ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142992 topics in this forum
-
20 JAN, 2025 | 03:47 PM பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும், அதற்கு ஆண்கள் துணை நிற்பதும் வரவேற்கத் தக்க பண்புகளாகும் என கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரன்யா தெரிவித்தார். கண்டி சஹஸ் உயன பூங்காவில் நடைபெற்ற பொங்கல் தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், நானும் பொங்கல் தினத்தை கொண்டாடும் ஒருவராக உள்ளேன். ஆனால், எனக்கு இம்முறை எனது சொந்த ஊரில் அதனை கொண்டாட முடியாமல் போனது. இருப்பினும் அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படாமல் எனது சொந்த ஊரில் கொண்டாடும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் எமது பிரதேசத்தில் கொண்டா…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
'பிள்ளையான் குழுவின் ஆதரவோடு கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குக்களைப் பறித்து, அவற்றைத் தமிழ் மக்கள் இந்த அரசுக்கு அளித்த ஆதரவாக சர்வதேசத்திற்கு காட்ட அரசு முற்படுகிறது. இந்த உண்மை தெரியாமல் பிள்ளையான் பலிக்கடாவாகப் போகிறார். கருணாவைப் பயன்படுத்தி விட்டு வீசியதைப் போல் பிள்ளையானையும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு வீசிவிடாப் போகின்றது இந்த அரசு. ஆயுதக் குழுவை இத்தகைய பிழையான நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதை அரசு உடன் நிறுத்த வேண்டும்'. இவ்வாறு நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு இரா.சம்பந்தன் உரையாற்றினார். மேலும் : இந்தச் சபையில் இருந்த ஜெயராஜ், ரவிராஜ், மகேஸ்வரன், சிவநேசன், ஜோஸப் பரராஜசிங்கம் உட்ப…
-
- 0 replies
- 973 views
-
-
தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத்தோல்வியே” என தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார். “முள்ளிவாய்க்கால்ஈகியருக்கு வீரவணக்கம்! வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் வீண்போகாது”. சிங்கள – இந்தியப்பகைவர்களால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம்செலுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற நிகழ்வுகளில் எதிரொலித்த முழக்கங்கள் இவை. முள்ளிவாய்க்கால்மூன்றாமாண்டுநினைவேந்தல் நிகழ்வையொட்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. தஞ்சை தஞ்சை தொடர் வண்டி நிலையத்தில் 18.5.2012 அன்றுமாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவண…
-
- 1 reply
- 652 views
-
-
ஐடிஎன்னின் அரசியல் நிகழ்ச்சிகளிற்கு தடை – மகிந்த தேசப்பிரிய உத்தரவு- ரட்ணஜீவன் கூல் கடும் எதிர்ப்பு ஐடிஎன்னிற்கு எதிராக தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பில் கடும் சர்ச்சை வெடித்துள்ளது. ஐடின் அரசியல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதித்துள்ள தேர்தல் ஆணையாளர் அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பான உள்ளடக்கங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையகத்திடம் அனுமதி பெறவேணடும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஐடிஎன்னிற்கு கடிதமொன்றை மகிந்த தேசப்பிரிய அனுப்பிவைத்துள்ளார். பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதாக தேர்தல் ஆணையகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ள…
-
- 4 replies
- 331 views
-
-
29 JAN, 2025 | 09:08 AM (எம்.மனோசித்ரா) அதானி நிறுவனத்துடன் வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் எட்டப்பட்டிருந்த இணக்கப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே 8 டொலருக்கு எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டை இரத்து செய்து 6 டொலரை விட குறைந்த விலைக்கு வலுசக்தி கொள்வனவை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு மீளாய்வு இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வலுசக்தி கொள்வனவு விலை தொடர்பில் கடந்த அரசாங்…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் - படையினரின் வன்னிக்கான களமுனை திறப்புக்களில் மன்னார் முன்னரங்கு தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய களமுனை வாசல்களில் அமளிதுமளிகள் சற்று ஓய்ந்துள்ள நிலையில் மன்னார் மடு பகுதியை அண்டிய பிரதேசங்களில் போர் இரு தரப்புக்கும் இடையில் நீறுப்பூத்த நெருப்பாகவே உள்ளது. இந் நிலையில் மடுவிலும் மடுவை அண்டிய பகுதியில் இருந்தும் இடம்பெயர்ந்த பல்லாயிரக்காண மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்றுகொண்டு இருப்பதாக மன்னார் செய்திகளில் தெரிவிக்கின்றன . அத்தோடு எதிர்வரும் ஓகஸ்டில் க.பொ.த. உயர் தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கல்விச் சேவை வட்டாரங்களை ஆதாரம் காட்டி தெரிவிக்கப்படுகிறது.…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலயத்தின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது சந்திரவட்டகல்லின் பகுதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்கான கோபுரம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக குறித்த அகழ்வு இன்று மாலை மேற்கொள்ளப்பட்டது. சந்திரவட்டக்கல்லின் பகுதியொன்று தோன்றியதை அடுத்து அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டதாகவும் அகழ்வில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் சந்திரவட்டக்கல் தோன்றியிருப்பதானது புராதன காலத்தில் அது பௌத்த விகாரை இருந்த பிரதேசமாக கருதமுடியும் எனவும் பொளத்த துறவி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சிலாபம் பிரதேசத்தில் பௌத்த மதத்திற்கு உரித்தான …
