Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் இதயத்துக்குள் இன்னொரு இதயம் சுகமாய் வீழ்ந்த அந்த நொடிப் பொழுது அவன் சுவாசம் எனைத் தீண்ட என் மனது காதலை பூத்த அந்த நாழிகை அவன் பார்வைகளால் என் இதயத்துக்குள் சித்திரம் வரைந்த அந்த மணித்துளிகள் அவன் நினைவுகள் என் மனதுக்குள் இறங்கிய தருணங்கள் இவை எல்லாவற்றையும் நினைத்திடும் பொழுது அவன் நினைவுகள் உயிர் பெற்று என் பொழுதுகளை அவிய வைத்து பசியாறிக் கொள்கின்றது... இரக்கமின்றி.. அவன் நினைவுகள் என் இதயத்தை தீண்டி விடாமல் வேலி போடுகின்றேன் - இருந்தும் அவை இதயத்தை தாண்டி -என்னை முழுவதும் ஆக்கிரமித்து படர்கின்றதே... ஒரு வேளை அவன் நினைவுகள் பாதீனியம் போலவோ? நான் அழிக்க அழிக்க மீண்டும் முளைக்கின்றதே.. என் …

  2. வணக்கம் இந்தக் கவிதை என்னுடையது இல்லை . முகநூலில் என்னை நெருடிய முள் அவ்வளவே . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************************************** காதலின் புனிதத்தை காமத்தின் பெயரால் கறைபடிய விட்டதும் காணாமல் கருவுக்கு உயிர் கொடுத்து தெருவில் எறிந்த மனிதமற்ற மண்புழுக்களே வார்தைகள் கொண்டு உங்களை திட்டுவது தமிழுக்கு நான் செய்யும் துரோகம்.... நல்ல உள்ளங்களே யாரும் ஆனாதையாக பிறப்பதில்லை இந்த சமுதாய சனியன்கள் சிலரால் உருவாக்க படுகிறார்கள்................... நன்றி : முகநூல்

  3. இன்று கருணாகரனின் புல்வெளி இணையத்தில் உள்ள கவிதைகளைப் படித்தேன்...நினைவுகளை துளைத்தெடுக்கும் வார்த்தைகளை கொண்டு வடித்தெடுத்த கவிதைகளை ஒரே தடவையில் நீண்ட பெருமூச்சுடன் வாசித்து முடித்தேன்...அதில் உள்ள "காதலும் கனவும் நிரம்பிய நகரம்" என்ற கவிதையின் தாக்கத்தில் என்னை நானே குற்றவாளியாக்கி கேள்வி கேட்டபோது பிறந்தது இது.... சபிக்கப்பட்ட சந்ததி... தன்னைக் கடந்து போன தலைமுறைகளின் இளமைகள் தொலைந்து போன கதைகளை சுமந்தபடி தொடர்ந்தும் இருக்கிறது அந்த நகரம்... என் பாட்டி தன் பருவ காலங்களை என் பாட்டன் தன் இளமைகளை என் தந்தை தன் பால்யகாலங்களை தொலைத்துக் கொண்டது அந்த நகரத்தின் நிழலில்தான்.. நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது அது சிறுவயதுகளில் …

  4. கப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ] சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான், நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்! கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன், எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்... மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!! "மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்! அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்! வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு, அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன! ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!! தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்! இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்! அவன் கருங்குழல் ஆயுதந்தனை …

  5. கல்லினில் இரு துளைவைத்து கண்ணென்று சொல்லி உலகையும் காப்பான் இவன், தன் கண் கொண்டு என கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி கயவனாய் போனாயே - கடவுள் இல்லை நீ கல் என்றே சொல்வேன் உனை.. கைலையில் உள்ளாயா - இல்லை போதியின் கிளையில் கீழுள்ளாயா? காமுகன் கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர் கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ? களத்தினில் எம்மக்காள் கருணையின்றி கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ?? கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த கயல்விழிகளெல்லாம் அசுரர்கள் கலவிப்பசி தீர்க்க கையிழுத்து கழுத்தறுத்த வேளை - நீ கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ கல்லில் புதைந்த கடவுளே. கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம் கல்லானவன் பொய்யுரைக்க காலடியில் காலன் இன்று எ…

