ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி தனிபட்ட விடயத்திற்காகவே அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29667
-
- 3 replies
- 1.2k views
-
-
இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா இராணுவ சிப்பாயால் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டார்: சிறிலங்கா சிறையில் சம்பவம் [Friday, 2011-06-03 16:19:32] இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் அதிகமாக விளக்கமறியல் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் இந்து அர்ச்சகரான சந்திரா ஐயர் இரகுபதி சர்மா இராணுவத்தினரால் அங்கு அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. இது குறித்து அவரைச் சந்தித்த, காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் செயலாளரான சுந்தரம் மகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக கொண்…
-
- 3 replies
- 1.2k views
-
-
‘கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக செயற்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப…
-
- 4 replies
- 1.2k views
-
-
ACF இராணுவ பாதுகாப்பு கோரவில்லை – உயர் இராணுவ அதிகாரி: http://www.globaltamilnews.net/tamil_news....d=2903&cat= ஏ.சீ.எப். தொண்டு நிறுவனம் இராணுவப் பாதுகாப்பை கோரியிருக்கவில்லை என மூதூர் தன்னார்வ தொண்டு ஊழியர்கள் படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த உயர் இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டு ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் வழங்கிய தகவல்களை அடுத்து படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததாக திருகோணமலை இராணுவ கமாண்டர் சாட்சியமளித்துள்ளார். சடலங்களை பார்வையிட்ட சில பொதுமக்கள் அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும், பின்னர் இரண்டரை மணித்தியாலங்களுக்கு பின்னர் தமது படையினர் அங்கு செ…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தவர் கைது என்கிறது விசேட அதிரடிப்படை…. August 28, 2019 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கல்முனை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், முற்றாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2019/129618/
-
- 4 replies
- 1.2k views
-
-
சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசகரை கொழும்பில் இருந்து திருப்பி அழைக்கிறது அமெரிக்கா [ ஞாயிற்றுக்கிழமை, 10 யூலை 2011, 11:28 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியுயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு ஜுன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப்.கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கு மேலும் ஒரு ஆண்டு காலஅவகாசம் அளிக்கும் அமெரிக்கத் தீர்மான நகல்! - மனிதஉரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி. [Tuesday, 2014-03-04 17:40:37] இலங்கை தொடர்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டுச்சேர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்க உத்தேசித்துள்ள பிரேரணையின் நகல் வடிவம் நேற்று மாலை வெளியிடப்பட்டது.அந்த வடிவத்தைப் பார்த்து மனித உரிமை ஆர்வலர்களும், நோக்கர்களும், இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினரும் அதிர்ந்து போயுள்ளனர். இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் தீவிரமான விசாரணை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான வடிவத்தில் இந்தப் பிரேரணை இருக்கும் என்று பல தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் நடைபெற்றவை தொடர்பில் விசாரிக்கச் சர்வதேச விசாரணைகளை பொறிம…
-
