ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143558 topics in this forum
-
தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட புத்தபிக்கு சுட்டுக்கொலை. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய புத்தபிக்கு ஒருவர் இன்று காலை 9.15 மணியளவில் திருகோணமலை மொறவாவி மாகவிதுலவாவிப் பகுதியில் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிறீலங்காப் படைப்புலனாய்வாளர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெளத்த துறவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட புத்தபிக்கு நந்தரத்னதேரோ ( NANDARATHNA THERO ) என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட புத்தபிக்கு திருமலையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண…
-
- 2 replies
- 1.7k views
-
-
09/06/2009, 11:34 [கொழும்புச் செய்தியாளர் மயூரன்] வெளிநாட்டில் இருந்து சென்ற இருவர் கொழும்பில் கைது வெளிநாட்டில் இருந்து சென்று கொழும்பு வெள்ளவத்தையில் தங்கியிருந்த இருவர், சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 37வது வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த இவர்கள் இருவரும், சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குற்றப் பலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார். பதிவு
-
- 1 reply
- 1.7k views
-
-
கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம் ; புறக்கோட்டையில் பதற்றம் புறக்கோட்டையில் இருந்து வெளிச் செல்லும் அனைத்து பஸ் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. ரயில் சேவை ஊழியர்களின் தற்காலிக பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளிப் பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகளை ரயில் சேவை ஊழியர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் பயணிகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் அத்தோடு ஒல்கொட் மாவத்தை மற்றும் முதாலம் குறுத்தெரு பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த போராட்டம் காரணமாக புறக்கோட்டை…
-
- 3 replies
- 1.7k views
-
-
புத்தூர் மயான பிரச்சனை துப்பாக்கி சூடு வரை நீண்டுள்ளது – புத்தூர் பகுதியில் தொடரும் பதட்டம். புத்தூர் மேற்கில் அமைந்துள்ள மயானம் தொடர்பிலான பிரச்சனை பொலிசாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் உச்சத்தை அடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மாயனத்தை அகற்ற கோரி மாயானத்தை சூழவுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் அண்மைக் காலமாக போராட்டங்களை நடாத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின் பின்னனர் நீதிவான் ஏ.யூட்சன் மாயனத்தை சுற்றி சுற்றுமதில் அமைத்த பின்னர் சடலங்களை எரியூட்டுங்கள் என்றும் மிக விரை…
-
- 13 replies
- 1.7k views
-
-
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக கொற்றவன் 31. மார்ச் 2008 21:51 மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு விடுதலைப்போர் வெற்றி அடைவது மிக மிகக் கடினம். விடுதலைப் போரின் பங்காளிகளாகவும் அதை முன்னெடுப்பவர்களாகவும் மக்கள் இடம்பெறும் போது விடுதலைப்போர் தனது வெற்றி இலக்கை அடைந்தே தீரும். சீனா, வியட்நாம் ஆகிய நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப்போர் மக்கட் போர் (PEOPLE'S WAR) எனப்படும். ஆசியாவின் மூன்றாவது மக்கட் போர் இப்போது தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. புலிகள் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்தும் விடுதலைப்போர் பல வியப்பூட்டும் இராணுவப் பரிமாணங்களைக் கொண்டது. மக்கட் போரின் தாக்குப்பிடிக்கும் வலு அதன் வெற்றி இலக்கை அடைய உதவுகிறது. பிடித்து வைத்திரு…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான திரு பொட்டு அம்மானுக்கு மிக நெருங்கியவரும் மற்றும் 2ம் நிலை வகிக்கக்கூடியவர் என சந்தேகிக்கப்படும் சிரஞ்சீவி மாஸ்டரை தமிழக கியூபிரிவு பொலிசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அளவில் கைதுசெய்தனர். அதன் பின்னர் அவர் சிறையில் இருந்தவாறே ஜூனியர் விகடனுக்கு ஒரு செவ்வியையும் வழங்கியிருந்தார். இதன் மூலம் தமிழகத்தில் அவர் கைதானது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் தற்போது தமிழகத்தில் இல்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க அவரை கியூ பிரிவுப் பொலிசார் “ரா” உதவியுடன் இலங்கையிடம் கையளித்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்ற வேளைகளில் சிரஞ்சீவி மாஸ்டர் வன்னியில் இருந்தார். அவர் பின்னர் அங்கிருந்து தமிழகத்…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது. ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்ம…
