ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக்கல்லூரியில் இரு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சியளித்து வந்தது நாம் அறிந்ததே. இவர்கள் அங்கே பயிற்சிக்கு வரவிருக்கிறார்கள் என்கிற செய்தி பரவியதிலிருந்து நீலகிரி மவட்டத்தில் பரவலான மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இரு நாட்களுக்கு முன்னர் நாம் தமிழர் கட்சியினால் அழைக்கப்பட்ட பூரண கடையடைப்பு மற்றும் தொழில் நிறுத்தம் முழுமையான வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பல கட்சிகளும் தமது ஆதரவை வெளியிட்டிருக்கின்றன. அதிகரித்துவரும் எதிர்ப்பை அடுத்து அவ்விரு அதிகாரிகளையும் பத்திரமாக ஆந்திராவில் உள்ள உயரதிகாரிகள் பயிற்சி கலூரிக்கு மாற்ற இந்தியா முடிவெடுத்தது. அதற்கிடையில் தமிழ்நாட்டில் பயிற்சியென…
-
- 6 replies
- 800 views
-
-
வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் நாளாந்தம் சராசரியாக 14 மரணங்கள் நிகழ்வதாக செட்டிக்குளம் திடீர் மரண விசாரணை அதிகாரி இ.சாகுல் ஹமீட் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் புதன்கிழமை வரையிலான நான்கு நாட்களில் இந்த முகாம்களில் 56 பேர் வரை மரணமடைந்திருக்கின்றனர். இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மை நாட்களாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 14 மரணங்கள் இடம்பெறுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 பேரும் திங்கட்கிழமை 11 பேரும் செவ்வாய்க்கிழமை 14 பேரும் புதன்கிழமை 9 பேரும் மரணமடைந்துள்ளனர். முதியவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமையே இறப்பிற…
-
- 2 replies
- 627 views
-
-
யுத்தத்தின் பின்னரான இலங்கைக்கு சர்வதேச சமூகம் போதியளவு ஆதரவினை வழங்க வேண்டுமென பொதுநலவாய நாடுகள் உள்ளுராட்சி அமைப்பின் செயலாளர் நாயகம் கார்ல் ரைட் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளியிட்டு போதியளவு உதவிகளை வழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல தசாப்த யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள வடுக்களை ஆற்றுவதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டுவதில் தவறில்லை என்ற போதிலும், இலங்கையை புறக்கணிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ht…
-
- 0 replies
- 361 views
-
-
ராஜீவ் கொலைக்கு பழிவாங்க காங்கிரஸ் அரசு துடித்தது; இனப்படுகொலைக்கு இந்தியா துணைபோனது: படை அதிகாரிகள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 01 யூன் 2009, 05:17 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா மறைமுகமாக துணை போயிருப்பதாக இந்தியப் படையின் முன்னாள் அதிகாரி அசோக் மேத்தாவும், மனித உரிமை ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்குடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா பல்வேறு ஆயுத உதவிகளை வழங்கியதாகவும் அசோக் மேத்தா கூறியிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கைப் போரின் கடைசி பகுதியில் சிறிலங்காவுக்கு இந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 569 views
-
-
-பா.நிரோஸ் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸே முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இராஜதந்திரமாகக் காய் நகர்த்தவே முயற்சிக்குமெனவும் சாடினார். கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், “கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், 2015 முதலே, பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உறுதியாக இருக்கிறோம். இதற்காக, மட்டக்களப்பில் பல அமைதிப் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்” என்றார…
-
- 0 replies
- 241 views
-
-
பலத்த இழுபறியின் பின்னர் ஒருவாறு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கம் முன்வந்திருக்கிறது. கூடவே முதலமைச்சர் வேட்பாளரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து விட்டது. தமிழர் உரிமைக்காகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த எத்தனையோ பேர் இருக்கையில்; நீதி நேர்மை தெரிந்த சட்ட நுணுக்கங்களை நன்கறிந்த கல்வியாளரென்ற வகையில் முன்னாள் நீதியரசர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அனுபவப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தைக் காட்டிலும், படித்த, உயர் பதவி வகித்த ஒருவரையே முதலமைச்சர் வேட்பாளராக வைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவின் சாதக பாதகங்களை இப்போது எதிர்வுகூறுவது அவ்வளவு எளிதானதல்ல. …
-
- 7 replies
- 817 views
-
-
மட்டக்களப்பு தொழிலதிபர்களின் மனிதாபிமானத்தின் வெளிப்பாட்டில் 2 மில்லின் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு! By கிருசாயிதன் (சிவம்)மனிதாபிமானப் பணியை வெளிப்படுத்தும் நோக்கோடு கொவிட்-19 தாக்கத்தைக் கண்டறிவதற்கான மருத்துவ உபகரணங்கள் மட்டக்களப்பு தொழிலதிபர்களினால் போதனா வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (21) மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.கொரோனா வைரசின் 3 ஆவது அலை வீரியம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் மிகவும் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக தொற்றுக்குள்ளாவர்கள் மற்றும் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் தாக்கத்திற்குள்ளானவர்களைக் கண்டறிந்து சிகிட்சையளிப்பதற்காக சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்க…
-
- 0 replies
- 257 views
-
-
