Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. -ரஞ்சித் ராஜபக்ஷ, ஆர்.ராஜேஸ்வரன் 100 வருடங்கள் பழமையானது என நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற மூவர் ஹட்டன் பொலிஸாரால் வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் வெள்ளி மற்றும் பித்தளை ஆகிய உலோகங்களைக் கலந்து செய்யப்பட்ட இந்த புரதான வாளை, சுமார் 36 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வாளினை விற்பனை செய்யப்போவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு சிவில் உடையில் சென்று வியாபாரி போல் நடித்து சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களையும் தோண்டி எடுக்கப்பட்ட வாளையும்இன…

  2. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 100 வீதமான சித்தை எய்தியுள்ளனர். 50 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர், 32 மாணவர்கள் தமிழ்மொழி மூலமும், 18 மாணவர்கள் ஆங்கில மொழிமூலமும் சித்தியடைந்துள்ளனர். 49 பேர் 8ஏ தரச் சித்தியினையும், 34 மாணவர்கள் 7ஏ தரச்சித்தியினையும் 35 மாணவர்கள் 6ஏ தரச்சித்தியையும் பெற்றுள்ளனர். பாடசாயில் மொத்தமாக 231 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்கள் 157 பேர் தமிழ்மொழி மூலமும், 74 பேர் ஆங்கில மொழியிலும் பரீட்சை எழுதியிருந்தனர். அதனடிப்படையில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை 100 வீதம் சித்தியடைந்துள்ளது. …

  3. 100-150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருப்பினும், இது மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும். கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு சாதனங்கள், அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், உணவு, ஆடைப் பொருட்கள், தோல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் அதேவேளை தொழில்கள், விவசாய உபகரணங்கள், குளியலறை சாதனங்கள…

  4. 100,000 இலங்கையர்கள் 2025 இல் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேற்றம்! 2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது. அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேர். இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர். குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டன. அதன்படி 25,672 …

  5. 100,000 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களைப் பராமரிக்க முடியாமல் சேமிப்பகம் ! உணவுத் திணைக்களத்தின் சேமிப்பக வளாகத்தை நவீனப்படுத்துவதற்கு 29 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவழிக்கப்பட்டது. இருந்தபோதிலும் 100,000 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருட்களைப் பராமரிக்க முடியாமல் போனது குறித்து கோபா குழு கவனம் செலுத்தியது. 1,00,000 மெட்ரிக் டன் அரிசி இருப்பு வைத்து பராமரிக்க ஆண்டுக்கு 2200 கோடி ரூபாய் தேவைப்படுவது தெரியவந்தது. உணவுத் துறையின் வேயங்கோட்டை சேமிப்பகத்தின் எண் 1, 7, 8, 9, 10, 13 ஆகிய ஆறு கிடங்குகள் 29 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கபீர் ஹாசிம் தலைமையில் கடந்த 20ஆம் திகதி (20) …

  6. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை - பை’ இணைய இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா நேற்று தெரிவித்தார்.இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை - பை’ இணைப்புக்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார். இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ளடக்கக் கூடிய வகையில் 750 இடங்களுக்கு இலவச ‘வை-பை’ இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இது எதிர்வரும மூன்றுமாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு இலங்…

  7. 1000 கிலோ கிடாரம் கிழங்குகளை பிடுங்கிய இருவர் கைது! மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவு, பனிச்சங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் இன்று (11) கைது செய்யப்பட்டதுடன், கிடாரம் கிழங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பனிச்சங்கேணி காட்டுப் பகுதியில் அதிரடிப் படையினரும், வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர்களும் சோதனை மேற்கொண்டனர். இதன்போது மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயிரம் கிலோ எடையுள்ள எழுபத்தையாயிர…

  8. 1000 கைதிகளை சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுவிக்க தீர்மானம்! [sunday, 2013-02-03 09:18:58] சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் 65ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் கைதிகளுக்கு பொது ம்னிப்பு அளிக்கப்பட உள்ளது. பாலியல் வன்கொடுமை, சிறுவர் துஸ்பிரயோகம், சுங்க மோசடி, பயங்கரவாத தடைச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 27 குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர். இரண்டாண்டு கால சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் இரண்டு வாரங்களிலும், மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலம் மூன்று வாரங்களினாலும் குறைக்கப்பட உள்ளத…

  9. யாழ்ப்பாணத்தில் இயங்கும் உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் (ஈ.பி.டி.பி.) தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை யாழ். மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்காக,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார். தனதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச் செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடுத்த ஆயிரம் (1000) கோடி ரூபா கோரும் மான நஷ்ட வழக்கு நேற்ற…

    • 2 replies
    • 563 views
  10. 1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ் adminNovember 11, 2024 விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது – விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங…

