ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
-------------------------------------------------------------------------------- பகுதி- 03 சமஸ்டி - புராண சுயாட்சி முறையை இப்படி திரித்த பின்னணி.. வழமையாகப் புலிகளின் மாவீரத் தின உரையை. தலைவர் பிரபாகரனின் சிந்தனை ஒட்டத்துக்கு அமைவாக தமக்குரிய சொல்லாட்சி. அரசியல் மதிநுட்ப்பம் . இராஜதந்திர அறிவு உலகின் யதார்த்த போக்கு பற்றிய தீர்க்க தரிசனம் ஆகியவற்றோடு தமிழிலும் அதே சமயம் அதன் ஆங்கல மொழி பெயர்ப்போடும் தயhரித்து வழங்குபவர் புலிகளின் மதியுரைஞர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தான். மhவீரத் தினம் வருகின்ற நவம்பர் மாதத்தில் இந்த உரையை - உலகமே ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்ற புலிகளின் கருத்து நிலப்பாட்டை தெளிவு படுத்தகின்ற இந்த சரித்திரக் கீ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சேனல் நான்கு ஆவணப்படத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவது தமிழர்களுக்குச் சார்பான உலக அபிப்பராயத்தின் மீதான தாக்குதலாகவும் ஆகிவிடப் போகிறது. சேனல் நான்கு தொலைக் காட்சி பார்த்துக் கற்றுக் கொண்டு வளர்ந்த சிறுபான்மையினச் சமூகங்களின் தலைமுறை ஒன்று பிரித்தானியாவில் நிச்சயமாக இருக்கிறது. ஊடகப் போராளிகள் எனும் ஆளுமையுடன் எவரையும் நாம் குறிப்பிட முடியமானால் அவர்கள் ஜான் பில்ஜர், ஜோன் ஸ்நோ போன்ற ஆளுமைகள்தான். இருவருமே சுயாதீனத் தொலைக்காட்சி வலையமைப்புடனும், சேனல் நான்கு தொலைக்காட்சியுடனும் தொடர்பு கொண்ட ஆளுமைகள். குர்திஸ் மக்கள் ஆதரவு அமைப்புடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவர் ஜோன் ஸ்நோ. உலகின் சிறுபான்மையின மக்களின் போராட்டங்கள் அனைத்தையும் ஆவணப்படுத்த…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு எனவும், இந்நாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்களும், இனத்தவர்களும் சிங்கள பௌத்த கலாசாரத்தை அனுசரித்தே வாழ வேண்டும் எனவும் சர்வதேச முஸ்லிம் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி செய்க் மொஹம்மட் பின் அப்துல் கரீம் அல் இஸா தெரிவித்துள்ளார். சங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற சமாதானம் மற்றும் சகவாழ்வு என்பவற்றுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த கலாநிதி கரீம் அல் இஸா, நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கடந்த 01 ஆம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக…
-
- 0 replies
- 362 views
-
-
பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வதா? தேவலோகத்தில் அவசர மாநாடு! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-20 09:12:33| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அமெரிக்காவால் கொண்டு வரப்படும் இத் தீர்மானம் நிறைவேறக் கூடாது என்பதற்காக இலங்கை அரசு ஆர்ப்பாட்டங்களையும் பேரணி களையும் நடத்தி வருகின்றது. இதற்கு மேலாக, இறைவழிபாடும் நடைபெறுகின்றது. இலங்கை அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் வழிபாடு தொடர்பில் கடவுளர்கள் என்ன முடிபு எடுப்பார்கள். இப்படியயாரு கற்பனை நம் உள்ளத்தில் தோன்றியது. வன்னிப் போரின்போது யுத்தத்திற்குள் சிக் குப்பட்ட தமிழ் மக்களும் இறைவா...இறைவா... என்று வழிபாடாற்றினர். அதேவேளை முட்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்ற காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கடந்த மணிநேரத்தில் 100.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்ந்து வரும் அடை மழை காரணமாக வீதிகள், பாடசாலைகள் உட்பட பொது இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். http://virakesari.lk/articles/2015/11/03/மட்டுமாவட்டத்தில்-கடும்-மழை-பல-குடும்பங்கள்-இடம்பெயர்வு
-
- 0 replies
- 328 views
-
-
வவுனியாவில் மூன்று மாதிரிக் கிராமங்கள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. செவட்ட செவன திட்டத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலக பிரிவில் காத்தார் சின்னக்குளத்தில் சபரிபுரம், அகத்தியர்புரம் ஆகிய மாதிரிக் கிராமங்களும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பாவற்குளத்தில் கலைமகள் நகர் ஆகிய மாதிரிக் கிராமங்களே மக்களிடம் கையளிக்கப்பட்டன. நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, வவுனியா மேலதிக செயலர் தி.திரேஸ்குமார், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், வவுனியா பிரதேச செயலாளர், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர், ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர், கட்சி ஆதரவாளர்கள், பயனாளிக…
-
- 1 reply
- 454 views
-
-
மன்னார் பாலைக்குழியில் இருந்து அடம்பன் நோக்கிய சிறிலங்காப் படையினரின் படைநகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்புச் சமரில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 646 views
-
-
