கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கடலம்மா கடலம்மா கருணை கொண்ட தாயம்மா அலை மடி மீது தாலாட்டி அமுதூட்டிச் சீராட்டி வளர்த்திட்ட சேயும் நானம்மா…! முடிவில்லாப் பயணங்கள் உன் மடிமீது நாம் செய்தோம் அளவில்லாப் பொறுமை தந்து அருள்பவளும் நீயம்மா…! ஆதிக்க வெறியர்கள் அடுக்கடுக்காய் குண்டுதள்ள உன் வயிற்றில் அவை தாங்கிக் காத்தவளும் நீயம்மா..! அமைதியின் கோலமாய் சீரான அலை கொண்டு கரையோடு மோதுபவளே அழிவில்லா அழகு தந்து அகம் மகிழ அழைப்பவளே அழிவுக்கு வகை செய்ய ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா…! இன்று…. கணமும் எங்கள் தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த ஏக்கத்தின் முதலாய் நீயம்மா…! உறவுகளின் உயிர் குடித்த பூதத்தின் விளை நிலமாய் ஆகினையே ஏனம்மா…?! மடி தாங்கிய மகவுகளின் மகத்தான் உயிர் குடித்து சாதிக்க நினைத்ததுவும…
-
- 5 replies
- 533 views
-
-
பிரபாகரனைப் பற்றிப் பேச உனக்கு தகுதி உண்டு என்றால்.. பிற நாய்களைப்பற்றி கவலைப் படாதே..! ************************************ மு.வே.யோகேஸ்வரன் ********************************* விடுவது நாங்கள் மூச்சுத்தான் நண்பா.. ஆனால் விதைப்பது மண்ணில் என்ன தெரியுமா? தமிழின் விதை! வாழ்ந்தான் தமிழன் செத்தான் என்பது வரலாறு அல்ல..ஒரு செய்தி..! பிறந்தான் தமிழன்...வீரம் செழிக்க வாழ்ந்தான் போராட்டக் களத்தில் மடிந்தான்.. என்பதே வரலாறு! பிரபாகரனைப் பற்றிப் பேச உனக்கு தகுதி உண்டு என்றால்.. பிற நாய்களைப்பற்றி கவலைப் படாதே..! பிரபாகரனைப்பற்றி அறிய நீ நினைத்தால் .. வரும் சோதனைகளை எண்ணி வருத்தப் படாதே.. பெரும் வீரர்களின் வரலாற்றைப் பற்றி …
-
- 3 replies
- 1.1k views
-
-
கடவுளுக்கு...! மூடிக் கிடக்கின்ற சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விட்டால்..., மண்ணின் குரலுமக்குத் கேட்கக் கூடும்! கீழிறங்கி, புழுதி மண்ணின்மேல் நடந்து வந்தால், மானிடத்தின்-- எழுச்சிகளை வீழ்ச்சிகளை முற்று முழுதாக நீரறிதல் கூடும். --கூட, நீர்...வருவீரா? 26.7.68 வா எாிகின்ற-- குறுமெழுகு வாிசை ஒளி நிழலில், ஒப்பாாிக் குரல் கேட்டு இந்தப் *பெட்டிக்குள் நீயேன் கிடக்கின்றாய்? முகம் மூடும், துப்பட்டி நீக்கி-- எழுந்துவிடு!; என்கூட வந்துவிடு! *பெட்டி--சவப்பெட்டி 2.8.68 உறக்கம் சிலுவை எழுந்துநிற்கும் வெள்ளைக் கல்லறைகள் சூழ்ந்திருக்க, கால்மாட்டில் பட்டிப் பூமலர்ந்த *சிப்பிச் சிலுவை மேட்டின் கீழ்-- மண் கு…
