கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
யார் இவர்கள்? இவர்கள் ஏன் சாகவேணும்? ஏன்? ஏன்? இவர்கள் உயிராயுதம் எடுத்துக் களமாடுகையில் நாமெல்லாம் ஸ்கோர் பார்த்துக்கொண்டிருந்தோம்.! அனைவருமே ஆட்டமிழந்து வெளியேறினர்! பாவம் இவர்களைச் சுமந்த உதரங்கள்! அவை இன்னும் ஆட்டமிழக்கவில்லை இயலாமை எனும் செருக்களத்தில்! நாங்களும் தான் மாறவில்லை காத்திருக்கோம் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கும் வரை! அநுராதபுரம் வான்படை தாக்குதலின் காவியமான கரும்புலிகள் நினைவாக.
-
- 5 replies
- 830 views
-
-
பிஞ்சுப் பருவத்தில் பாலுக்காய்க் காத்திருந்தேன் பள்ளி நாட்களில் விடுமுறைக்காய்க் காத்திருந்தேன் கொட்டும் மழையிலே வெயிலுக்காய் காத்திருந்தேன் கொளுத்தும் வெயிலிலே வான்மழைக்காய்க் காத்திருந்தேன் கல்லூரிக் காலத்தில் காதலிக்காய்க் காத்திருந்தேன் கடமைகள் வந்ததும் காசுக்காய்க் காத்திருந்தேன் காத்திருப்பே வாழ்க்கையாய் காலமெல்லாம் தொடர்கையில் காத்திருப்பற்ற வாழ்க்கையொன்றைக் கண்டறியக் காத்திருக்கிறேன் http://gkanthan.wordpress.com/index/waiting/
-
- 1 reply
- 743 views
-
-
எப்போது விடுதலை எம் கைகள் எப்பொழுது அவிழ்க்கப்படும்? நினைத்ததை எழுதவும் எழுதியதை மீண்டும் நாம் படிக்கவும் காலம் வருமா? என்ன பிழை செய்தோம் ஏனிந்த காலவரையறையற்ற தண்டனை கொச்சைப்படுத்தியோரை பேனா கொண்டு தாக்கினோம் இது தப்பா? நாலு பேர் சிரிக்க மஞ்சல் தடவினோம் நாலு பேர் இன்பம் பெற நீலம் தடவினோம் இது பெரும் தவறா? மாதங்கள் வந்தன வருடங்களும் வந்தன 16 வயசுக்கொண்டாட்டமும் வந்தது விடுதலையை எதிர்பார்த்தோம் அப்படியே எமது கோரிக்கை நிராகதியாய்க்கிடக்கிறது நம்வீட்டுக்கதவை தட்டும்வரை தூங்கிப்பழகிவிட்ட இனம் இங்கும் அப்படியே தொடர்கிறது........... இன்னும் இரு சொற்கள் எழுதினால் மரண தண்டனை கைகள் கட்டப்பட்டு வார்த்தைக்கு வார்த்த…
-
- 2 replies
- 742 views
-
-
காலம் கனிகிறது நேரம் நெருங்குகிறது நெருப்பு வைத்தவர் நெஞ்சேறி மிதிக்கவென பற்ற வைக்கக் குச்சி கொடுத்தவர் படம் காட்டி எம்மை பதற வைக்கிறார் எமக்காக அவர் ஏதேதோ செய்கிறார் ஏக்கத்துடன் நாம் பார்த்திருக்கிறோம் எம் பெண்களை எப்படி வதைத்தார் துணி களைந்து துடிக்க வைத்தார் நிர்க்கதியாக்கி நெரித்துக் கொன்றார் ஆவிதுடிக்க அந்தரிக்க அத்தனை வதைகளும் எம்மவருக்கு எத்தர்கள் செய்தார் அத்தனையும் நாம் பார்த்திருக்கிறோம் அழுதுவிட்டுக் காத்திருக்கின்றோம் இன்னும் எத்தனை படங்கள் போடுவார் ??? எதிரியை எப்போ சிக்க வைப்பார் ???? நீதிமன்றின் முன் நிக்க வைப்பார் ???? எத்தனை கேள்விகள் எம்மிடம் உண்டு ஆயினும் மற்றவன் எமக்காய் எல்லாம் செய்வதை மானம் கெட்டுப் பார்த்திருக்கின்றோம் ந…
-
- 4 replies
- 615 views
-
-