பகுதி 2 சீனாவின் தலையீடு அதிகரிக்கப் போகிறது என்கிற சிங்கள ஆதிக்க சக்திகளின் மிரட்டலையே நீங்கலளும் வழி மொழிகின்றீர்கள். ஆனால் சிங்கள ஆதிக்க சக்திகளோ இந்தியா பற்றிய அச்சத்தில் இருந்தே தனது வெளிவிவகாரக் கொள்கைகளை வகுக்கிறது. அதற்க்கு இரண்டு முக்கிய காரனங்கள் உள்ளது. 1. என்ன பிரச்சினைகள் இருந்தாலும் தமிழர்களும் இந்தியாவும் இறுதில் ஒன்று சேர்ந்து விடுவார்கள் 2. இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கைத் தமிழ்ப் பகுதிக் கடல் அடிப்படை அதனால் இந்தியா இலங்கையைப் பிரித்தென்றாலும் வடகிழக்குக் கடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று சிங்கல ஆதிக்க சக்திகள் நம்புகின்றன. சிங்களா ஆதிக்க சக்திகள் தாம் நம்பும் இந்திய விஸ்தரிப்பு நோக்கங்களுக்கு எகெதிராக ஒரு புதிய சீனப் பெருமத…
-
- 0 replies
- 986 views
-
-
யாழ்.கலாசார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பிரதமர் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.கலாசார மத்திய நிலையப் புனரமைப்பு பணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்.வந்துள்ள பிரதமர் பல இடங்களிற்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார் அந்தவகையில் அவரது விஜத்தின் மூன்றாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் கலாசார மத்திய நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவை குறித்து ஆராய்ந்துள்ளார். மேலும் புனரமைப்புடன் தொடர்புடைய இந்த…
-
- 0 replies
- 698 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்சை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்த முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் எம்.ஏ.சுமந்திரனிடம் சவால் விடுத்துள்ளார். கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச…
-
- 1 reply
- 449 views
- 1 follower
-
-
ஸ்ரீபதியின் மறைவிற்காக வெள்ளைக் கொடி கட்டியோர் மீது மேர்வின் கொலை மிரட்டல் ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி கிரிபத்கொட நகரை அண்டிய பகுதியில் இடப்பட்டிருந்த வெள்ளைக்கொடிகள் மற்றும் பதாகைகளை அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் குழு அகற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் வெள்ளைக் கொடிகளை ஏற்றினால் கொலை செய்து விடுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார். அண்மையில் திடீர் விபத்தொன்றில் அகால மரணமடைந்த ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி, அவர் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றிய களனிப் பகுதியின் பிரதான நகரமான கிரிபத் கொடவில் வெள்ளைக் கொடிகள் மற்றும் பதாகைகள் இடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் க…
-
- 1 reply
- 2.2k views
-
-
சிறிலங்காவுக்கு கடுமையான ‘சமிக்ஞை‘ ஒன்றை அனுப்பியுள்ளோம் - அமெரிக்கா [ வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012, 00:37 GMT ] [ கார்வண்ணன் ] நிலையான அமைதியை எட்டுவதற்கு சிறிலங்கா அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறிலங்கா, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிற…
-
- 4 replies
- 1k views
-
-
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரதமராக நியமித்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் அதிருப்தியடைந்துள்ள இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர் ஒருவருக்கு ஆதரவான சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக தற்போது இரகசியமான முறையில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ராஜபக்சவினர் இருப்பதாக காட்டும் முனைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இந்த சதித்திட்டத…
-
- 3 replies
- 631 views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் காட்சிகள் thx http://newjaffna.com
-
- 0 replies
- 440 views
-
-
முல்லைதீவு மற்றும் மன்னாரில் 20000 வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது - 20 நவம்பர் 2015 -வடகிழக்கின் அபிவிருத்திக்கான நிதியை திரட்டுவதற்காக 2016 இல் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தை கூட்டவுள்ளதாக அறிவித்துள்ள நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க, முல்லைதீவு மற்றும் மன்னாரில் 20000 வீடுகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று தேசியஅரசாங்கத்தின் 2016 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அதிக கரிசனை கொண்டுள்ளது,வடகிழக்கு மக்கள் கடந்த பல வருடங்களாக தங்களிற்கு அத்தியாசிய சேவைகளை …
-
- 1 reply
- 692 views
-
-
பலாலியில் இருந்து விமான சேவை – பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டம் கார்வண்ணன்Aug 30, 2019 | 6:12 by in செய்திகள் கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு இரத்மலானையில் இருந்து புறப்பட்ட, பிட்ஸ் எயர் நிறுவனத்தின் 70 ஆசனங்களைக் கொண்ட ATR 72 விமானம், காலை 9.10 மணியளவில் விசாகப்பட்டினத்தை சென்றடைந்தது. முன்னர், எக்ஸ்போ எயர் என்ற பெயரில் உள்நாட்டு விமான ச…