-
- 3 replies
- 1.6k views
-
-
அக்கா நீங்களுமா....? Jul 3, 2013 வாழ்வு வசமாச்சுதென்று பாடிச் சென்றான் ஒருவன் நாசமாப் போச்சுதென்கிறேன் நான் இருதலைக் கொள்ளியாய் எம் தேசம் நம்பிக்கைகள் நரம்பறுந்து போயின எனக்கு ஊமைக்கனவுகள் தொடர்கின்றன. வெள்ளை மாளிகையையும் செங்கோட்டையையும் நம்பி எங்கள் வாழ்வு துக்கத்திலும் ஏக்கத்திலுமாய் கழிகிறது இரவுகள் வெடியோசைகள் கேட்கவில்லை விசும்பல்கள் தொடர்கின்றன. அழுதாலும் புனர்வாழ்வாம் நிமிர்ந்து நிற்றல் குற்றமென்றா சொல்கிறார்கள் உறைந்து கிடந்த ஊத்தைகள் எல்லாம் உன்மத்தம் கொண்டு ஆடுகின்றன. சாதிச் சங்கங்கள் பிரதேசப் பெயர்க் குழுக்கள் மூலை முடுக்கெங்கும் வக்கிரங்கள் என்ன இழிவடா எங்கள் இனத்துக்கு அன்று முளாசியெரிந்த நெருப்பில் இந்தக்குப்பைகள் எரியாமல் போன மாயம் என…
-
- 1 reply
- 695 views
-
-
வணக்கம் நண்பர்களே, ஊடக உறவுகளே, ஈழத்தமிழனின் வலிகளை சுமந்து நாம் எல்லோரும் ஒற்றுமையோடு பணி செய்யவேண்டும் என்ற ஆசை உங்கள் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நான் அறிவேன். இந்த வருடம் ஈழத்தமிழினம் இதுவரை காலமும் அனுபவித்திராத மிகப்பெரிய " மனிதப்பேரவலத்தினை" அனுபவித்துவிட்டது. இன்னும் முட்கம்பிகளுக்குள் அனுபவித்தும் கொண்டிருக்கிறது. இவற்றையும் ஆவணப்படுத்த "எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது" என்ற பாடலில் என்னுடைய கருத்துகளை சொல்லி இருக்கிறேன். முதலில் பாடலைக் கேளுங்கள், தொடர்ந்து எங்கள் பாடல் தொடர்பான ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள். இந்தப் பாடலை எந்த அரங்கத்திலும் நீங்கள் பாடலாம். இசை கோர்ப்பு தேவைப்படின் மின்னச்சல் அனுப்புங்கள். மிக்க…
-
- 3 replies
- 821 views
-
-
முகநூல் சுயவிளம்பரம் செய்வோருக்கு சுதந்திரமான வெளி இங்கு கட்டுப்பாடின்றி கண்டபடி புளுகலாம் அண்டப் புளுகென்ன ஆகாசப் புளுகென்ன அனைத்தையும் புளுகலாம் அது செய்தேன் இதுசெய்தேன் என தன்னைத் தானே தம்பட்டமும் அடிக்கலாம். விபரமும் சொல்லலாம் வீண் வாதமும் புரியலாம் வீட்டிலே இருந்தபடி வெளியுலகுக்கும் சொல்லலாம் ஆண்பெயரில் பெண்ணும் பெண் பெயரில் ஆணும் ஏமாறி ஏமாற்றிப் பித்தலாட்டமும் செய்யலாம். இங்கே கன்னியரும் வருவார்கள் காளையரும் வருவார்கள் கருத்துப்பரிமாறி காதலும் கொள்வார்கள். தாய் தந்தையரை ஏமாற்றி தாமும் ஏமாறிக் கண்ணீர் வடிக்கக்; கன்னியரும் வருவார்கள் காதலும் உண்டு காமமும் உண்டு காமலீலைகள் வீசும் காமுகரும் உண்டு கணவனைவிட்டு காமுகரை நாடுவோரும் மனைவியை…
