Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் ‘வாரிசு’ வாய்க்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா…

  2. 'வாரிசு' விஜய் பிறந்தநாள்: ஜோசஃப் விஜய் இளைய தளபதியாகி தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத பல தகவல்களுடன் விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 21 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ACTORVIJAY நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த தினத்தை, கொண்டாடும் நிலையில், அவர் திரையுலகுக்கு வந்து தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதி என்ற பெயரில் வளர்ந்து நிற்பது எப்படி என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்த ஜோசஃப் விஜய்தான், இன்றைய த…

  3. சந்தானம் ஜோடியாக விசாகா நடித்த கண்னா லட்டு தின்ன ஆசையா படத்தை அடுத்து மீண்டும் அதே ஜோடியயை வைத்து சாய் கோகுல் நாம்நாத் என்பவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்த படத்திற்கு வாலிப ராஜா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம், விசாகாவுடன் மற்றொரு ஹீரோயினாக சூது கவ்வும் படத்தின் விஜய் சேதுபதியின் கற்பனைக் காதலியாக நடித்த சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இதில் சந்தானம் மனநல மருத்துவராக வருகிறாராம். விசாகா மனநோயாளியாகவும், சந்தானத்தின் காதலியாகவும் வருகிறார். சஞ்சிதா ஷெட்டிக்கு கிட்டத்தட்ட வில்லி வேடம். காதல், காமெடி செண்டிமெண்ட் கலந்த ஒரு பொழுதுபோக்கான படமாக இது அமைகிறது என இயக்குனர் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பி…

    • 0 replies
    • 433 views
  4. நண்பர்களே ! வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே? நண்பர் ஒருவர் எழுதியது : Dear Friends, Please update your latest and favourite hit songs here.... if possible its link to hear or download.. It will be helpful to NRIs to know what is the latest hit song now... Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market Latest Ghana type song ...is here http://www.raaga.com/getclip.asp?id=999999029342 Vazha Meenu Singer(s): Ghana Ulag…

  5. தென் கிழக்கு தேன் சிட்டு ... இந்த பாடலில் ஒரு வரி பனங் கறுக்கும் பால் சுரக்கும் இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?

      • Thanks
      • Haha
      • Like
    • 13 replies
    • 1.4k views
  6. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் தன் அம்மா மற்றும் அக்காவுடன் வசித்து வருகிறான் சிறுவன் சிவனணைந்தான் (பொன்வேல்). அவன் வாழ்க்கையில் வெறுக்கும் ஒரே விஷயம் வாழைத்தார் சுமப்பது. வறுமையான குடும்பம், அப்பா இல்லை, வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும் என்பதற்காக தாயின் வற்புறுத்தலால் பள்ளி விடுமுறை நாட்களில் பெரும் துயரத்துடன் வாழைத்தார்களை சுமக்க செல்கிறான். அதனால் இரவில் வலியால் துடிக்கிறான். வாழைத்தார் சுமக்கும் அவனது ‘கனமான’ வாழ்க்கையை இலகுவாக்குவது பூங்கொடி மிஸ் (நிகிலா விமல்). இப்படியாக கறுப்பு பக்கங்களும், நடுவே சில ‘கலர்ஃபுல்’ பக்கங்களும் சிவனணைந்தான் வாழ்க்கையை ஆட்கொள்கின்றன. இதனிடையே, அதே ஊரில் வாழைத்தார் சுமக்கும் கனி (கலையரசன்) ஊதிய உயர்வு கேட்டு ஆட்களை திர…

  7. வாழ்: சினிமா விமர்சனம் நடிகர்கள்: பிரதீப், டிஜே பானு பார்வதமூர்த்தி, ஆரவ் எஸ். கோகுல்நாத், திவா, நித்யா; ஒளிப்பதிவு: ஷெல்லி கலிஸ்ட்; இசை: பிரதீப் குமார்; இயக்கம்: அருண் பிரபு புருஷோத்தமன். வழக்கமான தமிழ் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு, அருவி என்ற திரைப்படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமனின் அடுத்த படம்தான் இந்த 'வாழ்'. ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைசெய்யும் சாதாரண இளைஞனான பிரகாஷின் (பிரதீப்) வாழ்க்கையில் குறுக்கிடும் ஒரு இளம்பெண்ணாலும் (டிஜே பானு) அதனால் அவன் மேற்கொள்ளும் பயணங்களாலும் அவனது வாழ்க்கையே திசைமாறிப் போகிறது. பயணத்தின் முடிவில் நாயகன் என்னவாக ஆகிறான் என்பதே கதை. 'நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நாம் வாழ்வை …

