ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்! தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது. தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே ந…
-
- 1 reply
- 433 views
-
-
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு! தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவினை வழங்கவேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுப்படுதும், பிரதேச மட்ட கலந்துரையாடல் ஏறாவூரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அடுத்து வரப்போகின்…
-
- 4 replies
- 538 views
-
-
பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி போராட்டம் adminDecember 22, 2024 யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது , கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. …
-
- 2 replies
- 355 views
- 1 follower
-
-
இன்னும் அடங்காத ஈழத்தின் ஓலம்: விரக்தியின் விளிம்பில் தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். (கோப்பு படங்கள்) இலங்கை இனப் போரின் இறுதிக்கட்ட மர்மங்கள் இன்னும் விலகாத நிலையில் போருக்குப் பிறகான ஈழத் தமிழர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. போரில் பாதிக்கப்பட்ட தமிழர் களை மீள் குடியேற்றம் செய்யவும் அவர்களுக்கான புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசாங்கம் அளித்த வாக்குறு திகள் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. போர் முடிவில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இளம் யுவதிகளை ராணுவம் அழைத்துச் சென்றது. அவர்களில் யாரும் இன்னமும் வீடு …
-
- 1 reply
- 600 views
-
-
‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை ஆளுநராக கடமையாற்றிய கடந்த 8 மாதங்களில் அறிந்து கொண்டதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தடைகளை உடைத்து மீண்டும் தலைதூக்கிய ஒரு தமிழ் தேசமாக, உலகம் எம்மை திருப்பி பார்க்ககூடிய ஒரு தேசமாக உலகிற்கு நன்மை செய்யகூடிய தேசமாக மாறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றுகையில், “நான் கொழும்பிலே வாழ்ந்து, பணிபுரிந்து, வெளிநாட்டிலே கல்விகற்று, என்னுடைய வாழ்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழாக வைத்திருந்தாலும் என்னுடைய ஆன்ம…
-
- 1 reply
- 733 views
-
-
நேசக்கரம் ஏப்றல் 2012 மாதாந்த கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள். நேசக்கரம் ஏப்றல் 2012 மாதாந்த கணக்கறிக்கை.
-
- 0 replies
- 835 views
-
-
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம் வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர். குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த கூட்டம் இட…
-
- 0 replies
- 475 views
-
-
சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மீன்பிடி படகுடன் 10 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்றிரவு (08) மேற்கொண்ட ரோந்து பணிகளின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுடன் இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது. https://athavannews.com/2025/1415842
-
- 1 reply
- 217 views
-
-
அரசியல் அவலத்தின் பெரும் பரப்பை யாரும் எளிதிற் கடந்து விடமுடியாது என்பதற்கு ஈழப்போர் மட்டுமல்ல அதற்கு பின்னான நாட்களும் மிகத் தெளிவாகவே காட்டுகின்றன. போர்க்கால நிகழ்ச்சிகள் ஒருவிதமான அவலத்தையும் வாழ்க்கைச் சிதைவுகளையும் ஏற்படுத்தின என்றால், போருக்குப் பின்னான கால நிலவரங்கள் இன்னொரு விதமான அவலத்தையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியுள்ளன. முக்கியமாக கல்வியில் ஏற்படுத்திய தாக்கம் அல்லது சிதைவு மிகப் பெரிது. போர் நடந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா வடக்கு, மன்னார் கிழக்குப் போன்ற இடங்களின் நிலை மிகப் பிந்தங்கியுள்ளது. அதிலும் கிளிநொச்சியின் நிலை இன்னும் மோசமானது. வடமாகாணத்தில் கடைசி நிலையில் கிளிநொச்சியே உள்ளது. ஒன்பது பாடங்களிலும் சிறப்புச் சித்தியைப் பெற…
-
- 2 replies
- 974 views
-
-
நிலைபேறற்ற சீன முதலீடுகள் கடன்சுமையை அதிகரிக்கும் யாழ்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்த இந்திய உயர்ஸ்தானிகர்; சீனத்தூதுவரின் உள்விவகார தலையீடு குறித்தும் சுட்டிக்காட்டு 18 JAN, 2025 | 10:00 PM ஆர்.ராம் நாடொன்றின் நிலைபேறன எதிர்காலத்தினை உறுதிப்படுத்தாத சீனாவின் முதலீடுகள் அந்நாட்டின் கடன்சுமையையே அதிகரிக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் தனியார் விடுதியொன்றில் இராப்போசனத்துடன் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்…
-
- 1 reply
- 171 views
- 1 follower
-
-