-
- 4 replies
- 786 views
-
-
எல்லாம் உயிர்பெறும் ச.ச.முத்து எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். வன்னிமண்ணின் மொத்தஅழகும் நந்திக்கடலின் அலைவடிவும் அழகான என் தேசத்து எழில்அனைத்தும் அவன் இல்லாமல் எப்படியாய் உறைந்து கிடக்குது பாருங்கள்.-கால் படர்ந்த கல் எழுந்து அகலிகை ஆனதுபோல் அந்தக் கவிஞன் எழுதி என் தேசம் எழுந்து வரட்டுமே. மூச்சும் பேச்சும் இன்றி ஒரு மூலையில் கிடந்துவி;ட்டு போய்விடலாம்.-ஆனால் அவன் பாட்டும் சந்தக் கவியும் இன்றி எப்படியாய் காலம் இனிக் கரையும்.? எதிரிராணுவத்தில் சின்னஓய்வுப்பொழுதில் …
-
- 2 replies
- 939 views
-
-
மொழியில் தமிழ் அழகு தமிழுக்கு கவி அழகு குரலுக்கு குயில் அழகு குயிலுக்கு குஞ்சு அழகு நடைக்கு அன்னம் அழகு அன்னத்துக்கு வெண்மை அழகு நடனத்துக்கு மயில் அழகு மயிலுக்கு தோகை அழகு இசைக்கு யாழ் அழகு யாழ் மண்ணுக்கு பேச்சு அழகு கிளிக்கு சொண்டு அழகு சொண்டுக்கு கொவ்வை அழகு கொம்புக்கு மான் அழகு மானுக்கு புள்ளி அழகு கூந்தலுக்கு பெண் அழகு பெண்ணுக்கு தாய்மை அழகு உழைப்புக்கு ஆண் அழகு ஆணுக்கு தோள் அழகு எனக்கு நீ அழகு உனக்கு நான் அழகு
-
- 3 replies
- 1.3k views
-
-
படித்ததில் மனதை நெருடியது... ஆழியாள் அவுஸ்ரேலியா என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் – மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி வடிவு அன்ரிஇ வனிதா அன்ரி சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் மீன் விக்கப்போன செல்லம்மா பாட்டியை மணிக்கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள். பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்கு போனா. சேகர் சித்தப்பா காணாமல் போனார். …
-
- 3 replies
- 1.5k views
-
-
தூங்காதே கண்மணியே-நீயும் தூங்காதே..... தூக்கம் வந்தாலும்-நீயும் தூங்காதே..... தமிழுக்கு நாடுவரும்-வரை தூங்காதே..... பகைவனும் வந்திடுவான்-அன்பே தூங்காதே..... பச்சைப்பிள்ளை என்றும்-பாரான் தூங்காதே..... உறவுகள் இழப்புக் கண்டும்-நீயும் வெதும்பாதே..... அவர்கள் உதிரம் எழுதும்-எம் தாய் நாடே..... பெற்ற அன்னை அவளும்-அன்பே நான்தானே..... என்காயங்கள் மாறுது-கண்ணே உன்வரவாலே..... களம் சென்ற தந்தைவரும்-வரை தூங்காதே..... வீரனின் புதல்வனும்-அன்பே நீதானே..... விரைவில் வளர்ந்துவா-காப்போம் நம்நாடே.....
