கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கண்ணா லட்டு தின்ன ஆசையோ ?? எல்லோர்க்கும் தெரிந்த லட்டு எண்ணத்தில் இனிக்கும் லட்டு தின்னத் தின்ன திகட்டா லட்டு ரவா லட்டு , பூந்தி லட்டு....... நாலுபக்கமும் நாலுபேர் இழுக்க நாம் செய்த லட்டோ பலர் பல்லுடைத்து பாவப்பட்ட லட்டு.......... அவரவர் வாழ்வை அவராகவே தியாகம் செய்து திகட்டுவதற்கே , ரத்தத்தையும் தசையையும் பக்குவமாய் கலந்து தேசியத்தில் பதமாய் குழைத்து எங்கள் தியாகநெருப்பில் செய்த லட்டு ........... லட்டால் வந்த வெக்கை பலபேரைக் கிலி கொள்ள பலகைகள் ஒன்றாய் சேர்ந்ததே செய்த லட்டை பிரிக்கவே!!!!!!! லட்டுக்கு வந்த சோதனை உடன் சேர்த்த கஜூ பிளம்ஸ்சால்........ மெல்லிசு மெல்லிசாக லட்டுவும் உலுர்ந்ததே !!!!! மண்ணுடன் மண்ணாக கரைந்ததே !!!!!!!! கண்ணா ம…
-
- 8 replies
- 2.3k views
-
-
தலைப்பைப்பாத்திட்டு சண்டைக்கு றெடியா யாரும் வரவேண்டாம். கீழேயுள்ள கவிதையை மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். அததனை இங்கு பதிவிடுகிறேன். இழு தேரை ! இறுகப்பிடி வடக்கயிற்றை…! சமீபத்தில் இங்கிலாந்து நடந்த ஒரு தேர் உற்சவத்தில் 20.000 பேர் கலந்துகொண்டதாக வந்த செய்திக்கு, அங்கு வாழும் கவிஞர் இளம்பறவை எழுதி அனுப்பியுள்ள கவிதை. இழு தேரை.. இறுகப்பிடி வடக்கயிற்றை. பக்கத்துச் சுரிதார் பார்வைபட இன்னும் செய்! பார்த்து இளி!! முள்ளிவாய்க்காலில் அந்த இறுதிநாட்களில் உன் உறவுகள் விட்டகண்ணீரும் குருதியும் இன்னும் காயவில்லை…பரவாயில்லை..புலத்த ு தெருக்களில் தேர் இழு! உன் தா…
-
- 13 replies
- 2.3k views
-
-
பூவுக்குள் பூவாய் இவள் உறங்கிக் கொள்ள கண்ணீர் கொண்டு பாசத்தோடு என் உறவுகள் சுற்றி நிற்க இவளையும் வெறுத்திடும் இதயங்கள் பெருமூச்சு விட்டு நிற்க ஏனடா இவளை சந்தித்தோம் என சிலர் திட்டி நிற்க இவள் மட்டும் பூவோடு பூவாய் வாடாது உறங்கிக் கொண்டாள்! தன் இறுதி விடுதலைப் பயணத்தில் மகிழ்ச்சியாய்...! இவளுக்காய் அழுதிடும் உறவுகள் மறந்திடுவார் மரணத்தை மீண்டும்!!!