மடு புனித தலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிது அங்கு மோதலில் ஈடுபடும் அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாகும் என்று நோர்வே தெரிவித்துள்ளது. புலிகளின் அரசியல் துறைப் பெர்றுப்பாளர் பா.நடேசன் மடுவிவகாரம் தொடர்பாக அனுப்பியுள்ள கடிதத்தை அரசின் பரிசீலனைக்காக ஒஸ்லோவிற்கு அனுப்பியுள்ளதாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். மடு புனித பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தாக்குதலை தடுத்து நிறுத்த நோர்வே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நோர்வேக்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதம் தொடர்பாக 'கேசரி'க்கு கருத்துத் தெரிவிக்கையிலே நோர்வே துதரக பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 3 replies
- 1.8k views
-
-
இலங்கைக்கு JF17 தண்டர் போர் விமானங்களை விற்பதற்கான முயற்சிகளை பாக்கிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது: 31 டிசம்பர் 2015 இலங்கைக்கு தனது ஜேஎவ் 17 தண்டர் போர் விமானங்களை விற்பதற்கான முயற்சிகளை பாக்கிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு சஞ்சிகையான ஜேன்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது குறிப்பிட்ட வகை விமானங்களை மியன்மாரிற்கு விற்பது குறித்த வெற்றிகரமான உடன்படிக்கைக்கு பின்னர் இலங்கைக்கு அந்த வகை விமானங்களை விற்பதற்காக உடன்படிக்கையொன்றை அந்த நாட்டுடன் செய்து கொள்வது குறித்து பாக்கிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இலங்கையுடன் அவ்வாறான உடன்படிக்கையொன்றை பாக்கிஸ்தான…
-
- 0 replies
- 480 views
-
-
நாட்டில் தற்போது நிலவும் சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, கட்டுஹெம்பலாவில் உள்ள மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மறைந்த மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது சிவப்பு அரிசி தட்டுப்பாடு மற்றும் தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து கவலைகளை தெரிவித்ததோடு, சிலர் ஒரு தேங்காய் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த முறை 10 கிலோ சிவப்பு …
-
- 1 reply
- 308 views
-
-
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக்குழு எடுத்த தீர்மானம் பிழையானது. நமது ஆதரவு சிவாஜிலிங்கத்திற்கே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது கட்சியின் யாழ் மாவட்டக்குழு. சில தினங்களின் முன்னர் ரெலோவின் தலைமைக்குழு கூடி, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முடிவெடுத்துள்ள நிலையில், யாழ் மாவட்டக்குழுவின் இந்த தீர்மானம் கட்சிக்குள் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரெலோவின் யாழ் மாவட்டக்குழு கூட்டம் இன்று (9) யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் மற்றும் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண…
-
- 2 replies
- 681 views
-
-
உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டால் மகிந்த வசிப்பிடத்தை காலி செய்யத் தயார் – SLPP அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்கினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயார் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நல்லாட்சி அரசாங்கத்தினால் உத்தியோகப்பூர்வ இல்லம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமாயின் உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வழங்குமாறும் தெரிவித்தார். அவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டால், மஹிந்த ராஜபக்ஷ அங்கு சில கணங்கள் தங்கமாட்டார் எனவும், அது தொடர்பில் கருத்த…
-
- 0 replies
- 215 views
-
-
தமிழ் மக்களின் சரித்திரத்திலே முறத்தால் புலியை விரட்டியடித்த பெண் முதல் இன்று களத்திலே நின்று போராடிக் கொண்டிருக்கும் வீரமகளிர் வரை பல்வேறு வீரச்செயல்களைப் புரிந்து வரலாறு படைத்துள்ளார்கள். வரலாறு படைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள். ஆனாலும் அன்னை பூபதி 20 வருடங்களின் முன்னர் படைத்த வரலாறோ புதுமையானது: நிகரற்றது. ஈழத் தமிழர்களின் அண்மைக்கால வரலாற்றில் ................ தொடர்ந்து வாசிக்க........................................................... ..... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3192.html
-
- 0 replies
- 565 views
-
-
பிரித்தானியாவில் புகலிடம் தேடிய டசின் கணக்கிலான தமிழ் அகதிகள் இரகசிய விமானம் ஒன்றின் மூலம் இன்று சிறிலங்காவுக்கு கட்டாயமாக நாடு கடத்தப்படவுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்‘ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ் அகதிகளை ஏற்றிய - PTV030 என்ற இலக்கமுடைய, வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் லண்டன விமான நிலையத்தின்- வெளிப்படுத்தப்படாத இடம் ஒன்றில் இருந்து கொழும்புக்குப் புறப்படவுள்ளது. பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்காவில் கைது செய்யப்படவும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவும் வாய்ப்புகள் இருப்பதற்கான நம்பகமான சான்றுகள் உள்ள போதும் இந்த நாடுகடத்தல் இடம்பெறுவதாக ‘தி இன்டிபென்ட…
-
- 2 replies
- 870 views
-
-
