ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின் வாக்குரிமையை பறிக்க முயற்சி - ரிஷாத் பதியுதீன் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிங்களின் பெயர்களை தேர்தல் இடாப்பில் இருந்து நீக்குவதற்கு உதவி தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பில் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 1990 இல் வடக்கில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிங்கள் புத்தளம்,குருணாகல்,அநுராதபுரம் போன்ற பகுதிகளில் குடியேறினார்கள். இதில் 50 வீதமானவர்கள் மீள் குடியேறினார்கள். 20-30 வீதமானவர்கள் புத்தளத்…
-
- 1 reply
- 417 views
-
-
களனி பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மர்றும் விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையே இன்று மோதல் இடம்பெற்றுள்ளது.மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைக்கும் முகமாக பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். http://www.paristamil.com/tamilnews/?p=26633
-
- 1 reply
- 1k views
-
-
'மக்களின் பிரச்சினைகளை கொஞ்சமாவது தீர்த்து வையுங்கள்' 'நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடம்பர வாகனத்துக்கு பெருந்தொகை பணம் இறக்குமதித் தீர்வாக அரசாங்கத்தால் வரிவிலக்கு செய்யப்பட்டமை தொடர்பில், உணர்வுபூர்வமாக வாக்களித்த தமிழ் மக்கள் இதையறிந்து பெரும் சினமடைந்துள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் சிலவற்றையேனும் அரசாங்கம் பொறுப்பேற்று அவற்றுக்கு தீர்வுக் காணவேண்டும்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார். பிரதருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு, 'யுத்தத்தால் பாதிக…
-
- 0 replies
- 462 views
-
-
கடந்த 25 வருடங்காக 6 போர் நிறுத்தங்களுடன் இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் சிறிலங்கா 20 ஆயிரம் பில்லியன் டொலர் பொருளாதார அழிவுகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 795 views
-
-
நாம் அனைவரும் இனங்களாக இருக்கிறோம் என்பதை விடவும், இலங்கையராக இருக்கிறோம் என்பதே இலட்சணமாக இருக்க முடியும் என கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற பல்வேறு கல்வி மற்றும் புறக்கிருத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டுக்கு என்ன நடந்தது என்பது பற்றி நாமறிவோம். நாம் இலங்கையர் என்பதை மறந்து இனங்கள் என்று கூறி ஒருவரையொருவர் அழித்திருக்கிறோம். கொல்லப்பட்ட ஒருவருடைய சடலத்தையும், எண்ணிக்கை அதிகரிப்பையும் கண்டு இன்னொருவர் மகிழ்ந்திருக்கின்றோம். ஆனால், நமது தேசிய கீதத்தில் மட்…
-
- 0 replies
- 301 views
-
-
முஸ்லிகளுக்கும் ஹலால் கூடாது' : பொதுபலசேனா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2013 - 10:30 ஜிஎம்டி இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது. கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே இந்த அறிவிப்பை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. தற்போது அமலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் முஸ்லிம்கடைகள், ச…
-
- 8 replies
- 764 views
-
-
தேசிய தீபாவளி விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தேசிய தீபாவளி விழா-2016 இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாளைய தினம் உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவதனை முன்னிட்டு அனைத்து இந்துக்ளுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மத வழிபாடுகளுக்கு முதலிடமளித்து இடம் பெற்றவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களுமா பெருமளவானோர் கலந்துகொண்டனர். ht…
-
- 3 replies
- 825 views
-
-
-அப்துல்சலாம் யாசீம் கிண்ணியா - சூரங்கள் பகுதியில், வீட்டொன்றின் கூரையைப் பிரித்து நுழைந்து, 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 53 வயது நருக்கு, 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (14) தீர்ப்பளித்தார். சூரங்கள் பகுதியில், 2012ஆம் ஆண்டில், வீடொன்றின் கூரையைப் பிறித்து நுழைந்த குறித்த நபர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமிக்கு 13 வயதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, குறித்த சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையப் பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு, சட்டமா அதிபர் தி…
-
- 5 replies
- 807 views
-
-
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து ஏடாகூடமாக பேசினார் என்று புதுச்சேரி போலீஸாரால் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் சீமானை சந்தித்தபோது... இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக இரண்டுமுறை கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அந்த இயக்கத்தை ஆதரித்து தொடர்ந்து நீங்கள் பேசி வருவதற்கு பின்னணிகள் இருப்பதாகச் சொல்கிறார்களே? தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தை ஆதரித்து நான் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் பேசி வருகிறார்கள். காரணம் அப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதனால்தான். சட்டப்படி குற்றம் எனில் எனக்கு பிணை தந்திருக்காது நீதிமன்றம். இந்த நாட்டில், ஒரு விசயத்தை ஆதரிப்பதற்கும் எதிர்ப்ப தற்கும் சம உரிமை …