  6. புறமுதுகிட்டு ஓடச் செய்தாய் பூரித்துப் போனேன். பொழுது புலர்ந்து விடும் – உன் புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும். காத்திருந்த கணங்கள் அனைத்தும் தொடர்கதையாகி விடுகதையையும் சேர்த்து விட்டுச்சென்றுள்ளது? திசையெல்லாம் கூடிய ஆதரவில் திசை திரும்பாமலே பயணித்தாய். சேர, சோழ, பாண்டிய கதைகள் பழங்கதையாகி தேசமெங்கும் தேசியத் தலைவரானாய். நல்லவரா? கெட்டவரா? நாள்தோறும் முண்டியத்த நாக்குகளுக்கு மட்டுமே தெரிந்ததால் நகைப்பாய், நகைச்சுவையாய் நாள்தோறும் தலைப்புச் செய்தியானாய்? உன் ஓழுக்கம் குறித்து – இங்கு அக்கறையில்லை. ஊடக விற்பனையில் – நீ உரத்துச் சொன்ன அத்தனையும் உலகறியாது? உதிரம் கொடுத்து உள்ளே புதைந்தவர்கள் உறவை விடுத்…

  7. Started by ilankathir,

    கண் ஒரு நாள் சொன்னது.. “பாலைவனத்திற்கு அப்பால் ஒரு பனி மூடிய மலை தெரிகிறது பாருங்கள்.. எவ்வளவு அழகாக இருக்கிறது..?” காது கொஞ்ச நேரம் உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப் பிறகு சொன்னது.. “மலையா?? எந்த மலை?? எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!” கையும் பேசியது.. “என்னால் எவ்வளவு முயன்றும் அந்த மலையைத் தொட முடியவில்லையே.. மலை நிச்சயம் இருக்கிறதா..??” மூக்கு உறுதியாகச் சொன்னது.. “மலை எதுவும் கிடையாது.. எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!” கண் வேறு பக்கமாய்த் திரும்பிக் கொண்டது.. மற்ற உறுப்புக்களெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டன.. இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன.. “கண்ணில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விட்டது..!!” -கலீல் கிப்ரா…

    • 0 replies
    • 671 views
  8. Started by ilankathir,

    எது எதுக்கு யார் யார் யார் யாருக்கு நடத்தலாம் சாதனையாளர்க்கோ சமூகத் தொண்டர்க்கோ வீரர்க்கோ என்றில்லை யார் யார்க்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம் அதிகம் கொலை செய்தவர்க்கு கொலைக்குத் துணை நின்றவர்க்கு கொலை செய்யப்பட்டவருக்கு பயன் பெற்றதற்கு பயன் பெறுவதற்கு பிரபலமாவதற்கு விழா நடத்துவதற்கு மனத்தில் இடம் பிடிப்பதற்கு சும்மா பாராட்டுவதற்கு பாராட்டு விழா நடத்தியதற்கு சிலரைப் புறக்கணிப்பதற்கு பிறர்தான் நடத்தவேண்டுமென்பதில்லை பிறர் பெயரில் நாமேகூட நடத்திக்கொள்ளலாம் அல்லது பிறரைத் தூண்டி நடத்திக்கொள்ளலாம் பாராட்டு விழாக்கள் பாராட்டுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை ! நன்றி : ஆனந்த விகடன…

    • 8 replies
    • 935 views
  9. தமிழீழம்பற்றி கவிஞர் வாலியின் கவியரங்கம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N_EkyTVgT8k என்னே வியப்பு! சோழனும் நானும் ஒரே விடயத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்துள்ளோம்

  10. 01 அடை மழை பெய்கிறது. கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு குழந்தைகள் பாத்திரம் வைக்கிறார்கள் . மின்சாரம் தடைப்படுகிறது . விறகுகள் நனைந்து விட மதிய உணவும் கனவாகி விடுகிறது. நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து நனைந்து நடு வீட்டிற்குள் வருகின்றன. கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது. சாக்கடை நீர் மணக்கிறது. பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக அடுப்படி பரணில் வைக்கப்படுகிறது. கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன. மரங்கள் முறிவதும் தவளைகள் கத்துவதும் கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது. இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள். 02 அடைமழை ப…