காத்திருப்பு உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உனது குரலில் அன்பை அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறது மனம். பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும் நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம். கால நீட்சியில் உனது கோலத்தில் எழில் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன் இத்தனை காலப் பிரிவினால் நீயும் என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம். நேரில் பேச வேண்டிய செய்திகளை சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள் வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும் தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு. பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய் உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும் உனது கனிவான பார்வையே போதும் இன்னும் ஆய…
-
- 15 replies
- 22.5k views
-
-
உனக்காய் காத்திருந்து நிலவுகூட பகலில் வந்து விட்டது பகல் நிலவாய் இன்னும் நீதான் வரவில்லை காக்க வைப்பதில் உனக்கு அவ்வளவு சுகமா அதைவிட சுகம் உனக்காய் காத்திருப்பதில் உன் வருவுக்காய் எதிர் பார்த்திருந்தால் நீ வரும் பாதைகூட உன்னை போல் அழகாக வெக்கப்படுகிறது உனக்காய் காத்திருந்து இறந்துபோக ஆசைதான் உனக்காக கவிதைகள் பிறக்காமல் போகுமென்றால் உனக்காய் காத்திருந்து நான் வாடிப் போகவில்லை என் கவிதைகளுக்குத்தான் தாடி முளைக்கிறது நீ தாமதமாய் வரும்வரை எப்படி சமாளிபேன் என் கவிக்குழந்தைகளை ஒவ்வொன்றும் அம்மா வேணும் என்கிறது என்னைக் காக்க வைக்க வேண்டும் என்பதற்காக தயவு செய்து வராமல் விட்டு விட்டாதே என் பேனா ஒரே நாளிளே இறந்…
-
- 4 replies
- 1.5k views
-
-
எனக்காக நீதான் உனக்காக நான் தான் இது தானே நீ சொன்ன முதல் வாக்கியம் இப்போது எங்கே உன் சொல் ஓவியம் கவி எழுத மறந்தேன் - உன் கதை தனை யாசித்தேன் -இப்போ காணாமல் நானும் பூஜித்தேன் ஆனாலும் உனக்காக காத்திருப்பேன்
-
- 10 replies
- 2.4k views
-
-
காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு…
-
- 0 replies
- 386 views
-
-
அவன் வருவான் வருவான் என காத்து இருந்தன் ஆனால் வந்தது அவன் இல்லை அவன் திருமண கடிதம்
-
- 5 replies
- 1.2k views
-
-
அன்பே, நான் உன்னிடம் என் காதலை சொன்ன பின்பு உனது தொலைபேசி அழைப்பு வரும் என்று ஒவ்வொரு நொடியும் காத்து இருந்தேன். அந்த ஒவ்வொரு நொடியும் எனக்கு ஒவ்வொரு யுகமாய் இருந்தது. என் இதயத்துடிப்பும் பலமாக அடித்துக் கொண்டது என் மனதில் இடம் புடிச்ச என் அழகிய மன்னவனே எனது ஆருயிரே உன் தொலைபேசி அழைப்பும் வந்தது. நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்து மகிழ்ச்சி வெள்ளம் கரை ஓட ஓடோடி ஓடி வந்து தொலைபேசியை தூக்கினேன். ஆனால் உயிரே நீ சொன்ன சேதியைக் கேட்டு என் இதயத்துடிப்பு நின்று விட்டது. என் கண்ணாளனே நீ எனக்காக சம்மதம் சொல்லுவாய் என்று நினைத்தேன் ஆனால் நீயோ என் இதயத்துடிப்பை நிறுத்தி விட்டு இன்னொருத்திக்கு மாலை சூட்ட போகின்றாயே?
