ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
புதுடில்லி, ஒக்ரோபர் 22 சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டுப் போர்க்காலத்தில் இலங்கைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல் களை யும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி. விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகத் தலைவர் புலித்தேவன் மற்றும் மூத்த உறுப்பினர்களும் குடும்பத்தினரும் சரணடைந்த வேளை கொலை செய்யப்பட்டதும் உண்மையே என்றும் பேரா சிரியர் பிரம்மா ஊர்ஜிதம் செய்த…
-
- 0 replies
- 2.3k views
-
-
-
வடக்கில் யுத்தத்தை முன்னெடுக்கும் அரசாங்கத்திடம் தென்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்கான எத்தகைய திட்டமும் கிடையாது. அரசாங்கம் இராணுவ இரகசியங்களை பாதுகாப்பதற்கு தவறியதன் காரணமாகவே முகமாலையில் எமது படையினரின் பல உயிர்கள் பலியாகியுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். முகமாலைச் சமரில் காணாமல் போன இராணுவத்தினரில் பலர் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவர்கள் தமது பெற்றோர் உறவினர்களுடன் தொலை பேசியில் பேசியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர…
-
- 3 replies
- 2.3k views
-
-
இலங்கை பிரச்சினைக்காக, தி.மு.க. நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு. வரும் 23.04.2009அன்று நாடுதழுவிய பந்திற்கு தி.மு.க தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார். இலங்கையில் நிரந்த போர் நிறுத்தம் கோரி வரும் 23ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவர் மேலும், ‘’இப்பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியான முறையில் கலந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும்’’ என்றும் அறிவித்துள்ளார். தமிழ் சினிமா 23-ந் தேதி அன்று படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளும் நடைபெறாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் கூறியுள்ளார். அவ…
-
- 12 replies
- 2.3k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 இந்தக் காலகட்டத்திற்கு தேவையானது. புலிகள் வீழ்ந்து விட்டனரோ என்ற ஐயத்திலிருக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கும், கையாலாகதவர்களாக தம்மைக் கருதிக்கொண்டு புலம்பும் தாய்த்தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த சிந்தனையைத் தோற்றுவிக்க வல்ல கேள்வி அது. இன்றைய உலகத் தமிழர்களின் ஒரே சாத்தியமான குரலான தாய்த்தமிழக மாநில அரசு தனது கடமையைச் சரிவரச் செய்கிறதா என்று ஆராய்வதும் , தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அளவிற்கு அது திறனுடன் இருக்கிறதா என்று பார்ப்பதும் தமிழீழத்திற்கான தேவையை உறுதி செய்ய உதவும்.! *** எல்லோரையும் போல , நானும் கூட கலைஞரைப் பற்றிக் குறைகூறிக்கொண்டுதான் இருக்கிறேன் , ஒரு மாநில முதல்வர் …
-
- 1 reply
- 2.3k views
-
-
பிரான்ஸில் வாழும் தமிழ் இளைஞரான கெவின் வலத்தேசர் (Kevin VALLATHESAR) பாரிஸின் புறநகரான செவி ல றூ chevilly-larue நகரசபையினால் அதி சிறந்த விளையாட்டு வீரனாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழருக்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாகும். செவி ல றூ விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் மாலை விழா ஒன்று அண்மையில் செவி ல றூவில் இடம்பெற்றபோதே இந்த இளைஞர் கௌரவிக்கப்பட்டார். 2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி பிரான்சின் பிராந்தியங்களுக்கிடையிலான மரதன் (Cross Country) ஓட்டப்போட்டி பரிஸ் புறநகர் பகுதியான பொந்தோ கொம்போவில் ( Pontault-Combault ) நடைபெற்றது. இதில் வெற்றியீட்டிய கெவினுக்கு 2010- 2011ம் ஆண்டுக்கான விருதும், 2011ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த இளம் சாதனையா…
-
- 12 replies
- 2.3k views
-
-
நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சேனைப்புலவு மக்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து அழைப்புவிடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும…
-
- 0 replies
- 2.3k views
-
-
"வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க" இது புதினத்தில் வந்த ஒரு செய்தி. "தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது" ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினாரா? புதினம் தமிழீழ தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விரும்பும் தமிழர்களை தாஜா பண்ணுவதற்காக செய்திகளைத் திரிபுபடுத்தியும் அழகாகச் சோடித்தும் எழுதிவருவதற்கு இது ஒரு உதாரணம். அப்படி அவர் கூறியிருந்தால் தமிழீழத் தேசியத் தலைவராக மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டாரென்பதா அர்…
-
- 10 replies
- 2.3k views
-
-
அமைதியான நாடுகள் வரிசையில் இலங்கை 4ஆவது இடம் விரைவாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.விஷன் ஓப் ஹ்யூமனிட்டி அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான சர்வதேச அமைதி நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டியலின் பிரகாரம் இலங்கை, மொங்கோலியா, இஸ்ரேல், சாட் மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகள் உள்நாட்டு யுத்த சூழ்நிலையிலிருந்து விடுபட்டு விரைவாக அமைதியான நிலைக்குத் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் அமைதியான நாடுகள…
-
- 19 replies
- 2.3k views
-
-
