Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் குறிப்பாகக் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் சட்டரீதியான காரணம் ஏதுமின்றி, வகை தொகையில்லாமல் கைதுசெய்யப்படுவதால் எழுந்துள்ள பதற்ற நிலைமை குறித்து கொழும்பில் உள்ள இந்தியத்தூதரகம் புதுடில்லியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றது. இந்த நெருக்கடி மற்றும் மோசமான நிலைமை குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஐ.நா. போன்ற அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அலோக பிரசாத் இந்தியா சென்றிருப்பதால் மனோ கணேசன் எம்.பி. கொழும்புக்கான பிரதி இந்தியத் தூதுவர் மாணிக்கத்துடன் இவ்விடயம் குறித்து உரையாடினார் எனத் தெரிகின்றது.…

  2. 'நாங்கள் எமது செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவோ புலம்பெயர் சமூகத்திடமிருந்து நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்காகவோ அரசியல் நடத்­தவில்லை. நாங்கள் நிதானமாக, யதார்த்தமாக அரசிய லில் ஈடுபடுகின்றோம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதேயா கும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். புலி­களை தாமே அழித்­தோ­மென பலர் தம்பட்டம் அடித்து வரு­கி­றார்கள். ஆனால் உண்மைநிலை அது­வல்ல. விடு­த­லைப்­பு­லிகள் தங்­க­ளைத் ­தாங்­களே அழித்­துக்­கொண்­டார்கள் என்றே நான் கரு­து­கிறேன்" இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி­ன­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் கூறினார். தமிழ் பேசு…

  3. சுவிட்சர்லாந்தின் தமிழ் பாடசாலைகளில் வரலாறு பாடத்தில் ஈழ வரலாறு கற்பிக்கப்பட்டு வருவதாகவும், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுவிட்சர்லாந்து மக்கள் புதிய இலங்கைத் தூதுவர் ரி.பி. மடுவேகெதரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கைத் தூதுவர் சுவிட்ஸர்லாந்து வாழ் இலங்கையர்களை சந்தித்த போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படங்களுடன் கூடிய வரலாற்று நூல்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கப்படுவதாக அந்நாட்டு இலங்கையர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சுவிட்சர்லாந்துக்கான புதிய இலங்கைத் தூதுவர் அந்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகார…

    • 9 replies
    • 2.2k views
  4. கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் புதைத்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணையின் போதே தமது தலைமையிலான குழுவே எக்னெலிகொடவின் சடலத்தை புதைத்ததாக கூறியதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக தெமட்டகொட சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார். . இவர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராவார். தான் புதைத்த சடலம் யாருடையதென்று …

    • 1 reply
    • 2.2k views
  5. இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய இராஜபக்‌ஷ இஸ்ரேலிற்கு சென்றிருந்தார். நேற்று இஸ்ரேல் பென் கூரியன் விமான நிலையத்தினை சென்றடைந்த வேளை அங்கு அவரை வரவேற்க யாரும் இருக்கவில்லை. இது முதலாவது அவமானம். அடித்ததாக விமான நிலையத்தில் விசேட விருந்தினர்கள் வெளியே செல்லும் பகுதியால் இவர் செல்ல முற்பட்டவேளை அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கோத்தபாயவை விசேட விருந்தினர் வழியால் செல்ல முடியாது என கூறி தடுத்து நிறுத்துவிட்டனர். பின்னர் தான் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் என பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அடம் பிடித்துள்ளார். இதனால் கோத்தபாயவை பாதுகாப்புதுறை அதிகாரிகள் இஸ்ரேல் புலனாய்வுத்துறையான சின் பெஇத் அதிகாரிகள் கோத்தபாயவை முழுமையாக பரிசோதனை செய்த பின்னர் பயணிகள் செல்லும் வழ…

  6. செவ்வாய் 04-09-2007 17:36 மணி தமிழீழம் தாயகன் சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் கடந்த மாதம் மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுஇ 27 பேர் காணாமல்ப் போகச் செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ சமாதானச் செயலகம்இ புள்ளிவிபரத் தகவல்களுடன் இது பற்றிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள நிலையில்இ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மூன்று வாரங்களில் 34 பேர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதுடன்இ 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவங்கள் எந்தெந்தப் பகுதியில் நிகழ்ந்தன என்பது பற்றிக்கூட அந்த அறிக்கையில் தெளிவான விபரங்களை எது வெளியிடப்படவில்லை. இதேபோன்று போர் நிறுத்தக் கண்காணிப்பு…

