ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143546 topics in this forum
-
திருகோணமலையில் ஒருவர் ஆயுதங்களுடன் வந்தவர்களால் கடத்தல் !! திருகோணமலை வரோதயனகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது குறித்த நடவடிக்கையை தாம் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தில் அவரது மனைவி மற்…
-
- 2 replies
- 351 views
-
-
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவிக்கு கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக காமினி லொக்குகே பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இராணுவத் தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கும் அவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி போன்றதொரு பயனற்ற பதவி தமக்கு வழங்கப்பட்டிருப்பதாக சரத் பொன்சேகா விசனமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னாள் இராணுவத் தளபதி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெற்றி அல்லது வீரமரணம் என்ற முழக்கத்துடன் தோழர் தியாகு தமிழகத்தில் ஆரம்பித்துள்ள உண்ணாநிலைப் போராட்டம் 5ஆவது நாளை எட்டியுள்ளது. தோழர் தியாகு இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக ரீதியாக வேறு அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு தமிழ் உள்ளங்கள் சார்பில் கோரிக்கைள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பல சமூக தளங்களில் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ்வேர்ல்ட் டுடே இணையமும் தோழர் தியாகுவின் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது. ”தமிழ் இனத்திற்கான உங்களின் உயரிய கொள்கையுடனான போராட்டத்துடன் தமிழனம் ஒன்றுபட்டுள்ளது. எனினும், உங்களின் உயிரைப் பணயம் வைப்பதற்கு தமிழனம் ஒருபோதும் மனப்பூர்வமாக இணங்காது…
-
- 0 replies
- 521 views
-
-
நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு... இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசனை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பண்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவிட்டார். இந்த நிலையிலேயே, அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக அந்த ஆணைக் குழ…
-
- 0 replies
- 148 views
-
-
ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின், பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்…
-
- 1 reply
- 313 views
-
-
இந்தோனேசிய கடற்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓசியன் வைகிங் கப்பலிற்குள் இருக்கும் 78 பேரினுள் விடுதலைப் புலிகளும் இருப்பதாகவும் சிலர் உயர் பதவியிலுள்ள உறுப்பினர்கள் என்றும் இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதர் பிரிகேடியர் நந்தன மல்லவராச்சி தெரிவித்துள்ளார். இவர்களின் புகைப்படங்களை வைத்து இதனை அடையாளம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஓசியன் விக்கிங் கப்பலில் உள்ளவர்களை அவுஸ்ரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆலோசனைகளில் அவுஸ்ரேலிய ஈடுபட்டு வரும் வேளை அதனை தடுப்பதற்காகவே இந்த புரளியினை கிளப்பிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
- 1 reply
- 2.4k views
-
-
இலங்கை பொதுநலவாய மாநாட்டில் 13 நாடுகளே பங்கேற்பு [saturday, 2013-10-26 16:20:23] கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும். இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில…
-
- 0 replies
- 429 views
-
-
‘ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். …
-
- 10 replies
- 683 views
-
-
போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி- கா.ஜெயவனிதா November 17, 2021 எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக வவுனியாவில் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக வரவு செலவு திட்டத்தில் 300 மில்லியன் ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் இன்று 1738 ஆவது நாளாக போராடி கொண்டிருக்கின்றோம். எங்…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என்ற முடிவை எடுத்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்துள்ளன. இறுதித் தீர்மானம் எடுக்கப்படுவதற்காக நேற்று கூடிய காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானம் எதுவும் எடுக்காது கலைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. எனினும், பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்ற முடிவையே எடுக்கவிருப்பதாக சில செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. எனினும், கலந்துகொள்வதற்கான அதிக சாத்தியங்கள் இருப்பதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளிவந்திருந்தன. குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் கலந்துகொள்வார் என்ற தீர்மானத்தை அறிவித்தால் தமிழகத்தில் பரந்தளவில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் முன்னெடுக்க…
-
- 2 replies
- 540 views
-
-
மயிலிட்டி மக்களுக்கு வாழ்வாதார உதவி -ரொமேஸ் மதுசங்க, செல்வநாயகம் கபிலன் 27 வருடங்களுக்குப் பின்னர், அண்மையில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி பகுதி மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால், 100 மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. அத்துடன், அமைச்சினால் இரண்டு படகுகள், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் என்பனவும் மயிலிட்டி கடற்றொழில் சமாசததுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர்…
-
- 6 replies
- 325 views
-
-
நாட்டில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்! நாட்டில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதத்தின் 17ஆம் திகதி வரை 5 ஆயிரத்து 275 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 4 ஆகும். 2020 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், க…
-
- 0 replies
- 147 views
-
-
1 இன்று காலை என் கவனத்தை ஈர்த்த சேதி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் நண்பருமான சிவாஜிலிங்கத்தின் பத்திரிகையாலர் சந்திப்புப் பற்றியதாகும். நியாயமான கோபத்தை வெளிப்படுத்திய நண்பர் சிவாஜிலிங்கம் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் சம்மந்தர் போட்டியிடாவிட்டால் தான் களமிறங்கப்போவதாக அறிவ் இத்துள்ளார். இரண்டு சிங்கள தேசியவாதிகளை ஆதரிக்காது ஒரு தமிழன் களமிறங்குவது அவசியம் என்பதே அவரது வாதமாக உள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்த நண்பர் சிவாஜிலிங்கம் "ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை அதிபர் தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட மு…
-
- 4 replies
- 941 views
-
-
'தேசிய நலனுக்காகவே இந்தியாவின் பிரதிநிதியாக காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்கிறேன்' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை சல்மான் குர்ஷித், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சுஜாதாசிங்குடன் தனி விமானத்தில் நேற்று கொழும்பு சென்றார். விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், 'ஈழத்தமிழர் பிரச்னைகள் உள்பட பல்வேறு பிரச்னைகளை இலங்கையுடன் பேச வேண்டி உள்ளது. தேசநலனைக் கருதித்தான் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது. இங்கு நடைபெறுவது இரு தரப்பு மாநாடு அல்ல. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிற மாநாடு. இதில் பங்கேற்பது அத்தியாவசியமானது என்றுதான் …
-
- 3 replies
- 778 views
-
-
முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் காலமானார் (நமது நிருபர்) முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சரும் முன்னாள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் நேற்றுக் கொழும்பில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 84. சுகவீனம் காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்பு பொரளையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மன்சூர் மேலதிக சிகிக்சைகளுக்காக கொழும்பிலுள்ள மற்றுமொரு தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டிருந்தார். அங்கும் அவருக்கு சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே நேற்று செவ்வாய்க்கி…
-
- 0 replies
- 443 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சிலகாலமாகக் கோரிக்கை விடுத்து வந்தது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் இரா சம்பந்தனுடன் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் எம். ஏ.சுமந்திரன் ஆகியோரும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்…
-
- 25 replies
- 1.2k views
- 1 follower
-
-
மனித அரக்கன் மகிந்த இராசபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலி. இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ - இப்படி ஒரு வைணவ துறவி கூறியுள்ளார். ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது எங்க போராட்டத்தை மிதிச்சீங்க இப்ப அவதிப்படறீங்க!