  8. வாழ்க்கையில் குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். – எயிட்ஸ் பிடித்த ஒரு பிரபல நடிகையின் கதை.. June 29, 2013 9:15 am பதிந்தவர் Supes கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார்…

  9. வாழ்க்கையை கற்றுத்தருகிற பூமி 'தமிழீழம்' இயக்குநர் மகேந்திரன் பேட்டி -------------------------------------------------------------------------------- சமீபத்தில் சினிமாவை சொல்லித்தர தமிழீழம் சென்று வந்திருக்கிறார் டைரக்டர் மகேந்திரன்.. தமிழ் சினிமாவின் பல விதங்களை விமர்சித்து நம்மிடம் பேசியனார் அனலும் சாந்தமும் சூடும் பறந்த பேட்டியிலிருந்து விரைவில் 'சாசனம்' வெளிவரப்போகிறதா சந்தோஷமாக இருக்கு... அப்படியரு சூழ்நிலை வந்திருக்கு. எதுவும் சுமூகமான நிலைக்கு சம்பந்தமில்லாத நிலையில் இல்லை. தமிழ்நாட்டிலேயே முழுக்க முழுக்க ராஜ அம்சம் கொண்ட பகுதி செட்டிநாடு நகரத்தார்களின் வாழ்க்கை தான் கதை. அவர்களின் பழக்கவழக்கங்கள் பளீரென்று எதையும் பெரிதாகச் செய்கிற…

    • 0 replies
    • 1.1k views
  10. கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை கூடும் என்ற அச்சம் உண்டு அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம், வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும். வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற, சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய படங்கள். காந்தி இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் …

  11. வாழ்த்துகள் - விமர்சனம் மாதவன், பாவனா, கூத்தப்பட்டறை முத்துசாமி, இளவரசு, மல்லிகா சுகுமாரன் நடிப்பில், பி.எல். சஞ்சய் ஒளிப்பதிவில், யுவன் சங்கர்ராஜா இசையில், சீமான் இயக்கியுள்ள படம். தயாரிப்பு பிரமிட் சாய்மீரா அண்ட் அம்மா கிரியேஷன்ஸ். மாதவன் நண்பன் திருமணமானவன். அவன் மனைவி சண்டைபோட்டதன் விளைவாக நண்பனின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி முதியோர் இல்லம் சென்று விடுகிறார்கள். நண்பனின் மனைவியே இதற்குக் காரணம். திருமணமானால் தன் பெற்றோருக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என பயன்படும் மாதவன், தன் பெற்றோரை மதிக்கிற மாதிரி ஒரு பெண் கிடைக்கமாட்டாள் என்று நினைக்கிறார். அப்போது மாமியாரையும் தாயைப் போல நினைப்பதாகக் கூறும் ஒருவளின் பேட்டி டிவியில் வருகிறது. அது பாவனா. …

  12. வாவ்...தமிழில் செம சினிமா! - ‘மாநகரம்' விமர்சனம் நான்கு கோணங்கள், மூன்று பிரச்னைகள், இரண்டு காதல்கள் இவை ஒரு சம்பவத்தில் மாநகரின் இயக்கத்தில் என்னவெல்லாம் சலனங்களை உண்டாக்குகிறது என திக் திடுக் திரைக்கதையில் விவரிக்கிறது ‘மாநகரம்’..! படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்... படக்குழுவுக்கு அழுத்தமான கைகுலுக்கல் மற்றும் பாராட்டு. சென்னைக்கு மாநகர அந்தஸ்து கொடுக்கும் பின்னணியை, அந்த அந்தஸ்துக்காக சென்னை கொடுக்கும் விலையை இவ்வளவு உயிரும் உணர்வுமாக கண்முன் கொண்டு வந்ததற்கு சபாஷ்..! ஸ்டார் வேல்யூ, மாஸ் புரமோஷன், டாப் ஸ்டார் நடிகர்கள், உலகளாவிய ரிலீஸ் என்று தமிழ் சினிமா உலகம் பரபரக்கிறது. இடையே, ’சிங்கம்’ சூர்யா வில்லனை விரட்டி முந்துவதுபோல், …