-
- 9 replies
- 1.6k views
-
-
Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 03:11 PM (இராஜதுரை ஹஷான்) அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். மக்களாணையை மலினப்படுத்த போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வரவு செலவுத் திட்டத்தை தொடர…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
பல அமைச்சர்களை படுகொலை செய்யத் திட்டம் Sunday, 20 April 2008 அமைச்சர்கள், பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது. டி.எம்.ஜயரத்ன, மஹிந்தானந்த அலுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல்ல, நவீன் திஸாநாயக்க ஆகிய அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புப் பிரதியமைச்சர் அனுரத்த ரத்வத்தே மற்றும் நுவரெலிய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய போவெல, பொன்சேகா ஆகியோரை படுகொலைச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி உள்ளிட்ட பிரபுக்கள் நுவரெலியாவிற்கு வருகை தரும் போது ஹெலிகொப்டர் எங்கு தரையிறக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சிகள் வன்னிக்கு அனுப்பி வைக்…
-
- 4 replies
- 1.4k views
-
-
இலங்கைப்பிரச்சனை விவகாரங்களில் எல்லை மீறிச் செயற்படும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கோ பிரித்தானியாவிற்கோ கிடையாது. வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் தொடர்பாக பேசுவதற்கு எந்தவொரு நாட்டின் பிரதிநிதியும் இலங்கைக்குள் நுழையக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக தெரிவித்தார். வெள்ளமுள்ளி வாய்க்கால் தொடர்பாக போலியான பிரசாரங்களை பிரித்தானியாவே முன்னின்று முன்னெடுத்தது. எனவே பிரித்தானியாவின் நோக்கங்களை உள்நாட்டில் ஈடு செய்து கொள்ள இடமளிக்கப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தான் ஒரு அதிகாரி என்பதனையும் தனக்குள்ள பொறுப்பையும் மறந்து செயற்படக்கூடாது. இலங்கையில் வீர தீர செயல்களை அரங்கேற்றுவதால் எவ்விதம…
-
- 0 replies
- 466 views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார்கள். ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைவிட 0.22 வீதம் அதிகமாக இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். கடந்த(2015) தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 66.28 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரம் த.தே.மக்கள் முன்னணியினரால் பலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்முறை 66.5 வீதம் மக்கள் யாழ் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார்கள். த.தே.ம.முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை! adminFebruary 13, 2025 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில்நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். ,மேலும் தெரிவிக்கையில், எனது தந்தையார் நாகலிங்கம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றார். அமிர்தலிங…
-
- 0 replies
- 390 views
-
-
சமாதான வலயமாக மடுப் பிரதேசத்தை அறிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது! மருதமடு தேவாலய புனித பூமியை சமாதான வலயமாக அறிவிக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.தமிழ
-
- 1 reply
- 1.1k views
-
-
தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கதயார் என சீன பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர - சீன பாதுகாப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த இராணுவ தளபதி இரு தரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். இதனிடையே, இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படும் விஷேட திறமைகள் சீனாவுடன் பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் ஜகத் ஜயசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 2 replies
- 319 views
-
-
ரணில் மீது குற்றஞ்சுமத்த முடியாது - ஹிருணிகா பிரேமசந்திர Published by J Anojan on 2019-11-21 16:48:32 (நா.தனுஜா) ரணில் விக்கிரமசிங்க மீது நான் குற்றஞ்சுமத்த மாட்டேன். ஏனெனில் அவர் சிறந்ததை செய்யவேண்டும் என்று கருதினாலும், அவருடன் இருப்பவர்கள் அதற்கு வாய்ப்பளிக்காமல் சுயநல நோக்கில் செயற்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட போதும், அவருடன் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் …
