Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் இதயமே எங்கு செல்கிறாய் என்னை பிரிவதில் இன்பம் கொள்கிறாய் தன்னம் தனிமையில் நான் தவிக்கின்றேன் எந்தன் இளமையை இன்று வெறுக்கின்றேன் அடி பூவாய் வந்தாய் புயலாய் சென்றாயே புரியவில்லை சகியே ...... இது நியமா என்று நிழலினை கேட்கிறேன் விடியவில்லை சகியே ............ கண் மூடி வாழ்கிறேன் கனவில் கண்ணோடு வாழ்கிறாய் நினைவில் அடி பொய்யாகி போனதே உறவு - பெண்ணே மெய் தானா உந்தன் பிரிவு என் மெய்யான சோகம் உன் மனம் அறியவில்லை அன்பே உன்னை சுடும் வரை நீ வெயிலென இங்கு எரியும் நிலவு நானே அன்பே ஆசை என்னும் வலியுடனே நடை பிணமாய் தெருவில் திரிகிறேன் அடி காரணம் அற்று கழட்டி விட்…

  2. பிள்ளைகளின் மரணம் நடுரோட்டில் இரத்ததால் குதறப்படும் குடும்பங்கள் உலகம் கண்டுகளித்த இனப்படுகொலைகள் கொடூரர்களின் ஆட்சி முன்ஜென்ம பாவங்கள் ஏதுமறியா அகால மரணங்கள் போராளிகளின் வீழ்ச்சி விவசாயிகளின் கண்ணீர் ஏழைகளின் வயிற்றடுப்பு பணம் பணமென பேயாய் அலையும் பதர்கள் தீயின் நாக்குக்கு தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்) பிஞ்சுகளை சிதறடிக்கும் குண்டுகள் அப்பாவிகளை நோக்கியே நீளும் ஆயுதங்கள் காமத்திற்கு இரையாகும் பால்முகங்கள் கழுத்தறுக்கப்பட்ட கனவுகள் இவற்றைக் கண்டு நாணாதவன் கடவுளெனில் நானும் கடவுள். http://aazhkadal.blogspot.fr/2012/01/blog-post_28.html

  3. காலுடைந்த ஆட்டுக் குட்டியும் சிறுமியும் நொந்து போன நாட்களைத் தனது சின்னஞ்சிறு தோள்களில் சுமந்தலைந்த சிறுமி காலுடைந்த ஆட்டுக்குட்டியைக் கீழிறக்கி வைத்துவிட்டு மண்தெருவில் சிந்திக் கிடக்கும் நெல் மணிகளைக் குடிசைக்குள் காவிச் சென்றிட நினைக்கிறாள் முன்பெனில் வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து அவளது பிஞ்சுக் குரலெட்டாத் தொலைவு வரை திரிந்து உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும் அம்மாவுக்காகக் காத்திருப்பாள். அம்மா திரும்பி வரும் வேளை ஒரு முயல் குட்டியை ஒரு செம்மறியாட்டு மந்தையை ஒரு அபூர்வப் பறவையை விழிகளால் துரத்தியவாறு மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே அலைந்து கொண்டிருப்பாள் அல்லது நாரைக் கூட்டங்களுக்குக் கையசைத்து விடைகொடுத்தவாறு அவை சென்று …

  4. மனிதம் செத்து விட்டதோ – என் மனம் சொல்கிறது மனிதம் செத்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள என் மனம் குறுகுறுக்கிறது . என் செய்வேன் எனக்கென்று பேச யாருண்டு எங்களுக்கென்று எங்கே நாடுண்டு எவரிடம் கேட்பேன் நீதி..! என் குடும்ப சுமையை இறக்குவதற்காக – என் தலைமேலே நான் ஏற்றிய சிலுவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது தான் மனிதாபிமானமற்ற அரக்கர்களிவர்கள் என உணரவைத்தது. இதைவிட என் குடும்பத்தோடு எனது நாட்டிலிருந்து … பட்டினியால் செத்திருக்கலாமோ என எண்ணுகிறேன். ஒரு பச்சிளம் குழந்தையை நான் கொண்றேன் என்று பழி என்மீது விழுந்தது. அந்த பிள்ளையினால் தானே எனக்கு கிடைத்தது வாழ்வு நானேன் கொல்ல வேண்டும். பால் குடிக்கும் ப…