  7. இலங்கையில் ஜெ. வைகோ, கொடும்பாவி எரிப்புஸ இந்திய பணியாளர்கள், மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு Posted by: Mayura Akilan Published: Friday, March 29, 2013, 13:33 [iST] கொழும்பு: இலங்கையில் பணிபுரியும் இந்தியர்களுக்கும், அங்கு கல்வி பயிலச் சென்றுள்ள மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மதிமுக தலைவர் வைகோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் கொடும்பாவிகளை சிங்களர்கள் எரித்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலசுப்ரமணியன், லட்சுமி தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு நகரில் வசித்து வருகின்றனர். அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிகிறார் பாலசுப்ரமணிய…

  8. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தான் வெறுக்கவில்லை என இராசீவ் காந்தியின் மகள் பிரியங்கா தெரிவித்துள்ளார். தமிழக வார இதழ் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இந்த கருத்தினை பதிவு செய்துள்ளார். “விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி?” “பிரபாகரன் என் தந்தையை கொன்றவர். அப்படி இருந்தும் நான் விடுதலைப்புலிகளையும், பிரபாகரனையும் வெறுக்கவில்லை. ஆனால், இந்தியப் பிரதமரை கொன்றவர் என்ற முறையில் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம் என் மனதில் எப்போதும் உண்டு.” “சிறையில் நளினியை சந்தித்தது பற்றி?” “அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட பய…

    • 7 replies
    • 2.2k views
  9. தமிழ்செல்வன் அண்ணாவை நினைவு கூர்ந்து என்னுமொரு பாடல்! இசை : பாஸ்கரன் (மன்மதன் பிராண்ஸ்) பாடியவர்கள் :வாகீசன் & விக்கி பாடல்வரிகள்: சிவா

  10. கருணா என்று அழைக்கப்படும்.. தமிழ் ஒட்டுக்குழு ஆயுததாரியும் சர்வதேச மன்னிப்புச்சபை பிரகடனம் செய்த படுகொலைதாரியும் போர்க்குற்றவாளியுமான வி. முரளிதரன் அவர் சார்ந்த ஒட்டுக்குழுவின் தலைமைப் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ஆனால் சன நாய் அக நீரோட்டத்துக்குள் புகுந்துவிட்டதாகச் சொல்லும் அந்த குறிப்பிட்ட சிங்கள அரசு மற்றும் அமெரிக்க சார்பு ஒட்டுக்குழு தனது இராணுவப் பிரிவுக்கு அவரே தலைவராக தொடர்ந்தும் இருப்பார் என்று கூறுகிறது. உலகிலேயே அமெரிக்காவின் ஜனநாயகத்தில் சிறீலங்காவில் தான் ஜனநாயகம் என்பது பகிரங்கமாக ஆயுதம் தாங்கிய கட்சிகளால் (TMVP,EPDP,PLOTE,EPRLF(Varathar),ENDLF) நடத்தப்படுகிறது. அதுவும் ஜனநாயக நீரோட்டத்துக்குள் குருதியோட்டம் காட்ட என்று...இராணுவப் பிரிவுத…

  11. நான் உங்களோடுதான் இருக்கிறேன் - பிரபாகரன் Sep 28, 2009 தினையாண் குருவிகளைப்போல் அமைதியான உழைப்பும், அக்னிக் குஞ்சுகளைப்போல் அகத்தே நெருப்பும் சுமந்து தணிந்து போகாத விடுதலை தாகத்துடன் இயங்கினீர்களென்றால் புலிகளின் படை மீண்டும் முல்லைத்தீவில் தரையிறங்கும். கி.மு. 543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது. அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து ம…

  12. அன்பு உறவுகளே! இச்செய்தி முக்கியமாக லண்டன் கனடாக்காரர்களுக்கு பிரத்தியோகமான வேண்டுகோளாகும். தற்சமயம் எங்கள் நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு ஐக்கியநாடுகள் சபையே உலகநாடுகளிடம் விடுத்திருக்கும் வேண்டுகோளே இலங்கை அகதிகளிடம் கருணைகாட்டுங்கள் என்பதுதான். இதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இவர்களால் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க கஸ்டமாக இருக்கிறது. குற்றசெயல்களில் முன்ணணியிலிருக்கிறார்கள். எம்மவர்கள் மீது அவர்களிடம் இருக்கும் ஆதாரம் தற்போது உலகவலைப்பின்னலாக நடக்கும் தொழில் வங்கிஅட்டைகள்,போலிஅரச ஆவணங்கள்தயாரித்தல், கோஸ்டி மோதல்கள் (இது சம்பந்தமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவரொருவர் புலனாய்வுபணியகத்தில் தொழில்புரிவதாகவும் ஒரு தகவல். …