இலங்கையில் தமிழினமும் அரசியல் தீர்வும் இலங்கையில் தமது உரிமைகளை வென்றெடுத்து சுதந்திர பிரஜைகளாக வாழ்வதற்காக தமிழ் மக்கள் பல வழிகளில் போராடியமை வரலாற்று உண்மையாகும் . அரசியல் ரீதியில் பல்வேறு போராட்டங்களில் சம உரிமைக்காக போராடிய தமிழினம் காலப்போக்கில் உரிமைகளை ஆயுதம் ஏந்திப்பெற்றுக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டது. இதன் பின்னரே இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் சர்வதேச அரங்கிற்கு சென்றது. குறிப்பாக மேற்குலக நாடுகளின் பார்வையும் தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தின் பின்னர் தான் இலங்கை மீது வலுவடைந்தது . எவ்வாறாயினும் மூன்று தசாப்தகால உரிமைகளை வென்றெடுப்பதற்கான தமிழினத்தின் ஆயுதவழிப் போராட்டம் ஓய்ந்தபோது , தமிழ் மக்களின் அரசியல் …
-
- 0 replies
- 575 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption மைத்திரிபால சிறிசேன இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் புலனாய்வுத்துறையினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. இலங்கை புலனாய்வுத்துறையினரால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த கடிதத்தின் பிரகாரம், வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் தொடர்பிலான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகின்றது. …
-
- 5 replies
- 626 views
-
-
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார். 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெர…
-
- 0 replies
- 170 views
- 1 follower
-
-
லண்டன் மாநகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் அலையென திரண்டு சிறி லங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரட்டி விரட்டி இன்று புதன் கிழமை மேற்கொண்ட தொடர் ஆர்ப்பாட்டம் பாரிய அவமானத்தையும் பெரும் தலைக் குனிவையும் ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியாவை விட்டு அவர் வெளியேறி இருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ லண்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட போது அங்கு பெரும் ஜனத் திரளாக திரண்டிருந்த தமிழ் மக்கள் முட்டைகளையும் பாதணிகளையும் அவரது வாகனத்தின் மீது வீசியும் கோசங்களை எழுப்பியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தினர். முன்னதாக காலை 9 மணியளவில் மல்போரோ ஹவுஸ் முன்பாகவும் மாலை 4 மணியளவில் ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி தூக்கில் இட…
-
- 14 replies
- 2.5k views
-
-
30.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_005.html
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ். மாநகர சபையின் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்ததோடு கலாசார சீரழிவுகள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளும் கண்டறியப்பட்டதனாலேயே யாழ். கோயில் வீதியில் உள்ள “நாது’ விடுதி இழுத்து மூடப்பட்டது என பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மேலதிக விளக்கங்களுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ். நீதிமன்றில் நீதிவான் மா.கணேசராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது: கடந்த மாதம் 23 ஆம் திகதி யாழ். மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் அந்த விடுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அந்த விடுதி உரிய அனுமதிப்பத்திரமின்றி இயங்கிவந்தது தெரியவந்தது. அத்த…
-
- 0 replies
- 624 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முழுக் கட்டுப்பாட்டை சீனாவுக்கு கொடுத்தமை தவறென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய ஊடகவியலாளர் நிதின் கோகலேவுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இந்தியாவுக்கான விஜயத்திற்கு முன்னர் முதன்முதலில் இந்த பேட்டியை வழங்கியிருக்கும் ஜனாதிபதி , இந்தியாவுக்கு எதிரான எந்த வேலையையும் தமது நாடு செய்யாது என்பதனை குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அந்த செவ்வியின் சாராம்சம்… ”நான் ஒரு நடுநிலைவாதியாக இருக்க விரும்புகிறேன் என்று நான் பதவி ஏற்றுக்கொண்ட உரையில் கூட குறிப்பிட்டுள்ளேன். அது சாத்தியம். உலகில் இதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன. இன்றைய புவிசார் அரசியலில் இந்தியப் பெ…
-
- 14 replies
- 2.4k views
-
-
தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் செல்லல் மற்றும் 60 லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக முன்னாள் வான்படை அதிகாரி நிசாந்த கஜநாயக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்களின் போது நிசாந்த கஜநாயக்க ஒன்றிணைந்த நடவடிக்கை தலைமையகத்தில் கடமையாற்றியுள்ளார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வான்படையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிசாந்த கஜநாயக்க, 2006ம் ஆண்டு ஜூன் 18ம் திகதியும், ஜூலை 28ம் திகதியும் கறுவாத்தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் வைத்து நடராஜா ஸ்கந்தராஜா என்ற தமிழ் வர்த்தகரை கடத்திச் சென்ற…
-
- 0 replies
- 614 views
-