-
- 15 replies
- 2.3k views
-
-
பல்லவி பெண்: காதல் சொல்ல காதல் சொல்ல தயக்கமும் தேவையா மோதல் செய்து மோதல் செய்து கைதுசெய்த தோழனே நெஞ்சத்திலே சினேகமாய் காதலைச் சுமக்கிறாய்-ஏன் மௌனத்தினால் என்னையே பார்வையால் வதைக்கிறாய் அழகான நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! சரணம் 1 ஆண்: உன் விழிகள் வீசும் வலைகள் கொண்டு அள்ளிக் கொள்ள நினைக்கிறாய் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பேசி என்னை வெல்லத் துடிக்கிறாய் பார்வையால் படர்கிறாய்-உன் வார்த்தையால் வளைக்கிறாய் நட்பின் ஈரம் காயும் முன்பே காதல் தோன்ற வேண்டுமா ? சரணம் 2 பெண்: காதல் நுழைந்த இதயம் தன்னை சிறை வைத்து ரசிக்கிறாய்- உன் கண்களின் ஓரம் கசியும் காதலை என்ன ச…
-
- 17 replies
- 2.3k views
-
-
கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி ஐயா வருவார் அரவணைப்பார் என்றிருக்க பொய்யாயுண்ணாவிரதப் புரளி செய்த கில்லாடி
-
- 4 replies
- 2.3k views
-
-
!!!...................மங்கையர்க்கரசியின் காதல் ........................!!!இது ஒரு வரலாற்று சிறுகதை வ.வே.சு. ஐயர் அவர்கள் எழுதிய வரலாற்று கதை . இதனை பல இடங்களில் வாசித்து எடுத்த தகவலில் இருந்து இதனை கவிதை வடிவில் அமைக்க ஆசைப்பட்டேன் .என்னால் முடிந்த வரை எழுதியுள்ளேன் . வசித்து பயன் பெறுவீர்களாக .....!!!!!!................மங்கையர்க்கரசியின் குணயியல்பு ...........................!!!கருணாகர தொண்டமானின் தவப்புதல்வி..................எதற்கு அஞ்சாத வீரமங்கை.......................பத்திர காளிமீது பக்தி கொண்டவள் ...........................பத்தினியாள் பக்தியாள்............................சின்ன வயதிலேயே தந்தையை இழந்தாள் .................சினப்பனோடு சீராக வளர்ந்தாள்...............சின்னப…
-
- 0 replies
- 2.3k views
-
-
16 வயசில் பல ஆசை வருமே- இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா? திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி வெடிகுண்டை தன் மடியில் - காவி வீணே தன்னை கொல்ல நினைக்குமா? எப்படி ஆச்சு? ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- ! இப்படி நினைத்தாரே ஒருவர் -! உன்னால்-என்னால்-எவரால் எண்ணி பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே! இப்படி இப்படி -பாருங்களேன்! எவர் நினைத்திருப்பார் - இந்த இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று? ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்- மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-! பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர் அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ? எப்படி எப்படி - உம் பாட்டன் வயசுள்…
-