    • 0 replies
    • 515 views
  5. எங்கேயோ கேட்கிறது அந்த முனகற் சந்தம்! காரிருள் கவ்விய பொழுதில்... ஈருடல் தழுவிய நிலையாய்... யாருமறியாமல் நடக்கிறது கதகளி! கையில் அகப்பட்டதையெல்லாம் அள்ளியெடுக்கிறான் திருடன்! மெய்யில் வசப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொடுக்கிறாள் திருடி! கன்னக்கோல் கன்னம் வைக்க எண்ணம்போல் கன்னம் சொக்க, கொஞ்சங் கொஞ்சமாய் திருடுபோகிறது! கொஞ்சிக் கொஞ்சி உதடு நோகிறது! பின்னிப் பிணைந்த அரவங்கள் போல் எண்ணித் துணியும் அவயவங்களுக்குள், சிக்கித் தவிக்கிறது ஒளிபடா இடங்கள்! தறிகெட்டுப்போன மனதுக்கும் வெறி முற்றிப்போன உடலுக்கும் விடை கொடுக்கின்றன துகிலங்கள்! பாலாடை நீக்கி பால்பருக... பசியோடு காத்திருந்த பாலகன்போல் மேலாடை விலக்கி அடம்பிடித்து, கீழ்நோக்கி நகர்கின்றான் பாதகன்! …

  6. 1. எதிர் திசைப் பயணி ஒரு பாதாளத்தின் மேடையில் பிரிந்தவள் சொர்க்கத்தில் சந்திக்கலாம் எனக் கூறிச் சென்றாள். என் பயணப் பையும், கால்களும் நினைவின் பள்ளத்தாக்கில் கீழ் நோக்கி இழுத்துச் செல்லுகின்றன ஒவ்வொரு பறவைக்கும் தெரிகின்றது மாலையில் அதனதன் கூடு அவற்றின் மரக் கிளைகள்... சாபத்தின் சின்னமாய் நின்றபடியே துயிலும் குதிரையாக்கி நடுக்காட்டில் விட்டுச் சென்றிருந்தாள் ஆளுயரப் புல்வெளியில் என் வகிடு எதுவென்று தேடுகின்றேன்... எந்தப் படகும் தென்படாத இரவின் நதியைக் கடக்கு முன் நிற்க ஓர் இடம்.. வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்க ஒரு கூரை ஏதுமின்றி இருக்கிறேன்... மழைத் தூறலும் குளிர் காற்றும் ஏந்தி வரும் ஒரு தேவாலயத்தின் மணியோசை... அங்கே ஒளி நடனம் புரியும…

  7. மூதாட்டி: பெற்றெடுத்த முத்துக்களை காணவில்லை பெயர்காக்க ஒரு மலரும் பூக்கவில்லை தள்ளாடும் வயதில் ஒரு தடியும் இல்லை தளராமல் இருக்கும் மனம் எனக்குமில்லை..! முதியவர்: வாடுவதும் ஏனோ என் கண்ணே... தேடுவதும் எதையோ என் பெண்ணே... உன் மணவாளன் நானிருக்கேன் மணியே.. உன் மகனை மறந்து வா தனியே.. மூதாட்டி: பெற்ற மனம் என்றுமே பித்தத்தான் பெற்ற வலி என்றுமே எனக்குத்தான் விட்டுவர கூவுதிங்கே இதழ்தான் விம்மியழ ஏங்குமிங்கே மனம்தான் ! முதியவர்: மணமுடித்த நாளே முடிவெடுத்தேன் மரணம்வரை நான் உடனிருப்பேன்.. மாதரசி உன்னில் நான் கலந்திருப்பேன் மார்போடு உன்னையே அணைத்திருப்பேன் மூதாட்டி: நரைத்த முடியும் நடுங்கும் உடலும் நடவா காலும் நகைப்பது தெரியலையோ? கிழடு தட்டியும் கிண்டலா …