-
- 13 replies
- 1.7k views
-
-
தேவிபுறத்தில் பாரிய மனிதப் படுகொலைகளுக்கு மத்தியிலும் நடத்தப்பட்ட பாரிய கூட்டுப் பாலியல் வன்புணர்வு இனவழிப்பிற்கெதிரான தமிழர் அமைப்பினால் தேவிபுறத்தில் நடந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ள கூட்டுப் பாலியல் வணன்புணர்வு பற்றிய சாட்சிகள் கண்ணால் கண்ட சாடிசியங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 200 பேர்கொண்ட பொதுமக்கள் குழுவொன்று முன்னேறிவந்த இராணுவ அணி ஒன்றிடம் சரணடைந்தபோது சுமார் 20 இளம் பெண்களைத் தனியாகப் பிரித்தெடுத்த இராணுவம் அவர்களைக் கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளன. 2009 ஏப்ரில் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் சிறிலங்காவில் நிலவி வரும் அடக்குமுறை மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்பின்மை என்பவற்றால் இதுவரை வெளியே வ…
-
- 3 replies
- 1.7k views
-
-
மனோ கணேசன் சூளுரை தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டில் உயிருக்குப் பயப்படாது நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த அரசை கூண்டோடு அழித்தெறிய வேண்டும். இவ்வாறு மேலக மக்கள் முன்னனியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சூளுரைத்தார். நேற்று மாலை ஐ.தே.க வும் சு.க மக்கள் பிரிவினறும்; இணைந்து ஏற்பாடு செய்திருந்த அரசுக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது : இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு விலைவாசிப் பிரகச்சினை,சுகாதராப் பிரச்சிலை,மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை விடவும் அவர்களுக்…
-
- 1 reply
- 1.7k views
-
-
இன்று மதியம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கிபீர் ஜெற் விமானங்கள். தமிழீழ வான்பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியதாக வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியின் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான முல்லைத்தீவிலே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இன்று காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பல சிங்கள மக்கள் கொல்லப்பட்டதினால் இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என் அறியப்படுகின்றது. இருப்பினும் இவ்விமானத்தாக்குதலால் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டதாக இதுவரை கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கவில்லை.
-
- 3 replies
- 1.7k views
-
-
யுத்த நிறுத்தக கண்காணிப்புக் குழு விளக்கம். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென வரையறுக்கபட்ட பகுதிகளில், புலிகள் ஆயுதங்களைக் கொண்டு செல்ல முடியும். அப்படிக் கொண்டு செல்வது உடன்படிக்கையை மீறும் ஒரு செயலாகி விடமாட்டாது.இவ்வாறு இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, தனது விளக்க அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதில் நடமாடும் கருணா குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வற்புறுத்தகின்ற யுத்த நிறுத்தக் கண்கனாணிப்புக் குழு, புலிகளின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஏன் வற்புறுத்தவில்லை என்று தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்குப் பதிலளிக்கும் விதத்திலேயே கண்காணிப்புக் குழு குற…
-
- 1 reply
- 1.7k views
-
-
அமைச்சர் சிறிபால டி சில்வா புதுடில்லிக்கு அவசர பயணம் -திருமலை வன்முறைகளையடுத்து இந்தியா விடுத்த `செய்தி' [16 - April - 2006] [Font Size - A - A - A] திருமலை நகரில் புதன்கிழமை இடம் பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து, தமிழ் மக்கள் மீது மோசமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கும் இந்தியா, கொழும்புக்கு கடுமையான தொனியில் `செய்தி' ஒன்றையும் விடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் புதன்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமலை வன்முறைகளையிட்டு கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் நிமால் சிறிபால டி ச…