-
- 6 replies
- 2.2k views
-
-
இன்று பாரிசில் மூர்த்தி அண்ணாவின் அஞ்சலி நிகழ்வு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சார்பில் நடைபெற்றது 16.00 மணிக்கு S.K. Rajan அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்தியாவிலிருந்து நெடுமாறன் ஐயா வைகோ அண்ணா மற்றும் செய்தியாளர் அம்துல் ஐகவார் ஆகியோரது பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டன. அத்துடன் கங்கை அமரன் அவர்கள் நேரில் வந்து தனது அவருடனான தொ டர்புகள்மற்றும் சந்திப்புக்கள் அவரது பல்முக ஆற்றல்கள் பற்றி சொன்னார். மேலும் புனர்வாழ்வுக்கழக தலைவர் சுந்தர் முன்னைநாள் தலைவர்கள் தா. விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் அத்துடன் கவிஞர் யெயா என பலரும் உரையாற்றினர். அவர்களது பேச்சுக்கள் அனைத்திலும் இருந்து.. சிறைச்சாலையில் நடந்த சித்திரைவதைகளினால் அங்கயீன…
-
- 2 replies
- 902 views
-
-
என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்! என்னை இனவாதியாக காட்டும் ஆளுனருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மயிலத்தமடு, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் கிழக்கு மாகாண ஆளுனர் வெளிடப்படவுள்ளதாக கூறும் வர்த்தமானி குறித்து எழுந்துள்ள சிக்கல் நிலைமைகளை கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் அநு…
-
- 0 replies
- 535 views
-
-
ஆஸ்திரேலியாவில் வெளி வரும் பத்திரிகையில் கட்டணம் செலுத்திய விளம்பரமாக ராம் என்பவர் இதனை பிரசுரித்துள்ளார். நீங்களும் ஏன் உங்கள் நாடுகளில் இதனை செய்யக்கூடாது . நன்றி ராம் மதிவாணன். Does anyone care? Asia's longest war 26 years.....Sri Lanka,an Island of Tamil blood more than 150,000 Tamils dead and more than 500,00 made homeless Since 2009, more than 5,000 Tamils dead and 15,000 wounded... While the world is watching, every four minutes one innocent Tamil Civilian is being killed or wounded in Sri Lanka. Relentless aerial bombing,shelling and gun fire is currently being directed on more than 250,000 displaced people living in so called "safety zones" wit…
-
- 3 replies
- 1.4k views
-
-
சமஸ்டியுடன் , சுயாட்சி கூடிய அரசியலமைப்பே தேவை. – சி.வி. விக்னேஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் எமக்கு சமஷ்டியுடன் கூடிய அரசியல் யாப்புத் தேவை. அது எமக்கு ஒரு விதத்தில் சுயாட்சியை தரும் வகையில் அமைய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடாவின் உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கணவரை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகள், தாய் தந்தையை இழந்த சி…
-
- 0 replies
- 290 views
-
-
மைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.! இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வர வேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:- "அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன் இராஜாங்க செயலாளரின் எதிர்வரும் விஜயம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா - இலங்கை உறவு தொடர்பாக பகிரங்கமாக வலியுறுத்தல் விடுத்ததுடன் தலையீடு செய்தமை மட்டுமன்றி வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக 'கடினமானதும் ஆனால் தேவையானதுமான தீர்மானங்களை' இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தமையானது இரா…
-
- 14 replies
- 2.1k views
-
-
உகந்தமலையில் இம்முறை கந்தசஷ்டி விரதாதிகளுக்கு தடை! November 3, 2020 காரைதீவு நிருபர் சகா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தில் இந்தவருடத்திற்கான கந்தசஷ்டி விரதகாலத்தில் ஆலயத்தில் தங்கியிருந்துவிரதம்அனுஸ்ட்டிக்கும் விரதாதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தெரிவித்தார். நாட்டில் நிலவும் சமகால கொரோனா சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு ஆலய பரிபாலனசபையின் உயர்பீடக்கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்துக்களின் மிகமுக்கிய விரதங்களிலொன்றான கந்தசஷ்டி விரதம் இம்முறை எதிர்வரும் 15ஆம் திகதி தீபாவளியன்று ஆரம்பமாகின்றது. ஆறுநாட்கள் …
-
- 0 replies
- 428 views
-
-
சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல் சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு வெகு விரைவாக குறைந்து செல்வதால், அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் உதவி புரியுமாறு கோர ஆரம்பித்துள்ளது. சிறீலங்காவிற்கு பிரதான அன்னியச் செலாவணி வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பனவற்றின் ன்னியச் செலாவணி வருமானம் முன்னரைவிட குறைவடைந்துள்ளன. இதேவேளை, சிறீலங்கா அரசு மிகப்பெரும் பாதீட்டை ஒதுக்கீட்டுடன் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளதாலும், அதற்காக முற்று முழுதாக நாட்டின் உள்நாட்டு இருப்புக்களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ள…