  11. 1000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் பெயர் மற்றும் குடும்ப பெயர்களை சிங்களத்திற்கு மாற்றியுள்ளனர் என புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் பத்திரிகை விளம்பரம் மூலம் இவர்கள் இவ்வாறு மாற்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பெயர் மாற்றியமை தொடர்பில் புலனாய்வு பிரிவை அறிவுறுத்தயுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://www.madawalaenews.com/2019/05/1000.html

  12. பாலியல் வல்லுறவு உட்பட்ட குற்றங்களால் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான சிங்களப்படையினர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் மீண்டும் சுமார் ஆயிரம் சிறிலங்காப் படையினர் லெபனான் மற்றும் ஹெய்ட்டி ஆகிய நாடுகளிற்கு அனுப்பப்படுகின்றனர். முந்தைய குற்றம் செய்த படையினர்க்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் கேள்வி கேட்டுவிட்டு அப்படியே அதனை கைவிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்கு மேற்கத்தைய நாடுகள் தமது படைகளை அனுப்புவதனை குறைத்து வருவதால் அவர்களுக்கும் ஆளணி வங்குரோத்து என்ன செய்வது? . இதனிடையே லெபனான் செல்லும் படையினர் ஆயுதங்கள் மற்றும் இராணுவ வாகனங்களுடன் செல்லவுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ பி…

  13. கலிபோர்னியாவிலுள்ள இலங்கைத் தூதர் ஜெஃப் குணவர்த்தனவும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று அண்மையில் ஊடகங்களில் வெளியானது. அப்புகைப்படத்துக்கான செய்தியாக, ஜெஃப் குணவர்த்தன ஒபாமைச் சந்தித்து உரையாடியதாகவும், அச்சந்திப்பின்போது அமெரிக்கா-இலங்கை இடையேயான உறவுகளை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் பற்றிப் பேசப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்செய்கையானது ஜெஃப் குணவர்த்தனவின் கடமை உணர்ச்சியைக் காட்டுவதாக வேறு எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இப்புகைப்படத்தின் பின்னாலுள்ள உண்மை வெளிவந்துள்ளது. ஒக்ரோபர் 22 ஆம் திகதியன்று, தனது குடியரசுக் கட்சிக்காக நிதி சேகரிப்பதற்காக ஒபாமா கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு 1000…

  14. (நா.தனுஜா) நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் அனைத்து வசதிகளும் கொண்ட தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கும், அனைத்து மாவட்டங்களிலும் மும்மொழிப் பாடசாலைகளை ஸ்தாபிப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமானதும், நியாயமானதும், தரமானதுமான கல்வி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதை நோக்காகக் கொண்டு அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளை சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக அனைத்து சிறார்களுக…

    • 3 replies
    • 633 views
  15. வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம், 1000 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு அவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதில் கலந்துகொண்டோர் தங்களது வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியமை அனைவரையும் கவலைக்கு உள்ளாக்கியது. இவ்விடயம் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் இணைப்பாளர் ராஜ்குமார், “சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் 1000ஆவது நாளை இன்று நாங்கள் அனுஷ்டிக்க வந்துள்ளோம். இதில் அனைத்து தமிழ் தாய்மார்களும் சுழற்சி முறையில் உணவு தவிர்க்கும் போராட்டத்தில் தொடர்ந்து பங்கு பற்றி வருகின்றனர். இலங்கை இராணுவத்தா…

    • 10 replies
    • 893 views
  16. இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் சிறீலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகாக கூட்டிய வருடாந்த இராப் போசன விருந்துபசாரத்தில் வெளியிட்ட தகவல்களின் படி இன்னும் 1000 புலிகளே மிஞ்சியுள்ளனர் என்றும் அவர்களை 50000 சிங்களப் படையினர்.. மிக இலகுவாக கொன்று விடுவார்கள் என்பதால் யுத்தம் பெரும்பாலும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இவ் நிகழ்வில் சரத் பொன்சேகா, சீன பாரம்பரிய அடையாளமான ரகன் ஒன்று புலியை நசுக்கிக் கொல்வது போன்ற அடையாளமிடப்பட்ட கறுப்பு நிற மேலங்கி அணிந்து கலந்து கொண்டதாகவும்.. இந்த யுத்தத்தின் ஆரம்பத்தில் தான் 50 வரைபடங்களோடு காலந்தள்ள வேண்டி இருந்ததாகவும் இன்று வெறும் ஒரே ஒரு வரைபடத்தைத்தான் பாவிப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு இந்த மாதிரி நிகழ்வின் …