  8. உனதன்னையைத் தங்கையை காமவெறியினில் குதறியும் புணர்வாயோ? உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய் யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே! நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான் உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்! யாரோ யாரெவரோ? எங்கெங்கு திரும்பினும் பெண்களுக்கெதிராய் நடக்கிற கொடுமைகளுக்களவிலையோ? உனை வலியுடன் ஈன்று மகிழ்ந்த -தாயின் பிரசவ வேதனை புரிகுவையோ? நீயுன் தாய்க்கொரு சேய் தானோ ? கொடூரமாய் இரும்புக்குழலினை நுழைத்து அவள் யோனியைச் சிதைப்பாயோ? வேதனைப்படுத்தும் வெறியினில் ஆனந்தம் கொள்வதை உன் சிரசினில் ஏற்றியதார்? உனை உந்தித் தள்ளிய உளுத்தவர் ஆட்சியில் சட்டச் சூழ்ச்சிகள் செய்குவார் ஆள்சபை உறுப்பினரானகுவராம். காவற்படையென காசினி முழுவதும் பெண்களைப…

  9. Started by nedukkalapoovan,

    1993 தைத்திங்கள் 16ம் நாள் இந்திய மத்திய அரசின் நயவஞ்சகச் சதிக்கு வங்கக்கடல் நடுவே தன்னை அர்ப்பணித்த கிட்டு மாமா உள்ளிட்ட வேங்கைகள் நினைவாக..! வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்ம…

  10. தைத்திருநாள் இல்லம் எல்லாம் தழைத்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் கூவியழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்

  11. பருவம் குழந்தை தொட்டு பருவமும் அடைந்தாள் பலவாறாய் வருடங்கள் கடந்ததே நினைவில் இல்லை அண்ணனின் நண்பனாய் அவளுக்கும் அண்ணனாய் அப்படி ஓர் உறவை தொடராமல் தொலைத்து பதறாமல் அவள் மீது பருவங்கள் காதல் கொள்ள உணர்சிகள் மட்டும் அதை சிதறாமல் காத்துக்கொள்ள சில காலம் இளைக்காமல் பின் நிலைக்காமல் போகவும் விரைந்தோடி போனேன் அவள் விழி தேடி போனேன் கண்டதும் கையில் காதலை விதைத்த காகிதத்தை கொடுத்து மாலை வருவேன் என்று மறு நாள் காலை சென்றும் மனதில் ஆசை அற்றோ வெளியில் வேஷம் கொண்டோ பதில் தர மறுத்தாள் ஓர் சில நாட்களில் என் ஒல்லிக்குச்சிகாரி தொலைவாகியே தொலைந்தாள் தேடியும் கண்ணில் இல்லை ஓரிரு ஆண்டு தள்ளி தூரமாய் என்னில் பட்டாள் மீண்டும் என் காதல் சொல்ல மொத்தமாய் …

  12. தை பிறந்தால் வழிபிறந்தது அன்று எத்தனை தை பிறந்தும் தமிழனுக்கு மட்டும் வழி பிறக்க வில்லையே ஏர் கொண்டு உழுது பயிர்கள் தான் செய்தோம் ஊரெங்கும் பச்சை வயல் பசுமைகள் கண்டோம் எவரையும் நம்பாது நாம் விழைத்து நம் மண்ணில் தன்னிறைவு கொண்டோம் செம்பாட்டு மண்ணில் செழித்து வளர்ந்திடும் செவ்விளநீரொடு மா பலா வாழை என வாயினிக்க நாமணக்க வகை வகையாய் வாழையிலை மஞ்சள் வானுயர்ந்த கருப்பு கட்டிப் பொங்கி மகிழ்ந்திட்டோம் யார் கண்ணோ பட்டதனால் நாமிருந்த பூமியெல்லாம் நாசமாய் போனதனால் நாள் கூட நமக்கின்றி நாதியற்றுப் போனோம் ஏர்கொண்டு ஏற்றமுடன் எமைக் காத்தோம் இன்று ஏழைகளாகி எதிர்பார்த்து ஏந்தி எம் கைகளை எல்லோரை நோக்கி ஏளனப் பொருளாகி எதுமற்ரோராகி எச்சில் இலைகளாய்…