-
- 11 replies
- 1.7k views
-
-
மறவர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்படை..! பாடை ஏகும் நாள் கணித்து மணித்துளியும் செத்தே வாழும் மனிதருள்.. சாவுக்கு மணி சமைத்து இனம் மண் காத்த படை தான் கரும் படை..! கந்தகப் புகைக்குள் உயிர் மூச்சு வாங்கி உடலை காற்றாக்கி சுழன்றடித்த புயல்கள் எதிரி படைகள் சிதறடித்த வெற்றிப் படை தான் எங்கள் கரும் படை..! பூமியில் வாழத் துடிக்கும் மானுட மனங்களிடை இன மானம் காக்க சாகத் துடித்த அர்ப்புதங்கள் நிறை அந்தப் படை தான் மில்லர் வழியில் வந்த கரும் படை..! தமிழர் படை தான் புலிப் படை அதில் தனிப் படை தான் கரும்புலிகள் படை..! யூலை 5 இல் உதித்த கரும் படை..! ஆக்கம்- ஜூலை-05,2015
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறுவயதுகளில் வாழ்க்கையின் வழிகளில் காலம் ஒரு கவிதையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது கனவில் தோன்றும் கவிதைவரிகளைப்போல வாழ்தலின் இனிமைகளைமட்டுமே கண்களைத்திறந்தபடி ரசித்துத் திரிந்தேன் உடலின் ஒவ்வொரு நுண்ணிய அணுக்களிலும் புகுந்து இயற்க்கை நான் என்னும் ஆன்மாவை வனைந்து கொண்டிருக்க காலமடியில் இளமை வழிந்தோடிக்கொண்டிருந்தது.. அணல் எறிக்கும் புழுதி வீதிகளில் உலாவித்திரியும் என் பாதங்களை பூமித்தாய் வாஞ்சையுடன் நீவிக் கொடுப்பாள் அப்பொழுதெல்லாம் பூமிக்கு நான் பாரமாக இருப்பதாக உணர்ந்ததில்லை... அம்மாதரும் முத்தங்களை வாங்கியவாறே எதற்க்கிந்த வாழ்தலென்ற புரிதல் இல்லாவிட்டாலும் நிறைவாக அறிதல் குறித்த தீராப்…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்த மலைகளுக்கப்பால் தான் நான் இருக்கிறேன் மலைமுகட்டில் ஊற்றெடுக்குமிந்த நதி இந்த மலைகளுக்கப்பால் சமவெளிகளை விளைவிக்கிறது பகலிரவு காலத்தை நகர்த்தும் உக்கிரச் சூரியன் உதிப்பதும் இந்த மலைகளுக்கப்பால் இருந்தே மேய்வன விரும்பும் புல்வெளிக்காடும் தவழ்வன பொழியும் மழைக்காடும் இந்தமலைகளுக்கப்பால் தான் சந்திக்கின்றன ஒலியின் மொழியை நூற்றாண்டுகளாக எதிரொலித்தபடியுள்ளன பள்ளத்தாக்குகள் இந்த மலைகளுக்கப்பால் காற்றும் நிலமும் நீரும் ஆதிநிர்வாணாத்தோடிருக்கும் முடிவிலா ஆரண்யமிருப்பதும் இந்த மலைகளுக்கப்பால் தான் இரவு அந்தகார சுவையுடன் இருளாகவேயுள்ளது இந்த மலைகளுக்கப்பால் கடவுள் எல்லைக்கோடு அகதிகள…
-
- 14 replies
- 1.7k views
-
-
தாரிலும் சுண்ணாம்பிலும் குறியிட்டு செத்த கிளுவங் கதியாலிலும் பனைமட்டை வேலி இடுக்கிலும் கொழுவிவைத்த மூக்குப்பேணியெல்லாம் ஒரே உலோகத்தினால் ஆனவைதான். திசைகள். வடக்கென்றும், கிழக்கென்றும் என்னதான் கதியால் போட்டுக் கூத்தாடினாலும் ஆண்ட பரம்பரை மகுடக் கனவு எல்லா தரப்புக்கும் அழிந்து போகாதவைதான். யாழாதிக்க வசந்தமும் கிழக்கு மேட்டின் முல்லையும் ஏகபோக ஆளுகையின் வெண்புறாவும் கறுப்பு வெள்ளைக் காலத்துக்கும் முன், வெளியிலாடிய வட்டக்களரி, வரப்பிலாடிய கும்மி, கோல், அலையில் பாடிய அம்பா காலத்துக்கு முன்பிருந்தும் இன்றைய உய்யிலாலா வண்ணங்கள் வரை ஒரே தோலினாலானவைதான். வசந்த முல்லை போலே வந்து எத்தனை புறாக்கள் சதிராடினாலும், நடை மாற்றினாலு…
-
- 6 replies
- 1.1k views
-
-
விரல்களுக்கிடையில் புகைக்கும் வெண்சுருட்டைப் போலவே... என் இதயமும் கருகிச் சிறுக்கிறது! புகைந்த சாம்பலைப் போல... என் நினைவுகள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறது! எல்லாம் தீர்ந்து... மூன்றாவது விரல் வந்து தூக்கி வீசும்வரை... அதன் போதையிலேயே கிடந்தேன்! என்றாவது ஒருநாள்... அது எனைச் சாகடிக்கும் எனத் தெரிந்திருந்தும், அதைத் தாங்கிப்பிடித்திருந்தேன்! நெருப்பும் புகையும் பழகிவிட்டது! சுட்டாலும் மீண்டும் மீண்டும் பற்றிக்கொள்ளச் சொல்லுது மனசு! உள்வந்து செல்லும் புகையோடு என் பெரு மூச்சுக்களும் ஒருநாள் அடங்கிப்போகும்! அதுவரை இருட்டில் இந்த சிகப்பு வெளிச்சம் துணையிருக்கும்!!!