  11. Started by nedukkalapoovan,

    "பெட்டையள்" கூட கதைக்கப்படாது.. நேற்றைய ஒரு பெட்டையின் அன்றைய வேண்டுகோள்..!!! அது வேறு யாருமல்ல.. அம்மா தான்..! "கதைச்சால் என்ன".. பதில் கேள்வி ஆழ் மனதோடு தற்கொலை செய்துவிட பெற்ற தாயை எதிர்த்து ஒரு கேள்வியா.. மனம் தனக்குத் தானே பரிசளித்துக் களித்துக் கொள்கிறது.! "இவன.. போய்ஸ் ஸ்கூலில போடுங்கோ.." ஏன்... அப்பதான் ஒழுங்கா வளர்வான்..! இப்ப என்றால்.. gay என்று சொல்லுவாங்க என்ற பயம்.. அப்ப என்ற படியால்.. நானும் மகிழ்ச்சியாக அதை ஏற்க.. ஆண்டுகள் 6 அங்கேயே கழிகிறது..! பள்ளிக்காலம்.. பருவ மங்கைகளின் நினைவின்றி.. பக்குவமாய் கழிகிறது..! பாடங்களிலும் தொய்வின்றிய சித்திகள்.. பல்கலைக்கழகம் வரை காலடி விரைகிறது.. அங்கும்…

  12. Started by யாழ்வாணன்,

    உதரத்தில் இருந்து உதிரத்தில் கலந்து உயிரினில் நிறைந்து உணர்வு வழி வருவது

    • 1 reply
    • 576 views
  13. அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள் அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது சிதைமேட்டில் அழிக்க முடியாத உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது உடைத்தெறியப்படுவதும் சிதைத்து புதைக்கப்படுவதும் யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்? எதிலும் நிரப்ப முடியாத எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள் உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா? அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா? பெற்றவர்கள் யாரோ எல்லாம் இருதயத்திற்குள் அடித்தழுது புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன. யாரோ ஒருவருடைய பிள்ளை ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில் உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கி…

  14. தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை - வெங்கட் சாமிநாதன் சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன் நான் சென்னை வந்ததும் எனக்கு அறி…

    • 0 replies
    • 1.5k views
  15. http://youtu.be/_L3lpj80ItU

    • 0 replies
    • 665 views
  16. ஆசையாய்ப் பெயரிட்டு மெல்ல நடை பழக வைத்து சிந்திய சோற்றுப் பருக்கைகளை சிரித்தவாறு சாப்பிட்டு " **கா " வை மிதிக்காதே என்று அதைக் கையினால் எடுத்ததுவும் பல முறை தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு நெஞ்சின் மேல் தாலாட்டியதவும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றதுவும் மானத்தை விற்றுக் கடன் வாங்கி் இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுத்ததுவும் தினமும் துடைத்து அதற்கு பெட்ரோல் வாங்கக் காசு கொடுத்ததுவும் இருந்த நிலத்தை விற்றுக் கல்லூரிக்கு அனுப்பியதுவும் கண் பார்வை மங்கிய பின்னும் அதிகாலை எழுந்து பால் வாங்கி வந்ததுவும் இல்லாத பரிட்சைக்குப் பணம் கொடுத்ததுவும் வேலைக்கு சேர்வதற்காக உயிராய்க் கலந்திட்ட வீட்டை விற்ற…

  17. வணக்கம் உறவுகளே இது ஒரு புதிய முயற்சி. இம் முயற்சிக்கு அனைவரது ஒத்திழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியாக தொடர்வதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கியுள்ளோம். யாழ்களத்தில நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல வாய்ப்பாக இப்போட்டி நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இப் போட்டி நிகழ்ச்சியானது முற்றும்முழுதாக இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியே என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம். இதற்காக எமது இளங்கவிஞர்களின் ஆக்கங்களை இப்பகுதியில் எதிர்பார்க்கின்றோம்...! சரி நிபந்தனைக்கு வருவோம். அதவாவது இரண்டு கிழமைக்கு ஒருக்கா இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும். அத் தலைப்புக்…