  13. Started by akootha,

    • 0 replies
    • 424 views
  14. பின் தங்கிய சிறுமியிடமிருந்து ..... மேசைமீது உருண்டோடும் பென்சிலை "ஓடாமல் நில்" என அதட்டி நிறுத்தி என்னுலகத்தைச் சரிசெய்தபின் எனை அழைத்துக் கொண்டிருக்கும் குரலை எதிர்கொண்டு தலை நிமிரும் தருணத்தில் உங்களால் முன்வைக்கப் படுகின்ற வினாக்களைச் செவியுற்று வெகுவாகக் குழம்புகிறேன் கரும்பலகையின் இருண்மைக்குள் கண்ணெறிந்து தோற்கிறேன் நான், பின்தங்கிவிட்ட சிறுமியாயிற்றே! ஆசிரியரே.. உங்கள் உயர்மட்ட அறிவு நிலைகளிலிருந்து கீழிறங்கி வந்து எனது இருக்கைதனில் அமருங்கள் தங்களின் தேர்ச்சி மிகுந்த சொற்களை தூர எறிந்துவிட்டுத் திக்கித் திணறுகின்ற குரலொன்றினை வழிகூட்டிச் செல்லுங்கள் வளராப் பிள்ளை நான் வகுப்பறையினுள் வந்து விழுந்த நட்சத்திரங்கள் உங்களைச் சூ…

  15. முப்பது வருஷங்களாய்த் தெரியும் அவளை, ஒரு வினாடிகூட எனைவிட்டுப் பிரியாதவள்! எங்கெல்லாமோ எனை இழுத்துச் சென்றவள்... இப்பொழுதும், ஒரு கேள்விக்குறியின்மேல் என்னை உட்கார வைத்திருக்கின்றாள்!? என் வாழ்க்கையைச் சுற்றவிட்டு முடிச்சவிழ்ப்பதில்.. அவளுக்குக் கொள்ளைப் பிரியம்! அவளுக்கென்ன... அவளது சுவாரஸ்யத்துக்காக சுவாசிப்பது நானல்லவா? சுமைகளைச் சுமப்பதும் நானல்லவா? அவளுக்கெங்கே தெரியப்போகிறது... அவளோடு கூடவே வாழ்வதின் கஷ்டம்! நான் சிறுகுழந்தையாய் இருந்தபோதில்... இனிமையாகத்தானே இருந்தாள்! எப்படி மாறினாள் என்று... எனக்கே தெரியவில்லை!? இன்றல்லாது... என்றாவது ஒருநாள், இவளது தொல்லை இல்லாமற் போகும்! அப்பொழுது என் சுவாசமும் அவள் கூடவே செல்லும் -பழகிய பாவத்திற்காக!

  16. எனக்குத் தெரியும் என்றாலும் எதிர்மாடித் தமிழனைக் கேட்டேன், எப்போது வரும் தமிழ்ப் புத்தாண்டு? 'எப்போதும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரலில் தப்பாது வரும்' என்றான்! 'கண்ணீர் வடிக்கும் சித்திரையாளுக்குக் கைகுட்டை கொண்டுபோ' என்றேன். 'எங்கும் இன்பத் தமிழ் ஒலிக்க வேண்டும்' ஏமாற்றமா? இல்லவே இல்லை என் ஆசைக்கு! காதாரத் தமிழ்ப் பேச்சைக் கேட்கிறேன் கல்லறைகளிலிருந்து! மறைமலை, திரு.வி.க., பாரதிதாசன், பாவணர் தனித் தமிழில் இனிக்க உரையாடுகிறார்களே... கேட்கலையா உங்கள் செவிகள்? ஆனாலும் ஆவலினால் அன்றைய தொல்காப்பியன் திரும்பி வந்தான். மழலையர் பள்ளியில் ஆங்கிலம் படித்தான் அதிலே தவறி ஐந்தாம் வகுப்பிலேயே கல்வியை முடித்தான். ஆர்வத்தால் வள்ளுவனும் திரும்பி வந்தான். தமிழில் படிக்க வாய்ப்பில…

