ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சுவிஸ்முரசம் இலங்கை தமிழர்கள் அகதிமுகாம்கள் என்ற போர்வையில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது தொடர்பில் இன்று உலகின் கவனம் வெகுவாக தமிழர்களின் பக்கம் திரும்பியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு மனித உரிமைகள் அமைப்புகளும் இது தொடர்பில் பல்வேறு அறிக்கைகளையும் விடுத்துவருகின்றன. நமது அண்டைநாடான இந்தியாவில் அதன் தலைநகரத்தில் உள்ள இன்னொரு நாட்டின் தூதரகம் தாக்கப்படும் அளவுக்கு இலங்கை தமிழர்களின் நிலை சர்வதேச நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் அபிலாசையின் உருவாக்கமாக இயங்கவைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது. வடக்கு மாகாணசபை தேர்தலுக்காக வவுனியா,யாழ்ப்பாணம் என்று திரிந்தவர்கள் …
-
- 9 replies
- 1.6k views
-
-
புலிகளின் அடையாளங்கள் இனித் தேவையில்லை என்பதால் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டது - ருவான் வணிகசூரிய [saturday, 2013-10-05 07:05:23] தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளங்களை இன்னும் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியுடனான வீடு தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் பிரபாகரனின், பாரிய பதுங்கு குழியுடன் அமைந்திருந்த வீடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகர்க்கப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இராணுவ பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்க…
-
- 9 replies
- 2.5k views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையின் அரச மற்றும் அரச நிறுவனங்களுடன் சேர்த்து மொத்த கடனாக 47 பில்லியன் அமெரிக்க டொலர்கள் போன்றதொரு தொகையே உள்ள நிலையில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வளங்களை வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிருக்கின்றோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார். இவ்வாறான தேசிய வளத்தை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாற…
-
- 9 replies
- 768 views
-
-
தற்போதைய அரசாங்கத்திற்கு அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தற்போதைய அரசாங்கத்திற்கு கண்டி அஸ்கிரி பீடம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் கல்வி, கலாச்சாரம் ஆகியனவற்றை இல்லாமல் செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் இதற்கு எதிராக மாநாயக்கர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அஸ்கிரி பீடத்தின் உப பீடாதிபதி வெடருவே உபாலி தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பில் மாநாயக்க தேரர்களினால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கலகொடத்தே ஞானசார தேரரின் பிரச்சினை மட்டும் பிரச்சினை கிடையாது எனவும் கலை, கலாச்…
-
- 0 replies
- 280 views
-
-
தமிழர்கள் பிழைக்க வழியின்றி தினம், தினம் செத்து மடியும் இந்நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்பது, நாடு பற்றி எரிகின்ற பொழுது பிடில் வாசிக்கலாம் வாருங்கள் என்று புதிய நீரோ மன்னனை போல கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்போவதாக முன்பு அறிவித்த கருணாநிதி தற்போது இதற்கு மாறாக உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். தமிழிலிலும் பிரித்தாளும் சூழ்ச்சி... உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலகத் தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டதை தவிர்த்து விட்…
-
- 0 replies
- 965 views
-
-
சிறிலங்காவுக்கு உதவுவதில் இந்தியா உறுதி – இந்திய தூதுவர் சிறிலங்கா மக்களின் நலன் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக தொடர்ந்தும் செயற்படுவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள, யாழ். பல்கலைக்கழக பொறியியல் மற்றும் விவசாய பீடங்களுக்கான புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இந்தியாவின் 600 மில்லியன் ரூபா உதவியின் கீழ் கட்டப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதிகளை சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, மற்றும் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோருடன் இணைந்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் ச…
-
- 7 replies