-
- 0 replies
- 696 views
-
-
காத்துக் கிடக்கின்றனர் அவர்கள் அவளின் ஒவ்வொரு வரிகளுள்ளும் பிரவகித்து ஓடும் காதலிக்கப்படுவதான பிம்பங்களின் நிழலில் குளிர் காய்தலில் தம் இழந்து போனவைகளையும் கனவுகளுள் புதைந்து போனதையும் எச்சங்களின் படிமங்களில் எப்படியோ காண்பதான பிரமைகளையும் துழாவமுடியாத இருட்டில் தினம் குருடாகிப் போன கண்களின் வெளிச்சத்தில் தேடியபடியே இருக்கின்றனர் கண்முன்னே காத்திருக்கும் காரணமற்ற வெளிச்சங்களை பார்த்திட முடியாத மனக்குருடாய் மடை திறந்தோடும் மனவாற்றின் வழியே ஆசையின் அகல்விளக்கேற்றி அடைந்திடமுடியாததான அகத்தின் அருகே சஞ்சரிப்பதான பிரமை கூட்டியபடி வீழ்ந்திடாத பழமரங்களுக்காய் கற்களைத் எந்நாளும் எறிந்தபடி
-
- 1 reply
- 591 views
-
-
நேற்றைய இரவு முழுதும் அழுதபடியிருந்தவர்களை கண்டு தாளாது போரிட சென்றவர்கள் வெற்றியோடு திரும்பினர் மதியம் நமது தோழனென நம்பியிருந்த பகல் பெரும்பூதமென மீண்டுமொரு காரிருளை வாரியிரைத்து போனது வடக்கே அமைதியாக இரவும், பகலென வேடமிட்ட நிசியும் பிணைந்த புணர்வில் பிறந்த குழந்தை பதிமூன்று ஆணா? பெண்ணா? என அறிவதில் கழிந்தது காலம் இடையில் கீரிடத்தை பறிக்க சிந்தனையில்லா கோமகனை கொன்று நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள் விதியென நொந்தும் வெயிலென காய்ந்தும் புயலென வீழ்ந்திடாமலும் பூத்தன கார்த்திகை பூக்கள் சூல்கொண்ட மகவு தாயை பிரசவிக்கமுன் விழித்துக்கொண்ட இருளின் பிள்ளைகள் கைகுலுக்கிக் கொண்ட நாட்களில் சிவப்பு கழுத்து…
-
- 8 replies
- 5.2k views
-
-
Theepachelvan Pratheepan இன்றைய ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த கவிதை. காந்தள் மலர்கள் வானம் பார்த்திருந்து மழையை தாகத்தோடு அருந்தி கிழங்குகள் வேரோடி நிலத்தை கிழித்துக் கொண்டு படர்ந்தெழுகிறது காந்தள்க் கொடி. எதற்காக இந்தப் பூக்கள் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் விழிக்கின்றன? ஒரு சொட்டு கண்ணீர் விடவும் ஒரு விளக்கு ஏற்றவும் மறுக்கப்படுகையில் எதுவும் இல்லையென எல்லாமும் அழிக்கப்பட்டாகிற்றென்கையில் அனல் கனக்கும் தாயின் கருப்பையை ஈரமாகிக்கின்றன காந்தள் மலர்கள் தாயின் கனவு வண்ணமாய் தாகத்தோடு பூக்கும் காந்தள் மலர்களை யாரால் தடுக்க இயலும்? தீபச்செல்வன்
-
- 1 reply
- 675 views
-
-
கல்லறை கருக்கள் கண்திறக்கும் காலம் காத்திருக்கின்றோம் வாருங்கள்.