-
- 2 replies
- 685 views
-
-
கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக .................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_7924.html
-
- 6 replies
- 2.9k views
-
-
பல்கலைக்கழக நுழைவுக்கு யாழ்.மாணவர்களே அதிகளவு தகுதி 2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில், யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக இலங்கையின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 7,346 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தனர். இவர்களில் 4,872 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளனர். இது 66.33 வீதமாகும். குறைந்தபட்சமாக, பொலநறுவை மாவட்டத்தில் இருந்து 56.76 வீதமான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இங்கிருந்து 3,455 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றிய போதும், …
-
- 2 replies
- 419 views
-
-
இலங்கையில் முதலாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இலங்கையில் முதலாம் வகுப்பு தொடங்கி பாலியல் கல்வியை முன்னெடுக்க தேசிய சிறார் அதிகார சபை பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை. பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பு முதல் கட்டம் கட்டமாக பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என அந்த அமைப்பு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதை அந்த அமைப்பின் தலைவி நடாஷா பாலேந்திரா பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்க தாம் நாட்டின் கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். டாக்டர் நடாஷா பாலேந்திர…
-
- 0 replies
- 419 views
-
-
Published By: Vishnu 07 Mar, 2025 | 10:11 PM வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் உள்ள அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார். பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காய…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இனி ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 722 views
-
-
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு! - எச்சரிக்கிறார் கம்மன்பில [Saturday 2016-01-30 07:00] தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் என்று உதய கம்மன்பில எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டின் அரச கரும மொழி தமிழாக இருந்த போதிலும் அங்குள்ள மக்கள் வங்காள மொழி தேசிய கீதத்தையே பாடுகின்றனர். அதேபோன்று இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க முடியாது. தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தினால் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தேசத்துரோக குற்றச்சாட்டு ம…
-
- 1 reply
- 453 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (07) இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது. குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மதலடகளகக-தறககபபடகறத-கழமப-தறமக-நகரம/150-242155
-
- 5 replies
- 1.3k views
-
-
Published By: VISHNU 17 MAR, 2025 | 04:49 AM (எம்.வை.எம்.சியாம்) பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இது அரசியல் பழிவாங்கல் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளருமான புபுது ஜெயகொட தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்றக் கூட்டமொன்றில் சனிக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இடம்பெற்ற குற்றங்க…
-
- 1 reply
- 129 views
- 1 follower
-
-
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்காப்படையினர் அதனை கண்டுபிடித்துள்ளார்கள். சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் உயிரிழந்த மாவீரர்களது நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சிறைச்சாலையில் பல காலமாக எவ்விதமான சோதனைகளையும் நடத்துவதற்கு சந்தேக நபர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கடந்த வெள்ளிக் கிழமை சிறைச்சாலை முற்றாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதன்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-…
-
- 1 reply
- 783 views
-
-
மகனைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கண்டு பிடித்தார் மகிந்த [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 09:53.15 PM GMT ] யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாளைய தினம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய சுதந்திர தினத்தை முன்ணிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார். யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களை சந்தித்துள்ளனர். எனது அரசாங்கத்தின் உறுப்பினர்களை ஊழ…
-
- 0 replies
- 494 views
-