  17. மகிந்தவின் கழுத்தில் தொங்குவது சிங்களவரின் கோவணம் இடியமீன் சிரிக்கிறான்

  18. நாங்கள் பொங்குவோம் பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... கல்லு மூண்டு வச்ச அடுப்பில கனதியான புது மண் பானை வச்சு முக்குறிகளை முழுசா அதற்கு வச்சு பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு புது நெல்லு மணி விளக்கி பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு பக்குவமா சக்கரை கலந்து பதமாக வெந்து வர முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும் ஏலத்தூளும் தூவி பொங்கல் பொங்கி வர வெடி சுட்டு பொங்கலோ பொங்கல் எண்டு பாட்டி குலவையிட பக்கத்துக்கு வீட்டிலும் முன் வீட்டிலும் கூட வெடியோசை வானைப் பிளத்தது பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... இது முன்பொரு காலம். ஆனால் இப்ப முன் வீட்டு குடும்பம் இன்னும் முகாம்ல இருந்து வரயில்ல முள்ளு கம்பிக்குள்ள முழுசா அடைபட்டு இருக்கினம்…

  19. நீர் தேங்கி நீண்டு கிடக்கிறது வயல்வெளி, தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில் தூக்கணாங்குருவிக்கூடுகள் நிறைந்துபோய் கிடக்கின்றன சிதைந்த வயல்வரம்புகளில் வெண்கொக்குகளும் காகங்களும் இறகுகோதி உலாத்துகின்றன, கலப்பைகீறாத எங்கள் நிலமதில் அல்லியும் நீர்முள்ளியும். மண்டிக்கிடக்கிறது, உடலங்களை உண்ட மதமதப்பில். நெல்லுத்தூத்தல்களும் அறுவடைக்கால கூச்சல்களும் இல்லாத வெளிபார்த்து சலித்துக்கடக்கிறது பருவக்காற்று, நார்கடகங்களும் சாக்குகளும் மக்கி மண்னேறிப்போகிறது வண்டில் சில்லுகளில் வலைபின்னி சிலந்தி கிடக்கிறது. அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில் கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், விலைகென்று வளர்த்த கிடாயும் விழியுயர்த்தி மிரள்கிறது. …

  20. கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு! என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக! கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க தாம் தீம் தோமென தமிழே பொங்கு! எங்கனும் தமிழின் ஓசை சிறக்க, ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க, வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு! மங்கல ஒலியில் மண்மகள் குளிர, சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய, அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு! வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க, தேன்கவிராயர்கள் தீந…

  21. வாரா வாரம்... திரை கூர்ந்து விழிப்புலன் கூர்மையாக்கி செவிப்புலன் நேர்மையாக்கி தெளிவாய் பார்க்கிறேன் கேட்கிறேன்.... ராசி பலனில் பகவான்கள் பலர். என்னோட அதிபதி.. குருபகவான் கூட கன்னிப் பெண்கள் மேல தான் கண்ணோட... கருசணையாய் இருக்கிறார். காளை எனக்கு மாதம்.. வருடம் பல... காத்திருந்தும் பலனில்லை. பகவான்... கிருபையும் எனக்கில்லை..! சாத்திரியின் கடைக்கண் பார்வையிலும் நானில்லை..! காளை என்னை விளித்து.. பலன் சொல்லவும் யாருமில்லை..! இருந்தும்.. பூமிப்பந்தில் நாம் நிமிர்ந்து நிற்கிறேன்.. சுய தேடலும் சுய உழைப்புமே என் வாழ்க்கை என்பதால்..! எல்லாம் நான்.. நெஞ்சில் இரண்டு சிரட்டை இன்றி பிறந்ததன் பலன்..!