  13. விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆட மறுத்தது ஏன் என்பதற்கு திவ்யா பதிலளித்தார். இதுகுறித்து திவ்யா கூற¤யதாவது:வாரணம் ஆயிரம் படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்ததாக பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். அடுத்ததாக காதல் டூ கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். மணிரத்னத்தின் உதவியாளர் மிலின்த் ராவ் இயக்குகிறார். ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன். இது முழுக்க காமெடியான குடும்ப கதை. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் வேடம். சிறிதும் கலாசார சம்பந்தமே இல்லாத இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், காதலிக்கிறார்கள். இதன் விளைவுகளை யூமர் கலந்து இப்படம் சொல்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயஸ்ரீ நடிக்கிறார். மவுலி முக்கிய வேடம் …

    • 0 replies
    • 2.7k views
  14. விகடன் விருதுகள்: சிறந்த நடிகராக விஜய் தேர்வு! ஆனந்த விகடன் வார இதழின் 2017-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக விஜய்யும் சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சிறந்த படத்துக்கான விருது அறம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த வில்லன் - விஜய் சேதுபதி, சிறந்த வில்லி - ஷிவதா. சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ். வாசன் விருது இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த பாடகராக அனிருத்தும் சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷலும் தேர்வாகியுள்ளார்கள். விருதுகள் …

  15. விக்னேஷ் சிவனுடன் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிய நயன்தாரா! கோலிவுட்டின் பிரபல ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா. இருவரும் பிறந்த நாளாக இருந்தாலும் சரி, பண்டிகை தினங்களாக இருந்தாலும் சரி இணைந்து கொண்டாடுவார்கள். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவது நயன்தாராவின் வழக்கம். இந்நிலையில், அண்மையில் காதலர் தினம் முடிந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தங்களின் கொண்டாடத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர். http://www.dinamani.com/cinema/cinema-ne…

  16. அபத்தமான தேய்வழக்குகளையும் எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய தலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்களங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா. இதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது. இதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய முயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார். ‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி. அவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’ இது தொடர்கிறது. தூங்காவனத்தைப் (Nuit Blanche) போ…

    • 0 replies
    • 1.4k views
  17. விக்ரமின் படத்திலிருந்து விலகிய த்ரிஷா! ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியுள்ளார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாமி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஹரி இயக்கத்தில் விக்ரம், மற்றும் த்ரிஷா, விவேக் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படத்தில் விக்ரம் போலீஸாக நடித்திருந்தார். சாமி படம் வெற்றி பெற்றதை அடுத்து 2-ம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதில் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா, ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகி…

    • 0 replies
    • 369 views
  18. ஆட்டோகிராஃப் என்பது வெறும் கையெழுத்தல்ல. அது ஓர் ஆவணம். ஒரு மனிதன் பற்றிய ஞாபகங்களைக் கிளறிவிடும் அடையாளச் சின்ன பொதுவாக, மனதுக்குப் பிடித்த ஹீரோ, ஹீரோயின்களிடோமோ அல்லது பிரபலங்களிடமோ ஆட்டோகிராஃப் வாங்க விரும்புவது நமது இயல்பு மட்டுமல்ல, கனவும்கூட. என்றாலும், நம் எல்லோருக்குமே அந்த கனவு எளிதில் நிறைவேறிவிடுவதில்லை. அதிலும் குறிப்பாக, எந்நேரமும் ஷூட்டிங், ஷூட்டிங் என்றே ஓடிக்கொண்டிருக்கும் சினிமா ஸ்டார்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. ஆனால், அபிமான நட்சத்திரங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க …

