ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்துக்கான அமைத்தித் தீர்வு இன்னது தான் என்று புதுடில்லி வெளிப்படுத்தாது. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக அந்த மக்கள் ஜனநாயக ரீதியில் தமது முடிவைத் தெரிக்கக்கூடிய காலம் கனியும் வரை வடக்கு, கிழக்கு மாகாணம் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், உத்தேச அதிகாரப் பகிர்வுத் திட்டம் அரசமைப்பின் 13வது திருத்ததுக்கு அப்பால் செல்ல வேண்டும் என்பதையும், புதுடில்லி இராஜதந்திர ரீதியிலும் மட்டத்திலும் தொடர்ந்த வலியுறுத்தும். விடயமறிந்த வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டன. இந்தியத் தரப்பு இலங்கை இனப் பிரச்சினை விவகாரம் தொடர்பாகத்த தமிழர் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருடனும் தொடாந்து கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
வற்றாப்பளை அம்மன் ஆலய நிர்வாகத்தினரை கொழும்பிற்கு அழைத்து அவமானப்படுத்தி அனுப்பினார் மஹிந்த! ஏற்பாடு செய்தார் ஸ்ரீ ரங்கா! Posted by admin On March 7th, 2011 at 10:53 pm முல்லைத்தீவில் அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரங்கா முல்லைத்தீவினைச் சேர்ந்த மக்களை அழைத்துச் சென்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவைச் சந்திக்க ஏற்பாடு செய்து அவர்களை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கின்றார். கொழும்பில் கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் கலந்துரையாடல் ஒன்று இருப்பதாக முல்லைத்தீவில் உள்ள பொது அமைப்புக்களைச் சேர்ந்த தலா இருவரை பங்கெடுக்க வருமாறு ஸ்ரீரங்கா அழைப்பு விடுத்திருக்கின்றார். இதற்கமைய வற்றாப்பளை அம்மன் ஆலய தலைவர் குகதாஸன், கரைதுறைபற்று பலநோக்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இமய மலை ஏறிய இலங்கையின் முதலாவது வீரர் இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கையராக ஜெயன்தி குரு உதும்பல சாதனை படைத்துள்ளார். இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=79983
-
- 4 replies
- 1.7k views
-
-
நம் அரசியல்வாதிகளை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. சிங்கள மிருகம் சரத பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொன்னபோது இவர்கள் கொதித்தெழுந்தார்கள். அவனாவது வாயால்தான் சொன்னான். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் மானங்கெட்ட காங்கிரசு அரசோ இவர்களை கோமாலிகளைவிட கேவலமான கேனையனாக்கிவிட்டார்கள். ஆனால் நம்மவர்களுக்கு அது உரைத்ததாக தெரியவில்லை. உரைக்கவும் உரைக்காது. அவர்கள் போட்ட எலும்பு துண்டை நக்கியே வளர்த்த உடலாயிற்றே. கருணாநிதியும் சட்டசபையில் பிராணாப் இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாக அறிவித்து முழக்கமிட்ட அன்பழகனும் அதற்கு மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வேட்டிக்குப் பதில் புடவைக் கட்டிக்கொள்ளலாம். இவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள் என்று தெ…
-
- 7 replies
- 1.7k views
-
-
நீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார். கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு முன்னதாக கோட்டே நீதிவான், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார். நேற்று, அவருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், அந்த விசாரணைக்கு முன்னிலையாகாத, அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன இன்று நீதிமன்றில் முன்னிலையாகி சரணடைந்தார். …
-
- 11 replies
- 1.7k views
-
-
இலங்கை எனும் பயங்கரவாத நாடு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் போன்ற ஒப்பனையுடன் ஆரம்பிக்கப்பட்ட போரில், உலகில் உள்ள அத்தனை வல்லரசுகளிடமும் ஆயுதமும், ஆதரவும் வாங்கி குவித்திருந்த சிங்கள தேசம் ஒருபுறம். தங்களுக்கு உரிய உரிமை மறுக்கப்பட்ட போது அதனை எந்த விலை கொடுத்தாவது பெற்று விட வேண்டும் என்ற புலிகள் மறுபுறம். ஆனால் கொடுமை என்னவென்றால் பயங்கரவாத இயக்கம் என உலகால் அறிவிக்கப்பட்ட புலிகள் நான்காம் கட்ட ஈழப்போரின் எந்த கட்டத்திலும் சிங்கள பொதுமக்களை இலக்காக கொண்டு எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்ற முகமூடியுடன், ஒரு பயங்கரவாத இயக்கம் செய்ய வேண்டிய அத்தனை ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல் January 18, 2019 கிழக்குப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக அப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியர் எவ்.சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய துணைவேந்தர் நியமனம் இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேராசிரியர் எவ்.சீ.. ராகவல் முதல் நிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாம் நிலையிலும், திருமலை வளாக முதல்வர் ரி. கனகசிங்கம் மூன்றாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பல்கலைக்கழக சட்டத்திற்கு அமைவாக பேரவையின் பரிந்துரைகளை, …