-
- 0 replies
- 912 views
-
-
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒரு வார காலத்திற்கு ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198730
-
- 1 reply
- 229 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பு குறித்து கருத்து வெளியிடும் உரிமை எமக்கும் உள்ளது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது அந்நிய அமைப்பு அல்ல. சிலர் அதனை அந்நியமாக்க முயற்சிக்கின்றனர். ஐக்கிய நாடுகள் அமைப்பில் நாமும் உறுப்புரிமை வகிக்கின்றோம். எமது பக்க நிலைப்பாடுகளை வெளியிடக் கூடிய உரிமை உள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் ஏனைய அமைதி காக்கும் படையினரை விடவும் இலங்கைப் படையினர் சிறந்த முறையில் கடமையாற்றி வருகின்றனர். …
-
- 1 reply
- 687 views
-
-
லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ஒருவருக்கொருவர் தலைக்கு மேல் அடித்து கொல்ல கோடாரிகள் பயன்படுத்தி கொண்டனர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும். - See more at: http://www.paasam.com/news/495.html#sthash.OppqHhHo.d…
-
- 14 replies
- 1.2k views
-
-
கோடிக் கணக்கில் பண மோசடி யாழில் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறை யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளில், சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை, பண மோசடியில் ஈடுபட்டமை, அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்…
-
- 1 reply
- 740 views
-
-
சமகால அரசியல் மற்றும் இராணுவ நிலவரம் தொடர்பாக 10.02.08 அன்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கிய மிக நீண்ட நேர்காணலும், நேயர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும்(28.02.08) நேரடியாக கேட்க பதிவிறக்கம் செய்து கேட்க நன்றி-தமிழ்நாதம் இணையம் http://www.tamilnaatham.com/interviews20080213.html புதுவை இரத்தினதுரையின் நேர்காணல் குறித்த உங்கள் கருத்துக்களுக்கு-tnaatham@gmail.com
-
- 3 replies
- 1.7k views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்தாலும் இந்தியாவின் பங்களிப்பு இதில் மாறுபட்ட ஒன்றாகும் எனத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன், தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் இந்தியாவே ஆரோக்கியமான சிந்திக்கின்றது என்றும் கூறினார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள், அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/647…
-
- 5 replies
- 1k views
-
-
பஸ்ஸினுள் வைக்கப்பட்டிருந்த வெற்று பொதியினால் நுகேகொடையில் பதற்றம் 3/9/2008 5:39:40 PM வீரகேசரி இணையம் - நுகேகொடை வழியாகப் பயணித்த பஸ் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியினால் அப்பகுதி முழுவதும் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கரகம்பிட்டிய ஹெட்டியாவத்தை நோக்கிப் பயணிக்கும் 176 ஆம் இலக்க பஸ் வண்டி ஒன்றினுள்ளேயே மேற்படி சந்தேகத்திற்கிடமான பொதி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பொதி காரணமாக அந்த பஸ் வண்டி நுகேகொடை ஹைலவல் வீதியில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் பஸ்ஸில் இருந்த பயணிகளும் விரைவாக இறக்கப்பட்டனர். இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து குண்டு செயலிழக்க வைக்கும் படையினருடன் அவ்வி…
-
- 0 replies
- 869 views
-
-
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் மாற்றம்! சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை(9) முதல் இரண்டு லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புக் காணிகளிலுள்ள தேங்காய்கள் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் சதொச நிறுவனத்திடமிருந்து தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது. (ச) https://newuthayan.com/article/சதொச_ஊடாக_விற்பனை_செய்யப்படும்_தேங்காய்களின்_எண்ணிக்கையில்_மாற்றம்!
-
- 0 replies
- 272 views
-
-
போகிற போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் சுப்பிரமணியம் சுவாமி, சோ, ஹிந்து ராம் போன்றவர்கள் கூட தமிழ்த் தேசியவாதிகளாகக் கருதப்படக்கூடிய நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளுக்கும் ஈழப்போராட்டத்துக்கும் எதிர்த்திசையில் நின்ற தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் முன்னணிப்போராளியாக பெரும்பாலான தமிழ் ஊடகங்களாற் கொண்டாடப்படுகிறார். நெடுமாறன், சீமான், திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி போன்ற நீண்டநாள் ஈழப் போராட்ட ஆதரவாளர்களையெல்லாம் பின்வரிசைக்குத் தள்ளி விட்டார் ஜெயலலிதா. ஈழப் பிரச்சினையில் இன்று ஜெயலலிதா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இவர்கள் மட்டுமல்ல, தமி…
-
- 2 replies
- 1.5k views
-