? ¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷ §À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡? ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É §¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö ¯É째 ¦¾Ã¢Ôõ ¿£ ÀÊôÀ¢ø 'நெஅக்' ±ýÚõ, ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ «Ð¾¡ý §¸¡Àò¾¢ø …
-
- 8 replies
- 2.5k views
-
-
குளிர் போக்கும் ஞாபகங்கள். பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல் பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம். கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை இனியொருகால் வருமோடி அவ்வின்பம். வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும் வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா. இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை. ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல் ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன வேறு வழியில்லையடி கண்ணம்மா. வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி. கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும் பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும் காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி. தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று …
-
- 6 replies
- 2.5k views
-
-
உன் மௌனங்கள் என்னை, வாட்டும் போது விழிகளில் பொங்குகின்றன , கண்ணீர்த் துளிகள் உன் மௌனத்தோடு சிதைந்துவிடுமா என் ஞாபகங்கள்
-
- 9 replies
- 2.5k views
-
-
சரஸ்வதி துதி வெள்ளைத் தாமரையில் வெண்ணிற உடை உடுத்து வீணை தனை மீட்டிடும் வாணியே... கலை மகளே..! வெள்ளை உள்ளத்துடன் எளிய தமிழ் கவிதைகளை எழுதிட நீ உதவிடம்மா... ******** நாளெல்லாம் நவராத்திரி யாழ் களத்திலே... நாமகளும் உறைந்திடுவாள் எங்கள் படைப்புகளிலே இனிய தமிழ் கவிகள், கதைகள் புதுமைக் கருத்துக்கள், செய்திகள் மனம் மகிழவைக்கும் நகைச்சுவை கண்ணுக்கினிய காணொளிகள் இவை வழங்கும் யாழ் களம் நான் பயிலும் பல்கலைக்கழகம். நாளும் நாம் எழுதும் படைப்புகள் நவதானியமாய் விதைக்கப்பட, இவை வழங்கும் படைப்பாளிகள் தாமே அழகிய கொலுக்களாக, வளரும் அழகு தமிழ் யாழ் களத்தில் அழியாது என்றும் இவரிருக்க. உள்ளத்தில் உள்ள ஆணவத்தை அழிப…
-
- 13 replies
- 2.5k views
-
-
பாலைவனத்தில் முளைத்த கள்ளியாய் என் மனதில் முளைத்த கள்ளி நீ . பருவத்தின் வாசலில் எனக்கு நீ ராணி தான் . உன் உதடும் என் உதடும் பற்றியவேளை , உலகமே எமக்கில்லை . வளர் பிறை போல் எம்காதல் மலர பிடித்தது சனி உன்னப்பனுக்கு . தன்னையும் உன்னையும் பிரிக்கவந்த சுவர் நான் என்றான் . இனிப்பான பேச்சினால் தந்திரமாய் உனை மாற்றி , மாணவர் விசாவில் பறக்கவைத்தான் . உன் தொடுகைச் சூடும் , உன் முத்தத்தின் இனிப்பும் , இனியவையாகவே என்மனதில் இருக்கும் . உன் பிரிவு வாட்டினாலும் உன் நினைவுடன் நான் இருப்பேன் கள்ளி ....................
-
- 24 replies
- 2.5k views
-