-
- 5 replies
- 1.7k views
-
-
திருந்துமா தரப்புகள்? நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதல், இலங்கை இனப்போர் புதிய கட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்திருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. இலங்கை இனப்போரில் முதல் வான் தாக்குதல் 1986 பெப்ரவரியில் யாழ்ப்பாணம், தாவடியில் இலங்கை விமா னப்படையின் "சியாமாச்செட்டி' விமானம் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வான் வழித்தாக்குதல் நடவடிக்கைக் குள், பதிலடியாகப் புலிகள் தரப்பு தமிழர் தரப்பு 22 ஆண்டுகள் கழித்து இப்போது பிரவேசித்திருக்கின்றது. வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பல நூறு மைல்கள் ஒரு தாக்குதல் விமானத்தில் அல்லது இரண்டு விமானங்களில் பறந்து வந்து, இலங்கை விமானப்படை யின் மைய மூளையான க…
-
- 4 replies
- 1.7k views
-
-
வடமராட்சி நெல்லியடி நகரப் பகுதியில் தமிழீழ எல்லாளன் படை என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றிக்கிழமை வீசப்பட்டுள்ளன.நேற்றைய தினம் விடுமுறை என்பதால் சன நடமாட்டம் குறைவாக இருந்ததால் நகரத்தில் உள்ள பேரூந்து நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. ‘நடந்து முடிந்த வன்னி யுத்த அவலத்தின் பின் சிங்கள பேரினவாத அரசும் அதன் அடிவருடிகளும் எம்மினத்தின் மீது மிகப்பெரிய உளவியல் யுத்தத்தை மேற்கொண்டுள்ளார்கள். எம் இனத்தின் விடுதலை உணர்வை சிதறடிக்க எதிரியானவன் கலாச்சார சீர்கேடு எனும் ஆயுதத்தை பிரயோகிக்கின்றான் இதற்கு உறுதுணையாக பல இளைஞர் யுவதிகளும் செயற்படுகின்றார்கள். இதற்கு எம்மவர்கள் துணை போவதே வேதனையாக உள்ளது இனிமேலும் எதிர்வரும் காலத…
-
- 9 replies
- 1.7k views
-
-
குற்றச்சாட்டுகள் குறித்து காலவரையறைக்குட்பட்ட சுதந்திரமான விசாரணையைக் கோருகிறது இந்தியா [ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 00:08 GMT ] [ தா.அருணாசலம் ] நல்லிணக்க ஆணைக்குழுவினால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காலவரையறைக்குட்பட்ட, சுதந்திரமான - நம்பகமான விசாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கொழும்பு விசாரிக்க வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, நேற்று …
-
- 7 replies
- 1.7k views
-
-
காத்தான்குடியில் வன்முறை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் (படங்கள் உள்ளே) [Thursday December 14 2006 02:06:38 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு காத்தான்குடியில் எட்டாவது நாளாக தொடரும் வன்முறைகளால் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சூபி முஸ்லிம் இயக்கம் மற்றும் அகில இலங்கை தாருகாதுல் முபிஹீம் இன் தலைவர் அப்துல் பயில்வானின் காத்தான்குடியில் புதைக்கப்பட்ட உடலை அகற்றி வேறு இடத்தில் புதைக்கக கோரி சூபி முஸ்லிம் இயக்கத்திற்கு எதிரானவர்கள் இன்று காத்தான்குடியில் பொலிஸ் சோதனைசாவடி. ஆட்டோ, வங்கிகளிற்கு தீ வைக்கமுற்பட்டனர். நிலமையை கட்டுப்படுத்துமுகமாக பொலிஸார் திறந்த துப்பாக்கி பிரயோகத்தையும், கண்ணீர் புகையையும் வீசியுள்ளன. தொடர்ந்து தற்போது பொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று தெற்கு பிரதேசபைக்குட்பட்ட வேடமுனை கிராமம்பகுதியில் விடுதலைப்புலிகள் என்று எண்ணி படையினர் இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நான்கு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் ஈடுட்டிருந்த படையினர் இரு அணிகள் நேருக்கு நேர் சந்தித்தபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்திலேயே இவர்கள் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilwin
-
- 1 reply
- 1.7k views
-
-