- 15 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி இரணை மடு பகுதியில் புத்த கோவில்(photo in) * Thursday, March 3, 2011, 18:21 தமிழீழ தாய பகுதியின் இதயம் என தமிழ் மக்களால் வணங்க பட்ட கிளிநொச்சி இரணை மடு பகுதியில் சிங்கள பேரின வாதத்தின் இன மத சுத்திகரிப்பின் மையமாக இரணை மடு குள கட்டில் புதிதாய் முளைத்திருக்கும் புத்த கோயிலை உலக தமிழர்களே பாருங்கள் … இதுதான் இன்றைய இலங்கை .. ஆழ மரம் கண்டால் தன கீழ் புத்தர் வந்திடுவார் …இதுதான் மகிந்தா சிந்தனை . tamilthai.com
-
- 0 replies
- 1.2k views
-
-
புலிகள் பகுதிகளிலிருந்து அனைத்து தமிழர்களும் மீட்பாம்!: கூண்டோடு ஒழித்து கட்ட ராணுவம் திட்டம்?புதன்கிழமை, ஏப்ரல் 22, 2009, 12:25 [iST] மேலும் புதிய படங்கள் கொழும்பு: வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்துத் தமிழர்களும் தப்பி வந்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். இதன் மூலம் விடுதலைப் புலிகளோடு சேர்த்து, பெருமளவிலான அப்பாவிகளை கூண்டோடு கொல்ல இலங்கை ராணுவம் திட்டமிடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா., சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பொய்களால் உண்மைக்கு சமாதி கட்ட "ஆசியான்' என்ற வாய்ப்பான மேடை ` தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் ("ஆசியான்' அமைப்பின்) பிராந்திய குழுமக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையும் பங்காளராகக் கலந்து கொள்வதற்கு அனுமதிப்பது என்ற முடிவை ஆசியான் அமைப்பு எடுத்திருப்பதாக அந்த அமைப்பின் சார்பில் மலே ஷிய வெளிவிவகார அமைச்சர் சயீட் ஹமீட் அல்பர் தகவல் வெளியிட்டிருக்கின்றார். புரூணை, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியன்மார் (பர்மா), பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய பத்து தென்கிழக்காசிய நாடு கள் ஆசியான் அமைப் பில் உள்ளன. ஆசியான் அமைப்பின் பிராந்தியக் குழுமத்தின் உறுப் புரிமை ஆசி…
-
- 0 replies
- 1.2k views
-
-
நாமல் – கடாபி ஆகியோருக்கிடையில் காணப்படும் இந்த நபர் யார் ? Friday, February 25, 2011, 4:08 டுபாய் நாட்டை தளமாகக் கொண்ட தொழிலதிபர் ஒருவரே சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கும், லிபிய அதிபர் கேணல் கடாபிக்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்தியதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் உள்ள நலனாடா கல்லூரியின் பழைய மாணவரான இவருக்கு டுபாயில் எண்ணை வர்த்தக நிறுவனங்கள் உள்ளதுடன், அமெரிக்காவின் கலிபேர்னியா பகுதியிலும் நான்கு பேரை கொண்ட எண்ணை வர்த்தக நிறுவத்தின் பங்குதாரராக உள்ளார். கேணல் கடாபின் மிகவும் நெருங்கிய நட்பை கொண்டுள்ள இந்த நபர் மூலமே சிறீலங்கா அரசு சபுகஸ்கந்தையில் உள்ள தனது எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கான லிபியாவின் உதவியை பெற்…
-
- 2 replies
- 1.2k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு... மரண சான்றிதழ் வழங்கப்படும் என, ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1240472
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
இரத்தினபுரம் தோட்டத்தொழிலாள்ர்களைத் தாக்கிய கும்பல் தேயிலைத்தோட்டங்கள் யாவும் சிங்களவருக்கு சொந்தமானதாக கூறியுள்ளதே! எங்கே இந்த எலும்பு தின்னும் அமைச்சர்கள்.முன்பு விரட்டியபோது வன்னியில் குடிவைத்தோம்.அவர்கள் தான் இன்று பசுமைப்புரட்சி செய்கிறார்கள்.நினைவு கூரப்படவேண்டியதொன்று;இப்போ இருப்பவர்களை எங்கே போகச்சொல்கிறார்கள்.முதலில் பாதையை திறந்து விடுங்கள். யாழ் வாழ் தமிழர்களை அழித்தீர்கள் நாட்டைவிட்டு துரத்தினீர்கள்.இப்போ இந்தியவம்சாவழியாகையால் இந்தியாவுக்கு போகச்சொல்கிறீர்களா?விளிம்பில் நிக்கிறீர்கள் உங்களை யாரும் காப்பாற்றபோவதில்லை.மீண்டும் புத்தபிரான் தோன்றி சாவறியாத வீட்டில் கடுகு வேண்டி வரச்சொல்லப்போகிரார்.