    • 13 replies
    • 3.4k views
  17. 1000 விடுதலைப்புலிகள் போராளிகள் நாளை விடுதலை செய்யப்பட இருப்பதாக பசில் இராசபக்‌ஷ தெரிவித்துள்ளார். நேற்று மாலை உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார் பசில் இராசபக்‌ஷ . இது தொடர்பான அறிவுறுத்தல் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதே வேளை வவுனியா போராளிகளை அடைத்து வைத்திருக்கும் முகாமிற்கு அவர்களை பார்க்க சென்ற குடும்ப உறுப்பினர்களும் இதனை உறுதிப்படுத்தினர். ஆனால் 300 போராளிகளின் விபரங்களையே இந்த வாரம் விடுவிப்பதற்காக பெயர் விபரம் எடுக்கப்பட்டுள்ளதாக போராளிகள் கூறியதாக அந்த குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். காயமடைந்த, அங்கவீனமான போராளிகளையே இவ்வாறு தேர்வு செய்ததாக கூறினர். கடந்த வாரத்தில் இருந்து மூன்று வேளையும…

    • 0 replies
    • 706 views
  18. (செ.தேன்மொழி) அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1000 மில்லியன் அமெரிக்கா டொலர்களையும் , 2000 மில்லியன் யென்களையும் பெற்றுக் கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பட்டதாரி நியமணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் , தேர்தல் ஆணையகம் தேர்தல் முடிவுறும் வரையில் அதனை செயற்படுத்த மு…

    • 4 replies
    • 411 views
  19. 1000 மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை [Tuesday, 2011-03-15 02:31:24] உலகில் மிகப் பெரிய புத்தர் சிலை வவுனியாவில் அமைக்கப்படவுள்ளது. சமாதி நிலையில் அமையவுள்ள இந்தப் புத்தர் சிலையை கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் உதவியுடன் அரசாங்கம் நிறுவவுள்ளது. தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கவின் துணையுடன் இந்தப் பாரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ளதாக கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் நிறுவுனர் பிலப்பிட்டிய பஞ்ஞதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற படைவீரர்களைப் போற்றி கௌரவிக்கும் வகையிலேயே இந்தப் புத்தர்சிலை அமைக்…

  20. 1000 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால் நடப்பது இதுதான்! தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை தெரிவித்தார். 13 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். …

    • 6 replies
    • 686 views
  21. 1000 ரூபா சம்பள விவகாரம் தோட்டதொழிலாளர்கள் மீண்டும் குற்றச்சாட்டு 13 Views பெருந்தோட்டங்களில் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டுமென தொழில் திணைக்களம் அறிவித்துள்ள போதிலும் இதுவரை 700 ரூபா சம்பளமே வழங்கப்படுவதாக அக்கரப்பத்தனையிலுள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். பெருந்தோட்டங்களில் கைக்காசுக்கு வேலை செய்பவர்கள் என அழைக்கப்படும் சமயாசமயத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளம் இதுவரை நேர்த்தியாக வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டம் அக்கரப்பத்தனையிலுள்ள கிரன்லி கீழ் பிரிவு, ஊட்டுவள்ளி, சின்னத்தோட்டம் உள்ளிட்ட தோட்டங்களில் தொ…

  22. (எஸ்.வினோத்) பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. தேட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் என்ற வகையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இனிவரும் காலங்களில் முதலாளி மார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் ஈடுப்படாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைருவரும் இலங்கைய தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் தலைவருமான ரொஷான் ராஜதுறை…

    • 5 replies
    • 679 views
  23. வீரகேசரி நாளேடு - இலங்கை மத்திய வங்கி ஆயிரம் ரூபா நாணயக்குற்றியினை அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு உதவி வழங்கும் வகையிலேயே இந் நாணயக் குற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக இந் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது .

  24. 1000 ரூபா புதிய நாணய குற்றி திங்கட்கிழமை, 12 நவம்பர் 2012 11:32 0 COMMENTS இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடவுள்ளது. இராஜதந்திர உறவின் வெள்ளிவிழா நிறைவாக வெளியிடப்படவுள்ள இந்த நாணயக்குற்றியின் முகப்பு பக்கத்தில் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய நாணயக்குற்றி 35.0 மில்லிமீற்றர் விட்டமும் 22.0 கிராம் நிறையையும் கொண்டது. இராஜதந்திர உறவினை நினைவு கூறும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 57 ஆவது ஞாபகார்த்த நாணயமாகும். 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை மத்திய வங்கியின்…

  25. தோட்ட தொழிலானர்களின் நாளாந்த ஊதியமாக ரூபாய் 1000 வழங்குவதற்கான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/235572/1000-ரூபாய்-அடிப்படை-வேதனம்-கிடைக்கும்-நாள்-அறிவித்த-அமைச்சர் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார்.! மார்ச் முதலாம் திகதி முதல் கிடைக்கும் என கூறப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் ஏப்ரல் மாதம் கிடைக்கும் என தற்போது கூறப்…

    • 2 replies
    • 598 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.