-
- 5 replies
- 1.4k views
-
-
“ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்’’ என்ற புண்ணியவான் ராஜீவ்காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு இந்திராகாந்தியின் உயிருக்கு மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால் ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா.நேரடியாக நரவேட்டையில் ஈடுபடுவதைக் காட்டிலும் தனக்குத் தோதான பாசிஸ்ட் ஒருவனை உருவாக்கி அவனது கையில் பிஸ்டலைக் கொடுப்பது தேர்ந்த பாசிஸ்டுகளின் கைவண்ணம். அதைத்தான் இப்பொழுது இந்தியாவும் செய்து கொண்டிருக்கிறது. ஆயுதங்கள், தொழில் நுட்ப உதவிகள், பண உதவி போன்ற அனைத்தையும் கொடுத்து எ…
-
- 0 replies
- 1.5k views
-
-
இருமுறை திருத்தப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை ஜெனிவாவில் 21 ஆம் திகதி சமர்பிக்கப்பட உள்ளது. 18 மார்ச் 2013 இரண்டு முறை திருத்தப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த யோசனை தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கியூபா தூதுவர் பலமாக மேசையில் தட்டி யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கியூபாவுடன் இணைந்து, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு பதிலளிக்க கனேடிய தூதுவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த யோசனை தொடர்பாக தம்முடன் அணைந்து கூட்டு யோசனையாக பேரவையில் சமர்பிக்க வேண்டும் என்ற தூதுவர் ஐலின் டோனஹோர் முன்வைத்…
-
- 0 replies
- 880 views
-
-
புலனாய்வு அதிகாரிகளை சந்தித்தார் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, புலனாய்வு அதிகா ரிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். அண்மையில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி, இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலை மையகத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். அதேவேளை, இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் பிரதானியாக இருந்த, மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இராணுவப் பு…
-
- 0 replies
- 241 views
-
-
அப்பாவி ஈழ தமிழ் மக்கள் கொல்லப்படுவது தென்னிந்திய ஊடகங்களுக்கு தெரியவில்லையா? ஏன் இந்த பாராமுகம்? சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், விநியோக நிலையங்களின் மீது கூட தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை வெளியிட வேண்டிய கடைமை தமிழ் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய…
-
- 0 replies
- 587 views
-
-
-மொஹொமட் ஆஸிக் மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் அணிந்திருந்த தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக அபகரித்து அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவரின் தொப்பியையே குறித்த நபர் இவ்வாறு அவமதித்துள்ளார். பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். மௌலவி ஒருவர் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்ததாக பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் தெரிவித்துள்ளார். பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதும் அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற…
-
- 4 replies
- 764 views
-
-
இவரைத் தெரிந்தால் அறிவிக்கவும் செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார். 45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் கடந்த 16ஆம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள…
-
- 1 reply
- 478 views
-
-
உயிர் தியாகம் செய்து வெற்றியைத் தேடித்தந்த இராணுவத்தை ஒருபோதும் ஜனாதிபதியோ, பிரதமரோ காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுணுகம தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில், மஹிந்த கடந்த காலத்தில் தேர்தலை நடத்தியது இலங்கையில் உள்ள ஜோதிடர்கள் கூறிய அறிவுரையின் அடிப்படையில் இல்லை. ஜெனிவாவை கருத்திற் கொண்டே அவர் தேர்தலை நடத்தினார். ஆனாலும் அவர் எதிர்பார்க்காத வகையில் தோல்வியடைந்தார். மேலும், எமது நாட்டில் இடம்பெற்ற போரினை வெற்றி கொள்ள இராணுவத்தினர் உயிர்தியாகங்களைச் செய்தனர். அவர்களுடைய சேவை என்பது அளப்பரிய…
-
- 0 replies
- 212 views
-
-
மாங்குளத்தில் வெடித்தது உள்ளூர் தயாரிப்பு குண்டு! மேலும் ஒரு குண்டு மீட்பு! November 28, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று முன்தினம் (26.11.20) காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது. குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய தினம் (27) தடயவியல் காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதோடு குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரி…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழர்கள் என்றுமே கண்டிராத பேரவலத்துக்குள் வாழ்கின்றனர். அதனை கண்திறந்து பாருங்கள் என அனைத்துலக சமூகத்திடம் கிழக்கு பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 463 views
-