- 13 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாண கிழவனின் புலம்பல் கவிதை - இளங்கவி ராஜபக்க்ஷ மாத்தையா அடிசிட்டாராம் புடிச்சிட்டாராம் புலிகளையே மடக்கிட்டாராம்;என்று வெடியெல்லாம் வெடித்து அங்கே தமிழனை வீதியிலே போட்டிட்டாங்கள்.... வன்னி தமிழரெல்லாம் வாழ்வு இழந்து நிற்கையிலே அவசரமாய் தேர்தல் வைக்க அந்தக் கூட்டம் அலையுறாங்கள் அதுக்காய் வால்பிடிச்சு அங்கே இடம்பிடிக்க கறிக்கடை காகங்களாய் கண்டதெல்லாம் அலையுதுகள்.... வட்டுக்கோட்டை தீர்மானத்தில் ஈழமென்று தீர்வை வைக்க தமிழர்கள் எதிர்கட்சியாகி; எங்கள் ஈழத்தீர்வை சொல்லியிருந்தோம்... பழைய குருடி கதவை திறடி;என்று எங்கள் பழையவர்கள் மறுபடியும் பதவிக்கு ஆசைப்பட...... தமிழனை காக்கவென்று தரணியிலே அவன் உதிச்சான்.... …
-
- 14 replies
- 2.3k views
-
-
பாவலனா நீ..?...சீ....துா... தோளிலே துண்டிட்டு தோழனாகி நீ வந்தால் கட்சி தலைவனா நீ- உன்னில் காறி உமிழாரா..? குப்பைகளை கூட்டி உன்- இதய கூடையிலே போட்டு விட்டு நாற்றம் அடிக்குதென்றால்-உன்னில் நாறாமல் என் செய்யும்..? பட்டாடை கட்டி வந்த பா வரியை உதறிவிட்டு கவிதை இதுவென்று கருநெஞ்சே நீயுரைத்தால்- உன்னை கல்லால் அடிக்காரா காறி உமிழாரா..? சிலித்தெழுந்த வரிகளிற்கு சிரச் சேதம் செய்பவனே உன்னையா கவிஞனென்று-நீ உலகேறி பறையடிதாய்...?? நல்ல நாடகம் தான் நல்லாய் அரங்கேற்று கண்முன்னே நீ வந்தால்-உன்னை கல்லால் நானடிப்பேன்....! குறிப்பு..- ஒரு பத்திரிகைக்கு எழுதிய கவிதையை-அங்குள்ளவர் அதன் பொருளை வரிகளை சிதைத…
-
- 6 replies
- 2.3k views
-
-
வரலாறு. ---------------------------------------------------- தாயம் விளையாடிக் கடவுள் ஒருதடவை தன்னை மறந்ததனால் காலம் பெருக்கெடுத்துக் கரையுடைந்து தொடங்கியது வரல் ஆறு மறதிக் கருங்குழியில் மறைவுபெறும் மானிடமும் மற்றனைத்தும் வெறும் மடையிழந்த பாய்ச்சல்களே எறும்புகளின் புற்றானாலென்ன தேனீக்களின் கூடுகளானாலென்ன மனிதர்களின் நகரங்களானாலென்ன காலத்தின் கண்களில் இவையெல்லாம் ஒன்றே. எங்கே அந்த பபிலோனியா? எங்கே என் மொகஞ்சதாரோ ? பாலைவனங்களுக்குள் எத்தனை நகரங்கள் தூசியாய் போனது ? மசெடோனியாவின் மகாபுதல்வன் பபிலோனியாவில்மரித்தது விதியின் முரண்நகை. வீழ்த்திய நகரிலேயே வீழ்தான் இப்பேர்மனிதன். எங்கே உறங்குகிறாய் நீ அலெக்ஸாண்டர்?…
-
- 10 replies
- 2.3k views
-
-
உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தல் இறந்திருக்கும்.... @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை
-
- 10 replies
- 2.3k views
-
-
எனது அறையில் எனது இரவுகளில் எல்லாம் உயிர்பித்திருக்கிறது உனது அன்பின் கிருபையால்... உன் கூந்தலின் கருந்சாந்தெடுத்து பூசிய மேற்கூரையின் இருண்ட வெளியின் தனிமை தீர்க்க உன் வெண்பற்கள் வெண்மைகொண்டு வரைந்த நட்சத்திரங்கள் போதாதென்று சமைந்தது பிறைநிலா நீ வெட்டியெறிந்த நகத்துண்டுகள் சேர்ந்து கோள்கள் சில செய்தேன் முகப்பருக்கள் அளவு கொண்டு புருவங்கள் இணைந்து வானவில் பிறந்தது சுவற்றில் கண்ணீர் பெருக்கில் சமுத்திரங்கள் கலந்தது நதிக்கு வடிவம் தராது திகைத்தேன் சுழித்தாய் உதட்டை மார்பு குவியம் மலைத் தொடரானது வேர்வையில் நனைந்த ரோமங்கள் மழைக் காடுகளாய் மாறியது நெற்றிப் பொட்டை சூரியனாய் தந்துவிட்டு போர்வையினுள் புகுந்தாய் மெல்லினம் வல்லினமாய் மிகுந்து உன் பெண்மையி…