மஹிந்தருக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் பொன்சேகா! (ஆவணம் இணைப்பு) (2 ஆம் இணைப்பு) சனி, 16 ஏப்ரல் 2011 21:29 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான போர் தயார்ப்படுத்தல்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கும் பொன்சேகா ஈடுபட்டு வருகின்றாரா? என்று அரசியல் அவதானிகளிடையே அண்மை நாட்களில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பொன்சேகாவுக்கு சைப்பிரஸ் நாட்டிலிருந்து ஜோர்டான் விமானத்தில் இராணுவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பொன்சேகா கொள்வனவு செய்திருக்கின்றார். சைப்பிரஸ் நாட்டில் உள்ள ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றே இந்த நவீன ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த ஆயுதப் பார்சல் தற்போது மர்மமான முறையில் காணாமல் போய் விட்டது என்று அரச தரப்புச…
-
- 3 replies
- 1.7k views
-
-
சனி 13-10-2007 23:59 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் மணலாறு மாவட்டத்தில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், 2ஆம் லெப்ரினட் சதீஸ்குமார் என்றழைக்கப்படும் கொக்குத்தொடுவாய் கயாட்டிக்குளத்தை நிலையான முகவரியாகவும், புதுக்குடியிருப்பு சின்னக் கைவேலியை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த, வேலு சதீஸ்குமார் என்ற தமிழீழ தேசிய துணைப்படைப் போராளி, வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில், நேற்று சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், வீரவேங்கை சந்தனச்சுடர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்டிருந்த, தில்லைநாதன் ரமேஸ் என்ற போராளி களப்பலியா…
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்தியா, அயர்லாந்துப் பிரதிநிதிகள் வருகை: திசைமாறுகிறதா இலங்கை அமைதி முயற்சிகள்? இலங்கை அமைதி முயற்சிகள் மற்றொரு திசையை நோக்கி நகருவதைப் போல் இந்தியா மற்றும் அயர்லாந்து தூதுவர்களின் வருகை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் திடீர் கரிசனை, அயர்லாந்தின் நுழைவு மற்றும் மகிந்தரின் நேரடிப் பேச்சுக்கான இரகசிய செயற்பாடு ஆகியவை அமைதி முயற்சிகளின் அடுத்த கட்டத்தில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விடயங்களுக்குச் செல்லும் முன்பாக கடந்த 4 ஆண்டுகாலம் நடந்த "அமைதி" முயற்சிகள் தொடர்பாக ஒரு பார்வையை செலுத்துவோம். 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் ஆறு சுற்றுப் பேச்சுக்கள் ஒரே மூச்சாக ஓடி விடுதலைப் பு…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்ப என்ன சொல்வர்? “பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் ழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியவும் இல்லை” எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். நண்பரைப்பற்றிப் பின்னர் பார்க்கலாம். இப்போது அவர் கூறியிருக்கும் விசயத்தைப் பார்ப்போம். …
-
- 5 replies
- 1.7k views
-
-
சனாபதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவுள்ளார், அதுவும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூத்த நீண்ட அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் சனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவருக்கு பலத்த கவலை ஏற்பட்டுள்ளது. தமது கவலையை போக்க அவரசமாக நேரடி பேச்சுக்கு வருமாறு இரு தரப்பும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பல தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். சனாதிபதி செயலகத்திலிருந்தும், எதிர்கட்சி தலைவர் அலுவலகத்திலிருந்தும் தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். சனாதிபதி மகிந்தராஜபக்ஷவும், எதிரணியின் தரப்பில் பொது கூட்டமை…
-
- 3 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இத்தாலி மிலானோ நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள் ளது என வெளிவந்த தகவல் பிழையா னது. மனநோயாளி ஒருவரே இந்தத் தகவலைத் தெரிவித்தார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுமுன் தினம் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது யூரோபிலை ஈ.ஜி 21 ரக பயணிகள் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கிடைத்த தகவலையடுத்து அந்த விமானம் கடந்த புதன்கிழமை பகல் 12.01 மணியளவில் …
-
- 2 replies
- 1.7k views
-
-