    • 105 replies
    • 37.7k views
  18. விலைகொள்ளா எழிலே _எனை குலைத்த கோலமயிலே , நிலைகொள்ளா எண்ணங்கள் _நீ கலைநிலா வர்ணங்கள் . நாவுக்கும் என் பாவுக்கும் நான் வளத்த நாய்க்கும் ஆவுக்கும் இரவில் அலறுமந்த கோவுக்கும் ஏந்திழையே, ஏங்கியுன் கதசொன்னேன் . நெற்றிவகிடு கண்டு நெகிழ்ந்து வற்றிபோனதடி தொண்டதண்ணி ! சுற்றி நீபோட்ட கொண்டையில சுருண்டு கிடந்ததடி மஞ்சத்து பூனைமனது !! குடமெடுத்து நீவர நிரம்பிக்கொண்ட என்னுள்ளம் _போன தடமிருந்து அழுதது நீ(ர்) நிர(ம்)ப்பி போக வெறுமை சுமந்து தள்ளாடியது பாதம் கண்ட கணமதில் பாதியானவன் , மீதம் காணும் கனவில் சேதமானவன். யாதும் நன்றேயென்றே திமிரானவன் தோதாயிருப்பனோ யென்றே சோர்ந்துபோனவன் உம்மென்று சென்ற உன்னம்மாவுக்கும் என்னெ…

  19. ஊடக இளவலுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் இளய கலைஞர்களே சென்னை வரும்போது சென்றவனைப் பாருங்கள் என்பேனே இன்று அவனில்லை. இயமனும் கவிதை சிறுகதைகள் எழுதிப் பிரசுரிக்க அவாவுற்று இவனை அழைத்தானோ. தாகத்தில் தெருப் பாடகர் நினைத்துவரும் சாலையோரத்து ஊருணி மாரியிலேயே வரண்டதுபோல ஊடக இளவல் கிருஸ்ணா டாவின்சி இளமையில் வீழ்ந்தானே. எங்கள் முகங்களை அறிமுகம் செய்த இனியன் முகமின்றி எரிதழலில் படுகிறதோ. இல்லை வாழும் முகமானாள் மகள் நேகா என்றும் சாகா முகமையா உனக்கு தமிழ் கலைஞர் எங்கள் நினைவுகளில்.

  20. Started by pakee,

    வானம் நீயானால் - நான் மேகமாக வரம் வேண்டும் விழிகள் நீயானால் - நான் இமைகளாக வரம் வேண்டும் தூக்கம் நீயானால் - நான் கனவாக வரம் வேண்டும் கவிதை நீயானால் - நான் நல்ல வரிகளாக வரம் வேண்டும் நிலம் நீயானால் - நான் உன்னுள் புதையும் பிணமாக வரம் வேண்டும்...

    • 2 replies
    • 718 views
  21. மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............

    • 0 replies
    • 491 views
  22. Started by அபராஜிதன்,

    தன் தந்தையை நேசிக்கும் எல்லோருக்கும்...!!! இந்த கவிதை...!!! சமர்ப்பணம்..!!! அப்பா...! " நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." என் முதல் கதாநாயகன்.. நீங்கள் தான் அப்பா..! தலைகனத்தில் நான் ஆடும் போது குட்டு வைத்தது நீங்கள், தடுமாறி நான் விழுந்த போது தூக்கி நிறுத்தியதும் நீங்கள் அப்பா..! உங்கள் உயிரே என் மீது வைத்து இருந்தும், ஒரு சிறு இடைவெளியில்தான் நம் பந்தத்தை நீங்கள் வைத்து இருந்தீர்கள், அந்த இடைவெளிதான் உங்கள் பாசத்தை உணர வைத்தது எனக்கு, கம்பீர பார்வை, நேர் படும் பேச்சு, அஞ்சா நெஞ்சம், சில சமயம் ரௌத்திர குணம் இருந்தாலும் உங்கள் மனம் என்றும…

  23. Started by pakee,

    உயிரை எரித்து காதல் வளர்த்தேன் கடைசியில் அவளை இழந்து தனியாக நிற்கிறேன்..

    • 0 replies
    • 552 views
  24. சேரனின் காடாற்று கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக கனத்த அட்டையுடன் அழகான புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதிலிருந்து இரு கவிதைகள் . நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு தற்கொலை. காவற்பரணில் ஒரு கண்ணிழந்த போராளி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.