Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாடகி ஜென்சியுடனான வானொலிப் பேட்டி இரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணியை வைத்துப் படம் பண்ணியிருந்த அனுபவங்களை வானொலிப்பேட்டிக்காகப் பகிர்ந்திருந்தார். ஒரு சில நாட்களின் பின்னர் ஜான் மகேந்திரன் தன்னுடைய சரவெடி படத்துக்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் சரவெடி என்ற படத்துக்காக மீண்டும் ஜென்சியைப் பாடவைத்திருப்பதாக மின்மடல் வந்திருந்தது. அவரிடம் ஜென்சியை ஒரு வானொலிப்பேட்டி எடுக்க வேண்டும் தொடர்பிலக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். ஜென்சியின் இலக்கத்தைக் கொடுத்து விட்டு, கொஞ்சம் சென்னைப்பாஷையில் பேசுங்க அப்பத்தான் புரியும் என்று சொல்லி வைத்திருந்தார். ஜென்சியின் இலக்க…

  2. குக்கூ -விமர்சனம் அல்ல படிதல் மொழி இன ஒடுக்குதலை அறிந்ததாக சொல்லி போராடுபவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் அமைதி காக்கும் பொழுது உண்மையில் அவர்கள் போராளிகளை போன்று நடிப்பவர்கள் எனப் புரிந்து கொள்வோம்.. அதே நேரம் சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டிக்க துணிந்து வருபவனை நோக்கி நீ அந்த சாதி ..அதனால் வராதே என்பவனையும் போராளிகளாக சொல்லப்படுவதை மறுப்போம்.. மேலே சொல்லப்பட்ட கோபத்திற்கான பதிலை குக்கூவில் தேட வேண்டாம்..குக்கூ வேறு ஒன்று... குக்கூ போன்ற படங்களை விமர்சிப்பது பிரச்சனை இல்லை...ஆனால் எந்த சூழலில் என்பதைக் கூட புரியாத பதர்களின் மேட்டிமைத்தனமான அறிவு சீவி நிலையை மேலே சொன்ன கோபங்களோடு பொருத்தி பார்க்கவும்... ” படம் நல்லாருக்கு..ஆனா செகண்ட் ஆஃ…

  3. நஸ்றியாவுடன் 43.53 நிமிடங்கள்

  4. குருவியார் பதில்கள் குருவியாரே, ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும்? (உமைய கணேஷ், மாயாகுளம்) சிவப்பு தோலுடன், 6 அடி உயரத்தில், இந்தி பேச தெரிந்தவராக இருக்க வேண்டுமாம்! *** விஜய் நடிக்கும் ‘கத்தி’ எப்படி இருக்கும்? (எச்.பகதூர், சென்னை) ‘பஞ்ச்’ வசனங்களுடன் ரொம்ப கூர்மையாக இருக்கும்! *** குருவியாரே, ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம் எது, அவர் யாரிடம் உதவி டைரக்டராக பணியாற்றினார்? (எஸ்.சந்திரசேகரன், முதியம் பாளையம்) ஷங்கர் டைரக்டு செய்த முதல் படம், ‘ஜென்டில் மேன்.’ எஸ்.ஏ.சந்திரசேகரன், பவித்ரன் ஆகிய இருவரிடமும் அவர் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்! *** ‘ராமானுஜன்’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்த சுஹாசினி, தொடர்ந்து அம்மா வேடங்களில் நடிப்பாரா? (ஆர்.பிரபு, க…

  5. ஈழம் சம்பந்தப்பட்ட எதையும் நேர்மையாக அணுக முடியாத சூழலே இங்குள்ளது. அப்படி எதையேனும் திரைப்படத்தில் காட்சியாக்கினால் சென்சாரை மீறி அது திரைக்கு வருவது கடினம். கடினம் என்ன... வரவே வராது. இந்த நடைமுறையின் வெளிச்சத்தில், ஈழம் குறித்து படம் எடுக்காமல் இருப்பதே சிறந்தது என்று பலரும் கூறிவருவது ஏற்கக் கூடியதே. சீமானும் இதனை பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈழத்தை முதலீடாக கருதுகிறவர்கள் அதற்கு செவிமடுத்தால்தானே. பிரவீண் காந்தின் புலிப்பார்வையும் எதையும் சாதிக்கப் போவதில்லை. பிரபாகரனின் மகனின் கடைசி நிமிடங்கள் தமிழர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை காசாக்கும் முயற்சியாகவே அது உள்ளது. படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பிரபாகரனின் மகனைப் போலவே படத்தில் நடித்த சிறுவனையும் அலங…

