கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மேய்ப்பன் தடியோடு நடக்கிறான். தடி, ஆடுகளைத் திருப்பும் என்றும் அதுவே தன் பலமென்றும் இன்னும் இன்னும் நினைத்திருக்கிறான். மேய்ப்பனை மேய்க்கும் மேய்ப்பன் மேய்ப்பனை நம்பியதாக என்றுமே சொல்லியதில்லை. தடியைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறான். பல ஓநாய்களிடம் இருந்து காலனியைப் பெற்ற மேய்ப்பன் ஆடுகளை நோக்கி எப்போதும் பேசியதுமில்லை பசி தீர்க்கும் வழியில் அழைத்துக் கொண்டு சென்றதுமில்லை. ஆடுகளின் குரலில் பேச மட்டும் கற்றுக்கொண்டான். தன்னை மேய்க்கும் மேய்ப்பனோடு இரவுப்போசனங்களில், ஆடுகளின் கருகிய தசைகளை மென்றுவிட்டு கனவுகளைத் துப்பி விடுவான். ஆடுகள் தங்கள் முன் கையளிக்கப்பட்ட தடியை மட்டுமே நம்பின.. நம்பிக்கொண்டு இருந்தன மேய்ப்பனை ஏறெடுத்…
-
- 1 reply
- 1k views
-
-
என் கண்களுக்கேனடி... அழச்சொல்லிக் கொடுத்தாய் ? நம் காதலுக்கேனடி.... பிரிவை அளித்தாய் ? எரிமலைக் குழம்பினை அள்ளித் தெளித்தாய்....! உயிரோடு இதயத்தைக் கிள்ளி எடுத்தாய்...!! பட்டாம் பூச்சி போல... என் இதயத்தில் நீவந்து அமர்ந்தாய்! காதல் தேனைப் பருகி... ஏன் தூரப் பறந்து மறைந்தாய்? காத்தில பறக்கிற பஞ்சாய் என்னை ஏனடி அலைய விட்டாய்? சேத்தில விழுந்த கல்லாய் ஏனடி என்னை புதையவிட்டாய்? உயிரது தன் உணர்வினைத் தேடும் உண்மைக்குப் பெயர்தான் காதல் ! உன் பொய்மைக்குள் புதைந்த அன்பினைத் தேடி அலைவதுதானா சாதல் ? என்னை மறுத்தாய்... உறவை அறுத்தாய்...! காதலை மறந்தாய்.... பாதியில் மறைந்தாய்...! …
-
- 1 reply
- 1.1k views
-
-
குளிர்காலத்தின் துயர் சுமந்த கிளைகளில் கனவுகளை எழுதுகிறது சாம்பல் பறவையொன்று, இனிவரும், வசந்தகாலத்தின் இலைகள் பறவையின் கனவுகளை மொழிபெயர்க்கவும், இன்னொரு பறவை சுமந்து செல்லவும் கூடும், அந்தக் கணங்களில், அந்தப் பறவையும் மரமும் என்ன பேசிக்கொள்ளும்...... கனவுகளை வைத்திருந்து கையளித்ததிற்கு நன்றி கூறிப் பிரிந்து செல்லுமோ.. கிளையின் துயர் மீது கண்ணீர் சிந்திக் கழுவிப் போகுமோ.. கூடுமுடைந்து அங்கேயே தங்கிவிட துணியுமோ.. சாம்பல் பறவையின் கண்களில் இருந்து பெருவெளியில் கலந்தது அரூபமொன்று, கிளைகளில் இருந்து வழியத்தொடங்கிய காலத்தின் துயர் பறவையின் கனவுகளை மூடிப் பெருகத்தொடங்கியது. யாருக்குத் தெரியும் இனிவரும் வசந்தகாலத்தில் …
-
- 0 replies
- 626 views
-
-
எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய உருக்கமான கவிதை ஒன்று ! நடுத்தமிழ் நிற்கிறது நடுத்தெருவில் .... தன் விலாசத்தை தவறவிட்டு ; அதன் - திருவிழி உகுக்கிறது தீர்த்தச் சொட்டு ! எம்.எஸ் ஏறிவிட்டார் வாகனம் ; எல்லோர்க்கும் இருந்தென்ன ? எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்! இழந்து நிற்கிறது இசைக்கலை - தான் தங்கியிருந்த - எம்.எஸ் என்னும் இன்ஷியலை! ஓதம்சூல் உலகின்காண்- ஓர் ஒப்புலட்சுமி-இல்லாதவர் சுப்புலட்சுமி ; தூய வாய்மலரால்- இசைத் தேனைத் துப்புலட்சுமி என்னணம் எண்டிசை-இனி பயணிக்கக் கூடும் -நம் பண்டிசை? எம்.எஸ் என்பது சங்கீத சாஸ்திரத்தின் ப…
-
- 1 reply
- 2.3k views
-
-
யார் மீட்பாரோ! --------------------- எம்மை அழித்த இன்னொரு ஆமியாய் வந்த சுனாமியே எந்தனை உயிர்களை காவு கொண்டாய்! சாவுகள் சூழ்ந்து சாய்ந்த மனங்களை சாவுகளாலே மீண்டும் சாய்த்தாய்! ஆண்டுகள் கடந்து போகின்ற போதிலும் எம்முடன் வாழ்ந்தவர் நினைவுகள் வாழுமெம்முடன் என்பதை அறிவே அறியுமல்லவா! துயரங்களாலே நிறைந்த வாழ்விலே தோள்கொடுத்த எம் மீட்பரும் இன்றி தொலைகின்ற வாழ்வினை யார் மீட்பாரோ! மீடபராய் யாரும் இல்லாவிடினும் துட்டராயேனும் இல்லாதிருக்கும் நிலையொன்று வேண்டும் நிம்மதிகான வழியொன்றும் வேண்டும் வலிகளைக் கடந்து நிமிர்ந்திட வேண்டும் உலகிலே தமிழினம் நிலைபெற வேண்டும்! சுனாமியில் சாய்ந்த உறவுகள் நினைவோடு கடலிலே மீண்டும் இறங்கியது போல் கரைகளைத் தேடப் புதிய திசைகளைத் தேடுவோம் நாமே!
-
- 0 replies
- 567 views
-
-
மீதமின்றி கொல்லம்மா கடலம்மா `````````````````````` பெற்றால் தானே பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள்,, உண்மைதான் நாங்கலெல்லாம் உனக்கு தெருவில் கிடந்தது கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அழித்திருக்கலாமே - ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... எழுத்து -27/12/2012
-
- 7 replies
- 1.1k views
-
-
சாம்பலில் இருந்து மீண்டும்.. எழுத்து பறக்க நான் ஒன்றும்.. பீனிக்ஸ் இல்லை.. என் வலுவை திரட்டி... பாய்ந்து போகக் கூட .. பந்தைய குதிரையும் இல்லை.. சிறுக சிறுக சேர்த்து.. கட்டி எழுப்பிய தேன்கூடு.. என் காதல் வீடு ... நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து.. போக எப்படி மனசு வந்தது உனக்கு .. வரிகளில் ஆழம் புகுத்தி .. சொல்களில் ஜாலம் காட்டி .. கவிதை புனையக் கூட .. கற்று கொள்ளவில்லை நான் .. உன் உதட்டில் நாண் ஏற்றி .. வார்த்தை அம்பை இழுத்து .. எப்படி குறி தவறாது என் .. இதயத்தில் செலுத்தினாய் நீ .. உயிர் ஊசல் ஆடும்போது கூட .. என் மனவானில் நீ.. ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .
-
- 5 replies
- 894 views
-
-
எழுத்தில் நிலைக்க முன் படத்தில் பதிய முன் எழுந்த வேகத்தில் கரைந்திடும் மன அலைகளே..! கலியாணம் கட்டி காண வேண்டியதை கண நேரத்தில் காட்டி மறைகிறீர்.. மனததை தவிக்க விடுகிறீர்..! காதலிக்க நினைப்பவரை கட்டியணைக்க வைக்கிறீர் மீண்டும் தவிக்கையில் தலையணையை தருகிறீர்...! நடந்ததை மறந்தாலும் நினைவுக் கிடங்கதை கிண்டிக் கிளறி விடுகிறீர் நன்றும் தீதும் இரட்டையராய் தருகிறீர்..! கலரா.. கறுப்பு வெள்ளையா வகை வகையாய் போகாத காட்டிலும் போக விடுகிறீர் ராக்கெட் இல்லாமலே எட்டாத வெளியிலும் பறக்க விடுகிறீர் விழுந்து சாகவும் செய்கிறீர்..!! அலறி அடிக்கும் கணங்கள் போக அடித்து வீழ்த்த நினைக்கும் எதிரியை அடிக்க வைக்கிறீர் அலைகள் கடந்து நடுக்கடலில் நிறுத்தியும்…
-
- 4 replies
- 670 views
-
-
வலைப்பூவெனும் வலையால், இணையத்தின் துணையால், கடலலைபோல் எழுந்தேகி... எண்ணக்கடலின் கரை தேடலாம்! வண்ண வண்ண வடிவங்களாய்... எண்ணமெல்லாம் வடிக்கலாம்! சின்னச் சின்னச் சித்திரமாய்... எழுத்துக்களைச் செதுக்கலாம்! காகிதத்தில் எழுதி, கடிதங்களாய் அனுப்பி, காத்திருந்து காத்திருந்து... பார்த்திருக்கத் தேவையில்லை! இணையச் சுவரில் கிறுக்கிட... வலைப்பதிவொன்று போதுமே! உலகமெல்லாம் பகிர்ந்திட... வலைப்பூவுலகும் விரிந்திடுமே! விசைப்பலகை தடவி விரலால், வலைப்பூவில் தூவி வினாடிகளில்... உலகமெங்கும் மலர்ந்திடுமே - உங்கள் எண்ணங்கள் வண்ணங்களாய்...! எண்ணங்களை எழுத்துக்களாய்... படைப்பவனும் பிரம்மன்தான் ! வண்ணம் தரும் வார்த்தைகளை... வடிப்பவனும் ரவிவர்மன்தான் !! வலைப்பூவை உருவா…
-
- 2 replies
- 767 views
-
-
-
பறவைகளின்றி வானம் இறந்து கிடக்க, இலைகள் கழற்றிய கிளைகள் காற்றோடு குலவுகின்றன, மதில்களில் பூனைகள் இல்லை. வாசல்களில் யாதொன்றினதும் அரவங்களும் இல்லை. அறைகளில் ஒளிரும் மின்குமிழ்கள் கண்ணாடி யன்னல்களில் ஒளியத்தொடங்குகின்றன. குளிர் புணர்ந்து அந்தி கவிழ்ந்துவிட்டது. இனியிருள் சூழ்ந்து அமைதி வளர்ந்துவிடும். மூச்சுக் காற்றில் வெப்பம் தெறிக்க, உள்ளங்கைகளில் குளிர் குத்தும். இரண்டுபட்டுக் கிடக்கிறது தேகம். மனதும், கிடுகுவேலிப் புலுனிக்குருவி நான் இந்தப்பனிக் குளிக்கும் மரங்களில் எனக்கேது மறைவு. செயின் நதியும் ஈபிள் கோபுரமும் மோனோலிசாவின் முகமும் உலகின் அழகான ராஜபாட்டையும் டயானாவின் கார் மோதிய தூணும் கடிகாரத்தின் இலக்கங்களாகிடச் சுற்றிக்கொண்டிருக…
-
- 11 replies
- 982 views
-
-
-
- 10 replies
- 944 views
-
-