செவ்வாய்க்கிழமை, 30, ஜூன் 2009 (20:19 IST) இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட படகுகளை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மேலும், கச்சத்தீவு அருகே, 5 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேக ரோந்து படகில் எச்சரித்தபடி வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகில் ஏறி, 5 மீனவர்களையும் பிடித்து தாக்கினர். பிறகு அந்த படகை இயக்கி, மற்ற படகுகள் மீது மோதச் செய்தனர். இதில் படகின் வலது பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது. விலை உயர்ந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் அ…
-
- 1 reply
- 556 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் சயந்தனுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சென்றிருந்த வேளையில் தமது தாயாரிடம் இராணுவத்தினர் பெரும்பான்மை மொழியினால் உரையாடி அடையாள அட்டை இலக்கத்தை தருமாறு கோரியுள்ளனர். தாயார் தமக்கு சயந்தனின் அடையாள அட்டை இலக்கம் தெரியாது என பதிலளித்த வேளையில் இராணுவத்தினர் திரும்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் சயந்தன் கருத்து தெரிவிக்கையில் குரல் பதிவு – சயந்தன்-1 Play 00:00 00:00 Volume 00:00 00:33 saynthan goldtamil.com goldtamil.com இராணுவத்தினர் நேரடியாக உங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என செய்திகள் வெளியாகியது. ஆனால் தாயாரிடமே இராணுவத்தினர…
-
- 0 replies
- 838 views
-
-
வடக்கு நிலை குறித்து ஐரோ.ஒன்றியம் ஆராய்வு முதலமைச்சருடன் நேற்றுச் சந்திப்பு வட மாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல்கோட் பீறி வலியுறுத்தியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் பீறி மற்றும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவிய லாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின் ஆலோசனைகளை பெறாத…
-
- 0 replies
- 247 views
-
-
விடுதலைப்புலிகளின் சார்பில் இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக தகவல்களை வெளியிட்டு வந்த பொறியியலாளர் ஒருவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான இவர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து, இணையங்களில் தகவல்களை வெளியிட்டு வந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் இலங்கை அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை இணையத்தளங்கள் ஊடாக வெளியிட்டுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். updated - 2009-07-07மூலம் - GTN
-
- 0 replies
- 663 views
-
-
யாழ்ப்பாணத்தில் சீட்டுப் பணத்தை செலுத்த முடியாமல் எட்டு பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியிலுள்ள எட்டு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரே இவ்வாறு நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.வீட்டுக்குச் சென்ற சீட்டுக்காரரின் அவமான பேச்சைத் தாங்க முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இவரது சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீட்டு மீற்றர் வட்டி காசோலை மோசடி போன்ற செயற்பாடுகளால் அதிகளவான தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/32038/64//d,fullart.aspx
-
- 0 replies
- 558 views
-
-
வடபகுதிக்கான புகையிரதப் பாதையை அமைப்பதற்கான கட்டுமானப் பொருட்கள், கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதிக்கு புகையிரதத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருட்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற புகையிரதமொன்றிலேயே இப் பொருட்கள் கிளிநொச்சிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கிளிநொச்சி மக்களுக்கு புகையிரத சேவையை விரைவாக வழங்குவதற்காக, இப் பாதை அமைப்பு வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்குள், கிளிநொச்சிக்கு புகையிரத சேவையை வழங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப் பாதை அமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான புகையிரத வீதியில் காணப்படுகின்ற பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் மிகவிரைவாக நடைபெற்று வருகின்றன. இப் புனரமைப்புப் பணிகளில், உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலை…
-
- 3 replies
- 747 views
-
-
நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கே கடிதம் மூலம் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதித்துறையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் கைத்துதொழித்துறையும் நம்பிக்கை இழந்துள்ளது. இந்த நிலை தொடருமானால் நாட்டின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுக…
-
- 1 reply
- 740 views
-
-
பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து யாழ் நகரில் குவிந்த மக்கள் கூட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக்கட்டுப்பாடுகள் நீண்ட நாட்களுக்குப்பின் இன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை காணக்கூடியதாகவுள்ளது. இதேவேளை யாழ் நகரில் அனைத்து வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவ…
-
- 0 replies
- 237 views
-
-
பிரித்தானியாவில், இன்றைய times online & Guardian online இல் 'IMF approves controversial $2.5bn Sri Lanka loan' செய்தி பிரசுரிக்கப் பட்டுள்ளது... http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6727230.ece http://www.timesonline.co.uk/tol/news/worl...t=12&page=2 http://www.guardian.co.uk/world/2009/jul/2...a-imf-loan-vote தயவு செய்து உங்கள் கருத்துக்களை அங்கே பங்கிர்ந்து கொள்ளுங்கள்.... எமக்குள்ளேயே கருத்துக்களை மாறி மாறி பகிர்வதன் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூற முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து... உங்கள் வைத்தேரிச்சல்களை அங்கே கொட்டுங்கள்... நன்றி.