-
- 0 replies
- 538 views
-
-
[size=5] காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)[/size] [size=5] [/size] [size=5] மணி ஒலித்தோய்ந்த்து பனித்தன கண்கள் காத்திகை 27. [/size] [size=5]கலைந்தது மௌனம்[/size] [size=5]மலர்ந்தன தீபங்கள்[/size] [size=5]மாவீரர் நாள்.[/size] [size=5] காந்தள்கள் முகம் சிரித்தது கைகளில் கார்த்திகைத் தீபம்.[/size] [size=5] [/size] [size=5]கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்[/size] [size=5]கல்லறைத் தெய்வங்கள்[/size] [size=5]துயிலுமில்லங்கள்.[/size] [size=5] [/size] [size=5]எதிரி கிளரியெறிந்ததால் மனதில் கிளர்ந்தெழுந்தது மாவீரர் தியாகங்கள்.…
-
- 0 replies
- 890 views
-
-
என் மதத்தை கேலி செய்தேன் மாற்று மதத்தான் அரவனைத்தான் என் இனத்தை குறைகூறினேன் மாற்று இனத்தவன் புகழ்ந்தான் எம் போராட்டத்தை இழிவுபடுத்தினேன் மாற்றான் முற்போக்குவாதி என்றான் எம் போராளிகளை காட்டி கொடுத்தேன் என்னை புலனாய்வாளன் என்றான் எம் இனத்தின் உரிமைகளை தடை செய்தேன் என்னை அமைச்சராக்கினான் எம் இனத்தின் எதிரிக்கும் எதிராக ஆயுதம் தூக்காதே என்றேன் அகிம்சாவாதி என்றான் என் சனத்தின் சனநாயகத்தை சாகடித்தேன் என்னை சனநாயகவாதி என்றான் என் இனத்தின் அவலங்களை கண்மூடி பாராமல் காதை பொத்தி கேட்காமல் வாயை மூடி பேசாமல் இருந்தேன் காந்தியவாதி நீர் காந்தியவாதி என்றான்
-
- 8 replies
- 1.5k views
- 1 follower
-
-
காந்தீயம் (அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காக.) இமயத்தின் முன் ஓர் சிறுவனாய் அண்ணாந்து நிற்கிறேன் பிரமாண்டம்! அது ஒன்றுதான் புரிகின்றது. கலப்பு, பிறப்பு, இளமை, ஒழுக்கம், கல்வி, குடும்பம், வாழ்வில் எளிமை சமூகம், பண்பு, சமயம். சேவை, தர்மம், சத்தியம,பக்தி அகிம்சை அரசியல், தொழிலில் அறம் எனப் பலவாய் பாறைகள் அடுக்கிப் பார்க்கவே எட்டா உச்சமாய்த் திகழும் தியாகப் பாறை எட்டிப் பிடிக்க முடியாத் தெலைவில் எங்கோ முடியாய் இருக்க நானோ பிரமாண்டத்தின் வைர மலைகளை யானையைப் பார்த்த குருடனைப்போல ஒன்றொன்றாகத் தொட்டுத்தடவி... ... கூழாங்கற்களாய் உணர்ந்து மயங்கும் முட்டாள்தனத்தில் மூழ்க முடியுமா? ஏனோ எனக்கு எதுவும் புரியவி;லை கலப்புப் பற்றி காந்தீயம் சொல்கிறது: இயற்கை உனக்குக் காமக் கிளர…
-
- 4 replies
- 1.1k views
-
-
பகவான் தத்துவஞானி ஓஷோ காமத்தை துறந்தால் பரிபூரண நிலைய அடையலாம்னு சொல்லி , காமத்தில மனதை ஒடுக்கணும்னு சொல்லி தியான வகுப்புகள நடத்தி பெரிய சர்ச்சைய கிளப்பினாங்க . இப்போ இந்த லவ்வேர்ஸ் கடவுளை பாக்கிறாங்களாம் . உங்க கருத்துங்கள எழுதுங்க . அடிக்காதீங்க . ஓக்கேயா ? முதலில் அறிமுகம் கொஞ்சமாய் சினிமாவை அலசியபின் செக்ஸ் பற்றிய தடுமாற்றமான துவக்கம் மெல்ல பாதுகாப்பான உறவில் கைவசம் காண்டம் இல்லாமலும் முடியும் என்றேன் கண்களை ஊடுருவிய கண்கள் நிலைக்க ஆக்ரோஷமான காமத்தை விரும்புகிறவள் நீ என்றாய் ஒரு பறவையைப் போல் என் காமத்தை அவசரப்படுத்த முடியாது நான் பாம்பு உன்னையும் பாம்பாக பற்றிக்கொள்ளத்தான் முடியும் என்றேன் அவளின் புன…
