வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
'அஞ்சான்' பாக்ஸ் ஆபிஸில் மூன்று நாட்களில் 30 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. 'இதுவரை நான் நடித்த படங்களில் இது சிறந்த சாதனை' என கூறியுள்ளார் சூர்யா. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'அஞ்சான்' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து சூர்யா சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். "ஒவ்வொரு மனிதனும் ஒரு படத்தை விமர்சிப்பது அவரவர் உரிமை. தனிமனிதனின் எண்ணங்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். 'சிங்கம்' வெளியான போது சிலருக்கு அது ஒரு சாதாரண கதையாகவே தோன்றியது. கண்டிப்பாக 'சிங்கம்' மேல்தட்டு மக்களுக்கு பிடித்திருக்க வாய்ப்பில்லை. அதே போல 'அஞ்சான்' படமும் சிலரைக் கவராமல் இருக்கலாம். ஆனால், 'அஞ்சான்' எல்லா …
-
- 4 replies
- 1.3k views
-
-
பாலிவுட் சினிமாவை தாண்டி இந்த பச்சை குத்தும் கலாச்சாரம் தமிழ் சினிமாவையும் தொற்றி கொண்டது. அந்த வகையில் நடிகை நயன்தாரா தன் முன்னாள் காதலர் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தினார்.இதேபோல் நடிகை த்ரிஷா நிமு மீனை பச்சை குத்தினார். ஸ்ருதிஹாசன் பற்றி சொல்லவே தேவையில்லை. தற்போது அதேபோல் ஆடுகளம், ஆரம்பம் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் டாப்ஸி.இவர் தன் பின்பகுதியில் டாட்டூ குத்தி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து மோசமான கமண்டுகள் வந்ததால் அதை உடனே டெலிட் செய்துவிட்டார். இது குறித்து அவர் கூறும் போது ’ஏற்கனவே எனது கணுக்காலில் டாட்டூ வரைந்திருக்கிறேன். தற்போது இடுப்பின் பின்பகுதியில் வரைந்திருக்கிறேன். இங்கு வரைந்ததற்கு காரணம் இந்த 2 இடங்களையும் அ…
-
- 8 replies
- 1.3k views
-
-
https://www.youtube.com/watch?v=9TQjrjda4zI எனது பிரெஞ்சு நண்பர் ஒருவர் கட்டாயம் பாருங்கள் என்றார் நேரம் கிடைக்கும்போது பார்க்கலாம் என்றிருக்கின்றேன் ஏற்கனவே பார்த்தவர்கள் யாராவது...??
-
- 6 replies
- 1k views
-
-
இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்! - சிறப்பு பகிர்வு P சந்திரபாபு... தமிழின் சந்தோஷ பாபு. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும். சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்? கொழும்பில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா, தபேலா தாமு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்! காமராஜருக்கு அறிமுகமான குடும்பம். பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில், சிறுவனான சந்திரபாபுவை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவண…
-
- 1 reply
- 570 views
-
-
மறுபடியும் உளறி கொட்டிய குஷ்பு -அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? குஷ்புவால் கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியாது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு வாயை வைத்து சும்மா இல்லாமல் கற்பை பற்றி தப்பாக பேசி பல பேரிடம் திட்டுகளையும், அவமரியாதையும் பெற்று கொண்டவர்.அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கலைஞருக்கு வலது கை போல் செயல் பட்டார். பின்பு ஆட்சி மாறிய பிறகு சினிமா தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். சினிமாவை பற்றியும் அரசியல் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உளறி ரசிகர்களிடம் மொக்க வாங்கவது இவரின் வழக்கம். தற்போது மறுபடியும் ஒரு அனல் பறக்கும் விஷயத்தை பற்றி அவதுறாக பேசியுள்ளார் குஷ்பு. அதாவது திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போன்…
-
- 5 replies
- 905 views
-
-
யாராவது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் ''என்ன கப்பலா கவிழ்ந்துவிட்டது?'' என்று கேட்பார்கள். அப்படி கவிழ்ந்த கப்பலால் தான் ஒருவர் உலகிற்கு தன் திறமையை அடையாளம் காட்டினார் என்றால் நம்புவீர்களா? கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கதையை படமாக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆஸ்கர் வெண்ரது இந்த படத்துக்கு தான்! இந்த சாதனையாளரின் வாழ்க்கையும் டைட்டானிக் கதையை போன்று போராட்டங்கள் நிறைந்ததுதான்! கனடாவின் ஒன்டாரியோவில் 1954ம் ஆண்டு பிறந்தவர் கேமரூன். சிறு வயதில் தன் குடும்பம் கலிஃபோர்னியாவுக்கு இடம் மாறியதால் அங்கு பள்ளிப்படிப்பை ஆரம்பித்தார். இடையில் படிப்பில் நாட்டமின்றி பாதியிலேயே படிப்பை நிறுத்தி பள்ளிக்கு செல்லாமல் இருந்தார். மீண்டும் பெற்றோரின் வற்புறுத்தலால் ப…