-
- 7 replies
- 1.7k views
-
-
வீதிகளின் சைவப் பெயர்களை மாற்றும் முயற்சி- ஊர்காவற்றுறை பிரதேச சபையிடம் சைவ மகாசபை அவசர வேண்டுகோள்! ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட சில வீதிகளின் சைவப் பெயர்களை மாற்று மதப் பெயர்களாகவோ பொதுப் பெயர்களாவோ மாற்றுவதற்கு பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளமை வருத்தம் அளிக்கின்றது என அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. மேற்படி வீதிகளின் பெயர் மாற்றம் தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச சபை விளம்பரப்படுத்தியுள்ளமை தொடர்பாக சைவ மகா சபை ஆட்சேபனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தீவகத்தின், பாரம்பரியம்மிக்க துறைமுக நகரான காவலூர் பண்டைய அழகிய சைவத் தமிழ் கிராமங்களையும் அந்தியராட்சியின் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி கத்தோலிக்க மக்களைக் கொண்ட கிராமங்களைய…
-
- 16 replies
- 1.7k views
-
-
முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர்க்களத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டனர். அவர்களில் சிலர் போரின்போது எதிர்பாராமல் பிடிபட்டனர். வேறு சிலர் சரணடைந்தனர். எதற்காக ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தனர்-அவர்கள் ஏன் சண்டையிட்டுச் சாகவில்லை- குப்பி கடித்து மாளவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர். இறுதிநேரத்தில் போராளிகளைச் சரணடையுமாறு கட்டளையிட்டது தேசியத் தலைமையே. தேசியத் தலைமையும் மூத்த தளபதிகளும் முன்நின்று சரணடையுமாறு போராளிகளை அனுப்பி வைத்ததற்கு- சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளே சாட்சி. ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைக் கொடுத்தாலும் போர்க்களத்தில் திருப்பத்தை நிகழ்த்த முடியாது என்ற யதார்த்தம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணரப்பட்டிரு…
-
- 11 replies
- 1.7k views
-
-
ஓரங்குல நிலத்தை தானும் விட்டுக்கொடாது ஓர்மத்துடன் போராடிவருகின்றோம். கேணல் தீபன். 09.04.2008 / நிருபர் எல்லாளன் வடபோர் முனையில் கடந்த ஒன்றரைவருட காலத்தில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னேற்ற முயற்சிகளையும் முறியடித்து எமது எல்லைக்கோட்டில் ஒரு அங்குலத்தைக்கூட எதிரியிடம் விட்டுக்கொடுக்காது ஓர்மத்துடன் போராடி வருகின்றோம் என வடபோர்முனைக் கட்டளைத்தளபதி கேணல் தீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். வடபோர்முனையில் நடந்த சண்டைகளில் சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு போராளிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரத்தியேகமாக ஒழுங்குசெய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இணைந்த சுற்றுக்காவல் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு. இலங்கை-இந்திய கடல் எல்லைகளில் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்திய அரசு நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவுக்கு சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக புதுடில்லியின் முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தமது கடல் எல்லைகளை வழமைபோல் கண்காணிக்கும். ஆயினும் சிறிலங்கா அரசுடன் இணைந்து கடல் கண்காணிப்புக்களையு…
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கப்பலில் புறப்பட்ட பயணிகள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து கொழும்பு, வவுனியா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது இடைவழியில் பெரும் அவலங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் இது தொடர்பில் கூறியதாவது: வியாழக்கிழமை அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாம் 3.45 மணியளவில் திருகோணமலை துறைமுகத்தைச் சென்றடைந்தோம். பின்னர் 5.30 மணிக்கு துறைமுகத்திலிருந்து வெளியேற நாம் அனுமதிக்கப்பட்டோம். திருமலை துறைமுகத்தில் எம்மைச் சந்தித்த பாதுகாப்புத் தரப்பினர் நீங்கள் பயணம் செய்யவேண்டிய பஸ்கள் தயாராக