-
- 28 replies
- 2.3k views
-
-
புலத்து இளைஞர்களே புலம்பெயர் மண் இளைஞர்களே ! சற்று செவிமடுப்பீர் சொந்த மண்ணை ஏன் பிரிந்தோம்? சொந்த மண்ணில் என்ன நடக்கிறது? உம் இதயத்தை நீங்கள் கேட்பதுண்டா? சொந்த மண்ணில் எம் உறவுகள் அழியும் செய்தி உம் காதில் விழுவதுண்டா? இங்கே குழு மோதலால் எம் இனத்தை நீங்கள் அழிப்பது உள்ளம் உறுத்தவில்லயா? ஒர் உயிரைப் பறிக்கும் உரிமையை உமக்கு கொடுத்தவர் யார்? ஒர் உயிரை ஒர் நொடியில் பறித்து விடுகிறீர் எம் தமிழ்த்தாயின் கதறல் உம் காதில் விழவில்லையா? சுற்றி இருக்கும் உறவுகளின் வேதனை உமக்கு வேடிக்கையா? பழிக்குப் பழி தீர்ப்பதில்த் தான் உம் வீரம் உணர்கிறீரா? இக்கோர உள்ளம் எப்படிப் பெற்றீர்? புலம் பெயர்ந்த மண்ணில் நடைபெறும் வன்முறைகளைக்…
-
- 14 replies
- 2.3k views
-
-
நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... நண்பனென்ற அடையாளத்தில் நீயும் அட்டகாசம் செய்கையில் .. அவ்வப்போது சிறகடிக்கும் உன் விழிகளில் அடிக்கடி காதல் அரங்கேறுவதை எட்டி நின்று ரசிக்கத்தான் எத்தனை ஆசை எனக்கு .. உன்விழிகளில் நான் கண்ட காதலை நீ,... என் மொழிகளில் கேட்க வேண்டுமென அடம்பிடித்தது இன்றும் என்னில் அழியாமல் இருக்கிறதே .... வசந்தங்களில் மட்டுமே .. பூக்கள் பூக்குமாம்.. ஆனால்.. நீ மட்டும் எப்படி பெண்ணே .. வேனலில் கூட கவிச்சோலையாய் ... எப்பொழுதும் என்னில் ?.... கேட்டதும் நீ தானே .. அன்று ஆற்றோ…
-
- 10 replies
- 2.3k views
-
-
பாலி ஆறு நகர்கிறது 1968ல் எழுதப்பட்ட எனது முதல் கவிதை. இதை எழுதியபோது மல்லாவி என்ற வன்னிக் கிராமத்தில் கலகக் காரனாகத் திரிந்தேன். எனது கவிதைகளை பிரசுரிக்கும் அனுமதி கேட்டு ஆர்வலர்கள் எழுதுகிறார்கள். ஒரே தடவையில் 10 மேற்படாத எனது கவிதைகளை அனுமதி இன்றிப் பிரசுரிக்கலாம். அன்புடன், வ.ஐ.ச.ஜெயபாலன் பாலி ஆறு நகர்கிறது - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். …
-
- 4 replies
- 2.3k views
-
-
நினைவுகள் வருது நினைவுகள் வருது நனவாய் இருந்த நினைவுகள் இன்று கனவாய் வருது கடலின் அலைபோல் மழைபோல் பொழிந்து கவியாய் வருது பிறந்த மண்னில் தவழ்ந்த ஞாபகம் நினைவினில் வருது மயிலின் நடைபோல் நடைபயின்ற செம்மண்வாசம் நறு மணமாய்வருது கிளியின் மொழிபோல் தமிழ் சொன்ன முதல் ஆசான் நினைவுகள் வருது பொழியும் மழையில் ஆடும் மயில்போல் மழையில் நனைந்த நினைவுகள் வருது ஆலமரத்து விழுதில் ஊஞ்சல் ஆடிய நினைவு கடல்அலை போல் அடி வருது நிலாவின் முற்றத்தில் உறவுகள் சேர்ந்து கூழ் குடித்த நினைவுகள் கண்ணீராய் வருது திருவிழாக்காலத்தில் கன்னி அவளைக் காதல் செய்த நினைவுகள் வலியாய் வருது பள்ளி நாட்களில் தோள் தோள் நின்ற …