எங்கள் தேசத்தின் குரல் ஓய்ந்திடவில்லை ஆண்டுகள் எட்டு ஓடி மறைந்ததா?- எங்கள் தேசத்தின் குரல் ஓய்வெடுத்து ஆண்டுகள் எட்டானதோ? அன்பே மூலதானமாக அடக்கமே ஆளுமையாக அறிவே ஆயுதமாக தமிழினத்தின் குரலை தரணிக்கு எடுத்துக் கூறிய எங்கள் அன்பு பாலா அண்ணா உலகத்தைவிட்டு பறந்தோடி ஆண்டுகள் ஏழு ஆனதோ? உண்மையுள் உண்மையாய் உண்மையே உணர்வாய் உண்மையே இவராய் உண்மையாய் வாழ்ந்த உயரிய மகன்-இன்று எம்மைவிட்டு சென்றதை இன்னும் நம்ப மனம் மறுக்கின்றது உலகின் பார்வையில் இவரின் உறக்கம் சாவு எனச் சொல்லப்படலாம் ஆனால், உலகத்தமிழர் உளங்களில்- இவர் என்றும் வாழ்ந்திருக்கும்; மனிதன். தமிழின விடிவுக்காகவே இறுதிவரை உழைத்த உறுதியான போராளி இவர். பாழும் நோய் வந்து பாடையேறும் நாளை இரக்கமின்றி தெரிவித்தபோது பத…
-
- 2 replies
- 544 views
-
-
இணையதள வரலாற்றில் முதன்முறையாக 400க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க ஒரு அரிய வாயப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்புகிறது. சென்னையில் நடைபெறும் மார்கழி மாத இசை கச்சேரிகளை அடுத்த மாதம் முதல் வாரம் வரை உலகம் முழுவதும் உள்ள இசை ஆர்வலர்கள் கண்டு, கேட்டு ரசிக்கலாம். உலகம் முழுவதும் உள்ள 210க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தமிழர்கள் தினமலர் இணையதளத்தை தொடர்ந்துபார்த்து, படித்து வருகின்றனர். இந்த நேரடி இசை நிகழ்ச்சி ஒளிபரப்பை அனைவரும் கண்டு களிப்பதுடன் உங்கள் நண்பர்களுக்கும் இது குறித்து எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கின்னஸ் சாதனை: சென்னையில் கடந்த 50 ஆண்டுகளாக இசை…
-
- 0 replies
- 1.5k views
-
-
எங்கள் தலைவிதியை நாமே சிங்கமும் கருநாகங்களும் குள்ளநரிகளும் ஒருபுறம், பொல்லாத மலைப்பாம்புகளுடன் இன்னுமொரு சிங்கம் மறுபுறம், என்ன செய்வோம் நாம்? எங்கள் குரல்வளையை நெரிக்க, எங்கள் விழிகளை குத்திக்கிழிக்க, எங்கள் வாழ்விடங்களை பறித்தெடுக்க இந்த கொடிய மிருகங்களில் ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். தெரிவு செய்ய நாங்கள் செல்லாவிடில் எமக்காக அதையும் அந்த குரூர விலங்குகளே செய்துவிடும். இந்த அவலத்திலிருந்து மீட்க, எவருமே எமக்காக இல்லை. எங்கள் விதியை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம். இந்த உள்நாட்டு விலங்குகளும் வெளிஉலக வல்லூறுகளும் ஓநாய்க் கூட்டங்களும்; தான் எங்கள் வாழ்வை பற்றி தீர்மானம் எடுப்பார்களாம் அப்படியானால் நாம் யார்? எமக்காக பேச எவருமில்லையென்றால் எங்களை…
-
- 7 replies
- 709 views
-
-
தொலைவே இல்லாத பின்னிரவொன்றில், விடிகாலைப் பொழுதினைத் தொலைத்துவிட்டு, நிரந்தரமாகிப்போன கும்மிருட்டில், சத்தமே இல்லாமல், சந்தம் பாடுகின்ற குயில்களின் குரல்வளைகளை அறுத்தெறிந்து, கோட்டான்களைக் கூப்பிடுவோம் வாருங்கள்! முகவரி இல்லாமலே பூபாளம் பாட! 10/dec2014
-
- 2 replies
- 700 views
-
-
பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை நீண்டவால்க் குருவி. வானத்தின் சோகங்களையும் வீதியின் தனிமைகளையும் பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும் துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை இழைத்துக் கூவியழுகின்றது. சேர்ந்து இசைக்கும் குரலொன்று வருமென்ற தேடலில் நியமம் தப்பாத இடைவெளிகளை சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது. நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில் சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான். இருளின் பெருக்கத்தொடு இயைந்து மௌனத்தின் இடைவெளியும் நீண்டு கனக்கத் தொடங்குகையில், அந்த இடைவெளிகளின் நிசப்தத்தில் மூச்சின் ஒலிகளை நிறுத்திக் காவலிருக்கத் தொடங்குகிறேன். இன்னொருகுரல் எங்காவது ஒலித்துவிடாதா.... நீள்கின…
-
- 18 replies
- 1.5k views
-
-
பெண்ணே.. பெண்ணே... காதல் கொண்டேன் உந்தன் கண்ணில் மின்னல் கண்டேன் உன்னால்தானே தூக்கம் மறந்தேன் விண் மேகம்போல நானும் மிதந்தேன் செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...! வெல்லமாய் இனிக்கிறாய் மனசுக்குள்ளே...!! கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...! என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...? காதல் சொல்லித் தருவாயா? இல்லை... வேண்டாம் என்று மறைவாயா? என் இதயம் திருடித் தொலைவாயா? கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு ! என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு ! நீ அன்றி நான் வாழும் என் வாழ்வில் அர்த்தங்கள் இல்லை என்று... புரிந்துவிடு ! வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட... இதயம் சின்னச் சின்னத் தாளமிட... என் பக்கம் ஓடி நீ வாடி…
-
- 11 replies
- 1.7k views
-
-
முகடு இதழ் (பிரான்ஸ்) இதுவே எனது கன்னி கவிதை(அச்சில்). இதுநாள் வரை என்னை மெருகேற்றிய யாழ் உறவுகளுக்கும் அச்சில் கொண்டு வந்த முகடு இதழுக்கும் எனது நன்றிகள்.
-
- 19 replies
- 1.5k views
-
-
காலத்தை வென்ற கவிஞன் விடுதலை நெருப்பில் குரல் எழுப்பிய புலவன் மலர்ந்தநாள். சுதந்திர சிறகடிற்பிற்காய் இயந்திரமாய் எழுதிய கவிஞன் மண்ணைப்பாட பிறந்தநாள். இவன் விற்பனை கவிஞனும் அல்ல கற்பனை கவிஞனும் அல்ல காலநதியில் கரைந்து போன கவிஞனும் அல்ல கூவி வந்த கந்தக துகள்களுக்குள்ளும் சாவு விழுந்த வலிகளுக்குள்ளும் மூசி மூசி வீசிய புயல்காற்று. இவன் காலத்தை வென்ற கவிஞன் ஈழயாகத்தை தமிழால் வளர்த்த அறிஞன் யாருக்கும் கொள்கையை விற்கா வியாசகன் யாதுக்கள் நிகழ்த்திய யாதனைகளை பாடிய பாவலன் தேசியத்தலைவனின் அண்ணனாய் மணணை நேசித்த சந்திரிகை. எப்படி ஜயா உமை மறப்போம் நீ பாடித்திரிந்த திசையை தேடிப்பார்க்கிறோம். விடியவில்லை விடுதலைராகம் கேட்கவில்லை மாறக நாற்…
-
- 0 replies
- 614 views
-
-
லீனா மணிமேகலையின் மூன்று கவிதைகள் முந்நீர் காதை அவன் தன்னை மீன் என அறிமுகப்படுத்திக்கொண்டான் திராட்சை ரசத்தில் கெளிறென நீந்திவரச் சொன்னேன் ஒன்றல்ல மூன்று தரம் புன்னகையுடன் நீந்தினான் துடுப்புகளுக்கு முத்தமிட்டேன் மூன்றல்ல முப்பது தடவை மெல்லுடலியாக இருக்கிறானே நீராளியோ இவன் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது பொதிகையில் விழுந்த சூரியனாய் நிறங்கள் தரித்தான் அட இவன் வலைக் கடியன்தான் என முடிவுக்கு வந்து அள்ளியெடுத்து புணர்ந்தேன் முப்பதல்ல முன்னூறு பொழுதுகள் கடல் முள்ளியாய் அவன் கிழித்த என் பவளப் பாறைகளில் மூவாயிரம் வாள்மீன்கள் உருண்டன ஒவ்வொன்றிலும் அவனின் கண்கள் இப்போது தன் தரப்பு எனத் தன் ஆறாயிரம் கண்களை சிமிட்டினான் முழுவதுமாகத் தன்னை…
