ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாடுகள் அறுப்பதையும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் முற்றாகத் தடை செய்ய நுவரெலியா மாநகர சபை தீர்மானித்துள்ளது. நுவரெலிய மாநகர சபைக்கு மேற்படி பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளதுடன் மாநகர சபை மேயர் பிரதி மேயர் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்ததால் வாக்கெடுப்பு இன்றி பிரேரணை நிறைவேறியது. http://www.virakesari.lk/article/local.php?vid=5130
-
- 2 replies
- 683 views
-
-
தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் கலாசாரம் யாழ்ப்பாணத்தில் உருவெடுப்பு : நீதிமன்ற தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது - யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 2017-02-08 08:56:39 (ரி.விரூஷன்) யாழ்ப்பாணத்தில் தற்போது உருவெடுத்துள்ள புதிய வாள்வெட்டு கலாசாரமானது நீதிமன்றங்களுக்கும் நீதிமன்றங்களின் தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ள நிலையில் இத்தகைய சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக தண்டனைகளை வழங்குவதன் மூலமே இவற்றைக் கட்டுபடுத்த முடியும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றங்களால் வழங்…
-
- 0 replies
- 215 views
-
-
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_09057ea04d.jpgசெ. கீதாஞ்சன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று (11) காலை சிவராத்திரி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு, இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன. இதன்போது, முள்ளியவளை, தண்ணீருற்று, குமுழமுனை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்கொண்டனர். அத்துடன், அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக, மக்கள் தெரிவித்தனர். Tamilmirror Online || 30 ஆண்டுகளின் பின்னர்…
-
- 1 reply
- 355 views
-
-
மலேசியா பல்கலைக்கழக தமிழ் மாணவன் கட்டுநாயக்காவில் காணாமல் போயுள்ளார் [ சனிக்கிழமை, 16 மே 2009, 04:43.16 PM GMT +05:30 ] வவுனியா வைரவப்புளியங்குளத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜரட்ணம் ராஜசேகரன் என்ற மலேசியா பல்கலைக்கழக தமிழ் மாணவன் கடந்த 12 ஆம் திகதி முதல் கட்டுநாயக்காவில் வைத்து காணாமல் போயுள்ளார் என முறையிடப்பட்டுள்ளது. மலேசியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் இரண்டு வார விடுமுறையில் வந்து வவுனியாவில் உள்ள பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார். கடந்த 12 ஆம் திகதி திரும்பவும் கல்வியைத் தொடர்வதற்கு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு சென்றிருந்த பின்னரே காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். தமிழ்வ…
-
- 0 replies
- 635 views
-
-
தமிழ் மக்களுக்கு கிடைக்கும் சமஸ்டியை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று மாலை தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், எழுக தமிழிற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்களின் ஆதரவு அமோகமாக இருந்தது. கிழக்கில் எழுக தமிழ் நடைபெறுவதை தடுக்க பலர் மும்முரமாக இர…
-
- 0 replies
- 309 views
-
-
பதவிக்கு வந்து சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி நானே (எம்.எம்.மின்ஹாஜ்) தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்கள் கோரியுள்ளன. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதி பொறுப்பேற்று 2 வருடத்திற்கான சொத்து விபரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நானேயாகும். இருப்பினும் எனது சொத்து விபரங்கள் தேவையாயின் தேர்தல் ஆணையாளரை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் தற்போது நாட்டில் ஜனநாயக உரிமையை துட்சமாக மதித்து ஆர்ப்பாட்ட…
-
- 0 replies
- 320 views
-
-
காலம் தமிழீழப் போராட்டத்தை புலம்பெயர்ந்த மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றது. உலக நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு பேசுவதற்கு ஆவலாக இருக்கின்றன. இன்றைய நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியற் போராட்டத்தை வழி நடத்த வெளிப்படையாக இயங்கக் கூடிய ஒரு தலைமை தேவைப்படுகின்றது. தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே இருந்த எமது அரசு அழிக்கப்பட்டு விட்ட நிலையில், நாம் மர்மத் தலைமைகளின் கீழ் எமது போராட்டத்தை நடத்த முடியாது. ஐரோப்பிய அமெரிக்க அரசுகளோடு வெளிப்படையாக பேசக் கூடிய, மக்களோடு நிற்கின்ற ஒரு தலைமை தேவை. நாம் "புற நிலை அரசு" (government in exile) ஒன்றை தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. "தமிழீழப் புற நிலை அரசு" ஒன்றின் உருவாக்கம் சிற…
-
- 102 replies
- 11.2k views
-
-
ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் அரசியல் தேவைக்காகவே எதிர்ப்பதாக கூறி எதிர்வாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால் அத்தீர்மானத்தினை நிராகரிக்க முடியாது. காலப்போக்கில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்படும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா அழுத்தங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுப்பதோடு அதற்கு அடிபணியாமல் இருக்க முடியும் எனவும் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்றவகையில் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் அதிகாரப் போட்டிகளுக்கு நாங்கள் இரையாக மாட்டோமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்~ தெரிவித்…
-
- 4 replies
- 470 views
-
-
பதுளையில் தமிழ் கடைகள் சூறை... http://tamilnet.com/art.html?catid=13&artid=29477 ---
-
- 10 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்..! கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மீது மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து, ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, வாகரை பிரதேசத்திற்கு வேண் ஒன்றின் ஊடாக பயணித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர், நாவலடி பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த நிகழ்வை தொடர்ந்து அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் வேனை செலுத்தி வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தாக்கப்பட்ட…
-
- 0 replies
- 414 views
-
-
தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார். வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னம…
-
- 8 replies
- 2.4k views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கத்தோலிக்க மக்கள் அமைப்புக்களின் கூட்டணி விடுத்துள்ள கோரிக்கை ( எம்.எம்.சில்வெஸ்டர்) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பல குறைகள் காணப்படுகின்றன. சில விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவில்லை. ஆகவே, மீண்டும் விசாரணையை நடத்துவதுற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தை வழங்குமாறு கத்தோலிக்க மக்கள் அமைப்புக்களின் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை முழுமையானதும் பூரணமானதுமான அறிக்கையாக நாம் ஏற்றுக்கொள…
-
- 0 replies
- 235 views
-
-
போர்க் குற்றம் : இலங்கை உயர் ஸ்தானிகராக சுமங்கல டயஸின் நியமனத்தை நிராகரித்தது கனடா 65 Views முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கல் டயஸ், தமது நாட்டிற்கான இலங்கை உயர் ஸ்தானிகாரக நியமிக்கப்பட்டதை கனடா நிராகரித்துள்ளதாக “தமிழ் கார்டியன்“ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் கனேடியர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த முடிவுக்காக சுமங்கல டயஸை நிராகரிக்க அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கனேடிய அரசாங்கம் அவரது நியமனத்துக்கு உடன்படவில்லை. டயஸ் தற்சமயம் இத்தாலியில் துாதராகப் பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் விமானப்படை தளபதி டயஸ் , ஆயுத மோதலின் இறுதி கட்டங்களில் சிரேஸ…
-
- 3 replies
- 471 views
-
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களை மீண்டும் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 21 பேரும் கடந்த 6 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு இன்று வரை மன்னார் நீதிமன்றத்தில் விளக்கமறியலில் லைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் http://tamilworldtoday.com/?p=23349
-
- 0 replies
- 285 views
-
-
எம்.வை.அமீர்,யு.கே.காலிதின்- 30 வருடங்களுக்கு மேலாக ஆயுதங்களுடன் உலாவந்தவர்கள், அவர்கள் சார்ந்த சமூகத்துக்காக ஒன்றுபட்டு, அவர்களது அபிலாஷைகளை அடைந்து வரமுடியும் என்றால், கலிமாச் சொன்ன எங்களால் ஒற்றுமைப்பட்டு எங்களது நியாயமான தேவைகளை அடைந்துகொள்ள முடியாதுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக கிழக்குமாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வும் கிங் ஹோஸஸ் மற்றும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையேயான 8 ஓவர்களைக் கொண்ட சிநேகபூர்வ விளையாட்டுப்போட்டியும் 2017-03-17 அன்று சாய்ந்தமருது மர்ஹும் பௌஸி …
-
- 0 replies
- 732 views
-
-
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பழிக்கு பழி : பலர் பலியில் முடிந்தது யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிகாரப் பகிர்வுத் திட்டம் தொடர்பான அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தொடர் மெளனம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தேசிய பிக்கு முன்னணி, நாட்டையும் தங்களை ஏமாற்ற அரசு நினைத்தால் போராட்டத்தினால் இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது. இன நெருக்கடிக்குத் தீர்வாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய பிக்கு முன்னணி இந்த எச்சரிக்கையை விடுத்தது. "அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக…
-
- 2 replies
- 651 views
-
-