-
- 18 replies
- 1.3k views
-
-
முட்டையும் விந்தும் முட்டிக்கொள்ள கருக்கொள்ளும் நுகமது கருப்பையில் வளர்ந்திட்டால் வெளிவருவது நாய்க்குட்டி..! கலப்பில் அதை பலவாறு கலந்து பிறப்பித்தால்.. கட்டியதை கூட்டில் வளர்த்திட்டால் Pedigree போட்டு மெத்தையில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் உயர் சாதி..! கலப்பில் அதை இயற்கையோடு கலக்கவிட்டால் பிறப்பால் அதை தெருவில் அலையவிட்டால் தாய்மடி பாலுண்டு குப்பைமேட்டில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் பற நாய்..! குடிசையைப் பார்த்து மாடி சொல்லும் நீ.. கீழ் சாதி..! உழவைப் பார்த்து உத்தியோகம் சொல்லும் நீ.. கீழ் சாதி..! இதை வேறு பகுத்தறிந்து சொல்லும் நீ..தலித்தியவாதி..! அதை ஒழிக்க கூட்டம் போடும் நீ.. அரசியல்வாதி..! உண்மையில் ஆங்கே இயற்கையின் …
-
- 8 replies
- 1.4k views
-
-
மருத்துவரின் மனச்சாட்சி...... இளங்கவி - கவிதை குண்டு மழையில் நின்று..... குருதி ஆறு பாயக்கண்டு..... தம் தூக்கம் தனை கலைத்து பல உயிர் காத்தவர்கள்...... இன்று அவர் பின்னால்...... தலையை குறிபார்க்கும் துப்பாக்கி..... நீயும் புலியா?.... எனும் கேள்விக்கணை..... இப்படிச் சொல்லெனும் பயமுறுத்தல்...... இல்லையேல் கொலையின் அச்சுறுத்தல்...... இப்படி அனைத்தும் நிற்க,..... அதிகாரமோ மிரட்டி நிற்க..... அவர் எப்படி உண்மை சொல்வார்...! தம் உறவுகளின் உயிரைகொல்வார்...! இறுதிவரை தமிழுக்காய் சேவைசெய்த அற்புதர்கள்...... இன்று எதிரியின் கைகளிலே சிக்குண்ட நம் காப்பரண்கள்..... இன்னும் பல உயிர்காக்கும் சேவைகொண்ட மருத்துவர்கள்..... …
-
- 22 replies
- 2.5k views
-
-
நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர் மீண்டும் உருப்பெறாத கனவுகள் இரவின் நடு நிசியையும் தாண்டி வருகின்றன கைகள் முளைத்த பல கனவுகள் கழுத்தையும், குரல்வளையும் நெரித்து கொல்கின்றன என் கனவுகளுக்கு மொழிகள் இருப்பதில்லை நிறங்கள் இருப்பதில்லை சத்தம் இருப்பதில்லை மெளனம் நிறைந்த கனவில் நேற்றைய மனிதர்கள் வந்துபோயினர் அவர்களின் கேள்விகள் அவர்களின் ஏமாற்றங்கள் அவர்களின் துயரங்கள் அவர்கள் சொல்லும் உண்மைகள் எதற்கும் ஒலியிருப்பதில்லை ஆயினும் உயிர் துளைத்து ஓராயிரம் யுகங்களைக் கடக்கும் வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர் வலிய கனவொன்று இரவு கடக்கும் ஒவ்வொரு நாளிலும் நான் அச்சமுறுகின்றேன் கண்கள் மேல் படர்ந்த கனவின் சுமையில் பகலின் பொ…
-
- 7 replies
- 1.2k views
-
-