- 554 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்வதற்கும் அதே நேரம் ஏனைய அரசுடன் சேர்ந்தியங்கும் கட்சிகளையும் இணைத்து கொள்ளவும் தீமானிக்க பட்டுள்ளதாக ரெலோ அமைப்பினை சேர்ந்த சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் அடுத்த வாரம் இடம் பெறவுள்ளது. தீர்க்கப்படாத இனப்பிரச்சினை, மக்களின் மீள்குடியமர்வு, யுத்தத்தின் பின்னரான புனரமைப்பு போன்றவை தமிழ்க் கட்சிகளின் முன்னுள்ள சவால்களாகும். இந்தச் சவால்களை தமிழ்க் கட்சிகள் ஒன்று சேந்து சந்திக்க சகலரும் ஒன்றிணையவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, நடை பெறவிருக்கும் கூட்டத்தில், தமிழ்த் தேசி யக் கூ…
-
- 1 reply
- 1k views
-
-
கிளிநொச்சியில் கரும்புலிகள் நாள் நிகழ்வு! [Thursday 2017-07-06 07:00] கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நேற்று மாலை 3.00 மணியளவில் கரும்புலிகள் நினைவு நிகழ்வு மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்கமைப்பில் கரும்புலிகள் நாள் நிகழ்வு நடத்தப்பட்டது. ஆனையிறவு வெற்றிச் சமரின் போது தன் இன்னுயிரை தியாகம் செய்த கரும்புலி மாவீரன் மேஜர் நந்தன் அவர்களது சகோதரன் மகேஸ்வரன் கலந்து கொண்டு ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலையை அணிவித்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாவீரர்களின் தந்தையர்கள், சகோதரர்கள், ஏனைய உறவினர்கள்…
-
- 0 replies
- 547 views
-
-
வணங்கா மண் கப்பலில் சென்ற பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் தடுப்பு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த வணங்கா மண் என்ற கப்பல் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் திருப்பி அனுப்ப பட்ட இந்த கப்பல் தமிழ் நாட்டில் நங்கூரமிடப்பட்டது மடுமன்றி இந்திய தலையீட்டினை கோரி இருந்தது. இந்திய அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு அமைவாக மீண்டும் செஞ்சிலுவை சங்கம் ஊடாக இலங்கைக்கு அனுப்ப பட்டது. இதன் பின்னர் இலங்கை அரசின் பல்வேறு நொண்டி சாட்டுக்களால் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்ட இந…
-
- 2 replies
- 568 views
-
-
தமிழர் பகுதிகளில் பௌத்த சின்னங்கள் -தொல்லியல்துறையின் கருத்துக்கு வரலாற்று ஆசிரியர் பதில் November 7, 2021 வெடுக்குநாறிமலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக பார்ப்பது மிகவும் தவறானது என யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை மூத்த பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் (P.Pushparatnam) தெரிவித்துள்ளார். பௌத்த விகாரையின் சிதைவுகளே வெடுக்கு நாறிமலையில் உள்ளது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது குறித்து யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மூத்த பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், “ஆதியிலே பௌத்தம் என்பது த…
-
- 2 replies
- 293 views
-
-
கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த 24 மணி நேரத்தில…
-
- 1 reply
- 299 views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா: ரனில் விக்கிரமசிங்கே அறிவிப்பு இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தப்போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே இன்று அறிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21523
-
- 3 replies
- 803 views
-
-
(எம்.நியூட்டன்) தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, கிராமிய அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயிறு பயிர்ச்செய்கைத் திட்டத்தினொரு கட்டமாக விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. யாழ். மாவட்டம் முழுவதும் 8 மில்லியன் ரூபா…
-
- 1 reply
- 352 views
-
-
வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம் மக்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் 22 ஆயிரத்து 443 பேர் முகாமிலிருந்து வெளியில் சென்றிருப்பதாகவும் இவர்களில் 9142 பேர் மட்டுமே திரும்பவும் முகாம்களுக்கு வந்திருப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விசேட மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "வெளியேறிச் செல்லும் மக்களுக்கு நாம் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. வராதவர்களைத் தேடிப் பாதுகாப்புத் தரப்பினர் செல்ல மாட்டார்கள். அவர்கள் விரும்பியபோது மீண்டும் வரலாம்.என்று கூறியுள்ளார் மஹிந்த சமரசிங்க.
