ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
வட தமிழீழம்.. தென் தமிழீழம் எங்கனும் கடந்த சில நாட்களாக விடாது மழை கொட்டி வருவதால் வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் திருமலை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. வன்னியில் போரால் இடம்பெயர்ந்த மக்கள் மழையாலும் இடம்பெயர்ந்து சொல்லனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அதேபோன்று யாழ்ப்பாணம் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலும் வெள்ளம் கரை புரண்டோடுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. திருமலை மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கும் மக்கள் வெள்ளத்துக்கு அஞ்சி இடம்பெயர்ந்துள்ளனர். தமிழீழ மக்களை இயற்கை அனர்த்தத்தில் இருந்து காக்க தேவையான உதவிகளை நல்க வேண்டிய கடமை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சொந்தங்களுக்கு உண்டு. http://www.tamil…
-
- 41 replies
- 5.4k views
-
-
பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை ஆறாம் திகதி திறப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், திருத்தியமைக்கப்பட்ட விமான ஓடு பாதை நாளை மறுநாள் (06) திறந்துவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இத்திறப்பு விழாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்வர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது மில்லியன் டொலர் செலவில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தவேலைகளின் மூலம், அறுபது மீற்றர் அகலமுள்ள ஓடுபாதை 75 மீற்றர் அகலமுள்ளதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏ-380 எயார் பஸ் ரக விமானங்களும் தரையிறங்க…
-
- 56 replies
- 5.4k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ் வாசகர் ச.அ * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 1 reply
- 5.4k views
-
-
குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன. நீண்ட குழப்பத்தின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆட்சிமாற்றத் திற்கான முடிவை எட்டியது மட்டுமல்லாமல், இந்த தாமதத்தினூடாக சில அரசியல் அடைவுகளையும் நிகழ்த்தக்கூடிய தீர்மானத்தை அடைந்தமையானது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது போன்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் திரு. இரா.சம்பந்தர் அவர்கள் தனது அரசி…
-
- 84 replies
- 5.4k views
-
-
தமிழ்நாடு வேளாங்கண்ணிக்கு அருகிலுள்ள தெற்குபொய்கைநல்லூர் எனும் கிராமத்து கோவிலில் காவல் தெய்வமாக தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனை வழிப்படும் மக்கள். http://www.pathivu.com/news/40597/57//d,article_full.aspx
-
- 43 replies
- 5.4k views
-
-
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் மீது விமான தாக்குதல் - அருகில் குடிமனைகளில் இருந்த பொது மக்கள் இருவர் பலி - ஜவர் காயம்!! இன்று பிற்பகல் ஒரு மணியளவில் எல்லோராலும் அறியப்பட்ட விடுதலை புலிகளின் சமாதான செயலத்தின் பிரதான அலுவலக வளாகம் மீது விமானம் குண்டு வீசியுள்ளது.இதில் அருகில் குடியிருந்த பொது மக்கள் குடியிருப்புக்களில் வீழ்ந்த குண்டுகளால் இரு பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தெருவால் சென்றவர்கள் உட்பட ஜவர் காயமடைந்திருப்பதாக பூர்வாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை இத்தாக்குதலை எதிர்த்து புலிகள் விமான எதிர்ப்புத்தாக்குதலை மேற்கொண்டமையால் பல குண்டுகள் சமாதான செயலகத்துக்கு வெளியே வீழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் சுப்பையா சி…
-
- 36 replies
- 5.4k views
-
-
லெப் கேணல் வீரமணி வீரமரணம் களமுனைக் கட்டளைத்தளபதி வீரமணி தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்தார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. தளபதி வீரமணியின் வித்துடல் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு;ள்ளது. இவரது வித்துடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உட்பட பெருமளவு போராளிகளும் மக்களும் அஞ்சலி செலுத்தினர். (தலைப்பு திருத்தப்பட்டு மேலதிக செய்தியும் சங்கதி தளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது)
-
- 20 replies
- 5.4k views
-
-
சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்… பௌத்த விகாரைகளை தடை செய்ய வேண்டும் – சுமந்திரன் – மைத்திரி, ரணிலின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறித்த தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் தார்மீக விரோத கருத்து எ…
-
- 63 replies
- 5.4k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாம் - படைத்தரப்பு அறிவிப்பு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாகியுள்ளது என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கராயன்குளம், திருமுறிகண்டி, கொக்காவில் ஆகிய பகுதிகள் ஊடாக படை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினரின் பல்வேறு படைப்பிரிவும் களமிற்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 24 replies