    • 4 replies
    • 2.2k views
  13. உள்ளுர் படையதிகாரிகளுடன் யாழ்மாவட்ட கட்டளையதிகாரி இரகசியச் சந்திப்பு. யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள அச்சநிலை காரணமாக உள்ளுர்மட்ட அரிகாரிகளுடனான சந்திப்பொன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரகசியமாக பலாலி படைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ் குடாநாட்டில் சிறிலங்காப் படையினர் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனரீதியான பாதிப்புக்கள் மற்றும் படையதிகாரிகளின் கட்டுப்பாடுகளை படையினர் ஏற்கமறுப்பதுடன் சில இடங்களில் படையினருக்கும் அதிகாரிகளுக்கிடையேயும் முரண்பாடுகள் தோன்றி துப்பாக்கிசூட்டில் முடிந்திருப்பதால் ஏற்பட்டுள்ள படைப்பிளவை அடுத்து உள்ளுர்மட்டஅதிகாரிகளை யாழ்மாவட்ட கட்டளை அதிகாரி சந்திரசிறி சந்தித்து படை…

  14. முக்கிய குறிப்புகள் இலங்கை: தலைநகரம்: ஸ்ரீ ஜயவர்தனபுர அமைவிடம்: வடக்காக 6 பாகை 54 கலை கிழக்கு 6°54’ – 6° 9’N 79°54’ – 79°9’E பெரிய நகரம்: கொழும்பு ஆட்சி மொழிகள்: சிங்களம், தமிழ் அரசு: சனநாயக சோசலிசக் குடியரசு சனாதிபதி: மேன்மை தங்கிய மகிந்த ராசபக்ஷ பிரதம மந்திரி: மாண்புமிகு தி.மு. ஜயரத்ன விடுதலை(சுதந்திரம்): பிரித்தானியாவிடமிருந்தூ:04.02.1948 பரப்பளவு: 65,610 கிமீ² / 25,332 ச்துரமைல் (நீர்-4,4%) மக்கள் தொகை: 2009 மதிப்பீடு 20,238,000 - July 2008 குடிமதிப்பு 21,324,791 நாணயம்: இலங்கை ரூபாய் (LKR) நேர வலயம்: (ஒ.ச.நே + 5.30 மணி இணையக் குறி: lk தொலைபேசி: +94 மின்னழுத்தம்: 230V அலையெண்: 50Hz புவியியல் வளம் இலங்கை இந்து சமுத்திரத்தில் இந்த…

  15. நாம் யார் என்பதனை எதிரிக்கு கொடுக்கப்போகும் பதிலடி மூலம் உலகமும் சிங்கள தேசமும் வெகுவிரைவில் உணரப்போகின்றது. இது விரைவில் நடந்தே தீரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரி தளபதி கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  16. அகலக்கால் பதிக்கும் மகிந்தவின் படைகள் செலுத்தப்போகும் விலை என்ன? -எரிமலை- 'ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீரமிக்க போராளியாக வேண்டும். ஒவ்வொரு கிராமமும் அல்லது தெரு வட்டாரமும் ஓர் அரணாக மாற வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவுப் பண்ணையும் தொழில் நிறுவனமும் மக்கள் போரின் வழங்கல் விநியோக அடித்தளமாக வேண்டும். இவ்வாறு நாம் எமது தேசம் முழுவதையும் ஒரு பெரும் போர்க்களமாக மாற்றி எந்த ஆக்கிரமிப்பாளனையும் துடைத்தெறிய முடியும்" - வியட்நாமின் தந்தை ஹோ சி மின் சிறிலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக பாரியளவிற்கு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் சிறிலங்காப் படையினர் தமிழர் தாயகப் பிரதேசத்திலே அகலக்கால் பதித்த…

