வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரக்கப் பேசும் படமே 'வெள்ளைப்பூக்கள்'. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான விவேக் அமெரிக்காவில் இருக்கும் மகனுடன் ஓய்வுக்காலத்தைக் கழிக்க அங்கு செல்கிறார். மக்கள் நடமாட்டமே இல்லாத அமைதி சூழ் உலகு அவருக்குப் புதிதாக இருக்கிறது. மகன் தேவ் உடன் பேசும் விவேக் மருமகள் பெய்ஜி ஹெண்டர்சனுடன் பேசாமல் தன் வேலையை மட்டும் பார்க்கிறார். அமெரிக்காவில் இருக்கும் மற்றொரு தமிழரான சார்லியின் அறிமுகப் படலத்துக்குப் பிறகு அவரும் விவேக்கும் சகஜமாகப் பழகி அமெரிக்காவில் இஷ்டம் போல் உலா வருகிறார்கள். இந்நிலையில் திடீரென்று விவேக்கின் பக்கத்து வீட்டுப் பெண் மோனா கடத்தப்படுகிறாள். அதற்கடுத்த சில நாட்களில் கார்லோஸ் என்ற பள்…
-
- 1 reply
- 982 views
-
-
சீமான் நடித்த ’மகிழ்ச்சி’ படத்தை இயக்கியவர் கௌதமன். இவர் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு "சினிமாவுக்குப் போன சித்தாளு" என்ற ஜெயகாந்தனின் குறுநாவலை டெலிஃபிலிமாக எடுத்தவர். இந்த முயற்சிகளின் மூலம் வெளிச்சத்துக்கு வராத வ.கௌதமன் மக்கள் தொலைகாட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் "சந்தணக்காடு" மெகா தொலைகாட்சித் தொடரின் மூலம் புகழ் பெற்றார். சந்தண வீரப்பனின் வாழ்க்கையை இந்தத் தொடரில் அவர் மிகநேர்மையாகவும் துணிச்சலாகவும், காட்சிபடுத்தி வந்தார். தொலைக்காட்சிக்கு முன் தணிக்கை இல்லாத காரணத்தால் பல உண்மைகளை மறைக்காமல் இந்த சந்தணக்காடு தொடர் ஒளிபரப்பானது. இந்நிலையில் ஈழமக்களின் விடுதலையில் அக்ககறை கொண்ட உணர்வாளராக, இவர் மக்கள் போராட்ட மேடைகளிலும் பிரபல்யமாகி வருகிற…
-
- 0 replies
- 924 views
-
-
சென்னை: கடந்த நான்காண்டுகளாக பேசப்பட்ட நயன்தாரா - பிரபு தேவா காதல் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. இருவருக்கும் திருமணம் நடக்காது என்றும், நிரந்தரமாகப் பிரிந்துவிட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமணம் கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்ட நிலையில், இப்போது புதிய படங்களுக்கு கால்ஷீட் தருவதில் தீவிரமாக உள்ளார் நயன்தாரா. கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர் பிரபு தேவாவும் நயன்தாராவும். இந்தக் காதலுக்காக தனது மனைவியை விவாகரத்தும் செய்துவிட்டார் பிரபு தேவா. அவருக்கும் முன்னாள் மனைவி ரம்லத்துக்கும் பாகப்பிரிவினை கூட நடந்துவிட்டது. திருமணத்துக்காக நயன்தாராவும் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து…
-
- 16 replies
- 1.7k views
-
-
இசையுடன் ஸ்காலர்ஷிப்பும் தருகிறார் ரஹ்மான் -சென்னையில் ஒரு (இசை)மழைக்காலம்! இசை உலகத்திற்கு இயற்கை தந்த பரிசாகவே கருதப்படுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுக்க கிளை பரப்பியிருந்தாலும், தனது வேர்களை தமிழ்நாட்டில் பரவ விடுவதில் சந்தோஷம் காண்பவர் அவர். அதன் இன்னொரு வடிவமாக ஒரு மாபெரும் இசைப்பள்ளியை சென்னையில் நிறுவியிருக்கிறார் ரஹ்மான். இதுபற்றி பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார். கே.எம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பள்ளி துவங்கும் முன்பாகவே 150 மாணவர்கள் சேர்ந்துவிட்டார்களாம். அதென்ன கே.எம்? இதற்கு அர்த்தம் இல்லை. ஸ்பிரிச்சுவலா இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறேன் என்கிறார் புன்முறுவலோடு. முழுக்க முழுக்க இசையின் மேலுள்ள காதலாலும், அன்பினாலும்தான் இந…
-
- 0 replies
- 728 views
-
-
ஏறத்தாழ நாற்பது வயதாவது இருக்கும் நதியாவுக்கு. இப்போதும் நதியில் குளித்த மலர் போல ஜில்லென்று இருக்கிறார் அவர். மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார் நதியாவின் கணவர். இரண்டு பெண் குழந்தைகள். வேண்டாம் வேண்டாம் என்று விலகினாலும், இந்த கேரக்டரில் நீங்கதான் நடிக்கணும் என்று பழியாக கிடக்கிறார்கள் இயக்குனர்கள். சென்னைக்கு வாரா வாரம் வந்து போக பிளைட். தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டல் என்று ஹீரோயின்களுக்கு இணையாக மதிக்கப்படும் நதியா, போடுகிற கண்டிஷன்கள் சில. அதில் முக்கியமானது கட்டிப்பிடிப்பது, ஆடை குறைப்பு இதெல்லாம் நஹி. எல்லாவற்றையும் விட, மாலை ஏழு மணிக்கு மேல் கதவை தட்டி, “எல்லா வசதியும் முறையாக இருக்கா. ஹிஹி...” என்று விசாரிக்கும் இயக்குனரோ, தயாரிப்பாளரோ இருந்தால், அடு…