-
- 3 replies
- 1.6k views
-
-
தேர்தலில் வாக்களிப்பதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது காணாமல் போயுள்ள வவுனியா அல்ஹாமியா பாடசாலையைச் சேர்ந்த கார்த்திகேசு நிரூபன் என்ற ஆசிரியரைக் கண்டு பிடித்துத் தருமாறு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடத்தியுள்ளனர். மகனை மீட்டுத் தருமாறு கதறும் தாய் வவுனியா தெற்குக் கல்வி வலயப் பணிமனைக்கு எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. தமிழ்த்தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். ஆசிரியர் நிரூபனைக் கடத்தியவர்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிர…
-
- 4 replies
- 807 views
-
-
தவறான பாதையில் பயணிக்கும் அரசு நாடு ஒரு புறத்திலும், அரச அதிகாரத்தையும் அரச வளங் களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அரசு மற்றொரு புறத்திலும் செயற்பட நேர்ந்துள்ளது. நாட்டை முன்னேற்ற உழைப்போமெனக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ள தரப்பினர், முற்றுமுழுதாக அதற்கு மாறான வித்திலேயே செயற்பட்டு வருகின்றனர். நாடு அத்தகைய போக்குக்கு எதிராக கிளர்ந்தெழுகிறது. அப்போது அரச வளங்களூடாக அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசு, நாட்டு மக்களுடன் மோதிக்கொள்ள நேர்கிறது. எம்மை ஏசுவதால் பயனில்லை. நாம் அதிகாரத்தைக் கைப்பற்றியது, எமது வசதி வாய்ப்புக்களை அனுபவிக்கவே என்ற மனோநிலை…
-
- 0 replies
- 312 views
-
-
20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பிணை வழங்க ஆட்சேபனை எதுவுமில்லை என்று சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். தமக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து திஸ்ஸநாயகம் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ததை அடுத்து, தம்மைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்பட்ட திஸ்ஸ நாயகத்திற்காக அனைத்துலக ரீதியாக ஆதரவு எழுந்தது அத்துடன் பராக் ஒபாமா கூட தனிப்பட கடிதம் ஒன்றினை மஹிந்தவுக்கு வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 336 views
-
-
யுத்தத்தின் போது பாலியல் வன்முறை இடம்பெறுவதனைத் தடுக்கும் வகையிலான தனது பூர்வாங்க நடவடிக்கைக்கு இலங்கை ஆதரவு வழங்குமா என்பது குறித்து அதனது பதிலை தான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் கேள்விக்கு வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் வில்லியம் ஹேக் பதிலளிக்கையில், இலங்கை வெளிவிவகார அமைச்சுருடன் தங்களின் பிரத்தியேகமான பூர்வாங்க செயற்பாடு குறித்து கலந்துரையாடியதாகவும், இதற்கு அவர்கள் ஆதரவளிப்பார்களா என்பது குறித்த அவர்களின் பதிலுக்காக தாங்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கை மீதான அவரின் முழுமையான அறிக்கை பின்வருமாறு: இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அர…
-
- 2 replies
- 472 views
-
-
மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தலைவர்கள் நழுவ விடக்கூடாது - சிவசக்தி ஆனந்தன் January 2, 2022 தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில் அதனை நழுவ விட்டுவிடக்கூடாது என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கமானது தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதேநேரம், ஆட்சியாளர்களின் பங்காளிகளுடனும் அரசியல் ரீதியான முரண்ப…
-
- 0 replies
- 224 views
-
-
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தை வசப்படுத்துகிறது. டெல்லியை பாஜக கைப்பற்றவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புது டெல்லி தொகுதியில், முதல்வர் ஷீலா தீட்சித்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார். முதன்முதலாக தேர்தல் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 25 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் வகையிலேயே ஆம் ஆத்மி கட்சி…
-
- 39 replies
- 3.3k views
-
-
அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு முறாவோடை மாணவர்கள் மற்றும் சிங்கள தமிழ் மக்கள் இணைந்து அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர். மட்டக்களப்பு மாவட்ட சிங்கள – தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு – முறாவோடை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான மைதானத்தை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அடாத்தாக கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். மட்டகளப்பு பிள்ளையாரடி …
-
- 21 replies
- 2k views
-
-
தமிழ் கட்சிகள் உட்பட மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணையகம் 2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி கட்சி வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 241 views
-