  19. சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளையும் சாதி, மதங்களை மறந்து மக்கள் உதவியதையும் காட்சிப்படுத்தி நடிகர் விக்ரம் புதிய பாடல் ஆல்பம் உருவாக்குகிறார். இதில் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, பிரபுதேவா, ஜீவா, பரத், நடிகைகள் அமலாபால், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னையில் கடந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தனர். ஹெலிகாப்டர்களில் வந்து ராணுவத்தினர் போட்ட உணவுப் பொட்டலங்களுக்காக மக்கள் அல்லாடிய பரிதாபங்களை பார்க்க நேர்ந்தது. அடையாறு, கூவம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வந்து நகரம் முழுவதையும் மிதக்க வைத்தது. அரசு துறையினர், தொண்டு நிறுவத்தினர், நடிகர், நடிகைகள், இளைஞர்கள் இரவு பகலாக நிவார…

  20. குறிப்பிட்ட ரசிகர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி ரசிக்கப்படும் நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கஷ்டப்பட்டு நல்ல நடிகர் என்ற இமேஜையும், தேசிய விருதையும் பெற்ற அவரது படங்களை ரசிகர்கள் ஓரளவுக்கு எதிர்ப்பார்க்கவே செய்கிறார்கள். தெய்வத் திருமகள் படம் முழுக்க முழுக்க ஹாலிவுட் காப்பியாக இருந்தாலும், விக்ரம் நடிப்புக்காக அந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு அதிரடியாக ஒரு படம் தருவதாகக் கூறி ராஜபாட்டையை வெளியிட்டுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக திறமையான இயக்குநர் எனப் பெயரெடுத்த சுசீந்திரன், தேசிய விருது பெற்ற விக்ரம் காம்பினேஷனில் உருவாகும் படம் என்பதால், தூள்…

  21. விக்ரம் பிறந்தநாள்: டப்பிங் கலைஞராக தொடங்கி முன்னணி நடிகரான ‘சீயான்’ விக்ரமின் கதை - பிறந்தநாள் பகிர்வு ACTOR VIKRAM OFFICIAL / FACEBOOK ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் மெனக்கெடும் கலைஞராக அறியப்படுபவர் 'விக்ரம்'. இன்று (ஏப்ரல் 17)அவருடைய 54ஆவது பிறந்தநாள். விக்ரமின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அவர் கடந்து வந்த பாதை குறித்த ரீவைண்ட்ர் இதோ! விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவர் பிறந்த ஊர் சென்னை. தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமிற்கு சி…

  22. தரமான நடிகர்கள் இருவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி, மாதவன் என்ற இரண்டு தரமான நடிகர்கள் இணைந்து நடித்த விக்ரம் வேதா இன்று உலகம் முழுவதும் வெளிவர, இருவருமே மிரட்டினார்களா? பார்ப்போம். கதைக்களம் விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி இருவருக்கும் இடையே நடக்கும் நியாயப்போராட்டமே விக்ரம்வேதா ஒன் லைன். மாதவன் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அவரின் ஒரே டார்கெட் வேதா. எல்லோருமே வேதாவை எதிர்நோக்கி காத்திருக்க, வேதா தானாகவே வந்து போலிஸில் சரண் அடைகிறார். அதை தொடர்ந்து அவர் மாதவனிடம் தன் கதையை கூற ஆரம்பிக்கின்றார். அப்படி கூறுகையில் மாதவனுக்கு ஒரு சில விஷயங்கள் புரிய வருகின்றது. வேதாவை நாம் தேடி போகின்றோமா? இல்லை வேதா நம்…

    • 8 replies
    • 1.7k views
  23. விக்ரம்: எப்படி இருக்கிறது படம்? - ஊடகங்களின் விமர்சனம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VIKRAM நடிகர்கள்: கமல்ஹாசன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா, ஹரீஸ் உத்தமன், காயத்ரி ஷங்கர்; இசை: அனிருத்; இயக்கம்: லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதியன்று வெளியாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு பல்வேறு இதழ்கள் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. அதிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். கமஹ் ஹாசனின் சண்டைக் காட்சிகளும் உடல் மொழியும், சண்டைக் காட்சிகளில் வெளியாகும் ஆக்ரோஷமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.