-
- 0 replies
- 930 views
-
-
தமிழ் திரையுலகின் பெரும்பாலான குட்டி நடிகர்கள் தங்களது சம்பளத்தை படு உயரத்திற்குக் கொண்டு போயுள்ளனராம். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் உச்ச நடிகர்களின் சம்பளம்தான் மகா உயரத்தில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடி விட்டாலே உடனடியாக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினய். உன்னாலே உன்னாலே படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தான். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம்கொண்டான் படத்தில் அவரது சம்பளம் ரூ. 9 லட்சமாகும். அடுத்த படத்திற்கு இந்த சம்பளம் கிடையாதாம். ரூ. 75 லட்சம்தான் இனி அவரது சம்பளமா…
-
- 3 replies
- 1.4k views
-
-
”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்! சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கியவர் சாய்பிரசாந்த். நேரம், வடகறி என முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடிக்கத் துவங்கிய நிலையில் அவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது மனைவி சுஜிதாவின் மீது வைத்திருந்த அதீத காதலும், மனைவியின் பிரிவுமே அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது. தற்கொலை செய…
-
- 3 replies
- 914 views
-
-
குணச்சித்திர நடிகர் ஈ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் புதுமுகங்கள் சத்யா, ஸ்ரீ ரம்யா நடித்திருக்கும் யமுனா படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக சென்னை சத்யம் திரையரங்கம் வந்திருந்த நடிகை நமீதா, மேடை ஏறி மைக்கை பிடித்ததும், கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் மச்சான்ஸ், மச்சான்ஸ்… என்றது., உடனே நமீதா இது எனக்கு பத்தாது மச்சான்களா இன்னும் பயங்கர சவுண்டாக பெரிதாக வேண்டும் என்றார். உடனே ஓ…. என ஆர்ப்பரித்த கூட்டத்தை பார்த்து ஐ லவ் யூ மச்சான்களே… என்று ஸ்வீட் கிஸ் எல்லாம் கொடுத்த நமீதா, நீண்டநாட்களுக்குப் பின் மச்சான்களை அதாங்க ரசிகர்களை பார்த்த உற்சாகத்தில் தன் விலையுர்ந்த செல்போனை மைக் மேடை அருகேயே விட்டு சென்றுவிட்டார். அதை அடுத்து பேச்சாளரை அறிவிக்க வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் மகேஷ், பார…
-
- 3 replies
- 1.1k views
-
-
நடிகர் சத்யராஜ் ரஜினி தன் மிகச்சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது சத்யராஜ் ஆற்றிய உரை நேரடியாக ரஜினியைத் தாக்குவதுபோலவே அமைந்திருந்தது. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத மேடையில் ரஜினியைப் பாராட்டிப் பேசியது போல இருந்தது. பெரியார் வலைக்காட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி சத்யராஜ் வழங்கிய சிறப்புச் செவ்வியில் இது குறித்து உண்மையில் ரஜினி பற்றிய உங்கள் கருத்து என்ன? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு சத்யராஜ் பதிலளிக்கையில், உண்மையில் ரஜினி சார் என்னுடைய நெருங்கிய நண்பர். என் மீது மிகவும் அக்கறை கொண்டவர்.ஓகேனக்கல் உண்ணாவிரதத்தின்போது நான் ரஜினியை திட்டிப் பேசவில்லை. கர்நாடகத் தமிழர்கள் பிரச்சினையில் அவர் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டாரோ வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை. பட மூலாதாரம், PUTHAMPUTHUKALAI படக்குறிப்பு, இளமை இதே இதோ பட காட்சி முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் …
-
- 0 replies
- 371 views
-
-
குண்டான கீர்த்திசுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்ற பெயரில் திரைப்படமாக தெலுங்கில் எடுத்து வருகின்றனர். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் மூன்று மொழிகளில் “மகாநதி” திரைப்படம் வெளியாக உள்ளது. மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சாவித்திரியிடம் பேட்டி எடுப்பதன் மூலம் அவரது கடந்த காலத்தை ப்ளாஷ்பேக்கில் கொண்டு வருவதற்கு உதவும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்…
-
- 0 replies
- 348 views
-
-