  22. நள்ளிரவு கடக்கும் நேரம் "உறங்கப் போகிறேன்" என்கிறாய் குறுந்தகவல் வழியாக..! "கனவில் ஒரு நடை வந்து விட்டுப் போ..!" என்கிறேன். நிஜத்திற்கு ஆசைப்படும் நீயோ கனவில் வர மறுத்து சிணுங்குகிறாய்..! மயிலிறகால் வருடும் உன் நினைவுகளின் கூட்டம் மலையாய் கனக்கிறது..! நீ வந்து சேரும் வேளை மலைக்கும் நினைவுகள் மேகக்கூட்டமாய் மிதக்கிறது..! புயல் கடக்கும் போது பெய்யும் பெருமழையைப் போல தென்றல் தீண்டும் வேளை பொழிகிறது காதல் மழை..! ஆண் பெண் என்னும் வண்ணங்கள் கரைகிறது. அன்பை உடுத்திக் கொள்கின்றன நிர்வாணங்கள்..! ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மறுக்கப்பட்ட கனியை மன்மதன் திருடிச் செல்கின்றான்..! காதலிக்கப் படாமல் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்…

  23. Started by கோமகன்,

    கடலின் கரையில் மணிலில் மாளிகை கட்டிட விரும்புகின்றேன் கதிரின் பிழம்பைக் கையால் தழுவிடக் காதல் கொள்ளுகின்றேன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட விழைகின்றேன் ஊருணி நீர்மேல் ஓவியம் தீட்டும் உரத்தை வேண்டுகின்றேன். வெண்முகிலுக்குள் படுத்துக் கிடக்க, வேட்கை கொள்ளுகிறேன். நன்றி கவிஞர் மீரா

  24. Started by Joella,

    நீ என்னை நேசித்த போது நான் அறிந்து கொள்ளாதது ஒன்று இன்று நீ என் கூட இல்லாத போது புரிகின்றது ...நீ என்னக்குள் உயிராய் இருந்தது !!!! பார்த்த முகம் தனில் உன் கண் என்னை விட்டு பிரிந்தாலும் பழகிய என் இதய நெஞ்சை விட்டு நீ பிரிய வில்லை !!!! உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன் ..உன் சின்ன சின்ன கோபம் என்னை எளிமை ஆக்கின என் வாழ்வில் சிறு அர்த்தமுடன் .. இன்று நான் அதே நிழல்களுடன் !!!! உலகத்தின் கண்களில் உன் உருவங்கள் மறைந்தாலும் எனில் ஒன்றான உன் உருவம் மறையாது..!!!! …

  25. அழக்கூட முடியவில்லை அடைத்துப் போகிறது நெஞ்சு! உள்ளத்தில் உறைந்தவளே றிசானா..! உன் மரணச் செய்தி இன்னும் மரணித்துப் போகவில்லை எங்களை விட்டும்! சுவனத்துக் குயிலே! உன் விடுதலைக்காய் எத்தனை உள்ளங்கள் இரவு பகல் அழுதன தெரியுமா..? எல்லாம் முடிந்து விட்டது. இறைவன் அழைத்துக் கொண்டான் உன்னை! என்று நம்புகிறோம் ஏற்பாட்டை ஏற்றுக் கொள்கிறோம். றிசானா! செல்லமாய் விளையாடும் சின்ன வயதில் சிறை சென்ற வண்ண மொட்டு நீ.. அதைக்கூடத் தாங்காமல் உன்பெற்றோர் தீயில் விழுந்த புளுவாய் தீய்ந்து போனதை நாம் அறிவோம். இப்போது இறந்துபோனதை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்..! உன் மரணச் செய்தி கேட்டவுடன் தாய் மொழிந்த வார்த்தைகள் 'எண்ட மகள மௌத்தாக்கிட்டாங்களா..?' இன்னும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.