-
- 0 replies
- 625 views
-
-
இலங்கை வெலிக்கடை சிறை துப்பாக்கிச் சூடு: இறப்பு சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் உறவினர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில், 2012 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படைகளின் துப்பாக்கிச்சூடு காரணமாக உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுக்கு இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாத்தால் அவர்கள் பெரும் சட்ட சிக்கல்களுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES உயிரிழந்த கைதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பின் தலைவர் சுதேஷ் நந்திமால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இந்த இறப்புக்கள் இடம்பெற்று தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதும், உறவினர்களிடம் இதுவரை இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை; இதன் காரணமாக உறவினர்கள…
-
- 0 replies
- 363 views
-
-
சரத்பொன்சேகா கையளித்துள்ள எழுத்து மூல பத்திரத்தினை இன்று சம்பந்தன் பாராளுமன்ற கட்டடத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு காட்டிக்கொண்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தனது முடிவுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும் எனவும் இல்லாவிடில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு சீட்டு கிழிக்கப்படும் என விரட்டுவதாகவும் எம்.பி க்கள் கூறுகின்றனர். சரத் பொன்சேகாவின் ஆவணத்தில் மொத்தம் 10 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனவாம் அதன் சுருக்கம்; சிவில் நிர்வாகம் மற்றும் இயல்பு நிலையை நிலைநாட்டுதல், துணைப்படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடை செய்தல், இடம்பெயர்ந்தவர்களுக்கான துரித மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுக…
-
- 17 replies
- 3.7k views
-
-
யாழ் தீவகப் பகுதிகளை கடந்த இருபத்திரண்டு வருடங்களிற்கு மேலாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனது கட்சிசார் அரசியற் செயற்பாடுகளை தற்காலிகமாகவோ அல்லது முழுமையாகவோ கைவிடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் விகிதாசார அடிப்படையில் நெடுந்தீவிலேயே மஹிந்த கூடிய வாக்குகளை பெற்றிருந்தார். இதன் தொடர்ச்சியாக நெடுந்தீவினை சின்ன சிங்கப்பூராக மாற்றப்போவதாக அரசும் ஈபிடிபியும் கூறி வந்திருந்தன. எனினும் 22 வருடங்கள் ஆளும் தரப்புகளோடு அமைச்சரவையை பகிர்ந்து கொண்ட ஈபீடீப்பியினால் தீவகத்தில் மக்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகளையோ அல்லது உட்கட்டுமானங்களையோ குறிப்பிடும்படியாக கட்டியெழுப்ப முடியவில்லை. பெரும்பாலான வேளைகளில…
-
- 2 replies
- 843 views
-
-
பாதாள உலக கேஷ்டிகளை கட்டுப்படுத்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் விஷேட படையணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சினால் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீப் தலைமையில் இந்த படையணி உருவாக்கப்படவுள்ளது. இந்த பொலிஸ் படையணிக்கு பல திறமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. http://www.ceylonmoors.com/
-
- 0 replies
- 333 views
-
-
போர் முடிந்தாலும் அங்கு பாரபட்சங்களும் ஏற்ற தாள்விகளும் கொண்ட நிலமை காணப்படுகின்றது. போருக்கு காரணமான பிரச்சினை தீரவில்லை ஆகவே தான் நாம் ஜி.எஸ்.பி மீழப்பெற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தெரிவித்தோம் என்றார் பிரிட்டிஸ் வெளி நாட்டு உதவிகளுக்கான துணை அமைச்சர் கரத் தொமஸ். நேற்று தமிழர்களிற்கான சட்ட ஆலோசனை அமைப்பின் ஆதரவில் லசந்தவின் ஓராண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மேலும் தனது உரையில்.. இலங்கையில் போரின் இறுதிப்பகுதியில் நடந்துள்ளதாக கூறப்படும் போர்குற்றம் தொடர்பில் வெளிப்படையான நடுனிலைமையான விசாரணைகளை நாம் வலியுறுத்துகின்றோம் அத்துடன் லசந்தவின் கொலை தொடர்பாகவும் நடு நிலைமையான விசாரணை வேண்டும். என்றார் அமைச்சர் கடத் தோமஸ். இதே வேளை இலங்கைக்…
-
- 0 replies
- 584 views
-
-
தேசிய கீதத்தை திருத்தம் செய்வது, மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச,நல்லிணக்க ஆணைக்குழுவின் 500க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது.ஏற்கனவே ஆணைக்குழுவின் 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடியவாறான பரிந்துரைகளை அமுல்படுத்த முட…