இலங்கைப் பற்றி 'CEYLON”எனும் தலைப்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனால் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் படமானது 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் இலங்கையை பற்றியதாக இருக்கின்றது என்பதனால் அந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இந்த படத்திற்கு தமிழில் இப்படத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், 'தளபதி', 'ரோஜா', 'இருவர', 'ராவணன்' உள்ளிட்ட பல படங்களுக்கு தனது வித்தியாசமான கேமரா கோணம், ஒளி அமைப்புகளால் பெயர் பெற்றவராவார். ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைப்பில் உருவான 'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ப்ருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற படத்தினையும் இவரே இயக்கி இருக்கிறார். 'துப…
-
- 1 reply
- 595 views
-
-
கனடா Montreal: திகதி: 30 ஜனவரி 2010 நேரம்: மாலை 18:00 - 20:00 இடம்: Concordia University, Henry F. Hall Building, local H-110, 1455 de Maisonneuve West, H3G 1M8 அன்பளிப்பு: $10 தொடர்பு: 514-467-4099 / 514-839-1297 அவுஸ்திரேலியா: திகதி: பெப்ரவரி 19 நேரம்: இரவு 8:45 இடம்: Greater Union Burwood Cinemas, Westfield Shopping Complex, Burwood NSW 2134, Australia அன்பளிப்பு: $12 திகதி: பெப்ரவரி 20 நேரம்: மாலை 5:45 இடம்: Greater Union Burwood Cinemas, Westfield Shopping Complex, Burwood NSW 2134, Australia அன்பளிப்பு: $12 தகவல் மூலம்: Australia: http://www.facebook.com/search/?q=1999&init=quick#/event.php?eid=2657552909…
-
- 2 replies
- 2k views
-
-
இந்தி(ய) சினிமா..லாலும் வருத்தம் இந்தி சினிமா தான் இந்திய சினிமாவா, இந்தியை விட நல்ல படங்களைத் தரும் தென்னிந்திய சினிமா இந்திய சினிமா இல்லையா என்று துபாயில் இந்திக்காரக்கள் நிறைந்த சபையில் குரல் கொடுத்த கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு இன்னொரு கேரள நடிகரான மோகன் லால் முழு ஆதரவு தந்துள்ளார். சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக இதில் இந்திப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில் முழுக்க முழுக்க இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஆனால், வளைகுடாவில் பெருவாரியாக வசிக்கும் மøலாயாளிகள், தமிழர்களிடம் பணம் வசூல் பண்ண நினைத்த விழா அமைப்பாளர்கள் இம்முறை வழ…
-
- 0 replies
- 851 views
-
-
சமீபகால கமல்ஹாசன் குறித்த வலைப்பூ சர்ச்சைகளே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டியது. கமல்ஹாசன் பற்றி வெகுகாலமாக எழுதவேண்டும் என ஆவல் என்னை தூண்டினாலும் நேரம் கிடைக்காதது மட்டுமல்ல எழுதவேண்டியதின் அவசர அவசியமும் ஏதும் இல்லாமல் இருந்தது. பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு திறமைசாலி அவர். நடிப்பிலோ, இயக்கத்திலோ, நடனத்திலோ, வசன உச்சரிப்பிலோ, பாடகராகவோ அல்லது திரைக்கதை எழுதுவதிலேயோ, வசனம் எழுதுவதிலேயோ, அந்தந்த துறைகளில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க முடியும். ஆனாலும் எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் கமல்ஹாசனை விட பொருத்தமான ஒருவரை காண்பது அரிது.…
-
- 6 replies
- 4.2k views
-
-
இந்தாண்டின் துவக்கமே தனுஷுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு நல்லதொரு சினிமாவைக் கொடுத்திருக்கிறது சேவற்கட்டு என்னும் சேவற்சண்டை தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் வீர விளையாட்டைப் போலவே பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதுதான்.. எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் சண்டைகளுக்காகவே சேவல்கள் வளர்க்கப்படுவதும், அந்தச் சண்டைக் காட்சிகள் ஆங்காங்கே நடப்பதும் நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து வந்ததுதான். ஆனால் அதனையே ஒரு கதைக்களமாக்கி நான் பார்க்கும் முதல் திரைப்படம் இதுதான். சேவற்சண்டை பற்றிய ஒரு ஆவணப் படம் என்று சொல்லுகின்ற அளவுக்கு படத்தின் முற்பாதி முழுக்க சேவல்களின் ஆக்கிரமிப்பு அதிகம். எந்த அளவுக்கு சேவலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டும்..? த…
-
- 1 reply
- 1k views
-
-