- 5.4k views
-
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவசர விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று நிறைவடைந்துள்ள நிலையில் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிகார அமைச்சரின் வருகை பெரும் முக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வந்துள்ளார். இந்திய பிரதமரின் விசேட பணிப்பின் பேரிலேயே இலங்கை வந்துள்ள அவர், இன்றிரவு ஜனாதிபதி கோத்தாபயவை சந்திக்கவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங…
-
- 61 replies
- 5.4k views
-
-
கொழும்பு: ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக தம்மை இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010-ம் ஆண்டே விசாரித்தாகவும் தணுவின் பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி ஆகியவற்றுக்கும் எனக்குமான தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாபன் என்ற கேபி கூறியுள்ளார். http://tamil.oneindia.in/news/2012/11/17/srilanka-indian-officals-have-interviewed-me-twice-kp-164785.html இப்போது இச் செய்தியைத் தற்ஸ் தமிழில் படித்தபோது தோன்றிய கேள்விகள்... கேபி 2010 ஆண்டே சிபிஐயைச் சந்தித்திருக்கின்றார் என்றால், இவர் மீது வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையாக இருக்கும் போல் உள்ளது. அக்காலத்தில் இவர் கைது செய்யப்ப்டடத…
-
- 71 replies
- 5.4k views
-
-
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 1 reply
- 5.4k views
-
-
கணவனை... அடித்து கொலை செய்த, மனைவி- யாழில் சம்பவம் குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார். மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாட்களாக நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில், நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலை…
-
- 58 replies
- 5.4k views
- 2 followers
-
-
யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்! இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் இன்று(புதன்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் சென்ற உறுப்பினர்களோடு, யாழ். மாநகர சபையின் ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, கலாசார மண்டபத்தின் அதிகாரிகள் அங்கு அமைந்துள்ள கட்டடங்கள், அரங்குகள் பற்றி விளக்கமளித்ததோடு, அங்குள்ள சகல பகுதிகளையப் பற்றியும் உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர். கலாசார மண்டபத் தொகுதியினுள் அமைந்துள்ள மூன்று கட்டடத…
-
- 53 replies
- 5.4k views
-
-
வீரகேசரி நாளேடு 5/19/2009 8:39:55 PM - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்…
-
- 33 replies
- 5.4k views
-
-
சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!! சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்…
-
- 34 replies
- 5.4k views
-
-
2006 ஆண்டின் பின் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தொடருகின்ற இருதரப்பு மோதல்களில் மிக அதிகளவான ஆயுதங்கள் கடந்த 48 மணிநேர மோதல்களிலேயே அள்ளி எடுக்கப்பட்டுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 3 நாட்கள் தொடருகின்ற படையினருடனான மோதல்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள், படையினரின் இழப்புக்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிக்கையை புலிகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற போதும் கைப்பற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நவீன ஆயுதங்கள் குறித்து புலிகள் மௌனம் சாதிக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் வன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட படையினரின் 29 சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றும்…
-
- 12 replies
- 5.4k views
- 1 follower
-
-
This happened at one Tamil bureau de change ( Central London ,United Kindom) an English man asked to change 1500 pounds worth of Srilankan rupees in to Sterling. As a general conversation Cashier asked how he had so much Sri Lankan rupees (over 2 Lakhs Sri Lankan Rupees), was he on holiday, why carry this much, etc. That man told Cashier it wasn't a holiday, the money is his pocket money and was with the air force. He also mentioned that he will never go back there!!! (looks like some work, he regrets). There are 33 pilots still stationed in Sri Lanka. Realising Cashier is Srilankan Tamil, he cut short his conversation and walked off. We do…
-
- 27 replies