-
- 0 replies
- 586 views
-
-
பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 76. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே… நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவிலேயே திரைப்படங்களில் அதிகப் பாடல்கள் பாடிய பின்னணி பாடகி என்ற சாதனையைப் படைத்தவர் லதா மங்கேஷ்கர். ஆனால், 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர் எஸ்.ஜானகி. ஜானகி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற ஊரில், 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பிறந்தார் சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. 1956-ல் அகில இந்திய வானொலி, பாட்டுப்போட்டி ஒன்றை…
-
- 0 replies
- 4.9k views
-
-
தமிழ் சினிமாவில் பெண்கள் பிரபஞ்சன் நான் அண்மையில் படித்த முக்கியமான புத்தகம், கே. பாரதி எழுதிய ‘தமிழ் சினிமாவில் பெண்கள்’ (விகடன் பிரசுரம்). பாதி வானத்தைத் தாங்குபவர்கள் என்றும் பாதி பூமியை நிரப்புபவர்கள் என்றும் நீட்டி முழக்கி ஆடம்பரமாகச் சொல்லப்படும் பெண்கள், நம் தமிழ் சினிமாவில் என்ன மாதிரி சித்தரிக்கப்படுகிறார்கள் என்கிற ஆய்வே இந்தப் புத்தகம். பெண்கள் பற்றி எழுதுவது என்பதும் சினிமாவில் சித்தரிப்பது என்பதும் பெண்கள் பற்றியது மட்டுமல்லாமல் மானுடம், மனிதகுலம் பற்றியது என்பதே உண்மையாகும். சினிமா பேசத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலிருந்து அண்மைக்கால, இன்றைய தமிழ் சினிமா பெண் பாத்திரங்களுக்குக் கொடுத்த இடம், பாத்திரங்களாகச் சித்தரித்த முறை, பெண்களின் …
-
- 0 replies
- 3.8k views
-
-
'எனக்கு அப்போ பதினாலு வயசு தெரியுமா?’ வா.மணிகண்டன் பெங்களூர் வந்த பிறகு சில சினிமா நடிகைகளிடம் பேச்சுவார்த்தை உண்டு. வெறும் பேச்சுவார்த்தைதான். வேறு எதுவும் இல்லை. அதுவும் நடிகைகள் என்றால் இப்பொழுது மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருப்பவர்கள் இல்லை. ஏதாவதொரு சமயத்தில் பிரபலமாக இருந்தவர்கள். நான்கைந்து பேர்களுடனாவது தொடர்பில் இருக்கிறேன். இந்த ஊருக்கு வந்த புதிதில் சில இணைய இதழ்களுக்காக நேர்காணல் செய்து கொடுக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. திரையில் பார்ப்பவர்களை நேரில் பார்த்து பேசுவதில் ஒரு ஆசை இருக்கத்தானே செய்யும்? இரட்டைச் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டேன். அந்த இதழ்களுக்கு சினிமா பி.ஆர்.ஓக்களோடு தொடர்பு இருக்கும் என்பதால் முகவரி, தொலைபேசி எண் என எல்லாவற்றையும் கொடுத…
-
- 0 replies
- 797 views
-
-
பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாத படம் என்று பார்த்திபன் அறிவித்த நாள் முதல் இந்தப் படத்தின் மீது பலருக்கு ஆவல். தமிழ் சினிமாவில் நடக்கும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கதை விவாதத்தின் போது, இந்த காட்சியில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா. அப்போது அந்தக் காட்சியில் குறிப்பிட்ட நடிகரே தோன்றி நடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, பிரகாஷ்ராஜ், விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யாருமே பணம் வாங்காமல் நடித்துள்ளனர். பார்த்திபன் இதில் நடிக்கவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம். அல்போன்ஸ் ஜோசப், …
-
- 0 replies
- 542 views
-
-
இசையமைப்பாளர் கங்கை அமரன் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரிபாட்டர் நாவல்கள் அனைத்தையும் ஹாலிவுட் பிரித்து மேய்ந்துவிட்டது. ரஜினி படத்துக்கு முதல்நாள் இரவே காத்திருப்பது போல் இந்த நாவலுக்கு அமெரிக்காவில் தூக்கம் விழித்த ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். ஹாரிபாட்டராக இதுவரை திரையில் தோன்றியவர் நடிகர் டேனியல் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டர் என்றதும் இவரது உருவம்தான் யாருடைய மனதிலும் வரும். டீன்ஏஜ் பருவத்துக்கு முன்பே இங்கிலாந்தின் அதிகம் சம்பாதிக்கும் நடிகராக ரெட்ஃகிளிப்பை உயர்த்தியது ஹாரிபாட்டர் கதாபாத்திரம்தான். ரவுலிங் அடுத்து ஒரு கதையை எழுதி வருகிறார். அதில் ஹாரிபாட்டராக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு யோசிக்காமல் உடனே நோ சொன்னார் ரெட்ஃகிளிப். ஹாரிபாட்டரின் குணாம்சங்களை அவரது குணங்களாக கருதுகி…