-
- 1 reply
- 423 views
-
-
மோடியிடம் செல்ல முன் சொல்லி இருக்கலாம்’ மகேஸ்வரி விஜயனந்தன் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும் அது இறைமையுள்ள நாடு என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, நேற்று (19) நினைவூட்டினார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக அமுல்படுத்தத் தவறியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளியான தகவல்களுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெ…
-
- 2 replies
- 388 views
-
-
வடக்கு கிழக்கு காடுகளை அங்குலம் அங்குலமாக GIS system இல் தரவேற்ற அமெரிக்கா உதவி கடந்த 25 வருடங்களாக இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதி காடுகளும் கரையோரங்களும் தரவேற்றம் செய்யப்படாமல் இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இந்த பிரதேசங்கள் கூடுதலாக இருந்ததால் யாரும் இதனை செய்ய முன்வராதது மட்டுமல்ல. விடுதலைப்புலிகளும் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போ அமெரிக்க அரசாங்கம் யு.எஸ். எயிட் நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தினை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு நிதி உதவியும் பயிற்சியும் அளித்து வருகின்றது.அமெரிக்க தூதர் திருமதி பற்றீசியா புட்டின் இதற்கான கருவிகளையும் பயிற்சியினையும் வழங்கும் வைபவத்தினை நேற்று உத்தியோக பூர்வ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். சுனாமி காலப்பகுதியில்…
-
- 0 replies
- 776 views
-
-
திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடாவில் முஸ்லிம்களின் பயிர்ச்செய்கை காணிகள் கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக தொடர்ந்தும் கையகப்படுத்தப்படுவதாக கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் தெரிவிக்கின்றார். போர்க் காலத்தில் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தற்போது அங்கு தற்காலிக கொட்டில்கள் அமைத்து பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். 'கடற்படையின் தேவைக்கு' என அடையாளமிடப்பட்டிருந்த காணியில் தற்போது 'கடற்படைக்குச் சொந்தமான காணி' என்ற அறிவிப்பு பலகைகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன.இப்போது, குறித்த காணியில் தானியச் செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களின் எல்லை வேலிகளையும் கொட்டில்களையும் அகற…
-
- 0 replies
- 359 views
-
-
பூநகரி - கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அபிவிருத்தி திட்டத்திற்கு மணல் வழங்காது மன்னார் பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவருக்கு மணலை அகழ்வதற்கான அனுமதி முறையற்ற ரீதியில் அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மணல் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்பாடு தொடர்பாக கிராம மக்களால் பொருத்தமான அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரியிடம் தெரியப்படுத்திய போதும் தடுத்து நிறுத்துவதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் மக்களால் குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற…
-
- 1 reply
- 348 views
-
-
தேர்தலில் தமிழர்கள் யார் பக்கம்? நாம் இன்று மிக இன்று ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு வரும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை ஈழத்தமிழர்கள் எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றார்கள்?சிங்களம் எம்மை மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.தமிழர்களை ஈவிரக்கமற்று அழிப்பதற்கு உத்தரவு வழங்கிய ராஜபக்ச ஒரு புறமும் உத்தரவை நிறைவேற்றிய பொன்சேகா மறு புறமுமாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.தமிழர்களை அழித்து அவர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்த? வெற்றியை அரசியல் வெற்றியாக்க மகிந்த ஜனாதிபதித் தேர்தலை முன் கூட்டியே அறிவித்தார்.சிங்களவரின் கதாநாயகனாக நவீன துட்ட கைமுனுவாக தமிழரை வென்ற எனக்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள் என்று இனவெறிப் பிரச்சாரம் செய்தார…
-
- 10 replies
- 985 views
-