  6. அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்க கல்லெறிந்தார். ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால் அந்த முயற்சியை தற்காலிகமாக கைவிட்டுவிட்டார். ஆனால், இப்போது ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் குஷ்பு. அப்படி தான் தயாரிக்கும் படத்தை தனது கணவர் சுந்தர்.சி மட்டுமின்றி மற்ற இயக்குனர்களுக்கும் இயக்க வாய்ப்பு கொடுக்கப்போகிறாராம். அதோடு ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன்-ஹன்சிகாவை புக் பண்ணி வ…

  7. TRACKS-2013/உலக சினிமா/ஆஸ்திரேலியா/ 2736 கிமீ தனியாக பாலைவனத்தை நடந்தே கடந்த பெண். நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவமில்லை என்று வைரமுத்து எழுதிய பாடலில் கடைசியில் பாராவில்.... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ஆடல் போல தேடல் கூட ஒரு சுகமே... என்று முடியும்... தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் , தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் என்று அற்புதமான வரிகளை எழுதி போட்டு தாக்கி இருப்பார் வைரமுத்து... வாழ்வில் ருசி இருக்க வேண்டும் என்றால் தேடல் அவசியமாகின்றது... அது எல்லோருக்கும் சாத்தியப்படாது... தான…

  8. கத்தி திரைப்படத்தை தடைசெய்யவேண்டும் என்று தமிழக மாணவர்களின் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டு வருவதாக எமது தமிழக செய்தியாளர் தொிவிக்கின்றார். சிறீலங்கா இனப்படுகொலையாளன் மகிந்தவின் கைக்கூலி நிறுவனமான லைக்காவின் தயாரிப்பில் ஜோசப் விஜய் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி விரைவில் திரைக்கு வர இருக்கும் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர் இயக்கங்கள் பரவலாக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழகத்தின் உயர் மட்ட அரசியற் தலைவர்கள் கவனத்துக்கும் சென்றிருப்பதாகவும் செய்திகள் தொிவிக்கின்றது. மாணவர்களின் கடும் முயற்சியின் பயனாக இவ்வெளிப்பாடுகள் காணப்படுவதாக அறியப்படுகின்றது. http://www.sankathi24.com/news/44668/64//d,fullart.aspx

  9. http://youtu.be/TLm5NG2PvL0?list=PLTy0Vh2Tv1t-OGMRIpC_vvohkpki4wPdd

  10. இன்றைய நாள் வெறும் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல, யாழ் களத்தில் பல நெஞ்சங்களிர் குளிர்காற்றை வீச வைக்கும் தமிழ் சிறி 25 ஆயிரம் பதிவுகளை தொட்ட நாள் என்பதால் இந்த விசேட செய்தியை பகிர்கின்றேன். எல்லாப் புகழும் கிளுகிளுப்பு மன்னர் தமிழ் சிறிக்கே -------------------------------- லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் 'அஞ்சான்' படத்தின் காணொளி முன்னோட்டம் ஒரே நாளில் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் சாதனை படைத்தது என்று கோலிவூட்டில் ஒருநாளும் இல்லாத திருநாளாக விழா எடுத்தார்கள். இப்படி விழா எடுத்தால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் 'அஞ்சான்' காணொளி முன்னோட்டம் வெளியான சில தினங்களுக்கு ப…

  11. அலைகள் மூவிஸ் தயாரிப்பான உயிர்வரை இனித்தாய் முழுநீளத் திரைப்படம் நாளை - 27.07.2014 பாரீஸ் நகரத்தில் - சொம்ஸ் எலிசே பகுதியில் அமைந்துள்ள சிறந்ததோர் திரையரங்கிலே திரையிடப்படுகிறது. உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் திரைப்பட ரசிகர்கள் இருப்பதை அவர்களுடனான நேரடி உரையாடல்களின் போது தெரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு திரைப்படத்துறையை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு பொறுப்பு உள்ளது. அதனை இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய ஒரு காலகட்டம் உருவாகியிருக்கிறது. ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. தற்போது அந்த வேகம் கொஞ்சம் தணிந்துள்ளது. …