உள்ளன. அனைத்துப் பஸ்களிலும் பாதுகாப்புப் படையினரால் உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பயணிகள் எங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தினாலேயே பலியாவார்கள். இன்றைய தேர்தலில் மக்கள் வழங்குகின்ற தீர்ப்பிற்கு அரசாங்கம் தலைவணங்கும். எனினும் சிவாஜி கணேசன் போல நடிக்க முயன்று சகலரும் வெற்றி பெற முடியாது என்று அமைச்சரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, தேர்தலை ஜனநாயக ரீதியிலும் வன்முறைகளின்றியும் நடத்துவதற்கு அரசாங்கம் சகலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. கட்சிக்குள் ஜனநாயகத்தை பற்றி கேட்க முடியாதவர்களே தேர்தலில் ஜனநாயகம் குறித்து பேசுகின்…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே தீர்வு: ராமதாஸ் இலங்கைப் பிரச்னைக்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உட்பட இலங்கைப் படைகள் அரங்கேற்றிய அத்தனை போர்க்குற்றங்களையும் ஐநா அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. சூடான், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக அந்த நாடுகளின் தலைவர்கள் சர்வதேச நீத…
-
- 17 replies
- 1.7k views
-
-
அமிர்த லிங்கத்தின் சிலை நாளை திறப்பு!! அமிர்த லிங்கத்தின் சிலை நாளை திறப்பு!! முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் புதிய உருவச் சிலை நாளை ஞாயிற்றுக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையில் திறந்து வைக்கப்படவுள்ளது. காலை 9 மணிக்கு வலி. மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் திறப்பு விழா நிகழ்வுக…
-
- 16 replies
- 1.7k views
-
-
-
கதிர் காமரைகொன்றது-பிரபா.பொட்டு.சாள்ஸ்மாஸ்ரா்-மன்றில் மனு இலங்கையின் முன்னாள் வௌிவிவகார அமைச்சரை திட்டமிட்டு கொன்றவா்கள் என்ற நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவரை கொன்றது தமிழீழ விடுதலைப்புலிகள்ன் தலைவா் பிரபாகரன் பலனாய்வு தலைவா் பொட்டம்மான். சாளஸ் மாஸ்ரா் மீது இந்த கொலை குற்றம் சுமத்தப்பட்டள்ளது சட்டு கொல்லப்பட்ட கதிர்காமரின் நீதிமன்ற விசாரணையின் போதே இவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1275#1275
-
- 5 replies
- 1.7k views
-
-
பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவரும், எழுத்தளாரும், பத்திரிகையாளரும், நவீன பாணி அரசியல் கட்டுரைகளின் முன்னோடியுமான குத்தூசி குருசாமி, இந்து நாளிதழை 1930களிலேயே, மவுண்டரோடு மகா விஷ்ணு என்றுதான் குறிப்பிடுவார். அந்த மகாவிஷ்ணு சமீபத்தில் வராக அவதாரம் எடுத்திருந்தது. அதைப் பற்றி பெரியார் திராவிடர் கழக வார ஏடான புரட்சி பெரியார் முழுக்கம் இப்படி குறிப்பிட்டு இருக்கிறதுது: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் கிளர்ந்தெழுவதை தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன 'இந்து' ஏடு அக்.14 அன்று நஞ்சை கக்கும் தரம் தாழ்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்துவின் ஆசிரியர் குழுவைச் சார்ந்த மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பனப் பெண் எழுதியுள்ள அக்கட்டுரையில் விரக்தியடைந்த விடுதலைப் புலிகள் தூண்டு…
-
- 0 replies
- 1.7k views
-
-
விஜயகலா மகேஷ்வரன், காவற்துறையினரால் கைது…. October 8, 2018 ஐக்கியதேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, விஜயகலா மகேஷ்வரன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் எனவும், அவ்வாறு மேலோங்கினாலேயே சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக …
-
- 6 replies
- 1.7k views
-
-
த.வி.கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரியும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பதமநாபா பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீதரனும் நேற்று முன்தினமிரவு சிரிலங்ககா ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். அலரிமாளிகையில் இரவு எட்டு மணிக்கு ஆரம்பமான அந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் அங்கு இருந்துள்ளார். மட்டக்களப்பிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை மேற் கொண்ட விஜயத்தின் போது அங்குள்ள மக்கள் தெரிவித்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு இடம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் த.வி.கூட்ட…
-
- 5 replies
- 1.7k views
-