-
- 0 replies
- 887 views
-
-
"எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு" எனும் தொனிப்பொருளிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. சுத்தமான தண்ணீரை பெற்றுத்தருமாறு கோரி வெலிவேரிய பகுதியில் மக்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவத்தினர் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதலை கண்டித்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்:பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/78851-2013-08-14-14-34-35.html
-
- 2 replies
- 233 views
-
-
புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் த…
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் சிறிலங்கா பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 436 views
-
-
தேர்தல் முறை மறுசீரமைப்பு குறித்து 115 முன்மொழிவுகள் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள் வதற்காக நியமிக்கப் பட்டுள்ள பாராளு மன்ற விசேட குழுவுக்கு 115 முன் மொழிவுகள் மற்றும் யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தத் தகவலை அக் குழுவின் தலைவரும் சபை முதல்வரும் வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பாராளு மன்றத்தில் நேற்று இடம் பெற்ற அந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார். ஏற்றுக் கொள்ளப்பட்ட 7 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளன எனவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அந்த யோசனைக…
-
- 0 replies
- 349 views
-
-
மகிந்த ஆட்சிக் காலத்தில் கொலையாளிகளுக்கு தூதரகங்களில் அடைக்கலம் - கோத்தபாயவின் அராஜகங்களை சபையில் போட்டுடைத்தார் மங்கள படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ச பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண…
-
- 2 replies
- 480 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பெளத்தலோக மாவத்தைக்கு அருகே உள்ள வாய்க்கால் ஒன்றில் மலையகத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களின் உடலங்கள் இன்று காலை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் கொல்லப்பட்டு உடலங்கள் இந்தப் பகுதியில் போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினருக்கு கிடத்த தகவல் ஒன்றையடுத்தே இந்த இரு உடலங்களும் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட இரு பெண்களும் 17 மற்றும் 20 வயது உடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மலையகத்தின் மஸ்கேலியா பகுதியைச் சேர்ந்த இந்த இரு பெண்களும் இந்தப் பகுதியில் உள்ள இரு வீடுகளில் வேலை செய்து வந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணகள் தொடர்வதாக…
-
- 0 replies
- 788 views
-
-
காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் அனுரகுமார: அப்பாவி மக்கள் துயருற்றிருக்கிறார்கள் கரு: ஜேர்மனியின் நாசிகால வதைமுகாம்களை ஒத்த முகாம்களில் மக்கள் மங்கள: காணாமல் போன அண்ணன் குறித்து அம்மா அடைந்த துயரத்தை நான் அறிவேன் ‐ அனுரகுமார: இங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒருநாளாவது அந்த அகதிமுகாமில் வாழ முடியுமா? அல்லது உங்கள் பிள்ளைகளைத்தன்னும் அங்குள்ள சேற்று நீரில் இறங்க விடுவீர்களா? நீங்கள் இங்கு உங்கள் மனைவிமாருடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் அங்கு மனைவி ஒருமுகாமில், கணவன் ஒரு முகாமில், பிள்ளை ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்குச் சென்ற உங்கள் குழந்தை வீடு வருவதற்கு ஒரு மணிநேரம் தாமதித்தால் கூட ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கையில் நிரந்தரமாக ஸ்தாபிக்கப்படுவது அவசியமென கடந்த வாரம் வருகை தந்திருந்த மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்க் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்க் கூட்டமைப்பின் தூதுக் குழுவில் அங்கம் வகித்திருந்த விக்னேஸ்வரன் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தான் தெரியப்படுத்திய விடயங்கள் பற்றிக் குறிப்பிடும் போதே இலங்கையில் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர கண்காணப்புக்குழுவின் பிரசன்னத்திற்கான தேவைபற்றி கோரிக்கை விடுத்ததாகக் கூறின…
-
- 1 reply
- 249 views
-