பிரிட்டனில் தஞ்சம்கோரிய போர் குற்றவாளிகள் கண்டுபிடிப்பு - பி.பி.சி பிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு பிபிசிக்கு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான், இரான், இராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச் சேரந்த சுமார் 100 பேர், போர் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் பலர், ஏற்கனவே பிரிட்டனில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். போர் குற்றவாளிகளுக்கு புகலிடம் கொடுக்கும் நாடாக பிரிட்டன் மாறக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் போர் குற்றங…
-
- 1 reply
- 523 views
-
-
நிலக்கண்ணி வெடியை இல்லாதொழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் – பிரித்தானியா நிலக்கண்ணி வெடிகளை இல்லாததொழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு வரையான இந்த வேலைத்திட்டத்துக்கு 1.2 பில்லியன் ரூபாய்களை பிரித்தானியா செலவிட உள்ளது. வடக்கில் அதிக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிறந்த உற்…
-
- 0 replies
- 119 views
-
-
புல்மோட்டை வந்துள்ள வன்னி மக்களைப் பார்வையிட முடியவில்லை:உறவினர்கள் விசனம் வன்னியிலிருந்து கடல் வழியாக புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மற்றும் வந்தடைந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு உறவினர்கள் சென்று பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக குறித்த நலன்புரி நிலையத்தில் தங்கியிருப்பவர்களின் உறவினர்கள் கவலையும் விசனமும் அடைந்துள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுகின்றனர். எனினும் புல்மோட்டை நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பார்வையிட அனுமதிக்கவில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள கசினோ வர்த்தகத்தில் முதலீடு செய்யவுள்ள உலக பிரசித்திபெற்ற அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பாக்கர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அச்சுறுத்தியுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=26939
-
- 1 reply
- 449 views
-
-
காணி, அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை – சம்பந்தனிடம் ஒப்புக்கொண்ட மைத்திரி தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிவிக்குமாறு ஒரு வருடத்திற்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டபோதும் இதுவரையில் ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் அவரே ஒப்புக்கொண்டதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந…
-
- 2 replies
- 617 views
-
-
கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் இலங்கை வருகை கடந்த சனிக்கிழமை வருவதாக இருந்த கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் இன்று வந்தடைவார்கள் என இலங்கை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இலங்கை வருவதாக இருந்த கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்களின் விமான பயண ஏற்பாட்டிலிருந்த தடங்கல்கள் காரணமாக அவர்கள் பயணம் தாமதமாகியதாகவும் அந்த மருத்துவகுழு இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் பொது சுகாதார திணைக்கள இணைத் தலைவர் டாக்டர் பாலித மகிபால உறுதியாக அறிவித்துள்ளார். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு இலங்கையரசு கியூபாவைக் கேட்டிருந்தது. இதற்கமையவே டெங்கு நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்தும் பற்றீரியாவை (bacterial…
-
- 0 replies
- 421 views
-
-
காணாமல்போன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு இன ஒற்றுமையுடன் இந்த ஹார்த்தாலை நடத்த வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்குடன் ஹக்கீம் அணி மற்றும் ரிசாத் அணிகளை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைவர் சம்பந்தன் ஊடக அறிக்கை விட்டிருந்தார் . இந்த ஹார்த்தாலுக்கு ஹக்கீம் ரிசாத் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வழமை போன்று வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது. வழமையான போக்குவரத்து நடைபெற்றன.சகல அரச அலுவலகங்களும் திறக்கப்பட்டு இயங்கியது. கிழக்கில் மட்டக்களப்பு நகரம் மட்டும்தான் கடையடைப்பு செய்துள்ளன .கிழக்கில் சகல அரச போக்குவரத்து சாலைகளும் வழமை போன்று பஸ் வண்டி சேவையை செய்தி…
-
- 3 replies
- 588 views
-
-
காகத்தை கொன்று அதன் ஒரு இறக்கையை தொங்கவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அச்சத்தில் மௌனமாகிவிடுவார்கள் – அரசாங்கத்திற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆலோசனை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விமர்சனங்களை வெளியிடுபவர்களை மௌனமாக்குவதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச காகமொன்றை கொன்று அதன் இறக்கையை தொங்கவிடவேண்டும் என சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பல்வேறுஸ்தாபனங்களே ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸமஹராமா வாவி திட்டம்…
-
- 3 replies
- 817 views
-