-
- 1 reply
- 576 views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். இப்படி அமைந்ததே நிலையென்று ஏக்கமாய் பார்த்தேன் வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற எங்களுக்கு காலம் கைகொடுக்கும் வரை காத்திருக்கிறோம்; என்றார்கள் செண்பகன் 23.10.13
-
- 4 replies
- 820 views
-
-
முந்தை வினை முழுதும் மூர்க்கத்துடன் அறுக்க முனைகிறேன் ஆனாலும் முடிச்சவிழ்க்க முடியா முடிவுகள் அற்றதாய் வாழ்வு நீண்டுகொண்டே செல்கின்றது பிறவிப் பயன் அறிந்திடா பித்தம் தலைக்கேறிய மானிடராய் பேசுபொருளாய் ஆனதில் வாழ்வு படிந்தும் படியாமல் எப்பொழுதும் பயத்துடனே நகர்கின்றது பூனையில் காலின் எலியாய் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அர்த்தமற்ற வாழ்வின் நகர்வில் அகலமாகிக் கொண்டே செல்கின்றது ஆழ்மனதில் அசைக்கமுடியாது வேர்விட்ட நம்பிக்கைகள் இறுகப் பற்றியிருக்கும் இளையின் இறுமாப்பும் இன்னும் சிறிது நாளில் இல்லாமல் போய்விடுவதற்கான எல்லாக் காரணங்களும் எதிரிகளாகி என் மனத்துடன் ஏளனமாய்ச் சிரித்தபடி எதிர் யுத்தம் செய்கின்றன எனக்காகவே ஆர்ப்பரிக்கும் மனதின் அவலம் ஆழ்கடலில் மோ…
-
- 2 replies
- 726 views
-
-
1947ல் இலங்கையில் சிங்கள ஆதிக்கம் ஏற்பட்டதில் இருந்து இருந்து அதனை நிராகரித்து தமிழ் இன விடுதலைக்காக உயிர்நீத்த சகல கட்சிகளையும் இயக்கங்களையும் சேர்ந்த மாவீரர்களுக்கும் இலங்கைத் தமிழர் சமூக விடுதலைக்காக எழுந்து சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும் ஈழத் தமிழ் முஸ்லிம் உறவுக்காகவும் வீழ்ந்த மாவீரர்களுக்கும் எனது அஞ்சலிகள் மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்…
-
- 0 replies
- 572 views
-
-
Theepachelvan Pratheepan இன்றைய ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த கவிதை. காந்தள் மலர்கள் வானம் பார்த்திருந்து மழையை தாகத்தோடு அருந்தி கிழங்குகள் வேரோடி நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது காந்தள்க் கொடி. எதற்காக இந்தப் பூக்கள் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன? ஒரு சொட்டு கண்ணீர் விடவும் ஒரு விளக்கு ஏற்றவும் மறுக்கப்படுகையில் எதுவும் இல்லையென எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில் அனல் கனக்கும் தாயின் கருப்பையை ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள் தாயின் கனவு வண்ணமாய் தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை யாரால் தடுக்க இயலும்? தீபச்செல்வன்
-
- 1 reply
- 669 views
-