  12. வேலையில்லா பட்டதாரி - விமர்சனம் நட்சத்திரங்கள் : தனுஷ், அமலா பால், விவேக், சரண்யா, சமுத்திரக்கனி, சுரபி, செல் முருகன் மற்றும் பலர் கதை, திரைக்கதை, இயக்கம் : வேல்ராஜ் இசை : அனிருத் ஒளிப்பதிவு : அருண்பாபு எடிட்டிங் : ராஜேஸ் குமார் தயாரிப்பு : தனுஷ் எஞ்சினியரிங் முடித்துவிட்டு வேலையில்லாமல் 'தண்டச்சோறாக' இருக்கிற வேலையில்லா பட்டதாரி வேலை கொடுக்கிற பட்டதாரியாக மாறி சாதிக்கிறதுதான் படத்தின் கதை. இந்தச் சிறிய கதையை பெரிய கதையாக ரசிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் வேல்ராஜ். 'எந்திரிடா தண்டச் சோறு' என்று ஆரம்பிக்கிற படம் பின்னர் எந்த இடத்திலும் ரசிகர்களை தூங்க விடாமல் ரசிக்க வைக்கிறது. பி.ஈ (பொறியியல்) பட்டம் பெற்ற வேலையில்லா பட்டதாரி ரகுவரனாக தனுஷ். ஆதரிக்கிற அம்…

  13. பாதாள பைரவியும் ஹாரிபாட்டரும் இன்று எனது மாமா வீட்டில் தொலைக்காட்சிகளை சேனல்களை மாற்றிக்கொண்டிருக்கும்போது,சன் DTH ன் உருப்படியான சேனலான தமிழ் சினிமா கிளப்பை காண நேர்ந்தது.அதில் ஏதோ கருப்பு வெள்ளைத்திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு நிமிடக்காட்சியைப்பார்த்ததும் தான் தெரிந்தது,அது பாதாள பைரவி என்ற தமிழ் டப்பிங் தெலுங்கு படம் என்று.நான் போன வாரம் இந்த படத்தின் அரைமணிநேரக்காட்சிகளை ,இதே சேனலில் பார்த்ததால்,எனக்கு இந்த படம் முழுவதையும் பார்க்க வேண்டுமென தோன்றியது.படத்தையும் பார்த்தேன்.என்னை வியப்புக்குள்ளாக்கி,ஒரு நிமிடம் கூட போர் அடிக்காமல்,அவ்வளவு அருமையாக இழுத்துச்சென்றது இத்திரைப்படம். சரி,கதையை பற்றி சிறிதளவு சொல்லிவிட்டு ,நான் சொல்லவந்த கருத்தை தெரி…

  14. சாமானிய நாயகர்களின் மரணம் சுரேஷ் கண்ணன் வாரம் ஒரு முறை மாத்திரமே திரைப்படம் ஒன்றைக் காண கூடிய தூர்தர்ஷன் காலக்கட்டத்தில் அதைக் காணப் போகும் பரவசத்தின் ஊடே பெயர்கள் ஓடும் போது 'சண்டைக்காட்சிகள் அமைப்பு" என்கிற வார்த்தை வருகிறதா என்பதை நண்பர்களுடன் இணைந்து கூர்மையாக கவனித்து நிச்சயித்துக் கொள்வோம். அந்த வார்த்தைதான் அந்தப் படத்தை தொடர்ந்து பார்க்கப் போகிறோமோ அல்லவா என்பதை தீர்மானிக்கும் விஷயமாக அப்போது இருந்தது. ஹீரோ என்று ஒருவன் இருந்தால் அவன் நிச்சயம் சண்டை போடத்தெரிந்தவனாகத்தான் இருந்தாக வேண்டும், அல்லாவிடில் அவன் ஹீரோவே அல்ல என்று நம்பிக் கொண்டிருந்த விடலை வயதுக் காலத்தை தாண்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்தின் காட்சி என்னை சற்று கலைத்து…

  15. கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற பரபரப்பான சூழல் கோடம்பாக்கத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. ஒருசாரர் ரஜினி பீல்டில் இருக்கும்போதே அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு என்ன அவசியம் இருக்கிறது எனறு கருத்து சொல்லி வந்தாலும், அது யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. குறிப்பாக, விஜய் அஜீத் ரசிகர்கள் இது சம்பந்தமாக அடிக்கடி இணையதளங்களில் மோதிக்கொண்டு வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே விஜய்யின் தலைவா படத்தின் ஆடியோ விழாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அப்படத்தின் டைரக்டர் ஏ.எல்.விஜய் மேடையில் அறிவித்தார். இதற்கு அஜீத் ரசிகர்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. என்றாலும், சமீபத்தில் ஒரு வார பத்திரிகை தாங்கள் நடத்திய சூப்பர் ஸ்டார் க…