பொருத்தமான கதை அமைந்தால் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் போக்கிரி படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு உரிமையாளருக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது அடுத்த படம் அழகிய தமிழ் மகன். இந்தப் படத்தை இயக்குநர் தரணியிடம் உதவியாளர் இருந்த பரதன் இயக்குகிறார். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும். இதில் ஸ்ரேயா, நமீதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்தப் படம் போக்கிரி படத்தில் இருந்து மாறுபட்டு இருக்கும். ரீமேக் படங்களை நான் தேர்வு செய்து நடிப்பதில்லை. அதுவாக அமைந்து விடுகிறத…
-
- 0 replies
- 716 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி,பிபிசி தமிழுக்காக 17 ஜூன் 2023 கலையின் நவீன வடிவமான சினிமாவில், ஒரே கனத்தில் அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தி, அவர்களுக்கு மிக நெருக்கத்தில் உணரச்செய்யும் கதாபாத்திரங்களின் பட்டியலில் கண்டிப்பாக அப்பா கதாபாத்திரத்திற்கு தான் முதலிடம். அப்பா என்பவர் என்றைக்கும் சுவாரசியமான புத்தகம் தானே. சிலர் படித்து பாடம் பெறுகிறார்கள். இன்னும் சிலரோ படிக்கத் தவறி அவரை இழந்த பின்பு இன்னும் படித்திருக்கலாம், வாழ்க்கை முழுதும் நினைத்துப் பார்க்க இன்னும் சில படிப்பினைகளை அப்புத்தகத்திலிருந்து கற்றுத் தெரிந்திருக்கலாம் என வ…
-
- 9 replies
- 777 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SIXTH SENSE PUBLICATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,விக்ரம் ரவிசங்கர் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர். முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
Published : 04 Oct 2018 19:08 IST Updated : 04 Oct 2018 19:31 IST 1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'. டிராவல் போட்டோகிராபர் கே.ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தருகிறார். தன் மாணவியுடன் காரில் பயணிக்கும்போது பிறந்து, வளர்ந்து…
-
- 17 replies
- 4k views
-
-
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி! -சாவித்திரி கண்ணன் சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த தனயன் அனாயசியமாக தொட்டுவிட்டார். ஒன்பது வயதில் தந்தையை இழந்த ரகுமான் தன…
-
- 1 reply
- 388 views
-
-
இந்த நேரத்தில் இதை எழுதுகிறேன்... ஆனால்... இவர்களை இந்தநேரத்தில் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை... சபாஷ்.... அருமையான... யதார்தமான.... எல்லாம் உள்ள படைப்பு ! யாரப்பா இவர்கள்....!!
-
- 7 replies
- 2.8k views
-
-
இணையத்தைக் கலக்கும் இளையராஜாவின் இசை முன்னோட்டம்! இன்றைய தேதிக்கு இணையதளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்ட, பார்த்து ரசிக்கப்பட்ட, ஆசை தீர பாராட்டி எழுதிக் கொண்டாடப்படும் இசைக் கோர்வை நீதானே என் பொன்வசந்தம்தான்! லண்டன் ஸ்டுடியோவில் புகழ்பெற்ற சிம்பொனி இசைக் கலைஞர்கள் மற்றும் தனது குழுவினர் 108 பேருடன் இளையராஜா நடத்திய இசை ராஜாங்கத்துக்கு ஒரு சாம்பிளாக இந்த இசைக் கோர்வையை நீதானே என் பொன்வசந்தம் இயக்குநரும் தயாரிப்பாளரும் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஒலிக்கும் இந்த இசைக் கோர்வை, இசைஞானியின் புதிய இசைப் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது. இதுபோன்று இன்னும் சில இசைக் கோர்வைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை…
-
- 0 replies
- 709 views
-
-
[size=4] சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது. [/size] [size=3] [size=4]இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.[/size] [/size] [size=3] [size=4]ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.[/size] [/size] [size=3] [size=4]அங்கு…
-
- 11 replies
- 1.4k views
-
-
பிரபுதேவா டைரக்ஷனில் ‘வில்லு’ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து பாபுசிவன் இயக்கும் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து விஜய்யின் 50-வது படம் உருவாகிறது. இதை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அப்படத்தை இயக்க மூன்று டைரக்டர்களின் பெயர் பரிசீலனையில் இருக்கிறது. அவர்கள் பிரபுதேவா, ஹரி, ‘ஜெயம்’ எம்.ராஜா. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=314
-
- 0 replies
- 1k views
-