-
- 0 replies
- 495 views
-
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரொபின் வில்லியம்ஸ் தற்கொலை செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014 06:59 ஹொலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரும், மூன்று முறை ஒஸ்கார் விருதை வென்றவருமான ரொபின் வில்லியம்ஸ், தனது 63ஆவது வயதில், கலிபோர்னியாவிலுள்ள அவரது வீட்டில் நேற்று (11) மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கிறது. கடந்த சில நாட்களாக அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னுடைய நகைச்சுவையான நடிப்பினால் பல லட்சம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரொபின். இவரது மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பல தலைவர்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். ரொபினுக்கு மூன்று பிள்ளை…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஹொலிவூட்டில் கால் பதிக்கும் பாடகர் சிவா கணேஸ்வரன் 2014-08-11 11:56:11 இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும் சர்வதேச ரீதியில் பல்வேறு துறைகளில் பிரகாசித்து வருகின்றனர். இவர்களில் மேற்குலக இசைத்துறையில் சர்வதேச புகழ்பெற்ற ஒரு கலைஞராக சிவா கணேஸ்வரன் விளங்குகிறார். இலங்கையரான தந்தைக்கும் அயர்லாந்து தாயாருக்கும் மகனாக பிறந்தவர் சிவா மைக்கல் கணேஸ்வரன். இங்கிலாந்தின் பிரபல இசைக்குழுக்களில் ஒன்றான "வோண்டட்" குழுவின் 5 பாடகர்களில் ஒருவர் இவர். 2009 ஆம் ஆண்டில் செயற்பட ஆரம்பித்த வோண்ட்டட் இசைக்குழுவில் சிவா கணேஸ்வரனுடன் மெக்ஸ் ஜோர்ஜ், ஜே மெக்கின்னஸ், டொம் பார்க்கர், நேதன் ஸ்கைஸ் ஆகியோரும…
-
- 2 replies
- 824 views
-
-
சென்னையில் 15 இடங்களில் வருது அம்மா ஏ.சி தியேட்டர்கள்: ரூ.25க்கு டிக்கெட். சென்னை: சென்னையில் முதற்கட்டமாக 15 இடங்களில் அம்மா தியேட்டர்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு குளு குளு வசதியுடன் தியேட்டர்கள் கட்டப்பட உள்ளன. அம்மா தியேட்டர்களில் ரூ.25 க்கு டிக்கெட் விற்பனை செய்யப் பட உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள இடங்களில் ‘அம்மா திரையரங்கம்' அமைக்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். பயன்பாடு இல்லாத மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டிடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் காலி இடங்களில் இந்த திரையரங்குகள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கண்ணைக் கட்டும் கட்டணங்கள். பெரும்பாலான தி…
-
- 4 replies
- 778 views
-
-
தமிழகத்தில் தேசியத் தலைவர் – இயக்குனர் கௌதமன் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றி ஒரு முழுமையான படம் கோடம்பாக்கத்தில் தயாரானால் எப்படி இருக்கும்?இப்படியான ஒரு இரகசிய தகவல் சில மாதங்களாக அலையடித்துக்கொண்டிருக்கின்றது. ஈழமக்களின் சிரிப்பு கண்ணீர் போர் ரத்தம்,பிணவாடை,முள்வேலி என்று இப்போதைய நிலைமைவரை ஈழப்பேராட்டத்தையம் தலைவர் அவர்களையும் மையப்படுத்தி சினிமாவாக்க அத்தனை ஏற்பாடுகளிலும் இருக்கின்றார் இயக்குனர் வ.கௌதமன் சந்தணக்காடு வீரப்பனை பற்றி படம் எடுத்தவரே அவர்தான் என்று தமிழகத்தில் இருந்து வெளிவரும் தமிழக அரசியல் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. முழுமையாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் வரலாற்றினை சொல்லும் படத்தனை தயாரிக்கும் முயற்சியில் இயக்குனர் கௌதமன் ஈடு…
-
- 1 reply
- 778 views
-
-
பாடகி ஜென்சியுடனான வானொலிப் பேட்டி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்க…
-
- 9 replies
- 3.1k views
-
-
குக்கூ -விமர்சனம் அல்ல படிதல் மொழி இன ஒடுக்குதலை அறிந்ததாக சொல்லி போராடுபவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் அமைதி காக்கும் பொழுது உண்மையில் அவர்கள் போராளிகளை போன்று நடிப்பவர்கள் எனப் புரிந்து கொள்வோம்.. அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டிக்க துணிந்து வருபவனை நோக்கி நீ அந்த சாதி ..அதனால் வராதே என்பவனையும் போராளிகளாக சொல்லப்படுவதை மறுப்போம்.. மேலே சொல்லப்பட்ட கோபத்திற்கான பதிலை குக்கூவில் தேட வேண்டாம்..குக்கூ வேறு ஒன்று... குக்கூ போன்ற படங்களை விமர்சிப்பது பிரச்சனை இல்லை...ஆனால் எந்த சூழலில் என்பதைக் கூட புரியாத பதர்களின் மேட்டிமைத்தனமான அறிவு சீவி நிலையை மேலே சொன்ன கோபங்களோடு பொருத்தி பார்க்கவும்... ” படம் நல்லாருக்கு..ஆனா செகண்ட் ஆஃ…