  16. காசு... பணம்... துட்டு... மணீ மணீ... கவிப்பேரரசு மீது மாணவர்களின் ஆதங்கம் கவிப்பேரரசு வைரமுத்து மீதுள்ள அன்பிலும் மரியாதையிலும் அவரை தங்கள் கல்லூரியின் தமிழ் இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்திருக்கிறார்கள் ஒரு கல்லூரியின் மாணவர்கள். அவர்களுக்கேற்பட்ட அனுபவத்தை சம்பந்தப்பட்ட மாணவர் ஜோ‌ பிரிட்டோ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விரிவாக கூறியுள்ளார். இந்த பதிவை ஒட்டிதான் இப்போது இரு பிரிவாக பிரிந்து ஃபேஸ்புக்கில் பலரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பதிவை நீங்களும் படித்துப் பாருங்கள். கவிஞர் வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கல்லூரி தமிழ் இலக்கிய விழாவில் உரை ஆற்ற அழைத்தோம். முதலில் அவர்களுடைய உதவியாளரை தொடர்பு கொண்டு பேசினோம். கவ…

  17. Started by arjun,

    ரகுமான் இசையில் அடுத்த ஆங்கிலப்படம் .ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம்ஸ் வொர்க்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 8 திகதி வெளிவருகின்றது .

    • 0 replies
    • 576 views
  18. 'காதல்' படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமான தண்டபாணி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலர் நடித்த 'காதல்' படத்தில் நடித்தவர் தண்டபாணி. அப்படத்தில் அவரது வில்லன் நடிப்பு மற்றும் குரல்வளம் ஆகியவை பிரபலமானதால் 'காதல்' தண்டபாணி என்று அழைக்கப்பட்டார். 'காதல்' படத்தைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு வாய்ப்புகள் வரத் தொடங்கியது. 'இங்கிலீஷ்காரன்', 'சித்திரம் பேசுதடி', 'உனக்கும் எனக்கும்', 'வட்டாரம்', 'முனி', 'மருதமலை', 'மலைக்கோட்டை', 'வேலாயுதம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜிற்கு நண்பராக நடித்திருந்தார். இன்ற…

  19. ஸெரியா கோசல் அமெரிக்கா, கனடாவிற்கு வருகை தருகிறார். Hello!! My US Canada 2014 tour begins this August! All set for it!! Come all of you, ok!

    • 0 replies
    • 438 views
  20. சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் எப்படி சின்ன குழந்தையும் ரஜினி என்று சொல்லுமோ அதேபோல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் சிம்பு என்று வளர்ந்தவர்களும் சொல்லிய ஒருகாலம் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அவரது ஸ்டைலும் முடியை கோதுகிற விதமும் டயலாக் டெலிவரியும் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பொருத்தமாக இருந்தது. சிம்பு வளர்ந்த போது பட்டமும் லிட்டில் என்பதிலிருந்து யங் ஆக வளர்ந்தது. படங்களில் யங் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டார். அவரது ரசிகர்களே அந்தப் படத்தைச் சொல்லி அவரை அழைப்பதில்லை. பட டைட்டிலில் மட்டும் சிம்புவின் பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டிருந்த பட்டத்தை துறப்பதாக ஓர் அறிக்கை வந்துள்ளது சிம்புவிடமிருந்து. எனக்குநானே சில வரையறைகளை…

    • 1 reply
    • 507 views
  21. ஜூலை 17: பாரதிராஜா பிறந்ததினம் ”என் இனிய தமிழ் மக்களே. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன் …" இந்த அறிமுக வார்த்தைகளுக்குக் கிடைக்கும் கரவொலி 35 வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருப்பதே, இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சாதனைகளுக்குச் சான்று. நேற்று பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு வாழ்த்தைச் சொல்லி, அவரது சாதனைகளை விவரிக்கிறேன். அவர் இயக்கியவை 43 படங்கள். அவற்றில் 32 நேரடித் தமிழ்ப் படங்கள், எஞ்சியவை பிற மொழிப் படங்கள் (தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில்). இந்தக் கட்டுரைக்காக எனக்குப் பிடித்த 11 படங்களைத் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளேன். 16 வயதினிலே (1977): இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தடத்தையே மாற்றியவர் பாரதிராஜா. முழுக்க முழுக்க அச்சு அசலா…