-
- 1 reply
- 1.2k views
-
-
மனித உரிமை மீறல்களினால் இலங்கைக்கு உதவிகள் இல்லை - பெண்டகன் மலேசிய நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 8, 2011 மனித உரிமை மீறல்களினால் இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட தொடர்புகளையே பேணுவதாகவும் அவர்களுக்கான இராணுவ ஒத்துழைப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் பெண்டகன் தெரிவித்துள்ளது. பசுபிக் பிராந்திய கட்டளை அதிகாரி அட்மிரல் விலாட்ஸ் என்பவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை, மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளை லக்ஷர் ஏ தொய்பா அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். இதனால் அமெரிக்கா இந்த நாடுகளுடன் இராணுவ உறவுகளைப்பேண வேண்டிய தேவை உள்ளது. என்றாலும் இலங்கையுடனான உறவு அவர்களின் மனித உரிமை மீறல்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈழநாதம்
-
- 0 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல அதிரடியாகத் தடை – விசேட வர்த்தமானி வெளியானது 3 Views புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பலவற்றுக்கு இலங்கை அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இது குறித்த விஷேட வர்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை British Tamils Forum (BTF) , கனேடிய தமிழ் காங்கிரஸ் Clinical Trial Consulting (CTC), அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் Australian Tamil Congress (ATC), உலக தமிழர் பேரவை Global Tamil Torum (GTF), கனேடிய தமிழர் தேசிய அவை National Council of Canadian Tamils (NCCT) , தமிழ் இளையோர் அமைப்பு Tamil Youth Organisation UK (TYO- UK,France,australia,switzerland,C…
-
- 10 replies
- 1.2k views
-
-
குடாநாட்டில் தொல்லியல் பகுதிகளாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள கேந்திர நிலையங்களை புனரமைத்தல் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளல் எனும் பேரில் குடா நாட்டில் உள்ள பெளத்த சின்னங்களை புனரமைத்தல் மற்றும் தொல்லியல் இடங்களை பெளத்தத்திற்கு சார்பாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தேரோ ஒருவரை மகிந்த நியமித்துள்ளார். வரப்பிற்றிய ராகுல தேரர் என்பவர் இவ்வாறு நியமிக்கப்பட்டவர் ஆவார். பிரதேச செயலகத்தில் முதலாம் தர சமூகசேவைகள் அதிகாரியாகப் பணியாற்றிய தேரர், வடக்கில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்ற மகிந்தவிடம் விண்ணப்பித்திருந்தாகவும். மகிந்தவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய அவர் வடக்கில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. யாழ். பிரதேச செயலக சமூக சேவைகள் அதிகாரியாக அவர் கடந…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமாதான செயலகத்திடம் அனுமதி பெறாது நோர்வே தூதுவர் பிராஸ்கர் கிளிநொச்சி விஜயம் எதிரி நாடாக நோர்வே செயற்படுவதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு நோர்வே இலங்கைக்கு எதிரி நாடாகவே செயற்பட்டுவருகின்றது. நோர்வே இலங்கையின் இறைமையை மதிக்காது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. எனவே சமாதான செயற்பாட்டிலிருந்து அந்நாட்டை உடனடியாக வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜே.வி.பி. மீண்டும் ஒருமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நோர்வே தூதூவர் ஹன்ஸ் பிராஸ்கர் கடந்த புதன்கிழமை கிளிநொச்சிக்கு சென்று புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை சந்தித்துவிட்டு மறுதினமே கொழும்பு திரும்பியுள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசுக்கு சொந்தமான சிறிலங்கா விமானப்படையின் விமானம் இன்று சென்னை சர்வதேச விமானத்தில் தரையிறங்கியது. வானில் இருந்தபடியே அவசர தரையிறக்க அனுமதி கோரியதாகவும் இதற்கு டெல்லி வான் பாதுகாப்பு நிர்வாகம் அனுமதியழித்ததாகவும் கூறப்படுகின்றது. விசாரணையின் பின்னர் விமானப்பறப்பின் போது ஏற்பட்ட தொழில் நுட்பகோளாறு காரணமாகவே இந்த அவசர தரையிறக்கம் நடந்ததாகவும் சிறிலங்கா தரப்பு கூறுகின்றது. விசாகப்பட்டினம் நோக்கிய தமது பறப்பானது சிவில் போக்குவரத்திற்காக சிறிலங்கா விமானப்படையின் ஒரு சேவை எனவும் இந்த பறப்பின் போது 7 பேர் அதில் இருந்ததாகவும் சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%A…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஏப் 24, 2010 மணி தமிழீழம் மகிந்த பூட்டானுக்கு செல்லவுள்ளார் எதிர்வரும் 28, 29 ம் திகதி நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கு மகிந்த புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மற்றும் வெளியுறவுச் செயலர் றோமேஸ் ஜெயசிங்க ஆகியோர் செல்லவுள்ளதாக தெரியவருகிறது. 