    • 1 reply
    • 2.2k views
  17. விடுதலைப் புலிகள் இனி வலிந்து தாக்குதல்கள் செய்வதென்பது பகற்கனவு என்பது சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றாகும். அவரின் மதிப்பீட்டின்படி விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் தோற்கடிப்பதற்கு இன்னமும் சிறிது காலமே போதுமானதொன்றாகும். சரத் பொன்சேகாவின் இத்தகைய மதிப்பீட்டிற்கு இதுவரையிலான யுத்தத்தில் - அதாவது படையெடுப்பின் மூலம் 15,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டதான அவரது மதிப்பீடு காரணமாக இருக்கலாம். அத்தோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் வெகுவாகச் சுருங்கி விட்டதும் காரணமாக இருக்கலாம். இதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் அளவு குறித்து அரச தரப்பிலிருந்தே குழப்பமான தகவல்க…

  18. ஹிருணிகாவின் திருமணத்தில் சாட்சியாக கையெழுத்திட்டார் மைத்திரி! [Monday 2015-07-06 20:00] மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவரே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார்.திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக கையொப்பமிட்டுள்ளார். திருமணத்திற்கு 20 பேருக்கு உட்படவர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=135409&category=TamilNews&language=tamil

    • 3 replies
    • 2.2k views
  19. கண்டியில் குண்டுவெடிப்பாமே பஸ் ஒன்றில்

    • 8 replies
    • 2.2k views
  20. Please take the time to follow the few and easy steps below to make a difference. A small amount of your time to make a big difference. Thanks. இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/ide...=0&srKp=087 பெயரினையும் கடவுச்சொல்லையும் பதிந்து கொள்ளவும் 5 செக்கனில் உருவாக்க முடியும் இடது கரையில் இருக்கும் தேடல் பெட்டியில்(Search box ) Halt Tamil Genocide in Sri Lanka என்பதனை வெட்டி ஒட்டவும் அதில் தற்போது 3 தொடர்பு பட்ட செய்திகள் வருகின்றன ஒவ்வொன்றையும் டபிள் கிளிக் செய்து திறக்கவும் பின் ஒவ்வொரு தலைப்பிலும் VOTE UP என்பதனை கிளிக் செய்யவும் விரும்பியவர்கள் பதில் போடலாம் இதனை உங்கள் நண்பர்களு…

  21. சிறிலங்கா வான் படை நடத்திய குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகள் குறித்த அறிவித்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 2.2k views
  22. மும்பை தாக்குதல் காரணமாக இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது அரசு. இந்நிலையில், கண்காணிப்பு குறைவாக இருக்கும் தமிழகத்தின் தென்பகுதி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவ வாய்ப்புள்ளது" என்கிறார் இலங்கை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். எப்படி? "இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகள், பாகிஸ்தானில் இருந்து மட்டும் திட்டமிடப்படுவதில்லை. நேபாளம், பங்களாதேஷ், இலங்கையில் இருந்தும் ஐ.எஸ்.ஐ. செயல்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவரான பஷீர்வாலி முகமது இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டது, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.யின் செயல்பாடுகளைப் பலப்படுத்தத்தான் என்பது அங்கே எல்லோருக்கும் தெரியும். 2006ஆம் ஆண்டு பஷீர்வாலியைக் கொலை செய்யும…

  23. விடுதலைப் புலிகளை யுத்தத்தால் வெல்ல முடியாது : பிரிட்டிஷ் பிரதமர். சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரிட்டிஷ் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை நிலைவரம் மோசமடைந்து வருவதால் ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழ்நிலையிலேயே பிளயரின் இந்தக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறிலங்கா இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற…

  24. சம்பந்தன் தானாம் தேசியத் தலைவர்சொல்கின்றார் TNA எம்பி சரவணபவன் !!!! TNA தலைவர் சம்பந்தனை தேசியத் தலைவர் என TNAஎம்பி சரவணாபவன் தீபம் தொலைக் காட்சியில் தெரிவித்தார் . இதனை அவதானித்த தீபம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் அனஸ் அவர்கள் சற்று அதிசயமாகவே , நீங்கள் சம்பந்தனையா தேசியத் தலைவர் என குறிப்பிடுகின்றீர்கள் என மீண்டும் கேட்டார் . அதற்கு சரவணபவன் ஆம்எனப் பதிலளித்தார் . இந்த வீடியோவில் பார்க்கலாம் . http://www.youtube.com/watch?feature=player_embedded&v=jry_fW_p-rc அதே பேட்டியில் தொடர்ந்து பேசிய சரவணபவன் தேசியம் , சுய நிர்ணய உரிமை பற்றி பேசுவதால் சிங்கள அரசு கோபப்படுகின்றது அதனால் தான் எல்லாப் பிரச்சனையும் என்றும் தெரிவித்தார் ஏதோ இன அட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.