-
- 14 replies
- 2.3k views
-
-
மதிலொன்று மறித்துக் கிடக்கிது. கருங்கல்லாய் இருக்கலாம் காரிரும்பாய் இருக்கலாம் ஒருவேளை தேவலோகத்துச் சாமானாயுமிருக்கலாம் மதில் தெரியிது அதன் பலம் தெரியிது முன்னர்: பூசாரி வந்து குளை அடிச்சுப்; பாத்தார் பரியாரி வந்து மூலிகை வைச்சார் பாம்புக்கடி வைத்தியரும் ஒருக்கா வந்துதான் போனார் கைமருந்து பலிக்கேல்ல சீமையில் படித்த சிறப்புச் சிகிச்சைகள், கேரள மாந்திரீகர், மட்டக்களப்புச் சமாச்சரம், ஒண்டும் தான் பலிக்கேல்ல மதில் இப்ப மினுமினுப்புக் கூடிக் கிடக்கிது பூசாரி ஊத்திய பாலும் பஞ்சாமிர்தமும் காரணமாயிருக்கலாமாம்;: பேச்சுமிருக்குது கனகாலம் கதைக்காது புதிராய்க் கிடந்த ஊர்க் கிழவர் ஒருநாள் திடுப்பெண்டு சொன்னார் "உதுக்கும் ஒரு சாமானிருக்க…
-
- 18 replies
- 2.3k views
-
-
நீ தூரக்கிழக்கு, நான் வடமேற்கு இடையில் கடல், வானம் அலை, மழை தீவுகள் , திட்டைகள் எல்லைகள், சட்டங்கள் கடவுசீட்டுகள், காவல்கள் இவை தாண்டியும் வந்துதான் - போகின்றன சில பறவைகள், ஒரு பறவையின் பலம் கூட எனக்கில்லாமல் போகுமா போனாலும்தான் என் வாழ்வு முழுமை பெறுமா
-
- 14 replies
- 2.3k views
-
-
பதினைந்து வயது வாலைக் குமரியடி பார்ப்போரை மயக்கும் பருவ மங்கையடி அதனாலோ அத்தனை பேர் உன் அழகில் கண்மயங்கி உனைக் காண உச்சிப் பொழுதிலும் உனைத்தேடி வருகின்றார்???? ஒரு முறை உனைக் கண்டார் உன்மத்தம் கொண்டு உன் பின்னே வருகின்றார் ஊனின்றி உறக்கமின்றி உன்னில் மதிமயங்கி உன்னைப் பார்த்திருப்பார் உள்ளத்தெழும் உணர்வை உரைத்திட அனைவரும் முத்தமிழால் உனக்கு முத்தாரம் சூட்டிடுவார் சொக்குப் பொடிபோட்டு சொக்க வைப்பதில் நீ சுந்தரி சொல்லாடல் செய்து சூரர்களைக் கூட சுணங்க வைப்பதில் சூத்திரி சோலை மலர்விழியாள் உன் சோபை கண்டதனால் சொற்களால் உனைச் செம்மையாக்கிச் சுற்றி வருகின்றோம் கதைக்கள், கட்டுரைகள், கவிதைகளாக்கி கண்குளிரக் காண்கின்றோம் பதினைந்து ஆண்டுகள் முன் உ…
-
- 25 replies
- 2.3k views
-
-
யார் வீட்டுப் பிள்ளை இவள்? அடி பெருத்து... இடை சிறுத்து... வளர்ந்து நிற்பவளின்.... அழகு மேனியில் தெரிகிறது, பருவ வளர்ச்சியின் படிமங்கள்! அவளின் பருவக் குலையைப் பார்க்கப் பார்க்க... தாகம் எடுக்கிறது தானாக...! தேகச்சூடு அடங்கும்வரை பருகவேண்டும் அவளின் இள நீரை! வீசுகின்ற காற்றிலே அழகாய் மெல்ல மெல்ல அசைகிறது அவள் பச்சைக் கூந்தல்..! இளங்குருத்தின் வாசம் வந்து வெட்கத்தோடு அழைக்கிறது ஏறி வா என்று...! அவள் இடை அணைத்து... அவளுடல் மீதேறி... யாரோ கட்டியதை திருட்டுத்தனமாய்... மெல்ல அவிழ்த்திறக்கி சத்தமின்றி மொத்தத்தையும் ரசித்து...குடித்து...வெறித்து.... திகட்டும் போதையில் திளைத்து, பின் களைத்துப் போக..... அவள் தோப்பில் அவளோடு, கொஞ்ச நேரம் தூங்கினாலும்…
-
- 18 replies
- 2.3k views
-
-