- 5.4k views
-
-
யாழ்.கோண்டாவில் ஜப்பன் சுவாமி பக்தர்கள் நேற்றையதினம்(28.12.2011) நல்லூர் தியாகராஜ மகேஸ்வரன் மண்டபத்திலிருந்து கோண்டாவில் ஐயப்பன் ஆலத்திற்கு பாதயாத்திரையாகச் சென்றனர். 1ஆம் திகதி ஆரம்பமான ஐயப்பன் விரதம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த ஐயப்பன் விரதத்தை அனுஷ்டிக்கும் பக்தர்களே நேற்று ஐயப்பன் சுவாமியுடைய ஆபரணங்கள் மற்றும் இரு முடிகளைத் தலையில் சுமந்தவண்ணம் ஐயப்பனுடைய பாடல்களையும், நாமங்களையும் பாடிய வண்ணம் பாதயாத்திரையாகச் சென்றனர். கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்தில் நிறைவடைந்த இந்த பாதயாத்திரையின் பின்னர் அங்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இந்த யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். thx http://newjaffna.com/
-
- 16 replies
- 5.4k views
-
-
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கு முதலமைச்சர் அபேட்சகர் ஒருவரை பெயரிடாமலிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரியவரகிறது. இதன்படி, மாகாணசபைத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்ளும் அபேட்சகரை முதலமைச்சராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பு மனுச் சபையின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பாக சில அரசியல் கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை தெரிவு செய்துள்ளனர். இம்முறை கிழக்கு மாகாணசபைத்…
-
- 15 replies
- 5.4k views
-
-
கொழும்பில் இன்று வெறித்தனமாக அலைந்து திரியும் சில பேரினவாதக் கும்பல்கள் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழ் வர்த்தகர்களிடம் சென்று தேசிய கொடியை கடைகளில் கட்டுமாறு இவர்கள் அச்சுறுத்துவதாகவும் வெள்ளவத்தையில் சில தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் எமது கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அதேநேரம் வீதிகளில் அதிகம் செல்வதை தவிர்த்து தமிழர்கள் பலர் வீட்டில் முடங்கிக் கிடப்பதாகவும் தெரியவருகிறது. ஒருவித அச்சம் கலந்த சூழல் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இதேபோன்ற நிலை மட்டக்கிளப்பிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பில் வீதீயால் செல்லும் தமிழர்கள் மீது தண்ணீரை ஊற்றி கேலிசெய்வதாகவும், இனி உங்களுக்கு யார் இருக்கிறார்…
-
- 21 replies
- 5.4k views
-
-
ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கணேஷ் மாமா சாவடைந்துள்ளார். 'ஈழத்து நாகேஷ்' என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஷ் மாமா அவர்கள் கடந்த சனிக்கிழமை சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத் தாக்குதலில் பலியானார். இதன்போது 3000ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையானது குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 24 replies
- 5.4k views
- 1 follower
-
-
நல்ல தமிழ் பெயரைச் பிள்ளைக்கு சூட்டுங்கள் Mp3 பாடல் எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது. நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அ…
-
- 2 replies
- 5.4k views
-
-
புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத குற்றச்சாட்டை தமிழக பொலிஸ் ஆணையர் கூறுவது யாரை பாதுகாக்க? விடுதலைப் புலிகள் மீது தமிழக மீனவர்களே கூறாத ஒரு குற்றச்சாட்டை திடீரென தமிழக பொலிஸ் ஆணையாளர் கூறுவது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், எதையோ மூடி மறைக்க யாரையோ காப்பாற்ற பொலிஸ் ஆணையாளரை பயன்படுத்துவது அவரின் பதவிக்கே இழுக்கைத் தேடித் தருமெனவும் கூறியுள்ளார். குமரி மாவட்ட மீனவர்களை விடுதலைப் புலிகளே சுட்டதாக தமிழக பொலிஸ் ஆணையாளர் முகர்ஜி தெரிவித்த குற்றச்சாட்டைக் கண்டித்தே இவ்வாறு தெரிவித்த பழ.நெடுமாறன் மேலும் கூறியதாவது; தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள் என்றும் காணாமல் போன 12 மீனவர்கள் விடுதலைப் புலிகளின் காவலில் …
-
- 24 replies
- 5.4k views
-
-
விடுதலைப்புலிகள் முன்வைத்துள்ள தனிநாட்டுக் கொள்கையான ஈழக் கோரிக்கை சட்டவிரோதமானதல்ல. ஆனால் விடுதலைப்புலிகள் அதை அடைய கையாளும் சில வழிமுறைகள் சரியானதாகத் தென்படவில்லை என்று தெரிவித்துள்ள சிறீலங்காவுக்கான பிரிட்டன் தூதுவர் சிறீலங்கா அரசு மனித உரிமைகள் விவகாரத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த மறுப்பின் அனைத்துலகத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று மேலும் எச்சரித்துள்ளார். UK: "Eelam demand not illegitimate, but LTTE tactics unacceptable" [TamilNet, Monday, 10 December 2007, 22:10 GMT] The British High Commissioner to Sri Lanka, Dominick Chilcott, said Monday that whilst his country condemned the tactics of the Tamil Tigers, it did not consider the demand for an ind…
-
- 19 replies
- 5.4k views
-