-
- 7 replies
- 2.6k views
-
-
-
குருவியார் பதில்கள் குருவியாரே, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? (உமைய கணேஷ், மாயாகுளம்) சிவப்பு தோலுடன், 6 அடி உயரத்தில், இந்தி பேச தெரிந்தவராக இருக்க வேண்டுமாம்! *** விஜய் நடிக்கும் ‘கத்தி’ எப்படி இருக்கும்? (எச்.பகதூர், சென்னை) ‘பஞ்ச்’ வசனங்களுடன் ரொம்ப கூர்மையாக இருக்கும்! *** குருவியாரே, ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம் எது, அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணியாற்றினார்? (எஸ்.சந்திரசேகரன், முதியம் பாளையம்) ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம், ‘ஜென்டில் மேன்.’ எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன் ஆகிய இருவரிடமும் அவர் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்! *** ‘ராமானுஜன்’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்த சுஹாசினி, தொடர்ந்து அம்மா வேடங்களில் நடிப்பாரா? (ஆர்.பிரபு, க…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழம் சம்பந்தப்பட்ட எதையும் நேர்மையாக அணுக முடியாத சூழலே இங்குள்ளது. அப்படி எதையேனும் திரைப்படத்தில் காட்சியாக்கினால் சென்சாரை மீறி அது திரைக்கு வருவது கடினம். கடினம் என்ன... வரவே வராது. இந்த நடைமுறையின் வெளிச்சத்தில், ஈழம் குறித்து படம் எடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று பலரும் கூறிவருவது ஏற்கக் கூடியதே. சீமானும் இதனை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈழத்தை முதலீடாக கருதுகிறவர்கள் அதற்கு செவிமடுத்தால்தானே. பிரவீண் காந்தின் புலிப்பார்வையும் எதையும் சாதிக்கப் போவதில்லை. பிரபாகரனின் மகனின் கடைசி நிமிடங்கள் தமிழர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை காசாக்கும் முயற்சியாகவே அது உள்ளது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபாகரனின் மகனைப் போலவே படத்தில் நடித்த சிறுவனையும் அலங…
-
- 1 reply
- 615 views
-
-
அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க கல்லெறிந்தார். ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவை புக் பண்ணி வ…
-
- 2 replies
- 614 views
-
-
TRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண். நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை என்று வைரமுத்து எழுதிய பாடலில் கடைசியில் பாராவில்.... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே... என்று முடியும்... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் , தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் என்று அற்புதமான வரிகளை எழுதி போட்டு தாக்கி இருப்பார் வைரமுத்து... வாழ்வில் ருசி இருக்க வேண்டும் என்றால் தேடல் அவசியமாகின்றது... அது எல்லோருக்கும் சாத்தியப்படாது... தான…
-
- 2 replies
- 1.2k views
-
-
கத்தி திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்று தமிழக மாணவர்களின் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டு வருவதாக எமது தமிழக செய்தியாளர் தொிவிக்கின்றார். சிறீலங்கா இனப்படுகொலையாளன் மகிந்தவின் கைக்கூலி நிறுவனமான லைக்காவின் தயாரிப்பில் ஜோசப் விஜய் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி விரைவில் திரைக்கு வர இருக்கும் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் இயக்கங்கள் பரவலாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழகத்தின் உயர் மட்ட அரசியற் தலைவர்கள் கவனத்துக்கும் சென்றிருப்பதாகவும் செய்திகள் தொிவிக்கின்றது. மாணவர்களின் கடும் முயற்சியின் பயனாக இவ்வெளிப்பாடுகள் காணப்படுவதாக அறியப்படுகின்றது. http://www.sankathi24.com/news/44668/64//d,fullart.aspx
-
- 1 reply
- 713 views
-
-
http://youtu.be/TLm5NG2PvL0?list=PLTy0Vh2Tv1t-OGMRIpC_vvohkpki4wPdd
-
- 12 replies
- 1.8k views
-