நான் இறந்தே போனேன் ஆனால் ... என் இதயம் துடி துடிக்க. நான் பேச்சு அற்று கிடந்தேன் ஆனால் ... எனக்குள் குரல் ஒலிக்க நான் பார்வை இன்றி கிடந்தேன் ஆனால் ... வெளி உலகை உள்ளூரப் பார்த்து நான் அசைவின்றி கிடந்தேன் ஆனால் ... கனவு என்னை தொலை தூரம் கொண்டு செல்ல நான் இறந்தே போனேன் ஆனால் ... உயிராய் ... உயிராய் இறந்தேன்.
-
- 5 replies
- 949 views
-
-
சாம்பல் பூக்களின் கண்ணீரை திருடும் தேசமிது .. வெந்து வடியும் ஊழியின் பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது இயலாமையின் ஓலங்களின் மீது வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது.. ஒ கட்டியக்காரர்களே.. எங்கு போனீர்கள் ? சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்? கண்ணீரால் நிரம்பிய எங்கள் வாசல்களில் கால் நனைத்தீர்களே.. நீரருந்தி நிமிர்ந்து நல்ல உணவருந்தி இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு ஒப்புதல் அளியுங்கள்.. பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் தேவதைகள் சிறகு விரிப்பதாக வரைவுகளை எழுதுங்கள்... இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு.. பேரமை…
-
- 2 replies
- 749 views
-
-
இணைய பரந்தவெளியில் .. பல்லாயிரம் முகவரியில் .. பாமரன் முதல் பண்பாளன் வரை .. தேடி அலையும் தேடலில் ... கூகுளில் மூழ்கி யாழில் மிதந்தேன் .. என்ன ஆச்சரியம் அதிசய தீவா.. அல்லது மூழ்கிய குமரிகண்டமா.. எங்கும் தமிழ் ..எதிலும் தமிழ் .. நெஞ்சம் நிறைந்த தமிழ் என்னை ... நிலை குலைய வைத்த தமிழ் .. நானே என்னை தேடிய தமிழ் .. என்னை நானே வளர்க்க உதவிய தமிழ் .. எல்லாம் ஒருங்கே கண்டேன் உலவி யாழில் .. வணக்கம் வைத்து அழைப்பதில் இருந்து .. அழகா விருந்தினரை சுற்றி காட்டி .. எங்கு நீங்கள் என்ன தமிழ் படிக்கலாம் .. என்று அறைகள் பிரித்து அடுக்கடுக்கா .. பல சுவை தமிழ் படைத்து நிறைந்திருக்கு .. யாழ் உலாவி ... தமிழ் தோன்றல் முதல் தேசியம் வரை .. தமிழை அழகா செதுக்கி வைக்க உளிகள் பல ..…
-
- 10 replies
- 1.1k views
-
-
எனது கற்பனை மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம் தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம் முத்தென முத்தெனப் பிறந்தது அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் கொடியினில் கொடியினில் புூக்கவில்லை கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம் துணையெனத் துணையென நாம் கண்ட பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் அரிதென அரிதெனப் பலர் சொன்னார் அதுவும் இன்று உருவாச்சு அரியணை அரியணை ஏறியது ஐ. நா சபையில் அமர்ந்திடவே துணையெனத் துணையென நாம் கண்ட துணைகள் மீண்டும் திரும்பாது துணையெனத் துணையெனத் தானிருப்பாள் என்றும் என்றும் எம் தமிழ் அன்னை. உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரை…