கார்கால மேகம் கண்டு பார் இன்று மழையேஎன்று யாரும் கூறிடலாம்- ஆனாலும் குறிப்பாக அந்த மேகம் தான் - வரபோகின்ற இந்த மழைக்கு காரணம் என்றே வெறும் யூகத்தால் கூறுவது -என்பது வரும் வேகத்தால் உறைப்பதன்றி வேறல்ல பார் போற்றும் இந்த வெற்றியின் துவக்கம் தார் போன்ற மேகத்தால் மறைத்தல் கண்டே தேறுதல் கூறிடும் தேர்ந்த நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகளை கொண்டு பாதியும் உண்மையில்லை - பாவி இவன் சேதியில் என்றே பரிகசிப்பது முறையாமோ? அவை விடுத்து - நம் மக்கள் அவலம் போக்க இவையே தேவைஎன கூறிடுவேன் - குற்றமில்லையென்றே வருங்காலம் நமக்கு வளமானதாக இருக்க தருங்காலம் இதுவென்றே - நமது பங்களிப்பை தருங்காலம் இதுவன்றோ! பார் முழுதும் பரவிய தமிழினத்தின் திரவியம் மட்டுமல்ல பரப்பு…
-
- 0 replies
- 1.7k views
-
-
முகமாலை முன்னரங்கில் இன்று அதிகாலை மோதல் வீரகேசரி இணையம் வடக்கு முகமாலை முன்னரங்க நிலையில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் 7 விடுதலை புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதுடன் புலிகள் 3 பதுங்கு குழிகள் இராணுவத்தினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 1.10 மணியளவில் முகமாலை முன்னரங்கு பகுதியில் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்குமிடையே பலத்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலினை இராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இராணுவ்த்தினர் டீ-56 ரக துப்பாக்கி யொன்றையும் 01x மகசின்கள் 18டையும் , வெடி பொருட்களையும் மீட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
இந்தியாவுக்கு மகிந்தவின் தூதுவர் பயணம் இலங்கை நிலைமைகள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு விளக்கம் அளிக்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க புதுடில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அதிகாரப் பகிர்வுத் திட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளின் 4 வான் தாக்குதல்கள் உள்ளிட்டவை குறித்து இந்தியப் பிரதமருக்கு மகிந்த கொடுத்தனுப்பிய தகவல்களை லலித் வீரதுங்க கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் புதுடில்லியில் லலித் வீரதுங்க முகாமிட்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவின் பண்டாரநாயக்க அனைத்துல வானூர்தி நிலையத்து சிறப்பு இந்திய வான்படை வானூர்தி மூலம் ஒரு குழுவினர் வந்துள்ளனர். இந்திய …
-
- 3 replies
- 1.7k views
-
-
மட்டு மாவட்டத்தில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் என வர்ணிக்கப்படும் பிள்ளையானை ஆதரித்து இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மட்டு மாவட்டத்தில் உலங்குவானுர்தி மூலம் வீசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் விட பிள்ளையானை வெல்ல வைப்பதற்காக அரசு மும்மூரமாக பிரசாரப் பணியை மேற்கொண்டு வருகின்றனது. அரசு பெரும் பணச் செலவில் பிள்ளையான் படத்துடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கொழும்பிலிருந்து விஷேட உலங்குவானுர்தி மூலம் மட்டக்களப்புக்கு கொண்டு சென்று நேற்று முன்தினமும் நேற்றும் ஆகாயத்திலிருந்து மாவட்டம் முழுவதும வீசியுள்ளனர். எ…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர், தனது படம் பொறிக்கப்பட்ட இலவச பியர் ரின் விநியோகித்ததாக முறையிடப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேசங்களில் நேற்று இரவு பரவலாக பியர் ரின் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஹைஏஸ் வாகனம் ஒன்றில் வந்த கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்களான இளைஞர்கள், மீசாலை, அல்லாரை, புத்தூர் சந்தியடி பகுதிகளில் இளைஞர்களிற்கு பியர் வழங்கினர். இளைஞர்கள் கூட்டமாக நிற்கும் இடங்கள், விளையாட ஒன்றுகூடுமிடங்களில் வாகனத்தை நிறுத்தி இலவச பியர் வழங்கினர். அந்த பியர் ரின்களில் வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பகுதிகளில் மதுபானம் விநியோகிப்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு பொதுமக்கள் தொலைபேசியில் முறையிட்டனர்…
-
- 22 replies
- 1.7k views
-
-
25.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக நேரடி முகவரி http://www.yarl.net/video/video_003.html
-
- 0 replies
- 1.7k views
-
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். நல்லூர் சங்கிலியன் தோப்பில் இருந்து மங்கல வாத்தியங்களுடன் இராணுவத்தினர் காவடிகள் எடுத்துவர ஏனையோரும் ஊர்வலமாக நல்லூர் ஆலயத்தை சென்றடைந்தார்கள். இதன்போது ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் தமது படைப்பிரிவுகளின் கொடிகளை வைத்து ஆசீர்வாதம் பெற்றும் சென்றனர். - http://malarum.com/article/tam/2014/08/27/4903/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%…
-
- 21 replies
- 1.7k views
-