மாயாண்டி குடும்பத்தார் என்ற தமிழ்சினிமாவில் இயக்குநர் சீமான் நடித்துள்ளார். புதுச்சேரி சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனவுடன் இரவில் நடந்த இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டார் இயக்குநர் சீமான். விழாவில் சீமான், ’’சிறை என்றால் எல்லோரும் பயப்படுகிறார்கள். எனக்கும் பெரிய பயம் இருந்தது. ஆனால் உள்ளே போய் வந்த பிறகுதான் அந்த பயம் நீங்கியது. சிறைக்குள் எந்த பயமும் கிடையாது. ரொம்ப நல்லவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். ரொம்ப கெட்டவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள். நான் 70 நாட்கள் தனிமை சிறைக்குள் இருந்தேன். உள்ளே அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு ரூபாய் நாணயம் போட்டு வெளியில் யாரிடமாவது பேசிக்கொள்ளலாம். அப்படி பேசும்போது இலங்கையில் நடப்பதையும் இங்கே …
-
- 0 replies
- 2.3k views
-
-
இலண்டனில் இருந்து விடுமுறையில் கொழும்பு சென்ற ஈழத்தமிழர் ஒருவர் கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு இலண்டன் வெம்பிளிப் பகுதியைச் சேர்ந்த இவர், அண்மையில் பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. இதனிடையே, மேற்குலக தேசங்களில் இருந்து விடுமுறையில் கொழும்புக்கு வருகை தரும் தமிழர்களை, கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கடும் கண்காணிப்பிற்கும், விசாரணைக்கும் உட்படுத்துவதற்கான கட்டளையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச பிறப்பித்திருப்பதாக தகவல…
-
- 17 replies
- 2.3k views
-
-
சனி 28-07-2007 00:31 மணி தமிழீழம் [மயூரன்] யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ரணில் கைச்சாத்திட்டது சட்டவிரோதமானது - பிரதம நீதியரசர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டமை சட்டவிரோதமானது என ஸ்ரீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் பிரதமர் தன்னிச்சையாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான அதிகாரங்களை கொண்டிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் பிரதம நீதியரசர் இன்று அறிவித்துள்ளார். ஜே.வி.பி ஜாதிக ஹெல உருமய மற்றும் சிங்கள தேசிய சங்கம்…
-
- 8 replies
- 2.3k views
-
-
கொழும்பில் நடைபெறும் 'சார்க்கு' மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் சிங்கின் பாதுகாப்பு கருதி மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணை வரையான கடற்பரப்பில் இந்தியா ஏழு கடற்படைக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. இரு நாள் சார்க் மாநாடு கொழும்பில் நேற்று சனிக் கிழமை ஆரம்பமாயிற்று இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வந்தார். பிரதமரதும் இந்தியக் குழுவினரதும் பாதுகாப்பபுக்காக மன்னார் வளைகுடா முதல் பாக்கு நீரிணையில் கலிமார் முனை வரை இந்தியக் கடற்படை தனது பாதுகாப்பை முழு அளவில் பலப்படுத்தியுள்ளது. இந்தியக்கடற்படையனரின் நான்கு யுத்தக்கப்பல்களும் இந்திய கரையோரக்காவல் படையின் மூன்று கப்பல்களும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கiயில் …
-
- 8 replies
- 2.3k views
-
-
சரத் பொன்சேகா சிறையில் இயற்கை மரணத்தை தழுவ வைக்க முயற்சியாம்! ஞாயிற்றுக்கிழமை, 16 ஜனவரி 2011 23:01 இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக் கூடத்துக்குள்ளேயே இயற்கை மரணத்தைத் தழுவ வைப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளமை தெரிய வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் காயமடைந்த சரத் பொன்சேகாவுக்கு சில சிகிச்சைகளும் உடற்பயிற்சிகளும் தொடராக வழங்கப்படவேண்டிய நிலையில் அவற்றினை சிறையில் அவருக்கு வழங்காது இவ்வாறு இயற்கை மரணத்தை தழுவிக்கும் முயற்சி இடம்பெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள…
-
- 3 replies
- 2.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முன்நகர்வை மேற்கொண்டுள்ள படையினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் தாக்குதலில் இதுவரை 320க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை தொடக்கம் இன்று பிற்பகல் வரையில் இரணைப்பாலை மற்றும் புதுக்குடியிருப்பு-முல்லைத்தீவு வீதி,சாலை தெற்கு பகுதி என்பனவற்றிலேயே படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி அங்கிருக்கும் எமது ‘முரசம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார். விடுதலைப்புலிகளின் எதிர்பாராத திட்டமிடப்பட்ட தாக்குதல் உத்தி காரணமாக படையினர் கடும் இழப்புகளை எதிர்நோக்கி வருவதாக செய்தியாளர் தெரிவிக்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
Ilanthirayan seriously wounded in SLA barrage [TamilNet, Sunday, 10 May 2009, 15:38 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) Military Spokesman Irasiah Punitharooban alias Ilanthirayan (Marshall) sustained heavy injuries in the latest artillery barrage by the Sri Lanka Army (SLA) in the early hours of Sunday, sources close to LTTE in Vanni told TamilNet. After a long break, Ilanthirayan gave an interview to Australia Tamil Broadcasting Coorporation (ATBC) amidst shell blasts on Saturday where he referred to the deployment of heavy weapons by the SLA to attack the civilian zone. He also referred to the report by United Nations Institute for Training and Rese…
-
- 4 replies
- 2.3k views
-
-
பத்தாயிரம் ஏவுகணைகள் இன்று ஜ்லோவாக்கியாவில் இருந்து கொழும்பு வந்தடைகின்றன!10,000 mislies arriving Colombo now!