-
- 12 replies
- 2.6k views
-
-
மாறிவிடு தமிழினமே அநியாயச் சிங்களத்தின் ஆக்கினைகள் பொறுக்காமல் அந்நியத்தை வந்தடைந்த அன்பான சோதரரே அதிகாரச் சிங்களத்தின் அடக்குமுறை தாங்காமல் அகதிகளாய் புலம்பெயர்ந்த அன்பான உறவுகளே அந்நியத்தில் நீர்செய்யும் அழுக்கான செயல்கள்தந்த கவலைகளை இறக்கிவைக்க கண்ணீரால் எழுதுகிறேன் புலம்பெயர்ந்த மண்ணில்நீh புரிகின்ற அராஜகத்தால் புண்ணான மனத்துடன்நான் புலம்பியிதை எழுதுகிறேன் சீருடனே வாழுமுந்தன் சிறப்பினைநான் காணவந்தேன் சில்லறைச் செயல்கண்டு சினந்துநான் எழுதுகிறேன் குடும்பம் போல்நீங்கள் கூடி வாழாமல் குழுக்கள் பலசெய்து குழம்புவதும் முறைதானோ அண்ணன் தம்பியாக அனுசரித்து வாழாமல் அடிதடியில் இறங்கிநீரும் அழிவதுவும் …
-
- 7 replies
- 1.7k views
-
-
சின்ன சின்ன கவி சொல்ல வந்தேன் வெண்ணிலாவே உன் வெண்னையினால் என் உயிர் சிதைந்தது வெண்ணிலாவே நட்ச்சத்திரங்கள் உன்னைப்பார்த்து கண்சிமிட்டுது வெண்ணிலாவே அந்த கண்சிமிட்டை எப்படித்தான் தாங்குறாயோ வெண்ணிலாவே பொறாமை கொண்ட கருமுகில்கள் உன்னை மறைக்கிறது வெண்ணிலாவே கருமுகில்கள் மறைக்கும்போதுதான் உன் உடையை மாத்துகிறாயா சொல்லு வெண்ணிலாவே வாணில் உள்ள வால் வெள்ளிகள்தான் வெண்ணிலாவே உனக்கு காதல் தூது செய்கின்றதா சொல்லு வெண்ணிலாவே உயிரோடு உயிர் சேர்ந்தால்த்தான் காதல் வெண்ணிலாவே காதலிலே தோல்வியுற்றால் மரணம் தானா பதில் சொல்லு வெண்ணிலாவே
-
- 4 replies
- 1.4k views
-
-
எனக்குமொரு ஆசை --------------------------- தீப்பற்றி உரசிப் போகும் - உன் ஞாபகத் தீண்டல்கள் தீப்பிழம்பாய் எரியும் என் இதயத்தில் - சிறு ஆறுதல் நீரை ஊற்றும் அடிவானத்துக்கும் அப்பாலும் காணவில்லை -உன் இதயத்தின் ஆழம் அருகினில் இருக்கின்றாய் என்பதன்றி -வேறு புரிதல் எதுவும் இல்லை கண்களின் சிமிட்டலில் - என்ன மர்மத்தை வைத்திருக்கிறாய் -என் காதல் அங்கு ஒட்டிக்கொண்டிருக்கிறதே அங்கத்தின் அசைவுகளில் அடைகாத்திருப்பதைப்போல ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன் உனை விட்டு வெகுதூரம் விலகிப்போக தளும்பி வழியும் மதுக்குவளைபோல -என் இதயமும் உனை இறுக்கிக்கொள்கிறதே சொல்லிவிடு -உன்னைக் காதலிகிறேன் என்று சொல்லிவிடு அறுத்துப் போட்…
-
- 8 replies
- 1.6k views
-