-
- 5 replies
- 1.8k views
-
-
தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய், தளர்வதற்காய்த் தள்ளாடும்... தேகங்களின் தேடல்களுக்கு, இடுக்களில் வடிந்தோடும் - மன்மத நீரில் நீந்தியபடியே... உயிர் பிரியும் போராட்டம்!!! பதின்மங்களில் பெற்றதை பலமுறை பழகிப் பார்க்க, தவறிய சந்தர்ப்பங்களை... இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய் பயின்றிடத் துடிக்குது, நெஞ்சம் - கொஞ்சம்! ஆனாலும் பக்கத்தில் இல்லையே... என் மஞ்சம்!!! "இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால், அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"
-
- 21 replies
- 4.7k views
-
-
காமம் அரவணைத்துக் கொள்! அன்பே அரவணைத்துக் கொள்! புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன் அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன் ஆசைப்படு! அதிகாரத்தோடு கேட்டுக்கொள் மோகப் படு! முடிந்தவரை முத்தமிட்டுக்கொள் உன் கரம் மட்டும் அறிந்த என் நெஞ்சத்தை உன் மார்பு கொண்டு பழுது பார் விதைத்துக் கொள்! விளைய விடு! மேய்ந்து கொள்! மீதம் வைக்கதே! அங்கம் அனைத்தும் அடக்கி விடு! ஆண்மை கொள்! பெண்ணே ஆண்மை கொள் என் ஆயுள் முழுவதும் உன் அங்கம் மட்டும் பணி செய்ய! மோகப் புரட்சி செய்! நீயே தொடங்கு! நீயே முடி! சேர்த்துக் கொள்! செப்பனிடு! படர்ந்து கொள்! பறக்க விடு! என் விரல் கொண்டு உன் உடல் உழுது கொள்! என் உதட்டு வரிகளி…
-
- 3 replies
- 2.7k views
-
-
காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான் இங்கே கருக்கப்பட்ட எம் …
-
- 0 replies
- 1.5k views
-
-
காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே... பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்…
-
- 4 replies
- 1.1k views
-
-
உன்னை பிரிய மனமின்றி பிரிந்து தனிமையில் திரிகிறேன் உன்னை பிடிக்காமல் அல்ல உன்னை காயப்படுத்தாமல் இருக்க...
-
- 16 replies
- 1.6k views
-
-
காலதேவனின் சாபம் காற்றடைத்த பைகளை நிரப்ப கருமேகங்களிடம் கையேந்தும் நிலை வர்ணங்களைப் பிரிக்கத் தெரியவில்லை எனக்கு நீலம்,பச்சை என கருமையும் செம்மையுமே என் கனவிலும் குடிகொள்கின்றன புரியாத புதிர்களாய்ப் புரட்டிப் போடப்படுகின்றன பொழுதுகள் புலர்ந்தாலும் சாய்ந்தாலும் விதைக்கப்படுகின்றன நச்சு விதைகள் நத்தைகளுக்கு கூட ஓடு இல்லையாம்- இது கொசுறுத்தகவல் கருவேலங்காட்டிற்குள் கானக்குயில் பாட்டிற்காய் காத்திருந்த காலங்கள் போய் கறிவாடை வீசாத விடியலுக்காய் காத்திருக்கின்றோம் மொட்டுக்கள் மலரமுன்னே வண்(ம்)டு(பு)களால் வன்புணரப்படும் போது பேசாதிருந்து பிறப்புறுப்புகளைப்பற்றி பேசியவுடன் பிறவிப்பலன் அடைந்ததாய் பெருமைகொள்கிறது பெண்ணியம் உச்சி மீத…
-
- 9 replies
- 1.9k views
-
-
-
- 9 replies
- 2k views
-