-
- 8 replies
- 2.3k views
-
-
சனி 02-02-2008 15:51 மணி தமிழீழம் [முகிலன்] பதவி பறிபோகலாம் அச்சத்துடன் நாடு திரும்பினார் ரோஹித பொகொல்லாகம சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, பெரும் குழப்பத்திற்கும் மத்தியில் அவசரமாக நாடு திரும்பியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் அமைச்சர் ரோஹித பொகொல்லாகம தங்கியிருந்த வேளையில், பதில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெயராஜ் பெர்னான்டோப்புள்ளேயை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியமித்ததோடு, அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிற்கான தூதுவர்களையும் நியமித்திருந்தார். இதனால் தனது பதவி பறிபோகக்கூடும் என அச்சமடைந்திருக்கும் அமைச்சர் ரோஹித பொகொல்லாகம, அவசரமாக நாடு திரும்பியுள்ளார். http://www.pathivu.com/index.php?…
-
- 5 replies
- 2.3k views
-
-
திங்கட்கிழமை, ஏப்ரல் 4, 2011 கடந்த 29 அம் திகதி முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமற்போன நான்கு கடற்படை சிப்பாய்களின் நிலைமை என்ன என்பது தொடர்பாக இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை.இவ்வாறு சிங்கள கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசலவர்ண குலசூரிய கூறியுள்ளார். கடற்படைச் சிப்பாய்கள் காணாமற் போய் நேற்றுடன் ஆறு நாள்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் காணாமற் போனது இன்னும் மர்மமாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.முல்லைத்தீவு கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு கடற்படைச் சிப்பாய்கள் டிங்கிப் படகு ஒன்றுடன் கடந்த மாதம் 29ஆம் திகதி காணாமற் போயிருந்தனர்.இதனையடுத்து, கரையோர பிரதேசங்களில் முப்படையினரும் கூட்டாக இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈட…
-
- 0 replies
- 2.3k views
-
-
13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயமானது. September 26, 2020 சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது கட்டாயமானதென இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். காணொளி தொழில்நுட்பத்தினூடாக இருநாட்டு பிரதமர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பாரத பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர் ஒருவருடன் இடம்பெற்ற முதலாவது காணொளி கலந்துரையாடல் இதுவாகும். வலய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலின்…
-
- 13 replies
- 2.3k views
-
-
http://www.orunews.com/?p=554
-
- 1 reply
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினரால் 125 சிறார் கடத்தல் மட்டக்களப்பு மாங்கேணிப் பிரதேசத்தில் நேற்று காலை சிறிலங்கா இராணுவத்தினரும், மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினரும் சேர்ந்து திடீர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டனர். இச் சுற்றிவளைப்பின் போது பாம்படி என்னும் கிராமத்தில் 14 வயதுக்குட்பட்ட 15 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு இளைஞர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை என்னும் இடத்தில் நேற்று இரவு 30 இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இச் செயற்பாடு தொடர்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் கு…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஐ.நா. அறிக்கையை மாலைதீவு நிராகரிப்பு ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்ப்பதாக மாலை தீவு தெரிவித்துள்ளது. கொழும்புக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அகமட் நஸீம் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் மாநாட்டிலேயே நிபுணர்கள் குழு வின் அறிக்கைக்கு எதிராக இவ்வாறு கூறி யுள்ளார். இலங்கை போர் முடிபுற்ற பின் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஈடு பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அது பெற்ற வெற்றியை நாம் பாராட்ட வேண் டும் என மாலைதீவின் அமைச்சர் அகமட் நஸீம் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளினதும் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடுவதற் காகவே தான் கொழ…
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்ற பிரபல தமிழ் நடிகரின் பெயரைத் தக்க ஆதாரத்துடன் விரைவில் நிரூபிப்பேன் என்று ஜனதாக் கட்சித் தலைவன் அசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமி கூறினார். தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் அளிக்க வில்லை. விடுதலைப் புலகளிளடம் இருந்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவரும் பணம் பெற்றிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். விரைவில் அதை நான் நிரூபிப்பேன். என்று பத்திரிகை செவ்வியோன்றில் பேட்டி கொடுக்கும் போது இதனைத் தெரிவித்தார் நன்றி : சுடர் ஒளி
-
- 4 replies
- 2.3k views
-
-
கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ள முனைந்து வருவதாக ரஷ்யாவின் இன்ரபக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.3k views
-