    • 0 replies
    • 528 views
  22. ஏ.ஆர்.ரகுமானுக்கு அமொரிக்க பல்கலைக்கழகத்தினால் கௌரவ டொக்டர் பட்டம் இந்திய சினிமாவின் உலக அடையாளம் என்றால் ஏ.ஆர்.ரகுமான் தான். இவர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனருக்காக 2 ஒஸ்கார் விருதை வாங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தார். தற்போது மீண்டும் ஹாலிவுட்டில் மில்லியன் டொலர் ஆம் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இவரை மேலும் கௌரவம் சேர்க்கும் விதமாக இவரது சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ரிக்லீ இசைப் பல்கலைக்கழகம் கௌரவ ​டொக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இப்பட்டம் இவருக்கு ஒக்டோபர் 24ஆம் திகதி ப்ரிக்லீ இசைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=364063238919…

  23. வலுவில்லாத ஒரு திரைக்கதையின் மூலம் எந்தவொரு அதிஉயர் கன்சப்டையும் சிதைத்துவிட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். இருந்தாலும் படத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட Concept நவீன யுகத்தின் அதி உன்னத கண்டுபிடிப்பாக போற்றப்படும் இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இவற்றின் பாரதூரம் பற்றிய ஒரு சீரியஸ் அலசலை படத்தின் இயக்குனர் Wally Pfister மேற்கொண்டிருக்கிறார். இவர் கிறிஸ்டோபர் நோலனின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவுக்காக ஆஸ்கார் விருதையும் வென்றிருக்கிறார். நோலனின் பாதிப்பு படத்தில் நிறைய இடங்களில் தெரிவது தவிர்க்க முடியாததாகிறது. திரைப்படத்தில் பல இடங்களில் நிறைய விஞ்ஞான புனைவுத் திரைப்படங்களை நினைவூட்டுவதை தவிர்க்க முடியவில…

  24. நயன்தாராவின் காதலர்களின் வரிசையில் புதிதாக ஒரு பிரபலமான தயாரிப்பாள மற்றும் நடிகராகவுள்ள அரசியால் வாரிசு பிரபலத்தின் பெயர் ஒன்றும் சேர்ந்துள்ளது. காதல் சர்ச்சைகளுக்கும் நயன்தாராவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. நயன்தாரா விட்டாலும் ஊடகங்களின் கிசுகிசுக்கள் அவரை விடுவதாக இல்லை. அண்மையில் தமிழகத்தின் குமுதல் ரிப்போட்டரில் நம்பர் நடிகைக்கும் அரசியல் வாரிசு நடிகருக்கும் காதல் என புதியதொரு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சிம்புவுடன் காதல் முறிவு. பின்னர் திருமணம் முடித்த பிரபுதேவாவுடன் திருமணம் வரையில் சென்ற நயன்தாராவின் காதலும் பிரிவில் முடிந்தது. இதன்போது நயன்தாராவுக்கு ஏகப்பட்ட பொருளாதார நஷ்டம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இவற்றுக்கிடையே …

  25. சென்னை சேப்பாக்கத்திலுள்ள மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி சென்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், வழக்கறிஞர் காந்தி ஆகியோர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிளப் விதிகளின்படி வேட்டி அணிபவர்களுக்கு உள்ளே அனுமதியில்லை என இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டது தமிழக அளவில் பிரச்சனையாகி சட்டசபையிலும் எதிரொலித்தது. வேட்டின்னா அவ்வளவு கேவலமா என தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையல்லவா? பல மன்னர்கள் வேட்டி அணிந்ததற்கான ஆதாரம் உள்ளது. தமிழகத்தின் சர்ச்சைப் பொருளான வேட்டியை தமிழ் திரையுலகம் இதுவரை எப்படி பயன்படுத்தி வந்திருக்கிறது? அதற்கு கௌரவம் சேர்த்திருக்கிறதா இல்லை இழுக்கை ஏற்படுத்தி வைத்திருக்கிறதா? பொதுவாக ஆண்களின் உடை என்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.