அம்மா அம்மா நீதான் எந்தன் உயிரம்மா..... கருவை உயிராக்கி சுமையை இதமாக்கி வலியை சுகமாக்கி உதிரத்தைப் பாலாக்கி அன்பை உணர்வாக்கி மொழியைத் தமிழ்ழாக்கி என்னை உருவாக்கி உன்னை மெழுகாக்கி என்னை ஒளியாக்கிய என் அன்புத்தாயே_________________
-
- 18 replies
- 2.3k views
-
-
மூக்கறையனிசம். முன்னுரை: தேசம் என்றான் ஒருவன் தேசியம் ஒரு கற்பிதம் என்றான் இன்னொருவன் தேவையில்லை இவையெல்லாம் மாயையென்றான் மூன்றாமவன் முதலாமவனுரை: என்னிடம் தேசமில்லை தேசம் எனக்குத் தேவையில்லாதிருந்தது இருப்பினும் தேசம் உள்ளவர்கள் என்னுரிமைகளை மறுத்தார்கள் என்னுரிமைகளை மீட்டெடுத்து உயிர் கொடுக்க எனக்குமோர் தேசம் தேவையென தங்களையறியாமலே எனக்கு அறிவுறுத்தினார்கள் தமக்கெனத் தேசமிருந்ததால் என்னை ஒடுக்கியவர்கள் தேசியத்தை அவர்கள் என்மீது திணித்தார்கள் தேசம் என்பது என் இருத்தலின் தேவை தேசம் இன்றி என்னால் தப்பி வாழமுடியாது ஆகையினால் நான் தேசம் வேண்டிப் போராடுகிறேன். யாருக்கெனவும் ஒரு தேசமின்றி உலகம் முழுவதும்…
-
- 4 replies
- 2.3k views
-
-
எது சுகமோ? தொடர் - 2 அன்னையவள் அருகிருந்து - என் அன்னமே என அணைத்தால் அந்நேரம் அவள் அணைப்பில் கண் அயர்ந்தால் அது சுகமா? கண்களிலே கதைபேசி காரியத்தில் ஒருமிக்கும் கண்மணிகள் கரமிணைந்தால் காதலுக்கு அது சுகமா?
-
- 12 replies
- 2.3k views
-
-
முன்றில்வேம்பு வ.ஐ.ச.ஜெயபாலன் நினைவுள்புதைந்த வேப்பம் வித்து திறக்கும்இணைய ஓவியத் தளமாய் நெஞ்சுள்பசும் குடை விரிக்க காலத்தைமீட்டு வாழ்ந்தேன். முலை அமுது உண்டேன். நிழலில்தவள்ந்து மண் விழையாடினேன். என் அயல் சிறுமி `குஞ்சாமணியை` எங்கேதொலைத்தாள் என்று வியந்தேன். பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன். கோவிற்பொங்கலில் நீறு பூத்த தணற் பாவைகளாய் வெளியேநின்ற சிறுவரை எனது பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு அதிர்ந்தமனசை 'அது அது அவர் அவர் ஊழ்வினைப்பயன் ' என தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன். எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன் அம்மணமாக மாமா இருந்ததை கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன். ஆண்குறிவிறைக்க நோய…
-
- 7 replies
- 2.3k views
-
-
நட்பு நாளொரு பொழுதாய் நடைமுறை உலகை நானும் அவளும் காணப் புறப்பட்டோம். நல்ல நண்பர்களாய்… ஒரு நாள்… நிலவை ரசிக்க நினைத்தோம். ஆனால்.. இரவுவரை தனித்திருக்கும் தைரியம் நமக்கிருக்கவில்லை. நிலவு வரும் வரை நாமிருக்க நம் கலாச்சார கண்களும் நம்மை விட்டுவைக்கவில்லை. இன்னொரு நாள்… கடற்கரை சென்று காலாற நடந்து காற்று வாங்க நினைத்தோம். ஆனால்… நம் கைகளைக் கோர்த்தபடி காலடி பதித்து அலை நுரை ரசிக்க முடியவில்லை. அவள் தடுமாறி அலைக்குள் விழுந்த போதும் என்னால் அவளை அணைக்க முடியவில்லை. கடலோ அவளை நனைத்துப் போனது. மூழ்கப் போனவளை மீட்டு வந்தது கண்டும் எங்களுக்குள் ஊடல் என்று ஊர் சொன்னது. அலை கூட அ…
-
- 6 replies
- 2.3k views
-