16வது சார்க் மாநாட்டில் பங்காளதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, ஆப்பானிஸ்தான், மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. சார்க்மாநாட்டில் 32ம் அமர்வில் வெளிவிவகார அமைச்சர்கள் நிலையில் கூட்டம் எதிர்வரும் 27ம் திகதியும் 37 ம் அமர்வில் வெளிவிவகார செயலர்கள் மத்தியில் 25 மற்றும் 26 ம் திகதியும் கூட்டங்கள் நடைபெறவுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பு குண்டுவெடிப்புக்களும் தென்னிலங்கையின் பதற்றமும் -எரிமலை- கொழும்பிலே கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புக்களும் அதனைத் தொடர்ந்து பரவிவரும் வதந்திகளும் சிங்கள மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது. சிங்களப் பகுதிகளிலே இயல்பு வாழ்க்கை முற்றாகச் சீர்குலைந்துள்ளதோடு அங்கு பரவிவரும் வதந்திகள் காரணமாக தென்னிலங்கையிலே மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறக் கூட அச்சமடைந்துள்ளதுடன் பாடசாலைகள், அலுவலகங்கள் என்பன பெருமளவிற்கு வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்துடன் அண்மையில் கொழும்பில் விநியோகப்படும் குழாய்த் தண்ணீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது என்ற வதந்தி காரணமாக மக்கள் குழாய் நீரைக் குடிப்பதற்கோ அல்லது சமையலுக்கு உபயோகிப்பத…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்களின் மீது விமானம் மூலம் குண்டுகள் வீசி படுகொலைகள் செய்து வருகிற சிங்கள இனவெறி இலங்கை அரசை கண்டித்தும். இலங்கை அரசுக்கு ராணுவபயிற்சி,கருவிகள், பொருளாதாரஉதவிகள் என தொடர்ந்து உதவி செய்து தமிழர்களை கொன்றொழிக்க துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதை விளக்கியும் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில்தமிழகமெங்கும் நடைபெற்று வருகிற பிரச்சாரப்பயணம் 30-11-2008 ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் வந்தடைந்தது. படங்கள், செய்தி உள்ளே http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-11-30.html
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கு - கிழக்கு மக்களுக்கு 49ஆயிரம் வீடுகள் அமைக்க இந்தியா தீர்மானம்! வெள்ளிக்கிழமை, 02 டிசம்பர் 2011 13:39 இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு 49 ஆயிரம் வீடுகளைக் அமைத்துக் கொடுக்க 1,319 கோடி இந்திய ரூபாவை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இடம்பெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கடந்த ஜுன் மாதம் இந்தியா சென்றிருந்த போது இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க இந்திய அரசு உதவி செய்யும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்திருந்தார். …
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது. போர்க்குற்ற விசாரணையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் கடந்த சனிக்கிழமை எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமானின் தலைமையில் இனமான இயக்குனர் அய்யா மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்: நன்றி – முரளி, மருத்துவர் …
-
- 4 replies
- 1.2k views
-
-
ரஜினியின் இலங்கை பயணம் ரத்தானதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெயர்ந்த மக்களுக்கென வவுனியா சின்னடம்பனில் லைக்கா நிறுவனத்தினால் புதிதாக அமைக்கபட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தரவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் வருகை ரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பை ஈழத்துக் கலைஞர்கள் என்ற அமைப்பு விடுத்திருந்தது. யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்…
-
- 7 replies
- 1.2k views
-
-
(நா.தனுஜா) எமது நாடு சுதந்திரமடைந்த போது இலங்கைக்குச் சமனாக இருந்த ஜப்பான் தற்போது பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் பூகோள அமைவிட முக்கியத்துடன் பெருமளவான வளங்களையும் கொண்டிருக்கும் எமது நாடு வேகமான அபிவிருத்தியை ஏன் அடையமுடியவில்லை என்பதை நாமே சுயபரிசீலனை செய்து பார்க்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை துறைசார் சங்கங்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி நாத் அமரகோனின் 2 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று மாலை கொழும்பிலுள்ள துறைசார் சங்கங்கள் அமைப்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: நீதியானதும், நி…
-
- 5 replies
- 1.2k views
-